இடுகைகள்

ஊழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையை பேசிய துணிச்சலான எடிட்டர்! -லக்னோபாய் - வினோத் மேத்தா

படம்
  லக்னோ பாய்  வினோத் மேத்தா பெங்குவின்  அவுட்லுக் வார இதழை தொடங்கியவர். அதன் ஆசிரியராக 1995 முதல் 2012 வரை செயல்பட்டவர். வினோத் மேத்தா வின் வாழ்க்கையை சொல்லும் நூல்தான் லக்னோ பாய்.  பாகிஸ்தானில் பிறந்து பிறகு பிழைப்பு தேடி, லக்னோ நகருக்கு வந்த குடும்பம் வினோத்துடையது. அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதுவே அவரது பிற்கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. கலைப்படிப்பை படித்து முடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவரது நண்பர் ஆசாத்,  லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு வேலை இருக்கிறது என வினோத்திடம் சொல்லுகிறார். வேலைபார்த்துக்கொண்டே படிப்பதுதான் பிளான். ஆனால் வினோத் அங்கே போய் பார்க்கும்போது நிலை வேறுமாதிரி இருக்கிறது. எட்டு ஆண்டுகள் சிற்சில வேலைகளை செய்து சமாளித்துக்கொண்டு அங்குள்ள அரசியல் நிலைகளை புரிந்துகொள்கிறார். கூடவே, ஏராளமான ஆங்கில நூல்களையும் படிக்கிறார். இதுவே பின்னாளில் அவர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தவும், புதிய பத்திரிகைகளை தொடங்கவும் மூல காரணமாக அமைந்தது.  ஜார்ஜ் ஆர்வெல்லின் நூல்களை விரும்பி படிப்பவர் என்பதால், இந்த சுயசரி

அமெரிக்காவை திகைக்க வைக்கும் அழகிய இரும்பு பட்டாம்பூச்சி! - லாரா - ரா.கி.ரங்கராஜன் - நாவல்

படம்
  லாரா  ஷிட்னி ஷெல்டன் (தி ஸ்டார்ஸ் ஷைனிங் டவுன்) தமிழில் - ரா.கி. ரங்கராஜன்  அல்லயன்ஸ் வெளியீடு ரூ.400 லாரா கேமரான் என்ற கட்டுமான உலகின் மகத்தான தொழிலதிபர் பற்றிய ஏற்றமும் வீழ்ச்சியும் பற்றிய கதை.  ஸ்காட்லாந்தைப் பாரம்பரியமாக கொண்ட குடும்பம் லாராவினுடையது. ஆனால் அவளது அப்பாவிற்கு வாழ்க்கையில் பெரிய லட்சியம் கிடையாது. அதாவது வயிற்றுப்பாட்டை சமாளிக்க கூட திறனில்லாத தறுதலை. இந்த நேரத்தில் அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறார். அவருக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தை மட்டுமே பிழைக்கிறது. ஆண் குழந்தை பிறந்தவுடனே இறந்துபோகிறது.  இது தான் நாயகியின் அறிமுக காட்சி. ராஜ மௌலி படம் போல நினைக்க ஏதுமில்லை. எல்லாமே அவமானங்கள்தான். லாட்ஜ் ஒன்றை நிர்வாகம் செய்து அதில் கிடைக்கும் வாடகை வருமானத்தை ஓனரிடம் ஒப்படைத்தால் கிடைக்கும் தொகையை வைத்துத்தான் லாராவின் அப்பா, விலைமாது விடுதியில் போதையேற்றிக்கொண்டு கிடக்கிறார்.  இப்படியிருக்க மெல்ல லாரா லாட்ஜில் உள்ள விவகாரங்களை கவனிக்கிறாள். பிறகு அப்பா, விபத்தாகி படுத்துவிட அனைத்து விஷயங்களையும் அவளை கவனிக்கும்படி ஆகிறது. வ

திருடர்களுடன் கைகோத்து நாட்டை வல்லரசாக்குவோம் மக்களே! - பன் பட்டர் ஜாம்

படம்
                  அன்புள்ள மெகந்தியா மக்களே! அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நோய்த்தொற்று பரவிய சூழலிலும் வரி கட்டி வந்தீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போதுதானே, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். அரசு ஊதியம் ஆண்டுதோறும் உயர்ந்து வந்தது கடந்த காலம். இனிமேல் ஆண்டுதோறும் அவர்களின் சம்பளம் குறைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு மக்கள் சேவகர்கள் என்ற இயல்பு பழக்கமாகும். அரசு இயந்திரங்கள் ஊழல் செய்வதில் முன்னிலை வகிப்பதாக உலக அமைப்புகள் தனியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. எனவே இப்படி சம்பாதிக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகம் கூட்டிக் கொடுப்பது எந்த நலனையும் ஏற்படுத்தாது. எனவே, அவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை மக்களிடம் காட்டி பணத்தைப் பெறட்டும். இதனை அரசு மனப்பூர்வமாக ஏற்கிறது. ஆனால் அவர்கள் ஒரு லட்சம் சம்பாதித்தால் இரண்டாயிரம் ரூபாயை உறுதியாக வரியாக கட்டவேண்டும். அப்போதுதான் அரசு அவர்களைப் பாதுகாக்கும். அரசு சேவைகள் அனைத்தும் மக்களுக்கானவை. ஆனால் அனைத்தும் கட்டண சேவை என்பதை இனி உணர்ந்துகொள்வது அவசியம். அப்போதுதான், இந்த ரோதனைக்கு நாமே

ஊழல், மோசமான நிர்வாகத்திலிருந்து பஞ்சாப்பை ஆம் ஆத்மி மீட்கும்! - ஹர்பால்சிங் சீமா

படம்
  ஹர்பால்சிங் சீமா ஹர்பால் சிங் சீமா ஆம் ஆத்மி தலைவர், பஞ்சாப் சிரோமணி அகாலிதளம் கட்சி, இத்தேர்தல் சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மிக்கு இடையில்தான் நடக்கிறது என கூறியிருக்கிறது. காங்கிரசிடமிருந்து பதினைந்து சீட்டுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காங்கிரஸ், சிரோமணி என இரண்டு கட்சிகளும் பதினைந்து இடங்களை பிடிக்கும் என நினைக்கிறேன். முழு கிராமங்களுமே ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும். இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல்தான். மக்கள், அகாலி, காங்கிரஸ கட்சியினரின் மோசமான ஊழல்களை பார்த்துவிட்டார்கள். மக்கள் ஆம் ஆத்மியைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள்.  ஆனால் ஆம் ஆத்மி என்பது டெல்லியைச் சேர்ந்த கட்சிதானே? அது பஞ்சாப்பைச் சேர்ந்தது அல்லவே? இது தவறானது. நான் அகாலி கட்சியினரைக் கேட்கிறேன். அவர்களது கூட்டணி கட்சி எங்கிருந்து வந்தார்கள்? பாஜகவின் தலைமையகம் கூட டெல்லிதானே? ஆம் ஆத்மியின் தலைமையகம் டெல்லியில் இருப்பதில் என்ன பிரச்னை? ஆம் ஆத்மி என்பது தேசிய கட்சி. அதன் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதல்வராக இருக்கிறார். நாங்கள் வெளிநபர் என எதிர்க்கட்சிகள்

பெயரை மாற்றிக்கொள்ள தயாராகும் பேஸ்புக்!- என்ன காரணம்?

படம்
  பெயரில்  என்ன இருக்கிறது? பொதுவாக அனைவரும் இப்படி சொல்லுவார்கள். ஆனால் பிராண்ட் பெயர்களைப் பொறுத்தவரை கவனமாக தேர்வு செய்யவேண்டும். இல்லையெனில் பெயர் மக்களின் மனதில் பதியாது. வணிகமே குப்புற விழுந்துவிடும்.  ஸோமாடோ இன்று இந்திதான் தேசிய மொழி என லொள்ளு பேசும் உணவு சேவை நிறுவனம். அதன் இயக்குநர் தமிழர்களுக்கு சமூக வலைத்தளம் வழியாக சகிப்புத்தன்மை பற்றி பாடம் நடத்தியதையும் நாம் பார்த்தோம். ஸோமாடோ, 2010இல் உருவானபோது அதன்பெயர் ஃபுடிபே என பெயர் வைக்கப்பட்டது. பிறகு இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் பெயரை ஸோமாடோ என்ற பெயரை மாற்றி பிராண்டிங் செய்தனர். இப்போது வெற்றிகரமாக மக்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி பாடம் எடுக்குமளவு நிறுவனம் வளர்ந்திருக்கிறது.  நெட்பிளிக்ஸ் இன்று உலகமெங்கும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனம். இதன் வேகத்திற்கு அமேசான், டிஸ்னி கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பாரம்பரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு நெட்பிளிக்ஸ் திரைப்பட விருதுகளையும் பெற்று வருகிறது. இதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிப்பி. துணை நிறுவனர் மார்க் ராண்டோல்ப் வேறு பொருத்தமான பெயர் கிடைக்கும் வரை இந்தப்

மோ(ச)டிகளின் தலைநகரம் டெல்லி!

படம்
  மோசடிகளின் தலைநகரம் டெல்லி! 2020ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பத்தொன்பது நகரங்களில் பணமோசடிகள் எங்கு அதிகம் நடைபெறுகிறது என ஆய்வு செய்யப்பட்டது. இதில் தேசிய குற்ற ஆவணகத்தின்  தகவல்படி டெல்லி முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் என்ற தலைப்பில் இந்த அறிக்கை கடந்த வாரம் வெளியானது.  பொருளாதார மோசடி சார்ந்து டெல்லியில் மட்டும் 4,445 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கடுத்த இடத்தில் மும்பை 3,927 குற்றங்களுடன் உள்ளது. ஜெய்ப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்து 3,127 குற்றங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் குற்றங்களின் அளவு என்பது ஜெய்ப்பூரில் 10.4 சதவீதமாக உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் 2.72, 2.13 சதவீதமாக உள்ளது. பாட்னா, லக்னோ, ஹைதராபாத் ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.  மொத்த வழக்குகளில் 44.5 சதவீத த்திற்கு டெல்லி காவல்துறையினர் சார்ஜ்ஷீட் பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக டெல்லியின் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதன் காரணமாக பொருளாதார குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  நொய்டா, காச

மதம் சார்ந்து மக்களை புறக்கணித்தால் பொருளாதார வளர்ச்சி கிடைக்காது! ப.சிதம்பரம்

படம்
  ப.சிதம்பரம் எம்.பி. ராஜ்ய சபா காங்கிரஸ் அரசு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்தது. இப்போது அதன் நிலை பற்றி தங்கள் கருத்து என்ன? கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார சீர்த்திருத்தங்களால் நிறைய ஏற்ற இறக்கங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியமான சீர்திருத்தங்கள் வந்துள்ளன. சில மோசமான முடிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2004-2010 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக ஏற்பட்டுள்ளது. 2018-2021 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளது. நான் சீர்த்திருத்தங்கள் பற்றிய கலவையான எண்ணங்களைக் கொண்டுள்ளேன். அரசு இப்போது பொருளாதார வளர்ச்சி மீது கவனம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.  இப்போதுள்ள மத்திய அரசு தேர்தலுக்காக மக்களை பிரிப்பது, பிரிவினைவாத த்தை ஆதரிப்பது என செயல்பட்டு வருகிறது. மக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை செய்யவேண்டாம் என நினைக்கிறார்கள். முழு நாட்டில் உள்ள மக்களுமே வறுமை சூழலில் பயத்துடன் புறக்கணிப்பட்டவர்களாக  வாழ்ந்து வருகிறார்கள்.  கடந்த முப்பது ஆண்டுகளில் வருமானம் அதிகரித்துள்ளது. அதேசமயம் குவிகிற செல்வத்தினால் பாகுப

பொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் ஊழல்!

படம்
பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் ஊழல்!  இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிலும் ஊழல் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா ஊழலையும் மிஞ்சி பொருளாதார வளர்ச்சியில் சாதனை செய்து வருகிறது.  2019ஆம் ஆண்டில் வெளியான ஊழல் பட்டியலில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் 80ஆவது இடத்தில் உள்ளன. சீனாவில் ஊழல் பிரச்னை இந்தியாவைப் போலவே இருந்தாலும் 1961ஆம் ஆண்டு தொடங்கி அங்கு பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வருகிறது. 1971 தொடங்கி 22 ஆண்டுகளாக 27 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. உலகளவிலான ஏற்றுமதிச் சந்தையில் இதன் பங்களிப்பு 1948இல் 0.3 இருந்து 2019இல் 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.  ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆய்வுப்படி உலகளவில் உற்பத்திச்சந்தையில் சீனா, 28.4 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பங்கு அதேகாலகட்டத்தில் 3% ஆகும்.  இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஏற்றுமதியை சீனா செய்து வருகிறது. இந்தவகையில் கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 1.7 சதவீதமாக உள்ளது.  இந்தியாவில் ஊழல் என்பது தேர்தல் மூலமாக நாடெங்கும் பரவலாக்கப்பட்டது. இதற்கு எதிராக 1974இல் ஜெயப்பி

மேற்கு வங்க தேர்தலில் மோடி தோற்றுப்போனது தேசிய அளவில் அவருக்கு பின்னடைவுதான்! - முன்னாள் பிரதமர் தேவேகௌடா

படம்
              முன்னாள் பிரதமர் தேவகௌடா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டணி மூலம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் . இவருக்கு இப்போது 88 வயதாகிறது . மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு இப்போது உழைத்து வருகிறார் . அவரிடம் அரசியல் நிலவரங்களைப் பற்றி பேசினோம் . அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் அரசில் எப்படி மாறியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? அன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிறைய கட்சிகள் விலகின . இன்று மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறார் . சிவசேனா கட்சி அவர்களின் கூட்டணியில் இல்லை . காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் பலவீனமாக உள்ளது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி 27 கூட்டணிக் கட்சிகளை ஒன்றாக இணைத்து ஆட்சி நடத்தியது . இனிமேல் அதுபோல இணைப்பு சாத்தியப்படுமா என்று தெரியவில்லை . நான் தேசிய அரசியலில் இருந்து விலகிவிட்டேன் . இப்போது கர்நாடகாவை மட்டுமே கவனித்து வருகிறேன் . நீங்கள் பிரதமராக கூட்டணிக்கட்சிகள் மூலம் பதவியேற்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டன . உங்களது பதவிக்காலத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? இதுபற்றி முன்னாள் கேபினட் செயலாளர் டிஎஸ்ஆர் சு

ஏழு ஆண்டுகளில் நொறுங்கிப்போன குடியரசு நாடும், அதன் அமைப்புகளும்!

படம்
              தேசிய ஜனநாயக கூட்டணி ஏழு ஆண்டுகளை ஆட்சியில் கடந்துள்ளது . அதில் நிறைய விஷயங்களை சாதித்துள்ளதாக பெருமையாக பிரசாரம் செய்து வருகிறது . ஆனால் பணமதிப்புநீக்க செயல்பாட்டிற்கு பிறகு பொருளாதாரம் தடுமாறி வருகிறது . ஆத்மாநிர்பார் எனும் சுயசார்பு திட்டம் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்து நிற்பது தடுக்கப்படும் என அரசு கூறியது . ஆனால் இதில் இந்தியா வெல்லவில்லை . வென்றது கொரோனாதான் . இந்தியப் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் நிற்கிறது . கடந்த ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி நான்கு சதவீதத்தில் இருக்கிறது . 2013-14 காலகட்டத்தில் பொருளாதாரம் 1.85 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சீனாவை ஒப்பிட்டால் அவர்கள் 16.64 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சேமிப்பு , செலவு செய்யும் அளவு வேலைவாய்ப்பு என அனைத்துமே பாதிக்கப்பட்டிருந்தது . வேலையின்மை அளவு கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்தது . தனிநபர் வருமான அளவும் கூட 5.4 சதவீதமாக குறைந்துவிட்டது . பொதுநிறுவனங்களை விற்கத் தொடங்கியதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை சதவீதம் அதிகரித்து வருகிறது . இதன

மருத்துவத்தை வணிகமயமாக்கும் சதியைத் தடுக்கும் மக்கள் மருத்துவரின் கடைசி முயற்சி! - டாக்டர் ரொமான்டிக் 2

படம்
            டாக்டர் ரொமான்டிக் சீசன் 2 பத்து எபிசோடுகள்   இந்த முறை தலைமை மருத்துவமனையின் பவுண்டேஷன் தலைவராக டாக்டர் டூ பதவியேற்கிறார் . மூன்று ஆண்டுகள் அவமானப்பட்டபிறகு அதற்கு பழிவாங்க காத்திருக்கிறார் . அதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கிறது . டோல்டம் மருத்துவமனையை மூடிவிட்டு , அங்கு ஆடம்பர மருத்துவ சேவைகளை வழங்கும் மையத்தை கட்ட நினைக்கிறார் . ஆனால் அதற்கு தடையாக அவரே நியமித்த பேராசிரியர் பார்க் இருக்கிறார் . பார்க்கைப் பொறுத்தவரை அவர் நல்ல மனிதர் அல்ல . ஆனால் சிறந்த மருத்துவர் . எந்த நோயாளியாக இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தீர்மானித்துதான் ஆபரேஷன் செய்வார் . ஆனால் அவரது இந்த கொள்கை டோல்டம் வந்ததும் செமையாக அடிவாங்குகிறது . அங்கு சீப் டாக்டராக உள்ள டீச்சர் கிம் இவரை சிம்பிளாக தைரியமில்லாத துணிச்சல் இல்லாத கோழை என்று திட்டுவதோடு , பார்க்கும்போதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் கேலிசெய்து விடுகிறார் . இதனால் பார்க்கின் ஈகோ கடுமையாக காயம்படுகிறது . முக்கியமாக அவர் டீச்சர் கிம்மை விட தகுதி குறைவானவர் கிடையாது . ஆனால் கடந்த காலத்தில் முடிவெடுக்க தடுமாறியபோது , நோ

சாதனைகளை செய்தும் கூட அனைத்து புகழையும் விட்டுக்கொடுத்த பிரதமரின் துயரக்கதை! - தற்செயல் பிரதமர் - சஞ்சயா பாரு

படம்
          தற்செயல் பிரதமர் சஞ்சயா பாரு தமிழில் பி . ஆர் . மகாதேவன் கிழக்கு 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பற்றியும் அதில் பிரதமரான பதவி வகித்த மன்மோகன் சிங் பற்றியும் நூல் விலாவரியாக உண்மைகளைப் பேசுகிறது . பிரதமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரின் ஊடக ஆலோசகரான வணிகப் பத்திரிக்கை ஆசிரியரான சஞ்சயா பாரு , பணியில் சேர்கிறார் . அங்கு அவர் பார்த்த தனிப்பட்ட ஆளுமையான மன்மோகனும் , பிரதமராக இருந்த மன்மோகனும் எப்படி சூழலுக்கு ஏற்ப வெளிப்பட்டார்கள் என்பதை பெரியளவு சமரசப்படாமல் நூலாக எழுதியுள்ளார் . அடிப்படையில் இந்த நூலை யார் படித்தாலும் அவர்களது மனம் காங்கிரஸ் கட்சி , சோனியா காந்தி ஆகிய இரண்டுபேரையும் விரோதமாகவே எண்ணும் . அந்தளவு பல்வேறு அதிகார மையங்களால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உழைப்புக்கான பலன்களுக்கான பெயர் கிடைக்காமல் அவமானப்படு்த்தப்பட்ட பொருளாதார நிபுணரின் கதை இது . இந்த நூலைப் பொறுத்தவரை மன்மோகன்சிங்கை பலம் , பலவீனத்தை சரியாக எடை போட்டு அணுகுகிறது . கொடுத்த வேலையை சிறப்பாக செய்யும் தன்மை கொண்ட ப

காங்கிரஸ் கட்சி அரசு ஆளும் மாநிலங்களில் கோவிட் பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம் - சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்

படம்
            சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் செயல்பாடு தற்போது எப்படியுள்ளது . உங்களது மருமகன் கூட கோவிட் பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீண்டுள்ளார் அல்லவா ? ராகுலின் செயல்பாடு மேம்பட்டுள்ளது . டாக்டர் மன்மோகன் உட்பட பலரும் பாதிக்கப்பட்டது எனக்கு கவலை அளித்தது உண்மைதான் . மக்கள் இந்நோயினை எதிர்கொள்ள முன் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் . மோசமான காலகட்டத்தை நாம் இம்முறையில்தான் கடக்க முடியும் . மத்திய அரசு நோய்தடுப்பிற்காக காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகளை கேட்டால் அதனை ஏற்பீர்களா ? நிச்சயமாக . எனது பதில் ஆமாம் என்றுதான் இருக்கும் . அந்த காரணத்தினால்தான் நாங்கள் பிரதமருக்கு கோவிட் பிரச்னையை சமாளிப்பதற்கான ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக கொடுத்தோம் . காங்கிரஸ் கட்சி பேரிடர் மேலாண்மை தொடர்பாக பல்லாண்டுகள் அனுபவம் கொண்டது . இப்போதுள்ள நிலையில் அரசுக்கு நீங்கள் கூறவேண்டிய அறிவுறுத்தல்கள் என்ன ? இந்தியா தினசரி 7500 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வருகிறது . ஆனால் இன்று தன்னுடைய மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை தரமுடியவில்லை . எங