இடுகைகள்

போர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் முன்னேற்றத்தால் எளிமையான வாழ்க்கை - ஜித்து கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி பதில்கள் கே. அறிவியல் முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதா? ப. அறிவியல் கண்டுபிடிப்புகள் உங்கள் வாழ்க்கையை எளிதாக மாற்றவில்லையா என்ன? மின்சாரம் இருக்கிறது. உங்கள் அறையில் ஒரு ஸ்விட்சை தட்டினால் விளக்கு எரிகிறது. ஆகாயவிமானத்தில் ஏறினால் லண்டனிலிருந்து டெல்லிக்கு எளிதாக சென்றுவிடலாம். தொலைபேசி அறையில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உங்களுக்கு நண்பர்களோடு பேசத் தோன்றினால் அவர்களோடு பேசலாம். அறிவியல் கண்டுபிடிப்புகள் வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளன என்பது உண்மைதான். நோய்களை எளிதாக கண்டறிந்து தடுக்க முடிகிறது. அதேசமயம் அதே அறிவியல் மூலம்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை கண்டறிந்தனர். இதை வெடிக்க வைப்பதன் மூலம் பல லட்சம் மக்களை கொல்ல முடியும். நமது அறிவை விழிப்புணர்வோடும் அன்புடனும் சேர்த்து பயன்படுத்தினால் நம் வாழ்க்கையை நாமே அழித்துக்கொள்வதிலிருந்து காக்கலாம். கே. பெரிய மீன் சிறிய மீனை தின்று வாழ்வது இயல்பானதா? விலங்குகள் உலகில் நீங்கள் சொல்வது போல பெரிய மீன், சிறிய மீனை உணவுக்காக நம்பியிருக்கலாம். இது இயற்கையாக   அமைந்திருக்கலாம்

வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் கல்வியை பெறும் வழி- லைப் அகேட் -ஜேகே

படம்
  லைப் அகேட் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஜேகே பவுண்டேஷன் ரூ.230 ஆங்கிலம் கல்வி பற்றிய ஜே கேவின் எழுத்தில் வெளியான நூல் இது. நூலில் கல்வி கற்பவர் எப்படி இருக்கவேண்டும், கற்பிப்பவர் எப்படி தன்னை கற்பித்தலுக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என பலவற்றையும் கூறுகிறார். நூலில் பல்வேறு அத்தியாயங்களிலும் ஜேகே சொல்லுவது நிர்பந்தங்களால் மாணவர்களுக்கு மனதில் ஏற்படும் பயம் பற்றியதே. பிறகு இதற்கு அடுத்த இடத்தை பெற்றோரின் குறிக்கோள்கள் பிடித்துக்கொள்கின்றன. இவற்றையெலாம் கடந்த எப்படி ஒரு விஷயத்தை உணர்வது, பார்ப்பது, புரிந்துகொள்வது, கல்வி முறை எப்படி அமையவேண்டும் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஒருவர் தனக்குப் பிடித்தது போல வாழ்வதே நல்லது. பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்தால் அதுவே வாழ்க்கையில் பெரிய சாபமாக மாறிவிடும் என அதற்கான காரண காரியங்களை விளக்கியிருப்பது முக்கியமானது. இன்று ஒருவரை சிறுவயது முதலே சாதனை, வீடியோ, இணையம் என பல்வேறு வகைகளில்   எதையாவது செய்யவேண்டுமென முடுக்குகிறார்கள். நிர்பந்தம் செய்கிறார்கள். இதனால் பாட்டு, நடனம், இசை என பிடிக்கிறதோ இல்லையோ பிள்ளைகள் சென்று

இந்திய கல்விமுறையின் தோல்வி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  எது கல்வி ? ஜே. கிருஷ்ணமூர்த்தி சரியான கல்வி என்பது முறையான திறனோடும் நுட்பங்களோடும் கற்பிக்கப்படுவது அவசியம். இப்படிப்பட்ட கல்வியை ஒருவர் கற்கும்போது தனது வாழ்க்கையை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு அடிப்படை விஷயங்களான உணவு, உடை, வீடு ஆகியவை கிடைப்பது வேகமாகியுள்ளது. ஆனால் இன்னும் மக்களுக்கு அவை முழுமையாக கிடைத்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உலகிலுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள், அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றுவிட்டதாகத்தானே. உண்மையில் மாணவர்கள் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகைகள் என பெற்று வருகின்றனர். கல்வி முடிந்தபிறகு மாணவர்கள் மருத்துவர்களாக பொறியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆனாலும் கூட இவர்களது பணிகளால், மக்கள் இந்த உலகில் அமைதியாக வாழ முடியவில்லை. இங்கு இன்னும் போர்களும் சண்டைகளும் வன்முறைகளும் குறையவில்லை. மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அப்படியெனில் நவீன கல்விமுறை தோல்வியடைந்துவிட்டதாகத்தானே அர்த்தம்? பழைய முறைப்படி கல்

அற்புதமான விமானங்களை வடிவமைத்த ஜப்பானிய பொறியாளரின் கனவு - விண்ட் ரைசஸ் - anime

படம்
  விண்ட் ரைசஸ் அனிமேஷன்  ஜப்பான்  அடிப்படையில் தேசியவாதப் படம்தான். ஆனால் அதைத்தாண்டிய விமானங்களை கட்டமைக்கும் கனவு கொண்ட ஒருவனின் வாழ்க்கை தான் அனிமேஷன் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.  இந்த அனிமேஷன் படம், ஜெர்மனியில் உள்ளது போன்ற நவீனத்துவத்துடன் அதிவேகம் செல்லும் விமானங்களை கட்டமைக்கும் பொறியாளர் ஒருவரின் கதையைப் பேசுகிறது. சிறுவயதில் இருந்தே விமான பைலட்டாக மாறும் ஆசையுடன் ஜீரோ உள்ளான்,ஆனால் கண்பார்வை சற்று குறைவானதால், பொறியாளர் ஆகிறான். அப்போது உலகப்போர் காலகட்டம். எனவே, வேகமாக செல்லும் ஆயுதங்களை கொண்டு செல்லும் விமானங்களை தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஜீரோ தனது விமானத்தை எப்படி உருவாக்குகிறான் என்பதே படம்.  படம் நெடுக விண்ணில் பறக்கும்போது அல்லது வாகனத்தில் பைக்கில் போகும்போது நமது முகத்தில் காற்று அடிக்குமே, வேகமாக, மெதுவாக என பல்வேறு விதமாக.. .அப்படி காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. விமானத்தை உருவாக்குபவனான ஜீரோ, காற்றில் தனது கனவுகள் அலைபாய திட்டங்களை தீட்டுகிறான். பெரும்பாலானவை, எஞ்சின் கோளாறுகள், மோசமான எரிபொருள், ஜப்பானில் வீசும் காற்றுக்கு சமாளிக்க முடிய

சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணு உலை!

படம்
  இகோர் குர்சாடோவ் முதல் அணுஉலை  இன்று வளர்ந்த நாடுகள் அமைதி என்று பேசுவதற்கு காரணமே, முதுகுக்கு பின்னால் வைத்துள்ள அணு ஆயுதங்கள்தான். யாராவது அமைதிக்கு மறுத்தால் அடுத்த அடி மரண அடியாக, அந்நாட்டின் மீது அணு குண்டுகளை வீசுவார்கள். இதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்க நாடு நடத்திய தாக்குதலைக் கூறலாம். அந்த நாட்டின் பல தலைமுறைகள் கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இரண்டு குண்டுகளை வீசி அந்நாட்டை முழுமையாக அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அமெரிக்காவைத் தாண்டி ஜப்பான் இன்று உழைப்பால் பல படிகள் உயர்ந்து நிற்கிறது.  இரண்டாம் உலகப்போர் சமயமே அணு உலை சார்ந்த முன்னேற்றங்கள் தொடங்கிவிட்டன. வெடிகுண்டுகள் தயாரிக்க மட்டுமல்ல. அணுசக்தியை பயன்படுத்தி அணு இணைப்பு, பிளப்பு முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  முதல் அணு உலை சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் ஆண்டு உலகில் முதன்முறையாக மின்சாரம் தயாரிப்பதற்கென நிறுவப்பட்ட அணு உலை இதுவே. இந்த ஆண்டோடு சோவியத் யூனியனில் அணு உலை நிறுவப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. இதன் செயல்பாடு 1954 தொடங்கி 2002 ஆம் ஆண்ட

சூரியவம்சிகளை அழிக்க பாசுபாஸ்திரத்தை ஏவும் சிவன்! - வாயுபுத்திரர் வாக்கு- அமிஷ் திரிபாதி

படம்
  சிவா முத்தொகுதி வாயு புத்திரர் வாக்கு அமிஷ் திரிபாதி வெஸ்ட்லேண்ட் முதல் இரு பாகங்களில்... இதுவரை..... குணாக்களின் தலைவரான சிவன், நீலகண்டர் என அடையாளம் காணப்படுகிறார். அவரை அடையாளம் கண்ட சூரிய வம்சிகள் தங்களுக்கு ஏற்ப அவரை மூளைச்சலவை செய்கின்றனர். இதனால் சோமரஸம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சந்திரவம்சிகளால் உருவானது என நம்புகிறார். இதனால் போர் நேரிடுகிறது. இதில் சந்திரவம்சிகள் தோற்றுப்போகின்றனர் அயோத்யாவின் ஸ்வத்பீட மன்னர் திலீபர், தோற்றுப்போனாலும் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சூரியவம்சிகள் பக்கம் நீலகண்டர் இருப்பது அவரை நிலைகுலைய வைக்கிறது. உண்மையில் நீலகண்டர்  சூரியவம்சி மற்றும் சந்திரவம்சிகளுக்கு பொதுவான ஆளுமை, கடவுள். இதை நீலகண்டர் உணர வாசுதேவர்கள் உழைக்கிறார்கள். டெலிபதி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார்கள்.  சிவனுக்கு இயல்பிலேயே டெலிபதி திறன் உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த சற்று உயர்ந்த இடத்திலுள்ள கோவில்களுக்கு செல்லவேண்டியுள்ளது. முதல்பாகத்தில் சிவன் நீலகண்டராக மாறுகிறார். தேவகிரி செல்கிறார். சூரியவம்சி மன்னரான

உக்ரைனுக்கு சென்று எனது குடும்பத்தைப் பார்க்கவேண்டும்! - மரியா ரியாபோஸாப்கா

படம்
  மரியா ரியாபோஸாப்கா உக்ரைன் நடிகை இவரது முழுப்பெயரை சொல்லுவதற்குள் நாக்குக்கு சுளுக்கு பிடித்துக்கொள்ளும். அதனால் மரியா என்பதே போதுமானது. இவர்தான் அடுத்த எஸ்கே 20 படத்தில் சிவாண்ணாவின் ஜோடிக்கிளி. இவரிடம் பேசினோம்.  எஸ்கே 20 படத்தில் நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் நடித்த வெப் சீரிஸ் ஸ்பெஷல் ஆப்ஸ் 1. 5, உக்ரைனில் படம்பிடிக்கப்பட்டது. அதில் நான் நடித்திருந்தேன். இத்தொடர் வெளியான பிறகு எனக்கு இந்திய ரசிகர்களிடமிருந்து நிறைய பாராட்டுகள் கிடைத்தன. பிறகுதான் எஸ்கே 20 படக்குழுவினர் என்னை தொடர்பு கொண்டனர். கதையும் எனது பாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டேன்.  இந்திய சினிமாவைப் பார்க்கிறீர்களா? கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்திய மக்களுக்கு திரைப்படங்களும், அதில் நடிக்கும் நடிகர்களும் அவ்வளவு பிடித்திருக்கிறது. 3 இடியட்ஸ் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உங்களை அதிக இந்தியப் படங்களில் பார்க்க வாய்ப்பிருக்கிறதா? நான் அதிகளவு படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்தியாவில் வேலை பார்க்க எனக்கும் ஆசையிருக்கிறது. உங்களது திரைப்படத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப
படம்
  சிவா முத்தொகுதி -  மெலூகாவின் அமரர்கள் அமிஷ் திரிபாதி தமிழில்  - பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் ராமர் இறந்தபிறகு நடக்கும் கதை. அயோத்யா, தேவகிரி ஆகிய நாடுகளை சந்திரவம்சி, சூரியவம்சி ஆகியோர் ஆளுகின்றனர். இதில் சூரியவம்சி ஆண்மைய சமூகம். சந்திர வம்சி, பெண் மைய சமூகம். இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அவதரிப்பவரே நீலகண்டவர். ஆனால் இவரை இரு இனத்தாரும்தான் கண்டுபிடிக்கவேண்டும். யாராவது ஒருவர் புறம் நீலகண்டர் நின்றால், மற்றொரு சமூகம் அழிந்துவிடும்.  இது  முத்தொகுதியின் அடிப்படையான கதை.  மெலூகாவின் அமரர்கள் கதை, மானசரோவரில் வாழும் ழங்குடி இனமான குணாக்களிலிருந்து சிவன் என்பவர் மெலூகர்களின் நகரிற்கு வருவதில் தொடங்குகிறது. குணாக்களை வழிநடத்தும் இனக்குழு தலைவன் சிவா. இவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் எதிரிகளை எதிர்த்து போரிட்டுக்கொண்டே மெலூகாவிற்கு வந்து சேர்கிறார்கள். பழங்குடிகள் என்றால் எப்படி, வேட்டையாடிய விலங்குகளின் தோலைத்தான் அணிந்திருக்கிறார்கள். மது, மரிஜூவானா ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்களை மெலூகாவிற்கு நந்தி ராணுவ தளபதி அழைத்து வருகிறார். எதற்காக பழங்குடிகளை அழைத்து வந்

போரில் கிடைத்த வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும்!

படம்
  ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி இரண்டு மாதங்களாகிவிட்டது. இதுதொடர்பாக நிறைய வார்த்தைகளை நாம் கேட்டுவருகிறோம். அதைப்பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.  கொய்ட் quit ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பயன்படுத்த வேண்டாம் என்ற நிறைய நாடுகள் முடிவெடுக்க நினைத்தன. அப்படி செய்தால் போர் நின்றுவிடுமே என ஐரோப்பிய யூனியன் கூட ரஷ்யாவின் நிலக்கரியை மட்டும் பயன்படுத்த மாட்டோம் என கறாராக கூறிவிட்டது.  நாடோ nato உக்ரைன் ஐரோப்பாவின் நாடோ படையில் சேரக்கூடாது என்பதுதான் ரஷ்யாவின் பயம். அதற்காகவே உக்ரைனை தாக்கி அதனை சல்லி சல்லியாக நொறுக்கி வருகிறது. ஆனால் ரஷ்யாவின் வேகத்தில் இதுவரை நாடோவில் சேராமலிருந்த ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளும் கூட சேர்ந்தால்தான் என்ன என்ற முடிவுக்கு வந்துவிட்டன.  ஷி ஜின்பிங் xi jinping சீனா, இல்லாமல் இனி உலகில் எதுதான் நடந்துவிடும். இதன் நிரந்தர அதிபரான ஷி, எப்போதும் போல ரஷ்யாவை ஆதரிக்கிறார். ஒருவகையில் சீனாவின் இந்த ஆதரவுநிலையால் தைவான், ஹாங்காங் ஆகிய நகரங்கள் அடுத்தது நாமதானோ என பீதியில் உள்ளன.  லூகாசென்கோ lukashenko இவர் பெலாரஸ் நாட்டின் சர்வாதிகாரி அலெக்ஸாண்டர் லூகாசென

ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயத்தில் முந்தும் சீனா!

படம்
  ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயம்! கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனா, ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்த்தது. இதைப்பற்றி ஃபினான்சியல் டைம்ஸில் கட்டுரை வெளியானது. அதில், இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை கொண்டு செல்ல முடியும் என்று கூறப்பட்டது. இதுபற்றிய கேள்விக்கு சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈடுபாடு காட்டி வருகின்றன.  ஒலியை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்டவை ஹைப்பர் சோனிக் ஆயுதங்கள். மாக் (mach ) என்ற அலகில் இதனை அளவிடுகிறார்கள். மாக் 1  என்பது ஒலியின் வேகம், மாக் 1லிருந்து மாக் 5 வரை சூப்பர் சோனிக், மாக் 5க்கும் அதிகமான வேகம் கொண்டவை ஹைப்பர்சோனிக் என்று வல்லுநர்கள் வரையறுக்கின்றனர்.  கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகளுக்கு குறிப்பிட்ட இலக்கு உண்டு. அதற்கான வழிமுறையில் பயணிக்கும். இதை ரேடார்களால் கண்டுபிடிக்க முடியும். தாக்கப்படும் நாட்டின் பாதுகாப்பு ரேடார்கள், ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் ஹைப்பர் சோனிக் ஆயுதங்களை அருகில் வந்தபிறகே கண்டுபிடிக்க முடியும். இவற்றில் இரு வகைகள்(HGV,HCM) உண்டு. ராக்கெட்

உக்ரேன் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல்களின் வரிசை!

படம்
  உக்ரைன் பற்றித்தான் பேச்சு. பலரும் பெருந்தொற்று காலத்தில் போனை எப்படி நோண்டிக்கொண்டே பதற்றத்துடன் இருந்தார்களோ இப்போதும் அதேயளவு பழக்கம் அதிகரித்து வருகிறது என ஊடகங்கள் சர்வே எடுத்து சொல்லி வருகின்றன. போர் காட்சிகள், அழுகை, மரண ஓலம் என அனைத்தும் உடனுக்குடன் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஷ்ய இலக்கியத்தை நிறையப் பேர் படித்திருப்பார்கள். அதன் வழியாக ரஷ்ய நிலப்பரப்பு பற்றி அறிந்தவர்கள் பலர். ஆனால் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, தனியாக சுதந்திர நாடுகளான பல நாடுகளைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவு. இப்போது நாம் பார்க்கப்போகும் நூல்கள் உக்ரைன் பற்றியதுதான்.  தி கேட்ஸ் ஆப் யூரோப் எ ஹிஸ்டரி ஆப் உக்ரைன் செர்கி புளோகி ஹார்வர்ட் உக்ரேனியன் ஆராய்ச்சி கழக தலைவர் புளோகி. இவர் உக்ரைன் நாடு சுதந்திர நாடாகவும் தனி அடையாளத்திற்காகவும் கி.மு.45,000 ஆண்டுகளாக முயன்று வந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இந்த ஆதாரங்களும் சம்பவங்களும் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதோடு நிகழ்காலத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது.  கிரே பீஸ்  ஆண்ட்ரேய் குர்க

புத்தகங்களை பாதுகாக்கும் பேசும் பூனை! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  பீஸ்ட்ஸ் ஆப் லிட்டில் லேண்ட் ஜூகியா கிம் ஒன்வேர்ல்ட் ரூ.499 1917 ஆம் ஆண்டு ஜேட் என்ற கொரியப் பெண், மிஸ் சில்வர் என்ற பெண்ணின் பள்ளிக்கு வேலைக்காக விற்கப்படுகிறாள். அதன்பிறகு கொரியாவில் ஜப்பானியப்படை போர்த் தாக்குதல் நடைபெறுகிறது. இந்த நேரத்தில்  ஜேட் என்ற பெண், ஜங் ஜோ என்ற இன்னுமொரு ஆதரவற்ற சிறுவனைப் பார்க்கிறாள். இருவருக்குள்ளும் நட்பு உருவாகிறது. ஆனால் வாழ்க்கை ஒருகட்டத்தில் இருவரையும் எதிரெதிரான நிலையில் நிறுத்துகிறது.  தி கேட் ஹூ சேவ்டு புக்ஸ் சூசுகே நட்சுகாவா, ட்ரஸ் லூயிஸ் ஹீல் கவாய் பிகாடர் ரூ. 334 தாத்தா விட்டுப்போன புத்தக கடையை பேரன் நட்சுகி பார்த்துக்கொள்கிறார். கையில் கிடைக்கும் அனைத்து நூல்களையும் அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது நூல்களை பாதுகாக்கும் பேசும் பூனை ஒன்றை சந்திக்கிறான். அந்த நிகழ்ச்சி அவன் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பல்வேறு சம்பவங்களைப் பற்றித்தான் நூல் பேசுகிறது.  அட்லஸ் சிக்ஸ் ஆலிவியா பிளாக் டோர் ரூ.699 ஒரு ரகசியமான இயக்கத்தில் சேர மாயமந்திரக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பாரம்பரியான இயக்கத்தில் சேருவது யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு. அதேசமயம்

இரண்டாம் உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மனி!

படம்
இரண்டாம் உலகப்போர்  இரண்டாம் உலகப்போர் 1939ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது, ஜெர்மனி நாடு. இந்த நாடு ஆக்ரோஷமாக போலந்து நாட்டை ஆக்கிரமித்தது. இப்படி உலக நாடுகளுக்கு இடையில் தொடங்கிய போர் ஐந்து ஆண்டுகள் நீடித்தது.  இந்தப் போரில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இவர்களுக்கு எதிராக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிரே நின்றன.  இரண்டாம் உலகப்போரில் 30 நாடுகள் கலந்துகொண்டன. இதன் விளைவாக இங்கு வாழ்ந்த 100 மில்லியன் மக்கள்  பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஏராளமான மக்கள் தற்கொலை, மன அழுத்தம், ஆயுத தாக்குதல், நோய் பாதிப்பு என 85 மில்லியன் மக்கள் இறந்துபோயினர். மனிதகுல வரலாற்றில் இது மறக்கமுடியாத களங்கமாக மாறியது.  செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மனி உலகை ஆட்சி செய்யும் வேகத்தில் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இதன் எதிர்வினையாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தன.  1939ஆம் ஆண்டு ராணுவ பலத்தைப் பொறுத்தவரை நவீனமான ஆயுதங்களைக் கொண்டிருந்தது ஜெர்மனிதான். இதன் காரணமாக போரின் தொடக்கத்தில் இ

கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் தங்க விழா! - ஜப்பானில் நடைபெற்ற விளையாட்டுத் திருவிழா!

படம்
  பிப்ரவரி 3 1972ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி வெளியே நடைபெறத் தொடங்கின. முதல்முறையாக என்பதை கூடவே சேர்த்துக்கொள்ளுங்கள்.  இந்த விளையாட்டுகளில் பிப்.3 தொடங்கி பிப். 13 வரையில் நடைபெற்றன.  ஜப்பானின் ஹொக்கடைவில் உள்ள இன்சாப்ரோவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு, அதாவது 2022இல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆங்கிலத்தில் கோல்டன் ஜூப்ளி என்கிறார்கள்.  ஜப்பான் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றது. 1940ஆம் ஆண்டுக்கான போட்டி நடத்தும் வாய்ப்பு. ஆனால் அதற்குள் சீனாவுக்குள் உள்ளே படையெடுத்து சென்றதால் 1937ஆம் ஆண்டு தன் வாய்ப்பை இழந்தது. எனவே விளையாட்டுப் போட்டிகளை நடத்த லண்டன், ஹெல்சின்கி என்ற நகரங்களைத் தேர்ந்தெடுக்கலாமா என்று நினைத்தது விழா கமிட்டி. போர் நடைபெற்றதால் இரு நகரங்களும் தேர்விலிருந்து விலகின.  சப்போரோ நகரம் பான்ஃப் லக்டி என்ற நகரங்களோடு போட்டி நடத்துவதற்கான தேர்ந்தெடுப்பு பட்டியலில் இடம்பிடித்தது. 1972ஆம ஆண்டுக்கான போட்டியை ரோமில் நடைபெற்ற கமிட்டி கூட்டம் முடிவு செய்தது. இவர் கூடிப் பேசி முடிவு செய்த

வலிமையான சீர்திருத்தங்களை முன்னெடுத்த இந்திரா காந்தி! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  இந்திராகாந்தி பதில் சொல்லுங்க ப்ரோ? இந்திராகாந்தியை ஏன் வலிமையான தலைவர் என்று சொல்லுகிறார்கள்? இந்திரா பிரியதர்ஷின் காந்தியின் குடும்பமே, அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அவரது தாத்தா மோதிலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர். மனைவி கமலா மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து வெளிவரலாம் என்ற வாய்ப்பையும் மறுத்தவர். தனது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அதில் உலக வரலாறையே கூறியிருப்பார்.  1917ஆம் ஆண்டு நவ.19 அன்று இந்திரா பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்தியாவில் நடைபெறும் விஷயங்களை அவர் கவனித்து வந்தார். தனது ஐந்தாவது வயதில் மேட் இன் இங்கிலாந்து தயாரிப்பு பொம்மையை நெருப்பிட்டு எரித்தார். 1921ஆம் ஆண்டான அன்று, சுதேசி இயக்கம் தீவிரமாக இருந்தது. தனது பனிரெண்டாவது வயதில் வானர சேனை ஒன்றைத் தொடங்கி, அதில் மாணவர்களை இணைத்தார். இவர்களின் வேலை, சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு ரகசிய செய்திகளை கொண்டுபோய் கொடுப்பது, நோட்டீஸ்களை சுவரில் ஒட்டுவது, தேசியக்கொடிகளை தயாரித

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடத்தும் அரசியல் விளையாட்டு

படம்
  அரசியல் விளையாட்டு ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெரும்பாலான மக்கள் பழங்குடிகள் என்பதால் போர் என்பது எப்போதும் அங்கு நின்றது கிடையாது. நிற்கவும் போவதில்லை. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா என அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானை வளைத்து போட முயன்றுகொண்டே இருக்கின்றன.இதனை நேரடியாக, மறைமுகமாக என இரண்டு வகையாகவும் கூறலாம்.  இப்போது அதைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.  அமெரிக்கா அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை இனி அவர்களின் வரிப்பணம் போருக்கு என்று செலவிடப்படாது. அந்நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது சரியில்லை. இந்த வகையில் அமெரிக்க அதிபர், அடுத்த ஆபரேஷன் நமக்குத்தான் என்று சொல்லி பின்வாங்கியது நல்ல விஷயம்தான். அமெரிக்காவை தளமாக கொண்டு தீவிரவாதிகள் இயங்கிய நிலை இனி இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. இதனை ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகளே கூட நம்பாது. உலகின் சூப்பர் போலீஸ் நாடான அமெரிக்கா, இதனை நம்புகிறது. அதோடு அதன் பெருமைமிக்க அந்தஸ்து இருபது ஆண்டு போரில் தோற்று பின்வாங்கியதோடு முடிவுக்கு வந்துவிட்டது. பின்லேடனை அழித்தது மட்டுமே சாதனை என அமெரிக்கா சொல்லிக்கொள்ளலாம்.

மருத்துவச் சேவையில் சாதனை படைத்த பெண்கள்!

படம்
          மேரி க்யூரி கதிர்வீச்சு அறிவியலாளர் அறிவியல் மற்றும் மருத்துவத்திற்காக கதிர்வீச்சு முறை பெரிதும் பயன்படுகிறது . அந்த ஆய்வில் மகத்தான சாதனைகளை செய்தவர் மேரி க்யூரி . இவர் செய்த ஆய்வுகளை குறித்து வைத்த காகிதங்கள் கூட கதிர்வீச்சு தன்மை கொண்டவை்யாக இருந்தன . இவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர் . அணுக்கள் அதிக சக்தி வாய்ந்த துகள்களை உமிழுகின்றன என்பதை க்யூரி கண்டுபிடித்தார் . அதில் ஒன்று போலோனியம் , மற்றது ரேடியம் . போலாந்தில்தான் க்யூரி பிறந்தார் . ரேடியத்திற்கு ரே என்ற வார்த்தைதான் காரணம் . இவரது கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுகிறது . 1867 இல் போலந்தில் பிறந்தார் . பெற்றோர்கள் ஆசிரியர்கள் . அவர்களின் தூண்டுதலால்தான் படிப்பில் ஆர்வம் காட்டினார் . இயற்பியல் மற்றும கணிதம் படிக்க பிரான்சின் பாரிசுக்கு சென்றார் . அங்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலாளர் பியரி க்யூரியை மணந்தார் . 1903 ஆம் ஆண்டு மேரியும் பியரியும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர் . மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பியரி விபத்து ஒன்றில் இறந்துபோன