இடுகைகள்

உளவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலப்போக்கில் காலாவதியாகும் முக்கிய சம்பவங்களின் நினைவுகள்!

படம்
  பெற்றோர் அடித்து உதைப்பது, சகோதரன் குளிக்கும்போது காலை நீருக்குள் இழுத்து மூச்சு திணறச் செய்வது, ஆருயிர் நண்பன் என நினைப்பவன் காசு கையில் வந்ததும், பஸ் செலவுக்கு பணம் கொடுப்பது, நினைத்து பார்க்காத நேரத்தில் கிடைத்த காதலியின் முத்தம் என நிறைய விஷயங்கள் ஒருவரின் மனதில் இருக்கலாம். அதாவது தினசரி வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் மூளையில் சேகரமாகாது. அப்படி குறிப்பாக சேகரமாகும் விஷயங்களும் மெல்ல அழிந்துகொண்டே வரும். அப்படி அழிக்கப்பட்டால்தான் புதிய விஷயங்களை சேமிக்க முடியும்.  முக்கியம் என மனதில் நினைத்த விஷயங்கள் திடீரென அழிந்துபோகும்போது, நினைவுக்கு வராமல் போகும்போது சற்று வருத்தமாகவே இருக்கும். நினைவுகள் அழிவது மட்டும் பிரச்னை அல்ல. அவற்றை நீங்கள் சேமித்த வைக்கும் இடங்கள் கூட பிரச்னையானவைதான். இதை உளவியலாளர் டேனியல் ஸ்ஹாக்டர் ஏழு பாவங்கள் என்று கூறுகிறார். நினைவுகளின் தேய்மானம், நினைவுகூர தவறுவது, தடுப்பது, தவறான அங்கீகாரம், தேர்வு, பாகுபாடு, உறுதி ஆகியவற்றைக் கூறலாம்.  உங்கள் வாழ்க்கையின் பின்னே நடந்த விஷயங்களை திரும்ப நினைவுபடுத்துவது காலப்போக்கில், சற்று கடினமாகவே மாறும். பு

தன்னை, உலகத்தை மறந்து செயலைசெய்பவன் அனுபவிக்கும் பேரின்பம்!

படம்
  ஏ ஆர் இசையமைப்பதில் தன்னை மறப்பார். மணிரத்னம், கதைகளை படமாக்குவதில் தன்னை மறந்து வேலை செய்வார். இவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே நமக்கு பிடித்த ஏதோ ஒரு செயலில் உலகை மறந்து நம்மை மறந்து ஈடுபட்டிருப்போம்.  அப்படியான மனநிலையை ஃப்ளோ என உளவியலில் குறிப்பிடுகிறார்கள். இதை லயம், சீரான ஓட்டம் என புரிந்துகொள்ளலாம். இதை மிகாலாய் என்ற உளவியலாளர் உருவாக்கினார். தொண்ணூறுகளில் தனது கருத்தை தொகுத்து ஃப்ளோ - தி சைக்காலஜி ஆஃப் ஆப்டிமல் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நூலை எழுதினார்.  உளவியலாளர் மிகலாய், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், பல்வேறு வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை நேர்காணல் செய்தார். இதில் அவர்களது தொழில், பொழுதுபோக்கு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு அனுபவங்களை அறிந்தார். இதன்படி, ஒருவர் தொழில் அல்லது ஓய்வு நேர பொழுதுபோக்கிலோ தன்னை மறந்து ஈடுபாடு கொள்வது தெரிந்தது. அதாவது, தன்னை முழுக்க செய்யும் செயலில் கரைத்து திருப்தி காண்கிறார். பொதுவாக விளையாட்டில் வெல்வது மட்டுமல்ல பங்கேற்பதற்கும் கூட ஒருமித்த கவனம் தேவை. முழு கவனத்துடன் விளையாட்டை அனுபவித்து விளையாடுபவர்களுக்கு காலநேரமே தெரியாது. இதை உளவியலா

சமூகத்தோடு இணைந்து மக்களோடு கூடி இருந்தால் மகிழ்ச்சி பெருகும்!

படம்
  மூன்று வகையான மகிழ்ச்சியான வாழ்க்கை முறைகள் உள்ளன.  சிறந்த வாழ்கை இதில் தனிப்பட்ட வாழ்க்கை வளர்ச்சி இருக்கும். குறிப்பிட்ட திட்டமிட்ட போக்கில் வாழ்க்கை செல்லும்.  அர்த்தமுள்ள வாழ்க்கை  உங்களின் வாழ்க்கை, வளர்ச்சியை விட சேவைகளை செய்வதே முக்கியமானதாக இருக்கும்.  மகிழ்ச்சியான வாழ்க்கை  சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து அதன் வழியாக மகிழ்ச்சியை அடைவது... இதில் முதல் இரண்டு விஷயங்கள் இருந்தாலே ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் ஒருவர் சமூக உறவுகளை உருவாக்கிக்கொள்வது முக்கியம். இதில் ஒருவர் மகிழ்ச்சியை அதிகளவு பெறுவதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், இந்த அம்சம் இல்லாமலும் மகி்ழ்ச்சி சாத்தியம் இல்லை.  இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் காரணமாக ஒருவருக்கு ஏற்படும துயரமான மனநிலை பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. உளவியலாளர் மார்ட்டின் செலிக்மன் என்பவர், 'லேர்ன்ட் ஹெல்ப்லெஸ்னெஸ்' எனும் கோட்பாட்டை உருவாக்கினார். இதில், மன அழுத்தம் மூலம் ஒருவருக்கு ஏறபடும் எதிர்மறை நிலைகளை அடையாளம் கண்டார்.  ஒருவரின் வாழ்வில் உள்ள பலத்தை அடையாளம் காண்பது முக்கியம். அதைவிட ப

நேரடி சாட்சியத்தில் ஏற்படும் பிழைகளை கண்டறிந்த உளவியலாளர்!

படம்
  ஒரு மோசமான விபத்து நடைபெற்றிருக்கும். அதை பல்லாண்டுகளுக்கு பிறகும் சம்பவ இடத்தில் இருப்பவர் நினைவுகூரலாம்.அதற்கு என்ன காரணமாக இருக்கும்? அந்த விபத்தில் அவருக்கு சம்பந்தமான யாரோ ஒருவர் மாட்டிக்கொண்டு இறந்திருப்பார். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அதி்ர்ச்சியை விபத்து சம்பவம் உருவாக்கியிருக்கும். காலப்போக்கில், இதை ஒருவர்  எத்தனை முறை மீள கூறினாலும் அதில் தகவல்கள் மாறிப்போயிருக்க வாய்ப்பகள் உள்ளது. குறிப்பாக எதனால் தூண்டப்பட்டு விபத்து சம்பவத்தை ஒருவர் நினைவுகூருகிறார் என்பது முக்கியம்.  கார்கள் இரண்டு சாலையில் எதிரெதிரே வருகின்றன. திடீரென மோதிக்கொள்கின்றன. இதைப் பார்த்தவர்களிடம் கார்களின் வேகம், உடைந்த பொருட்கள், அங்கு சுற்றியிருந்த பொருட்கள் பற்றி கேள்வி கேட்டால் பலரும் பலவிதமாக பதில்களை கூறுவார்கள். இதிலுள்ள உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம். இதைத்தான் உளவியலாளர் ஆய்வு செய்து கண்டுபிடித்து கூறினார். இதற்கான அவசியம் என்ன வந்தது? நீதியைக் காப்பாற்றத்தான்.  அப்போது நீதிமன்றங்களில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகம் வந்தன. இதில் நேரடி சாட்சிகள் முக்கியப்

24/7 அந்தரங்க வாழ்க்கை விற்பனைக்கு! - டிக்டாக் லைவில் இணையும் மக்கள்!

படம்
  அடுத்தவரின் வாழ்க்கையை எட்டிப்பார்ப்பது ஒருவித கிளுகிளுப்பான உணர்வைத் தருகிறது. அதனால்தான் மக்கள் பிக் பிரதர், பிக் பாஸ், ஆகிய நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு அதில் உள்ள பங்கேற்பாளர்களின் குணங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதுபற்றிய காரசார விவாதங்கள் நடைபெறுகின்றன. உண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சம்பளம் உண்டு. அங்கு உருவாகும் பிரச்னைகள் அனைத்துக்குமே எழுத்துப்பூர்வ திரைக்கதை உண்டு. இதெல்லாம் அறிந்தாலுமே மக்கள் உணர்வுபூர்வமான சண்டை, கைகலப்புகளுக்கும் தங்களை மீறி ஒன்றிவிடுகிறார்கள்.  இது சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த வகையில் ஜெட்டிஜேம்ஸ், ஆட்டும்ரேயான் என்ற இளம் தம்பதிகள் தங்களின் மூன்று வார வாழ்க்கையை அப்படியே டிக்டாக் லைவ்வில் ஒளிபரப்பினார்கள். வீட்டில் மொத்தம் ஒன்பது கேமராக்கள். படுக்கை அறை, கழிவறையில் கூட கேமரா உண்டு. ஐந்தூறு மணி நேரங்கள் இணையத்தில் தங்களுடைய அந்தரங்க வாழ்க்கையை ஒளிபரப்பி காசு சம்பாதித்தனர்.  லைவ் என்பதால் இதில் நேரடியாக கமெண்டுகளை அடிக்கலாம். பெரும்பாலானவை எதிர்மறையாக இருக்கும். சில கட்டளையிடுவது போல இருக்

அவதாரம் 3 - மனமும் ஆய்வுகளும் நூல் அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கிறது!

படம்
  அவதாரம் தொடர்வரிசை நூலின் மூன்றாவது நூல். இந்தவகையில் தொடரின் இறுதி நூலும் இதுதான். வெகுநாட்களாக உளவியல் கொள்கைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்ற நூல்களில் எழுத முடிந்ததே ஒழிய அவற்றை முழுமையாக எழுத முடியவில்லை. அதற்கான நல்வாய்ப்பாக அவதாரம் நூல்கள் அமைந்தன. இதற்கென ஆங்கில நூல்களும், மாத இதழ்களும் கூட கிடைத்தன. அவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் வரிசைதான் அவதாரம்.  மூன்றாவது நூலில் உளவியலாளர்கள் பெரும்பாலானோரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இதில், யாரேனும் விலகியிருந்தால், அவர்களைப் பற்றி வலைப்பூவில் எழுத முயற்சி மேற்கொள்ளப்படும். உளவியல் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு அவதாரம் 3 நூல், ஆச்சரியம் தரும். இதில், அந்தளவு உளவியலாளர்கள். அவர்களின் கொள்கை, கோட்பாடுகள், வாழ்க்கை என பலவும் பேசப்படுகிறது. நூலைப் படியுங்கள். பிடித்திருந்தால் ஒத்த ஆர்வமுள்ளவர்களுக்குப் பகிருங்கள். நன்றி நூலை எழுதும்போது எனக்கு ஊக்கமூட்டுதலாக இருந்த ஒரே ஆன்மா நண்பர் மெய்யருள் அவர்கள். அவர்களுக்கு இந்தநூலை அர்ப்பணிக்கிறேன்.  Please click the link for read the book https://www.amazon.in/dp/B0CPKTBF2X

ஒருவரின் புத்திசாலித்தனம் மரபணு அல்லது கல்வி மூலம் தீர்மானிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய ஆய்வு!

படம்
  ஒருவர் பிறக்கும்போது மேதாவியாக இருக்கிறாரா, பிறந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு வஸ்தாது ஆகிறாரா என்ற பஞ்சாயத்து இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. 1900களில் மேதாவிகளாக இருந்த லியானார்டோ டாவின்சி, பீத்தோவன் பற்றி மக்கள் பல்வேறு கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். புத்திசாலித்தனம் ரத்தம் மூலம் உருவாகி வளருகிறதா, அல்லது பிறந்து சூழ்நிலையில் உள்ள அம்சங்கள் மூலம் கல்வியால் அறிவு பிரகாசிக்கிறதா என்று முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர். அரிஸ்டாட்டில், மேதாவித்தனமும்,கிறுக்குத்தனமும் ஒன்றுக்குள் ஒன்று என்று கருத்து கூறினா். இதெல்லாம் மரபணு சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று கலந்தவை என எழுதினார்.  ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர் ஹான்ஸ் ஐசென்ஸ்க், மேதாவித்தனம், கிறுக்குத்தனம் ஆகியவற்றை ஆராயாமல், முழு மனிதனை எந்த விஷயம் உருவாக்குகிறது என்பதில் மனதை செலுத்தினார். ஒருவரின் அறிவுத்திறன் 165 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் அவரை மேதாவி என அறிவியல் அழைக்கிறது. இதேபோல ஒருவர் செய்யும் செயல்களில் மனநல குறைபாடுகளின் அறிகுறிகள் தெரிந்தால் அவரை மன நோயாளி என முத்திரை குத்தி சிகிச்சை செய்கின்றனர். ஹான்ஸ் உருவாக்கிய பெ

உளவியலாளருக்கு வழங்கப்பட்ட விருதுக்கு வந்த சர்ச்சைகளும், விமர்சனங்களும்!

படம்
  ரேமண்ட் காட்டெல், இருபதாம் நூற்றாண்டில் மதிக்கப்படும் உளவியலாளர்களில் ஒருவர். இவர் மனிதர்களின் அறிவுத்திறன், ஊக்கம், ஆளுமை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர். மனிதர்களின் அறிவுத்திறன் பற்றிய ஆய்வு செய்யலாம் என்ற எண்ணம், சிறுவயதில் பிரிட்டிஷ் ஆய்வாளரான சார்லஸ் ஸ்பியர்மேன் மூலம் உருவானது.  இங்கிலாந்தில் ஸ்டாஃப்போர்ட்ஷையர் என்ற நகரில் பிறந்தார். வேதியியலில் பட்டம் பெற்றவர், பிறகே உளவியலுக்கு மாறி அதில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டனில் உள்ள கல்வி நிலையங்களில் கல்வி கற்பித்து வந்தார். அங்கேயே லெய்செஸ்டர் என்ற குழந்தைகளுக்கான கிளினிக் ஒன்றை நடத்தினார். பிறகு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கேயே தங்கி 1973ஆம் ஆண்டு வரை கற்பித்தலை தொடர்ந்தார். மூன்று முறை திருமணம் செய்தவர், ஹவாய் பல்கலைக்கழக வேலைக்கு மாறினார். 1997ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல் சங்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதளித்து பெருமைப்படுத்தியது. ஆனால் கேட்டல் மீது விருதுக்கு தகுதியானவரா என விவாதம், விமர்சனங்கள், வசைகள் பெருகின. தன்னுடைய ஆய்வுகளுக்கு ஆதரவாக பேசியவர், வழங்கிய விருதை ஏற்க மறுத்துவிட்டார். விமர்சனங்கள் ஏற்படுத்திய ம

ஒவ்வொரு மனிதர்களுக்கும் உள்ள தனித்த குண இயல்புகள்!

படம்
  மக்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு முன்னகர்த்தி செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். உளவியலோ, அவர்களின் கடந்தகாலத்தில் மையம் கொண்டிருக்கிறது என்று கூறியவர் உளவியலாளர் கார்டன் ஆல்போர்ட். இவரை ஆளுமை உளவியலின் தந்தை என புகழ்ந்து பேசுகிறார்கள். மனிதர்களின் ஆளுமை பற்றிய ஆய்வுகளை செய்தவர்கள் என ஹிப்போகிரேடஸ், காலென் ஆகியோரைக் கூறலாம். அதற்குப் பிறகு இதுதொடர்பான அதிகளவு ஆய்வுகள் நடைபெறவில்லை. ஒருவரின் சுயமான அடையாளம், தன்முனைப்பு பற்றி மட்டுமே ஆய்வுகள் நடைபெற்றன.  இருபதாம் நூற்றாண்டில் உளவியல் பகுப்பாய்வு, குணவியல் இயல்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்து வந்தனர். இதில் மனிதர்களின் ஆளுமைகளைப் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேற்சொன்ன இரண்டு ஆய்வு விஷயங்களைப் பற்றியும் கார்டன் தனது விமர்சனங்களை முன் வைத்தார். உளவியல் பகுப்பாய்வு, கடந்தகாலத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. குணவியல் ஆய்வுகளில் மனிதர்களின் தனித்துவத்திற்கு எந்த மதிப்பும் அளிக்கப்படவில்லை என்றார். அவர் மனித ஆளுமைகளைப் பற்றி என்ன யோசித்தார் என்று பார்ப்போம்.  மனித ஆளுமை என்பது மூன்று வகையாக உருவாகிறது. அதில் ம

புத்திசாலித்தனத்தை அளவிடும் சோதனைகள்!

படம்
  சோறு தின்றுவிட்டு பற்களில் உள்ள துணுக்குகளை நீக்குவதற்கு பற்குச்சி உதவுகிறது. ஆனால் அதே குச்சியை வைத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கட்டுமானங்களை ஒருவர் உருவாக்கினால் அவரது புத்திசாலித்தனத்தை என்ன சொல்லுவீர்கள்? இ்ந்தியாவில் இதுபோன்ற விஷயங்களுக்கு பெரிய மதிப்பில்லை. மதம், சாதி, இனம் பார்த்து பாராட்டுவது இந்நாட்டின் தனிக்குணம். அயல்நாடுகளில் இதை ஏற்றுக்கொண்டு புதுமைத்திறன் என்கிறார்கள். அதை இனவெறி கடந்தும் பாராட்டுகிறார்கள். இப்படி மேதாவியாக யோசிப்பவரின் புத்திசாலித்திறனை அளக்க ஐக்யூ அளவீடுகள் கூட உண்டு. 1905ஆம் ஆண்டு வரை ஒருவரின் புத்திசாலித்தனத்தை அளவிட அளவீடு என்று ஒன்று உருவாக்கப்படவில்லை. பிரெஞ்சு உளவியலாளரான ஆல்பிரட் பைனட், தியோடர் சைமன் ஆகியோர் இணைந்து பைனட் சைமன் ஸ்கேல் என்ற அளவீட்டை உருவாக்குகிறார்கள். இதில் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அளவிடும் அம்சங்கள் உள்ளன. நினைவுத்திறன், கவனம், பிரச்னையை தீர்க்கும் திறன் ஆகியவை கணக்கிடப்பட்டன.  இதில் தோராயமான ஐகியூ அளவீடு 100. அதிமேதாவி என்றால் 145. மற்றபடி பிறர், எழுபது முதல் 130க்குள் வருவார்கள். உலகில் மேதாவி என்பவர்களின் அ

நினைவுகளின் சேமிப்பு காலத்தை தீர்மானிக்கும் உணர்ச்சிகள்!

படம்
  1950ஆம் ஆண்டு, மனிதர்களின் மூளை, அதில் பதிவாகும் நினைவு பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. மூளையில் குறைந்தகால நினைவுகள், அதிக காலம் உள்ள நினைவுகள் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 1970ஆம் ஆண்டு, கற்றல் கோட்பாடு, நினைவுகள் பற்றிய ஆய்வுகள் தொடங்கியது. சில நினைவுகளை நாம் எளிதாக நினைவுகூர்ந்து மீட்டெடுப்போம். அப்படி திரும்ப மீட்கும் நினைவுகள் பற்றித்தான் உளவியலாளர்கள் ஆர்வமாக தெரிந்துகொள்ள நினைத்தனர். உளவியலாளர் கார்டன் ஹெச் போவர், மூளையில் சேமித்து வைக்கும் நினைவுகளை உணர்ச்சிகள் பாதிப்பதைக் கண்டுபிடித்தார். அதாவது நினைவுகளை குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கும்போது அந்த நேரத்தில் உள்ள உணர்ச்சிகளும் அதோடு இணைந்துவிடுகின்றன. திரும்ப அதே நினைவில் நாம் இருக்கும்போது அந்த நினைவுகளை எளிதாக மீட்டெடுக்க முடிகிறது.  துயரமான நிலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் நடந்த துயரமான வலி, வேதனை பெருக்கும் நினைவுகளை துல்லியமாக அன்று நடந்தது போல கூற முடியும். ஆனால் அதே மனிதர்கள் மகிழ்ச்சியான நிலையில் இருக்கும்போது துயர நினைவுகளை முன்னர்போல தெளிவாக கூற முடியாது. இதை மூட் கான்க்ரன்ட் புரோசஸிங் என்று

முடிவெடுப்பதை எப்படி தீர்மானிக்கிறோம்?

படம்
  இஸ்ரேலிய அமெரிக்க உளவியலாளரான டேனியல் காஹ்னெமன், அமோஸ் வெர்ஸ்கி ஆகியோர் புதிய கொள்கைகளை உருவாக்கினர். இவை எதிர்பாராத நிலையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம் என்பதைப் பற்றியவை. ஜட்ஜ்மென்ட் அண்டர் அன்செர்டனிட்டி ஹியூரிஸ்டிக்ஸ் அண்ட் பயாசஸ் என்ற நூல் 1974ஆம் ஆண்டு வெளியானது. மக்கள், புள்ளியல், வாய்ப்பு அடிப்படையில் எந்த தகவலையும் யோசித்து அதன் அடிப்படையில் முடிவெடுப்பது இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் ஒருவரின் மனதில் உள்ள தகவல்கள் அடிப்படையில் அமைந்தால் அவை தவறாக மாற வாய்ப்புள்ளன. ஒரு விமானத்தில் பயணம் செய்கிறீர்கள். திடீரென அந்த விமானம்,எஞ்சின் பழுதாகி கடலில் வீழ்கிறது. விபத்துக்குள்ளாகிறது. இதை உண்மையில் யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆபத்தான நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விமானத்தில் உள்ள உதவிகளை நாடலாம். அப்படி உயிர் பிழைத்தால் பிறருக்கும் உதவ முடியும். இது எதிர்பார்க்காத நிகழ்ச்சி. இதில் எடுக்கும் முடிவு. அந்த நேரத்தில் அங்கே உள்ள சூழலைப் பொறுத்தது. இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு காரில் நண்பரோடு பயணிக்க நினைக்கிறீர்கள். அவர்

ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு கொள்கை மீது சந்தேகப்பட்ட உளவியலாளர்!

படம்
  உளவியல் உலகில் இரண்டு ஆளுமைகள் முக்கியமானவர்கள் ஒருவர் இவான் பாவ்லோவ், அடுத்து, சிக்மண்ட் ஃப்ராய்ட். இவர்களின் உளவியல் சிகிச்சை முறைகள் வேறுபட்டவை. சிக்மண்ட் ஃப்ராய்டின் முறைகள் நோயாளியை அடிப்படையாக கொண்டவை. இந்த முறையில் முறையாக ஆய்வுப்பூர்வ கருத்து சிந்தனை ஒன்றை உள்ளதாக கூறமுடியாது. நிரூபிக்கவும் முடியாது. இவான் பாவ்லோவின் முறைகளில் ஆய்வு நிரூபணம் உண்டு. தொடக்க கால உளவியலாளர்கள் கூறிய தத்துவம் சார்ந்த விளக்கங்களை பின்னாளில் வந்த உளவியலாளர்கள் ஏற்கவில்லை. காரணம், அவர்களுக்கு ஆய்வுப்பூர்வ காரணங்கள், விளக்கங்கள் தேவைப்பட்டன.  உளவியல் பல்வேறு வடிவங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றது. அதில்  உளப்பகுப்பாய்வு, தன்னுணர்வற்ற நிலையை ஆராய்வது என்பது பொதுவான அம்சமாக இடம்பெற்றது. இதை கேள்வி கேட்டவர்களில் ஆரோன் பெக்கும் ஒருவர். 1953ஆம் ஆண்டு உளவியலாளராக படித்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது சோதனை உளவியல், மனதின் நிலைகளை ஆராயத் தொடங்கியது. இதை அறிவாற்றல் புரட்சி என உளவியல் வட்டாரத்தில் கூறினர். உளவியல் பகுப்பாய்வு படித்துவிட்டு பணிக்கு வந்தாலும் பின்னாளில் அதன் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகம் வந்துவிட்

நேரம் தவறாமல் சாப்பிடுவது, லக்கி சீட்டில் உட்காருவது என பழக்கத்தை மாற்றிக்கொள்ளாத மனிதர்களின் உளவியல்!

படம்
  எங்கள் அலுவலகத்தில் ஹசார் என்ற ஓவியர் பணியாற்றி வந்தார். அவருக்கு வேலையில் பெரிதாக ஈடுபாடு ஏதும் கிடையாது. காலையில் பத்து மணிக்கு வருபவர், வந்தவுடனே சோற்றுக்கு யார் என்ன கொண்டு வந்தார்கள் என ஹர ஹர மகாதேவகி குரலில் விசாரிக்கத் தொடங்குவார். தான் எங்கே உட்காருவது, தனக்கு வேண்டும் விஷயங்கள் மீது தீவிர ஆர்வம் உண்டு. அதை யாரும் தடுக்க கூடாது என்று நினைப்பார். தான் வேலைக்கு வரும்போது அலுவலகத்தில் மின்விளக்கு எரிய வேண்டும் என்பதே அவரது சென்டிமெண்ட். ஆனால் அலுவலகமோ நீங்கள் வேலை செய்யும்போது மின் விளக்கை பயன்படுத்துங்கள். சீட்டில் இல்லாதபோது விளக்கை அணைத்து விடுங்கள் என மிரட்டல் விடுத்திருந்தது. அதை நான்  கடைபிடித்தபடியே இருந்தேன். ஒருமுறை காலையில் அப்படி வேலை செய்துகொண்டிருந்தபோது,தனது இருக்கைக்கு விளக்கு போடவில்லை என சண்டைக்கு வந்துவிட்டார் ஹஸார். அவருக்கு இருந்த சென்டிமென்ட் பற்றி எனக்கேதும் தெரியவில்லை.  அலுவலக விதியை விளக்கியபோதும், அதை அவர் துளியும் ஏற்கவில்லை. இவர் மட்டுமல்ல இதுபோல நிறைய முட்டாள்தனமான கொள்கைகளை நம்புகிற பைத்தியங்கள் உலகம் முழுக்க உண்டு. உலகம் தட்டையானது, குறிப்பிட்ட நேர

அமெரிக்காவின் கல்விக்கொள்கையை மாற்றிய உளவியலாளரின் ஆராய்ச்சி!

படம்
  ஜெரோம் ப்ரூனர் போலந்து நாட்டு அகதிகளாக வந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறந்தவர் ஜெரோம் ப்ரூனர். பிறக்கும்போது இவருக்கு கண்பார்வை இல்லை. பிறகு அறுவை சிகிச்சை செய்து பார்வை கிடைத்தது. இரண்டு வயதில் பார்வை கிடைத்தவர், பனிரெண்டாவது வயதில் தனது தந்தையை புற்றுநோய்க்கு பலி கொடுத்தார். ஜெரோமின் அம்மா, கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை. ட்யூக் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்த ஜெரோம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை முடித்தார்.  இரண்டாம் உலகப்போரின்போது ஜெரோம் அமெரிக்க அரசின் உளவுத்துறையில் பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு ஹார்வர்டில் அறிவாற்றல் சார்ந்த ஆய்வு நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பிறகு, இங்கிலாந்திற்கு சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பித்து வந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பியவர், தொண்ணூறு வயதில் கூட பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.  முக்கிய படைப்புகள் 1960 the process of education  1966 studies in cognitive growth இருபதாம் நூற்றாண்டில் டெவலப்மென்டல் சைக்காலஜி துறை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

குறுக்கே கௌசிக் வந்தாலும் செய்த காரியத்தை கவனத்தில் கொள்வது எப்படி?

படம்
  பாண்டியன் ஹோட்டலுக்கு செல்கிறீர்கள். அங்கு சோற்றை சுண்ணாம்பு போட்டு வடிப்பார்கள். அதை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு அடைத்துவிடும். அதெல்லாம் இருக்கட்டும். அங்கு இருக்கும் பரிசாரகர் உங்களுக்கு சாப்பிட தயாராக உள்ள பல்வேறு உணவு வகைகளை காட்டுவார். என்னென்ன சாப்பிட்டீர்கள் என்பதை பணம் தராதவரை துல்லியமாக நினைவுவைத்து கல்லாவிலுள்ள முதலாளிக்கு கூறுவார். அப்படி கூறியவுடனே அதை மறந்துவிட்டு அடுத்த ஆளை கவனிக்க போய்விட்டார். ஒருவருக்கு அத்தனை இரைச்சலில், பரிமாறும் வேலைகளை செய்தபடியே அந்தந்த மேசையில் உள்ளவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபடியே என்ன சாப்பிட்டார் என்றும் நினைவு வைத்துக்கொள்கிறார். எப்படி சாத்தியமாகிறது? இதை ஸெய்கார்னிக் விளைவு என்று குறிப்பிடுகிறார்கள்.  அதாவது, நிறைவடைந்த செயலை விட நிறைவடையாமல் தொக்கி நிற்கும் செயலே பலரையும் ஈர்க்கிறது. எனவே, அதை கவனத்தில் கொண்டு நிறைவு செய்ய முயல்கிறார்கள்.  அதாவது ஒருவருக்கு வேலைகளை ஒதுக்கிவிட்டு அதன் இடையில் சில தடங்கல்களை செய்தால் முதலில் ஏற்றுக்கொண்ட வேலைகளை கவனமாக செய்யவேண்டும் என முயல்வார்கள். இதனால் அவரின் மூளை சுறுசுறுப்பாகி நினைவுகளை தீவிர

தந்தை - மகன் உறவில் உள்ள இடைவெளிக்கு உண்மையான காரணம்!

படம்
  அப்பா, மகன் உறவு என்பது சினிமாக்களில் வருவதைப் போல எளிதானது அல்ல. சொத்துக்காக அல்லது சமூகத்தின் அழுத்தத்திற்காக ஒருவர் பிள்ளை பெற்றுக்கொண்டாலும் தந்தைகள் பெரும்பாலும் மகன்களோடு நெருக்கமாக பழகுவதில்லை. பெரும்பாலும் இருவருக்கும் இடையிலான உறவில் மௌனமே உள்ளது. ஆண்களின் உறவு சிக்கல்கள் பற்றி பெரிதாக உளவியலாளர்கள் கவலைப்பட்டது இல்லை. ஆனால், பிரெஞ்சு - கனடா நாட்டு உளவியலாளர் கய் கார்னியு என்பவர், இதில் கவனம் குவித்து அப்சென்ட் ஃபாதர்ஸ் லாஸ்ட் சன்ஸ் என்ற நூலை 1991ஆம் ஆண்டு எழுதினார். உளவியலாளர் தன்னுடைய அப்பாவுடனான உறவை முன்னுதாரணமாக வைத்துத்தான் ஆய்வு செய்து நூலை எழுதி வெளியிட்டார்.  பெண் பிள்ளைகளை விடுங்கள். அவர்கள் தங்கள் அழகு, செயல் என ஏதாவது வகையில் பிறரிடம் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு அவர்களைப் பெற்றவர்களிடமிருந்தே அங்கீகாரம், பாராட்டு கிடைப்பதில்லை. அந்த வகையில் மகன்களுக்கு தங்கள் தந்தையிடமிருந்து மனப்பூர்வமான பாராட்டு பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் கூட அதற்கு வெகு காலம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.  ஏன் தந்தை மகனை மனப்பூர்வமாக பாராட

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

படம்
  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என கேள்வி கேட்காத மனங்களே உலகில் இருக்காது. அந்தளவு சோகங்களை தனிப்பட்ட வாழ்க்கையில் ஒன்றாக எடுத்துக்கொண்டு அதை நினைத்தே வருந்துவது, தாழ்வுணர்ச்சி கொள்வது, விரக்தியாக சுற்றுவது, குடிக்கு அடிமையாவது எல்லாம் நடக்கிறது. உண்மையில் இப்படி நடக்கும் சோகமான விஷயங்களை நேரடியான ஒருவரின் குணம், அதிர்ஷடம் சார்ந்த பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் எதிர்மறையாக நினைப்பதே நடக்கிறது.  உலகில் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கிறது. கெட்டவர்களுக்கு மோசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என நிறைய மக்கள் முன்முடிவுகளை எடுக்கிறார்கள். எனவே, வாழ்க்கையின் போக்கில் நடைபெறும் கருத்துக்கு மாறான ஒரு சம்பவத்தைக் கூட அவர்களால் தாங்கமுடிவதில்லை. இதில் இன்னும் அபாயகரமான விஷயமாக மன அழுத்தம் முற்றி தற்கொலை வரை செல்வதுதான். இதைப் பற்றி விளக்கி மக்களுக்கு சிகிச்சை செய்த உளவியலாளர்தான் டோரத்தி ரோவே.  வேலை இழப்பு, புயல் சேதம், பெற்றோர் இறந்துபோவது என சம்பவங்கள் நடப்பதற்கு தனிநபரை குற்றவாளியாக்க முடியாது. அதை அவரே மனதிற்கு அருகில் வைத்துக்கொண்டு கவலைப்படுவது தவறு. இதில

போர், பாலியல் சீண்டல், வன்முறையால் குழந்தைகளுக்கு நேரும் உளவியல் குறைபாடுகள்!

படம்
  பிரான்ஸ் நாட்டில் உள்ள போர்டியக்ஸ் நகரில் போரிஸ் சைருல்னிக் பிறந்தார். இரண்டாம் உலகப்போருக்கு சிறிது முன்னதாக பிறந்தார். இவரது பெற்றோர் வாழ்ந்த பகுதியின் ஆட்சி வேறு ஒரு குழுவிற்கு மாறியதால், அவர்கள் ஜெர்மனியுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். இதனால் யூதராக போரிஸின் வீடு சோதனை செய்யப்பட்டு யூதரான பெற்றோர் ஆஷ்விட்சிலுள்ள வதைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தையை மட்டும் பாதுகாப்பாக வளர்க்க ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். ஆனால் அவர்களோ சிறியளவு தொகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தனர். சிறுவனான போரிஸ் விரைவில் வதைமுகாமுக்கு மாற்றப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளியாக மாறினார். தன்னைத்தானே பராமரித்துக்கொண்டு கல்வியை தானாகவே கற்றுக்கொண்டார். உறவுகளே இன்றி வளர்ந்தவர், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். தன்னுடைய வாழ்க்கையை ஆய்வு செய்ய நினைத்தவர், உளப்பகுப்பாய்வு, நியூரோசைக்கியாட்ரி ஆகியவற்றை கற்றார். தனது வாழ்வு முழுவதும் மோசமான விபத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் செலவிட்டார

உளவியல் பிரச்னைக்கு நேரடி தீர்வு!

படம்
  உளவியல் சிகிச்சை என்பது முதலில் நோயாளியை அடிப்படையாக கொண்டு இயங்கியது. அதாவது, தனக்கு நேர்ந்த பிரச்னைகளை அனுபவங்களை அவர் கூறுவது சிகிச்சையில் முக்கியமான அங்கம். இந்த வகையில் மருத்துவர் நோயாளியின் நோய் வரலாறு, உணர்வுரீதியான வலி, வேதனை, குண இயல்புகளின் மாற்றம் ஆகியவற்றை அறிந்துகொண்டார். இந்த வகையில் சிகிச்சை அளிப்பதை இன்சைட் என்று ஆஸ்திரிய அமெரிக்க உளவியலாளர் பால் வாட்ஸ்லாவிக் குறிப்பிட்டார்.  உலகில் பலரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஒருவர் துயரத்தில் முழ்கியிருந்தால் அவரைப் பற்றி ஆழ்ந்து அறிவது முக்கியம் என்று பால் கூறினார். இதனால், அவர் பிரச்னைகளின் மீது நேரடியான சிகிச்சையை செய்தார். அதற்கு முன்னர் வரை ஒருவரின் கடந்தகாலத்தை அறிந்து பிறகே நோயின் வேரைக் கண்டுபிடித்து அதை தீர்க்க நினைத்தனர். ஆனால் இந்த முறை நோயாளியை மேலும் துயரத்தில் தள்ளியது. எடுத்துக்காட்டாக, ஒருவரை அன்பாக பார்த்து வளர்த்த அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். அவரது மகனால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் தாய் இறந்ததைப் பற்றி நினைவுபடுத்துவது மேலும் வலியை வேதனையை உருவாக்கும். இ