இடுகைகள்

வன்முறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோபாத்களிடம் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

படம்
  அசுரகுலம் 5 சைக்கோபாத்களிடம் எப்படி பத்திரமாக பாதுகாப்பாக இருப்பது பற்றிய வழிமுறைகளைப் பார்த்து வருகிறோம். மேலும் என்னென்ன விஷயங்கள் இருக்கிறதென காணலாம். ராபர்ட் ஹரே எழுதி கட்டுரைகள் நாளிதழ்களில் வெளிவரத் தொடங்கியபோது, அவருக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் வரத் தொடங்கின. அவையெல்லாமே எனது கணவர், காதலர் சைக்கோபாத் அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார் என்றுதான் இருந்தன. இதில் அவருக்கு போன் செய்த பெண்மணியின் கதை வித்தியாசமானது. அந்த பெண்மணி தன் கணவர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவரை முறையாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது ஆகியவற்றை மனைவி செய்திருக்கிறார். ஆனால் சைக்கோபாத் கணவர், தனது வசீகரமான பேச்சால் நடத்தையால் ஆழ்மனதில் உள்ளதை மறைத்துக்கொண்டு பேசியிருக்கிறார். இதனால் அவரைச் சந்தித்த மருத்துவர்கள் அவர் நார்மல் என அறிக்கை கொடுத்திருக்கின்றனர். இப்படி அறிக்கைகள் கிடைக்க மனைவி, தான் கணவரைப் பற்றி நினைப்பதுதான் தவறு. தனக்குத்தான் பிரச்னை என நினைக்கத் தொடங்கியிருக்கிறார்.   சைக்கோபதி பற்றித் தெரிந்தவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால் பயன் இருக்கும். இல்லாதப

சிறுவயதில் சிறுவர்களிடம் காணப்படும் குற்றத்தின் அடையாளங்கள்!

படம்
  என் மகனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இப்போது அவனுக்கு பதினைந்து வயதாகிறது.இதற்குள் ஏழுமுறை சிறைக்கு சென்றுவிட்டு வந்துவிட்டான். ஒரு விஷயத்தை செய்து அவன் பிடிபட்டால் அது தவறு. பிடிபடாவிட்டால் நல்லது என்று புரிந்துகொண்டு இருக்கிறான். நாங்கள் அவனை அடித்தோம். மிரட்டினோம். மனநல சிகிச்சைகளை வழங்கினோம். ஆனால் எதுவும் அவனை மாற்றவில்லை என தாயார் ஒருவர் ராபர்ட் ஹரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். சிலர், தங்களது மகன் பொய்யை சொல்லி நிறைய சங்கடங்களை ஏற்படுத்துவார்கள். பெற்றோர்களுக்கு தங்களது மகனை சைக்கோபாத் என்று சொல்லிவிடுவார்கள் என பயம் இருக்கிறது. அப்படி மருத்துவர், உளவியலாளர் சொல்லிவிடுவாரோ என்று டீனேஜ் பையன் சார் அவன் என மாற்றி பேசுவார்கள். ஆனால் ஆய்வு அடிப்படையில் அறிகுறிகளை உணர்ந்தால் கசப்பான சைக்கோபாத் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். வேறுவழியில்லை.   ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் மோசமான பொய் சொல்லும், கட்டற்ற வன்முறை, பிறரை ஏமாற்றும் குணம் கொண்டவர்கள் மோசமான குற்றவாளிகளாக மாறுவார்கள் என்பது வரலாற்று உண்மை.   சில அறிகுறிகளைப் பார்ப்போம்.   இயல்பாக தொடர்ச்சியாக தேவ

தொடர் கொலைகாரர்களுக்கான உளவியல் வரையறைகள்

படம்
  ரகசியம் போல வந்து ரஹ்மான் தனது   இருக்கையில் அமர்கிறார் என பத்திரிகையாளர் நா.கதிர்வேலன் ஆனந்தவிகடனில் எழுதியிருப்பார். எத்தனை முறை படித்தாலும் இந்த வார்த்தையில் ஒரு வசீகரம் இருக்கிறதுதானே? பெரிய கொலைகாரராக காமவெறி கொண்டவராக சித்திரவதை செய்பவராக மனிதர் இருப்பார். ஆனால் அவருக்கு குடும்பம் இருக்கும். ஏதேனும் வேலை செய்துகொண்டு இருப்பார். அவரின் கொலையாளி என்ற முகம் குடும்பத்திற்கு தெரியாது. கொலையாளி என தெரிந்தபிறகு முழு உலகமும் எப்படி தெரியாமல் இருக்கும். அறிகுறிகள் தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள். அல்லது கொலைகளுக்கு இவர்களும் உடந்தையாக இருந்தவர்கள்தான் என பேசுவார்கள். இப்படி பேசுவதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் தன் வாழ்க்கையை குறிப்பிட்ட ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.   தொடர் கொலைகார்கள் தோற்றுப்போனவர்களாக, தனி மனிதர்களாக இருப்பார்கள். உறவுகளையோ, வேலையையோ ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்கள். குறைவாக படித்திருப்பவர்கள், சுயமோகிகளாக இருப்பார்கள். மக்கள் கூட்டத்தில்தான் இருப்பார்கள். எளிதாக சூழலுக்கு ஏற்றபடி தங்களை அடையாளங்களை அறிகுறிகளை மறைத்து வாழ

மனதில் பெருகும் எல்லையில்லாத வன்முறைக்கான காரணம்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஒருவர் மனதில் தோன்றும் அளவிடமுடியாத வன்முறைக்கு என்ன காரணம்? குறிப்பிட்ட சாதியினரின் ரத்தத்தில் வன்முறை உள்ளது என சிலர் கூறலாம்.ம ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அட்ரியன் ரைன் என்பவரின் தலைமையில் அமைந்த குழுவினர், மூளையில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை வன்முறைக்கு காரணம் என்று கண்டறிந்தனர்.   இவரின் ஆராய்ச்சியில் வன்முறையாளர்களின் மூளையில் உணர்ச்சிகளை இயக்கும் மூளையின் பகுதியில் நிறைய பகுதி செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் இந்த மனிதர்கள் செய்யும் செயல்களின் பயமே இருக்காது. ஆக்ரோஷமாக, குறைந்த எதிர்வினையாற்றும் விதமாக செயல்படுவார்கள். இவர்களை எளிதாக தூண்டிவிட முடியும். எடுக்கும் முடிவுகளிலும் பொறுமை, நிதானம் இருக்காது. அனைத்துமே அதிரடியாகத்தான் வன்முறையை இலக்காக கொண்டுதான் இயங்குவார்கள்.   கற்பனையின் துணையால் சூழலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புபவர்கள் இவர்கள். பிறரை விட சிறப்பான தகுதிகள் கொண்டவர்கள் என நினைத்துக்கொண்டு வன்முறையைக் கையாள்வார்கள். கொலை செய்யாமல் இவர்களால் வாழவே முடியாது என கொலையை வல்லுறவுவை பிராண வாயு போல நின

மாண்வரி அல்குல் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  மாண்வரி அல்குல் என்ற சிறுநூல், பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையைப் பற்றி பேசுகிறது. இந்த வாழ்க்கை முறை சார்ந்து ஆங்கில நூல்கள் நிறைய இருந்தாலும் தமிழில் நூல்கள் குறைவு. அந்த வகையில் பிடிஎஸ்எம் முறையில் உள்ள கருத்துகள், நம்பிக்கைகள், விதிகள் பற்றி மாண்வரி அல்குல் உரையாடுகிறது.  பிடிஎஸ்எம் என்றால் பலருக்கும் ஆபாச வீடியோ தளங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் அத்தகைய தன்மையை இயல்பாக கொண்ட உறவுமுறை பிடிஎஸ்எம்மில் மிக குறைவு. காட்சியாக ஒன்றை காண்பதற்கும் அனுபவித்து வாழ்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இணையத்தில் இதுபற்றி தேடினால் உங்களுக்கு நிறைய மக்கள் குழுக்களாக பிடிஎஸ்எம் முறையை கடைபிடித்து வாழ்கிறார்கள். விருந்துகளை நடத்துகிறார்கள். அதுபற்றி புரிதலை ஏற்படுத்தும் நூல்தான் மாண்வரி அல்குல். ரோஸ்கோல்ட் அண்ட் கோ., நிறுவனம் நூலை தொகுத்துள்ளது.  நூலை கிண்டில் மூலம் வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.in/dp/B0BQ7H4ZMK

பிடிஎஸ்எம் முறையில் உள்ள வகைகள்!

படம்
  பிடிஎஸ்எம் என்று கூகுளில் தேடினால் உங்களுக்கு நிறைய ஆபாச தளங்கள் கிடைக்கும் கூடவே விக்கிப்பீடியா குழுவினர், படாதபாடு பட்டு பிடிஎஸ்எம் வரலாற்றை முன்வைப்பார்கள். பிடிஎஸ்எம் என்பதற்கு நிறைய விளக்கங்கள் உண்டு. நாம் பார்க்கப்போவது பாண்டேஜ், டிசிப்பிளின், சாடிசம், மாசோசிசம் ஆகியவற்றைத்தான். இதில் மூன்று முறைகளை சுருக்கமாக குறிப்பிடுவார்கள். பாண்டேஜ் / டிசிப்ளின், டாமினன்ஸ் / சப்மிசிவ், சாடிசம் / மாசோசிசம். (dominance submissive, Sadism, masochism) பிடிஎஸ்எம் முறையை சிலர் மனநல குறைபாடு என்றெல்லாம் கூட சொல்லுவார்கள். உண்மையில் இது தம்பதிகள் இருவரும் கலந்துபேசி நடந்துகொள்ள வேண்டிய நெருக்கமான உறவுமுறை. இதில், அதிகாரம் ஒருவருக்கு கிடைக்கும். இன்னொருவர் அதற்கேற்ப நடப்பது ஆகியவை உண்டு. எடுத்துக்காட்டு, டாமினன்ட்(எஜமான்), சம்மிசிவ் (அடிமை) முறையில் எஜமானுக்கு அடிமையை எப்படி வேண்டுமானாலும் நடத்தும் உரிமை உண்டு. இதில் தம்பதிகள் தான் எந்த மாதிரி இருக்கவேண்டுமென தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பாண்டேஜ் (Bondage) கைவிலங்கு, கயிறு, வெல்க்ரோ போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அடிமையின் கைகளை கால்களைக் கட்

பாலியல் கற்பனைகளை பிராக்டிக்கலாக செய்தால் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  காமம் மனிதர்களுக்கு எப்போதும் தீராத பசி என்பது காமம்தான். வயிற்றுப்பசி என்பது தீர்க்க கூடியது. ஆனால் காமப்பசி என்பது ஆகாயம் அளவு எரியும் நெருப்புக்கு சிறு கரண்டியில் நெய் ஊற்றுவது போலத்தான். அது நெருப்புக்கு ஆகுதி ஆகாது. காமத்திற்காக கொலை செய்பவர்கள் என தனி பட்டியல் உண்டு. இவர்களை குற்றவியல் வல்லுநர்கள் சாகச கொலைகார ர்கள் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கொலைகாரர்கள் மாய உலகை கற்பனை செய்துகொள்பவர்கள். பிற பாலினத்தவர்களின் உள்ளாடைகள், விலங்குகளின் உடல் பாகங்கள் என தேடி சேகரிப்பவர்களாக இருப்பார்கள்.   அமெரிக்காவின் ஒரேகான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரோம். இவருக்கு பெண்களின் கால்கள், குதிச்செருப்புகள், உள்ளாடைகள் என்றால் பேராசை. தன் வீட்டிற்கு அருகிலுள்ள பெண்களின் உள்ளாடைகள், செருப்பு ஆகியவற்றை திருடி சேமிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனதில் ஆசை வளர, பெண்களை கொலை செய்யத் தொடங்கினார். அப்போதும் கால்களை தனியாக வெட்டி வைத்து பாதுகாத்தார். இதில் இன்னும் சற்று பெரிய பட்ஜெட்டில் சந்தோஷப்பட்டவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் சில்வெஸ்டர் மதுஸ்கா. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். இரு ரயில்களை ம

ஒருதலைக்காதலில் இழுத்துவிடப்படும் பெருமாள் பக்தனின் நிலை! - நமோ வெங்கடேசா - வெங்கடேஷ், த்ரிஷா

படம்
    நமோ வெங்கடேசா - தெலுங்கு  விக்டரி வெங்கடேஷ், த்ரிஷா, பிரம்மானந்தம். முகேஷ் ரிஷி, அலி இயக்கம் சீனு வைட்லா   வெங்கட்ரமணா, ஹைதராபாத்தில் தனது சித்தப்பா குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தொழிலே கலை நிகழ்ச்சிகளை செய்வதுதான். இந்த நிலையில் வயசாகிறதே திருமணம் செய்யலாம் என நினைத்து ஜோதிடம் பார்க்கிறார்கள். ஆனால் ஜோதிடர் போட்ட சோளிகளில் ஒன்று எந்த பக்கமும் திரும்பாமல் நடுவில் நிற்கிறது. அதாவது கல்யாணம் நடந்தாலும் நடக்கும். இல்லையானாலும் சரி. வெங்கட்ரமணாவைப் பொறுத்தவரை அவர் பிறரை ஏமாற்றுவதில்லை. அவரும் ஏமாறுவதில்லை. இப்படி இருப்பவருக்கு பாரிசில் நிகழ்ச்சி நடத்த அழைக்கிறார்கள். அழைத்த ஆள் லேசுபட்டவரில்லை. ஆனால் அவரையும் வெங்கட் ரமணா எந்த கல்மிஷம் இல்லாமல் நடந்துகொண்டு பீதிக்குள்ளாக்குகிறார். பிரசாத் என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரமணாவை தனது சொந்தக்காரப் பெண் காதலிப்பது போல மாயையை உருவாக்குகிறார். அதையும் வெங்கி நம்புகிறார். ஆனால் உண்மையில் அவர் காதலிக்கும் பெண் யார், அவர் யாரை விரும்புகிறார், பிரசாத்தின் பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா என்பதை நகைச்சுவையாக சொல்ல

குற்றவாளிகளிடமிருந்து மக்களைக் காக்கும் ரகசிய ப்ரீமியம் டாக்சி குழு! டாக்சி டிரைவர் - கொரிய டிராமா

படம்
  டாக்சி டிரைவர் எஸ்பிஎஸ் தென்கொரிய டிராமா – 16 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   கொரிய நாட்டின் நீதித்துறை தவறவிட்ட சைக்கோ கொலையாளிகள், மோசமான குற்றவாளிகளை ரகசியமாக செயல்படும் அமைப்பு கடத்தி சிறைப்படுத்தி பாதுகாக்கிறது. இதை சியோல் நீதித்துறை அமைப்பு அறியும் போது என்ன ஆகிறது என்பதே கதையின் மையம். பொதுவாக நீதித்துறை எப்போதும் ஆளும் அரசின் கைப்பாவையாகவே இருக்கும். அதற்கேற்றபடி ஆட்களை உள்ளே நியமித்து எதிரிகளை அடித்து உதைத்து வளைப்பார்கள். வெளியுலகில் நல்ல பெயரை சம்பாதிக்க கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதோடு, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரித்து நிதி அளித்து குற்றசெயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொள்வார்கள். தொடரில் அப்படி ப்ளூபேர்ட் பௌண்டேஷன் அமைப்பு செயல்படுகிறது. அதன் நோக்கமே, பழிவாங்குவதுதான். யாராவது ஒருவர் பழிவாங்க நினைத்து இந்த அமைப்பை தொடர்பு கொண்டால், அவர்கள் புகார்தாரரை டாக்சியில் கூட்டிக்கொண்டுபோய் புகாரை வாய்மொழியாக பதிவு செய்துகொண்டு திட்டம் வகுத்து அவரது வாழ்க்கையைக் கெடுத்தவர்களை பழிவாங்குவார்கள். இதற்காகும் செலவை புகார்தாரர் கொட

தத்துவங்களின் படி கல்வி அமைந்தால் என்னவாகும்? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கல்வி தத்துவத்தின் படி அமையக்கூடாது! நெறிமுறைகள் குறிக்கோள்கள் ஆகியவற்றின் இயல்புகளை விட அவற்றை எவை என அடையாளம் காண்பது முக்கியம். கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் அவற்றை கற்பிக்கும் முறை என்பது அவர் கற்று அறிந்த விஷயங்களை விட முக்கியம். ஏனெனில் கல்வி கற்கும் முறையில்தான் ஒருவர் இன்னொருவரின் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும். ஊக்குவித்து வளர்க்க முடியும்.ம குறிப்பிட்ட விதிமுறைகள், நெறிகள், நுட்பங்கள் வழி கற்பிப்பது ஆசிரியருக்கு எளிதானதாக மாறுகிறது. இதன் வழியாக மாணவர்களுக்கு அவர் எளிதாக கற்பிக்கலாம். ஆனால் அமைப்பு முறை, கருத்துகளை வறட்சியுடன் கூறுவது ஆகியவை தவிர்க்கப்படுவது அவசியம். கல்வி என்பது குறிக்கோள்கள், லட்சியவாதிகளைக் கொண்டது அல்ல. கல்வி என்பதைக் கற்கும் பிள்ளைகளின் வழி பெற்றோர் அவர்களைப் புரிந்துகொள்வது நடக்கவேண்டும். விதிகளை, நெறிகளை, குறிக்கோள்களை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கின்றனர். இதனால் பிள்ளைகள் சிறு வயதிலேயே மூடிய இயல்பு கொண்டவர்களாக இறுக்கமான மனம் கொண்டவர்களாக வளர்கிறார்கள். உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னர், தங்கள் மனதில் எழும் முரண்பாடுகளை சமாளித்து வென

வறுமையும், பெற்றோர்களின் அன்பும் அக்கறையும் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடு

படம்
  சாலையில் செல்லும் வாகனங்களில் சிலர் உர்ரென உருமிக்கொண்டு வேகமாக சென்று அடுத்த சிக்னல்களில் நிற்பார்கள். பச்சை விளக்கு, சிவப்பு விளக்கு ஆகியவற்றை சீரியல் பல்புகளாக நினைத்து ஆக்சிலேட்டரை முறுக்கிப் பாய்வார்கள். யாரையாவது விபத்துக்குள்ளாக்கி கையில் கட்டு போட்டாலும் பெற்றோர் பைக் எடுக்க விடமாட்டேன் என்கிறார்கள் என நண்பர்களிடம் புலம்புவார்கள்.  சென்னையில் காமராஜர் சாலையில் தங்களது பைக் ஓட்டும் திறமையைக் காட்டுபவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள். வேகம் மட்டும்தான் இவர்களின் கண்களுக்குத் தெரியும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாத சம்பளக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு குடும்பம் இருக்கும் என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். அடிக்கடி காவல்துறையில் சிக்கி அபராதம் கட்டுவார்கள். எப்போதும் போல கவாஸாகி நின்ஜா போல மைலேஜ் ஹீரோ பைக்கை வடிவமைத்து சிக்னலில் முந்திச்செல்வார்கள்.  இப்படிப்பட்ட எல்லை மீறும் மனிதர்களை ஊடகங்கள், டெய்லி புஷ்பம், பூந்தி போன்ற பத்திரிகைகள் சமூக விரோதி என அழைத்தாலும் சைக்கோ பாத் என அழைத்தாலும் மருத்துவத்துறைப்படி இவர்களை ஆன்டி சோஷியல் டிஸார்டர் பாதிப்பு கொண்டவர்கள் எனலாம். இப

உறவும் கிடையாது, நம்பிக்கையும் கிடையாது! பாரனாய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்

படம்
பாரனாய்ட் என்பதை,  மனதை விட்டு வெளியே என சுருக்கமாக சொல்லலாம். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் பாரனாய்ட் என்பதை் எளிதாக இயல்பாக பயன்படுத்துவார்கள். பாரனாய்ட் எனும் ஆளுமை பிறழ்வு கொண்டவர்கள் பிறரை எளிதாக நம்ப மாட்டார்கள். இவர்களது தினசரி நடவடிக்கையில் பிறரை நம்பாமல் நடந்துகொள்வது தெரியும்.  அலுவலகமோ, வீடோ, பிற இடங்களோ அங்குள்ள அனைவருமே பாரனாய்ட் பிறழ்வு உள்ளவர்களுக்கு எதிரிகள்தான். அவர்கள் தன்னை தாக்க முயல்கிறார்கள் என்றே நோயாளி நினைப்பார். இதனால், அந்த தாக்குதலுக்கு எப்படி பதில் தருவது என யோசித்தபடி, மனதில் பயந்துகொண்டிருப்பார். இவர்களை சொற்கள், உடல் என யாராவது தாக்கினால் அவர்கள் பாடு கஷ்டம்தான். பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள், திருப்பி பதிலடி தருவதிலும் சளைக்காத மனிதர்கள். வார்த்தைக்கு வார்த்தை கண்களுக்கு கண் என எதையும் மறக்காத மன்னிக்காத ஆட்கள்.  பாரனாய்ட் ஆளுமை பிறழ்வு கொண்டவர்களுக்கு ஸீசோபெரெனியா குறைபாடும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வன்முறை எண்ணங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் பாரனாய்ட் நோயாளிகளுக்கு அதிகம் உண்டு. நடக்காத விஷயங்களை நடப்பதாக, சந்திக்காத மனிதர்களை சந்திப்பதாக

ஆளுமை பிறழ்வின் அறிகுறிகள்

படம்
  தற்கொலை அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியாத குணம் செய்யும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள இயலாமை எப்போதும் சட்டத்தை மீறிக்கொண்டே இருப்பது கட்டுப்படுத்த முடியாத கோபம் திறன் இன்மை பற்றிய தீராத ஆதங்கம் , ஏக்கம் சமூகத்தோடு இணையாமல் நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பிறரின் மீது கருணையின்றி இருப்பது பிறரின் கவனத்தை ஈர்க்க அதீதமாக முயல்வது துன்புறுத்தப்படுவது பற்றிய பயம் பிறரது மீது நம்பிக்கையின்மை படம் - பின்டிரெஸ்ட் 

ஆளுமை பிறழ்வின் அடிப்படை, அடையாளம் காணும் முறை

படம்
  ஆளுமை பிறழ்வு பல்வேறு வகையாக பத்து முக்கிய வகையாக இருப்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா. குறைபாடுகளைப் பார்க்கும் முன்னர் நாம் ஆளுமை என்பதை தெளிவாகப் பார்த்துவிடுவோம்.  ஆளுமை என்பது எப்படி உருவாகிறது, ஒருவர் வாழ்ந்து வரும் சூழ்நிலை, அவருக்கு கிடைக்கும் விஷயங்கள், கல்வி, குடும்ப சூழ்நிலை, இதனால் அவர் உலகை புரிந்துகொள்ளும் விதம். சிந்தனை, ஆகியவற்றை நாம் ஆளுமை உருவாக்கும் அம்சங்கள் எனலாம். நாட்டின் அதிபராக உள்ளவர் பற்றி கருத்து என்றால் அதை நீங்கள் அடுத்த பிரதமர் வேறு ஒரு கட்சி சார்ந்து தேர்ந்தெடுக்கப்படும்போது மாற்றி்க்கொள்ளலாம். ஆனால் ஒருவரின் ஆளுமை அப்படிப்பட்டதல்ல.  உளவியல் ஆய்வாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் இந்த வகையில் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். காலப்போக்கில் இவரது சில யூகங்கள் தவறு என்றாலும் கூட உளவியல் ஆய்வில் முக்கியமான ஆய்வுப்பங்களிப்பு செய்தவர் இவர். இவரைப் பற்றி தமிழில் நிறைய நூல்கள் வந்துள்ளன. இணையத்தில் கூட இவரைப் பற்றி தேடிப்படிக்கலாம். ஒருவரின் ஆளுமை என்பது அவர் பிறந்து சில ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். பிற விலங்கினங்கள் குட்டிகளாக பிறந்து