இடுகைகள்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தைரியமான நடவடிக்கைகள் தேவை!

படம்
  ஜேன் ஃபாண்டா jane fonda stephanie zacharek அமெரிக்காவில் புகழ்பெற்ற நடிகை. இவரை விட இவரது பெற்றோருக்கு புகழ் அதிகம். ஹென்றி ஃபான்டா, பிரான்சிஸ் ஃபோர்ட் சீமோர் ஆகியோருக்கு பிறந்த பிள்ளை. பெற்றோர் தொழி்ல் நடிப்பு என்றாலும் கம்யூனிச சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர், டிவி தொடர்களிலும் கூட நடித்துள்ளார். கிரேஸ் அண்ட் ஃபிராங்கி என்ற தொடரை இந்த வகையில் குறிப்பிடலாம்.  ஜேன், 1970ஆம் ஆண்டிலேயே பூர்விக அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர். கூடவே, அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த போரையும் கூட தவறு என்று வாதிட்டார். தற்போது தன்னார்வ அமைப்பைத் தொடங்கி தன்னைபோல ஈடுபாடு கொண்டவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். 2020ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக சட்டமறுப்பு போராட்டம் நடத்தி சூழல் பிரச்னைகள் மீது கவனம் கொண்டு வந்தார். அதற்கு எதிர்வினையாக ஐந்துமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அடைபடுவதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. அவர் போக்கி்ல் இயங்கி வருகிறார்.  காட்டுத்தீ காரணமாக பறவைகள் வலசை செல்ல முடியாது தவிக்க

எர்டோகனுக்கு ஆதரவில்லாத நிலைமை - உள்ளூர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

படம்
  துருக்கியில் அதிபருக்கு எதிரான நிலை - உள்ளூர் நிர்வாகத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி துருக்கியில் அதிபராக உள்ளவர் ரிசெப் எர்டோகன். இவரது கட்சி, நீதி மேம்பாட்டு கட்சி. அண்மையில் அங்கு நடந்த உள்ளூர் தேர்தலில் அவரது கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிகாரத்தை சுவைத்து வரும் எர்டோகனுக்கு இது பெரிய சறுக்கல்.  துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, குடியரசு மக்கள் கட்சி. இந்த கட்சியினர், உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டு 36 முனிசிபாலிட்டிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர், புர்சா, அன்டால்யா ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளடங்கும்.  தேசிய அளவிலான தேர்தலில் எர்டோகன் வென்று ஓராண்டு கூட நிறைவடையவில்லை. அதற்குள் அதிபருக்கும், அவரது கட்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  தேர்தலில் எதிர்க்கட்சிகள் 37 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. 2019ஆம் ஆண்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதிபரின் நீதி மேம்பாட்டுக் கட்சி, 36 சதவீத வாக்குகளை உள்ளூர் தேர்தலில் பெற்றது. அதிபரின் கட்சி, இஸ்தான்புல் நகரை இழந்துள்ளது குறிப்பிடத்தக

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மக்களின் அனுபவம்தான் முக்கியம் - சாம் ஆல்ட்மேன்

படம்
  சாம் ஆல்ட்மேன், ஓப்பன் ஏஐயின் இயக்குநர். இவர் தலைமையிலான குழுதான் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை வெளியிட்டது. ஓப்பன் ஏஐ தொடங்கி ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது. பணியாளர்கள் 500பேர். இவர்கள் செய்துள்ள பணி இணையத்தையே இன்று மாற்றிவிட்டது.  தமிழில் வரும் நாளிதழ்கள் கூட சாட்ஜிபிடி மாடலை தனது நிருபர்களுக்கு வழங்கி அதைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்தளவுக்கு ஜோக் முதல் பாட்டு, ரெஸ்யூம், பள்ளி மாணவனுக்கான கட்டுரை என அனைத்தையும் எழுதி வருகிறது சாட்ஜிபிடி. கேள்விகளை சரியாக கேட்க தெரிந்தால் உங்களுக்கு பதிலும் சிறப்பாக தெளிவாக துல்லியமாக கிடைக்கும்.  சாம் ஆல்ட்மனிடம் பேசினோம்.  சாட்ஜிபிடியை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? எனது மின்னஞ்சலில் உள்ள அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் கடிதங்களை எடுத்து குறிப்புகளாக்கி பார்ப்பேன். முக்கியமானவர்களின் மின்னஞ்சலை தனியாக எடுத்து வைப்பேன். அடுத்து, சந்திக்கவிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை மொழிபெயர்த்து வைத்து படிப்பேன். பிறகு அதன் வழியே சந்திப்புக்கு தயாராவேன். இப்போதைக்கு அவ்வளவுதான்.  அறி

ஏஐ சாட்பாட்களை விரும்பும் மனிதர்கள் ! - நட்பா, காதலா என்ன தேவை?

படம்
  காதல் செய்யும் ரோபோ...தேவைதான் வா வா.... இன்றைய நவீன காலத்தில் நிரந்தர நண்பர்கள் யாருமில்லை. பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் இருக்கமாட்டார்கள். கல்லூரி நண்பர்கள், வேலைக்கு சென்றபிறகு தொடரமாட்டார்கள். திருமணமானால் நட்புகள் இன்னும் சுருங்கும். பிறகு, வாட்ஸ் அப் குழு, பள்ளி, கல்லூரி ரீயூனியன் சூழலில் மட்டுமே நண்பர்களை சந்திக்கலாம். அதிலும் கூட யார் பெரியவன், வசதி யார் என்று போட்டியிடும் நிலைமைதான் இருக்கும். பிறகு நட்பை எங்கே தேடுவது? இன்றைய சூழலுக்கு, குறிப்பிட்ட இடத்தில் உதவுகிற நண்பனா என்றுதான் பார்த்து பழக வேண்டியிருக்கிறது. அலுவலக உறவுகளை நட்பாக நினைப்பது பேராபத்து. அப்படி நினைத்தால், நண்பன் போல சிரித்து பழகி பயன்களைப் பெற்றபிறகு பணபலன்களை அடைந்த பிறகு ஓடிவிடுபவர்களே அதிகம்.  அதிலும் சிலர், மனைவிக்கு, மகனுக்கு வந்த நோய்களை கூட தனக்கு விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி முன்னேறுகிறார்கள். சாதி, மத, இன அடையாளம் கூட பிரபலமாவதற்கு பயன்படுமா பயன்படுத்தலாம். நண்பன் பிரயோஜனப்பட்டால் அவனையும் டெபிட் கார்ட் போல போகுமிடமெல்லாம் தேய்த்து பயன்படுத்தவேண்டியதுதான். வினோந உலகம். வினோத குணச்சித்தர்க

35 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளிக்காக, குற்றவாளிகளை நெருப்பால் கொல்லும் சீரியல் கொலைகாரன்!

படம்
  chimera k drama  16 episodes Chimera (Korean: 키마이라; RR: Kimaira) is a South Korean television series directed by Kim Do-hoon and written by Lee Jin-mae. Starring Park Hae-soo, Lee Hee-joon and Claudia Kim, the series tells the story of three leading characters who dig through secrets of the past 30 years to find ...   Wikipedia கிமேரா என்றுதான் தொடரில் உச்சரிக்கிறார்கள். எனவே அப்படியே தொடருவோம்.  1984ஆம் ஆண்டு கிமேரா என்ற கிரேக்க புராணக்கதையில் வரும் மிருகத்தின் அடையாளத்தை வைத்துக்கொண்டு கொலைகாரர், மூன்று பேர்களைக் கொல்கிறார். அந்த மூன்று பேருமே ஹான்மியாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஐந்து ஆராய்ச்சியாளர்களில் ஒரு பெண் ஆராய்ச்சியாளர் காணாமல் போகிறார். உயிர்தப்பும் மற்றொருவர் சியோரன் என்ற பெருநிறுவனத்தின் குடும்பத்தில் பெண் எடுத்து மருமகனாகிறார். எளிமையாக முதலாளி ஆகிறார்.  35 ஆண்டுகள் கழித்து ஆராய்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் செய்தியை பத்திரிகையில் எழுதிய  முன்னாள் ஊழல் பத்திரிக்கைகாரர் திடீரென காரில் வைத்து எரிக்கப்படுகிறார். காரில் லைட்டர் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. அதில் கி

நாட்டை நிலைநிறுத்த போராடி வரும் ரிசர்வ் வங்கிக்கு வயது 90!

படம்
  ரிசர்வ் வங்கிக்கு வயது 90 இன்று அனைத்து ஜனநாயக அமைப்புகளும் சீரழிவுப்பாதையில் உள்ளன. காவிக்கட்சி ஆட்கள் உள்ளே புகுந்து எளிய மக்களின் நம்பிக்கையாக உள்ள அனைத்து அமைப்புகளையும் உருக்குலைத்து வருகிறார்கள். அதில் முக்கியமான அமைப்பு, ரிசர்வ் வங்கி.  1935ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட மத்திய வங்கி நிர்வாக அமைப்பு. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்குமான நெறிமுறைகள், நிதி நிர்வாகம், பணநோட்டுகள் மேம்பாடு, பணவீக்கம் கட்டுப்பாடு, வட்டிவிகிதம், வங்கிமுறையை சீரமைப்பது ஆகியவற்றை செய்து வருகிறது. தொண்ணூறாண்டு பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளது ரிசர்வ் வங்கி.  செயல்பாடு ஏப்ரல் ஒன்று என்றாலும் திட்டம் தொடங்கியது, 1935ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி. அப்போதே அரசியலமைப்பு சட்டப்படி உரிமைகள், கடமைகள், வகுத்து தனியாக சுயாட்சியாக செயல்படுவதற்கான சிந்தனைகள் வடிவம் பெற்றுவிட்டன. முதல் ஆளுநராக ஆஸ்பர்ன் ஆர்கெல் என்பவர் பொறுப்பேற்றார். சிடி தேஷ்முக் என்பவர் முதல் இந்திய ஆளுநராக பொறுப்பேற்றார்.  பிரிவினை காலத்தின்போது பாகிஸ்தான், இந்தியா என இருநாடுகளுக்குமான நிதி நிர்வாகத்திற்கு பொறுப்புள

ஒரே உலகம் ஒரே பாரதீயன் - அனுபவக்கதை - 1

படம்
அன்று நல்ல நாளா என்று பழனிசாமிக்கு தெரியவில்லை. ஆனால், அன்றுதான் ஈரோட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் முன்னதாகத்தான் 420 சரணுக்கு போன் செய்திருந்தான். முதலில் ஏர்செல் அலுவலகம் திறந்திருந்தவன். அரிசிக்கடைக்காரரின் ஊனமான பெண்ணை நோட்டம் விட்டு திரிந்தான். பிறகு என்னவானதோ, தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிருபராகி கலெக்டர் ஆபீஸ் உள்ளே பணியாற்றிய பெண்ணை கல்யாணம் செய்துகொண்டான். எப்பட்ரா கல்யாணமெல்லாம்? அது அப்படித்தான் லவ்வாயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ எதுவும் பண்ணுலியா? நான் பண்றதுக்கு கையில் காசும் இல்ல. வேலையும் இல்ல. நான் ஈரோட்டுக்கு வர்றேன். நோக்கியா போன்ல பிரச்னை. அங்க கஸ்டமர் சர்வீஸ் சென்டர் எங்கிருக்கு? உனக்குத் தெரியுமான்னு கேட்கத்தான் போன் பண்ணேன். பெருந்துறை ரோட்டுல ஒண்ணு இருக்கு. நோக்கியா போனுங்கறேயே என்ன போனு பட்டன் போனா? பட்டன் போனா… ஆண்ட்ராய்ட்தான். டச் போனு. அங்க வந்துட்டு வேல முடிஞ்சா உன்ன பாக்க வரலாமா? நா ரொம்ப பிஸி. இருந்தாலும் உன்ன பாக்க முடியுமான்னு தெரில. நீ பன்னீர் செல்வம் பார்க்குக்கு வந்துட்டு கூப்பிடு. பார்ப்போம். சரண் சாதாரண ஆள் கிடையாது. பல ஆட்களையும்

தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம்!

படம்
  தென்கொரிய மருத்துவர்கள் போராட்டம் எதற்கு? தென்கொரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு, மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முயன்று வருகிறது. இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்ன காரணம்? வேலை செய்யும் சூழ்நிலை மேம்படவில்லை. ஏற்கெனவே கொடுக்கும் ஊதியம் பற்றாக்குறையாக உள்ளது. இதில் கூடுதலாக மருத்துவர்களை கொண்டு வந்து இதே சூழ்நிலையில் தள்ளினால் அது தவறு என்பதுதான் மருத்துவர்களின் வாதம். சீனியர், ஜூனியர் என அனைத்து மருத்துவர்களும் இப்போது போராட்டத்திற்கு வந்துவிட்டனர்.  சியோலில் உள்ள ஐந்து பெரிய மருத்துவமனைகளில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் 39 சதவீதம் பேர் போராட்டத்தில் உட்கார்ந்துவிட்டனர். இதனால், அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டு உள்ளன. அவசரசிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளை திரும்ப அனுப்பி வருகின்றனர். அரசு,  இந்த விவகாரத்தில், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லை. அவர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்றால் மருத்துவர்களின் எண்ணிக்கை கூடவேண்ட

அவசரகாலத்தையும், அதில் நடைமுறையான குடும்பக்கட்டுப்பாட்டு விவகாரத்தை அங்கதமாக்க முயலும் நாவல்! - 1975 - இரா முருகன்

படம்
  1975 இரா முருகன் கிழக்குப் பதிப்பகம்  pages 449 விலங்குப்பண்ணை, 1984 ஆகிய நாவல்களை நினைவுபடுத்துகிற படைப்பு. அதாவது, நல்ல அவல நகைச்சுவையை படிக்கலாமே என தூண்டுகிற இயல்பு கொண்டது. காங்கிரஸ் அரசின் சர்வாதிகாரம், கண்காணிப்பு ஆகியவற்றை அவல நகைச்சுவையாக்கி ஆசிரியர் எழுதியுள்ள நாவல்தான் 1975. இரா முருகன், வங்கிப் பின்னணியைக் கொண்டு எமர்ஜென்சி காலகட்டத்தை பகடி செய்திருக்கிறார். இந்நாவலை கிழக்கு பதிப்பகம் எதற்கு வெளியிட்டிருக்கிறது என்ற காரணத்தை நாம் ஆராய அவசியமே இல்லை. வலதுசாரி பதிப்பகம். அதற்கு உகந்தபடி நாவலின் மையப்பொருளை தேர்ந்தெடுக்கிறது.  இருபத்தொரு மாதங்கள் நீடித்த எமர்ஜென்சியை நினைவூட்டும் விதமாக அதே எண்ணிக்கையில் அத்தியாயங்கள் உள்ளன. சென்னை, திருநெல்வேலி, தில்லி என மூன்று நகரங்களுக்கு கதை நகர்கிறது. அதேபோல பாத்திரங்களும் மாறுகிறார்கள். அனைத்திலும் மாறாத ஒன்று, இருபதம்ச திட்டம். ஐந்து அம்ச கொள்கை, பேச்சைக் குறை. வேலையைச் செய் என்ற வாசகம் ஆகியவைதான்.  நாயகன் சிவசங்கரன் போத்தி வங்கி ஊழியன். அவனுக்கு அரசியலோ, தத்துவமோ, அப்பா வழியில் கூடக்குறைய கற்ற ஆயூர்வேதம் கூட முக்கியமில்லை. வங்கிப்பண

பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும்! - லீனா நாயர்!

படம்
  லீனா நாயர் leena nair by alana semules பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர் லீனா நாயர். அந்த நம்பிக்கையில்தான் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு வருகிறார். ஆறு ஆண்டுகள் யுனிலீவரில் வேலை செய்தார். தற்போது சேனல் என்ற பேஷன் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இவர் பொறுப்புக்கு வந்தபிறகு, நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள உள்ள பெண் தலைவர்களின் எண்ணிக்கை அறுபது சதவீதமாக அதிகரித்துள்ளது.  நமக்கு பின்னே ஆற்றல் வாய்ந்த தலைவர் பின்னே உள்ளார் என்பதை அறியவேண்டிய காலம் இது. நாங்கள் கலந்துரையாடலின்போது, தங்கள் கருத்துகளை கூற வரும் அனைவரையும் கவனித்து அவர்களின் குரல்களையும் கேட்கிறோம் என்றார் லீனா நாயர். சானல் நிறுவனத்தின் அறக்கட்டளை ஃபாண்டேஷன் சானல் அமைப்புக்கு கொடுக்கும் நிதி கூடுதலாகியுள்ளது. இருபது மில்லியன் டாலர்களிலிருந்து நூறு மில்லியன் என நன்கொடை நிதி அதிகரித்துள்ளது. இந்த நிதியை வைத்து திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள், மாங்குரோவ் காடுகளை வளர்க்கும் பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகள் ஆகியோருக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறார்கள்.  சா

அப்பா தனது உயிரை தியாகம் செய்து காப்பாற்றிய சிறுமியே மகனின் காதலியாக வந்தால்..... ஃபிளேமிங் ஹார்ட்

படம்
  flaming hearts chinese drama rakutan viki தீயணைப்பு துறை சார்ந்த கதை. நாயகன் ஹூவா ரான். இவனின் தந்தையும் தீயணைப்பு வீரர்தான். கேப்டனாக இருந்தவர், 2000ஆம் ஆண்டு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் சிறுமியை காப்பாற்ற முயன்று அதில் வெற்றிகண்டு பதிலுக்கு தன்னையே தியாகம்செய்கிறார். அப்படி இறந்துபோனதால், ஹூவா ரான் நிலைகுலைந்து போகிறான். அப்பாவைப் போலவே படித்து தீயணைப்பு வேலைக்கு வருகிறான். தென்கிழக்கு மருத்துவமனையில் எமர்ஜென்சி பிரிவில் உள்ள இளம்பெண் பழக்கமாகிறாள். இருமுறை அவளது உயிரைக் காப்பாற்றுவது ஹூவா ரான்தான். அவளுடைய கடந்த காலத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. அது நாயகனின் அப்பா இறப்பு சம்பந்தமானது. அது என்ன என்பதை சீன தொடர் ஜவ்வாக இழுத்து சொல்லுகிறது.  பொதுவாக தீயணைப்புத்துறை சார்ந்த தொடர் என்றால் தேசப்பற்று என மூக்கு சிந்த வைப்பார்கள். ஆனால் இந்த தொடர் தேசப்பற்று, காதல் என எந்தப்பக்கமும் போகாமல் இருபத்து நான்கு எபிசோடுகளில் முடிகிறது. ஆனால் என்ன சொல்லவருகிறது என ஒன்றும் புரியவில்லை. தொடரின் ஒரே பலம், நாயகன் ஹூவா ரானாக நடித்துள்ள சீன நடிகரின் முக வசீகரம்தான். அவருக்கு அடுத்து நர்சாக வரும் ஷி

கண்முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராக அமைதி காப்பதும் தவறுதான்! - கோகோ காஃப்

படம்
  கோகோ காஃப் coco gauff டென்னிஸ் வீரரான கோகோ காப், 2023ஆம் ஆண்டில்  22 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். இதில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலம் கிடைத்துள்ளது. இது அவருக்கு பெருமையான ஒன்று. கருப்பினப் பெண்ணாக நான் விளையாடும் விளையாட்டு அந்தளவு பன்மைத்தள்மை கொண்டதல்ல. எனக்கு இது அர்த்தம் கொண்ட ஒன்று என்றார்.  கடந்த ஆண்டு செப்டம்பரில், தனது பத்தொன்பதாவது வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை காஃப் வென்றார். போட்டியில், ஆரியானா சபாலென்கா என்ற வீரரை போட்டியிட்டு வென்றார். சாம்பியன் பட்டத்தை பெறும்போது பெயரும் புகழும் கூடவே வரும் என்று தெரியும். ஆனால், அதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. எனது வீட்டில் எத்தனை பட்டங்களை வாங்கி வைக்க முடியும் என்றுதான் யோசித்து வருகிறேன் என்றார்.  கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியின் அரையிறுதியில் தோற்றாலும் காஃபின் நம்பிக்கை தளரவில்லை. அவர் தான் நினைத்த பாதையில் தீர்க்கமாக சென்றுகொண்டே இருக்கிறார்.  2020ஆம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்டபோது, அதை தீவிரமாக யோசித்துள்ளார். நடந்த அநீதி பற்றி யோசித்தேன். அதை நினைத்து அழுதுள்ளேன். அது

வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஆராய்ந்த பொருளாதார அறிஞர்!

படம்
  கிளாடியா கோல்டின்  claudia goldin கடந்த அக்.9 அன்று அதிகாலை 4.30 இருக்கும். அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவருக்கு பொருளாதார ஆய்வுக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதாக செய்தி கூறப்பட்டது. இந்த வகையில் அப்பரிசை பெறும் மூன்றாவது பெண்மணி கிளாடியா. எழுபத்தேழு வயதாகும் கிளாடியா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். இந்த வகையில் கூட அவர் முதல் பெண்மணி. வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு, பிரச்னைகள், பாலின பாகுபாடு, சம்பளம் ஆகியவற்றை பற்றிய ஏராளமான ஆய்வுகளை கிளாடியா செய்துள்ளார். நாம் எப்போதும் குடும்பத்தில் உள்ள ஆண்கள், ஆண் குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். திருமணமான, விதவையாக உள்ள பெண்களைப் பற்றி, அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைப் பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. வரலாற்றிலும் அவர்களைப் பற்றிய தகவல்களை தேடி அறிய வேண்டும் என்றார் கிளாடியா.  நான் யாருக்கும் எந்த அறிவுரையையும் கூறுவதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் எனது மாணவர்களுக்கு கூறுகிறேன். உங்களுக்கு செலவழிக்க நிறைய நேரம் கையில் இருந்தால், அதை சோதனை செய்ய புதிய விஷயங்களை அறிய பயன்படுத்துங்கள்.  -சா

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு

படம்
  காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு காலநிலை மாற்றம் என்பதைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஒருவிதமாகவும், வளரும் நாடுகள் ஒருவிதமாகவும் நடந்துகொள்கின்றன. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற விதிகளை பயன்படுத்தி வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றன. வளரும் நாடுகள், பணக்கார நாடுகளின் விதிகள் தங்களுக்கு பொருந்தாது. நாங்கள் இன்னும் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று கூறி பசுமை விதிகளை அமல் செய்ய மறுக்கின்றன. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை அமல்படுத்த குறிப்பிட்ட தொகையை வளர்ந்த நாடுகள் தர வேண்டியிருக்கும். இதற்கான அடித்தளத்தை காப்29, அசர்பைஜானில் நடக்கும் மாநாடு அமைக்கும் என நம்பலாம்.  துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல் வளங்களை மூன்று மடங்கு வளர்ச்சி கொண்டதாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நடப்பு ஆண்டில், இலக்கு என்பது நாடுகள் அளிக்க வேண்டிய நிதியாக இருக்கும். இதை என்சிக்யூஜி என சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள். புதிய ஒருங்கிணைந்த கூட்டு இலக்கு என தமிழில் கூறலாம்.  2025ஆம் ஆண்டு தொடங்கி வளர்ந்த நாடுகள், வளரும்