இடுகைகள்

குழந்தைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊட்டச்சத்துக்குறைவை இந்தியா தீர்க்குமா?

படம்
qrius 2022க்குள் இந்தியா ஊட்டச்சத்துக்குறைவு பாதிப்பை நீக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தற்போது இந்திய அரசு போஷன் அபியான் எனும் திட்டத்தை ஊட்டச்சத்துக்குறைவைப் போக்க தேசிய அளவில் அமல்படுத்தி வருகிறது. ஆனால் இத்திட்டம் சிறப்பாக செயல்படவில்லை என்பதே யதார்த்த நிலைமை. இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். ஐ.நா அமைப்பின் சூழலியல் நோக்கங்கள் எனும் திட்ட அடிப்படையில்  குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பாதிப்பு பற்றிய அறிக்கை கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் வெளியிடப்பட்டது. இதனை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டார். 1975ஆம் ஆண்டு ஐசிடிஎஸ் எனும் திட்டத்தை இந்தியா அமல்படுத்தியது. பின்னர், தொண்ணூறுகளில் இத்திட்டத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பத்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்தனர். இதில் 62 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவால் இறந்தனர். உலகளவில் பசியால் அவதிப்படுவோரின் பட்டியலில் இந்தியா 102 வது இடத்தில் உள்ளது. அதாவது, 21.9 சதவீத முன்னேற்றம் மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவை விட பிரேசில், நேபாளம், பாகிஸ்தான் ஆகியவை சிறப்பான முன்னேற்றத்தை க

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி! - பாதிப்புகளை எப்படி குறைப்பது?

படம்
இன்று குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்கும் பழக்கம் பின்பற்றப்படுவதில்லை. கிராமம், நகரம் இரண்டிலும் அதிகரித்துள்ள பொருளாதார தேவை, குழந்தை வளர்ப்பையும் பாதித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு உள்ளாக தாய்ப்பால் புகட்டுவதை தவிர்த்து திட  உணவுகளை தரத் தொடங்குகின்றனர். இதனால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பாதிக்கும் குறைபாடுகள், நோய்கள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது ஒவ்வாமை. இன்று பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் காரணமாக ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. எக்சிமா என்பது இதில் முக்கியமான பாதிப்பு. இதனை குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆங்கில மருத்துவமுறையில் ஆயின்மென்டுகள் மூலம் தீர்ப்பதாக கூறினாலும், அது இருக்கின்ற இடத்தில் அதனை உள்ளே அழுத்தி மறைப்பதே.. ஒவ்வாமை ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருப்பவை பால் பொருட்கள், வேர்க்கடலை, பாதாம் பருப்பு உள்ளிட்டவை. இவற்றை நேரடியாக எடுத்துக்கொண்டாலும் அல்லது உணவின் பகுதிப் பொருட்களாக இருந்தாலும் ஒவ்வாமை பாதிப்

ஆட்டிச பாதிப்பைக் குறைக்கும் புதிய மருந்து!

படம்
ஆட்டிச பாதிப்பை குறைக்கும் மருந்து சோதனை முறையில் செயல்படுத்தி வெற்றி கொண்டுள்ளது உலக ஆராய்ச்சியாளர்கள் குழு. ஆட்டிசம் என்பதை தன்முனைப்பு குறைபாடு என தமிழில் கூறலாம். இதில் பிற குழந்தைகள் இயல்பாக செய்வதை குறிப்பாக பட்டன் போடுவது, உடை விலகுவதை நாமாக உணர்ந்து சரி செய்வது போன்ற விஷயங்களை இவர்களால் செய்ய முடியாது. ஒருங்கிணைந்த செயல்பாடுகளாக இவர்களின் செயல்பாடுகள் இருக்காது. இப்படி பல்வேறு விஷயங்களில் கூட்டுச் செயல்பாடாக ஆட்டிசம் உள்ளதால், இதற்கு மருந்து அளித்து முன்னேற்றம் காண்பது கடினமாக உள்ளது. ஆனாலும் இதற்கான சரியான தெரபிகளை அளித்தால், உலகில் பிறருடன் கலந்து வாழ்வதற்கான திறன்களை ஆட்டிசக் குழந்தைகள் பெற்றுவிட முடியும்.  மூளையிலுள்ள முக்கியமான நரம்பு தகவல் தொடர்பு மையம் ஜிஏபிஏ. இதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் ஆட்டிசம் ஸ்பெக்டரம் டிஸ்ஆர்டராக மாறுகிறது.. சோதனையில் பயன்படுத்திய பூமெட்டனைடு எனும் மருந்து குழந்தைகளுக்கு சிறப்பான செயல்பாட்டால் முன்நிற்கிறது. ஏறத்தாழ ஆட்டிசத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் சிறப்பான பலன்களைக் கொடுத்த மருந்து என இதனைக் குறிப்பிடுகிறார்கள்.  இம்மருந்த

தத்தெடுத்த குழந்தைகள் திரும்ப ஒப்படைப்பு!

படம்
pixabay 2024-15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள், தத்தெடுக்கப்பட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால், அவர்களில் 1,100 குழந்தைகள் அரசு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்ற காரா என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையின் எண்ணிக்கை நாடு முழுக்க தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. 2014-15 ஆண்டுகளில் 4,362 குழந்தைகள் த த்து கொடுக்கப்பட்டனர். அதில் 387 குழந்தைகள் திரும்ப அரசு அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ளனர். 17-18 இல் 4027 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். இதில் 133 குழந்தைகள் திரும்ப அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளனர். காரணம், குழந்தைகளுக்கு அதிக வயது இருப்பதும் அவர்களால் த த்து குடும்பத்துடன் இணைய முடியாததும்தான். “த த்து கொடுத்த குழந்தைகள் திரும்ப காப்பகங்களுக்கு வருவதில் மகாராஷ்டிரமும், மத்தியப் பிரதேசமும், ஓடிசாவும் முன்னிலையில் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் உள்ள குழந்தைகள் தத்து கொடுப்பு மையங்கள் பெயரில் மட்டும் செயல்படுகின்றன. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கௌன்சிலிங் கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது ” காரா நிறுவன அதிகாரி.

பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா? - என்ஆர்சியில் மாட்டும் குழந்தைகள்!

படம்
reddit என்ஆர்சி திட்டத்தில் உங்களை இந்தியர் என நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் தேவை என இந்திய அரசு கூறியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பிறப்புச்சான்றிதழை வாங்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் இன்னொரு பிரச்னை உள்ளது. அதாவது படிக்கும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கும். அதனை காட்டித்தானே பள்ளியில் வயதை சொல்லி சேர்ப்பார்கள். ஆனால் பழங்குடி, பட்டியலின மக்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்கே செல்வதில்லை. அவர்களிடம் எப்படி மேற்சொன்ன அரசு ஆவணங்கள் இருக்கும். 2005க்குப் பிறகு பிறந்தவர்கள் பெரும்பாலும் பிறப்பு சான்றிதழை வைத்திருப்பார்கள். காரணம், அந்தளவு அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய காலத்தவர்கள் பிறப்பு சான்றிதழை பார்த்திருப்பது கடினம். அது முக்கியமான ஆவணமாக முதல் வகுப்பு சேரும்போது இருந்திருக்கும். அதற்குப்பிறகு பள்ளியில் கொடுக்கும் ஆவணங்களை பிற வகுப்புகளுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இன்று 63 வயதாகும் பெற்றோருக்கும் பிறப்பு சான்றிதழ்கள் தேவை, அவர்களின் பெற்றோர் வயதாகி இருந்தாலும் அவர்களுக்கும் பிறப்ப

குழந்தைகளைக் கொல்லும் இந்திய மாவட்டம்!

படம்
தி வீக் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், வேதனையான விஷயங்களுக்கு முதன்மை பெற்றுள்ளது. ஆம் இங்கு ஏறத்தாழ 2016-18 காலக்கட்டத்தில் மட்டும் 1, 100 குழந்தைகள் இறந்துபோயுள்ளனர். காரணம் வறுமை, வேலைவாய்ப்பின்மையால் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைதான். ஏழு வயதான ஜானேஷ் என்ற சிறுவனின் எடை பத்து கிலோ. தன் தாய் தலைவருடினால் மட்டுமே கண்திறந்து பார்க்கிறான். புன்னகைக்க மட்டுமல்ல அழக்கூட உடலில் சத்தில்லை. அவனுக்கு தர ஊட்டச்சத்தான சோறு தாயிடம் இல்லை. என்ன செய்ய முடியும்? இங்குள்ள ஐந்து பழங்குடி கிராமங்களில் குழந்தைகள் தினத்தன்று செய்த ஆய்வில் மருத்துவர்களே அதிர்ந்து போனார்கள். அங்கு வந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்குறைபாடு இருந்தது. பால்கர் மாவட்டம் எங்கோ தூரதேசத்தில் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். மும்பையிலிருந்து நூறு கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு விரைவில் அமைக்கப்படவிருக்கும் புல்லட் ரயில் இந்த ஊரின் பாதையில்தான் அமையவிருக்கிறது. இதற்கான மதிப்பீடு 2 லட்சம் கோடி ரூபாய்கள். மும்பை தன் வருமானத்தில் 15 ஆயிரம் கோடிக்கும் குறைவாகத்தான் மக

இந்திய அரசிடம் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை!

படம்
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம்! டிஜிட்டல் இந்தியா என்ற நாளிதழ்களில் விளம்பரம் செய்தாலும், இந்தியா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விஷயங்களில் தடுமாறி வருகிறது. அண்மையில் வெளியான உலகளவிலான பட்டினி நாடுகளின் தொகுப்பு பட்டியலில் இந்தியா 102 வது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 112 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் இந்தியாவின் இடம் பரிதாபகரமானது. தெற்காசிய நாடுகளில் மிகவும் கீழே சரிந்துள்ளது இந்தியா. போஷன் அபியான் திட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சந்திரகாந்த் எஸ் பாண்டேவிடம் இதுபற்றி பேசினோம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளன. அதனைத் தீர்க்க என்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்.  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊட்டச்சத்து பிரச்னை கொண்ட மாவட்டங்கள் நாங்கள், இதற்கான குழுக்களை அமைத்து இப்பிரச்னையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இதற்கான களப்பணியில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்? நாங்கள் என்ஆர்சி எனும் மையங்களை அமைத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையான குழந்தைகளை பராமரித்து அவற்றை நீக

கற்பனையான நண்பர் ஆபத்தை ஏற்படுத்துவாரா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி என் மகன் கற்பனையாக ஓர் நண்பனை உருவாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறான். இது ஆபத்தானதா? அவன் சிறுவனாக இருக்கும்வரையில் அப்படி விளையாடுவது எந்த ஆபத்தையும் தராது. தனக்கான நண்பராக ஒருவரை கற்பனை செய்து விளையாடுவது சிறுவயதில் அவனின் மொழிவளர்ச்சிக்கு உதவும். அதனால் இம்முயற்சிகளை தடுக்காதீர்கள். அதேசமயம் இதே தன்மை வளர்ந்து வரும்போது குறையும். குறைய வேண்டும். அப்படி இல்லாதபோது நீங்கள் கவனிப்பது அவசியம். மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் பெறுமளவு இது முக்கியமான விஷயம் அல்ல. நன்றி - பிபிசி 

மாண்டிசோரி முறைக்கு மாறும் அமெரிக்க கல்வி!

படம்
தொடக்க கல்விக்கு எகிறும் எதிர்பார்ப்பு!  அமெரிக்க தொழிலதிபரான ஜெஃப் பெசோஸ், ஏழைக் குழந்தைகளின் தொடக்க கல்விக்கு நூறுகோடி ரூபாய் வழங்க உள்ளார். இங்கு கூறப்படும் குழந்தைகளின் தொடக்க கல்வி என்பது ப்ரீகேஜி நிலையிலுள்ள குழந்தைகளை உள்ளடக்கியது. தற்போது, அமெரிக்காவில்  குழந்தைகளின்  தகவல்தொடர்பு, நினைவுத்திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேம்படுத்த தொடங்கியுள்ளனர்.  இதற்காகத்தான் அமெரிக்க தொழிலதிபரான ஜெஃப் பெசோஸ் நிதியுதவி வழங்க முன்வந்திருக்கிறார். இச்செயல்முறையில்  பொறியியல் பாடநூல்களை படித்து காட்டி மனப்பாடம் செய்யச் சொல்லுவார்களோ என பயப்பட வேண்டாம். மாதுளம்பழத்தை எடுத்து உரித்து அதன் சிவப்பாக உள்ள விதைகளை ஒரு டம்ளரில் போடச்சொல்லுவார்கள். அவ்வளவுதான். இதற்கான குறிப்பை மட்டுமே ஆசிரியர் குழந்தைக்கு கூறுவார். அக்குழந்தை என்ன செய்கிறது என்று கவனித்துக்கொண்டு இருப்பதுதான் வகுப்பில் ஆசிரியரின் பணி. இதற்கான தேவை என்ன உள்ளது என்று பலரும் நினைக்கலாம். காரணம், காலம்தோறும் வேலைவாய்ப்புகள் மாறி வருகின்றன. இதனால் குழந்தைகளை  படங்களைக் கொண்ட புத்தகங்களை அச்சிட்டு வழங்கி படித்துக்கொ

தடுப்பூசி போடுவதில் மந்தம் ஏன்?

படம்
தடுப்பூசி போடுவதில் மந்தம் ஏன்? இந்தியாவில் ஐந்தில் இரண்டு பேர் அதாவது, குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை என இந்தியாஸ்பெண்ட் ஆய்வு தெரிவிக்கிறது. இந்திர தனுஷ் 2.0 என்ற பெயரில் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனாலும் இத்திட்டத்தில் தேக்கம் நிலவுகிறது. டிசம்பர் 2014 ஆம் ஆண்டு தொடங்கிய மிஷன் இந்திர தனுஷ் திட்டம், 2020 ஆம் ஆண்டு 90 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை லட்சியமாக கொண்டது. தற்போது இந்தியா முழுக்க 271 மாவட்டங்களில் 70 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசித் திட்டங்களில் படுமோசமான ரிப்போர்ட் கார்ட்டை வைத்திருப்பது எப்போதும் போல உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள்தான். தடுப்பூசி போடுவது எதிர்க்கவென தனி பிரசாரம் மக்களிடையே பரப்ப ப்பட்டு வருகிறது. இதைத்தாண்டி போலியோ, காசநோய் போன்றவற்றை தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளில் இந்தியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான தடுப்பூசியின்றி இறந்து வந்தனர். இந்த எண்ணிக்கை

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் தேவை- அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

படம்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் தேவை! தேசிய குடும்ப நலத்துறை ஆய்வு, இந்தியாவில்  38 சதவீதக்குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியா, பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் நாடு. நம் நாட்டின் எதிர்காலமான அடுத்த தலைமுறைக் குழந்தைகளின் உடல்நலன் விவாதிக்கப்படவேண்டிய சூழலில் உள்ளது.  மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு மாநில அரசுகள் பள்ளியில் குழந்தைகளின் ஊட்டச்சத்திற்காக உணவு,முட்டை, பயறுவகைகளை வழங்கி வருகின்றன. ஆனாலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை இன்னும் நீங்கிய பாடில்லை. காரணம், இவை குடும்பம் சார்ந்தே ஏற்படுவதுதான்.  தாய் ஆரோக்கியமாக இல்லாதபோது, அவரின் குழந்தை சிறந்த உடல்திறனுடன் எப்படி பிறக்க முடியும்?  இதைத் தவிர்க்க ஒடிஷாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் 12 முட்டைகளை வழங்கிவருகிறது மாநில அரசு. இந்த முட்டை வழங்கும் ஊட்டச்சத்துத் திட்டம்,  கர்ப்பிணி குழந்தை பெற்று ஆறுமாதங்கள் வரை அமலில் இருக்கும். ஒடிஷாவின் அங்குல் மாவட்டத்தில் 31.8 சதவீத குழந்தைகள்  (5வயதிற்குட்பட்டவர்கள்) ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37.4% பேர் ரத்தச

அன்பைக் கற்றுக் கொடுங்கள்- டாடிஸ் ஹோம் 2

படம்
டாடிஸ் ஹோம் 2 இயக்கம் சீன் ஆண்டர்ஸ் கதை சீன் ஆண்டர்ஸ், ஜான் மோரிஸ் இப்பாகத்தில் பிராட், டஸ்டி இருவரும் தங்களது குழந்தைகளை பொறாமையின்றி பராமரிக்க முயல்கின்றனர். ஆனால் விதி விளையாட, பிராட், டஸ்டியின் இரு தந்தைகளும் கிறிஸ்துமஸைக் கொண்டாட வருகின்றனர். இப்போது டஸ்டிக்கு தனி குடும்பம் இருக்கிறது. அவரின் மனைவியின் குழந்தை டஸ்டியை ஏற்க மறுக்கிறது. இதனை டஸ்டி எப்படி சமாளிக்கிறார் என்பதோடு, வரும் தந்தைக்கும் டஸ்டிக்கும் ஏழாம் பொருத்தம். இவர்கள் எப்படி ஒன்றாகிறார்கள், குழந்தைகளிடம் இருக்கும் ஏக்கம் எப்படி தீருகிறது என்பதுதான் கதை. மெல் கிப்சன், டஸ்டியான மார்க் வால்பெர்க்கின் தந்தையாக வந்து பிராடையும் அவரது தந்தையும் ஏக்கமாக பார்க்கிறார்கள். வாழ்க்கையை சிறிது காமெடியாக அணுகும் படம் என்பதால், அனைத்து காட்சிகளும் அப்படியே இருக்கிறது என கூறமுடியாது. பிராடின் தந்தையை அவரது மனைவி விவாகரத்து செய்த விஷயம் அனைவருக்கும் தெரிய வருவது சங்கடமான காட்சி. அமெரிக்காவின் குடும்ப அமைப்பு முறை திரும்ப நம் கண் முன் விரிகிறது. இதில் பிராட் எப்போதும் நிதானமாக அகிம்சை முறையில் பிரச்னைகளை அணுக

தந்தைகளுக்கிடையே உரிமைப் போராட்டம் - டாடிஸ் ஹோம் 1

படம்
டாடிஸ் ஹோம் -2015 ஆங்கிலம் இயக்கம் - சீன் ஆண்டர்ஸ் கதை - பிரையன் பர்ன்ஸ் திரைக்கதை - சீன் ஆண்டர்ஸ், பிரையன் பர்ன்ஸ், ஜான் மோரிஸ் இசை - மைக்கேல் ஆண்ட்ரூஸ் அமெரிக்க குடும்ப முறையில் இருக்கும் சிக்கல்கள்தான் கதை. திருமணம் செய்து பிரிந்து மீண்டும் திருமணம் செய்து என பயணிக்கும் அவர்களின் திருமண முறையால், குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலை பேசுகிற படம் இது. வில் ஃபெரல் படத்தில் நடிகராக பின்னி எடுத்திருக்கிறார். அதோடு படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். தன்னுடைய மனைவியின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாக நினைக்கிறார். ஆனால் அவர்கள் இவரை வெறுத்து ஒதுக்குகிறார்கள் அந்த மனநிலையை மாற்ற முயல்கிறார். அப்போது, அக்குழந்தைகளின் உயிரியல் தந்தை அங்கு வர, இரு தந்தைகளுக்குள்ளும் நடக்கும் முட்டல் மோதல்கள்தான் கதை. மார்க் வால்பெர்க் உயிரியல் தந்தை என்ற பெருமிதம் காட்டினாலும், குழந்தைகளுக்கான செய்யும் வேலைகள், பொறுமை, நிதானம் என்று வரும்போது ஆஹா... என பேக்கடிக்கிறார். கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் தத்தளிக்கிறார்.  இவர்களின் கோபதாபத்திற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் லிண்டா

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை! - இந்தியா செய்ய வேண்டியது என்ன?

படம்
giphy.com ஊட்டச்சத்து பற்றாக்குறை! இந்தியாவில் தொற்றாநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஐந்து வயது முதல் ஒன்பது வயது குழந்தைகள், இளம் வயதினர்களில் பத்து வயது முதல் பத்தொன்பது வயது கொண்டவர்களும் தொற்றாநோய்களில் அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய ஊட்டச்சத்து ஆய்வு முடிவுகள் (CNNS) கூறுகின்றன. இந்த ஆய்வு, 2016 முதல் 2018 வரையில் நடந்த நுண்ணூட்டச்சத்து ஆய்வாகும். இதன் விளைவாக பள்ளி செல்லும் குழந்தைகளில் பத்தில் ஒருவருக்கு முன்கூட்டியே நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பாக விரிவாக செய்த ஆய்வில், குழ்ந்தைகளுக்கு ஏற்படும் தொற்றாநோய்களின் பாதிப்பு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதம் பேரும்,  பள்ளி செல்லும் சிறுவர்களில் 22 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்துக் குறைவு பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மக்கள்தொகை அதிகம் கொண்ட பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன. ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஊட்டச்சத்து பாதிப்பு குறைவாக காணப்பட்டது.  குழந்தைக

பசியில் தவிக்கும் இந்தியா- அவலமாகும் குழந்தைகளின் நிலைமை!

படம்
              2015 ஆம் ஆண்டு இந்தியா குளோபல் ஹங்கர் இண்டெக்ஸில் 93 ஆவது இடத்தில் இருந்தது. அன்றைக்கும் இன்றைக்கும் நிலைமை மாறியிருக்கிறது. பொது விநியோக முறையை உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தங்களுக்கு ஏற்ப இந்திய அரசு குறைத்து வருகிறது. அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் அரசின் பொறுப்பு குறைந்துகொண்டே வருகிறது. கல்வி, சுகாதாரம், உடல்நலம், வேலைவாய்ப்பு அனைத்திலும் அரசு மெல்ல தன் பொறுப்பை கைகழுவி சூப்பர்வைசர் பொறுப்பை மட்டுமே ஏற்கிறது. இதன்விளைவாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வெளியான ஹங்கர் இண்டெக்ஸ் பட்டியலில் 30.3 புள்ளிகளை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. இதன் விளைவாக 102 ஆவது இடத்தைப் பெற்று தெற்காசிய நாடுகளிலேயே, பிரிக்ஸ் நாடுகளிலேயே கீழே போய்விட்டது. அதேசமயம் இந்தியாவில் பசுமாடுகளின் பெருக்கம் பதினெட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை பெருமையாக கருதுவதா, இதையொட்டி அடித்துக்கொல்லப்படும் சிறுபான்மையினரை நினைத்து பீதி ஆவதா என்று தெரியவில்லை. ஆறு வயது முதல் 23 வயது வரையிலான குழந்தைகள் ஊட்டச்சத்துக்களின்றி பாதிக்கப்படுவத

குழந்தை அழும்போது கண்ணீர் வருவதில்லையே ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குழந்தை பிறந்தவுடனே அழுகிறது. ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் வருவதில்லையே ஏன்? குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அழுகை மூலமாக அறியலாம். தாயின் கருப்பையில் உள்ள குழந்தை மெல்ல வெளிவந்தவுடன் வெளியிலுள்ள காற்றை சுவாசிக்கத் தொடங்கும்போது, அது முன்னிருந்த பாதுகாப்பில் குறைபாட்டை உணர்கிறது. உடனே அழுகிறது. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அழும்போது சத்தம்தான் பெருமளவில் ஊரையே உலுக்கும்படி வரும். ஆனால் ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது. காரணம், கண்ணீர் சுரப்பி அப்போது உருவாகி முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதே. மேலும் குழந்தையின் உடலில் வியர்வைச்சுரப்புக்கு காரணமான எக்கிரைன், அபோகிரைன் ஆகிய சுரப்பிகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. எனவே சில வாரங்களுக்கு குழந்தைக்கு வியர்வை சுரக்காது. அதேசமயம் குழந்தைக்கு பாலூட்டும்போது, அவர்களின் உடலில் வியர்வை உருவாகும். இதன் அளவு நினைத்து பார்க்க முடியாத அளவு அதிகமாக இருக்கும். பலரும் பீதியாவார்கள். அது இயல்பானதுதான். தாயின் உடலிலிருந்து உடற்சூடு குழந்தைக்கு மாற்றப்படுகிறது என்கிறார் கலிஃபோர்னியா ப

விமானத்தில் குழந்தைகள் அழுவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குழந்தைகள் விமானப்பயணத்தில் அழுவது ஏன்? சாதாரண குழந்தைகள் முதல் ஆட்டிசக் குழந்தைகள் வரை பஸ், விமானம் என வாகனம் எதுவானாலும் செல்லும்போது மெல்லத் தொடங்கி பயணிகளை உசுப்பி எழவைக்கும் அளவு அழுவார்கள். ஏன்? காரணம் விமானத்தில் சாதாரணமாக அனுபவிக்கும் அழுத்தம் நம்மாலே பொறுத்துக்கொள்ள முடியாது. குழந்தைகள் எப்படி தாங்கும். விமானம் உயரத்தில் பறக்கும்போது, காது அடைக்கும். அந்த அழுத்தம் குழந்தைகளுக்கு தனியாக இருப்பது போலத் தோன்றும். இதனால்தான் அழுகை எல்லை மீறுகிறது. அறிவியல்ரீதியான காரணம், குழந்தைகளின் காதில் உள்ள அமைப்புதான். அஸ்டாசியன் குழாய் எனும் அமைப்பு நம் காதில் உள்ள நடுவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு முழு வளர்ச்சி அடைந்தது அல்ல. வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் இது வேறுபட்ட வளர்ச்சியில் உள்ளது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த  சைமன் பேயர். பொதுவாக நாம் பயணிப்பதை மூளை உணர்வது நம் காதில் செல்லும் காற்று மூலமாகத்தான். விமானம் ஏறி இறங்கி 9,100 மீட்டர் உயரத்தில் பறக்கிறது. இது பொதுவான உயரம். இதில் வயதுவந்தோர் காற்றழுத்த த்திற்கு ஏற்றவாறு தம்மை

கிரிஸ்பிஆர் குழந்தைகளை உருவாக்குவேன் - ரஷ்ய ஆராய்ச்சியாளரின் தில்!

படம்
கிரிஸ்பிஆர் குழந்தைகள் ரெடி! ரஷ்யாவைச் சேர்ந்த காது கேளாத தம்பதிகள் ஐவர்,  தங்களின் குழந்தைகளின் டிஎன்ஏவை செம்மை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர் என்று உயிரியலாளர் டெனிஸ் டெப்ரிகோவ் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசிடம் இதுபற்றிய அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார். அரசின் அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதை அவரை விட பிற நாடுகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனமுடன் பார்த்து வருகின்றனர். காது கேளாத இத்தம்பதிகளுக்கு மரபணு வரிசைப்படி பிறக்கும் குழந்தைக்கும் காது கேட்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்கவே கிரிஸ்பிஆர் சிகிச்சையை நாடுகின்றனர். இதன்மூலம் ஹெச்ஐவி முதல் காது கேளாமை வரை தீர்க்க முடியும் என்று நம்புகின்றனர். சீனாவில் அரசு அனுமதியின்றி குழந்தைகளை கிரிஸ்பிஆர் செம்மையாக்கல் செய்த சம்பவம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? BJ2 எனும் மரபணுவை மாற்றினால் பிறக்கும் குழந்தைகளின் காது கேளாமையைத் தீர்க்க முடியும் என டெனிஸ் நம்புகிறார். ஆனாலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கான வாய்ப்புகள் உள

கஜகஸ்தானில் குழந்தைகளுக்கு நேரும் அநீதி!

படம்
கஜகஸ்தானில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடுமையாக வன்முறைக்கும் புறக்கணிக்கும் உள்ளாவதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறிவருகிறது. நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் கஜகஸ்தானில்  வன்முறைக்கு இலக்காவதோடு, குடும்பத்தைச் சந்திக்கவும் வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மித்ரா ரிட்மன். அக். 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் 27 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை நேர்காணல் செய்த தில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள 19 மாநில காப்பகங்களில் மனநிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் 2 ஆயிரம் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றன. இக்குழந்தைகளுக்கு சில மருந்துகளைக் கொடுத்து மயக்கமுறச்செய்து அவர்களை மனநல மருத்துவமனைகளுக்கு பணியாளர்கள் அழைத்துச் சென்று அழைத்துவிடுகின்றனர். இவர்களுக்கு சிசோபெரெனியாவுக்கு அளிக்கும் மருந்துகளை அளிப்பதுதான் பிரச்னை. இம்மருந்து அச்சிறுவர்களை 24 மணிநேரத்திற்கு தூக்கத்திலேயே வைத்திருக்கும் சக்தி கொண்டது. இங்கு வளரும் குழந்தைகளை பணியாளர்கள் தாக்குவது இயல்பாக இரு

குழந்தைகளுக்கான சூப்பர் கேமிராக்கள்!

படம்
குழந்தைகளுக்கான கேமிரா! NIKON COOLPIX W100 வாட்டர் ப்ரூப் மற்றும் ஷாக் ஃப்ரூப் கொண்ட கேமிரா. நான்கு வகையான ஜாலி நிறங்களில் கிடைக்கிறது. குறைவான விலையில் நிறைவான ஆப்ஷன்களுடன் கிடைக்கும் கேமரா இது. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள். கிரியேட்டிவிட்டியின் ஜன்னலைத் திறங்கள்.  மைனஸ் பக்கம் - படத்தின் தரம், சிறிய சென்சார்,சிறிய திரையின் தரம். ரூ.9,500  FUJIFILM FINEPIX XP130 5 முதல் 10 வயது வரையிலுள்ள சிறுவர்களுக்கான கேமிரா. சற்று சிக்கலான ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. காசு போட்டால் இந்த கேமிராவை நீங்கள் கையில் பிடிக்கலாம். தண்ணீரில் நனைத்து மணலில் போட்டாலும் ஃப்யூஜிஃபிலிம் கேமரா எதுவும் ஆகாது. நல்ல வெளிச்சமான நேரத்தில் புகைப்படம் எடுத்தால், படங்கள் பளிச்சென வருகிறது. மேலும் டூர், பிக்னிக்கான சரியான தேர்வு இது.  மைனஸ் பக்கம் - 4 கே படத் தரம் கிடையாது. படத்தரம் குறைவு விலை. ரூ. 20 ஆயிரம்.  INSTAX MINI 70 ஃபிலிம் சுருளில் படமெடுக்கலாம். இன்ஸ்டாமிக்ஸின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான். வீடியோ வசதி கிடையாது. இதையெல்லாம் தாண்டி இந்த கேமிராதான்