இடுகைகள்

நீதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றவாளிகளிடமிருந்து மக்களைக் காக்கும் ரகசிய ப்ரீமியம் டாக்சி குழு! டாக்சி டிரைவர் - கொரிய டிராமா

படம்
  டாக்சி டிரைவர் எஸ்பிஎஸ் தென்கொரிய டிராமா – 16 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   கொரிய நாட்டின் நீதித்துறை தவறவிட்ட சைக்கோ கொலையாளிகள், மோசமான குற்றவாளிகளை ரகசியமாக செயல்படும் அமைப்பு கடத்தி சிறைப்படுத்தி பாதுகாக்கிறது. இதை சியோல் நீதித்துறை அமைப்பு அறியும் போது என்ன ஆகிறது என்பதே கதையின் மையம். பொதுவாக நீதித்துறை எப்போதும் ஆளும் அரசின் கைப்பாவையாகவே இருக்கும். அதற்கேற்றபடி ஆட்களை உள்ளே நியமித்து எதிரிகளை அடித்து உதைத்து வளைப்பார்கள். வெளியுலகில் நல்ல பெயரை சம்பாதிக்க கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதோடு, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரித்து நிதி அளித்து குற்றசெயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொள்வார்கள். தொடரில் அப்படி ப்ளூபேர்ட் பௌண்டேஷன் அமைப்பு செயல்படுகிறது. அதன் நோக்கமே, பழிவாங்குவதுதான். யாராவது ஒருவர் பழிவாங்க நினைத்து இந்த அமைப்பை தொடர்பு கொண்டால், அவர்கள் புகார்தாரரை டாக்சியில் கூட்டிக்கொண்டுபோய் புகாரை வாய்மொழியாக பதிவு செய்துகொண்டு திட்டம் வகுத்து அவரது வாழ்க்கையைக் கெடுத்தவர்களை பழிவாங்குவார்கள். இதற்காகும் செலவை புகார்தாரர் கொட

முதலமைச்சரை பணயக்கைதியாக்கி சாமானியனின் இறப்புக்கு நீதி கேட்கும் பத்திரிகையாளர்! - பிரதிநிதி - தெலுங்கு - நர ரோகித்

படம்
  பிரதிநிதி தெலுங்கு  இயக்கம் பிரசாந்த் மந்தரா நர ரோகித்தின் படம் என்றாலே எதிர்பார்ப்பு ஒன்றுண்டு. கதை என்பது வித்தியாசமாக வினோதமாக இருக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த படமும் விதிவிலக்காக அல்ல.  முதலமைச்சர், முதியோர் இல்லம் ஒன்றை திறந்து வைக்க போகிறார். அங்கு அவரை கடத்தி பணயக் கைதியாக்கி விடுகிறார்கள். அவரை கடத்தியவர் தான் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர் கேட்கும் கோரிக்கைகள் என்ன, ஏன் அந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.  நர ரோகித் யார் என்பதை ஸ்ரீவிஷ்ணு போலீஸ் விசாரணையில் தான் சொல்லுகிறார். அவர் இப்படி இருப்பார் என்பதை நாம் அவரது நினைவுக்குறிப்பில்தான் அறிகிறோம். இதன்படி, அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, சாலையில் கோக் டின்னை எறியும் ஸ்ரீவிஷ்ணுவை துரத்தி வந்து... எப்படி பைக்கில் தான்.  கேனை திரும்ப காருக்குள் எறிகிறார். குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற நற்கருத்தை அமைச்சர் மகனின் மனதில் விதைக்கிறார் நர ரோகித். கூடவே, ஸ்ரீவிஷ்ணுவின் உயிரையும் அதே இடத்தில் காப்பாற்றி அவரின் நட்புக்கு பாத்திரமாகிறார். அவரின் பெயர

ஊடகங்களைப் பயன்படுத்தி நீதியின் முதுகெலும்பை முறிக்கும் அதிகார அரசியல்- ஜனகனமண -2022

படம்
  ஜனகனமண பிரிதிவிராஜ் சுகுமாரன் (நடிப்பும், தயாரிப்பும்) மம்தா மோகன் தாஸ்  இசை - ஜேக்ஸ் பிஜாய்    கல்லூரி பேராசிரியர் சபா, வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்படுகிறார். அவர் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணியாற்றி வருகிறார். அவரின் இரங்கல் கூட்டத்தை கூட  அதன் தலைவர் விட்டேத்தியாக நடத்துவதோடு அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் பல்கலைக்கழகம் முழுக்க போர்க்களமாகிறது. காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாக்க ரணகளமாகிறது சூழ்நிலை. இதை விசாரிக்க ஏசிபி சாஜன் குமார் நியமிக்கப்படுகிறார். சபா என்ற பெண்ணைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.  படத்தின் நாயகன் சாஜன் குமாராக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடுதான். தொடக்க காட்சியில் பிரிதிவிராஜை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அதற்குப் பிறகு தொடரும் காட்சிகளில் சபாவின் வழக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, பிரிதிவிராஜ் திரையில் வருகிறார். முதல்முறை வந்தது போல இளமையாக அல்ல. மத்திய வயது ஆளாக, ஒரு கால் செயலிழந்தவராக , வழக்குரைஞராக இருக்கிறார். படத்திற்கு இரண்டாவது பாகத்திற்கான முன்னோட்டத்தையும் கொடுத்து விட

நவீன குழந்தைகளுக்கு ஏற்றபடி கதைகளை மாற்றும் காமிக்ஸ் நிறுவனங்கள்! - மாற்றங்கள் ஏன்?

படம்
  அமர்சித்ரகதா மாற்றம் பெறும் காமிக்ஸ் மற்றும் குழந்தைகளின் நூல்கள்! உலகமெங்கும் உள்ள காமிக்ஸ் நூல்களின் மையப் பொருள் மாறுதல் பெறத் தொடங்கியுள்ளன. மாற்றுப்பாலினத்தவர், கருப்பினத்தவர்களையும் மெல்ல முக்கியமான பாத்திரங்களாக மாற்றுவதற்கு கதை எழுத்தாளர்கள் முன்வந்துள்ளனர். இதனை பதிப்பிக்கும் நிறுவனத்தினரும் இதனை ஏற்றுள்ளனர். ஒருவகையில் மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் வணிகத்திற்கு அவசியம் என்பது உண்மை.  கூடுதலாக வாசகர்களும் தொன்மையான நீதிகளை, விதிகளை பேசும் நூல்களை வேண்டாம் மாற்றம் வேண்டும் என கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள அமர்சித்ர கதா, டிங்கிள் காமிக்ஸ், ஃபிளேவே பே போன்ற இதழ்களும் கூட மாற்றங்களுக்கு ஏற்ப கதைகளை எழுதி வெளியிடத் தொடங்கியுள்ளன. இயற்கை சார்ந்த விஷயங்கள் மெல்ல காமிக்ஸ் வடிவத்தை பெற்று வருகின்றன. ரோகன் சக்ரவர்த்தி க்ரீன் ஹியூமர் என்ற பெயரில் தனி வலைத்தளத்தில் தனது இயற்கை சார்ந்த விஷயங்களை எழுதி  வரைந்து வெளியிட்டு வருகிறார். இந்து ஆங்கிலம் தேசிய நாளிதழிலும் இவரது கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டு வருகிறது.  டிங்கிள் காமிக்ஸ்  விலங்குகள் பேசுவது போல இவரது காமிக்ஸ்க

நீதிகளைப் பேசும் சீனச்சிறுகதைகள்! - குறிதவறிய அம்பு - வானதி

படம்
  குறி தவறிய அம்பு சீன சிறுகதைகள் தமிழ் மொழிபெயர்ப்பு வானதி சீன பழமொழிகளை ஒட்டிய ஏராளமான சிறுகதைகள் உள்ளன. இவை அனைத்துமே பொதுவாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நன்னெறிகளைக் கொண்டவை. குழந்தைகள் வாசிக்க ஏற்றவை என்பதையும் புரிந்துகொள்ளலாம்.  சகோதரர்களுக்கு உள்ள அபூர்வ சக்தியால் ஒருவரையொருவர் காப்பாற்ற முயலும் கதை அருமையானது. இரும்பினால் வெட்டப்பட முடியாத, கடலில் மூழ்கினாலும் சாகாத, நெருப்பும் எரிக்க முடியாத அபூர்வ சக்திகளை கொண்ட சகோதர ர்களின் கதை அவர்களின் பாசத்தை காட்டுவதோடு, சமயோசிதமாக யோசித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் புத்திசாலித்தனத்தையும் பேசுகிறது.  நீதியை கையில் எடுத்து தண்டிக்கும் பெண்ணின் கதை. இதன்படி, கணவனைக் கொன்றவரை இரண்டாவது கணவனாக ஏற்றுக்கொண்டு குழந்தை பெற்றாலும் முதல் கணவனின் இறப்புக்கு பழிவாங்கும்  வேகம் ஆச்சரியப்படுத்தியது. நீதிநோக்கில் பார்த்தால் இது சரியா என்று தோன்றும். ஆனால் நீதிக்கு உணர்ச்சிகளை விட சாட்சிகளே முக்கியம் என்பதால் இரண்டாவது கணவன் செய்தது கொலை என நிரூபிக்கப்பட முடியாது. எனவே சட்டத்தை தன் கையில் எடுத்து இரண்டாவது கணவனைக் கொல்கிறாள் மனைவி. கொலைக்கு கொலை

குடிமக்களின் அவசியமான உரிமைகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பறிக்க நினைக்கிறது மத்திய அரசு! - கபில் சிபல்

படம்
                        தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் தேசிய பாதுகாப்பு சட்டம் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு நடைமுறைப்படுத்திய தேசியபாதுகாப்பு சட்டம் , தீவிரவாத த்தி்கு எதிரானது என்று கூறப்பட்டது . ஆனால் இந்த சட்டம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று முதலிலேயே அஞ்சப்பட்டது . அதற்கு ஏற்ப பத்திரிகையாளர்கள் , மாணவர்கள் , கல்வியாளர்கள் என பலரின் மீதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது . இவர்கள் மீது தேச விரோதி என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டு உரிமைகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை அமைதியாக்கி வருகிறார்கள் . மக்களவையில் உள்துறை அமைச்சர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பேசும்போது , இந்த சட்டத்தில் தீவிரவாத த்திற்கு ஆதரவானர்களும் ., அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் . பிறருக்கு இதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டது . மனித உரிமைகள் இந்த சட்டத்தின்படி பாதிக்கப்படாது என்று அமைச்சர் கூறினார் . ஆனால் சட்டம் நடைமுறையில் வேறுமாதிரி செய்லப்ட்டது . குற்றவாளிகள் என சந்தேகம் வந்தால் கூட ஒருவரை சிறையில் அடைத்துவிட்டு பிறகு ஆற அமர்ந்து ஆதாரங்களை சேகரித

72 மணிநேரத்தில் கொலைக்குற்றவாளியைக் கூண்டிலேற்ற காலப்பயணம்! மிரேஜ் 2018

படம்
    மிரேஜ் 2018 ஸ்பானிய திரைப்படம்  Spanish Durante la tormenta Directed by Oriol Paulo Produced by Mercedes Gamero Mikel Lejarza Eneko Lizarraga Jesus Ulled Nadal Written by Oriol Paulo Lara Sendim Starring Adriana Ugarte Chino Darín Javier Gutiérrez Álvarez Álvaro Morte Nora Navas Music by Fernando Velázquez Cinematography Xavi Giménez 1989 ஆம் ஆண்டு டிவியில் கிடாரை வாசித்த பதிவு செய்துகொண்டிருக்கிறான் சிறுவன் ஒருவன். அப்போது எதிர்வீட்டில் ஏதோ சண்டை போடுவது போல சத்தம் கேட்க, அங்கு சென்று பார்க்கிறான். மனைவி கத்தியால் குத்துபட்டு கிடக்க, மேலிருந்து கீழே வரும் கணவரின் கையில் கத்தி. பயந்துபோய் சிறுவன் ஒடுகிறான். அவனை துரத்தியபடி கொலைகார கணவர் வருகிறார். சாலையில் வேகமாக வரும் காரை எதிர்பார்க்காமல் சிறுவன் செல்ல, அவன் அடிபட்டு கீழே விழுந்து உயிரை விடுகிறான்.  2014இல் அதேசிறுவன் வாழ்ந்த வீட்டுக்கு வெரா ராய் என்ற பெண்மணி கணவனுடன் தங்குவதற்கு வருகிறாள். அங்கு நிகோ என்ற இறந்துபோன சிறுவனின் டிவி, வீடியோ கேமரா கிடைக்கிறது. அந்த நேரம் பார்த்து வானில் புயல் ஒன்று ஏற்படுகிறது. இடி, மின்னல், காற்

கருப்பு பணம் காதலையும் சுமந்து வந்தால்... பிளாக் மணி லவ்(கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர்

படம்
            பிளாக்மணி லவ் (கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர் 2014-2015 164 எபிசோடுகள் துருக்கியின் இஸ்தான் புல்லில் வாழும் அஹ்மது டெனிஸர். தனது மகள் எலி்ப் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு ஆபீசிற்கு நள்ளிரவில் செல்கிறார். செல்லும் வழியில் காரில் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவருடன் அவரது மகள் வயதில் இளம்பெண் ஒருவரும் இருக்கிறாள். இந்த வழக்கை  ஹூசைன் டெமிர் என்ற இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அங்கு லீவுக்கு வான் நகரிலிருந்து அவரது தம்பியும், குற்றப்பிரிவு கேப்டனுமான உமர் டெமிர் வந்திருக்கிறார். நாட்டிலேயே ஸ்மார்டான சிறந்த போலீஸ் அதிகாரி அவர். தனது காதலியை திருமணம் செய்துகொள்ள நினைத்துள்ள நேரத்தில் அவரின் பணிக்காக  பாராட்டி விருது வழங்கப்படுவதோடு ஒரு மாத காலம் சம்பளத்தோடு விடுமுறையையும் அரசு வழங்குகிறது. அதில்தான் இஸ்தான்புல்லிலுள்ள தனது அம்மா, அண்ணன் குடும்பத்தை பார்க்க வந்திருக்கிறார் உமர் டெமிர்.  அஹ்மது டெனிஸர் கொல்லப்பட செய்தி வயர்லெஸில் சொல்லப்பட, அண்ணன் ஆபீசில் ஆர்டா என்ற நண்பனோடு பேசிக்கொண்டிருக்கிறார் உமர். ஆர்டா அந்த வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டே  கிளம்பும்போது, உமரையும் சரி ந

தாமதமாகும் இழப்பீட்டுப் பணம்! - கடத்தலில் மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்காத நீதி!

படம்
கருப்பு இந்தியா கொல்கத்தாவில் கடத்தல் தொழிலிருந்து மீட்கப்படுபவர்களுக்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டு பணம் வழங்கப்படாமல் இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து  2019 வரையிலான அரசின் இழப்பீட்டு திட்டத்தின் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீத நிவாரணத்தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஸ்எல்எஸ்ஏ எனும் இத்திட்டத்தில் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது கொல்கத்தா அரசு. இதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை என்ற பெயரில் பலமணி நேரங்கள் காக்க வைக்கின்றனர். ஆனால் அதற்கான இழப்பீட்டை முழுமையாக வழங்குவதில்லை. பலரும் இதன் காரணத்தால் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு நிவாரணம் பெறும் நிலைமை உள்ளது. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தகவல்படி, நடப்பு ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் மனிதர்களை கடத்திச்செல்லும் சம்பவங்கள் இங்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3500 கடத்தல் சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. சன்ஜோக் எனும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழு இதற்கான தகவல்களை நாடு முழுவதும் தேடி சேகரித்துள்ளது. சன்ஜோக் குழுவைச்

புதிய டெக்ஸின் அதிரடி! - புதிய கதைக்களம் - புதிய முகம்!

படம்
segio bonelli ஒரு தலைவன் ஒரு சகாப்தம் லயன் காமிக்ஸ் - தீபாவளி மலர் விலை. ரூ. 150 ப்ளூமூன் எனும் கமான்சே குழுக்கள், நவஹோ எனும் தங்களின் எதிரியான பழங்குடிகளை தாக்கி கொன்றுவிடுகின்றனர். அங்கு அடைக்கலமாகி வந்த பெண் ஒருவரையும் தூக்கிக்கொண்டு வந்துவிடுகின்றனர். அவர்களை வேரறுக்க டெக்ஸ் வில்லர் செல்கிறார். நீதியை நிலைநாட்டி அவர்களை இடதுகையால் சமாளித்து தோட்டாக்களையும் கோடாரிகளையும் பரிசளித்து, குருதியால் பூமியை குளிப்பாட்டுகிறார். இறுதியில் ப்ளூமூனோடு ஒற்றைக்கு ஒற்றையாக மோதி வென்று தன் சவாலில் சாதிக்கிறார். எப்படி என்பதுதான் காமிக்ஸின் கதை. கதை தொடங்குவதும் முடிவதும் செம ட்விஸ்ட். கதையை சொல்வது டெக்ஸ் வில்லரின் ஆயுள்கால சகாவான கார்சன். ஏறத்தாழ நினைவிழப்பு நோய்க்கு ஆளாகியது போல உள்ள கார்சன், தனது நண்பரின் கதையை சொல்கிறார். நண்பர்தான் டெக்ஸ் வில்லர். இக்கதையில் டெக்ஸ் வில்லர் சற்று வேறுபட்டு தோன்றுகிறார். இதுவரையில் நாம் பார்த்த டெக்ஸ் வில்லர் இவர் கிடையாது. அழகாய் ஒரு அதிரடி ரேஞ்சர்களில் ஒருவரான ஜாரியூ என்பவர் சக ரேஞ்சர்களால் முதுகில் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்

இந்தியாவில் அதிகரிக்கும் பெண் கொலையாளிகள்!

படம்
இந்தியாவில் அதிகரிக்கும் பெண் கொலையாளிகள்! மூலம்: விக்ரம் சர்மா ஆபூர்வா சுக்லா ஆண்கள் பெண்களுக்காக, சொத்துக்காக கொலை செய்து வந்தனர். கடந்த பத்தாண்டுகளாக அதிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. அதிலும் எந்த உறுத்தலுமின்றி அரசியல், சொத்து ஆகியவற்றுக்காக கணவரை, மகளை கொலை செய்து வருகின்றனர். இதில் ஆபத்தானது, தான் செய்த செயல் குறித்த எந்த வித குற்றவுணர்வும் இன்றி இருப்பதுதான். உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வரான என்டி திவாரியின் மகன் கொலையான வழக்கு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அக்கொலையைப் பற்றிய பின்னணி பத்திரிகையில் வந்ததை விட ஆழமான இருளைக் கொண்டது. 2017 ஆம் ஆண்டு அபூர்வா சுக்லா என்ற பெண்மணி, ரோகித் சேகரைச் சந்தித்தார். சந்திப்பு நிகழ்ந்தது, அறிமுகம் அனைத்தும் மேட்ரிமோனியல் வலைத்தளத்தில்தான். பார்த்த உடனே இருவருக்கும் பிடித்துப்போனது. ஆனால் ரோகித்துக்கு அபூர்வாவின் எதிர்கால பேராசைகள் ஏதும் அப்போதைக்கு தெரியவில்லை. உயர்நீதிமன்ற வழக்குரைஞர், ஏம்பிஏ படித்தவரான அபூர்வா சுக்லா, ரோகித் சேகரை பெருமையுடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மே.12 அன்று நடைபெற்