இடுகைகள்

பத்திரிகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய மின்னூல் வெளியீடு - மயிலாப்பூர் டைம்ஸ் - அமேஸானில் வாசியுங்கள்

படம்
  பிளாக்குகளில் அதாவது வலைப்பூவில் எழுதுவது என்பது டயரிக்குறிப்பு போலத்தான் அதற்கு மேல் அதில் ஏதுமில்லை என்று கணியம் சீனிவாசன் ஒருமுறை கூறினார். வலைப்பூவில் எழுதப்படும் கட்டுரைகளைப் பொறுத்து இப்படி கூறலாம். அவர் கூறுவதற்கு மயிலாப்பூர் டைம்ஸ் கட்டுரைகள் சற்று ஒத்துவரும். இந்த நூலில், எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது வரையிலான  நிகழ்ச்சிகளை சுட்டப்பட்டுள்ளன.  மயிலாப்பூர் என்பது காஞ்சிபுரம் போலத்தான். இங்கும் தெருவுக்கு தெரு கோவில்கள் உண்டு. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கும் பிராமணர்களின் குழுக்கள் உண்டு. கபாலீஸ்வரர் கோவில், அதைச்சுற்றியுள்ள முக்கியமான நூல், உணவு நிறுவனங்கள் என பேச ஏதாவது விஷயங்கள் உண்டு. ஆண்டுதோறும் அனைத்து மாதங்களிலும் இங்குள்ள கோவில்களில் ஏதேனும் ஒரு விசேஷம் நடந்தவாறே இருக்கும். இங்கு வாழும் ஒரு பத்திரிகையாளன் பார்க்கும், கேட்கும், அனுபவித்த விஷயங்களின் தொகுப்புதான் நூல்.  இந்த அனுபவங்களை வாசிக்கும் யாவரும் புன்னகையுடன் அதை வாசிக்க முடியும். நூலின் கட்டுரைகள் அனைத்துமே சுய எள்ளல் தன்மையுடன் தான் உள்ளன. எனவே, வெறும் டயரிக் குறிப்பாக மட்டும

மக்களின் பிரச்னைகளைப் பேசும் பத்திரிகையாளர்! - ரூரல் மீடியா ஷியாம் மோகன்

படம்
ஷியாம் மோகன் ஒளிப்பதிவாளருடன் பழங்குடிகளின் பிரச்னையைப் பேசும் பத்திரிகையாளர்! பேஸ்புக் வந்தபிறகு யூட்யூப் மெல்ல பின்தங்கியது கண்கூடாக தெரிந்தது. ஆனால், அந்தரங்க தகவல்களின் அத்துமீறல், அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு கமுக்கமாக வேலை பார்த்தது எல்லாம் அந்த சமூக வலைத்தள சேவைக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது. கூடவே பெருந்தொற்று காலம் வேறு வர, பேஸ்புக் மெல்ல செல்வாக்கை இழந்தது. அந்த இடத்தில் யூட்யூப் மெல்ல புகழ் பெறத் தொடங்கியது.  இன்று யூட்யூப் மூலம் இந்தியர்கள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 6,800 கோடி. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் இதன் பங்களிப்பும் உண்டு என 2020 ஆம் ஆண்டு மதிப்பீட்டுபடி கூறியிருக்கிறது ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு.  இந்தியாவில் வாட்ஸ் அப் அமைப்பிற்கு 53 கோடி, யூட்யூப்பிற்கு 44.8 கோடி பயனர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சமூக வலைத்தள சேவைகளெல்லாம் இதற்கு பின்னர்தான். இப்படி யூட்பூப் வைத்து சம்பாதிப்பவர்கள் தங்களுக்கான இடத்தை எப்படி அடையாளம் கண்டுகொண்டனர் என்பது முக்கியமானது. உலகம் முழுக்கவே இப்போது எழுத்தை விட காட்சிகளைப் பார்க்கவே விரும்புக

கிராமத்தின் மீது விண்கலம் விழுந்தால்....- ஸ்கைலேப் - தெலுங்கு 2022

படம்
  ஸ்கைலேப் தெலுங்கு ஆந்திரத்திலுள்ள பழமையான நம்பிக்கைகள் மாறாத ஊர். அங்கு தீண்டாமை இருக்கிறது. பள்ளிக்கூடத்தை கூட அதற்காக பூட்டி வைத்துள்ளனர். தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. அந்த இனத்திற்குள் யாராவது உடல்நலக்குறைவு வந்தால் கூட அவர்களை வைத்தியர் தொட்டு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் அங்கு ஸ்கைலேப் என்ற விண்கலம் விழுவதாக செய்தி வருகிறது. மரண பயத்தில் உள்ள மக்களின் மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் மையக் கதை.  இதில் முக்கியமான கதை கௌரி என்ற ஜமீன்தாரின் மகள், மருத்துவ உரிமம் தடை செய்யப்பட அதனை திரும்ப பெற 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற தாத்தாவைத் தேடி வரும் ஆனந்த் ஆகிய இருவரைச் பற்றியது.  இந்த படத்தை நித்யாமேனன் தயாரித்து நடித்திருக்கிறார். தனது பரம்பரை, சொத்து காரணமாக தான் மேதாவி என நினைத்துக்கொண்டு சிபாரிசில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்கிறார். ஆனால் இவரது கட்டுரை பிரசுரமானாலும் கூட இலக்கணமும், அதில் எழுதும் விஷயங்களும் சரியாக இருப்பதில்லை. இதை கௌரி பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை மெல்ல அவர் உணர்ந்துகொண்டு சிறந்த பத்திரிக்கையாளராக எப்படி மாறினார் என

சீரியல் கொலைகாரரின் உடலில் வெனோம் புகுந்தால்.... - வெனோம் 2 - டாம் ஹார்டி

படம்
  வெனோம் - லெட் தேர் பி கார்னேஜ் வெனோம் 2 Director: Andy Serkis Produced by: Avi Arad, Matt Tolmach, Amy Pascal, Kelly Marcel, Tom Hardy, Hutch Parker Screenplay by: Kelly Marcel     எடி பிராக் இந்த முறை ஆக்ரோஷமாக அடி உதையோடு உணர்கலக்குகிறார். சீரியல் கொலைகாரர் ஒருவர் சிறையிலிருந்து தப்பிவிடுகிறார். கூடுதலாக எடியின் உடலிலுள்ள வெனோமின் சக்தி கொண்ட ரத்தத்தை சுவைத்துவிடுகிறார். இதனால் அவரது உடலில் இன்னொரு வெனோம் உருவாகிறது. இதனை எதிர்த்து போராடி வெனோம் எப்படி வெல்கிறது என்பதுதான் கதை.    வெனோம் முதல் பாகத்தில் எடிக்கும் அவரது காதலிக்கும் காதல் செட்டாக  வாய்ப்பு இருக்குமா இல்லையா என்று சந்தேகம் அனைவருக்குள்ளும் இருந்தது. ஆனால் இந்த பாகத்தில் அதற்கு சுப மங்கலத்தை பாடிவிட்டார்கள். எனவே அடுத்தடுத்த பாகங்களில் ஆக்சன் காட்சிகள் இன்னும் பீதியூட்டும்படி இருக்கும் என நம்பலாம்.    முதல் பாகத்தை விட இந்த இரண்டாவது பாகத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் அதிகம். சீரியல் கொலைகாரர் தனது மனநிலையைப் பற்றி பேசுவது, எடித்துடன் நட்பாக நினைப்பது, வெனோமுடன் எடித் ஈகோ பார்த்து சண்டை போடுவது என நிறைய பிரச்னைகள் படத்த

சுதந்திரமான பேச்சுரிமையை வலியுறுத்திய பத்திரிகையாளர்களுக்கு நோபல் விருது!

படம்
  பத்திரிகையாளர்கள் மரியா ரெஸா, டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப்பரிசு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற ஆட்சி முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.  சுதந்திரமான பேச்சுரிமைக்காக பாடுபட்டதற்காக மேற்சொன்ன பத்திரிகையாளர்களுக்கு அமைதிப் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் கமிட்டி கூறியுள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் பிற பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியானவர்கள். இவர்கள் ஜனநாயகத்தையும் அதன் மதிப்பையும் காக்க உழைத்துள்ளனர் என இந்த அமைப்பு இதுபற்றிய அறிவிப்பில் கூறியுள்ளது.   மரியா ரெஸா, 2012ஆம் ஆண்டு ராப்ளர் எனும் இணையதளத்தைத் தொடங்கினார். இதில் பிலிப்பைன்ஸ் அதிபர் டூடெர்டேவின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு செய்திகளை இணையத்தளத்தில் வெளியிட்டார். 2018ஆம் ஆண்டிற்கான மனிதராக இவரை அமெரிக்காவின் டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்தது.  முரடோவ், 1993ஆம் ஆண்டு ரஷ்யாவில் நோவாயா கெசட்டா எனும் சுதந்திரமான பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். இந்த பத்திரிக்கை அதிகாரத்தை கேள்வி கேட்கும் வகையில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வர

உறவின் நோக்கமே சுயநலம்தானா? - கடிதங்கள்

படம்
              கடிதங்கள் 3.1.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக உள்ளீர்களா ? சொந்த ஊருக்கு சென்றதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் . சென்னையில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களை நான் சந்திக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது . கல்வி வேலை வழிகாட்டியில் வேலை செய்த வெங்கடசாமியுடன் இப்போது பேசுவது இல்லை . தேவையைப் பொறுத்தே உறவுகள் என்பதை அவர் தீவிரமாக நம்புகிறார் . எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் விலகிவிட்டேன் . அது உண்மையாக இருக்குமோ என்னமோ , எனக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது . 2021 ஆம் ஆண்டில் இழப்புடன்தான் சம்பளக்கணக்கு தொடங்கியுள்ளது . பொதுமுடக்க காலம் என்பதால் இரண்டாயிரம் ரூபாயை வெட்டிவிட்டார்கள் . மீதியுள்ள பணத்தில்தான் ஊருக்கு பணம் அனுப்புவது , வாடகை , சாப்பாடு ஆகியவற்றை சமாளிக்க வேண்டும் . நீங்கள் வேலை செய்யும் பத்திரிகை நிறுவனத்தில் இப்போது பிடிக்கும் பிடிமானங்களைத் திருப்பித் தர வாய்ப்புள்ளது . ஆனால் எங்களுக்கு அப்படியான நிலைமை இருக்குமா என்று தெரியவில்லை . எங்கள் தலைவர் எங்களுக்கான பரிந்து பேசுவார் என

காணாமல் போகும் அச்சகங்கள்! - திருநெல்வேலி, கோவை, மதுரையில் தள்ளாடும் பழமையான அச்சகங்கள்

படம்
            கணினி வந்தபிறகு டிஜிட்டல்ரீதியான போஸ்டர்கள் , பேனர்கள் என்று தொடங்கி வெற்றிகரமாக நடந்துவருகின்றன . இன்னொருபுறம் இதன் விளைவாக எந்திர அச்சகங்கள் அதிக வாய்புப்புகளின்றி மெல்ல மூடப்படும் நிலையில் உள்ளன . அவற்றில் சில அச்சகங்களைப் பார்ப்போம் . ஶ்ரீ ரத்னம் பிரஸ் , திருநெல்வேலி ஜெயபால் என்பவர் தற்போது இதனை நடத்தி வருகிறார் . இவரது தந்தை ரத்னம் மேலப்பாயத்தில் பிரஸ்ஸில் பணிபுரிந்துவிட்டு தனியாக அச்சகத்தை தொடங்கியுள்ளார் . முதலில் நிறைய ஆட்கள் வேலை செய்து வந்தனர் . தற்போது ஒருவர் மட்டுமே இருக்கிறார் . நகைக்கடைகள் , காபி கடைகளிலிருந்து கிடைக்கும் ஆர்டர்களை செய்து கொடுத்து வருகின்றனர் . பல்லாண்டுகளாக சோறு போட்ட தொழில் என்பதால் , ஜெயபாலுக்கு இதனை விட மனமில்லை . ஆனால் வேலைகளே இல்லாத நிலையில் எத்தனை ஆண்டுகாலம் இப்படியே நடத்த முடியும் என்பதுதான் அவர் முகத்தில் தொக்கி நிற்கும் கேள்வி . நியூ சரவணா புக் பைண்டிங் , கோவை . மேட் இன் இந்தியா பொருட்களை பயன்படுத்துவோம் என பலரும் ஊக்கம் கொண்டிருந்தபோது டவுன் ஹாலில் புகழ்பெற்றிருந்த அச்சகம் நியூ சரவணாதான் . காகிதத்தை வெட்டும் மெஷ

எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்!

படம்
        எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்! இந்தியா பர்னிங் என்ற படம்தான் 2020ஆம் ஆண்டிற்கான செய்திப்பட தொகுப்பாக சிறப்பு பிரிவில் இடம்பெற்றது. பத்திரிகையாளர் இசோபெல் இயுங் என்பவர் இச்செய்திப்படத்திற்காக இந்தியாவில் காஷ்மீர், அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று அதனை பதிவு செய்துள்ளார். முக்கியமாக பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியிடமும் நேர்காணல் பெற்றுள்ளார். இந்த படம் எம்மி விழாவில் விருது பெறவில்லைதான். ஆனால் இதில் இடம்பெற்றது என்பதே பெருமைக்குரியது என்கிறார் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான காஷ்மீரைச் சேர்ந்த அஹ்மத் கான். நாங்கள் விருது பெறவில்லையென்றாலும் இந்த படம் இதயப்பூர்வமாக எடுத்தபடம் என்பதில் சந்தேகமில்லை. இப்பணிகளை நாங்கள் தொடர்வோம் என்று கூறுகிறார்.   இப்படத்தில் இவர் அசாம் பகுதி போராட்டங்களை எடுக்க உதவியுள்ளார். அகதிகள் முகாம் அமைக்கும் பணி, அஹ்மத் கானின் அம்மா குடியுரிமை பட்டியலில் விடுபட்டுள்ள சிக்கலை பதினாறு நிமிட படம் பதிவு செய்துள்ளது. சட்டம் அங்கீகார

சந்திப்போமா - கடிதங்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  இனிய நண்பர்களுக்கு,  எனது நண்பர் சபாபதி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்.. இப்போது மின்னூலாக வெளியிடப்படுகிறது. இந்நூல் கிரியேட்டிவ் காமன் உரிமையின் கீழ் வெளியிடப்படுகிறது. பிடிஎப் வடிவிலும், இபப் வடிவிலும் இந்நூலை நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். நன்றி.  http://www.mediafire.com/file/r8feeupyb9o0kb1/santhipoma.....pdf/file http://www.mediafire.com/file/aebrelpm9g6toue/santhipoma.....epub/file  

நண்பனுக்கு கூறாத விளக்கம், எதிரி ஏற்காத உண்மை! - அன்புள்ள அப்பாவுக்கு

படம்
pexels 4 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? வேலை என்பதைப் பொறுத்தவரை நான் ஈடுபாட்டோடு செய்கிறேன். ஆனால் மயிலாப்பூரிலிருந்து கே.கே.நகர் சென்று சேர்வது மோட்சத்திற்கு தவம் இருப்பது போலவே இருக்கிறது. மாலையில் 12ஜி பஸ்ஸில் ஏறுவது அய்யப்பசாமியின் கோவிலின் பதினெட்டாம் படி ஏறுவது போலவே இருக்கிறது. அவ்வளவு கூட்டம். உடுப்பி பஸ் ஸ்டாப்பில் இறங்கும்போது, நான்கு பேர் சுற்றி நின்று அடித்து உதைத்தது போல உடல் வலிக்கிறது. துயரம்... தூங்குவதற்காக இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டுமா என்று இருக்கிறது. அலுவலகத்திற்கு பக்கத்தில் அறையை எடுப்பது புத்திசாலித்தனம். இங்குள்ள பரத் என்ற பிராமணர் மட்டுமே நெருக்கமான நண்பர். பிற ஆட்கள் எல்லாம் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாருடனும் என்னால் ஒட்ட முடியவில்லை. சம்பளம் வந்ததும் உங்களுக்கு பணம் கட்டி முத்தாரம் இதழ் வரும்படி செய்கிறேன். இந்த புத்தகம் பெரு நகரங்களில் உள்ள கடைகளில்தான் கிடைக்கும். இருமாதங்களுக்குப் பிறகு நான்கு நாட்கள் லீவு போட்டுவிட்டு ஊருக்கு வர நினைத்துள்ளளேன். மஞ்சள் காமாலைக்கான சோதனை இன்னும் முடியவில்லை. இதன

மாலனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? - அந்திமழை வெளியீடு

படம்
எந்த இடத்தையும் அடைய அல்ல , சும்மா நடக்கவே விரும்புகிறேன் மாலன் அந்திமழை மூத்த பத்திரிகையாளரான மாலனை, அந்திமழை இளங்கோவன் அடையாளம் கண்டு  நேர்காணல் செய்துள்ளார். அவரின் முன்னாள், இந்நாள் எதிர்கால திட்டங்களை இந்த நூலில் நாம் நிதானமாக வாசித்து அறிய முடிகிறது. வங்கி அதிகாரியின் மகனாக பிறந்த மாலன், பின்னாளில் குங்குமம், தினமணி, இந்தியா டுடே, குமுதம், புதிய தலைமுறை, சன் டிவி என பல்வேறு ஊடகங்களில் சாதித்தவர். பல்வேறு புதிய முயற்சிகளை திறம்பட செய்தவர். இன்று மாலன் சமூக வலைத்தளங்களில் எழுதும் விஷயங்களின் சார்பு நிலை பற்றிய குறிப்பும் இந்த நூலில் ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. அது சரியா, தவறா  என்பது வாசிப்பவர்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். மாலனின் பாரதி பாசம், தினமணியில் செய்த மாற்றங்கள். அதன் கேப்ஷனை வடிவமைத்தது என நுணுக்கமான தகவல்கள் இதில் நிறைந்துள்ளன. குங்குமத்தில் சாவியின் நட்பு, திசைகளின் தொடக்கம், அதில் செய்த புதுமைகள், சுஜாதாவுடனான நட்பு,  திசைகளின் அட்டைப்பட மாற்றங்கள் என பல்வேறு விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. இந்தியா டுடே பத்திரிகையில் செய்திகளோடு சிறுகதைகளும் கொண

ஆசிரியர் கே.என்.சிவராமன் தந்த சுதந்திரம்! - மனமறிய ஆவல்!

படம்
ஆசிரியர் கே.என்.சிவராமன் முத்தாரம் அறிவியல் இதழ் என்பதால் முடிந்தவரை அரசியல் குறுக்கீடுகள் இருக்கவில்லை. ஆசிரியர் கே.என்.எஸ் கொடுத்த சுதந்திரம் இல்லையென்றால் அதில் உருப்படியான எந்த விஷயங்களும் வந்திருக்காது. நான் அங்கு பணிசெய்யும்போது, காலை எட்டு மணியென்றால் இருவரும் வந்து உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். காலையில் நேரத்திலேயே வந்து பணிசெய்வதை விரும்புபவர், காலை 8.30 க்குள் அன்றைக்கான ஃபார்மை எழுதி முடித்துவிடுவார். லே அவுட் ஆட்கள் வந்ததும் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துவிட்டு டீ குடிக்கச் சென்றுவிடுவார். அப்புறம் என்ன பரபரவேலைகள்தான். மேட்டர் சொல்லிவிட்டு சால்ஜாப்பு சொல்லித் தப்பிக்க முடியாது. நான் அப்படித்தான் என்பார் கே.என்.எஸ். மாலனிடம் பத்திரிகைத் தொழில் கற்றவர். ஜனரஞ்சகம் முதல் தீவிர இலக்கிய இதழ்கள் வரை படிக்கும் வித்தியாசமான அறிவுஜீவி அவர். நிறைய நூல்களைப் பார்த்தால் போதும். உடனே படிங்க என்று வைத்துக்கொள்ளவே கொடுத்திருக்கிறார். அவரும் லக்கி - யுவகிருஷ்ணா சாரும் கொடுத்த நிறைய புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். 11 27.11.2018 அன்புள்ள நண்பர் முருகு

அமெரிக்கர்களை மகிழ்வித்த ஃபுளோரிடாமேன்! - உண்மையா - பொய்யா?

படம்
es.sott.net தெரிஞ்சுக்கோ! அமெரிக்காவில் இணையம் புகழ்பெறத்தொடங்கிய காலகட்டம். உள்ளூர் பத்திரிகைகள் செய்த காரியம், பத்திரிக்கை துறையையே மாற்றியது. இல்லாத ஒரு கதாபாத்திரத்தை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம் உருவாக்கியது. புளோரிடா மேன் நாயை கிளப்பில் அனுமதிக்காததால் போலீசை அழைத்தார், மருத்துவமனையை கொளுத்தினார் என்கிறரீதியில் செல்லும் செய்தி மக்களுக்கு எதிர்பார்த்த சுவாரசியத்தைத் தந்தன. ஆனால் மலினமான பத்திரிக்கை செயல் என பின்னர் விமர்சிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் உணர்ச்சிவசப்பட்ட, மனநிலை சீரற்ற தன்மை கொண்டதும் இதற்கு காரணம். அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தில் மட்டுமே மனநலம் சார்ந்து செலவழிக்கும் தொகை குறைவு - 36 டாலர்கள் மட்டுமே செலவழிக்கின்றனர். இங்கு அனுமதிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் அதிகம். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஃபுளோரிடா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இங்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான அலிகேட்டர் வகை முதலைகள் உண்டு. நன்றி: க்வார்ட்ஸ்

காற்று மழை வெயில் வெளிச்சம் பகுதியில் அன்பரசின் கடிதங்கள்

கோமாளிமேடை ஊமையின் புல்லாங்குழல் காற்று மழை வெயில் வெளிச்சம் ஹெரிடேஜ் தமிழன் [2014]                       ஊமையின் புல்லாங்குழல்                     ·          அன்பரசு சண்முகம் எழுதிய கடிதங்கள் ·          தொகுப்பாசிரியர் : அரசமார்      என் சகோதரர் மூலம் அன்றுதான் முருகானந்தம் ராமசாமி அவர்களைச் சந்தித்தேன். அப்போது எவ்வளவு தூரம் அபத்தமாக பேச முடியுமோ அவ்வளவு பேசினேன். அப்போது திருப்பூரார் அருகிலிருந்தார். முகவரி பெற்றுக்கொண்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சி. எந்த விஷயத்தையும் பேசுவதற்கு இன்றுவரையில் என் சமவயது தோழர்கள் யாரும் கிடையாது. எந்த ஒரு விஷயம் குறித்தும் தெளிவான பார்வை, தான் சார்ந்த கட்சி குறித்த நேர்மையான நிலைப்பாடு, எந்த விஷயம் குறித்தும் தயக்கமில்லாமல் முருகுவிடம் உரையாடலாம். பல விஷயங்கள் பேச்சில் வந்தாலும் நான் முடிந்தவரை கலைகள் குறித்து பல பகிர்தலை நிகழ்த்த மேற்கொள்ள முயற்சித்தேன்.                                                      22.9.2012 இரா. முருகானந்தம் அவர்களுக்கு,      அன்பரசு எழுதுவ