இடுகைகள்

இந்திய அரசிடம் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை!

படம்
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம்! டிஜிட்டல் இந்தியா என்ற நாளிதழ்களில் விளம்பரம் செய்தாலும், இந்தியா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விஷயங்களில் தடுமாறி வருகிறது. அண்மையில் வெளியான உலகளவிலான பட்டினி நாடுகளின் தொகுப்பு பட்டியலில் இந்தியா 102 வது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 112 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் இந்தியாவின் இடம் பரிதாபகரமானது. தெற்காசிய நாடுகளில் மிகவும் கீழே சரிந்துள்ளது இந்தியா. போஷன் அபியான் திட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சந்திரகாந்த் எஸ் பாண்டேவிடம் இதுபற்றி பேசினோம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளன. அதனைத் தீர்க்க என்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்.  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊட்டச்சத்து பிரச்னை கொண்ட மாவட்டங்கள் நாங்கள், இதற்கான குழுக்களை அமைத்து இப்பிரச்னையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இதற்கான களப்பணியில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்? நாங்கள் என்ஆர்சி எனும் மையங்களை அமைத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையான குழந்தைகளை பராமரித்து அவற்றை நீக

அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் தத்துவம்

படம்
அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பது எங்கள் கொள்கை! இந்திய அரசு பொதுத்துறைகளில் முதலீடு செய்வதைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை முதலில் அமல்படுத்த உள்ளது பெட்ரோலியத்துறையில்தான். இத்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதானை சந்தித்து இதுபற்றி பேசினோம். பெட்ரோலியத்துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பின் எதற்கு அதனை விற்க நினைக்கிறீர்கள்? இந்திய அரசு எந்த வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட விரும்பவில்லை. எங்கள் பிரதமர் இதனை சுலோகனாக சொல்லவில்லை. வழிகாட்டுதல் நெறிமுறையாக வைத்திருக்கிறார். இதுவே பாஜக கட்சியின் தத்துவமும் கூட.  நாங்கள் இதை நம்புகிறோம். இந்நாட்டிலுள்ள எளிம மனிதனுக்கும் நலத்திட்டங்கள் சென்று சேரவேண்டுமே? நிறுவனத்தை அரசு நடத்தினால் என்ன, தனியார் நடத்தினால் என்ன? மக்களுக்கு நன்மை கிடைப்பதுதானே முக்கியம். நாங்கள் இந்த விற்பனையை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் நடத்த உள்ளோம். அரசுக்கு அதிக வருவாய் தரும் துறை எண்ணெய் துறை. அதிலிருந்து அரசு தன் பங்கை விலக்கிக் கொள்வது ஏன்? அரசு மக்களுக்கு வேலைவாய்ப்புகள

சுற்றுலா பயணிகளை கொல்லும் சைக்கோ கொலைகாரர்! - இவான் மிலாட்

படம்
அசுரகுலம் இந்த தொடரில் நீங்கள் ஏற்கனவே அமெரிக்க ஆட்களை நிறைய பார்த்துவிட்டீர்கள். எனவே அந்த அத்தியாயம் இத்தோடு முடிந்தது. இனி உலகம் முழுக்க உள்ள சில முக்கியமான சைக்கோ சீரியல் கொலைகார ர்களை பார்ப்போம். இப்போது ஆஸி.யைச் சேர்ந்த இவான் மிலாட்டைப் பார்ப்போம். ஆஸ்திரேலியாவில் தொண்ணூறுகளில் இவர் பிரபலம். ஏழு பேர்களை கொன்று புதைத்தார். அதற்கான பெருமை இவானையே சேரும். இதற்கான காரணங்களைப் பார்ப்போம். வாங்க. இவான் மிலாட்டை மையமாக வைத்து பத்திரிகையாளரும் எழுத்தாளருமான விட்டேகர் சின்ஸ் ஆப் தி பிரதர் என்ற நூலை எழுதினார். பின்னாளில் இந்த நூல் திரைவடிவமானது. அதன் பெயர் வோல்ஃப் க்ரீக். 1944ஆம் ஆண்டு பிறந்தவர் இவான். இவரது தந்தை கடும் முன்கோபி. அதிலும் ரொமான்ஸ் மூடு ஏகத்திற்கும் ஏற, பதினான்கு பிள்ளைகளை பெற்றார் அவரது அம்மா. அதில் வறுமை காரணமாக 13 பிள்ளைகள் சிறுவயதிலேயே இறந்து போனார்கள். குரோஷிய நாட்டுக்கார குடும்பம் இது. அகதிகள் குடும்பம் என்றால் எடுப்பார் கைப்பிள்ளை போலத்தானே? ஆஸி.யின் சிட்னிக்கு வெளியே உள்ள மூர்பேங்கில்தான் வீடு. அங்கு கத்தோலிக்க பள்ளிக்கு இவான் மற்றும் அவர்களின்

இணையப் பாதுகாப்புக்கு அவுட்சோர்சிங் - ஜெய்ப்பூர் காவல்துறை சாதனை!

படம்
giphy இணைய பாதுகாப்பு தொடர்பான பந்தயத்தில் அரசு ஏறத்தாழ தோற்றுவிட்டது. அரசின் தடைகள் ஆபாச தளங்களை தடுத்தாலும், இணையம் மூலமாக நடைபெறும் மோசடிகளை இன்னும் தடுக்க முடியவில்லை. இதனால் அரசு உடனே என்ன யோசிக்கும்? அதேதான். தனது வேலைகளை உள்வாடகைக்கு விடும். தற்போது தனியார் நிறுவனங்களை இதற்காக பணியமர்த்த தொடங்கியிருக்கின்றன. 2015ஆம் ஆண்டில் 49,495 ஆயிரமாக இருந்த இணையக் குற்றங்கள் 2019ஆம் ஆண்டில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட 2017 தகவல்படி, இணையக்குற்றங்களில் முதலிடம் பிடிப்பது துறவி ஆதித்யநாத் ஆளும் புனித மாநிலமான உத்தரப்பிரதேசம்தான். அடுத்து மகாராஷ்டிரம், கர்நாடகம் என மாநிலங்கள் அணிவகுக்கின்றன. வோலன், ஏவிஎஸ் லேப்ஸ் ஆகிய இணைய நிறுவனங்களை அரசின் காவல்துறை அணுகி உதவிகளைக் கோரி வருகிறது. காரணம், அவர்களின் குற்ற வழக்குகளை துப்ப துலக்க திறன் இல்லாமைதான். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காவல்துறை தனது சைபர்பிரிவு வழக்குகளை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து வருகிறது.. நாட்டிலேயே இது முதன்முறையான முன்னோடி முயற்சி ஆகும். காவல்துறையி

தகவல் பாதுகாப்பு அம்ச மசோதா அம்சங்கள்!

படம்
தகவல் பாதுகாப்பு மசோதா அண்மையில் அமலானது. அதில் பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான அம்சங்கள் இதோ.... இந்தியாவில் சேமியுங்கள் இந்தியர்களைப் பற்றி சேகரிக்கப்படும் நிதி, ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் இந்தியாவில் உள்ள சர்வர்களில் வைக்கப்பட வேண்டும். பிற விஷயங்களை நிறுவனங்கள் த த்தமது நாடுகளிலுள்ள சர்வர்களில் பராமரிக்க தடையேதும் இல்லை. கட்டற்ற அரசு அதிகாரம் அரசு எந்த விதிவிலக்கின்றி அனைத்து குடிமக்களின் தகவல்களை பெற அதிகாரம் கொண்டது. அதனால், ஏறத்தாழ சீனா போல கண்காணிப்பு கொண்ட நாடாக இந்தியா மாறக்கூடும். மேலும் தனிப்பட்ட தகவல்கள் அல்லாதவற்றை அரசு கேட்டால் நிறுவனங்கள் அதனை தரவேண்டியது கட்டாயமாகிறது. அனுமதி அவசியம். மக்களின் தகவல்களை தங்களிடம் வைத்திருக்க நிறுவனங்களுக்கு காலக்கெடு உண்டு. பிற நிறுவனங்களுக்கு பகிர உரிமையானவர்களிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகிறது. அழிக்கும் உரிமை மக்களின் தகவல்களை பயன்படுத்திவிட்டு அதனை சேமிக்க அவசியமில்லை. அதனை அழித்துவிட மக்கள் கோரலாம். இந்த உரிமை இச்சட்டத்தின் மூலம் அமலுக்கு வருகிறது. சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அனுமதி பயனர்களின் தகவல்

தெலுங்குமொழியை தலித்துகள் காப்பாற்ற வேண்டியதில்லை!

படம்
தலித் மாணவர்கள்தான் தெலுங்கு மொழியை காப்பாற்ற வேண்டுமா என்ன? அண்மையில் ஆந்திர அரசு, தம் பள்ளிகளில் பயிற்று மொழியாக தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவதாக அறிவித்தது. உடனே அதுதொடர்பான சர்ச்சைகளும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. இதற்காக கல்வி அமைச்சர் ஆதிமுலப்பு சுரேஷ் அவர்களை சந்தித்தோம். அனைத்து பள்ளிகளிலம் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கொண்டுவந்தால் தெலுங்கு மொழி பாதிப்புக்கு உள்ளாகாதா? ஆந்திரத்தில் 98.5 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியையைப் படிக்கின்றனர். பதினொரு லட்சம் மாணவர்கள் சக்சஸ் பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளிகளில்  ஆங்கில வழிக் கல்வியை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர கிராம பகுதிகளில் உள்ள பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆங்கில வழி கல்வியால் பயன்பெறுவார்கள்.  நாளை இவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு கல்வி உதவ வேண்டுமே? தாய்மொழியான தெலுங்கு மொழி அழிக்கப்படுகிறது என்று விமர்சிப்பவர்களை நாங்கள் கண்டுகொள்ளப்போவதில்லை. அதனைக் காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளை நாங்கள் வேறுவழிகளில் செய்வோம். இதற்கு பயந்து தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலத்தை ப

நான் மோடியை நம்புகிறேன்! - சுப்ரான்சு சௌத்ரி

படம்
சுப்ரான்சு சௌத்ரி முன்னாள் பிபிசி ஊடக செய்தியாளர். மத்திய இந்தியாவில் மாவோயிச தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு பாடுபட்டு, கூகுள் டிஜிட்டல் ஆக்டிவிசம் என்ற விருதைப் பெற்றுள்ளார். அண்மையில் வாட்ஸ்அப் கண்காணிப்புக்கு உட்பட்ட நபர்களில் இவரும் உள்ளதாக செய்திகள் அடிபட்டன. இந்திய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை அழித்துவிடுவார் என நம்புகிறீர்களா? ஆமாம். ஏன் மோடியால் முடியாது? சத்தீஸ்கர் மாநில முதல்வர் கூட எங்கள் ஆப்பின் செயல்பாட்டை கவனிக்கவில்லை. ஆனால் இவர் கவனித்தார். ஊடகங்களில் புல்டூ பற்றிக் கேள்விப்பட்டு பிற மாநிலங்களின் கிராம ப் புறங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். விவசாயிகளின் செயல்முறைகளுக்கு இதனை பயன்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி எனக்கு பெரும் ஊக்கம் தந்தவர் என்பதை நான் மறுக்கப்போவதில்லை. மாவோயிச தீவிரவாதிகள் நிறைந்த பகுதிகளில் எப்படி செயல்படுகிறீர்கள்? நான் சத்தீஸ்கரில் பிறந்து  வளர்ந்தவன். அங்குள்ள நிலம், காடு மீதான உரிமைகளை சுயமாக பெற்றிருப்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்கள் அதனை இழந்துவிட்டதாக மாயை ஏற்படுத்தி  வன்முறை வழி

ஆபாசப்பட நாயகன் லேக்- திருடுவதில் சூரன் இணைந்து செய்த கொலைகள்!

படம்
அசுரகுலம் லியோனார்டு லேக் - சார்லஸ் என்ஜி எனக்கு பெண்களோடு விளையாடு பிடிக்கும். எனக்கு தேவைப்படும் போது அவர்களைப் பயன்படுத்திக்கொள்வேன். அதேசமயம் எனக்கு போரடித்தால் அவர்களை கூண்டில் அடைத்து வைப்பேன். அதுவும் கூட சலிப்பு தந்தால் அவர்களை என் கண்பார்வையிலிருந்து அகற்றுவேன். முடிந்தவரை என் வாழ்க்கையிலிருந்தும் கூட ------ இப்படி சொன்னவர்தான் லேக். தன் வீடியோ டேப்பில் மனதில் இருந்தவற்றை உடைத்து பேசியிருந்தார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் 1945ஆம் ஆண்டு அக்.29 அன்று பிறந்தவர், லேக். சிறுவயதில் அனைத்து அமெரிக்க குடும்பங்களிலும் நடக்கும் சங்கடங்கள் அவருக்கும் நடந்தன. குடும்பம் பிளவுபட்டது. அப்பா, அம்மா திசைக்கு ஒருவராக பிரிய பாட்டியை தஞ்சமடைந்தார் லேக். அப்போதே தன் சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்களை பார்ப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அதுவும் போக கிடைத்த நேரத்தில் தவளை, பல்லி ஆகிய உயிரிகளை வேதிப்பொருட்கள் கொண்ட கலவையில் முக்கி கொன்று அதனைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார். 1965ஆம்ஆண்டு அமெரிக்காவின் கடற்படையில் பணிக்குச் சேர்ந்தார். ராடார் கருவியை இயக்கும் ஆப

அமெரிக்காவின் இனவெறியின் கதை!

படம்
இன்று உலகம் முழுக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆட்சிக்கு வருபவர்கள் தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் வாயால் நாட்டிற்கு சுவர் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் குறையை மறைக்க மக்களிடையே மத, இன,சாதி போர்களை தூண்டி வருகின்றனர். அமெரிக்கா இதற்கு விதிவிலக்கு கிடையாது. இந்த பயம் அமெரிக்காவில் எப்படி தோன்றியது என வரலாறு ரீதியாக காரணங்களை தேடி நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். பெஞ்சமின் பிராங்களின் காலத்தில் ஜெர்மன், ஆசிய, யூத அகதிகள் அந்நாட்டில் இருந்தனர். அனைவரும் பாடுபட்டுத்தான் அமெரிக்கா வலிமையான நாடாக மாறியது. வென்றால் அமெரிக்கர். தோற்றால் கருப்பினத்தவர் என்று அமெரிக்கா குறிப்பிட்ட பாலிசியை கடைபிடிக்க கூடியது. இந்த பாகுபாடு அரசியல் எப்படி வளர்ந்தது என்பதை இந்த நூல் விளக்குகிறது. அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த  தாமஸ் ஜெஃபர்சன், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லாஃபயேட்டா ஆகியோர் கொண்ட நட்பு, இருவரின் வாழ்க்கை இதன் பின்னணியில் வரலாறு என எழுதப்பட்ட நூல். படித்து இருவரின் நட்பை வியந்து போற்றும்படி எழுதியிருக்கிறார் ஆசிரியர். நகரில் நடைபெறும் குற்றங்களை ஒருவ

பாலியல் சந்தோஷம் மனிதர்களுக்கு மட்டும்தானா?

படம்
giphy மிஸ்டர் ரோனி செக்ஸை மனிதர்கள் சந்தோஷத்திற்காக நாடுவது உண்டு. பிற விலங்கினங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது உண்டா? ஆடியோ பார்னோகிராபி வந்துவிட்ட காலத்தில் இப்படி ஒரு சந்தேகமான கேள்வி. அப்படி விலங்குகளும் உலகில் உண்டு. இறைவன் கொடுத்த உறுப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டுமே? இல்லையெனில் சாமிக்குத்தம் ஆகிவிட்டால் என்ன செய்வது? போனபோஸ் எனும் சிம்பன்சி இனத்தில் இதுபோன்ற சில்மிஷ சந்தோஷ அனுபவங்கள் உண்டு. இவை சந்தோஷத்திற்காக நிகழ்கிறதா என்று இன்னும் ஆராய்ச்சிகள் முழுமையாக நமக்கு விளக்கவில்லை. இந்த குரங்குகள் கர்ப்பம் தரித்தபோதும், பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போதும் செக்ஸ் உறவு கொண்டு மகிழ்கின்றன. எதற்கு என ஆராய்வது வேண்டாம். சந்தோஷம் தானே முக்கியம்? இதைப்போலவே டால்பின்களும், ஜப்பானிய மக்காவ் வகை குரங்குகளும் செக்ஸ் அனுபவத்தை விமரிசையாக அனுபவிக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் சொன்ன தகவல். நன்றி - பிபிசி

வேகமாக வாசிப்பது என்பது உண்மையா?

படம்
தெரிஞ்சுக்கோ! எனக்குத் தெரிந்த நண்பர் இதழியில் துறையில் பணியாற்றுகிறார். மாதம் அறுபது எழுபது நூல்களை படித்து முடிப்பவர். அவர் எப்படி படிக்கிறார் என்பதை நான் எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அப்படி வாசிப்பது பற்றியும், அவரது அறிவுத்திறன் பற்றியும் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் படித்த விஷயங்களை நிறைய முறை அவரது நிறுவனத்தில் அமல்படுத்தி சாதித்திருக்கிறார். எப்படி இப்படி சிலரால் மட்டும்  வேகமாக படிக்க முடிகிறது. இயல்பிலேயே வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நிறைய படிக்கும் முடிவெடுப்பது முக்கியம். அப்போதுதான் படிக்கும் வேகம் கைகூடும். அதற்காக மூளை இயல்பாக குறிப்பிட்ட வார்த்தைகளை நினைவகத்தில் பதிவு செய்து வைத்திருக்கும். இதனால் குறிப்பிட்ட வார்த்தைகளை முழுமையாக படிக்காமலேயே உங்களுக்கு அதுதான் என தெரிந்துவிடும். பின் எதற்கு, அதனைப் படிக்கவேண்டும்? இதனை சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். சிலர் இப்படி வேகமாக படிப்பவர்கள் ஒன்றும் விவேகானந்தர் போல கிடையாது என்று வாதிடுகிறார்கள். உலகளவில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் நிமிடத்திற்கு 200 முதல் 400 வரையிலான வார்த்தை