இடுகைகள்

வெப்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்! - பேராசிரியர் மைக்கல் அப்பன்ஹெய்மர்

படம்
  மைக்கேல் அப்பன்ஹெய்மர் பருவநிலை மாற்றம் உலகில் பருவநிலை மாற்றத்திற்கு அதிக விலை கொடுக்கவேண்டியிருப்பவர்கள், குழந்தைகள்தான். இப்போது அவர்களே பிறருக்கும் சேர்த்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். யுனிசெப்பின் கணக்கீடுப்படி, ஒரு பில்லியன் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுமே பஞ்சம், வெப்ப அலைகள், வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.  1960ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, எதிர்வரும் ஆண்டுகளில்  குழந்தையின் பிறப்பு கூட மேற்சொன்ன சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காற்று மாசுபாட்டால் குழந்தைகள் 90  சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஏழைக்குழந்தைகள் அதிக விலையைக் கொடுக்கவேண்டும். 2030ஆம் ஆண்டில் 132 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 82.4 மில்லியன் மக்கள் வேறுவழியின்றி பிற இடங்களுக்கு இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். உணவு, நீர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளின் வீடுகள் இல்லாமல் போகும். கூடவே இயற்கை பேரிடர்களாக பஞ்சம், வறட்சி, வெப்ப அலைகளின் தாக்கமும் இருக்கும். 2 மைக்கேல் அப்பன்ஹெய்மர் மைக்கேல் அப்பன்

கேன் உணவுகள் - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  கேன் உணவுகள் நெப்போலியன் காலத்தில் உருவானது கேன் உணவுகள். அப்போது கடலில் நிறைய பயணம் செய்யவேண்டியிருந்ததால், படை வீர ர்களுக்கு சுடச்சுட சமைத்து கொடுப்பது கடினம். எனவே கேன்களில் உணவுகளை பதப்படுத்தி அடைத்து கொடுத்தனர். இன்று அப்படி தொடங்கிய உணவுத்துறை உலக நாடுகளில் அனைத்திலும் சிறப்பாக விற்று வருகிறது.  குழந்தைகள் உணவு, சூப், ஊறுகாய், பழச்சாறு என பல்வேறு வகைகளில் கேன்உணவுகள் வெற்றிகரமாக விற்று வருகின்றன. கொரோனா நேரம் கூட பலருக்கும் கைகொடுத்தது கேன் உணவுகள்தான் என கேம்பெல் சூப் கம்பெனி எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் கம்பெனியின் விற்பனை 34 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அமெரிக்காவில் இதற்கு முன்னர் கேன் உணவுகளின் விற்பனை 1-2 என ஐசியூவில் வைக்கும் நிலைமைதான் இப்போது கொரோனா வந்ததால் பலரும் உணவுக்கு என்ன செய்வது என கேன் உணவுகளை வாங்கியதால், 12 சதவீதம் விற்பனை ரேட் வந்துள்ளது. என்ன காரணம்?  மக்கள் பலரும் சுவை என்பதோடு அது ஆரோக்கியத்தையும் காக்கவேண்டும் என நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே பலரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கேன் உணவுகள் உள்ள பகுதிக்கு அதிகம் செல்வதில்லை. புத

இறந்துபோன பிணங்கள் வெடிக்குமா?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ!? பிணங்கள் வெடிப்பது சாத்தியமா? இறந்துபோனவரின் உடலில் ஏதாவது பேஸ்மேக்கர், அல்லது வேறு பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தால் அப்படி வெடிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி உடலை எரிக்கும்போது நீர்ச்சத்து குறைந்து தசைகள் இறுக்கமாகின்றன. அதனால் எழுந்து உட்கார வாய்ப்புகள் அதிகம். பிணத்தை தகனம் செய்பவர்கள் ராஸ்கோல் என தடியாலேயே நெஞ்சில் ஒரு போடு போட்டு அடக்குவார்கள். பிணம் படுத்துவிடும். மற்றபடி உடலிலுள்ள வாயுக்கள் காரணமாக உடல் வெடிக்கும் என்பது அரிதாகவே நடக்கம். அந்தளவு அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் கிடையாது.  உடல் அழுகிப்போகும் நிலையை பதப்படுத்தும் செயல் மட்டுப்படுத்துகிறது. இதனால் உடலிலுள்ள நுண்ணுயிரிகள் இறந்துபோன செல்களை தின்னும் செயல் தடைபடுகிறது. தசைகள் இறுக்கமடைந்தாலும் உடல் முழுக்க அழுகிப்போவதை தள்ளிப்போடலாம். அழுகும் உடலிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா ஆகிய வாயுக்கள் வெளியே வருகின்றன.  ஐஸால் படகு செய்து பயணிக்க முடியுமா? கேட்க நன்றாக இருந்தாலும் சாத்தியம் குறைவு. கடல் வெப்பநிலை அதிகரித்தால் ஐஸ் படகில் அல்லது கப்பலில் பயணிக்கும் பயணிகளின் கதி என்ன? இங்கிலாந்

மறைமுகமாக மாசுபாடுகளை ஊக்குவிக்கும் நைட்ரஜன்!

படம்
  மாசுபாடுகளின் தலைமகன்!   மாசுபாடு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய அனைவருக்கும் தெரிந்த வாயுக்கள்தான். ஆனால் சத்தமே இல்லாமல் நீர், காற்று ஆகிய மனிதர்கள் அடிப்பதை வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்பை நைட்ரஜன் வாயு ஏற்படுத்தி வருகிறது.  பொதுவாக ஆபத்தற்றது என கருதப்படும் இந்த வாயு, வளிமண்டலத்தில் 78 சதவீதம் காணப்படுகிறது. காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் இழுத்து வளமடையும் நிறைய பயிர்கள் மண்ணில் உண்டு. இப்படி நடைபெறும் செயல்பாடு சுழற்சியானது. இதில குளறுபடி நடக்கும்போது அனைத்துமே தலைகீழாகி பிரச்னை தொடங்கிவிடுகிறது.. எளிதாக நாம் பார்க்கும் பிரச்னை, நீர்நிலையில் பிற உயிரினங்கள் வாழ முடியாதபடி பாசிகளின் ஆக்கிரமிப்பு. இது வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயுவின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் முக்கியமான பாதிப்பாகும்.  காற்றிலுள்ள நைட்ரேட்டுகளை மழை கரைத்து நீர்நிலைகளில் சேர்க்கிறது. அங்கு பாசிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நைட்ரஜன், நீரிலுள்ள ஆக்சிஜனை உறிஞ்சுகிறது. இதனால் அதிலுள்ள உயிரினங்கள் மெல்ல அழிவைச் சந்திக்கின்றன. இந்த வகையில் உலகில் 400க்கும் மேற்பட்ட நீர்நிலைப்பகுத

நீரின்றி தவிக்கப்போகும் கோடிக்கணக்கான மக்கள்!- இமாலயத்தில் உருகும் பனிப்பாறைகள்

படம்
  சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றிலிருந்து கிடைக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறது. ஆறுகள் உருவாகி வரும் இமயமலையில் இதற்கான பாதிப்புகள் தொடங்குவதால் விரைவில் டெல்லி, பெங்களூரு, இந்தூர், ரூர்க்கி, நேபாளம், அகமதாபாத் ஆகிய நகரங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியானா ஆகியவை சிந்து நதியினை நம்பியுள்ளன. டெல்லி, உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தானின் பெரும்பகுதி கங்கை நதியை நம்பியே நிலப்பரப்புகள் உள்ளன.  அசாம், சிக்கிம், நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் பிரம்ம புத்திரா ஆற்றை நம்பியே உள்ளன.  உலக மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி, டாகா, லாகூர், கராச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களையே அதிகம் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உலகளவில் பார்த்தால் எட்டில் ஒருவர் என்று கூறலாம்.  இமாலயத்திலுள்ள காரகோரம் பகுதியில் உருவான பனிப்பாறைகள் மெல்ல வெப்பத்தால் உருகத் தொடங்கியுள்ளன. இதனால

ஸ்மார்ட் ரோடு என்பதற்கு என்ன அர்த்தம்?

படம்
      ஸ்மார்ட் ரோடு என்பதற்கு என்ன அர்த்தம் ? ஸ்மார்ட் ரோடு என்பதன் பொருள் , அதில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதுதான் . இதில் இங்கிலாந்தில் செம்பு சமாச்சாரங்களை பொருத்தியுள்ளனர் . இதில் கார்கள் , லாரிகள் செல்லும்போது அதன் வழியாக மின்சாரம் உருவாகும் . அதனை கணினிகள் அளவிட்டு சேமித்துக்கொள்ளும் . மேலும் போக்குவரத்து சிக்னல்களில் உள்ள சென்சார்கள் மூலம் வாகனங்களின் வேகத்தை கணிக்க முடியும் . இத்தகவல்கள் மூலம் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் கணித்து சாலைகளிலுள்ள சிக்னல்களை திறமையான முறையில் இயக்க முடியும் . இங்கிலாந்து இவ்வகையில் ஸ்மார்ட் ரோடுகளை உருவாக்க அதிகம் செலவு செய்து வருகிறது . பொதுவாக சோலார் பேனல்களை கண்ணாடி வடிவில் பதித்துக்கொள்ளத்தான் தயாரிக்கிறார்கள் . இதனை சாலையில் பயன்படுத்துவது முதலில் சாத்தியமில்லாத தாக இருந்தது . ஆனால் பிரான்ஸில் 2016 ஆம் ஆண்டில் 2800 போட்டோவால்டைக் செல்களைக்கொண்டு சாலையை உருவாக்கினார்கள் . நோக்கம் நல்லதுதான் என்றாலும் இந்த திட்டம் எதிர்பார்த்தபடி ஆற்றல் உருவாக்க உதவ வில்லை . அதற்குபதில் அதில் சென்ற கனரக வாகனங்களால் சோலார் செல்க

சூரியனை நெருங்குவது சாத்தியமா? மிஸ்டர் ரோனி

படம்
        மிஸ்டர் ரோனி சூரியனில் வேதிவினைகள் நடைபெறவில்லை என்றால் அதனை எளிதாக சென்றடையமுடியுமா? சாத்தியமில்லை. அதன் வெளிப்பரப்பு 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்டில் கொதித்து வருகிறது. பீட்ஸா வேகும் ஓவனில் உள்ள வெப்பம் 700 டிகிரி பாரன்ஹீட்தான். சூரியன் பூமியிலிருந்து 9,30,00,00,000 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. 65 கி.மீ வேகத்தில் குளிர்பானம் குடிக்க கூட நிற்காமல் சென்றால் சூரியனுக்கு சென்று சேர 160 ஆண்டுகள் ஆகும். நிலவைப் போல நானூறு மடங்கு தூரம் கொண்டது சூரியன். விண்கலத்தில் சென்றாலும் கடினமான பயணமாகவே இருக்கும். அலுமினிய விண்கலத்தில் சென்றால் அதன் உருகும் வெப்பநிலை 1220 டிகிரி பாரன்ஹீட் வரைதான் பொறுத்துக்கொள்ளமுடியும். அதற்குமேல் விண்கலம் உருகிவிடும். அதன் வெப்பத்தை உள்ளிழுக்காமல் தடுக்கும் கவசங்கள் இருந்தால் மட்டுமே சூரியனுக்கு அருகில் செல்லமுடியும். இல்லையெனில் தேங்காய்க்குள் பொட்டுக்கடலை, வெல்லம் போட்டு சுட்டு சாப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல விண்கலத்தில் வீர ர்கள் வெ்ந்து கருகிவிடுவார்கள். வெப்பத்தோடு கதிர்வீச்சு பிரச்னையும் உண்டு. 2004இல் ஏவப்பட்ட மெர்குரி மெசஞ்சர் இந்த வகையில் 30 மில்லியன்

கோடையில் கொரோனா பரவுமா?

படம்
giphy கொரோனா இறப்பில் இத்தாலி சீனாவை முந்தி முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது. இறப்பை தடுக்க முடியுமா என்பதை விட பரவுவதை தடுக்கவே ஆராய்ச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். அதனால் பல்வேறு சூழல்களில் கொரோனா வைரஸ் பரவுமா என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்து வருகின்றனர். உடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீர்த்திவலைகள் வழியாக பரவும் கொரோனாவை எதிர்க்கும்  பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். ”கொரோனா வைரஸ் இன்ஃப்ளூயன்சா வைரஸ் போலவேதான் பரவுகிறது. நீர்த்திவலைகளை வழியாக பரவும் அதன் வேகத்தை கட்டுப்படுத்த சூழல்களின் பங்கு உண்டா என ஆராய்ந்து வருகிறோம் ” என்கிறார் ஆய்வாளர் சவீஸ் சஃபாரியன். வைரஸ்களின் மேலோட்டை வெப்பம் பாதிக்குமா என ஆராய்ச்சி செய்வதற்காக  இரண்டு லட்சம் டாலர்களை உதவித்தொகையாக சவீஸ் பெற்றிருக்கிறார். வைரஸ் தானாக எதையும் செய்யும் திறன் கொண்டது அல்ல. பிற உயிரிகளின் செல்களில் நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கி தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மேற்சொன்ன ஆய்வுக்காக வைரஸ்களின் மேலோடுகளை செயற்கையாக உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக, இதில் வைரஸ் மரபணுக்கள் இருக்காது. எனவே, வைரஸ் பாதிப்

மைக்ரோவேவ் ஓவன் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி மைக்ரோ ஓவனில் சமைக்கும்போது, அதிலிருந்து நாம் சற்று தள்ளி நிற்க வேண்டுமா? மூடநம்பிக்கையை இப்படியும் ஏற்படுத்தலாம் என்பதற்கு உங்கள் பதிலே சாட்சி. மைக்ரோ ஓவனில் பயன்படும் அலைகள் உங்கள் உடலை பாதிக்காது. அப்படி பாதித்தால் உணவு என்னாகும்? மறைமுகமாக அது உணவுப்பொருட்களை சூடாக்கி உங்களுக்கு தேவையான உணவை உருவாக்குகிறது. ஓவன் பற்றிய கையாளும் குறிப்பை படித்தாலே இதுபோன்ற குழந்தைதனமான கேள்விகளை நீங்கள் கேட்க மாட்டீர்கள். நன்றி - பிபிசி 

வளைவான கண்ணாடியை எப்படி உருவாக்குகிறார்கள்?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கண்ணாடியை எப்படி வளைத்து அழகாக மாற்றுகிறார்கள்? அனைத்துக்கும் சிலிகா மூலக்கூறுகள்தான் காரணம். அதனை 700 டிகிரி செல்சியஸிற்கு வளைத்து கண்ணாடியை வளைவாக தயாரிக்கிறார்கள். மிகவும் கவனமாக வேலை செய்துதான் இந்த வகை கண்ணாடியை உருவாக்குகிறார்கள். கால்சியம் கார்பனேட், சோப்பு ஆகியவற்றைப் போட்டு இதனை துடைத்து மெருகேற்றுகிறார்கள். நன்றி - பிபிசி

வெப்பத்தை மூளை எப்படி உடனே உணர்ந்துகொள்கிறது?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி வேறு எந்த உணர்ச்சிகளை விடவும் உடலில் சூடு பட்டவுடன் எப்படி வேகமாக உணர்கிறோம்? சூடு பற்றிய தகவல் மூளைக்கு 27 மில்லி செகண்டுகளில் சென்று சேர்ந்துவிடும். நம் கைகளில் நொடிக்கு 50--60 மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும். ஸ்டவ்வில் நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள் என்றால், நாம் முடிவெடுத்து கையை எடுப்பதற்குள் கை வெந்துவிடும். இதற்காகவே, உடலின் இயல்பான பாதுகாப்பு அமைப்பு சூடு, குளிர்ச்சி என்பதை உடனே உணர்ந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும். இதனை மோட்டார் இயக்கம் எனலாம். சட்டை பட்டன் போடுவது, ஆணிகளை திருகிப் பொறுத்துவது போன்றவை இதில் அடங்கும்.  இவை முதுகெலும்போடு இணைந்துள்ளன. அனைத்து விவகாரங்களிலும் மூளை முடிவெடுத்தால் நாம் உயிர் வாழ முடியாது. எனவே சில விஷயங்களில் உடல் தன்னிச்சையாக முடிவெடுக்கும். எதற்காக, தன்னைக் காத்துக்கொள்ளத்தான். 

ஓசோன் படலம் அழிந்தால் என்னாகும்? - சிஎஃப்சி விபரீதம்

படம்
giphy.com மிஸ்டர் ரோனி குளோரோஃப்ளோரோ கார்பன் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன ஆகும்? குளோரோப்ளோரோ கார்பன்களைப் பற்றி ஏராளமான விஷயங்களை  பள்ளியில் படம் வரைந்து பாகம் குறித்து படித்திருப்பீர்கள். பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று, நம் தலைக்கு மேல் உள்ள 30 கி.மீ. பரப்பில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதிக்கிறது. ஓசோன் வாயுவின் அளவைக் குறைக்கும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் ரூம் போட்டு யோசித்தனர். இதன்விளைவாக பிறந்ததுதான் மான்ட்ரியல் நெறிமுறை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் 197 நாடுகள் இணைந்துள்ளன. இந்நாடுகளுக்கு ஒரு நோக்கம் உண்டு. ஒரே நோக்கம்தான் ப்ரோ. , 2050 க்குள் உலகில் பல்வேறு செயல்பாடுகளின் விளைவாக வெளியேறும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதுதான். இல்லையெனில் கட்டுப்படுத்த முடியாத மழை, வெள்ளம், அனல் காற்று என வெப்பமயமாதலின் விளைவுகள் அதிகரிக்கும். கூடுதலாக புற ஊதாக்கதிர்கள் உள்ளே வருவதால் தோல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கும். நன்றி - பிபிசி

விபத்திற்கு வெப்பம்தான் காரணம்!

படம்
தமிழ்நாட்டில் கோடைக்காலங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்று ஜாலியாக பலரும் டீ குடித்தபடி பேசியது நிஜமாகி இருக்கிறது. கடந்த ஆண்டின் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 57 ஆயிரத்து 927 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதேசமயம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலங்களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை 5,346 .இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1077. கூறியது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆராய்ச்சித்துறை. பனிக்காலமான டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 2,163 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 390 பேர் இறந்துள்ளனர். இதற்கு போக்குவரத்துத்துறை என்ன சொல்கிறது? கோடைக்காலத்தில் மக்கள் பலரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்கிறார்கள். அதனால் வண்டிகள் சாலைகளில் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றன என்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் இஷ்டப்படி குறுக்குவழிகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல நடைபாதைகளில் பாதசாரிகளை நடக்கவிடாமல் அதில் பைக்குகளை ஓட்டுவது, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவையும் விபத்துகளுக்கு காரணம். மேலும் பலரும் ஹெல்மெட்டுகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதில்லை என அலுத்துக்கொள்கிற

குளிரில் சளி பரவுவது எப்படி?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குளிர்பிரதேசத்திலும் சளி பிடிக்குமா? நிச்சயமாக. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இது நடக்கும். சளி பிடித்து மூக்கைச் சிந்தி சுவற்றில் துடைத்துவிட்டு நடப்பீர்கள். ரினோவைரஸ் இதற்கு காரணம். இதுகுறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு கால்களில் ஐஸ்கட்டிகளும், சிலருக்கு நீரும் வைக்கப்பட்டது. குளிர்ந்துபோன ஐஸ்கட்டியைக் காலில் வைத்திருந்தவர்களுக்கு சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் 30 சதவீதம் காணப்பட்டது. பிறருக்கு இதைவிட குறைவான வாய்ப்புகள் காணப்பட்டன. குளிர்ந்த சூழல், உடலில் வெள்ளை அணுக்கள் செயல்படும் வேகத்தை குறைப்பது உண்மை. இதன் விளைவாக, குளிர்ந்த சூழலில் நோய்க்கிருமிகள் வேகமாக உடலைத் தாக்குகின்றன. பிறருக்கும் பரவுகிறது. குளிர்ந்த சூழலில், உடலை சூடாக வைப்பதற்கே உடலின் சக்தி செலவாகிறது. எனவே, உடலை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது. நன்றி: பிபிசி