இடுகைகள்

பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரும்பருந்தின் வாழ்க்கை பற்றி அறியும் ஆய்வு!

படம்
  கரும்பருந்து கரும்பருந்துக்குப் பாதுகாப்பு!  இயற்கைச்சூழலில் கரும்பருந்தின் (Milvus migrans) பங்கு,குப்பைகளைத் தூய்மைப்படுத்துவதுதான். டில்லியைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரி  இளைஞர்,நிஷாந்த்குமார். இவர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள குப்பைக்கிடங்குகளை அடிக்கடி பார்ப்பார். அங்கு இரைதேட வரும் கரும்பருந்துகள் வானில் வலம் வரும் காட்சி அவருக்கு பிடித்தமானது. ஆனால் இப்படி அவர் பார்வையில் படும்  கரும்பருந்துகளின்  எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. உண்மையில் கரும்பருந்துகளுக்கு என்னவானது என்ற கேள்வியே 2009ஆம் ஆண்டு,கரும்பருந்து பாதுகாப்பு திட்டத்தை (black kite project ) ஊர்வி குப்தா என்பவரோடு சேர்ந்து தொடங்கவைத்தது.  இந்த திட்டத்திற்கான உதவிகளை வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வழங்குகிறது. பொதுவாக குப்பைக்கிடங்குகளில் காணும் சிறிய பருந்துகள்,(Small indian kites)  கரும்பருந்தின் இனத்தைச் சேர்ந்த துணைப்பிரிவைச் சேர்ந்தவை. டில்லியில் கரும்பருந்துகளுக்கான உணவில் குறையேதும் இல்லை. டில்லியின் தொன்மையான நகரப்பகுதிகளில் முஸ்லீம்கள், கரும்பருந்துகளுக்கென இறைச்சித்துண்டுகளை உணவாக வீசி வருகிறார்கள். இ

வெளிநாட்டில் தேடிய வணிக வாய்ப்புகளும், சவால்களும்!

ஹூவெய் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என இருப்பது ரென் கிடையாது. ரிலையன்ஸின் திருபாய் அம்பானி போன்ற டெக்னிக்தான். ஊழியர்கள் தான் உரிமையாளர்கள். மொத்தம் 1 லட்சம் பேர். அவர்களின் பெயர்களைக் கூட பொறித்து வைத்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஐந்து நண்பர்கள் ஹூவெய் நிறுவனத்திற்கு முதலீடு செய்தனர். பிறகு 2000ஆம் ஆண்டிற்குள் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டனர்.    அமெரிக்காவில் முக்கியமான நிறுவனம் ஏடி அண்ட் டி. இந்த நிறுவனத்தின் பெல் லேப்ஸில் ஆய்வு செய்து ஏராளமான காப்புரிமைகளை பெற்று வந்தனர். இவர்களின் துணை நிறுவனமாக லூசென்ட் டெக்னாலஜி என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்ப்பட்டது. 1996ஆம் ஆண்டு தொடங்கிய  இந்த நிறுவனம், 2006ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. இத்தனைக்கும் எம்ஐடியின் சிறந்த நிறுவனத்திற்கான விருதை இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பெற்ற நிறுவனம் தான் லூசென்ட் டெக்னாலஜி.   பின்னாளில் சரிவை தடுத்து நிறுத்த அல்காடெல்லுடன் லூசென்ட் டெக்னாலஜி சேர்க்கப்பட்டது. ஆனாலும் பயனில்லை. நஷ்டப்பட்டு திவாலாகும் வங்கியை, நன்றாக இயங்கும் வங்கியோடு சேர்த்தால் அது சிறந்த ராஜதந்திரமாகுமா என்ன? அப்ப

பாமாயிலால் அழியும் உராங்குட்டான்கள்!

படம்
  மழைக்காடுகளில் வளர்க்கப்படும் பனைமரங்களிலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதற்கு கொடுக்கும் பெரிய விலையாக உராங்குட்டான்களின் வாழிடம் அழிக்கப்படுகிறது.  பாமாயில் மேற்கு ஆப்பிரிக்க பனை எனும் மரத்திலிருந்து பாமாயில் பெறப்படுகிறது. இதனை நீங்கள் பெரும்பாலும் வெஜிடபிள் ஆயில் என்ற வார்த்தையின் கீழ் புரிந்துகொள்ளலாம். இன்று பிரிட்டானியா, ஐடிசி, யுனிபிக், மெக்விட்டிஷ், ஓரியோ என அனைத்து பிஸ்கெட் கம்பெனிகளிலும் மலிவான முதல் விலை உயர்ந்த அனைத்து பொருட்களிலும் பாமாயில் பயன்படுகிறது. பாமாயில் என்ற பெயர் வர மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதும், பருவ மழைக்காடுகளில் அதிகம் விளைவிக்கப்படுவதும் முக்கியமான காரணம்.  உலகளவில் பயன்படுத்தும் பாமாயில் 85 சதவீதம் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இங்குதான் உராங்குட்டான்கள் காடுகளில் வாழ்கின்றன.  பாமாயிலுக்காக பனை மரங்களை விளைவிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் உராங்குட்டான்கள் மட்டுமல்ல பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் வாழிடமும் அழிக்கப்படுகிறது. இதனால் உணவுக்காக அவை நகரங்களுக்குள் வருவது தவிர்க்க

இந்திய அரசின் புதிய தனித்துவமான ஸ்மார்ட்போன் ஓஎஸ்!

படம்
  ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஓஎஸ் - எப்படி இருக்கும்? மத்திய அரசு இந்தியாவிற்கென தனித்துவ  ஸ்மார்ட்போன் இயக்க முறைமையைத் (OS) தயாரிக்க உள்ளது. இந்த இயக்க முறைமை, கூகுளின் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐஓஎஸ் ஆகிய இயக்கமுறைமைகளுக்கு மாற்றாக இருக்கும். இதுபற்றிய செய்தியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.  இந்தியாவின் பிராண்ட்! தற்போது இந்தியச் சந்தையில் பன்னாட்டு நிறுவனமான கூகுளும், ஆப்பிளும்  ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மென்பொருள் மட்டுமன்றி, வன்பொருள் சந்தையையும் கட்டுப்படுத்தி வருகின்றன. இதற்கு நிகரான திறன் கொண்ட ஓஎஸ்ஸை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தகவல்தொடர்பு அமைச்சகம் வல்லுநர்களிடம் கருத்து கேட்டுள்ளது.   புதிய இயக்கமுறைமையை இந்தியா உருவாக்கினால், அது இந்தியாவின் வணிக பிராண்டாக மாறும் என அரசு எதிர்பார்க்கிறது. மக்களுக்கு இரண்டு இயக்கமுறைமைகளைக் கடந்து மூன்றாவது வாய்ப்பாகவும் இது அமையும்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களின் ஆதரவு மற்றும் உதவியால் ஸ்மார்ட்போன் இயக்கமுறைமையை உருவாக்க மத்திய அரசு தி

நாய்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறியாளர் பெண்மணி!

படம்
  கோவையில் உள்ளது சீரநாய்க்கன்பாளையம். இங்குதான், ஹியூமன் அனிமல் சொசைட்டி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சுவர்கள் முழுவதும் விதவிதமான நாய்கள் நம்மை பல்வேறு வித குணங்களுடன் செய்கைகளுடன் பார்க்கின்றன. ஐ லவ் யூ, யூ வில் ஃபீட் மீ என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தெருநாய்கள், காயமுற்ற நாய்களை பாதுகாக்கும் அமைப்பு இது.  தன்னார்வ தொண்டு அமைப்பாக 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை 70 ஆயிரம் நாய்களை பாதுகாத்து பராமரித்துள்ளனர். இந்த செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தவர் மினி வாசுதேவன். இவர் தனது கணவரோடு அமெரிக்காவில் பொறியாளராக வேலை செய்து வந்தவர். பிறகே, பதிமூன்று ஆண்டுகள் கழித்து அங்கிருந்து இந்தியாவிற்கு வந்தார். இவரது கணவர் பெயர், மது கணேஷ்.  2019இல் மினி வாசுதேவனுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சீரநாய்க்கன்பாளையத்தில் உள்ள காப்பக இடம் போதாமல், கோவை வழுக்குப்பாறை அருகில் 15 ஏக்கர் நிலத்தில் காப்பகம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இங்கு இயற்கை சூழலில் நாய்களை பாதுகாத்து பராமரிக்கிறார்கள். இதில் வேலை செய்யும் சம்பள பணியாளர்களின் எண்ணிக்கை

பவளப்பாறை, பருவ மழைக்காடு பற்றி அறிவோம்!

படம்
  தெரியுமா? பவளப்பாறை கடலின் ஆழ்கடலில் உள்ள முக்கியமான சூழல் அமைப்பு. ’கடலில் அமைந்துள்ள மழைக்காடுகள் ’என சூழலியலாளர்கள் இதனைக் கூறுகிறார்கள். பவளப்பாறைகளைப் பார்க்க பாறைகள் போல தோற்றமளிக்கும். ஆனால் அவை உண்மையில் விலங்குதான். இதன் மேல்பகுதி கால்சியம் கார்பனேட் வேதிப்பொருளால் ஆனது. இதுவே அதன் ஓடுபோல தோற்றமளிக்கிறது.  இதன் அடிப்பரப்பில் நண்டு, ஆமை, மீன் என ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறை, எளிதில் அழியக்கூடியவை. கடலில் ஏற்படும் மாசுபாடு இதனை எளிதாக பாதித்து அழிவை உருவாக்குகிறது.  பருவ மழைக்காடு இங்கு, வெப்பமும், ஈரப்பதமும் சரிபாதி அளவில் இருப்பதால், தாவரங்களும்  உயிரினங்களும் அதிகளவில் இங்கு வாழ்கின்றன.  உலகில் வாழும் தாவரம் மற்றும் விலங்கு இனங்களில்  பாதியளவு பருவ மழைக்காடுகளில் காணப்படுகின்றன.  தாவரம், விலங்கு, பூஞ்சை, நுண்ணுயிரிகள் என பல்லுயிர்த்தன்மை கொண்ட இடம் இது. மத்திய தெற்கு அமெரிக்கா, மேற்கு மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா தீவு ஆகியவற்றில் பருவ மழைக்காடுகள் அமைந்துள்ளன.   தகவல் https://climatekids.nasa.gov/10-th

தவளையைக் காக்கப் போராடும் சூழலியலாளர்! - மதுஸ்ரீ முட்கே

படம்
  மதுஸ்ரீ முட்கே தவளை இனத்தைப் பாதுகாக்கும் சூழலியலாளர்!  மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர்  மதுஸ்ரீ முட்கே (madhushri mudke ). கர்நாடகத்திலுள்ள, மணிபால் நகருக்கு பிசியோதெரபி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற வந்தார். படிக்கும்போது, அங்குள்ள இயற்கைவளம் மற்றும் பறவைகளால் ஈர்க்கப்பட்டார்.  இதன் விளைவாக, தனது வேலையைக் கூட சூழலியலுக்கு மாற்றிக் கொண்டார். 2015ஆம் ஆண்டு தொடங்கி நகரமயமாதலால் பாதிக்கப்படும் தவளை இனங்களைப்  பற்றி ஆராய்ந்து வருகிறார்.  மதுஸ்ரீயின் பெரும்பாலான ஆய்வுகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்றது. கோட்டிகெஹரா டான்சிங் ஃபிராக்கை (kottigehara dancing frog) காப்பாற்றுவது பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். தற்போது, பெங்களூருவில் உள்ள அசோகா டிரஸ்டில் (ATREE) முனைவர் படிப்பை படித்து வருகிறார். இந்த அமைப்பு இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த ஆராய்ச்சிப்படிப்புகளை கொண்டுள்ளது. இங்கு ஆராய்ச்சி செய்யும் மதுஸ்ரீக்கு தேவையான உதவித்தொகையை, லண்டன் விலங்கியல் சங்கம் வழங்கிவருகிறது.   மாசுபாடு, அணை, காடுகள் அழிப்பு காரணமாக நடனத் தவளையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ”தவ

புலிகளைப் பாதுகாக்கும் லத்திகா நாத்!

படம்
  புலிகளின் பாதுகாப்பில் அணுகுமுறை மாறவேண்டும்! சூழலியலாளர் லத்திகா நாத், புது டில்லியில் உள்ள அனைந்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குநர். கடந்த 30 ஆண்டுகளாக புலிகளைப் பற்றி ஆய்வுகளைச் செய்து வருகிறார். 1970ஆம் ஆண்டு தொடங்கி ஊடகங்களில் வனப் பாதுகாப்பு பற்றி பேசியும், எழுதியும் பங்களித்து வருகிறார்.  சிறுவயதில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு காடுகளுக்கு பயணித்துள்ளார். தனது ஆறு வயதில் சூழலியலாளர் என்ற வார்த்தையைக் காதில் கேட்டார். அத்துறையில் வல்லுநராகவேண்டும் என்ற ஆசை அப்போதே மனதில் முளைவிட்டிருக்கிறது. இந்தியாவில் முனைவர் பட்டம் வென்ற முதல் பெண் உயிரியலாளர் லத்திகா நாத் தான்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் புலிகளின் பாதுகாப்பு தொடர்பாக படித்து பட்டம் பெற்றார்.  பெண் என்பதால் கல்வி கற்றும் கூட பல நிறுவனங்களில் புறக்கணிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே தனது ஆராய்ச்சிகளை சுயமாகவே முடிவு செய்து செய்யத் தொடங்கியிருக்கிறார்.  மத்தியப் பிரதேசத்தில் கன்ஹா காட்டுப்பகுதியில் புலிகள் பாதுகாப்புக்காக பணிகளை செய்தார். புலி, பனிச்சிறுத்தை, சிறுத்தை, ஜாகுவார், யானை, டால்பின்கள்

சதுப்புநிலத்தைக் காக்கும் இந்திய அரசின் திட்டம்!

படம்
  சூழலைக் காக்கும் சதுப்புநில நண்பன்  திட்டம்! இந்தியா முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள், சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு உதவுகின்றன. இவற்றை பாதுகாப்பதும், ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்கான தீர்வை வெட்லேண்ட் மித்ரா (Wetland Mitra) எனும் திட்டத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.  தற்போது, சென்னையில் 'சதுப்புநில நண்பன்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன்படி, சூழலியலில் ஆர்வம் உள்ளவர்கள், தன்னார்வலராக இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவேளையில் ஏரி, சதுப்பு நிலங்களைக் கண்காணிக்க வேண்டும். இதுதான் அவர்களது பணி. இதன்மூலம் ஏரி, சதுப்புநிலங்களின் பாதுகாப்பு உறுதிப்படுகிறது. அங்கு வரும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய துல்லியமான தகவல்களும் சதுப்புநில ஆணையத்திற்கு கிடைத்துவிடுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் உள்ளார். தேவையான அரசு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க தன்னார்வலர்களின் தகவல்கள் உதவுகின்றன.  “தற்போது சென்னையில் 106 சதுப்பு நில நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பெற்று சதுப்புநிலங்களைப் ப

நீர்நிலைகளிலுள்ள பிளாஸ்டிக்குகளை அகற்ற முடியுமா?

படம்
  பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் அஸூர்!  கடல், ஆறு, ஏரி, குளம் குட்டை என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பியுள்ளன. நிலத்தில் பெருகிய பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகளிலும் பரவத் தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை அகற்றுவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அப்படி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் இச்தியோன்(Itchion). இந்த நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொழில்நுட்பம் கொண்ட கருவி மூலம் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக அகற்ற முடியும்.  இச்தியோன் என்ற நிறுவனத்தின் பிளாஸ்டிக் அகற்றும் கருவியின் பெயர் அஸூர் (azure). இக்கருவி நீர்நிலையில் அடிப்பரப்பில் சென்று பிளாஸ்டிக்குகளை மேலே தள்ளுகிறது. கூடவே பொருத்தப்பட்ட கேமரா மூலம் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் தினசரி 80 டன் கழிவுகளை அகற்ற முடியும். இக்கழிவுகளை சரியான முறையில் பிரித்து மறுபடியும் பயன்படுத்தலாம் அல்லது மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பலாம்.  இச்தியோன் நிறுவனத்தின் அஸூர் கருவி, விரைவில் ஈகுவடார் நாட்டின் காலபகோஸ் தீவில் நிறுவப்படவ

ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் முயற்சி - ஒடிஷா மாநில அரசின் ஆமையைக் காக்கும் தடை!

படம்
  pinterest ஒடிசா மாநிலத்தின்  கேந்திரபாரா மாவட்டத்தில் கதிர்மாதா, எனும் கடல் உயிரினங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 1,435 சதுர கி.மீ.ஆகும். இதில் பாதுகாக்கப்பட்ட காடுகள், வண்டல்மண் பரப்பு, மணல் திட்டுகள் உள்ளன. இக்கடல்பரப்பை, 1997ஆம் ஆண்டு கடல் சரணாலயமாக ஒடிஷா அரசு அறிவித்தது. இங்கு அழிந்து வரும் நிலையிலுள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ஆலிவ் ரிட்லி ஆமைகள். ஆண்டுதோறும் முட்டைகளை இட அதிகளவு எண்ணிக்கையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இங்கு வருகின்றன.  சரணாலயத்திற்கு வரும் ஆமைகளை பாதுகாக்கவென வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட வரும் இடங்களில் கதிர்மாதா கடற்புரமும் ஒன்று. ஆண் ஆமைகள், பெண் ஆமைகளுடன் இனப்பெருக்கம் முடிந்தவுடன் கடலுக்குள் திரும்பிச்சென்று விடுகின்றன. கருவுற்ற பெண் ஆமைகள் சூரியன் வானில் மறைந்தபிறகு மணல் பரப்பிற்கு முட்டையிட வருகின்றன. நெடுநேரம் யோசித்து முட்டையிடுவதற்கான இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. தோராயமாக ஒரு ஆமை,  மணலில் குழிதோண்டி 120 முதல் 150 வரையிலான  முட்டைகளை  இடும். பிறகு, திரும்பி

இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்!

படம்
  இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்! தி சீக்ரெட் லைஃப் ஆஃப் தி அட்டர் நிகோலஸ் மில்டன் பென் அண்ட் ஸ்வோர்ட் புக்ஸ் அட்டர் என்ற விஷப்பாம்பு உலகம் முழுக்கவே அழிந்துவரும் நிலையில் உள்ளது. அதனைப் பற்றி நாம் தவறாக அறிந்துள்ள விஷயங்கள் எவை என நூல் ஆசிரியர் விளக்கியுள்ளார். இங்கிலாந்தில் அதிகளவு இப்பாம்பு இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நூல் ஏற்படுத்தும் ஊக்கத்தால் அட்டர் காப்பாற்றப்பட்டால் நல்லது.  ஃபிளெட்ஜிலி ங் ஹன்னா போர்ன் டெய்லர் ஆரம் பிரஸ்  கானா நாட்டின் கிராமப்புற  பகுதியில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களை ஹன்னா நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். அவர் வளர்த்த உழவாரன் குருவி, மன்னிக்கின் என்ற சிறு பறவை ஆகியவற்றையும் வளர்த்து வந்ததைப் பற்றி படிக்க சுவாரசியமாக உள்ளது.  தி பேரட் இன் தி மிரர் ஆண்டன் மார்ட்டின்ஹோ டிரஸ்வெல் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூலில் ஆசிரியர், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒத்த குணங்கள், பழக்கங்கள் பற்றி விவரிக்கிறார்.  தி கார்ன்கிரேக் ஃபிராங்க்ரென்னி வொயிட்லெஸ் பப்ளிசிங் வடக்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்பட்ட பறவைதான் கார்ன்கிரேக். ஆனால் இ

சூழலுக்கு உதவும் மீன்பிடிபூனை! - சூழலியலாளர் தியாசா ஆத்யா

படம்
தியாசா ஆத்யா கோல்கட்டாவைப் பூர்வீகமாக கொண்டவர், தியாசா ஆத்யா.  கல்லூரியில் உயிரியலாளராக  பயிற்சி பெற்றார். தனது 22 வயதில் இயற்கைப் பாதுகாப்பு பணிகளைச் செய்யத் தொடங்கினார். முதல்பணியாக, சுந்தரவனக்காடுகளில் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாக்கும் பணியை செய்தார்.  காட்டுயிர் பாதுகாப்பு சங்கத்தின் இயக்குநரான வித்யா ஆத்ரேயாவை, தனது வழிகாட்டியாக தியாசாக கருதுகிறார். அமெரிக்க சிறுபூனை பாதுகாப்பாளரான ஜிம் சாண்டர்சன் (Jim sanderson), மூலம் பூனை இனங்களைப் பற்றிய ஆராய்ச்சியை தியாசா தொடங்கினார். மீன்பிடி பூனைக்கு மீன்தான் முக்கியமான உணவு. இதன் உரோமங்கள், நீர் உடலை நனைக்காதவாறு பாதுகாக்கிறது. இப்பூனையின் கால்கள், வலை போன்ற அமைப்பிலானவை. கால்களிலுள்ள நகங்கள், மீன்களைப் பற்றிப் பிடிக்க உதவுகிறது.  மேற்குவங்கத்தில் சதுப்புநிலங்களைக் காக்க க்ரௌட் ஃபண்டிங் முறையில் நிதி சேகரிக்கப்படுவதில் தியாசா முக்கியமான பங்காற்றியுள்ளார். பப்ளிக், ஹீல் ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 2010ஆம் ஆண்டு தி ஃபிஷ்ஷிங் கேட் ப்ராஜெக்ட் (TFCP)என்ற திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம் சதுப்புநிலத்தையும் அதில் வாழு

யுனைடெட் வே மும்பையின் தூய்மைப்பணி

படம்
  கடற்கரைகளை சுத்தம் செய்யும் குழு! மும்பையில் கடந்த செப்டம்பர் மாதம், 40 கல்லூரி மாணவர்கள் குழு, மஹிம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இக்கழிவுகள், மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யுனைடெட் வே மும்பை என்ற தன்னார்வ நிறுவனத்தின் பெயரில் தூய்மை பணிகளை மாணவிகள் செய்தனர்.  2017ஆம் ஆண்டு யுனைடெட் வே மும்பை தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் யுனைடெட் வே வேர்ல்ட் என்ற உலகளாவிய அமைப்பின் இந்திய பிரிவு ஆகும். முமைபையிலுள்ள தன்னார்வ அமைப்பு, 11 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. கடற்கரைகளை சுத்தம் செய்து 98 ஆயிரம் கிலோ கழிவுகளை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பியுள்ளது. ஒன்பது கடற்கரைப் பகுதிகளை இந்த அமைப்பு சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. ”கடலில் வந்து சேரும் ஆறுகளில் ஏகப்பட்ட கழிவுகள் உள்ளன. அவற்றைக் குறைத்தாலே கடற்கரையில் ஒதுங்கும் கழிவுகளை குறைக்கலாம். நாங்கள் மும்பை மாநகராட்சிக்கு தூய்மைப் பணியில் உதவுகிறோம்” என்றார்  யுனைடெட் வே மும்பை அமைப்பின் துணைத்தலைவர் அஜய் கோவலே.  கடற்கரையைச் சுற்றியுள்ள சுவர்களில் வண்ணம் தீட்டுவது, குப்பைகளை போடக

முஸ்லீம் பெண்களின் மீது இறுகும் கட்டுப்பாடுகள்! - ஹிஜாப்பிற்குத் தடை

படம்
  ஹிஜாப்களை பொது இடத்தில் பயன்படுத்துவதை முதலில் அனுமதித்த மேற்கு நாடுகள், முஸ்லீம்கள் மீதான பயத்தின் காரணமாக அவர்களை இப்போது நெருக்கி வருகிறார்கள். அண்மையில் பிரான்சில் முஸ்லீம்களை முகத்தை மூடக்கூடாது என்று கூறியது நினைவு வருகிறதா?  பிரான்ஸ்   இங்கு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று முஸ்லீம்கள் நிகாப், பர்கா ஆகிய உடை வகைகளை அணியக் கூடாது என அரசு கூறியது. இதில் ஹிஜாப் மட்டும் விதிவிலக்கு. முகத்தை மறைக்காமல் அணியவேண்டும் என கூறப்பட்டது.  அமெரிக்கா 1837ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைத்து வகை முகத்தை மூடும் உடைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது.  2019ஆம் ஆண்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது. ஏனெனில் இல்கான் ஓமர் என்ற பெண்மணி தேர்தலில் வென்று மன்றத்திற்கு வந்தார். அவருக்கான சட்டத்தில் மாறுதல்களை செய்தனர்.  பெல்ஜியம் இங்கு 2011ஆம் ஆண்டு நிகாப் முதற்கொண்டு முகத்தை மூடும் அனைத்து உடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன.  ஸ்விட்சர்லாந்து 2021ஆம் ஆண்டு இங்கு வாழும் மக்கள், பொது இடங்களில் முஸ்லீம் மக்கள் முகத்தை மூடும் உடைகளை அணிவதற்கு தடை விதிக்கலாம் பொது வாக்களிப்பு செய்

இயற்கைச்சூழலில் மீன்பிடிபூனையின் பங்கு! - திசா ஆத்யா

படம்
  இயற்கை செயல்பாட்டாளர் திசா ஆத்யா மீன்பிடி பூனையை காப்பாற்ற முயலும் தன்னார்வலர்!  கோல்கட்டாவைப் பூர்வீகமாக கொண்டவர், தியாசா ஆத்யா.  கல்லூரியில் உயிரியலாளராக  பயிற்சி பெற்றார். தனது 22 வயதில் இயற்கைப் பாதுகாப்பு பணிகளைச் செய்யத் தொடங்கினார். முதல்பணியாக, சுந்தரவனக்காடுகளில் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாக்கும் பணியை செய்தார்.  மீன்பிடி பூனை காட்டுயிர் பாதுகாப்பு சங்கத்தின் இயக்குநரான வித்யா ஆத்ரேயாவை, தனது வழிகாட்டியாக தியாசாக கருதுகிறார். அமெரிக்க சிறுபூனை பாதுகாப்பாளரான ஜிம் சாண்டர்சன் (Jim sanderson), மூலம் பூனை இனங்களைப் பற்றிய ஆராய்ச்சியை தியாசா தொடங்கினார். மீன்பிடி பூனைக்கு மீன்தான் முக்கியமான உணவு. இதன் உரோமங்கள், நீர் உடலை நனைக்காதவாறு பாதுகாக்கிறது. இப்பூனையின் கால்கள், வலை போன்ற அமைப்பிலானவை. கால்களிலுள்ள நகங்கள், மீன்களைப் பற்றிப் பிடிக்க உதவுகிறது.  மேற்குவங்கத்தில் சதுப்புநிலங்களைக் காக்க க்ரௌட் ஃபண்டிங் முறையில் நிதி சேகரிக்கப்படுவதில் தியாசா முக்கியமான பங்காற்றியுள்ளார். பப்ளிக், ஹீல் ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 2010ஆம் ஆண்டு தி ஃபிஷ்ஷிங் கேட்

எப்போதும் இணைந்திருக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள்!

படம்
  ரிங் ஜென் 4 இது நான்காம் தலைமுறை வீடியோ டோர்பெல். வைஃபை வசதியும் பிற அம்சங்களும் நிறைய மேம்பட்டிருக்கிறது. யார் உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். கதவை தட்டுபவர்கள் யார், பிறர் வீட்டுக்கு செல்பவர்கள் என நிறைய விஷயங்களை கண்காணிக்க முடியும். மேலும் காலிங்பெல் அழுத்துபவர்களுக்கு சொல்ல நான்கு வகையான ப்ரீசெட் பதில்களும் உள்ளன. விலை 16,900 எக்கோ ஷோ 10 இது மூன்றாம் தலைமுறை கருவி. 10.1 இன்ச் திரை கொண்ட சாதனம். இதனால் இதில் எளிதாக பிறருடன் பேச முடியும். ஸ்ட்ரீமிங் வீடியோக்களை பார்க்க முடியும். பிற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம்.   விலை 24,999 ஃபர்போ டாக் கேமரா இது நாய்க்கான கேமரா. இதன்மூலம் நாம் வீட்டில் இல்லாதபோது கூட நாய்க்கு உணவு அளிக்க முடியும். இதில் நாயை கவனிப்பதோடு ஆடியோவும் உண்டு. இதில் உள்ள ஸ்னாக்ஸ் டிஸ்பென்சர் மூலம் நாய்க்கு உணவு அளிக்க முடியும். இதில் அலெக்ஸாவை இணைத்தால் போதுமானது. படத்தின் தரமும் சிறப்பாக உள்ளது.  விலை 26,500 ஆர்லோ எசன்ஷியல் ஸ்பாட்லைட் கேமரா வயர்லெஸ் முறையில் இயங்கும் பாதுகாப்பு கேமரா. வைஃபையில் இணைத்தால் போதும். உங்களுக்கு சொந்தமாக சொத்துக்களை எளிதாக பராமரித்து

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா!

படம்
  இந்தியாவில் தற்போது 106 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பு 40 ஆயிரம் சதுர கி.மீ. உலகின் முதல் தேசியப்பூங்கா எங்கு தொடங்கப்பட்டது தெரியுமா?  அமெரிக்காவில்தான் தொடங்கப்பட்டது. இதன் பெயர், யெல்லோஸ்டோன் என தலைப்பில் குறிப்பிட்டதுதான். இதன் பரப்பு, 8,104 சதுர கி.மீ.  இந்த தேசியப் பூங்கா வியோமிங் தொடங்கி மான்டனா, இடாகோ ஆகிய மாகாணங்கள் வரை நீண்டுள்ளது. இங்கு 67 வகை பாலூட்டிகள் வாழ்கின்றன. 322 இன பறவைகள். 16 வகை மீன்கள், 1,100 இயற்கை தாவரங்கள் உள்ளன. 400 வகையான வெப்பத்தை விரும்பும் நுண்ணுயிரி வகைகள் அறியப்பட்டுள்ளன.  இங்கு கால்டெரா எனும் எரிமலை உள்ளது. வெப்ப நீரூற்றுகளும் உண்டு. ஓல்ட் ஃபைத்ஃபுல் என்ற வெப்ப நீரூற்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. 60 அல்லது 90 நிமிடங்களுக்கு நீரை வேகமாக பீய்ச்சி அடித்து வருகிறது. 1870ஆம் ஆண்டு இதனை கண்டுபிடித்தனர். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் முன்னர் எரிமலை இயக்கம் இருந்திருப்பதாக ஆய்வாளர்கள் தகவல் கூறுகின்றனர். புவித்தட்டுகளில் மோதல் இங்கு எரிமலை உருவாக காரணமாக இருந்திருக்கிறது. இதை ஏன் இப்போது நாம் வாசிக்கிறோம்? மார்ச் 1, 1872ஆம்

மேட் இன் இந்தியா ட்ரோன்ஸ்! - தன்மய் பங்கர்

படம்
2019ஆம் ஆண்டு நடைபெற்ற விமானப்படையின் போட்டியில் கூட தோல்விதான். ஆனாலும் ட்ரோன்களை தயாரிப்பதை கைவிடவில்லை. இவரது ஆர்வத்தைப் பார்த்து, ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை 50 லட்ச ரூபாயை ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளது. இந்திய அரசு, மேட் இன் இந்தியா பொருட்களை தேவை என்று கூவினாலும் பெரியளவு பொருட்கள் அனைத்து துறைகளிலும் உருவாகவில்லை. அதற்கு தேவையான ஊக்கமும் பணமும் கிடைக்கவில்லை என்பதே காரணம். இதன் காரணமாக டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா, அமெரிக்காவிடமிருந்து அதிக செலவில் வாங்கி வந்தது. இதை எப்படி தயாரிக்கிறார்கள் என தன்மய் ஆராய்ந்தார். பொட்டாசியம் நைட்ரேட்டை பயன்படுத்துவது தெரிய வந்தது. இது அதிக செலவு பிடிக்கும் ஏவுகணைத்திட்டம் என்பதை அறிந்து அதனை கைவிட்டார். பிறகுதான் ட்ரோன்களை தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார். பாகிஸ்தான் அண்மையில் ஜம்முவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது பலருக்கும் நினைவிருக்கலாம். துருக்கியும் கூட இப்போது பெருமளவு தனது ஆயுதங்களை விட ட்ரோன்களை பயன்படுத்தி எதிரிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. 2014இல் தொடங்கிய ஆராய்ச்சி 2016இல் பாட் டைனமிக்ஸ் என்ற நிறுவன

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள முட