இடுகைகள்

பள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழையால் ஏற்படும் மந்தநிலை - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மழையால் மந்தநிலை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது . சூரியனைப் பார்க்கவே முடியவில்லை . டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை . அந்த இடத்திலும் போட்டி போட்டு ர . ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள் . அவ்வை சண்முகம் சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் . போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும் ? ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன் . ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர் . அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி . அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை . இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள் , மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள் . இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன் . மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது . படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன . அவற்றையும் இனி படிக்க வேண்டும் . துப்பறியும் சாம்பு - 2 நூலி

உலகம் முதல் உள்ளூர் பிரச்னை வரை உட்கார்ந்து பேசுவோமா? - பிரேக் தி டிவைட் அமைப்பு பற்றி தெரிஞ்சுக்கோங்க

படம்
  அபய்சிங் சாச்சல் தனது சகோதரருடன்... உலக பிரச்னைகளை உட்கார்ந்து பேசும் பள்ளி மாணவர்கள்!  உலகில் ஏற்பட்டு வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உண்டு. இதற்கு பிரச்னையை எதிர்கொள்ளும் தரப்புகள் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும். இந்த வகையில் உலக நாடுகளிலுள்ள பள்ளி மாணவர்கள், சமூகப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க உருவானதுதான் பிரேக் தி டிவைட் என்ற நிகழ்ச்சி. இதனை பிரேக் தி டிவைட் (Break the divide) என்ற தன்னார்வ அமைப்பு நடத்துகிறது. 2016ஆம் ஆண்டு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அபய்சிங் சாச்சல் என்ற பள்ளி மாணவர், இந்த அமைப்பைத் தொடங்கினார்.  அபய்சிங் சாச்சல், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது அபய்யின் சகோதரர் சுக்மீத், ஆர்க்டிக் பகுதிக்கு சென்றிருந்தார். அபய்சிங், தனது சகோதரர் சுக்மீத்துடன் வீடியோ அழைப்பு வழியாக பேசத் தொடங்கினார். இருவரும் தொடக்கத்தில் டிவி நிகழ்ச்சி, திரைப்படம் என்று தான் பேசினார்கள். பிறகு மெல்ல சமூகப் பிரச்னைகளைத் தீவிரமாகப் பேசி விவாதிக்கத் தொடங்கினார்.  அபய்சிங் சாச்சல், படித்த சீகுவாம் பள்ளி மாணவர்களும் விவாதத்தில் இணைந்தனர். அவர்கள் ப

மாணவர்களுக்கு வழிகாட்டும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  கல்வியறிவின்மையை தீர்க்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்! உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டேராடூனில், கல்வியின்மையை எதிர்த்து போராடி வருகிறார்  அரசுப்பள்ளி ஆசிரியர், ராஜீவ் பந்திரி. மாணவர்களுக்கு நேரடி வகுப்பிலும், ஆன்லைனிலும் பாடங்களைக் கற்பித்து வருகிறார்.  பவுரி மாவட்டத்தில் உள்ள நௌகான்கல் கிராமத்தில் பிறந்தவர், ராஜீவ். அரசுப்பள்ளி ஆசிரியராக  30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பெடுத்து வருகிறார். 2009ஆம் ஆண்டு முதல் டேராடூன் மாவட்டத்தில் கல்ஜ்வாடியில் உள்ள பள்ளியில் முதல்வராக பணியாற்றிவருகிறார்.  இன்றுவரையில் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகளை எடுத்து வருகிறார்.  பணிநேரம் முடிந்ததும், ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கிறார். சில மாணவர்களுக்கு வீடுகளுக்கு சென்றும் சிறப்பு வகுப்புகளை நடத்திவருகிறார். பொருளாதாரீதியாக கஷ்டப்படும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்தும் வருகிறார்.  “நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது, வீட்டில் பொருளாதாரப் பிரச்னை இருந்தது. என்னுடைய மாணவர்களின் பிரச்னைகளை என்னால் தீர்க்க முடிந்தால், அவர்கள்

விழுப்புரம் இளைஞர்களை முன்னேற்ற முயலும் விக்ளக் அமைப்பு!

படம்
  இடதுபுறத்தில் முதல் நபர் திரு.கணியம் சீனிவாசன் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் விக்கிமீடியா பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, அண்மையில் ஹேக்கத்தான் உதவித்தொகைக்கு இந்தியாவில் இரு அமைப்புகளை தேர்ந்தெடுத்துள்ளது. இதில் ஒரு அமைப்பு விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. ஹேக்கத்தானில் விக்கிப்பீடியா . ஆர்க் தளத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்கிறார்கள்.  பொதுவாக ஐடி நிறுவனங்கள் என்றால் ஹைதராபாத் அல்லது பெங்களூருவைச் சொல்லுவார்கள். ஆனால், விழுப்புரம் அங்கே எப்படி வந்தது என பலரும் நினைப்பார்கள்.  விழுப்புரம் ஜிஎன்யூ லினக்ஸ் பயனர்கள் குழுவின் பெயர், விகிளக். இவர்களைத்தான் விக்கி மீடியா தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள் கணினி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் இலவச மென்பொருட்களை பயன்படுத்த கிராம மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதில் கோடிங்குகளை எழுதவும் பயிற்றுவிக்கின்றனர்.  இந்த பயிற்சிக்கு வருபவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்தான். பயிற்சி மாணவர் ஒருவரின் தாய், வீட்டு வேலை செய்து வருகிறார்.  இன்னொருவர் தினக்கூலி செய்பவர்களின் பிள்ளை என இதுபோல மாணவர்களுக்கு

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்!

படம்
  பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளை வீணாக்கியிருக்கிறது. இதனை எப்படி புரிந்துகொள்ளலாம். தொழில், கல்வி, நம் வாழ்க்கை, இதுவரை போட்டிருந்து திட்டங்கள் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதிகம் அடி வாங்கியது, சமூக வாழ்க்கையை தொலைத்த குழந்தைகள்தான். இதில் வேறு மூடநம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் நோயைப் பற்றிய அச்சத்தை அறிவியல் மூலமாக தீர்க்காமல், கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள் என கூறிக்கொண்டிருந்தன.  இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். பள்ளி சென்றுகொண்டிருந்த, பள்ளி செல்லவேண்டிய பிள்ளைகள் அனைத்துமே இன்று சமூக வாழ்வை தொலைத்து தனியாக உள்ளனர்.  மும்பையில் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவி அவள். மாஸ்க்கை கழற்றச்சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் கழற்றவில்லை. ஆசிரியருக்கோ, நோய் பயமில்லை என்று சொல்லி தொண்டை தண்ணீர் வற்றியதுதான் மிச்சம். அவர் அந்த மாணவியின் முகத்தை பார்த்தே 600 நாட்களுக்கு மேலாகிறது. அதே மாணவி நடன வகுப்பில்  கலந்துகொண்டாள். அப்போது சக மாணவனின் கையை பிடித்ததுதான் தாமதம். உடனே போய் சானிடைசர் போட்டு கையை சுத்தப்படுத்தினாள். சுகாதாரம் பற்றிய பதற்றம்

ஏடிஹெச்டியைக் கண்டுபிடித்த நான்காம் வகுப்பு ஆசிரியர்!

படம்
  கனடாவின் ஒன்டாரியோவில் உள்ளது பிராம்டன் நகரம். அங்குள்ள பள்ளி ஒன்றில் சத்னம் சிங் படித்து வந்தான். அவன் எப்போதும் போல வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தாலும் மதிப்பெண்கள் என்னமோ சி, டி என அடுத்தடுத்து தரத்தின் அளவுகோல் குறைந்துகொண்டே வந்தது. அதையெல்லாம் விட முக்கியமான பிரச்னை பள்ளியிலிருந்து வந்துகொண்டே இருக்கும் புகார்களின் அழைப்புதான். பாடங்களை கவனிக்க மாட்டேன்கிறான், சண்டை போடுகிறான், பேச மாட்டேன்கிறான் என வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் மறக்காமல் சத்னம் சிங்கை குறைசொல்லாமல் வகுப்பை நிறைவு செய்யவில்லை.  இதில் ஒரே ஆசிரியர் மட்டும் சத்னம் சிங்கின் பிரச்னையை வேறுமாதிரி பார்த்தார். அவர்தான், அவனுக்கு இருந்த சிக்கலை கண்டுபிடித்து பெற்றோருக்கு சொன்னார். ஆம். சத்னத்திற்கு ஏடிஹெச்டி குறைபாடு இருந்தது. இந்த குறைபாடு உள்ளவர்களை ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார வைக்க முடியாது. உட்கார வைத்தாலும் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது. அப்படி கட்டுப்படுத்தினாலும் அது போரின் தொடக்கமாகவே இருக்கும். பரபரவென ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். மேலும் அடிக்கடி மூர்க்கமாக சண்டையும் போடுவார்கள். இதெல்லா

மாதவிடாய் பற்றிய தயக்கத்தை களைய உதவிய அதிதி குப்தா! - மென்ஸ்ட்ரூபீடியா

படம்
  அதிதி குப்தா, மென்ஸ்ட்ரூபீடியா அதிதி குப்தா எழுத்தாளர், துணை நிறுவனர் - மென்ஸ்ட்ரூபீடியா பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாட்கள் அவதி தான் அதிதி குப்தாவை நிறுவனம் தொடங்க வைத்திருக்கிறது. மாத விலக்கு, மாத விடாய் பற்றிய பல்வேறு புனைகதைகளை தவறு என்று தனது மென்ஸ்ட்ரூபீடியா நிறுவனம் மூலம் நிரூபணம் செய்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் மாதவிடாய் பற்றிய உணமைகளை எளிமையான விதத்தில் விளக்கி வருகிறார்.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா எனும் இடத்தில் பிறந்தவர் அதிதி. இவர் பிறந்த இடத்தில் மாதவிடாய் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. அதிதிக்கு முதன்முறையாக 12 வயதில் மாதவிடாய் வந்தபோது அவருக்கு ஏதும் புரியவில்லை. அடிவயிற்றில் பெருகிய ரத்தத்தைப் பார்த்தவர், உடனே அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அவர் அம்மா உடனே அதிதியை குளிக்கச்சொல்லியிருக்கிறார். இப்படி ரத்தப்போக்கு வருவதும் நிற்பதுமாக இரண்டரை நாட்கள் சென்றிருக்கிறது.  மாதவிடாய் வந்த தினம் தொட்டு அதிதி தனி அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். அது அசுத்தமான இடம். கூடவே ரத்தப்போக்கை துடைக்க கொடுத்த துணியும் சுத்தமாக இல்லை
படம்
  கேலி, கிண்டல்களைத் தடுக்கும் மாணவி! ஹரியாணாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, அனுஷ்கா ஜோலி. இவர் பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் கேலி, கிண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.   ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், தனது பள்ளி மாணவியை,   சக வகுப்பு மாணவர்கள் பள்ளி நிகழ்ச்சியில் கிண்டல் செய்ததை அனுஷ்காவால் மறக்கவே முடியாது. இதனால்  பாதிக்கப்படும் மாணவர்களைக் காப்பாற்றவே ஆன்டி புல்லியிங் ஸ்குவாட் ( 'Anti Bullying Squad ABS)என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய டிஜிட்டல்  தீர்வு மூலம் 100 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த வலைத்தளத்திற்கான  ஆதரவையும் உதவியையும் பல்வேறு பல்கலைக்கழகங்கள்,பள்ளிகள்,  தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.  அனுஷ்கா, எட்டாவது படிக்கும்போதே கவச் (Kavach) எனும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்கினார். இதில், மாணவர், மாணவிக்கு நடந்த கேலி, கிண்டல் புகாரை பெயர் தெரிவிக்காமல் புகாராக பதிவு செய்யலாம். இதன் மூலம் பள்ளியில் உள்ள ஆலோசகர்கள் உடனே பாதிக்கப்பட்ட மாணவர்களைக் காப்பாற

31 வயதில் 120 பேர்கொண்ட குழுவுக்குத் தலைவர்! - ஜோஹோ பள்ளியின் சாதனைக் கதை

படம்
  ஸ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ பொதுவாக தமிழ்நாட்டில் சாதித்து பெரிய இடங்களுக்கு நகர்பவர்கள், எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். விவசாயிகள், வீட்டுவேலை செய்பவர்களாகவே இருப்பார்கள். இந்தியளவில் எடுத்துக்கொண்டால், பஞ்சாப்பின் புதிய முதல்வரின் அம்மா, பள்ளிக்கூடத்தில் கூட்டிப்பெருக்கும் வேலை செய்தவர், செய்து வருபவர்தான்.  செய்யும் வேலையை புனிதப்படுத்துவதற்காக சொல்லவில்லை. சாதிரீதியாக, திறன் ரீதியாக நிறைய வேறுபாடுகள் இங்குள்ள மனிதர்களுக்கு இடையே உள்ளது என்பதை கூறவே முந்தைய பாரா.  பார்த்திபனுக்கு வயது 31. ஜோகோ நிறுவனத்தின் மேனேஜ் எஞ்சின் என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். புரோடக்ட் மேனேஜராகப் பணி. இந்தப் பணியில்தான் 120 பேரைக் கட்டி மேய்க்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபனுக்கு இருந்த கனவு, கட்டுமானக் கலைஞர் ஆவதுதான். ஆனால் அவரது குடும்பம் இருந்த பொருளாதார நிலையில் அது சாத்தியமில்லை என விரைவில் தெரிந்துகொண்டார். நான்கு பேர் கொண்ட குடும்பம், மாதம் அப்பா சம்பாதிக்கும் 3 ஆயிரத்தில்தான் நடந்து வந்தது. ஆங்கிலப்பள்ளியில் படித்தவர்கள், வருமானப் பற்றாக்குறையால் அங்கிருந்து வெள

பள்ளிக்கு செய்யும் நன்றிக்கடன்! - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

படம்
கடிதங்கள்  வினோத் பாலுச்சாமி அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மழை வருவது போலவே சூழல் உள்ளது. நாள் தங்கியுள்ள அறை முழுவதும் மழை ஈரத்தால் நனைந்துவிட்டது. இதனால், அறையின் சுவர்களில் பூஞ்சைகள் கரும்பச்சை நிற பூக்களாய் பூக்கத் தொடங்கிவிட்டது. அருகர்களின் பாதை - ஜெயமோகன் இன்றுதான் படித்து முடித்தேன். சமணர்களின் வாழ்க்கை , வரலாறு, உணவு, தர்மச்சாலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஆரியர், பாஜக, தேசியவாதம் தவிர்த்த பிற விஷயங்கள் நன்றாக உள்ளன.  எங்கள் இதழின் தயாரிப்பு இன்னும் தொடங்கவில்லை. பல்வேறு சூழல்களால் வேலை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. வேலையை செய்வதற்குள் எனக்கு இன்னொரு வயது கூடிவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் தங்களுக்கு அனுப்பி வைத்த ஜென் கதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். நான் பரிசாக முதல்முறையாக உங்களுக்குத்தான்  நூலை அனுப்பி வைத்திருக்கிறேன். இப்படி அனுப்புவது பற்றி முதலில் நம்பிக்கை வரவேயில்லை.  குளங்களை தூர்வாரிய செல்ல பெருமாள் பற்றிய செய்தியை ஆனந்த விகடனில் படித்தேன். நல்லவேளை, அவர் தனது பணிக்கு ஊக்கம் தந்தது குக்கூ அமைப்புத

பெருந்தொற்று காலத்தில் க்யூஆர் கோட் மூலம் கல்வி கற்பித்த ஆசிரியர்!

படம்
  புதிய கற்பித்தல் முயற்சி! மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சோவநகர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஹரிஸ்வாமி தாஸ்.  இவர், பள்ளியில் படிக்கும் 2,900 மாணவர்களையும், அவர்களது குடும்ப நிலையையும் அறிந்தவர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டபோது மாணவர்களுக்கு எப்படி கற்றுக்கொடுப்பது என யோசித்தார். சோவநகரில் ஏற்பட்ட மண் அரிப்பு, குடியிருப்புகள் மாற்றம் ஆகிய பிரச்னைகளையும் சமாளித்து மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.  பள்ளிகள் மூடப்பட்டு பொதுமுடக்க காலகட்டம் நடைமுறையில் இருந்தது. தனது மாணவர்கள் சிலரின் வீடுகளுக்கு போனில் அழைத்தார் ஹரிஸ்வாமி தாஸ். ஏழை மாணவர்களில் 30 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தமுடியாத சூழல் இருந்தது. படிப்பதற்கான நூல்களும் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். “என்சிஇஆர்டி நூல்களில் க்யூஆர் கோட் இருந்தது. ஆனால் மேற்குவங்க  மாநில அரசு பாடநூல்களில் இந்த வசதி கிடையாது. எனவே, அரசு வலைத்தளங்களிலிருந்து பாட நூல்களை தரவிறக்கி க்யூஆர் கோட் மூலம் அதனை அணுகும்படி வசதிகளை செய்தோம் ”  என்றார்.   தாஸின் மாணவர்கள் வீடுகளில், ஸ்மார்ட்போன்களை அவர்களது தந்தை அல்லது சகோதரர்கள்

தனது கிராம மக்களுக்கு அறிவுபுகட்ட நூலகத்தை அமைத்த பேராசிரியர்!

படம்
  pixabay கிராம மக்களுக்காக நூலகம் அமைத்த பேராசிரியர்!  உத்தரப் பிரதேசத்தின் கல்யாண்பூரில் கிராம மேம்பாட்டு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் அருண்குமார் உருவாக்கியுள்ளார். அருணின் பூர்விக வீடு, இங்குதான் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 750 நூல்களைக் கொண்ட நூலகத்தை கிராமத்தினருக்கு  அமைத்துக்கொடுத்துள்ளார். அருண், டில்லி பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கு முதல்முறையாக நூலகத்திற்கு சென்றார்.  அங்கு அடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்களை பார்த்து வியந்திருக்கிறார். அதற்கு முன்பு வரை அவர் நூலகத்திற்கு சென்றதேயில்லை. அவரது கிராமத்திலும் நூலகம் அமைந்திருக்கவில்லை என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.  நூலகத்தைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கும் அவருக்கும் நிறைய இடைவெளி இருப்பதை உணர்ந்தார். “நூலக வாசிப்பு, மாணவர்களுக்கு பாடநூல்களைத் தாண்டி இலக்கிய அனுபவத்தையும் தரும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் ” என்றார் பேராசிரியர் அருண்குமார்.  கல்யாண்பூரில் தொடங்கிய கிராம நூலகத்திற்கு முன்னோடி,  பன்சா கிராம நூலகம் ஆகும்.   இந்த நூல

முகத்தை, தலையை மறைப்பதில் இத்தனை வகைகளா?

படம்
  கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளை மதவாத கும்பல்கள் ஒன்றிய அரசின் ஆசியுடன் செய்து வருகின்றன. இதுநாள் வரை கல்விநிலையங்களில் சிறுபான்மையினர் எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இப்போது, உடை ஒழுக்கம் என்பதை பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். பெண்களின் கல்வி கெட்டாலும் பரவாயில்லை ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என லோட்டஸ் குழுவினர் உறுதியாக நம்பி வன்முறை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.  இப்போது நாம் பெண்கள் அணியும் பல்வேறு உடல், முகத்தை மறைக்கும் வகைகளைப் பார்ப்போம்.  ஹிஜாப் நீளமான துணியை எடுத்து கழுத்து, தலையைச் சுற்றியிருப்பார்கள். இது இந்து மதத்தில் பெண்கள் சேலை தலைப்பை எடுத்து தலைமீது போட்டுக்கொள்வார்களே அதுபோன்றதுதான். இதனை இந்து மதத்தில் கூன்காட் என்று அழைக்கிறார்கள்.  நிகாப் இதில் முகத்தில் கண்கள் மட்டும்தான் அடையாளம் தெரியும். பிற பகுதிகளை கருப்பு உடையால் மறைத்து இருப்பார்கள்.  பர்கா இது முகம், உடல் என முழுக்க உடையால் மூடியிருப்பார்கள். கண்கள் உள்ள பகுதியில் மட்டும் வெளியே பார்க்கும்படி உடையில் இழைகளில் நெகிழ்வுத்தன

ஓராண்டு இடைவெளியில் சமூகத்தை கற்ற சிறுவனின் கல்வி! - தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ்

படம்
  ராகுல் அல்வரிஸ் - தெருக்களே பள்ளிக்கூடம் தெருக்களே பள்ளிக்கூடம் ராகுல் அல்வரிஸ் தமிழில் - சுஷில்குமார்  தன்னறம் நூல்வெளி ரூ.200 பக்கங்கள் 203 பொதுவான கல்விமுறையில் நாம் படித்து நிறுவனத்தில் வேலைக்கு செல்லலாம். ஆனால் இதில் நாம் கற்பவை பெரும்பாலும் உதவாது. அவை கல்வி சான்றிதழில் இருக்கும். நேரடியாக வாழ்க்கையில் அவை பெரிய பங்காற்றாது. இப்போது கல்லூரி படிப்பவர்கள் பெரும்பாலானோர்க்கு அவை கல்யாணப் பத்திரிக்கையில் குறிப்பிட உதவுகிறது. பெருமைக்கு மட்டுமே.  இதைத்தாண்டி நடைமுறை வாழ்க்கையைக் கற்க நாம் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரி என மூடிய வகுப்புகளைத் தாண்டி சாளரம் திறந்தால்தான் சூரிய ஒளி, காற்று என வெளிப்புற சூழல்களை உணரமுடியும்.  கோவாவைச் சேர்ந்த ராகுலும் அப்படித்தான் தனது படிப்பை அமைத்துக்கொண்டார். ஜூன் 1995 முதல் ஜூன் 1996 என பள்ளிப்படிப்பில் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த இடைவெளியில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென என்பதை தெருக்களே பள்ளிக்கூடம் நூல் விவரிக்கிறது.  ராகுல் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது உறவினர்கள், நண்பர்கள் போல கல்லூரியில் சேரவில்லை. அதில்

அரசுத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்ற மாற்றுப்பாலினத்தவர்!

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை அறிவு இருந்தாலும் கூட அவர் என்ன பாலினம், என்ன சாதி என்பதைப் பொறுத்தே அவர் வாழ்க்கை முடிவு செய்யப்படுகிறது. இந்த தடைகளை தாண்டி சாதிக்க உங்களுக்கு முதுகெலும்பு எஃகால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் கேலி, கிண்டல், வசைகளை கடந்து வெல்ல முடியும். குறைந்தபட்சம் தற்கொலை எண்ணங்களை தவிர்த்துவிட்டு வாழ முடியும். சமூக அழுத்தம் அந்தளவு மோசமாக மாறியிருக்கிறது. அதிலும் மாற்றுப்பாலினத்தவர் என்றால் நிலைமையை சொல்லவே முடியாது. அந்தளவு சிக்கலாக இருக்கும். அமிர்தாவுக்கு வயது 38. தற்போது திருவண்ணாமலையில் தட்டச்சராக இருக்கிறார். தனியார் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் வேலை பார்த்தவர் எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். அரசு தேர்வெழுதி இப்போது தட்டச்சராக தேர்வு பெற்று வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பம் தினக்கூலிதான். குடும்பத்தில் மொத்தம் ஏழுபேர். அத்தனை பேரும் வறுமையால் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டார்கள். இதில் அமிர்தா மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பு படித்தவர். இதற்கும் அவர் வேலை செய்துதான் கல்வி கட்டணங்களை கட்டியிருக்கிறார். முக்கியமான

உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஒருங்கே தரும் நூல்! - சிறகுக்குள் வானம் - ஆர். பாலகிருஷ்ணன்

படம்
சிறகுக்குள் வானம் ஆர். பாலகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம். இந்த நூல் முழுக்க பள்ளி செல்லும் மாணவர்களுக்கானது என்று தனது இரண்டாம் சுற்று நூலில் கூறியுள்ளார் நூல் ஆசிரியரான ஆர். பாலகிருஷ்ணன். இவர் ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தேர்தல் ஆணைய பணிகளில் இவர் ஆற்றிய சாதனைகள் அதிகம். சிறகுக்குள் வானம் என்பது, முழுக்க ஆர். பாலகிருஷ்ணன் எப்படி அரசு அதிகாரி ஆனார். அவருக்கு உதவிய மனிதர்கள், ஏற்பட்ட சோதனைகள், அதனை அவர் எப்படி வென்றார் என்ற கதைகளை ஊக்கத்துடன் நமக்கு சொல்கிறது. கூடவே அவர் எழுதிய கவிதைகளும் அனைத்து பக்கங்களிலும் நமக்கு உற்சாகம் தருகின்றன. நூலில் தனக்கு பள்ளி கல்லூரிகளில் தமிழ் கற்பித்த ஆசிரியர்களை பின்னாளிலும் மறக்காமல் மரியாதை செய்வதை வாசிக்கும்போது ஆசிரியரின் எழுத்து மீது மரியாதை கூடுகிறது. பணியில் செய்யும் விஷயங்களைப் பொறுத்தவரை எப்படி வேலை செய்யவேண்டும் என்பதை தனிநபர்தான் தீர்மானிக்க வேண்டும். நூல் ஆசிரியர் கூடுதலாக நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். தி எக்ஸ்ட்ரா மைல் என்பது முக்கியமான அத்தியாயம். ஒடிஷ

வகுப்பிலிருந்து ஆதிதிராவிட, பட்டியலின மாணவர்களை வெளியேற்றிய பொதுமுடக்க காலம்!

படம்
  Photo TNIE லாக்டு அவுட் எமர்ஜென்சி ரிப்போர்ட் ஆன் ஸ்கூல் எஜூகேஷன் என்ற தலைப்பில் 1362 மாணவர்களிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இந்த மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பவர்கள்.  நகர்ப்புறங்களில்  பத்து முதல் பதினான்கு வயது வரையிலான மாணவர்களின் கல்வி சதவீதம் 74 ஆக உள்ளது. கிராமப்புறங்களில்  இதன் அளவு 66 சதவீதமாக உள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களில் 61 சதவீதமாக உள்ளது.  கிராமப்புறங்களில் ஆன்லைன் வழியாக கல்வி கற்பவர்களின் அளவு 15 சதவீதமாக உள்ளது. இதில் தலித் மற்றும் பட்டியலின மாணவர்களின் சதவீதம் 4 ஆக உள்ளது.  43 சதவீத தலித், பட்டியலின மாணவர்கள் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியை ஒராண்டாக தொடரவேயில்லை.  45 சதவீத தலித், பட்டியலின மாணவர்களுக்கு பாடங்களில் சில எழுத்துக்களை மட்டுமே வாசிக்க முடிந்தது அதிர்ச்சிகரமான செய்தி.  இவர்களில் 55 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் கிடையாது.  ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து, விடுதிகளில் தங்கி வந்த மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் வீடுகளுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்டனர்.  ஆ

குழந்தைகளுக்கு உணவளிக்கும் மதுரை பள்ளிக்கூட ஆசிரியர்கள்!

படம்
  மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்கள்! ஆசிரியர்களின் வேலை என்ன? மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் எடுப்பது,அவர்களை  கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடையச்செய்வது. வேறு என்ன இருக்கிறது என பலரும் நினைப்பார்கள். ஆனால் பெருந்தொற்று அனைத்தையும் மாற்றிவிட்டது. மதிய உணவுக்காகவே அரசுப்பள்ளியில் படிக்க சேர்ந்த குழந்தைகள் பலரும் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். எத்தனை பேர் திரும்ப பள்ளிக்கு வருவார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.  இந்நிலையில் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அவர்களை புதுமையான வழிகளில் கல்வியை கற்றுக்கொடுக்கவும் முயன்று வருகிறது. மார்ச் 2020 ஆம் ஆண்டு பெருந்தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு ஜூலை முதல் மாணவர்களுக்கு கல்வியை மரத்தடிக்கு மாற்றிக்கொண்டனர். இதனால் பிற பள்ளி மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து கற்று வருகின்றனர். கூடவே ஆசிரியர்கள் ஏழை மாணவர்களுக்கு தங்களது ஊதியத்தில் இருந்து 3000 ரூபாயை போட்டு சாப்பாடும் தயாரித்து வழங்கினர். இதைப் பார்த்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இன்று அப்பொற

பெருந்தொற்று விபரீதம்-அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

படம்
            வறுமையால் நடைபெறும் குழந்தை திருமணங்கள் ! கொரோனா காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன . இதனால் நகர்ப்புறம் கிராம ம் என வேறுபாடின்றி வறுமை தாண்டவமாடுகிறது . நகரங்களில் வறுமை காரணமாக நடைபெறும் குழந்தை திருமணங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் 45 சதவீதம் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன . 2,209 குழந்தை திருமணங்கள் 2019 இல் நடந்துள்ளன . அடுத்த ஆண்டில் 3208 திருமணங்கள் நடைபெற்றுள்ளன . எதற்காக குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன ? பெருந்தொற்றால் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது . வறுமை மற்றும் வேலை இழப்பால் குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள் . பள்ளி மூடப்பட்டிருப்பது மற்றொரு முக்கிய காரணம் . பெருந்தொற்றில் திருமணம் செய்வது சிக்கனமானது என பலரும் நினைக்கிறார்கள் . பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என பெற்றோர் நினைக்கிறார்கள் . எப்படி இவர்களை காப்பாற்றுவது ? பள்ளிகளை உடனே திறப்பது முக்கியமானது . பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களை அறிவிப்பது . வார்டு அளவில் கிராம ம் ந

குழந்தை வளர்ப்பில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் தந்தை! - டாடிஸ் டே கேர் - எடி மர்பி

படம்
                டாடி டே கேர்    Directed by Steve Carr Music by David Newman Cinematography Steven Poster எடிமர்பி நடித்த குழந்தைகளுக்கான படம் . எடி மர்பி அவரது குண்டு நண்பர் பில்லும் விளம்பர நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் . குழந்தைகளுக்கான உணவுகளை அவர்களை கவரும் விதமாக விளம்பரப்படுத்தவேண்டும் . ஆனால் இதில் அவர்களால் வெற்றி பெறமுடியாமல் சொதப்ப , வேலை பறிபோகிறது . வேறு வேலை தேட முயல்கிறார் . அதுவரைக்கும் வீட்டு செலவுகளை எப்படி சமாளிப்பது ? வழக்குரைஞராக இருக்கும் மனைவிதான் இப்போதைக்கு வருமான ஆதாரம் . அதுவரை சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து செலவு செய்து வேலை தேடுவதோடு , குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது . இதே நிலைதான் அவரது நண்பராக பில்லுக்கும் கூட ஏற்படுகிறது . இந்த நேரத்தில் குழந்தைகளை பிளே ஸ்கூலில் சேர்க்க அலைந்து துக்கப்பட்ட நினைவும் அதற்கான கட்டணமும் எடி மர்பிக்கு நினைவுக்கு வருகிறது . அவர் தனது நண்பர் பில்லுடன் ஆலோசித்து நாம் டே கேர் ஒன்றைத் தொடங்குவோம் . தற்காலிகமாகத்தான் . இதை வைத்து குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லுகிறார் . இதன் வ