இடுகைகள்

நேரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் சாதனைகளைப் பேசும் மின்னூல் இந்தியா 75! - சாதனைகளும் தற்போதைய நிலையும்- அமேஸான் வலைத்தளம்

படம்
  இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த காலகட்டங்களில் இந்தியாவின் வரலாறு அனைவரும் அறியவேண்டியது முக்கியம். தேசிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தியா 75 என்பதை பல்வேறு சாதனைகளாக அழகுற வடிவமைத்து சிறுசிறு கட்டுரைகளாக வெளியிட்டது. அதுதான் இப்படி நூலை எழுதி தொகுக்க உந்துதல் வழங்கியது. இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சுருக்கமாக இந்தியா இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன, தற்போதுள்ள நிலை என்ன ஆகியவற்றை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவில் சில நாட்கள் ஒருவர் தங்கினால் நூலு்ம், சில வாரங்கள் தங்கினால் கட்டுரையும், அங்கேயே ஆண்டுக்கணக்கில் தங்கினால் எதையும் எழுத முடியாது என ஓஷோ இந்தியா பற்றிய நூலில் கூறியிருப்பார். அது இங்கு நிலவும் பல்வேறு பன்மைத்துவம், முரண்பாடுகளின் கலவையாக முன்வைத்த கருத்து. நூலில் நாம் அறிந்துகொள்வது இந்தியாவைப் பற்றிய சில கோணங்களே. இது முழுமையானதல்ல. இந்தியா என்பது வெறும் வரைபடம் அல்ல. அது ஒரு மனநிலை. யாரையும் ஆளாத, ஆளும் அதிகாரம் கூட மனதில் எழாத ஆன்மாக்கள் வாழும் இ

ஆனந்தபஜார் பத்திரிகை - நூற்றாண்டைக் கொண்டாடும் நாளிதழ்!

படம்
  anandabazar patrika 100 year supplementary 29 oct 2021 ஆனந்த பஜார் பத்திரிகை - நூற்றாண்டு கடந்த சாதனை! குறிப்பிட்ட மொழியில் பணியைத் தொடங்கி, பிறகு அனைத்து மொழிகளிலும் முக்கியமான நாளிதழாக அல்லது ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்பது நிச்சயம் சாதனைதான். அதுவும் குறிப்பிட்ட கொள்கைக்காக நாளிதழைத் தொடங்கியவர்களுக்கு சமரசம் செய்வது மிக கடினமாகவே இருக்கும்.  தமிழிலும் கூட தமிழ்நாட்டிற்காக, அதனை தனிநாடாக்க பத்திரிகை தொடங்கி இன்றுவரை அதற்கான உழைப்பில் இருக்கும் சில பத்திரிகைகள் உண்டு. இப்படி தொடங்கும் பத்திரிகைகளில் உள்ள இயக்குநர், ஆசிரியர் நாளிதழை நடத்துபவர்களின் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவே இருப்பது ஆச்சரியமல்ல. அப்படித்தான் நாளிதழை கட்டுப்படுத்தி வைத்து இலக்கை நோக்கி நடத்துகிறார்கள்.  ஆனந்த  பஜார் பத்திரிகை இன்று ஏபிபி ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஏபிபி நாடு என யூடியூப் சேனலைப் பார்த்திருப்பீர்கள். தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இந்த ஊடக நிறுவனத்தின் டிவி சேனல்கள் உண்டு. தமிழ், தெலுங்கில் டிஜிட்டல் வலைத்தளமாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் அவர்கள் டிவி சேனல்களை தொடங்கலாம். வங்காள மொழியி

கருத்துகளால் வேறுபட்டாலும் இந்தியாவுக்கான முன்நின்ற நேரு, காந்தி! - ஜவகரும் காந்தியும் - வெ.சாமிநாதசர்மா

படம்
  நேரு, காந்தி ஜவகரும் காந்தியும் வெ.சாமிநாதசர்மா இந்த நூல் கொஞ்சம் பழமையானதுதான். இதை இப்போது படிப்பதற்கு முக்கியமான காரணம், பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்கள் கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்று சில மதவாத கூட்டங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.  இதில் பாதி மட்டுமே உண்மை. ஒருவரின் சிந்தனை இன்னொருவருடன் ஒத்து வரலாம். ஆனால் அப்படியே பிரதி எடுத்தது போலவா இருக்கும்?சாமிநாத சர்மா இந்த நூலில் காந்தி, நேரு ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளை அழகாக பிரித்து எழுதி இருவரின் லட்சியம் எதை நோக்கியது என்பதையும் எழுதியுள்ளார்.  சுதந்திர இந்தியா என்பதுதான் காந்தி, நேரு ஆகிய இருவரின் லட்சியம். ஆனால் அதை நோக்கிய பயணத்தில் இருவரின் கருத்துகளும் எப்படி இருந்தன என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மதம், அரசியல், வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கை ஆகியவற்றைப் பொறுத்தவரை காந்தி, நேரு ஆகியோரின் வாழ்க்கைப் பார்வை வேறுபட்டது. இதனை நேரு காந்தியின் காலத்திலேயே அவரிடமே கூறியுள்ளார்.  ஒருவகையில் காந்தி, தனது கருத்துகளை அனுபவங்கள் வழியாக மேம்படுத்திக்கொண்டே இருந்தார். ந

வீட்டிலிருந்தே அலுவலக வேலை - கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்தே வேலை அன்புக்குரிய தோழர் இரா.முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? தங்கள் குடும்பத்தினர் நலமோடு இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எங்கள் இதழுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. வேலைகள் அனைத்தும் இணையம் சார்ந்தது என்பதால் கட்டுரைகளை எழுதிய மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும். வலி நிவாரணிகள் பற்றி படிக்க நினைத்தேன். அதற்கான நூல் கிடைத்தது. போனில் அதனைப் படித்து வருகிறேன். நேரு பற்றிய தமிழ் நூல் எழுதி வருவதைச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுதினால் போதும். சரிபார்த்து வெளியிட்டு விடலாம்.  நன்றி ச.அன்பரசு 2.4.2021 படம் பிக்சாபே

அதிகரித்து வரும் வெப்பம்! கடிதங்கள்

படம்
  நேரு அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இங்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. அறையில் நீர் தட்டுப்பாடு பிரச்னை வரும் என நினைக்கிறேன். புத்தக காட்சியில்  வாங்கிய இலங்கை சிறுகதைகளை படித்து வருகிறேன். 2 சிறுகதைகளை படித்துள்ளேன். தொகுப்பு மொழியாக்கம் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.  நேருவின் போராட்டகால சிந்தனைகள் நூலை அடுத்து படிக்கவேண்டும். அறிவியல் மொழிபெயர்ப்பு  நேர்காணல் நூலை எழுதி அமேசானில் பதிவிட்டேன். ஓராண்டாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த பணி. இப்போதுதான் அதற்கு நேரம் கிடைத்தது. நூலை எழுதி தொகுத்து பதிவிட்டுவிட்டேன்.  நேரு பேசிய சொற்பொழிவு நூலை நடப்பு ஆண்டில் எழுதிவிட நினைத்துள்ளேன். என்னளவில் அதனை சரியாக செய்ய முயல்கிறேன். அதிர்ஷ்டம் கால் அப்பியாசம் முக்கால் என்பதுதான் நிலை. நன்றி ச.அன்பரசு 8.3.2021

மதம், வகுப்புவாத கருத்துக்களைப் பற்றி உறுதியாக இருந்த நேரு! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? கடந்த 25ஆம் தேதி முதல் நாங்கள் வேலை செய்த நாளிதழ் பதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. திங்கள் மட்டும்தான் இதழ் வெளியாகும். அதற்கான வேலைகளை செய்து தரவேண்டும்.  எம்எக்ஸ் பிளேயரில், லிமிட்லெஸ் என்ற வெப்தொடரைப் பார்த்தேன். மூளையை சுறுசுறுப்பாக்கி அதன் சக்தியைக் கொண்டு குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒருவரின் கதை. வேலை இல்லாமல் கஷ்டப்படும் இளைஞனுக்கு இந்த மாத்திரை கிடைக்கிறது. கூடவே இதனைத் தயாரித்து விற்கும் மாபியா தலைவனின் பகையும் போனஸ். இப்பிரச்னைகளைச் சமாளித்து கொலைப்பழியிலிருந்து தப்பி காவல்துறைக்கு உதவத் தொடங்குகிறான்.  அவனுக்கு பக்கபலமாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் இருக்கிறார். நாயகன், மூளையை உசுப்பும் மருந்தின் பக்கவிளைவுகளை தடுக்கும் மாற்று மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் கண்ணில் கற்பனைக் காட்சிகள் தோன்றும், உடல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார்கள். காமெடியில் அசத்தியிருந்தார்கள். குடும்பம், காதல், நட்பு, துரோகம், அரசியல் பழிக்குப்பழி என நிறைய விஷயங்களை சொல்ல முயன்றிருந்தார்கள். பரபரவென தொடர் பற

இந்தியப் பொருளாதாரத்தை வாழ வைக்கும் ஐஐடி! - இந்தியா 75

படம்
இந்தியாவின் ஜனநாயக சிற்பிகளில் ஒருவரான நேரு, அடிக்கல் நாட்டி  எழுப்பிய ஐஐடிகள், முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளன. இதில் படித்து நிறைய மதிப்பெண்களை எடுப்பவர்கள் வெளிநாடுகளில் மதிப்புமிக்க பணிகளில் உள்ளனர். இந்த கல்வி நிறுவனங்களின் பொருளாதார மதிப்பு பத்து ட்ரில்லியன்கள் என மதிப்பிட்டுள்ளனர். ஐஐடிகான பணிகள் 1950களில் தொடங்கியது.  1951இல் காரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டது. இன்று அந்த நிறுவனம் தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. முதலில் இங்கு பொறியியல் கல்லூரியை தொடங்கவேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் காலத்தில், எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி என்பது தொழில்நுட்பமாகவே இருக்கும் என கணித்திருக்கின்றனர். அப்போதைய வைசிராயின் கௌன்சிலில் இடம்பெற்ற உறுப்பினர் ஆர்டெசிர் தலால் இதனை எழுதியிருக்கிறார்.  உலகப்போர் 2 முடிந்தபிறகு, நளினி ரஞ்சன் சர்க்கார் கமிட்டி தொழில்நுட்ப கழகங்களை அமைக்கவேண்டும் என்று அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தனர்.  சுதந்திரம் பெற்றபிறகு, நேரு தொழில்நுட்ப கழகங்களை உருவாக்க வேகம் காட்டினார். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம்தான் இந்தியா

இந்திய மண்ணில் ஜனநாயக சிந்தனைகளை ஊன்றியவர்! - நேருவின் போராட்டகால சிந்தனைகள்

படம்
  நேருவின் போராட்டகால சிந்தனைகள் தொகுப்பாசிரியர் அர்ஜூன் தேவ் நேஷனல் புக் டிரஸ்ட்  இந்த நூல் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றி பேசுகிறது. அந்த காலகட்டத்தில் உலகளவில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பற்றி நேரு தன் மனதில் தோன்றிய கருத்துகளை எழுதினார். பேசினார். அதன் ஒரு பகுதிதான் தொகுப்பாளர் அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டுள்ளது.  உலகளவில் நடைபெறும் போர், அரசியல் தந்திரங்கள், வல்லரசு தகராறுகள், பொருளாதார வளர்ச்சி என பல்வேறு விஷயங்களில் நேருவின் சிந்தனை ஆச்சரியம் தருகிறது. ஏறத்தாழ இந்தியாவின் முதல் பிரதமராக ஆன  உடனே இவரது சிந்தனைகள் அரசியல் கொள்கைகளாக வடிவம் பெற்றன. அதுவும் கூட நாட்டின் நலனை முன்வைத்துத்தான் . பொதுத்துறை நிறுவனங்கள் இன்று விற்கப்பட்டு வரும் நிலையில் அவர் அந்த நிறுவனங்களை தொடங்கியது மக்களை ஏழ்மையில் வீழ்த்த பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனை கூறிய அடிபொடிகள் கூக்குரலிடுகின்றனர்.  அன்று அரசு முழுப்பொறுப்பில் தனது நிதி முதலீட்டைக் கொண்டு அரசு நிறுவனங்களைத் தொடங்கியிருக்காவிட்டால் மக்களுக்கு பெரும்பாலான சேவைகள் சென்றே சேர்ந்திருக்கிறது. இன்று பொதுதுறை நிறுவனங்களிடமிருந்து

பாரதமாதாவின் ராஜபுத்திரனுக்கு இந்திய வரலாற்றில் இடம் கிடையாது!

படம்
  இப்படி சொன்னது காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள் அல்ல. நேருவின் காலத்தில் அவரது கொள்கைகளை எதிர்த்த, ஆனால் அவரின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபாய். உடனே இன்றைய பிரதமர் மோடி போலத்தானே வாஜ்பாயும் கூறியிருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர் கூறியது பாரதமாதாவின் ராஜபுத்திரன் என்று மட்டுமே. இந்திய வரலாற்றில் இடம் கிடையாது என்று தனது செயல்கள் வழியாக கூறியிருப்பது தற்போதைய ஒன்றிய அரசு.  இந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இதற்கான போஸ்டர்களில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருக்கு  இடமில்லை என்பது அனைத்து இடங்களிலும் சர்ச்சையாகி வருகிறது. நேருவுக்கு பதில் ஆங்கிலேயரை ஆதரித்த, சிறையில் இருந்தபோது மன்னிப்பு கடிதம் எழுதி தன்னைக் காப்பாற்றிக்கொண்ட சங் பரிவார் தலைவர்களை போஸ்டர்களில் இடம்பெறச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.  யாருக்கு யார் முக்கியமோ அவர்களை பதவியில் அமர்த்தலாம். ஆனால் வரலாற்றில் அப்படியான வசதிகள் கிடையாது. சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமராக அமர்ந்த நேருவை பற்றி பேசும்போது அவரின் தனிப்பட்ட விஷயங்களைப் பேசி களங்கப்பட

இந்தியாவின் எல்லைகளைப் பிரித்த ராட்கிளிப்! - இந்தியா 75

படம்
  1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி. நள்ளிரவு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. விதியுடனான சந்திப்பும் கூட நடந்தது. ஆனால் அதில் முக்கியமான பிரச்னை ஒன்று இருந்தது. இந்தியா எங்கே முடிகிறது, பாகிஸ்தான் எங்கே தொடங்குகிறது என்ற எல்லைப் பிரச்னைதான்.  அப்போதைய ஆட்சியாளரான மவுண்ட் பேட்டனுக்கு இருந்த பிரச்னை பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகளும் எல்லைக்காக மீண்டும் குற்றம்சாட்டி சண்டை போடக்கூடாது என்பதுதான். அவர் இதற்காக எல்லைகளை பிரிப்பதற்கான யோசனையை உருவாக்கினார்.  இந்திய அரசுக்கு, அமைதியான முறையில் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதற்கான காலத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்கெனவே இழந்துவிட்டது.  1942ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கிரிப்ஸ் கமிஷனும் தோல்வியுற்றது. 1946ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியும் இரு நாடுகளை பிரிப்பது அவசியம் என்று கூறிவிட்டது. இதில் முக்கியமாக எழுந்த பிரச்னை, துணைக்கண்டத்தை எப்படி பிரிப்பது என்பதே.  எல்லைகளை பிரிக்க அழைக்கப்பட்டவர் ஒரு வழக்குரைஞர். இவர் பெயர் சிரில் ராட் கிளிப். 48 வயதானவர் அதிக நாடுகள் பயணித்தது கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எ

முரண்டு பிடித்த மாநிலங்களை இணைந்து இந்திய ஒன்றியமாக்கிய வல்லபாய் படேல்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 இந்தியா பிரிட்டிஷ் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது, 500 மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்த மாநிலங்கள் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டிய தேவையிருந்தது. மாநிலங்களுக்கு முன்னர் இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அவை, இந்தியா மற்றும் பாகிஸ்தான்  என்று இரு நாடுகள். மாநிலங்கள் யாருடன் சேர்கிறார்கள் என்பது அவர்களது விருப்பம். உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் தனது சாதுரியத்தால் பெரும்பாலான மாநிலங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தார். ஆனாலும் சிக்கல் வந்த மாநிலங்கள் இருந்தன அவற்றைப் பற்றி பார்ப்போம்.  ஹைதராபாத் இந்தியா, சுதந்திரம் பெற்றபிறகு ஹைதராபாத் மாநிலம் அதனுடன் இணைய மறுத்தது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தபோது போலவே இறையாண்மை கொண்ட மாநிலமாக ஹைதராபாத் இருக்கவேண்டுமென அதன் நிஜாம் நினைத்தார். ஹைதராபாத் நிலப்பரப்பு ரீதியாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவிற்காக வாசல் என்பதால் இந்திய அரசு இதனை முக்கியமான மாநிலமாக பார்த்தது.  இந்திய அரசு மாநிலங்களுக்க சட்டரீதியான ஆவணங்களை வழங்கி அதில் கையெழுத்து போட்டு இந்திய ஒன்றியத்துடன் சேர்த்து வந்தது. ஹைதராபாத்

இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை! - பதினான்கு உறுப்பினர்கள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை ஜவகர்லால் நேரு பிரதமர் நவ.14, 1889 - மே 27, 1964 சர்தார் வல்லபாய் படேல் உள்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அக்.31, 1875 - டிச. 15, 1950 ஆர்.கே. சண்முகம் செட்டி நிதித்துறை  அக்.17, 1892 - மே 5, 1953 சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்புத்துறை  ஜூலை 11, 1902 - ஜூன் 29, 1961 ராஜேந்திர பிரசாத் விவசாயம் மற்றும் உணவு டிச.3, 1884 - பிப்.28, 1963 மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்வித்துறை நவ.11, 1888 - பிப்.22, 1958 ஜான் மத்தாய் ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை ஜன் 10, 1886 - நவ.2, 1959 பி.ஆர். அம்பேத்கர் சட்டம் ஏப்ரல் 14, 1891 - டிச.6, 1956 ஜெகஜீவன்ராம் தொழிலாளர் துறை  ஏப்.5, 19008 - ஜூலை 6, 1986 சிஹெச் பாபா வணிகத்துறை ஜூலை 22, 1910, ஜூலை 29, 1986 ரஃபி அஹ்மத் கித்வால் தகவல்தொடர்பு பிப்.18, 1894 - அக்.24, 1954 ராஜகுமாரி அம்ரித் கௌர் சுகாதாரத்துறை பிப்.2, 1887 - பிப்.6, 1964 சியாம பிரசாத் முகர்ஜி  தொழில்துறை மற்றும் விநியோகம் ஜூலை 6, 1901 - ஜூன் 23, 1953 என்வி காட்கில் மின்சாரம் மற்றும் சுரங்கம் ஜன் 10, 1896 - ஜன் 12, 1966 டைம்ஸ் ஆப் இந்தியா

நேரு செய்த பெரும் தவறு இதுதான்! - அரவிந்த் பனகரியா, பொருளாதார பேராசிரியர், கொலம்பியா

படம்
                இந்தியா வல்லரசாக மாறுவதை தடுத்த நேரு இந்தியா தனது 75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது . ஆனால் தனது நூறாவது ஆண்டைத் தொடும்போது வல்லரசாக வளர்ச்சி பெற்ற நாடாக மாறியிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது . சுதந்திரம் பெற்று ஒரு நாடு 75 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது என்பது பெரிய விஷயம் . பிற நாடுகள் இதே காலகட்டத்தில் இந்தியாவை விட மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர் . ஆனால் அதில் பின்தங்கிவிட்டோம் . பொருளாதார ரீதியாக இந்தியா பெரும்தோல்வியை தழுவியுள்ளது . இதற்கு முக்கியமான காரணம் , சுதந்திரம் பெற்றபிறகு ஆட்சிக்கு வந்த பிரதமரான நேருவும் அவர் கடைபிடித்த சோசலிச கொள்கையும்தான் . பலருக்கும் கேளவிகள் மனதில் தோன்றலாம் . அவர் கடைபிடித்த கொள்கையில் என்ன பிரச்னை என்று ? அவர் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார் . கனரக பெரும் தொழிற்சாலைகளை கட்டினார் . இவற்றில் கிடைக்கும் லாபம் அரசுக்கு வரும் . இது தனியாரின் சொத்துக்களைப் போல அரசு சொத்தாக மாறும் என நினைத்தார் . இந்த தொழிற்சாலைகளுக்கான முதலீடு அதிகம் . நேருவின் சோசலிசம் , மார்க்சிசத்தின் புரட்சிகர கூறுகளை த

பறவையால் அழகாகிறது வானம்! - கடிதங்கள்

படம்
           பறவையால் அழகாகிறது வானம்!   அன்பு நண்பர் சபாவுக்கு , வணக்கம் . நான் செனைனக்கு வந்துவிட்டேன் . பள்ளிகள் தொடங்கிவிட்டதால் , மாணவர்கள் பஸ்ஸில் தொங்கியபடி செல்லும் காட்சிகளை இனி பார்க்க முடியும் என நினைக்கிறேன் . அறை முழுக்க தூசு காற்று போல நிரம்பியிருந்தது . வாடகைப்பணத்தைக் கொடுத்துவிட்டேன் . படிக்க வேண்டிய நூலாக நேரு எனக்காக இன்னும் காத்திருக்கிறார் . அதனை இப்போதுதான் மெல்ல படிக்கத் தொடங்கியுள்ளேன் . வரும் திங்கள் முதல் அலுவலகம் தொடங்கவிருக்கிறது . வேலைகள் நெருக்கும் என்று நினைக்கிறேன் . ஆசிரியர் சிவராமன் வீட்டுக்கு போகவேண்டும் என நினைத்துள்ளேன் . இந்த பிறந்தநாளுக்கு அவர் வீட்டிற்கு செல்ல நினைத்தே்ன் . ஆனால் பல்வேறு சிக்கல்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை . அதற்காக கடிதம் ஒன்றை எழுதி அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பினேன் . மனிதர் பதறிப்போய் போனில் அழைத்து என்னாச்சு என்று கேட்டார் . அவரைப்பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதை உணர்ச்சிகரமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன் . பிறகு எப்போதுதான் இதனை சொல்லுவது ? அவர் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு என்மேல் நம்பிக

இந்தியாவின் அடையாளங்கள் பற்றி அறிந்துகொள்வோம்!

படம்
  இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை கடந்து வந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் நிறைய மாற்றங்களை இந்தியா சந்தித்துள்ளது. பல்வேறு சோகமான சம்பவங்களையும், மகிழ்ச்சியான நினைவுகளையும் நாம் பார்த்துள்ளோம். இந்தியாவின் அடையாளங்கள் என்றால் நமக்கு என்ன நினைவுக்கு வருகிறது. கொடி, சிங்கம் ஆகியவைதானே அவை பற்றிய விஷயங்களைப் பார்ப்போம்.  இந்திய அரசின் சின்னமான மூன்று சிங்கங்கள் கொண்ட முத்திரை நாணயம், பணம், பாஸ்போர்ட், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்திலும் பதியவைக்கப்படுகிறது. 1875ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி தேசியகீதமான வந்தே மாதரம் பாடலை உருவாக்கினார். சிங்க சின்னம் என்பது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிங்கம் அதிகாரப்பூர்வ அரசு சின்னமாக இருந்தாலும் தேசிய விலங்கு என்பது புலியாக உள்ளது.  தேசியக்கொடி  1947ஆம்ஆண்டு ஜூலை 22 அன்று, அரசியலமைப்பு ஹாலில் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமராக பதவியேற்க உள்ள நேரு ஆகியோர் தேசியக்கொடியை தீர்மானிக்க கூடியிருந்தனர். நேரு, தேசியக்கொடியின் நிறம், சர்கா ஆகியவற்றை எப்படி இருக்கவேண்டும் என கூறியிருந்தார். 1906ஆம் ஆண்டு சுயராஜ்ய கொடியை அறிமுகப்படுத்தியிருந்த

ஜனநாயக இந்தியா - நேருவின் உரைகள் தமிழில் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இந்தியாவின் நவீன சிற்பிகளில் ஒருவரான நேரு, மேற்குலகில் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை விட சிந்தனையாளராகவே அறியப்படுகிறார். தனது வாழ்நாளில் நேரு ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவரளவுக்கு உலக வரலாற்றை ஆய்வு நோக்கில் அணுகி இந்தியாவின் நிலை என்ன எப்படி வளரவேண்டும் என்று கனவுகண்ட தலைவர் யாருமில்லை எனலாம். இந்த நூலில் மொத்தம் 24  உரைகள் உள்ளன. இவை மதவாதம், தேசியவாதம், ஹைதரபாத்தை இந்தியாவுடன் இணைத்தது, கலவரங்கள், தேசியகீதம் உருவாக்கம் பல்வேறு விஷயங்களைப் பற்றிய தனது கருத்துகளை கூறுகிறார்.  உலகம், இந்தியா, இந்திய மாநிலங்கள் பற்றி பிரதமர் ஒருவர் வெளிப்படையாக பேசுவது ஆச்சரியமான ஒன்று. இதில் அரசியல் கலக்காமல் தனது சிந்தனைகளை பேசியுள்ளார். பிரதமரின் பெருமை குலையும்போது நாட்டின் பெருமையும் குலைந்துவிடும் என்று பிரனாப் முகர்ஜி கூறிய கூற்றை நினைவுபடுத்திக்கொண்டால் நேரு சிறப்பாகவே அனைத்து விவகாரங்களையும் கையாண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.   காஷ்மீர் விவகாரம், இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றி பேசும்போதும் இரு தரப்பினருக்குமான யோசனைகளை முன்வைத்து பேசியுள்ளார். ராணுவ தரப்பிலும் ஆதரவாக பேசவில்லை. மக்களின் எந்

தேசத்தந்தையின் உண்மை, வலிமை, மனிதநேயத்தை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்! - ஜவாகர்லால் நேரு

படம்
                நியமன நாள் நமது நியமன நாளை விதி உருவாக்குகிறது . அதை இந்திய மக்களான நாம் சுதந்திரமான நாட்டை உருவாக்கி அதற்காக நிலைநிறுத்தவேண்டும் . இறந்த கால சம்பவங்கள் நாம் இப்போது செய்யவிருக்கும் பல்வேறு செயல்களில் எதிரொலிக்கலாம் . நாம் இந்தியாவில் வாழும் வாழ்க்கையை வரலாறாக பிறர் எழுதுவார்கள் . இதில் திருப்புமுனை என்று முன்னர் கூறப்பட்டவையெல்லாம் இறந்த காலமாக மாறும் . விதி இயற்றப்படும் முக்கியமான தருணம் இது . ஆசியா மற்றும் உலகத்திற்கானது . கிழக்கில் புதிய விண்மீன் உதிக்கிறது . அதன் பின்னணியில் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை உள்ளது . நமது நம்பிக்கை ஏமாற்றப்படாதபோது , விண்மீன் அஸ்தமிக்கும் நிலை ஏற்படாது . நமது மக்களைச் சுற்றிலும் சோக மேகங்கள் இருந்தாலும் , வேறு பிரச்னைகளால் வாடி நின்றாலும் கூட நாம் பெற்றுள்ள சுதந்திரத்தைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளவேண்டும் . நாம் இந்த நேரத்தில் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேசத்தந்தை , சுதந்திரத்தை வடிவமைத்தவர் , நம்மைச்சுற்றி இருந்த இருளை நீக்கியவரை நினைவுகூரவேண்டும் . நாம் அவரைப் பின்பற்றாத மக்களாக இருந்தாலும் கூட அடுத்தடுத்த த