இடுகைகள்

கொரோனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கியல்லாத நிதி நிறுவனங்களை ஆதரிக்கும் ஆர்பிஐ! - மெல்ல தேயுமா வங்கிகள்?

படம்
              இனி வரும் காலத்தில் வங்கிகளை நம்பி நாம் இருக்கவேண்டியதில்லை . வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மெல்ல காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளன . இதில கணக்கு தொடங்கி பணத்தை பிறருக்கு அனுப்புவது பெறுவது , வணிகத்திற்கு பயன்படுத்துவது ஆகியவை இனி மெல்ல அதிகரிக்கும் . சாதாரணமாகவே யூனியன்பேங்க் வகை செயலியை விட கூகுள் பே போன்ற வங்கியல்லாத நிறுவனங்களின் செயலிகளை எளிதாக பயன்படுத்த முடிகிறது . இதற்கு காரணம் , அவர்கள் பயனர்களை வங்கிகளை விட எளிதாக புரிந்துகொள்வதுதான் . யூனியன்பேங்க் ஆப் இந்தியா , சிட்டியூனியன் பேங்க் போன்ற நிறுவனங்கள் செயலிகளின் வசதியில் காட்டும் அக்கறையின்மை கூகுள் பே , பேடிஎம் , போன் பே போன்ற நிறுவனங்களின் செயலிகளுக்கு ஆதரவாக அமைகிறது . தற்போது ஆர்பிஐ வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் பயனருக்கு வழங்கும் நிதியின் அளவை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தியுள்ளது . மேலும் ஆன்லைனில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கும் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது . மத்திய நிதி திட்ட அமைப்பில் தற்போது பொதுத்துறை வங்கிகளும் , தனியார் வங்கிகளும் குறிப்பிட்ட வங்கியல்லாத நி

மக்களுக்காக எந்த துரும்பையும் கிள்ளிப்போடாதவர்கள்தான் எங்களை ஊழல்வாதி என விமர்சிக்கிறார்கள்! - யஷ்வந்த் ஜாதவ், சிவசேனா

படம்
                  யஷ்வந்த் ஜாதவ் சிவசேனா தலைவர் மும்பை முனிசிபாலிட்டி நிலைக்குழு தலைவர் . நீங்கள் மக்களுக்கு பைகளை கொடுத்து ஊழல் செய்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்களே ? நாங்கள் உதவி தேவைப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம் . ம எங்கள் மீது குறைசொல்பவர்கள் பணக்கார ர்களின் பக்கம் நிற்கிறார்கள் . நாங்கள் ஏழைகளின் பக்கம் நிற்கிறோம் . அதுதான் இங்கு வித்தியாசமாக உள்ளது . எனது தொகுதி மட்டுமல்ல தேவையான மக்களுக்கு நாங்கள் உதவிகளை வழங்கியபடியே இருக்கிறோம் . பதினைந்து ஆண்டுகளாக முனிசிபாலிட்டி தலைமைப் பதவியில் இருப்பது சிவசேனா கட்சிதான் ஆனாலும் கூட வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லையே ? நாங்கள் இதற்கான கட்டமைப்பை உருவாக்க முனைந்து வருகிறோம் . நிலத்திற்கு கீழே நீர்த்தொட்டி ஒன்றையும் கட்டி வருகிறோம் . அடுத்து வரும் பருவமழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படாது என நம்புகிறோம் . பலரும் நீங்கள் முடிவை எடுக்கும்போது உறுப்பினர்களுடன் கலந்து பேசவில்லை என்று புகார் கூறியுள்ளனரே ? பெருந்தொற்று காரணமாக வேகமாக செயலாற்ற வேண்டிய சூ்ழ்நிலை . பணத்தை நேரடியாக ந

டேட்டா கார்னர்! - நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியை பார்க்க மெனக்கெடும் இங்கிலாந்து மக்கள்!

படம்
  5.2 மில்லியன் அளவிலான பாதுகாப்பு கேமராக்கள் இங்கிலாந்திலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை முதல் அலையின்போது கட்டுப்படுத்த 20 நாட்கள் இங்கிலாந்து அரசுக்கு தேவைப்பட்டது.  அமாங் அஸ் எனும் விளையாட்டு உலகமெங்கும்  74.8 மில்லியன் அளவுக்கு மக்களால் தரவிறக்கப்பட்டுள்ளது.  உலகிலுள்ள ஒரு சதவீத வேளாண் நிறுவனங்கள் 70 சதவீத நிலங்களைக் கட்டுப்படுத்தி பயிர் விளைச்சலை மக்களுக்கு வழங்குகின்றன.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 சதவீத நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு மூன்று மாதங்களுக்குள்ளாக உளவியல் சிகிச்சையும் தேவைப்பட்டது.  உலகில் 3 சதவீத விளையாட்டு மேம்பாட்டாளர்கள் நினென்டோ நிறுவனத்தின் விளையாட்டு சாதனங்களை மேம்படுத்த உழைத்து வருகின்றனர். இப்பணி கடுமையானது.  இங்கிலாந்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சிகளைக் காண 750 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை, முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாகும். 

கோவாக்ஸின் தயாரித்த உள்நாட்டு சாதனை நிறுவனம்! - பாரத் பயோடெக்கின் கதை

படம்
  கிருஷ்ணா எல்லா உள்நாட்டில் தடுப்பூசியைத் தயாரித்த சாதனை நிறுவனம்!  தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தவரான கிருஷ்ணா எல்லா, தனது பாரத்பயோடெக் நிறுவனம் மூலம் கோவிட்-19க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளார்.  கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை எட்டுமாத போராட்டங்களுக்குப் பிறகு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் வெற்றிகரமாக தயாரித்துள்ளது.  இந்நிறுவனத்தின் கோவாக்ஸின் என்ற தடுப்பூசி மருந்தை அவசரநிலை காரணமாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 1996இல் தொடங்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தில் தற்போது வரை 1,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 140 மருந்துகளின் காப்புரிமைகளை வைத்துள்ள கிருஷ்ணா எல்லா, 120 நாடுகளுக்கு நூறு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்துவருகிறார்.  விவசாய அறிவியலில் பட்டம் பெற்ற கிருஷ்ணா, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சில ஆண்டுகள், சவுத் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளார். பாரத் பயோடெக்கின் ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்தை, உலக நாடுகள் பலவும் வாங்கிப் பயன

கொரோனாவால் குரலை இழந்தேன்!

படம்
  கொரோனாவால் குரலை இழந்தேன்! இங்கிலாந்தைச் சேர்ந்த கானர்  ரீட் (Connor Reed) கொரோனா வைரஸ் தாக்கி மீண்டுள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் பணியாற்றியவர், வைரஸால் தாக்கப்பட்டு உயிர்மீண்டதே மறுபிறப்பு போலத்தான்.  இங்கிலாந்தின் நார்த்வேல்ஸ் பகுதியிலுள்ள லாலன்டுட்னோவைச் சேர்ந்த கானர் ரீட். இவர் சீனாவிலுள்ள வூஹானில் உள்ள பள்ளியொன்றில் பணியாற்றி வந்தார். 2019 நவம்பர் 25 அன்று, சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டார். முதலில் அதனை அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.   ஏழு நாளில் சளி, மூக்கடைப்பு சரியாகிவிடும் என்று தன் தினசரி வேலைகளை செய்து வந்திருக்கிறார். ஆனால் , திடீரென ஒருநாள் காலையில் அவரால் படுக்கையிலிருந்து எழமுடியவில்லை. உடல்வலியோடு, இடைவிடாத இருமல் தொல்லை வேறு. பல்வேறு கைவைத்தியங்களை செய்தும் பயனில்லை.  “ நுரையீரல் பாதிக்கப்பட்டதால் எனக்கு மூச்சுவிடுதல் சிரமமாகி வந்தது. முழுக்க குரலை இழந்து விட்டிருந்தேன். பேச முயற்சித்தால் கர், புர் என்ற ஒலிதான் வந்தது” என்றார் கானர். உடல்நிலை தேறாததால் உடனே அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் அவருக்கு நிம்மோனியா

கொரோனா காலத்தில் ரூ.12 லட்சத்தை வேண்டாம் என்று வாடகைதாரர்களிடம் சொன்ன தொழிலதிபர்!

படம்
      வாடகை வேண்டாம் ! இதுவும் கேரளத்தைச் சேர்ந்தவரின் மனிதநேயம் பற்றியதுதான் . கொரோனா காலம் பல்வேறு மனிதர்களைப் பற்றிய கதைகளை பிறருக்கு சொல்லும் சூழலை உருவாக்கியுள்ளது . வேலை இல்லாமல் பல்வேறு வீடுகளில் வாடகையை வேண்டாம் என்று மறுத்த வீட்டு உரிமையாளர்களும் உண்டு . அந்த வகையில் அவர்களுக்கு இழப்பு என்றாலும் சூழலைப் புரிந்துகொண்டு பிறருக்கும் இளைப்பாறுதலை தங்களது செயல் வழியே செய்கிறார்கள் . சிஇ சக்குண்ணி என்றால் கேரளத்தில் யாருக்கும் அடையாளம் தெரியாது . நூற்றுக்கும் மேலான கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் ஆள்தான் அவர் . பொதுமுடக்க காலத்தில் வியாபாரிகளால் கடை வாடகை தரமுடியாது என்று அறிந்தார் . இதனால் கடைக்காரர்களிடம் வாடகையைக் கேட்காமல் தனக்கு வரவேண்டிய ரூ .12 லட்சத்தை இழந்துள்ளார் . இதேகாலகட்டத்தில் பல்வேறு மளிகை , அரிசி ஆகியற்றின் விலை அதிகரித்து விற்கப்பட்டது . ஆனால் சக்குண்ணி தனக்கு நியாயமாக வரவேண்டிய பணத்தை வேண்டாம் என ஒதுக்கியுள்ளார் . 1968 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சந்தையில் சக்குண்ணி அண்ட் கோ என்ற சொந்த நிறுவனத்தைக் தொடங்கினார் அதற்கு முன்னர் இவர் சந்த

அரசுக்கு உதவிய துறவி நடத்தும் இலவச மருத்துவமனை! - லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை

படம்
              கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய இலவச மருத்துவமனை ! லடாக்கில் உள்ளது ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை . இதனை நடத்தி வருபவர் பௌத்த துறவியான லாமா தும்ப்ஸ்தான் சோக்யால் . இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் என அனைவருமே சேவை நோக்கத்துடன் பகுதி நேரமாக செயல்படுபவர்கள் . இன்னும் ஒன்றை கூற மறந்துவிட்டேன் . இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது . சோனம் நோர்பு நினைவு மருத்துவமனையை அரசு நடத்தி வந்தது . ஆனால் மாவட்ட நிர்வாகம் மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமாளிக்க முடியாத நிலை . உடனே லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவி கேட்டனர் . அதற்கு துறவி லாமா ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார் . இங்குள்ள மருத்துவர்கள் போதாது . கூடுதலாக மருத்துவர்களை அழைத்து சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்றார் . முதலில் இந்த மருத்துவமனையில் நோய் உள்ளதாக சந்தேகப்பட்டவர்களை தங்க வைத்து கண்காணித்தனர் . நோய் உறுதியானதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றிவிட்டனர் . இங்கு அதிக அறைகள் இல

ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர்!

படம்
              ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர் ! கடந்த ஆண்டு மார்ச் 28 அன்று , சிவ்பால் சிங் , தனது இரண்டரை வயது மகனை விபத்தில் இறந்தார் . விபத்து நடந்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால் , மகனைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தம் அவரது மனதில் இப்போதும் உள்ளது . இதற்காகவே 31 வயதான சிவ்பால்சிங் , ஆம்புலன்ஸில் பணியாற்றுவதற்காக 350 ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளார் . மகன் இறந்துபோன பதினைந்து நாட்களுக்குள்ளாகவே கோவிட் தொடர்பான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்கான பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் . சேவ் லைஃப் எனும் நிறுவனத்தில் இணைந்து அவசரகால உதவிகளை விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்குவது பற்றி பயிற்சி அளித்து வருகிறார் . இவரது குழுவினர் ஆயிரம் பேர்களுக்கும் , இவர் மட்டுமே 350 பேர்களுக்கும் அவசரகால உதவிகளைக் கற்றுக்கொடுத்துள்ளனர் . ஆம்புலன்ஸ் தாமதமின்றி செயல்பட்டால் மட்டுமே நோயாளிகளை நாம் காப்பாற்றமுடியும் . ஒருமணிநேரத்திற்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்லாதபோது நாம் உயிரை காப்பாற்றுவது கடினம் என்றார் சிவ்பால்

நண்பர்கள் இறப்பைக் கண்ணில் பார்த்தும் கடமையில் தவறாமல் கடிதங்களை, மருந்துகளை வீடுகளுக்கு விநியோகித்த தபால்காரர்!

படம்
            அஞ்சல் வழியாக நம்பிக்கை ! பிரதீப் சாகு அஞ்சல்துறை ஊழியர் , மும்பை அஞ்சல்துறை ஊழியர்கள் கொரோனா காலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்து உதவியுள்ளனர் . 54 வயதாகும் சாகு , இந்தியா போஸ்டில் இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார் . திலக் நகர் , செம்பூர் , கோவண்டி , கர்லா என மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களுக்கு சைக்கிளில் கடிதங்கள் விநியோகித்து வந்தார் . அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் அறிமுகமான நபராக மாறிவிட்டார் பிரதீப் சாகு . ஆனால் கொரோனா காலம் மக்களுக்கு மட்டுமல்ல சாகுவுக்கும் பயம் ஏற்படுத்திய காலமாகவே உள்ளது . மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சாகு நோய்த்தொற்று பயம் விலகாமலேயே வேலை செய்து வந்துள்ளார் . அவரின் நண்பர்களை கொரோனாவுக்கு பலிகொடுத்தும் கூட பணியை கைவிடமுடியாமல் செய்தே ஆக வேண்டிய சூழல் . இந்தியா போஸ்ட் நிறுவனம் , கிராம ப்புறங்களில் அமைந்துள்ள பெரிய வலைப்பின்னலான அமைப்பு . மொத்தம் 1,56, 600 அஞ்சல் கிளைகள் நாடெங்கும் அமைந்துள்ளன . அரசின் நிதியுதவி , பாதுகாப்பு சாதனங்களை வீடுகளுக்கு

ஒலிப்பெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அர்ப்பணிப்பான குஜராத் கிராமம்!

படம்
                  ஒலிப்பெருக்கி வழியே கல்வி ! ஷைலேஷ் ராவல் ஆசிரியர் , குஜராத் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வி தடைபட்டுள்ளது . இந்த நேரத்திலும் பல்வேறு ஆசிரியர்கள் புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர தொடங்கியுள்ளனர் . குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் . இங்குள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஊர் பார்பட்டா . இங்கு காலை எட்டு மணி என்றால் ஒலிபெருக்கிகள் முழங்கத் தொடங்கிவிடும் . இதுதான் அங்குள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கான பாடவேளை தொடங்கிவிட்டதற்கான அறிகுறி . ஷைலேஷ் ராவல் இப்படித்தான் ஒலிபெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார் . பல்வேறு மாநில மாணவர்களும் இணையம் வழியாக கற்கத் தொடங்கியபோது , ஷைலேஷ் ஒலிப்பெருக்கி பக்கம் நகர்ந்துள்ளார் . வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் பலரின் வீடுகளில் ஸ்மார்ட்போன் , டேப்லெட் , மடிக்கணினி , ஏன் டிவி கூட கிடையாது . அண்மையில் ஸ்மைல் பௌண்டேஷன் 22 மாநிலங்களில் 42,831 மாணவர்களிடம் செய்த ஆய்வில் 56 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்ற உண்மை தெரியவந்துள

கொரோனா காலத்தில் ஜார்க்கண்ட் மக்களின் வாழ்க்கையைக் காத்த பெண்மணி! - காயத்ரி தேவி

படம்
                  காயத்ரிதேவி பாகீரதி சுய உதவிக்குழுக்கள் காயத்ரியின் பணிகள் காலை ஏழுமணிமுதலே தொடங்கிவிடுகிறது . தனது வீட்டுவேலைகளை அவர் வேகமாக முடிப்பது அவசியம் . அப்போதுதான் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும் கிராமத்து பெண்களுக்கு வங்கியில் பணப்பரிமாற்றம் பற்றி விளக்கம் அளிக்க முடியும் . ஜார்க்கண்டின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காயத்ரி லேப்டார் சகிதமாக அனைத்து கிராமத்தினரின் வீடுகளுக்கும் சென்று வங்கிக்கணக்கு தொடங்குவது பற்றி சொல்லிக்கொடுக்கிறார் . கடன் , காப்பீடு , வங்கிக்கணக்கு புத்தக பதிவு , ஏன் அவர்களின் போனுக்கும் கூட ரீசார்ஜ் செய்துகொடுப்பதையும் செய்கிறார் . இத்தனைக்கும் இப்பணிகளை நக்சல் ஆதிக்கம் கொண்ட குன்டி மாவட்டத்தில் செய்து வருகிறார் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று . இப்பணிகளை இவர் அக்டோபர் 2016 முதல் செய்துவருகிறார் . கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபிறகு , கிராமத்தினர் அனைவரும் பணத்தை வங்கியில் இருந்து பெற அலைபாயத் தொடங்கினர் . வங்கிகள் மூடப்பட்டிருந்தால் தினசரி செலவிற்கான பணத்தை எப்படி பெறுவது என்பதுதான் அவர்களின் யோசனை .

உலகை மெல்ல வளைக்கும் செயற்கை நுண்ணறிவு! - கோவிட் -19 ஏற்படுத்திய மாற்றம்

படம்
              கொரோனா தொடங்கிய ஏ . ஐ புரட்சி ! தானியங்கி எந்திரங்கள் முன்னர் தொழி்ற்சாலைகளில் இயக்கப்பட்டாலும் , அதன் பரவலை கோவிட் -19 காலம் வேகப்படுத்தியுள்ளது . பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றுக்கான தளர்வுகளில் வணிக வளாகங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகி்ன்றன . சிங்கப்பூரில் தூய்மை செய்யும் பணிகளுக்கு கூட புற ஊதாக்கதிர்களைக் கொண்ட எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன . ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது கூட நேரடி தொடர்புகளை தவிர்த்து , முழுக்க செயலி வசம் அனைத்து செயல்பாடுகளும் வந்துவிட்டன . உணவு , மருத்துவ சேவைகளுக்கும் கூட பாட் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன . ’’ பெருந்தொற்று காலம் , சுகாதாரமாக வாழவும் , மனிதர்களை நேரடித்தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியோடு பல்வேறு விஷயங்களையும் செய்ய வைத்துவிட்டது . செயற்கை நுண்ணறிவின் வேகமான பரவல் நமக்கு நன்மையும் கூடத்தான்’’ என்கிறார் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பாக் . நான்காவது தொழிற்புரட்சியின் பாகங்களாக செயற்கை நுண்ணறிவை கூறுகின்றனர் . இதன் வருகையால் , வேலையிழப்பு பாதிப்பும் இப்போது