இடுகைகள்

மோடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனித வளக்குறியீட்டெண்டில் இந்தியாவுக்கு 129வது இடம்!

படம்
giphy நூற்றி எண்பத்தைந்து நாடுகளைக் கொண்ட மனித வளக்குறியீட்டுப் பட்டியலில் இந்தியா, 129 வது இடத்தைப் பிடித்துள்ளது.  போனமுறையை விட இம்முறை ஒரு இடம் முன்னேறி உள்ளது. மனித வளக்குறியீடு என்பது ஒருவரின் தனிமனித வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது. இதனை ஐ.நா அமைப்பு பட்டியலிட்டு வெளியிடுகிறது. தொண்ணூறுகளிலிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் இந்தியர்களின் வாழ்நாள் 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. பள்ளி செல்லும் சிறுவர்களின் அளவு 3.5 ஆண்டுகளாக கூடியுள்ளது. தனிநபர் வருமானம் 250 சதவீதம் அளவாக உயர்ந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. மனிதவளக் குறியீட்டில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத், ஜன்தன்யோஜனா ஆகிய திட்டங்கள் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 2005 லிருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் 271 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியே வந்துள்ளனர். உலகில் வறுமையில் உள்ளவர்களின் அளவில் இது 28 சதவீதம் ஆகும். மேலும், உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவு உயரவில்லை. 24 சதவீதமாக உள்ளது. தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பார்டர் மார்க

தொடக்க நிலை சுகாதாரம் - உயர்ந்து நிற்கும் டெல்லி

படம்
2015ஆம் ஆண்டு டெல்லி அரசு மொகல்லா மருத்துவச் சேவையைத் தொடங்கியது. நடப்பு ஆண்டுவரை 40 லட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். பல்வேறு நோய் கண்டறியும் சோதனைகளும் அவசியமான மருந்துகளும் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது, தொடக்கநிலை மருத்துவச் சேவைகள் என்பதை மட்டும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அக்டோபர் 20 வரை 300ஆக இருந்த மொகல்லா மருத்துவமனைகளின் எண்ணிக்கை விரைவில் கூடவிருக்கிறது.  மக்கள் முடிந்தவரை நோயுடன் அதிக தொலைவு நடக்ககூடாது. எளிமையாக அவர்களுக்கு மருத்துவம் கிடைக்கவேண்டும். சாதாரண மனிதர்கள் அரசியலுக்கு வந்தால்தான் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கும் என்று ஒருவாறு பேசி மக்கள் நலனிலிருந்து அரசியலுக்கு பைபாஸ் ரூட்டில் சென்று முடித்தார். இந்த சிறு மருத்துவமனைகளை நாம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் ஒப்பிடலாம். டெல்லி அரசு இலவச பேருந்து வசதி, மொகல்லா மருத்துவமனைகளை சொல்லி வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மொகல்லா மருத்துவமனைகளில் 60 ஆயிரம் மதிப்புள்ள நோய் கண்டறியும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, நீரிழிவு நோய

இந்திய அரசின் இ சந்தை! - வெளிப்படையான அரசு சந்தை!

படம்
அரசின் இ சந்தை - GeM இந்திய அரசு, அரசுத்துறைகளுக்கான பொருட்களை அனைவரும் அறியும்படி எளிய முறையில் வாங்குவதற்கான சந்தையை தொடங்கியுள்ளது. இதற்குப் பெயர் GeM ஆகும். பல்வேறு கட்டங்களாக இ சந்தை வலைத்தளத்தை அரசு மேம்படுத்தி வருகிறது. சிறு,குறு தொழில்களை செய்து வருபவர்கள், இத்தளத்தில் வியாபாரியாக பதிவு செய்துகொண்டு பொருட்களை அரசு துறைகளுக்கு விற்று பயன் பெறலாம். நோக்கம்! அரசின் இ சந்தை வலைத்தளத்திற்கான திட்டவரைவு 2016- 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று, இ சந்தைக்கான திட்ட வரைவை வெளியிட்டார்.  வெளிப்படையான முறையில் சரியான விலையில் பொருட்களை அரசுத்துறைக்கு கொள்முதல் செய்யும் சிந்தனையில் அரசின் இ சந்தை உருவாகியுள்ளது. இதன் இயக்குநராக பொதுத்துறையில் 32 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திரு. தலீன் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், கோல்கட்டாவின் வருவாய்துறையில் நிதியை உயர்த்த பாடுபட்டுள்ளார்.  இந்திய மாநிலங்களிலுள்ள பொருளாதார மையங்களை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய சாதனைகளுக்கு சொந்தக்காரர். செயல்பாடு! இதில் இணைந்துள்ள வியா

லைட்டாக பிரச்னைகளை அணுகினால் - மேக்கிங் இந்தியா ஆசம்!

படம்
மேக்கிங் இந்தியா ஆசம் சேட்டன் பகத் ரூபா ரூ.160 இந்தியாவில் இல்லாத பிரச்னைகளே இல்லை. சாதி, மதம், இருக்கிறவன், இல்லாதவன், ரூபாய் சரிவு, விலைவாசி உயர்வு, சாலைவசதி, பெண்களின் கல்வியின்மை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமை, ஊர்களுக்கு இடையே தீண்டாமைச்சுவர் என பேசிக்கொண்டே போகலாம். சேட்டன் பகத் இந்த நூலில் எடுத்துக்கொண்டு பேசுவது அனைத்துமே ஆங்கில ஊடகங்களில் டேபிளைச் சுற்றி உட்கார்ந்து விவாதிப்பார்களே அந்த ரக மேட்டர்கள்தான். அதனால் மனம் பதறி பிபி எகிறி, வாசிக்க வேண்டியதில்லை. லைட்டாக வாசியுங்கள். அவ்வளவுதான். இதில் எப்போதும்போல அவர் இளைஞர்களுக்கு முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கும் ஊழல், லஞ்சம், வாக்குரிமை, அரசியல்வாதிகளின் போலி முகமூடித்தனம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார். இதில் இஸ்லாமியர்கள், மத அடிப்படை வாதம் பற்றி சேட்டன் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம் பாஜகவை புகழ்பாடும் கட்டுரைகளும் உண்டு. அதில் ஒன்றுதான், மோடி எப்படி தேர்தலில் வென்றார் என்ற கட்டுரை. அனைத்து கட்சிக்காரர்களுக்கும் உதவும்படி பாஜக, காங்கிரஸ் என பாரபட்சமின்றி சில கட்டுரைகளை எழுதியுள்ளார். மொ

வேறுபாடுகளை மறப்போம்! - சேட்டன் பகத்

படம்
நான் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை நினைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஏன் இப்போது திடீரென அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. காரணம், இந்துக்கள் எரித்துக்கொல்லப்பட்ட அடுத்தடுத்த நாட்களில் முஸ்லீம்கள் அதேபோல தாக்கி கொல்லப்பட்டார்கள். இதற்கான பழி இருதரப்பிலும் போடப்பட்டது. வசைமாரி தூற்றப்பட்டது. இன்றுவரையிலும் இதற்கான காரணம் இவர், அவர் என ஆட்காட்டி விரல்கள் மாற்றி மாற்றி காட்டப்பட்டு வருகிறது. இந்த சொற்களும் ஆவேசமும் எனக்கு உறுதிப்படுத்துவது நாம் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் ஏராளமான பிளவுகளைக் கொண்டு ஒற்றுமையாக இல்லை என்பதுதான். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நான் நிச்சயம் ஏற்பதில்லை. சில விஷமிகள் இன்று சாப்பிடும் உணவைப் பற்றிக்கூட சர்ச்சையாக்கி ஒருவரை தாக்கி கொல்லமுடிகிறது என்றால் வெறுப்பு எப்படி தீயாக பரவுகிறது பாருங்கள். எளிமையான மேடைப்பேச்சு இதனை கிளறி விட போதுமானது. அப்படியென்றால் நமது மனதில் இதுபற்றிய கருத்தும், அதற்கான பதிலடியும் தயாராகவே இருக்கிறது. கண்ணுக்கு கண் என்ற பழிக்குப்பழி வெறி நம்மை மதம் சார்

மோடியை ஏன் அனைவருக்கும் பிடிக்கிறது? - சேட்டன் பகத்

படம்
நாட்டில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்? ஆனால் மோடி எதிர்மறையாகவே அதிகம் பேசப்பட்டிருக்கிறார். இன்றுவரையிலும் கூட அப்படித்தான். ஆனால் அவரைத்தான் வலிமையான தலைவர்களாக மக்கள் கருதி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏன் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், அத்வானி ஆகியோரை விட மோடி பெரிய தலைவராக இருக்கிறார்? தன்னை அவர் அப்படி உருவாக்கிக் கொண்டது முக்கியமானது. மன்மோகன் சிங்கை குறைத்து மதிப்பிட முடியாது. தாராளவாத சீர்திருத்தங்களை தொண்ணூறுகளில் அமல்படுத்திய நிதி அமைச்சர், முன்னாள் பிரதமராகவும் பணியாற்றியிருக்கிறார். தான் செய்யும் வேலைகளை செய்யப்போவதை எதற்கு என்று மக்கள் முன் சொற்பொழிவாற்றியது நினைவுக்கு வருகிறதா? அப்படி ஒரு காட்சி மன்மோகனுக்கே இருக்காது. ஏனெனில் அவர் இயல்பு அதல்ல. மோடி முந்தைய பிரதமரிடம் இல்லாத அம்சங்களை கொண்டிருப்பது இங்குதான். மோடி அவரது துறைசார் அமைச்சர்கள் பேசுவதற்கு முன்னர் இவரே அறிவிப்புகளை கூறிவிடுவார். எளிமையாக பேசுவார் என்பது முக்கியமானது. குறிப்பாக, குஜராத் முதல்வராக தன்னை நிரூபித்திருக்கிறார். அதேசமயம் இந்து மக்களின்  வாக்குகளைப் பெறுவதற்கான

இந்தியாவை உடைக்கும் வலதுசாரித்துவம்! - கபில்சிபல்

படம்
பிரிவினையின் விதைகள் தூவப்படுகின்றன! கபில் சிபல், காங்கிரஸ். அதிகாரம், உடல் பலத்தை வைத்துச் செய்யும் அரசியல், சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயனளிக்கும். மோடி அரசு இதனை திடமாக நம்பி, அதற்கான திட்டங்களோடு பயணிக்கிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற மோடி, உணர்ச்சிகரமான இந்துவின் மனநிலையைப் பிரதிபலித்தார். விளைவு, அதுபோலவே போலியாகப் பேசினார். வரலாற்றில் நடந்த தவறுகளுக்கு, இந்துக்களுக்கு நேர்ந்த பிரச்னைகளைத் தீர்ப்போம் என விநோதமாக பேசினார். கூட்டணி ஆட்சியில் சில விஷயங்களை துணிச்சலாக பாஜக செய்யவில்லை. ஆனால் இம்முறை கிடைத்த பெரும்பான்மை  பல அதிரடி முடிவுகளை எடுக்க வைத்திருக்கிறது. கர்வாப்சி எனும் திட்டத்தை ஆர்எஸ்எஸ் அதன் துணை அமைப்புகளாக பஜ்ரங்தள் ஆகியவை முன்னிலைப்படுத்தி சமூக ஒழுங்கை சீர் குலைத்தன. மெல்ல சமூகத்திலுள்ள மக்களிடையே அமைதியை உடைத்து பயத்தை உண்டாக்கும் சம்பவங்களை கலாசார காவலர்கள் ஏற்படுத்தினர். ஆண், பெண் காதலித்து திருமணம் செய்வது கிரிமினல் குற்றமல்ல. ஆனால் அதனையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் இழிவு செய்தனர். சாதியை அழிக்கும் காதல் திரு

மோடியின் இந்தியா எப்படியிருக்கவேண்டும்? - சேட்டன் பகத்

படம்
மோடி என்ன செய்யவேண்டும்? - சேட்டன் பகத் மோடி, 2014 ஆம் ஆண்டில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு வாக்களித்த மக்கள், எதிர்கட்சிகள், அரசியல் சட்டங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டிவிட்டார் . இனி அவர் எதிர்பார்ப்பது, பயணிப்பது 2024 ஆம் ஆண்டு  நோக்கித்தான். ஏறத்தாழ அவரின் பயணம் தடங்கலற்று அவரே ஏற்படுத்திக்கொண்ட பாதையில் வேகமாக சென்று வருகிறது. அவர் ஆட்சிக்கு வந்தபோது சேட்டன் பகத் சில விஷயங்களை பரிந்துரைத்தார். வெளிநாட்டு இந்தியர்களுடன் பாஜக அரசுக்கு நல்லுறவு இருக்கிறது. அதன்மூலம் இந்தியா வளமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை உருவாக்க முயலலாம். மன் கீ பாத்  - மனதின் குரல் போன்ற நிகழ்ச்சிகள் ஒருவழிப்பாதையாக அமையக்கூடாது. மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை அறிவது அவசியம். இதுவே ஜனநாயகப்பாதையில் பாஜகவை நடக்க வைக்கும். பாஜக வெற்றியடையும் அதே நேரத்தில் கட்சிக்குள்ளிருந்து இந்து மத வெறிக் கருத்துகளைக்  கேட்கிறோம். பாஜக, இந்துக்களை பெரும்பான்மைப்படுத்தினாலும் மோடிக்கு வாக்களித்தது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். இதனை  அனைத்து மக்களுமே செய்தனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஜிஎஸ்டி சுணக்கம் - மறைமுக வரியில் தடுமாற்றம்!

படம்
dna india உற்பத்தியைப் பாதித்த வரி வசூல்! 2017ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று, நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக இந்த வரி இருக்கும் எனக் கூறப்பட்டது. நாட்டில் வரிகள், நேர்முகமாக மற்றும் மறைமுகமாக  வசூலிக்கப்படுகிறது. அப்போது, ஜிஎஸ்டி வரி, முந்தைய வரி வசூலை விட 2 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தன் இலக்கை எட்டுவதில் சுணங்கியுள்ளதுதான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.  உள்நாட்டு உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டு 13.9 சதவீதத்திலிருந்து 12.2 சதவீதமாக (2018-19) குறைந்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு திட்டமிட்டதை விட 1.31 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையாகிறது.  7.3 சதவீதமாக (2013-14) இருந்த வரி வருவாய் தற்போது, 6.9 சதவீதமாக (2018-19) குறைந்துவிட்டது. இந்த வருவாய் இடைவெளி சதவீதம் அதிகரித்து வருவது ஆபத்தானது. நேர்முக வரி விதிப்பில் அலுவலகப் பணியாளர்கள், பெருநிறுவனங்கள் உள்ளடங்குவர். மறைமுகவரி விதிப்பில் பொருட்களை வாங்குவது, சேவைகளைப் பெறுவது ஆகியவை வரும். மறைமுக வரி விதிப்பில்தான், நி

ஊட்டச்சத்துக்குறைவால் இந்தியா தவிப்பது ஏன்? - ஸ்மிருதி இரானி

படம்
நேர்காணல் ஸ்மிருது இரானி பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர். இந்தியா 73ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுகிறதே? பிரதமர் மோடி உருவாக்கிய போஷன் அபியான் திட்டம் மூலம் நாங்கள், ஊட்டச்சத்துக்குறைவை தீர்ப்போம். திட்டம் பற்றிய அறிக்கைகள் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நிதி ஆயோக்கின் அறிக்கையைப் பின்பற்றி இதனை செய்வோம். பிரதமரின் முக்கியமான திட்டம் என்கிறீர்களே? இந்திய அரசு மட்டும் இதனை செய்ய முடியாது. கூட்டாட்சி முறையில் மாநிலங்களும் இத்திட்டத்தில் இணைந்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். இந்தியாவின் ஜிடிபி விழுந்துவிட்டது. கலோரிகளின் அளவும் குறைந்து வருகிறது. குழந்தைகளின் உணவு பற்றி அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லையே? பிரதமர் மோடி வாக்குவங்கிக்காக வேலை செய்பவரல்ல. புதிய இந்தியா இப்போதுதான் உருவாகிக்கொண்டு இருக்கிறது. பரிக்சா பே சாச்சா என்பதை உருவாக்கியது மோடிதானே? படிக்கும் குழந்தைகளுக்கு உள்ள மன அழுத்தம் பற்றி உணர்ந்த தால்தானே அப்படி திட்டங்களை உருவா

தனிநபரை விட தேசம் முக்கியம்! - சேட்டன் பகத்

படம்
அண்மையில் நான் இணையத்தில் சர்வே ஒன்றை கவனித்தேன். அதில் மோடி அவசரநிலையை அறிவிக்கிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போல. எதற்கு? கருப்பு பணத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான். அதை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று ஆய்வில் கேட்கப்பட்டிருந்தது. உடனே மோடியின் பக்தர்கள் முதற்கொண்டு ஜே ஜே என கருத்துகளைக் குவித்து 51 சதவீத ஆதரவை நொடிகளில் திரட்டி விட்டனர். மோடி ஒரு தேநீர் விற்பனையாளராக அலைந்து திரிந்து உழைத்து பிரதமராக வந்தவர். முதல்வராகவும் தன் திறமையை நிரூபித்தவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆனால் நாட்டை விட மோடி என்ற தனிநபரின் புகழ் உயருவது நாட்டிற்கு நல்லதல்ல. அது சர்வாதிகாரத்தன்மையையே உருவாக்கும். சிலருக்கு நேரு பிடிக்கும், சிலருக்கு காந்தி, சிலருக்கு மோடி என விருப்பங்கள் பலவாக இருக்கும். நாம் அந்தந்த காலங்களில் அவரின் செயற்பாடுகளை நல்லவிதமாக உள்ளது பலரிடமும் விவாதித்திருப்போம். இந்த இடத்தில்தான் பல்வேறு கருத்துகளின் கூடலாக அதன் நல்லவை, அல்லவை தெரிய வரும். ஆனால் மோடி அமல்படுத்திய சட்டங்களை நீங்கள் வலைத்தளங்களில் விமர்சனம் செய்து அதன் யதார்த்த நிலைக்கு எடுத்துக்காட்டு

மக்கள் கொடுத்த பொறுப்பை அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்! - துன்பெர்க்

படம்
நேர்காணல் - கிரேட்டா துன்பெர்க் உலகளவில் இயற்கை சூழலியலுக்களான நாயகியாக மாறியிருப்பவர் இவர்தான். ஸ்வீடனைச்சேர்ந்த பதினாறு வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க், சூழலியலுக்காக போராடுவதில் முன்நின்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். வெப்பமயமாதலை சமாளிக்க இந்தியா என்ன செய்யவேண்டும்? அது குறித்த பிரசாரத்தை மக்களிடம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு வெப்பமயமாதலைக் குறைக்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தவேண்டும். இந்தியா வளரும் நாடு என்பதால் அதனை விட ஸ்வீடன் நாடு இதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென நினைக்கிறேன். மோடிக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? பிரதமர் மோடி வெப்பமயமாதலை முக்கியமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயலாற்றவேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை இந்த பிரச்னையின் விளைவுகளை உணரமாட்டார்கள். உங்களுக்கு பொறுப்புகள் இருந்தாலும் அதனை நிறைவேற்றாதபோது உலகமே பின்னாளில் உங்களை அவதூறாக பேசும். இந்தியாவிலுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? வெப்பமயமாதலுக்காக போராடும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நான் வ

புதிய இரும்பு மனிதர்: மோடி - குற்றச்சாட்டுக்களை உடைக்கும் ஆசிரியர்

படம்
நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் அரவிந்தன் நீலகண்டன் கிழக்கு டோனி ஜா படத்தின் ஆரம்பம் போல ஒரு காட்சி. அகழியில் முதலை உள்ளது. அதைக் கடந்து மரத்தின் மேலேறி காவிக்கொடியை கட்டவேண்டும். அதை கட்ட பலரும் தயங்க ஒரு சிறுவனம் தயங்காமல் மேலேறி அதை செய்கிறான். வேறுயார்? இந்தியாவின் பிரேக்கை கழற்றி போட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையில் தள்ளிக்கொண்டிருக்கிறாரே அவரேதான். நம் தற்போதைய பிரதமர் மோடியின் கதை இது. இதோடு ஆர்எஸ்எஸ்ஸின் தோற்றம், மருத்துவர் கேசவபலிராம் ஹெட்கேவர், சதாசிவ கோல்வல்கர், தேவரஸ் ஆகியோரின் வாழ்க்கையும் இதில் உள்ளது. ஆனால் மோடியைக் கவனிக்கவேண்டும் என்பதால் அனைத்தையும் வெட்டிவிட்டார்கள். தீன் தயாள் உபாத்தியாயவை தன் லட்சிய புருஷராக வழிபட்டுக்கொண்டிருந்தவர் மோடி. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஏன் தீன் தயாள் உபாத்யாய பெயர் என விளங்காதவர்களுக்கு இப்போது நன்றாக புரிந்திருக்கும். மோடி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிற நூல் இது. ரயில் நிலையத்தில் டீ விற்கிறவராக இருந்து ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கு, தொண்டர்களுக்கு டீ தந்து உபசரித்து பின்னர் அரசியலில் நுழைகிறார் மோடி.

இந்திய தேர்தல் 2019: கறுப்பு பணத்தை ஒழிப்பது எப்படி?

படம்
இநியூஸ்ரூம்/கறுப்பு பணம் தேர்தலில் கறுப்பு பணம்! ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும்போதும், இடைத்தேர்தலின் போதும் கறுப்பு பணம் பயன்படுத்தப்படுகிறது என்ற புகாரை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்த விவகாரத்தில் தொழில்நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகளின் பங்கு உள்ளது என தேர்தல் ஆணையம் கூறிவருகிறது. ஆனாலும் இதன் மீது அரசு பெரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி இவ்வகையில் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்கு அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் தேவை என்று கூறின. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தல் பத்திரங்களையே வெளியிட்டு கல்லா கட்டிவிட்டது. இதில் முதலீடு செய்பவர்கள் யார் என்ற விவரங்கள் வெளிப்படையாக பேசப்படாமல் உள்ளது இதனை தீவிரமான பிரச்னையாக்குகிறது.. இன்று கட்சிகள் பெறும் 70 சதவீத பணம் யார் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் வந்து சேருகிற பணம். ஆனால் இந்த பணம் எங்கிருந்து வருகிறது என சட்டத்திற்கு தெரியாவிட்டாலும், மக்களுக்கு ஏறத்தாழ தெரிந்துவிட்டது போலத்தான். ஆனால் அரசு வெளிப்படையாக ஊழலை ஒழிப்போம் என்று கூறினாலும் அதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அதற்கு என்ன

தேர்தலின் கதை 2 - தாமரை மலர உதவிய கை!

படம்
Telegraph India தேர்தலின் கதை 2 பதினேழாவது மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வருவார்கள்? மோடியா, ராகுலா என  விவாதங்கள் அனல் பறக்கின்றன. இதற்கு முன்னர் தேர்தலின் கதையில் மக்களவைத் தேர்தல் குறித்த வெற்றி, தோல்வி விவரங்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இதோ... 1989 பஞ்சாபில் தீவிரவாதத்தைத் தடுக்கும் முயற்சி, இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் விவகாரத்தை ராஜீவ் கையாண்ட விஷயங்கள் இத்தேர்தலின் போது பேசப்பட்டன. சோசலிஸ்டுகள் இம்முறையும் ஜனதா தள் கட்சியுடன் கூட்டணி அமைத்தனர். ஆனால் 143 சீட்டுகளை மட்டுமே பெற்றனர். விபி சிங்கின் தேசிய முன்னணி சிறுபான்மை அரசாக ஆட்சிக்கட்டிலில் ஏறியது. இடதுசாரிகளும் பாஜகவும் இந்த அரசுக்கு உதவியாக இருந்தன. ஆனால் ஓராண்டில் இந்த ஆட்சி கவிழ, சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் ஆட்சி அமைத்தார். 1991 இத்தேர்தலிலும் காங்கிரஸ் தன் பெரும்பான்மையை விட்டு கொடுத்துவிட்டது. இதனால் சிறுபான்மை அரசான காங்கிரஸ், நரசிம்மராவை ஆட்சித்தலைவராக கொண்டு ஆட்சி செய்தது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் பெரும்பான்மை பலமின்றி சமாளித்தே ஆட்சி செய்தது சிரிக்காத

2014- 2019 மாற்றங்கள் என்ன?

படம்
pinterest/creative gaga 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கும் விரைவில் நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. விலைவாசி உயர்வு என்பது பொதுவான ஒன்று. அதில்லாமல் பிரிவினைவாதம், அரசைக் கேள்விகேட்கும் நெஞ்சுரம் குன்றியது, அரசு அமைப்புகளின் நம்பிக்கை உடைந்துபோனது, வெற்றுப் பேச்சுகள், அநாகரிக செயல்கள், சுயநலன் அரசியல், போலி தேசபக்தி நாடகங்கள் என பல பாதிப்புகள் நேர்ந்திருக்கின்றன. பெட்ரோல் உயர்வு 71.56(2014) , 72.24(2019) டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 59.3         -  70.6 சென்செக்ஸ் 24,217 - 35,867 பிஎஸ்இ - 9,206  - 14, 196 ஏற்றுமதி (ஏப்-ஜூன்) பில்லியனில் 264   170 கழிவறை உருவாக்கம் 38%   98% காய்கறிகள் விலை(டெல்லி, கி.கி) உ.கிழங்கு 25 15 தக்காளி 15  34 வெங்காயம் 23   20 உள்ளூர் விமானப்பயணிகள்(கோடிகளில்) 6.7    13.6 நுகர்வோர் நம்பிக்கை 117.1 128.9 மாசுபாடு 8 வது இடம் 3 வது இடம் மொபைல் டேட்டா பயன்பாடு 33 எம்.பி - 8.3 ஜி.பி நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா