இடுகைகள்

அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தவளையைக் காக்கப் போராடும் சூழலியலாளர்! - மதுஸ்ரீ முட்கே

படம்
  மதுஸ்ரீ முட்கே தவளை இனத்தைப் பாதுகாக்கும் சூழலியலாளர்!  மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர்  மதுஸ்ரீ முட்கே (madhushri mudke ). கர்நாடகத்திலுள்ள, மணிபால் நகருக்கு பிசியோதெரபி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற வந்தார். படிக்கும்போது, அங்குள்ள இயற்கைவளம் மற்றும் பறவைகளால் ஈர்க்கப்பட்டார்.  இதன் விளைவாக, தனது வேலையைக் கூட சூழலியலுக்கு மாற்றிக் கொண்டார். 2015ஆம் ஆண்டு தொடங்கி நகரமயமாதலால் பாதிக்கப்படும் தவளை இனங்களைப்  பற்றி ஆராய்ந்து வருகிறார்.  மதுஸ்ரீயின் பெரும்பாலான ஆய்வுகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்றது. கோட்டிகெஹரா டான்சிங் ஃபிராக்கை (kottigehara dancing frog) காப்பாற்றுவது பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். தற்போது, பெங்களூருவில் உள்ள அசோகா டிரஸ்டில் (ATREE) முனைவர் படிப்பை படித்து வருகிறார். இந்த அமைப்பு இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த ஆராய்ச்சிப்படிப்புகளை கொண்டுள்ளது. இங்கு ஆராய்ச்சி செய்யும் மதுஸ்ரீக்கு தேவையான உதவித்தொகையை, லண்டன் விலங்கியல் சங்கம் வழங்கிவருகிறது.   மாசுபாடு, அணை, காடுகள் அழிப்பு காரணமாக நடனத் தவளையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ”தவ

தெரியுமா - உயிரி எரிபொருள்

படம்
  pixabay உயிரி எரிபொருள் உயிரி எரிபொருள்,  தாவரங்கள், பாசி, விலங்கின்  கழிவுப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரிம எரிபொருட்களில் மாசுபாடு அதிகம். உயிரி எரிபொருட்களில் மாசுபாடு குறைவு என்பதோடு அதனை எளிதாக புதுப்பிக்க முடியும். உயிரி எரிபொருளைத் தயாரிக்க, பாசி  ஏற்ற இயற்கை ஆதாரம் என  சூழலியலாளர்கள் கூறுகின்றனர். சோளத்திலிருந்து எளிதாக உயிரி எரிபொருள் தயாரித்து வருகிறார்கள். இதற்கு, பயோ எத்தனால் என்று பெயர். அமெரிக்காவில் இம்முறையில்  உயிரி எரிபொருளைத் தயாரிக்கிறார்கள்.  உயிரி எரிபொருள் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம். சூரிய ஆற்றல், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி பாசி வளர்ச்சி பெறுகிறது. பாசியை அறுவடை செய்து அதிலிருந்து எரிபொருளை சுத்திகரித்து பெறுகிறார்கள். இதனை எரிவாயு,பெட்ரோல், டீசல் போல வாகனங்களில் பயன்படுத்தலாம். இதனை எரிக்கும்போது குறைந்தளவு கார்பன் டைஆக்சைடு வாயு வெளியேறும். இது சுழற்சியாக நடைபெறும்.  எரிபொருளின் தேவைக்காகவே பயிர்களை விளைவித்தால் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார மற்றும் சூழலியலாளர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.   த

தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முயன்ற முதல் ஆராய்ச்சியாளர்!

படம்
  கூகுள் ஆர்ட் அண்ட் கல்ச்சர் - லாஸரோ லாஸரோ ஸ்பாலன்ஸானி (lazzaro spallanzani) லாஸரோ, வடகிழக்கு இத்தாலியில் 1729ஆம் ஆண்டு பிறந்தார். அப்பா சொன்னார் என்ற காரணத்திற்காக சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பில் சேர்ந்தபிறகுதான் தனக்கு ஆர்வம் இருக்கும் துறைகளை அடையாளம் கண்டார். இயற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததால் சட்டப்படிப்பை கைவிட்டார்.   தனது முப்பது வயதில் கத்தோலிக்க பாதிரியாகியிருந்தார். கூடவே மாடனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். 1769ஆம் ஆண்டு பவியா பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது. 1799ஆம் ஆண்டு காலமாகும் அவரை அப்பல்கலையில்தான் பணியாற்றினார். ஐரோப்பாவில் இயங்கி வந்த பல்வேறு அறிவியல் சங்கங்களில் லாஸரோ உறுப்பினராக இருந்தார். செரிமானம் பற்றி முதலில் ஆராய்ச்சியைத் தொடங்கிய லாஸரோ இறுதியில் விலங்குகளின் இனப்பெருக்கம் பற்றி கவனம் செலுத்தினார்.  தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முடியுமா என்று சோதித்த முதல் அறிவியலாளர் லாஸரோ ஸ்பாலன்ஸானிதான். 1930ஆம் ஆண்டு வௌவால்கள் எப்படி எதிரொலி மூலம் பறக்கின்றன என்பதைப் பற்றிய கண்டுபிடிப்பு லாஸ

வாசிப்பு பழக்கத்தை மாணவர்களின் மனதில் விதைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  ஆசிரியர் உமா மகேஸ்வரி வாசிக்கும் பழக்கம் என்பது மாணவர்களுக்கு இன்று அவசியமானது. அதிலும் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமாகிக்கொண்டு இருக்கும் நிலையில், அவர்களது கற்பனைத் திறனை வளர்க்க வாசிப்பு உதவுகிறது. இதற்கு சில ஆசிரியர்கள் எப்போதும் உதவி வருகின்றனர். கூடவே அதனை வளர்க்கவும் மாணவர்களுக்கு ஆதரவை வழங்குகின்றனர். அப்படி ஒருவர்தான் ஆசிரியர் உமா மகேஸ்வரி. இவர் குரோம்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இங்கு வகுப்பில் மாணவர்களுக்கென தனி நூலகத்தை உருவாக்கியிருக்கிறார்.  மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களை விட அவர்கள் நூல்களை வாசிப்பது, அதை பற்றி மதிப்பீடுகளை முன் வைப்பதற்கும் கூடுதல் மதிப்பெண்களை வழங்குகிறார். இது மாணவர்களுக்கு நூல்களின் மீது அக்கறை செலுத்த வழிவகுத்தது. இதன் விளைவாக, அரசுப் பள்ளி மாணவி விமானத்தில் செல்லும் வாய்ப்பையும் நூல் வாசிப்பு வழங்கியிருக்கிறது. திரைப்பட நிறுவனம் ஒன்று உங்கள் கனவு பற்றி கட்டுரை எழுதுங்கள் என்று சொல்லி நடத்திய போட்டியில் மாணவி வெற்றி பெற்று முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்து திரும்பியிருக்கிறார்.  2005ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் ஜன்ச

ரோபோக்களை அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்திய அமெரிக்க எழுத்தாளர்! - ஐசக் அசிமோவ்

படம்
  எழுத்தாளர் ஐசக் அசிமோவ் அறிவியல் ஜெகஜால எழுத்தாளர்  ஐசக் அசிமோவ் கலையும், அறிவியலும் தனித்தனி உலகம் என்று கூறுபவர்கள் உண்டு. இன்றுவரையிலும் இதனை கோட்பாடாக கருதி விவாதம் செய்பவர்கள் பலர். ஆனால்,  அறிவியல் எழுத்தாளர் ஐசக் அசிமோவ் இரண்டு பிரிவுக்கும் தொடர்புண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என கூறினார்.  கலைஞனின் அறிவுடன் பிரபஞ்சத்தைப் பார்ப்பது என கூறினார் ஐசக் அசிமோவ். இவரும் இதற்கு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் பேராசிரியராக பணியாற்றினார் ஐசக் அசிமோவ்.  அறிவியல் புனைவுகளை எழுதியதில் இவர் இன்றளவும் மகத்தான எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். இவர் எழுதிய காலாடிக் எம்பயர், ரோபோட் ஆகிய தொடர் கதைகளின் வழியாக மூன்று முக்கிய எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெற்றார். இப்பட்டியலில் ஆர்தர் சி கிளார்க், ராபர்ட் ஹெய்ன்லெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  சோவியத் யூனியனிலிருந்து இடம்பெயர்ந்த யூதக்குடும்பம் ஐசக்கினுடையது. 1920ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று பிறந்தவர். இவர்களது பெற்றோர் அமெரிக்காவில் தங்களது எதிர்காலத்தை உருவாக்க கடினமாக உழைத்தனர். மிட்டாய், செய்திதாள், மாத இத

குழந்தைகள் உணவுப்பொருட்களை அடிக்கடி துப்பிவிடுவது ஏன்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? விண்வெளியில் கண்டுபிடித்த ஏதாவது பொருட்களை நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா? நேரடியாக அறிவியலின் பயன்பாடு என்றால் வானியல் விஷயத்தில் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இந்த துறையில் உருவாகும் விஷயங்கள் எல்லாமே கோட்பாடு, கலாசார ரீதியான தன்மை கொண்டவை. விண்வெளியில் நாம் ஆய்வு செய்யும் விஷயங்கள் தொடர்பான அனைத்தையும் நாம் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா என்றால் முடியாது. ஆனால், அணு தொடர்பான ஆராய்ச்சிகள் மூலம் நான் அணு ஆற்றலை எப்படி தினசரி வாழ்க்கைக்கு பயன்படுத்துவது என அறிந்துகொண்டோம். மேலும் டிஜிட்டல் கேமரா, எம்ஆர்ஐ  ஸ்கேனர் ஆகியவற்றை நாம் இந்த வகையில் வானியல் ஆராய்ச்சி மூலமே மேம்படுத்தினோம். இப்போது இதனை படிக்கும்போது, சற்றே கழுத்தை சாய்த்து மணிக்கட்டில் உள்ள கேசியோ வாட்சை பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் கூட இப்படிப்பட்ட வானியல் ஆராய்ச்சி முன்னேற்றம் காரணமாக உருவானதுதான்.  குழந்தைகள் உணவுப் பொருட்களை பெரும்பாலும் துப்பிவிடுகிறார்களே அது ஏன்? குழந்தைகள் தாய்ப்பால் வழியாகவே தங்களுக்கு தேவையான ஆற்றலைப் பெறுகிறார்கள். முதல் ஆறுமாதம் தாய்ப்பால் எந்தளவு முக்கியம்

2022 ஆம் ஆண்டு அறிவியல் நூல்கள்! - நியூ சயின்டிஸ்ட் இதழ் பரிந்துரை

படம்
  தி அன்ஃபெமிலியர் கார்டன் பெஞ்சமின் பெர்சி ஹாடர் அண்ட் ஸ்டப்டன் இதுதொடர் வரிசை நூல். இரண்டு நூலாக வெளியாகிறது. கோள் ஒன்று குறிப்பிட்ட வகை உலோகத்துடன் வருகிறது. இது எப்படி சூழலை மாற்றுகிறது என்பதுதான் நூலின் மையம்.  புளூடோசைன் லூசி கிசிக் ஓரியன் எழுத்தாளர் அணு விஞ்ஞானி. புவி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். புளூடோ, வேற்றுகிரக இனங்கள் கண்டறிந்தது ஆகியவற்றை பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.  தி கார்டோகிராபர்ஸ்  பெங் ஷெப்பர்ட் ஹாசெட் அப்பாவின் மரணத்தைப் பார்க்கிறார் அவரது மகள். இளம்பெண்ணான அவருக்கு மெல்ல தந்தையின் பொருட்களைப் பார்க்க பல்வேறு புதிர்கள் தெரிய வருகின்றன.  கோலியாத்  டோசி ஒன்யேபுசி டோர்டோட்காம் 2050இல் விண்வெளியில் காலனிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு சென்று வாழ அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி. மீதியுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே நாவலின் முக்கியமான மையம். ட்ரீம்ஸ் பிக்கர் தென் ஹார்ட்பிரேக் சார்லி ஜேன் ஆண்டர்ஸ் டைட்டன் விண்வெளியில் வாழும் புத்திசாலிகள் பற்றிய கதை. இளம்வயதினர், அறிவியல் நாவல் என இரண்டும் கலந்த வகையில் வேடிக்கையாக, மாற்

வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி!

  வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும் ஆராய்ச்சி முற

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்த அறிவியல் அமைப்பு! - இந்தியா 75

படம்
  இன்று அறிவியல் அமைப்புகள் அதில் சேர்க்கப்படும் பல்வேறு முட்டாள்களால் உலகளவில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறது. விலங்கின் கழிவுப்பொருளில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கிறது என ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் இந்திய அறிவியல் கழகம் நிறுவப்பட்டதால்தான், இந்தியாவின் தொழில்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது என்பது உண்மை. இந்தியன் இன்ஸ்டிடியூட்ஆப் சயின்ஸ் எனும் அமைப்பு தொழில்துறைக்கான பல்வேறு ஊக்கத்தை கண்டுபிடிப்புகளை வழங்கியது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய மண்ணில் வேரூன்ற, இந்த அறிவியல் அமைப்பின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதைப்பற்றித்தான் இங்கே நாம் படிக்கப் போகிறோம்.  இந்திய அறிவியல் கழகத்தை உருவாக்குவதற்கான ஐடியாவைக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர். இவர், ஜப்பானில் இருந்து சிகாகோவுக்கு ஜாம்ஷெட்ஜி டாடாவுடன் ஒரே விமானத்தில் பயணித்தார். அப்போது அவர், மேற்குலகில் இருக்கும் அறிவியல் அமைப்புகளை போல இந்தியாவில் ஒன்றை அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்தியர்களின் திறமையை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று வலியுறுத்தினார். இதற்குப்பிறகுதான் 1898ஆம் ஆண்டு நவ.23 அன்று தனது முடிவை

கொசுவினால் எய்ட்ஸ் பரவாதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
 பதில் சொல்லுங்க ப்ரோ? சிரிஞ்சின் ஊசி மூலம் எய்ட்ஸ் பரவுகிறது என்றால் கொசு மூலம் ஏன் பரவாது? சிரிஞ்சிலுள்ள ஊசியைப் பயன்படுத்தி எய்ட்ஸ் உள்ளவருக்கு பயன்படுத்தி அதனை தூய்மைப்படுத்தால் அடுத்தவருக்கு பயன்படுத்தினால் எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  ஊசியில் ஏற்கெனவே உள்ள டி செல்களைப் பயன்படுத்தி வைரஸ் கிருமி தன்னை பெருக்கிக்கொள்ளும். இதனை பயன்படுத்துபவரின் உடலிலும் உடனே டி செல்களை தனக்கான ஊடகமாக பயன்படுத்தி பெருகத் தொடங்கும். கொசுவின் உடலில் எய்ட்ஸ் வைரஸ் சென்றாலும், அதற்கு டி செல்கள் அங்கு கிடைக்காது. எனவே அதன் செரிமான அமைப்பில் சேர்ந்துவிடும். மலேரியா ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் கொசுவின் வயிற்றில் ஏராளமாக பெருகுகின்றன. ஸ்போரோஸொய்டஸ் எனும் இவை, எளிதாக கொசுவின் எச்சிலில் கலந்து மனிதர்களை தாக்குகிறது.  ஆக்டோபஸ் எப்படி அடிக்கடி நிறம் மாறுகிறது? செபாலோபாட்ஸ் என்று அழைக்கப்படும் இனத்தில் ஆக்டோபஸ், ஸ்குவிட், கடில்ஃபிஷ் ஆகிய உயிரினங்கள் உண்டு. இவை அனைத்துக்கும் உள்ள ஒற்றுமை, எதிரிகளை எச்சரிக்க அடிக்கடி உடலின் நிறம் மாற்றும் என்பதுதான். இவற்றின் உடலில் நிறம் மாற்றும் நிறமிகள் உண்டு. இதற்கு, கு

இலைகளிலுள்ள பச்சை நிறம் என்பது இயல்பானதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? இலைகளின் பச்சை நிறம் என்பது இயல்பானதா? நிலப்பரப்பு சார்ந்து நமது நிறத்திற்கும், மரபணுக்களுக்கும் உள்ள தொடர்பு போலத்தான் இலைகளின் நிறமும் அமைகிறது. அனைத்து மரங்களின் இலைகளிலும் குளோரோபில் உள்ளது. இந்த நிறமிதான்  ஒளியை இலைகளுக்கு ஈர்த்து தருகிறது. கூடவே உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் மூலம் ஒளியாற்றலை தனக்கான போஷாக்கான சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உள்ள வேறு நிறமிகள் குளோரோபில் அளவுக்கு திறன் கொண்டவையாக இல்லை. அவை ஆற்றலை குளோரோபில்லுக்குத்தான் அனுப்புகின்றன. மஞ்சள், ஆரஞ்சு என்றுள்ள இந்த நிறங்களை கரோட்டினாய்டு என்று அழைக்கின்றனர். இவை பீட்டா கரோட்டின் வகையைச் சேரந்தவை. பீட்டா  கரோட்டின் என்பதுதான் கேரட்டிற்கு ஆரஞ்சு நிறத்தைத் தருகிறது.  பனிக்காலத்தில் இலைகள் முற்றி வயதானவையாக மாறும். இலைகளில் இப்போது குளோரோபில் இருக்காது. பிற நிறங்களும் காணாமல் போய் மெல்ல பழுப்பு நிறத்திற்கு மாறி உடையும் தன்மையை அடையும். இலைகளில் உள்ள பச்சை நிறத்தை எடுக்கும் முறையை குரோமோட்டோகிராபி என்று அழைக்கின்றனர்.  நனைந்த காகிதத்தில் நீரில் கரையும் இங்கினால் எழுதியிருந்தால் அந்த எழுத்துகள் எப

ஒன்றிய அரசின் பசிபட்டினி பற்றிய ஆவேசமும் உண்மையும்!

படம்
  பசிபட்டினி தொகுப்பு பட்டியல் 2021 யாருக்கும் தான் செய்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொடுத்தால் உடனே கோபம் வந்துவிடும். காரியம் நடந்துகொண்டிருக்கும்போதே முடிவை சொல்கிறாயே என்று ஒன்றிய அரசும் கூட பட்டினிதொகுப்பு பட்டியல் முடிவை அறிவியல் ஆதாரமே இல்லை என்று எளிமையாக கூறிவிட்டது.  மொத்தம் 116 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா இப்போது 101 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தைப் பிடித்த தற்கே எல்லாம் எங்கள் கட்சி பிரதமரின் உழைப்பால் வந்தது என கட்சி தொண்டர்கள், ஐடி விங்குகள், சமூகவலைத்தள விளக்குகள் கொண்டாடிக்கொண்டு உள்ளனர். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இப்படி சமாளிப்பு பதில் சொல்வது இத்தோடு நிற்காது. எளிதாக வணிகம் செய்வதற்கான பட்டியலிலும் தடுமாற்றம், பத்திரிகை ஜனநாயக பட்டியலிலும் பின்னடைவு, எகனாமிஸ்ட் பத்திரிகை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா குறைத்தே கணக்கு காட்டுகிறது எனசெய்தி வெளியிட்டுள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளையும் தவறு என சுட்டிக்காட்டவேண்டிய தேவையும் அவசியமும் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  பட்டினிப் பட்டியலை எடுக்க முக்கியமான அம்சங்கள் சில உள்ளன.

காமிக்ஸ் மூலம் அறிவியலைப் புரிந்துகொள்ளலாம்! - ஆச்சரியப்படுத்தும் அறிவியல் காமிக்ஸ்கள்

படம்
  sample image காமிக்ஸ் மூலம் அறிவியலைப் புரிஞ்சுக்கலாம்!  உலகம் முழுக்க வெளியாகும் காமிக்ஸ் நூல்களின் மூலம் மாணவர்களுக்கு எளிதாக அறிவியலைப் புரிய வைக்க முடியும் என கல்வி வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.  மார்வெல், டிசி, லயன் முத்து காமிக்ஸ் உள்ளிட்ட காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பது  பொழுதுபோக்கிற்காக என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனாலும் இதில் உருவாக்கப்படும் பல்வேறு கதாபாத்திரங்கள், வசனங்கள், கதையின் மையம் என பலவும் அறிவியல் மீதான ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் உருவாக்கப்பட்டு வருகி்ன்றன.  படக்கதைகளில் வரும் ஸ்பைடர்மேன், ஆன்ட்மேன், பாய்சன் ஐவி ஆகிய பாத்திரங்கள் உயிரியல், தாவரவியல் சார்ந்த பல்வேறு சமாச்சாரங்களை நமக்கு சுவாரசியமான வழியில் கற்றுக்கொடுக்கின்றன. அறிவியலில் ஈர்ப்பில்லாத மாணவர்களையும் காமிக்ஸ் புத்தகங்கள் உள்ளே இழுத்து வருகின்றன.  காமிக்ஸ்களை படிப்பதால் ஆழமான அறிவியலை கற்க முடியும் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் மொழியறிவு, எழுத்துகள், கணிதம் ஆகியவற்றை கற்பதற்கான தூண்டுகளை உருவாக்குவதோடு, புதுமைத்திறனும் கூடுதலாக

நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? கோள்களின் எடையை எப்படி தீர்மானிக்கிறார்கள்? அறுபது கிலோ தாஜ்மகால் என்று பெண்களை தோராயமாக வர்ணிப்பது போல அல்ல. கோள்களின் எடையை அதன் ஈர்ப்புவிசை எந்தளவு வீரியமாக உள்ளதோ அதை வைத்தே தீர்மானிக்கிறார்கள். புதிதாக கண்டுபிடிக்கும் கோள்களை அதன் குறுக்களவு, அதிலுள்ள கனிமங்களின் அளவு வைத்து எடை இவ்வளவு இருக்கும் கண்டறிந்து கூறுகிறார்கள்.  ஒரு கோள் எந்தளவு ஈர்ப்புவிசையைக் கொண்டு பிற கோள்களை ஈர்க்கிறது என்பதே இதில் முக்கியம். இதற்கு நியூட்டனின் ஈர்ப்புவிசை கொள்கைகள் பயன்படுகின்றன. ஒருகோளின் எடையை தனியாக கண்டுபிடிப்பதை விட அதற்கு ஒரு துணைக்கோள் இருந்தால் வேலை எளிதாகிவிடும். செயற்கைக் கோள் மூலம் அதன் ஈர்ப்புவிசை பற்றிய விவரங்களைப் பெற்று எடையைக் கணக்கிட முடியும். கோள்களில் புதன், வெள்ளிக்கு நிலவுகள் கிடையாது. இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள ஈர்ப்பு விசை என்பது மிக குறைவு. இனிவரும் காலங்களில் நாம் விண்கலங்களைக் கொண்டு நேரடியாகவே கள ஆய்வுகளுக்கு சென்றுவிடலாம். இதனால் தோராய அளவுகளை கணிக்க வேண்டிய அவசியம் குறைவு.  நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் வாழும்? சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். இ

உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல்வழிச்செய்திகள்!

படம்
  உணர்வுகளைச் சொல்லும் குரல்வழிச்செய்தி!   இன்று பெரும்பாலும் குறுஞ்செய்திகளை எழுதி அனுப்புவதை விடகுரல் வழியே செய்தி அனுப்புவதே புகழ்பெற்றுள்ளது. பொதுமுடக்கம் பலரையும் வெளியிடங்களில்  சந்திப்பதைத் தடுத்திருக்கிறது. இதன் காரணமாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்களில் கூட குரல்வழிச் செய்திகள் அதிகம் அனுப்பப்படுகின்றன.  2013ஆம் ஆண்டு  இந்த வசதி வா்ட்ஸ்அப்பில் நடைமுறைக்கு வந்தாலும், புகழ்பெற்றது பொதுமுடக்க காலகட்டத்தில்தான்.  இன்று போனில் வரும் அழைப்பே, மிகவும் அவசரம் என்றால் மட்டும்தான் என்பதாக மாறியிருக்கிறது. புதிய தலைமுறையினர் பெரும்பாலும் குரல்வழிச் செய்தியை உரையாட அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அப்படி என்ன சிறப்பு?  ஒருவர் தன்னுடைய குரலில் தான் நினைப்பதை நண்பரிடம் பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் வேண்டும்போது இந்த செய்தியைக் கேட்டுக்கொள்ளலாம். உடனடியாக பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், ஒருவர் தனது குரல் வழியாக பிறரிடம் பேசும்போது நேரடியாக பேசுவது போன்ற நெருக்கம் உருவாகிறது.  எதையும் படிக்க அவசியமில்லாமல் காதில் கேட்டுக்கொண்டு செய்தியை அறிந்துகொள்ளலாம். பதில் அளிக்க விரும்பினால் கூட அந்த நேரத்

விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி!

படம்
  விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்கலத்திற்காக புதிய வகை பேட்டரிகளை கண்டுபிடித்துள்ளது.  நாசா நிறுவனம் விண்வெளிக்கு பல்வேறு விண்கலங்களை தயாரித்து அனுப்பி வருகிறது. இவை செயல்படுவதற்கான ஆற்றல் தேவைக்கு சோலார் பேனல்கள், பேட்டரிகள், அணு பேட்டரிகள் உதவி வருகின்றன.  விண்கலத்தில் உள்ள கேமராக்கள், ரோவர்கள், வழிகாட்டும் வசதிகள் செயல்பட ஆற்றல் தேவை. இதனை சூரிய ஆற்றல் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது.  ஒளி படாத இருளிலும் ஆராய்ச்சிகள் தடைபடாமல் இருக்க பேட்டரிகள் உதவுகின்றன. கோள்களில் இருளான பகுதிகளில் ஆராய்ச்சி தடைபடாமல் இருக்க கொசுவர்த்தி சுருள் போல மெதுவாக ஆற்றல் செலவிடும்படியான பேட்டரிகள் தேவை. இதற்காக நாசா நிறுவனம், புளோரிடா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் சார்ந்த இரண்டு குழுக்களுக்கு ஆராய்ச்சி செய்ய நிதியுதவி அளித்து வருகிறது.  செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஆப்பர்சூனிட்டி, ஸ்பிரிட் என இரண்டு ரோவர்களிலும் சோலார்பேனல்கள், பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இவை செவ்வாயில்  நிலவிய தூசிப்புயல் சூழல்களுக்கு தாக்குப்பிடிக்கவில்லை. அடு

தந்திரமான ஆட்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது! - கடிதங்கள்

படம்
               பெண்களை மயக்கும் காமம்! - பரந்தாம ராஜூவின் வேட்கை   அன்புத்தோழர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? அஞ்சல் அட்டையில் எழுதுவது பற்றி நண்பர்களுக்கு நிறைய மாற்றுக்கருத்துகள் உள்ளன . அதனை யாரும் எளிதாக படித்துவிட முடியும் என்று கூறுகிறார்கள் . அது உண்மைதான் . ஆனால் இன்லேண்ட் கார்ட் வாங்கி எழுதும் அளவு்க்கு . என்னிடம் விஷயங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை . அஞ்சல் அட்டை எளிமையாக இருக்கிறது என்பதுதான் அதனைப் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் . எங்களது பத்திரிக்கையில் புதிதாக கணித பாடத்திற்கென உதவி ஆசிரியர் இணைந்துள்ளார் . அவர் கொஞ்சம் தடுமாறுவதால் வானியல் , இயற்பியலை எனக்கென பொறுப்பாசிரியர் ஒதுக்கியுள்ளார் . ஆனால் எனக்கு துணுக்குகள் எழுத தெரியும் . ஆனால் நீண்ட கட்டுரைகளை எழுதுவது கடினமான காரியம் . குங்குமத்தில் அப்படி அறிவியல் கட்டுரைகளை இரண்டே இரண்டு பேருக்கு எழுதியுள்ளேன் . அங்கு அறிவியலை எழுதுவதற்கு ஆட்கள் இல்லாத சூழலில் எனது மேசைக்கு வந்த வாய்ப்பு அது . மற்றபடி இவற்றை எழுதுவதற்கான சரியான ஆள் நான்தானா என்பதில் எனக்கே சந்தேகம் உள்ளது . நான் எ