இடுகைகள்

ஆராய்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கனிமவியல் பற்றி படிக்க மாணவர்களை ஊக்குவித்தவர்! விளாதிமிர் வெர்னால்ஸ்கை

படம்
  விளாதிமிர் வெர்னால்ஸ்கை (Vladimir vernadsky 1863 -1945) கனிமவியலாளர் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தேன். பல்கலைக்கழகத்தில் புவி அறிவியல் துறையின் தந்தை என புகழப்பட்ட வாசிலி வாசிலியேவிச் டோகுசாவ்  தான் எனது ஆசிரியர் மற்றும் வழிகாட்டி. புவிவேதியியல் துறையை உருவாக்கியவர்களில் எனக்கும் முக்கியப் பங்குண்டு. விளாதிமிர் கனிமவியல், புவியியல், வேதியியல் ஆகிய பாடங்களைப் படித்து முதுகலைப் பட்டம் பெற்ற ஆண்டு 1887. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றவர் கிரிஸ்டல்லோகிராபி படிப்பைப் படித்தார். 1890-1911 காலகட்டத்தில் மாஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கனிமவியல், கிரிஸ்டல்லோகிராபி பற்றிய பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.  ரஷ்யாவில் முதன்முறையாக கனிமவியல் பற்றி படிக்க  மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்,விளாதிமிர் தான்.  ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டபிறகு, கதிர்வீச்சு, அதன் ஆற்றல், பூமியில் உயிரினங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 1928ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்,  உயிரிவேதியியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கி, அதனை நடத்தினார்.  முக்கிய படைப்பு, 

முதன்முதலாக பிரெஞ்சு அரசு இறுதிச்சடங்கு செய்த அறிவியலாளர்! - கிளாட் பெர்னார்ட்

படம்
  கிளாட் பெர்னார்ட் (  Claude Bernard , 1813-1878) பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜூலியன் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர், பியர் பெர்னார்ட் - ஜீன் சால்னியர். 1834 -1843 வரையிலான காலகட்டத்தில் பாரிஸ் சென்று மருத்துவம் கற்றார்.  1847ஆம் ஆண்டு, டி  பிரான்ஸ் கல்லூரியின் மருத்துவ பேராசிரியரான  பிரான்கோய்ஸ் மாகன்டெயிடம், பணிக்குச் சேர்ந்தார்.  பெர்னார்ட், பல்வேறு சோதனைகளை செய்து பார்த்த மாகன்டெய்யிடம்தான், மருத்துவத்தை அனுபவரீதியாகப் பயின்றார்.  தன் வழிகாட்டியான மாகன்டெய் மறைவிற்குப் பிறகு, கல்லூரியில் பேராசிரியரானார். 1864ஆம் ஆண்டு, அன்றைய பேரரசர் மூன்றாம் நெப்போலியன், பெர்னார்டிற்கென இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆய்வகம் ஒன்றை உருவாக்கித் தந்தார்.  விலங்குகளின் மீது பல்வேறு சோதனைகளை பெர்னார்ட் செய்து வந்தார்.  1878ஆம் ஆண்டு பெர்னார்ட் மறைந்தார். இவரது கணையம், கல்லீரல், வாஸ்மோட்டார் அமைப்பு பற்றிய ஆராய்ச்சிகள் முக்கியமானவை. விஞ்ஞானியான பெர்னார்ட்டின் இறுதிச்சடங்கை  பிரெஞ்சு அரசு முதன்முறையாக பொறுப்பெடுத்து நடத்தி கௌரவித்தது.    https://www.famousscientists.org/claude-bernard/

வௌவால்களை ஆராய்வது எளிதல்ல - குளோரியானா சாவேரி

படம்
  உயிரியலாளர் குளோரியானா சாவேரி, கோஸ்டாரிகா பல்கலைக்கழகம். மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, கோஸ்டாரிகா. இங்குள்ள கோஸ்டாரிகா பல்கலையில்  உயிரியலாளராகப் பணியாற்றி வருபவர், குளோரியானா சாவேரி (Gloriana Chaverri). இவர் ஒற்றை இழை வலை (fine-corded monofilament net) மூலம் 20 இனத்தைச் சேர்ந்த 125 வௌவால்களை எளிதாகப் பிடித்து ஆராய்ந்துள்ளார்.  வௌவால்களை எப்படி பிடிக்கிறீர்கள்? கோஸ்டாரிகா பகுதியில் உள்ள காட்டில், வௌவால்களை இரவு நேரத்தில் தான் பிடித்தோம். இரவு 6முதல் 8 மணிக்குள் நிலத்திற்கு அருகில் வலைகளைக் கட்டி வைக்கிறோம். இரவு நேரத்தில் உணவு தேடுவதில் வௌவால்கள் வேகம் காட்டும். சூரியன் மறைந்தபிறகு, வலையை விரித்து நள்ளிரவு வரை காத்திருப்போம். எங்களது வலையில் மாட்டிக்கொண்ட வௌவால்கள் அதிலிருந்து விடுபட, இழைகளைத் தீவிரமாக கடிக்கும். அவை,எளிதில் துண்டிக்க முடியாதவை. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை வலையைச் சோதிப்போம்.  வௌவால்களைப் பிடிக்க பல்வேறு வலைகளை சோதித்திருப்பீர்கள். என்ன வேறுபாடுகளைப் பார்க்கிறீர்கள்?  கோஸ்டாரிகாவில் 2013ஆம் ஆண்டுதான் ஒற்றை இழை வலையை நான் பார்த்தேன். அதில் வௌவாலைப் பிடிக்க முடிந்தது.

செரிமானத்தின் வேதியியல் பற்றி ஆராய்ச்சிகள் செய்தவர் - வில்லியம் குஹ்னே

படம்
  வில்ஹெம் குஹ்னே ( wilhelm kuhne) வில்ஹெம், 1837ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.  கோட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் வேதியியல், உடல் அமைப்பு, நரம்பியல் பற்றிய பாடங்களைப் படித்து தேறினார். பட்டதாரியான பிறகு தவளையில் ஏற்படும் நீரிழிவு பற்றி செய்த ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டத்தைப் பெற்றார்.  ஐரோப்பிய நாடுகளில் அலைந்து திரிந்து உடலியல் பற்றிய பாடங்களைக் கற்றார். 1871ஆம் ஆண்டு ஹெய்டெல்பர்க் பல்கலையின் தலைவராக ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் பதவியேற்கும் முன்னரே, வில்ஹெம் உடலியல் பாடங்களைக் கற்றுவிட்டார். இப்பல்கலையில் வில்ஹெம் சேர்ந்தபிறகு, தசைகள், நரம்புகள் பற்றி கவனம் எடுத்து படித்தார். குறிப்பாக கண் நரம்புகள்.  கூடுதலாக, செரிமானத்தின் வேதியியல் பற்றியும் ஆய்வுகளைச் செய்தார். இதில்தான் ட்ரைப்ஸின் எனும் புரத என்சைம் ஒன்றைக் கண்டுபிடித்தார். 1899ஆம் ஆண்டு தனது பணி ஓய்வுக்குப் பிறகும் பல்கலையில்தான் இருந்தார். அடுத்த ஆண்டு அந்நகரில் காலமானார்.  the biology book big ideas simply explained book

கோவை ஆராய்ச்சியாளரும், அவரது நம்பிக்கைக்குரிய குருதேவரும்! - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
 மயிலாப்பூர் டைம்ஸ்  ஆராய்ச்சியாளரின் அவதி... நான் வேலை செய்யும் இதழில் எனது பணிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இதுவரை எதிர்கொள்ளாத சிக்கல்களை அந்த மாதவப் பெருமாள் எனக்கு கொடுத்து வருகிறார். அவர் நல்லவை, அல்லவை என எது கொடுத்தாலும் மறுக்கவா முடியும். அப்படித்தான், காலை பதினொரு மணிக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆராய்ச்சியாளர் பற்றி தவறாக எழுதியிருக்கிறீர்கள்.  பெயர் தவறு, தவறாக அவரை காட்டியிருக்கிறீர்கள் என ஒருவர் கொச்சையான தமிழில் பேசினார். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், அவர் கூறும் கோவை ஆராய்ச்சியாளர் ****************** பற்றி இரண்டே பத்திகள்தான் எழுதப்பட்டன. அதுவும் அவர் யார், என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பது மட்டுமே.  போனில் பேசிய பிரகஸ்பதி, நேபாள நாட்டு குகை ஆராய்ச்சியாளர் பற்றிய செய்தியை எதற்கு பிரசுரம் செய்தீர்கள்? டெய்லி புஷ்பம் எல்லோருடைய வீட்டுக்கும் வருகிறது. தவறாகிவிடுமே என நான் செய்த குற்றங்களின் பட்டியலை எக்ஸ்டென்ஷன் செய்துகொண்டே போனார்.  ஸாரி சார் இனி அவர் பற்றி எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கு சாரி என சொல்லி அழைப்பை துண்டித்தேன்.  இதற்குப் பிற

மக்களின் வாழ்வில் உருவாகும் பசுமை இல்ல வாயு பற்றி ஆராய்ந்து வருகிறோம்! - சுனிதா நரைன், ஆசிரியர் டவுன் டு எர்த் இதழ்

படம்
சுனிதா நரைன் தலைவர், அறிவியல் மற்றும் சூழல் மையம் காலநிலை நீதி (Climate Justice) என்பதை எப்படி வரையறுப்பீர்கள்? காலநிலை மாற்றத்தின் பயன்களை, சுமைகளை  பாகுபாடின்றி அனைத்து மக்களும் எதிர்கொள்வது எனலாம்.  கார்பன் டை ஆக்சைட் ஒருமுறை வெளியானால், வளிமண்டலத்தில் 150 முதல் 170 ஆண்டுகள் வரை தங்கியிருக்கும். நூற்றாண்டு காலமாக வெளியான பசுமை இல்ல வாயுக்கள், பூமியின் வெப்பநிலையை உயர்த்தி வருகின்றன. இதைச் சமாளிக்க நிதி, தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவி தேவை. 1992ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றி கொள்கைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இதை வளர்ந்த நாடுகள் பின்பற்றவில்லை. இதனால்தான் பூமி இன்று, அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது.  காலநிலை நீதி என்பதில் நாடுகளுக்குள் ஒற்றுமை உள்ளதா? எங்களது அறிவியல் மற்றும் சூழல் மையம், தனிநபர் சார்ந்த பசுமை இல்ல வெளியீடு பற்றிய கொள்கைகளை உருவாக்கியுள்ளது. வளரும் நாடான இந்தியாவில், மக்கள் அனைவருக்குமான இயற்கை சார்ந்த பங்களிப்பு உள்ளது. நாம், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் பற்றி சிந்திப்பது அவசியம்.  வாழ்வாதார பசுமை இல்ல வாயு வெளியீடு (Subsi

உராங்குட்டான் நகைச்சுவை உணர்வுமிக்கது!

படம்
  டாக்டர் பைருட் கால்டிகாஸ் விலங்கியலாளர் பைருட் கால்டிகாஸ், இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் உராங்குட்டான்களை ஆராய்ந்து வருகிறார். பூர்விகம், கனடா. கனடாவிலுள்ள சைமன் ஃபிரேஸர்  பல்கலைக்கழகத்தில் அகழாய்வுத்துறை பேராசிரியராக பணிபுரிகிறார்.   நீங்கள் உராங்குட்டானை முதன்முறையாக எப்போது பார்த்தீர்கள் என நினைவிருக்கிறதா?  பள்ளியில் படிக்கும்போது, டைம் லைஃப் புத்தகத்தைப் படித்தேன். அதில், ஆண் உராங்குட்டான் புகைப்படத்தை முதன்முறையாக பார்த்தேன். மனிதர்களோடு அதிக ஒற்றுமை கொண்ட குரங்கினம்.  அந்த புகைப்படம், இன்றுவரையும் என் மூளையில் மறக்கமுடியாத நினைவாக  உள்ளது.  உராங்குட்டானை 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறீர்கள். அவற்றைப் பற்றி வரையறை செய்யமுடியுமா? வால்ட் டிஸ்னி உருவாக்கிய அனிமேஷன் விலங்குகள் போன்றவை தான்  உராங்குட்டான்கள். மனதில் நகைச்சுவை  உணர்வு நிரம்பியவை. அவற்றின் உணர்ச்சிகளை நீங்கள் கூர்ந்துகவனித்தால், எனது கருத்தைப் புரிந்துகொள்ளலாம்.  பல்கலைக்கழக படிப்பை முடித்தவுடன் உராங்குட்டானைப் பற்றி ஆய்வு செய்ய எப்படி முடிவு செய்தீர்கள்? அப்போது எனக்கு வயது 19. என்னுடைய பேராசிரியர், ஆப்பிரிக்காவி

காட்டுத்தீயிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற ஹேபிடேட் பாட்ஸ் உதவும்! அலெக்ஸாண்ட்ரா கார்தே

படம்
  அலெக்ஸாண்ட்ரா கார்தெ காட்டுயிர் ஆராய்ச்சியாளர் 2019 - 2020 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பாதிப்பு ஏற்பட்டது. இவை போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து சிறு விலங்குகளை பாதுகாக்க ஹேபிடேட் பாட்ஸ் என்ற சிறு கூடார அமைப்பை மெக்குவாரி பல்கலைக்கழக காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்ட்ரா கார்தெ உருவாக்கியுள்ளார்.  ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது எப்படி? இயற்கை உலகம் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலில் பதிலைத் தேடி அறிவது எனக்குப் பிடித்திருந்தது. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது புதுமைத்திறன், பிரெஞ்சு மொழி, உளவியல் ஆகிய பாடங்களை எடுத்தேன். இது தவறான தொடக்கம் தான். பிறகு, பேராசிரியர்களின் உரைகளால் சூழலியல், முதுகெலும்பு உயிரினங்களைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.  சிறு விலங்குகளுக்கான கூடார அமைப்பை எப்படி வடிவமைத்தீர்கள்? ஹேபிடட் பாட்ஸ் எனும் இந்த கூடார அமைப்பை உருவாக்க ரீப் டிசைன் லேபைச் சேர்ந்த அறிவியலாளர் அலெக்ஸ் கோட் உதவினார். இதற்கான முதல் கூடார அமைப்பை, கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டோம். எங்களது கண்டுபிடிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுயிர்  பாதுகாப்பு அமைப்பு, நியூ சௌத்வேல்ஸ் தேசிய பூங்கா ஆகிய அ

அமெரிக்காவின் முதல் விண்கலம் - ஸ்கைலேப்

படம்
  அமெரிக்கா உருவாக்கிய முதல் விண்கல ஆராய்ச்சி மையம், ஸ்கைலேப். 1973ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, நாசா இதனை விண்ணில் ஏவியது. மூன்று விண்வெளி வீர ர்களுடைய குழு இந்த விண்கல ஆராய்ச்சிக் கலத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிகளை செய்தனர். இதில் புவிவட்டபாதை, பூமியைப் பற்றிய ஆராய்ச்சி, சூரியனைப் பற்றிய ஆய்வக ஆய்வு என நிறைய விஷயங்களை அங்கு செய்தனர் . ஸ்கைலேப் விண்ணில் ஏவப்பட்டு பதினொரு நாட்கள் கழித்து மே 25 அன்று மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு கிளம்பினர். சார்லஸ் கான்ராட், பால் வெய்ட்ஸ், ஜோசப் கெர்வின் ஆகியோர் தான் கிளம்பிய மூவர். இவர்கள் விண்கலத்திற்கு சென்று நிறைய பழுதுகளை நீக்கினர்.மைக்ரோமெட்ராய்ட் கவசம், சோலார் பேனல் பழுதுப்பட்டிருந்தது  அடுத்த குழுவினர் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு கிளம்பினர். இவர்கள் அங்கு சென்று 59 நாட்கள் இருந்தனர். பணியாற்றினர்.  1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ற மூன்றாவது குழுவினர். 84 நாட்கள் விண்ணில் இருந்தனர். பிறகு மெல்ல ஸ்கைலேப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. நாசா, கீழிருந்து அனுப்பிய கட்டளைகள் மூலம் விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது. பூமிய

பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்ய தயங்குகிறார்கள்! - ரேச்சல் இ கிராஸ்

படம்
  ரேச்சல் இ கிராஸ்  பத்திரிகையாளர் எழுத்தாளர் ரேச்சல், ஸ்மித்சோனியன் வலைத்தளத்தில் அறிவியல் பகுதி ஆசிரியராக பணியாற்றுகிறார். அண்மையில் இவருக்கு பிறப்பு உறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டது. அப்போதிலிருந்து அவருக்கு தன்னுடைய உடலை முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுபற்றி வஜினா அப்ஸ்குரா - அனாடாமிகல் வாயேஜ் என்ற நூலை எழுதியுள்ளார். பெண் உடல் பற்றிய பல்வேறு தவறான கருத்துகளுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.  இப்படி ஒரு நூலை எழுத உங்களைத் தூண்டியது எது? அறிவியல் வரலாறு தொடர்பான நான் பல்வேறு விஷயங்களை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு சில விஷயங்கள் தெரிய வந்தது. அறிவியல் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை பெண்கள் சில வரம்புகளுக்குள்தான் இருந்திருக்கின்றனர். அதற்குமேல் அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் பெண்களின் பிறப்புறுப்பு, கருப்பை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளும் எனக்குள் உருவானது. பெண்களின் செயல்பாட்டிற்கும் அவர்களின் உடல் உறுப்புகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது எனக்கு தெரிய வந்தது. இதுபற்றிய கேள்விகளை பெண்களிடம் கேட்கலாம். ஆனால் அவர்கள் அதுபோ

வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்த பசுமை தொழில்நுட்பங்கள் தேவை!

படம்
  பெஞ்சமின் ஜெய்ட்சிக் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.  அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? 2015ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு நிறைய மரணங்களை ஏற்படுத்தியது. மக்களின் மரணம் உண்மையில் வேதனையானது. ஆனால் வெப்ப அலை பற்றி குறைத்து மதிப்பிட்டதுதான் இப்பட்டிப்பட்ட சிக்கலுக்கு காரணம். இதயம் தொடர்பான பாதிப்பு கொண்டவர்கள், ஆஸ்துமா, நுரையீல் சார்ந்த நோய்கள், குறைபாடு கொண்டவர்களுக்கு வெப்ப அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி பாதிப்பை நாம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அப்படி செய்யும்போதுதான் பாதிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.  வெப்ப அலைகளால் ஏதும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா? கண்டிப்பாக. வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஆவியாதலின் அளவும் கூடும். இதனால் நகரங்களில் வாழும் மக்கள் புழுக்கத்தால் தவிப்பார்கள். வெப்ப அலையால் வியர்வை பெருகும். தாவரங்கள், மண் ஆகியவையும் ஈரப்பதத்தை இழக்கும். வறண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை வெளியேற்றும். வெப்ப பாதிப்பை வெப்ப அலை மேலும் அதிகரிக்கும்.  இப்போதுள்ள வெப்ப அலைக பாதிப்பை உலகளவில் எப்படி வ

தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வாகன இரைச்சல்!

படம்
  தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வாகன இரைச்சல்!  காடுகளில் விலங்குகள்  தனது எல்லையை உறுதி செய்ய, எதிரிகளை எச்சரிக்க, உணவு தேட என  பலவகையில் குரலைப் பயன்படுத்துகிறது. மனிதர்களுக்கும் தகவல் தொடர்பு கொள்ள குரல் முக்கியமானது. இன்று இதை மிஞ்சும்படியாக சுற்றுப்புறமெங்கும் வாகன இரைச்சல், அதிகரித்து வருகிறது. இவற்றிலிருந்து விலங்குகள் மற்றும் மனிதர்கள் நகர்ந்து தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் தாவரங்கள் என்ன செய்யும்? இதைப்பற்றிய ஆராய்ச்சி ஈரான் நாட்டில் நடைபெற்றுள்ளது.  ஈரானின் தலைநகரான டெஹ்ரானில், சாஹித் பெகிஷ்டி பல்கலைக்கழகத்தில்  ஒலி மாசுபடுதல் பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வை தாவரவியலாளர் அலி அக்பர் கோட்பி  ராவண்டி வழிநடத்தினார். இதில்தான், தாவரங்களும் ஒலி மாசுபடுதலால் பாதிக்கப்படுவதை கண்டுபிடித்திருக்கின்றனர்.  பெரும்பாலான தாவரங்கள் தம் வளர்ச்சிக்கு  மகரந்த சேர்க்கையை நம்பியே உள்ளன. இதற்கு விலங்குகள் மறைமுகமாக உதவுகின்றன. வாகன இரைச்சல் காரணமாக விலங்குகளின் வரத்து குறைந்தால், அது தாவரங்களையும் பாதிக்கிறது. திட, திரவ, வாயு என மூன்று ஊடகங்களின் வழியாக ஒலி, அலைகளாக பரவுகிறது. இதனை தா

ஆராய்ச்சியில் கிடைத்த புதிய கனிமம்

படம்
  புவியியல் பூமியிலிருந்து கிடைத்த புதிய கனிமம்! போட்ஸ்வானா நாட்டில்  தொன்மையான வைரம் ஒன்று பெறப்பட்டது. இதனை ஆராயும்போது தற்செயலாக அதில் கிடைத்த கனிமம் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கனிமத்திற்கு டேவ்மாவோய்ட் (davemaoite)என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  போட்ஸ்வானாவின் ஆரபா நகரிலுள்ள சுரங்கத்தில், வைரம் கண்டறியப்பட்டது. . நான்கு மில்லிமீட்டர்  அகலம் கொண்ட வைரத்தின் எடை 81 மில்லிகிராம் ஆகும். 1987ஆம் ஆண்டு இதை வைத்திருந்த வைர வியாபாரி, இதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானியிடம் விற்றுவிட்டார். விற்றவருக்கோ, அதை வாங்கிய விஞ்ஞானிக்கோ கூட வைரம் எந்தளவு சிறப்பான அம்சம் கொண்டது என்று அப்போது தெரியவில்லை.  தற்போது இந்த வைரம், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெவடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆலிவர் சானர் ஆய்வு செய்துள்ளார். பொதுவாக, வைரம் பூமியின் கீழ்ப்பகுதியில் 120 முதல் 250 கி.மீ. தொலைவில் உருவாவது வழக்கம். இன்னும் சில வைரங்கள் மீசோஸ்பியர் அடுக்கில் அதாவது, மேற்பரப்பிலிருந்து 660 கி.மீ. தொலைவில் உருவாகும் வாய்

நீர்நிலைகளை அழிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்!

படம்
  மைக்ரோபிளாஸ்டிக்கிற்கு எதிரான போர்! நிலம், நீர்நிலைகளில் அதிகரிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் பற்றிய செய்தி புதிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டு வருகின்றன.   உலகளவில் ஆண்டுதோறும்  400 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக்குகள் உற்பத்தியாகிறது. இவை கடலில் மைக்ரோ அளவிலான துகள்களாக உடைந்து நீரை மாசுபடுத்துகிறது.  2004ஆம் ஆண்டு மைக்ரோ பிளாஸ்டிக் என்ற வார்த்தையை சூழலியலாளர் ரிச்சர்ட் தாம்சன் (richard thompson) அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தின், கடற்புரங்களில் செய்த ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் துகள்களை கண்டுபிடித்து, உலகிற்கு சொன்னார். 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட பிளாஸ்டிக் துகள்களை மைக்ரோ பிளாஸ்டிக் என அறிவியலாளர்கள் வரையறுக்கின்றனர். இவை ஆழ்கடலில், ஆர்க்டிக்  பனியில் ஏன் நமது உடலிலும் கூட உள்ளன.  2019ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதழில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மனிதர்கள் தினசரி 1 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகளை உண்பதாக கண்டறியப்பட்டது. மனித உடல் உறுப்புகளை, திசுக்களை பிளாஸ்டிக் சேர்மானங்களிலுள்ள வேதிப்பொ

பூமியில் கிடைக்கும் தங்கம் உருவான கதை!

படம்
விண்வெளியிலிருந்து உருவான உலோகம்!  இன்று ஒருவரின் செல்வ வளம், நிலம், சேர்த்து வைத்துள்ள பல்வேறு நகைகளோடும் சேர்த்தே  அளவிடப்படுகிறது. அதிலும் அவர் தங்கத்தை சேர்த்து வைத்தால், அதன் மதிப்பு ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும்.   உண்மையில் இந்த தங்கம் எப்படி உருவானது? தங்கம் அரிதான உலோகம் என்பதோடு, அதன் உருவாக்கத்திற்கும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.  நட்சத்திரங்களின்  இணைதலின்  விளைவாகவே, தங்கம் உருவாகியிருக்கும் என  அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். நட்சத்திரங்களில் உள்ள சிறு பகுதிகள் ஒன்றாக இணைவதன் வழியாக, அதிலிருந்து ஆற்றல் வெளிப்படுகிறது. நட்சத்திரங்களில் பெருமளவு உள்ள ஹைட்ரஜன் இதில் அதிக பங்களிப்பைத் தருகிறது.   சிறு பகுதிகளின் இணைவு அல்லது மோதலின்போது வெப்பமும், அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாகவே, நட்சத்திரத்தின் அடிப்பகுதியில் ஹீலியம் உருவாகிறது.  இந்த செயல்பாடு சுழற்சியாக நடைபெறுகிறது. இச்செயல்பாடு, இரும்பு உருவாகும் வரை தொடர்கிறது. இரும்பு, வினையில் உருவாகும் ஆற்றலை பெருமளவு உறிஞ்சுகிறது. இதன் விளைவாக, நட்சத்திரம் மெல்ல சிதைவடைகிறது. அதிகரிக்கும்

தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முயன்ற முதல் ஆராய்ச்சியாளர்!

படம்
  கூகுள் ஆர்ட் அண்ட் கல்ச்சர் - லாஸரோ லாஸரோ ஸ்பாலன்ஸானி (lazzaro spallanzani) லாஸரோ, வடகிழக்கு இத்தாலியில் 1729ஆம் ஆண்டு பிறந்தார். அப்பா சொன்னார் என்ற காரணத்திற்காக சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பில் சேர்ந்தபிறகுதான் தனக்கு ஆர்வம் இருக்கும் துறைகளை அடையாளம் கண்டார். இயற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததால் சட்டப்படிப்பை கைவிட்டார்.   தனது முப்பது வயதில் கத்தோலிக்க பாதிரியாகியிருந்தார். கூடவே மாடனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். 1769ஆம் ஆண்டு பவியா பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது. 1799ஆம் ஆண்டு காலமாகும் அவரை அப்பல்கலையில்தான் பணியாற்றினார். ஐரோப்பாவில் இயங்கி வந்த பல்வேறு அறிவியல் சங்கங்களில் லாஸரோ உறுப்பினராக இருந்தார். செரிமானம் பற்றி முதலில் ஆராய்ச்சியைத் தொடங்கிய லாஸரோ இறுதியில் விலங்குகளின் இனப்பெருக்கம் பற்றி கவனம் செலுத்தினார்.  தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முடியுமா என்று சோதித்த முதல் அறிவியலாளர் லாஸரோ ஸ்பாலன்ஸானிதான். 1930ஆம் ஆண்டு வௌவால்கள் எப்படி எதிரொலி மூலம் பறக்கின்றன என்பதைப் பற்றிய கண்டுபிடிப்பு லாஸ

கற்பதில் வேகம் காட்டும் தங்கமீன்!

படம்
  Gold fish - Pinterest சூழலை அறிவால் அறியும் தங்கமீன்! நீருக்குள் அலைந்து திரிந்து உணவு தேடும் மீன்களுக்கு,  சரியாக வழிதேடி அடையும் திறன் உண்டு. இதனை இஸ்ரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு அறையில் செய்த சோதனையில் மீன்கள் எப்படி கப்பல் அல்லது வேறு வகை வாகனங்கள் எதிரே வந்தால் விலகி பாதுகாத்துக்கொள்கிறது என அறிந்தனர். இதுபற்றிய ஆராய்ச்சி, பிஹேவியரல் பிரெய்ன் ரிசர்ச் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.  ஆறு தங்க மீன்களை வைத்து அதன் திசையறியும் திறனை சோதித்தனர். சக்கரங்கள் பொருத்திய சிறு வண்டியில் மீன்தொட்டியை வைத்தனர். மீன்தொட்டியின் நடுவில் கம்பியை வைத்து, அதில் கேமராவைப் பொருத்தினர். இதன்மூலம், தங்கமீனின் இயக்கத்தை பதிவு செய்தனர். 30 நிமிடங்களுக்கு சிறுவண்டியை இயக்கி மீன்கள்  குறிப்பிட்ட திசையில் நகர்கிறதா எனப் பார்த்தனர். தொட்டியில் ரோஸ் நிற அட்டையை வைத்து அதனை நோக்கி மீனை செல்ல தூண்டினர். முதலில் கிடைத்த வெற்றி சதவீதம் 2.5 தான். பிறகு, தங்கமீனின் வெற்றி வாய்ப்பு 17.5 சதவீதமாக உயர்ந்தது.  அறையில் இடங்களை மாற்றுவது, வெவ்வேறு நிற அட்டைகளை வைப்பது, ரோஸ்

எதிர்கால இந்தியா 2047 - ஐஐடி மெட்ராஸ் - ரிசர்ச் பார்க் - கனவுகளும் சாத்தியங்களும்

படம்
பேராசிரியர் கிருஷ்ணன் பாலசுப்ரமணியன் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் தொழில்முனைவோர் புனீத் குப்தா வர்னாலி தேகா, ஐஏஎஸ்   எதிர்கால இந்தியா 2047 சென்னை தரமணியில் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ஆராய்ச்சி மன்றில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த மார்ச் 7 தொடங்கி 9ஆம் தேதிவரையிலான இமேஜினிங் (Imagining India 2047) இந்தியா 2047 என்ற கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஐ.ஐ.டி மெட்ராஸ் அமைப்பு ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், நேரம் தவறாமைதான்.  நாங்கள் ஒன்பது மணிக்கு செல்லவேண்டிய நிகழ்ச்சி இது. ஆனால், நிகழ்ச்சி பற்றி தகவல் தெரிந்ததே பத்து மணிக்குத்தான். பிறகு, புரோகிராம் பார்த்து தகவல்களை கிரகித்து ஆசிரியரிடம் அனுமதி வாங்கி கிளம்ப பதினொரு மணி ஆகிவிட்டது. சக உதவி ஆசிரியர் காந்தி மகான் உதவிக்கு வந்தார். முதலில் ரயிலுக்கு செல்லலாம் என நினைத்தேன். ஆனால் காந்தி, பஸ்ஸிற்கு போகலாம் என்றார். ஏ1 பஸ்சில் ஏறி உட்கார்ந்தால் ஆமை போல மெல்ல ஊர்ந்தது. எனவே மயிலாப்பூர் குளத்தில் இறங்கினோம். உடனே ஓட்டமாக ஓடி, லோக்கல் ட்ரெயினில் ஏறினோம். ஏறும்போதே காந்தி, யுடிஎஸ் ஆப்பில் டிக்கெட்டை இருவருக்கும் எடுத்துவ

வைரத்திற்குள் இருந்த புதிய கனிமம்! - புதிய ஆராய்ச்சியில் வெளிப்பட்ட கனிமம்

படம்
  வைரத்திற்குள் இருந்த புதிய கனிமம்! போட்ஸ்வானா நாட்டில்  தொன்மையான வைரம் ஒன்று பெறப்பட்டது. இதனை ஆராயும்போது தற்செயலாக அதில் கிடைத்த கனிமம் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கனிமத்திற்கு டேவ்மாவோய்ட் (davemaoite)என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  போட்ஸ்வானாவின் ஆரபா நகரிலுள்ள சுரங்கத்தில், வைரம் கண்டறியப்பட்டது. . நான்கு மில்லிமீட்டர்  அகலம் கொண்ட வைரத்தின் எடை 81 மில்லிகிராம் ஆகும். 1987ஆம் ஆண்டு இதை வைத்திருந்த வைர வியாபாரி, இதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானியிடம் விற்றுவிட்டார். விற்றவருக்கோ, அதை வாங்கிய விஞ்ஞானிக்கோ கூட வைரம் எந்தளவு சிறப்பான அம்சம் கொண்டது என்று அப்போது தெரியவில்லை.  தற்போது இந்த வைரம், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெவடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆலிவர் சானர் ஆய்வு செய்துள்ளார். பொதுவாக, வைரம் பூமியின் கீழ்ப்பகுதியில் 120 முதல் 250 கி.மீ. தொலைவில் உருவாவது வழக்கம். இன்னும் சில வைரங்கள் மீசோஸ்பியர் அடுக்கில் அதாவது, மேற்பரப்பிலிருந்து 660 கி.மீ. தொலைவில் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

176 பிறந்த தினத்தை கொண்டாடும் அறிவியலாளர்! - அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

படம்
  பெல், அறிவியலை நாடியது அவருடைய அம்மாவுக்காகத்தான். அவருக்கு காது கேட்பதில் பிரச்னை இருந்தது. இதனை சரிசெய்யவே அறிவியலில் தீர்வுகளை தேடிக்கொண்டிருந்தார். அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லின் அப்பா, குரல்வளையின் அமைப்பு போன்ற இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். இதனை விசிபிள் ஸ்பீச் என்று பெயரிட்டு அழைத்தார்.  பெல், பல்வேறு அறிவியல் சமாச்சாரங்களை தன் அப்பாவிடமிருந்து தான் கற்றுக்கொண்டார். 1870ஆம் ஆண்டு பெல்லின் குடும்பம் கனடாவிற்கு சென்றது. பெல் தொடர்ந்து காது கேளாமை பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதுபற்றி பிறர் கற்க பள்ளி ஒன்றைத் திறந்தார். பேச்சு நுட்பம், குரல் அமைப்பு முறை என்பதுதான் இதன் பெயர். 1872இல் பாஸ்டன் நகரில் இந்த பள்ளியைத் தொடங்கி நடத்தினார்.  காது கேளாமைக்கான ஆராய்ச்சியின்போதுதான் தகவலை கருவிகள் வழியாக அனுப்பினால் என்ன என்று தோன்றியது. இதற்கான ஆராய்ச்சிகளையும் செய்யத் தொடங்கினார். 1876ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று, பெல்லும் அவரது உதவியாளருமான தாமஸ் வாட்சன் ஆகிய இருவரும் டிரான்ஸ்மீட்டர் வழியாக தகவல் ஒன்றை அனுப்பினர். பக்கத்து அறைக்கு அனுப்பிய தகவல் இதுதான். மிஸ்டர் வாட்சன் இங்கு வாரு