இடுகைகள்

அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவின் முதல் விண்கலம் - ஸ்கைலேப்

படம்
  அமெரிக்கா உருவாக்கிய முதல் விண்கல ஆராய்ச்சி மையம், ஸ்கைலேப். 1973ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, நாசா இதனை விண்ணில் ஏவியது. மூன்று விண்வெளி வீர ர்களுடைய குழு இந்த விண்கல ஆராய்ச்சிக் கலத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிகளை செய்தனர். இதில் புவிவட்டபாதை, பூமியைப் பற்றிய ஆராய்ச்சி, சூரியனைப் பற்றிய ஆய்வக ஆய்வு என நிறைய விஷயங்களை அங்கு செய்தனர் . ஸ்கைலேப் விண்ணில் ஏவப்பட்டு பதினொரு நாட்கள் கழித்து மே 25 அன்று மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு கிளம்பினர். சார்லஸ் கான்ராட், பால் வெய்ட்ஸ், ஜோசப் கெர்வின் ஆகியோர் தான் கிளம்பிய மூவர். இவர்கள் விண்கலத்திற்கு சென்று நிறைய பழுதுகளை நீக்கினர்.மைக்ரோமெட்ராய்ட் கவசம், சோலார் பேனல் பழுதுப்பட்டிருந்தது  அடுத்த குழுவினர் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு கிளம்பினர். இவர்கள் அங்கு சென்று 59 நாட்கள் இருந்தனர். பணியாற்றினர்.  1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ற மூன்றாவது குழுவினர். 84 நாட்கள் விண்ணில் இருந்தனர். பிறகு மெல்ல ஸ்கைலேப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. நாசா, கீழிருந்து அனுப்பிய கட்டளைகள் மூலம் விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது. பூமிய

உலகிலுள்ள அணுகுண்டுகள் ஒட்டுமொத்தமாக வெடித்தால்...

படம்
  வளர்ந்தநாடுகள் வைத்துள்ள அணு குண்டுகளின் எண்ணிக்கை 15 ஆயிரம் என 2019ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இவை ஒட்டுமொத்தமாக வெடித்தால் 3 பில்லியன் மெட்ரிக் டன் டிஎன்டிகளுக்கு சமம். 30 மைல் தொலைவுக்கு காளான் குடை பூக்கும். பொதுவாக அணுகுண்டு வெடித்து எழும் புகையின் வடிவமே காளான் குடையாகும். இப்படி காளான் குடை உருவாவதோடு, 1,864 சதுர கிலோமீட்டர் பரப்பும் ஒன்றுமில்லாமல் அழிந்துபோகும்.  இப்படி நாம் கூறும் தகவல்கள் எல்லாமே தோராயம்தான். யூடியூப் சேனலான கர்ஸ்ஜெசாட் கூறும் தகவல்கள்தான் இது.  image - business insider

ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் இனவெறி காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்! - லிண்டா வில்லாரோஸா

படம்
  லிண்டா வில்லாரோசா எழுத்தாளர் பல ஆண்டுகளா கருப்பின மக்களின் உடல், மன ஆரோக்கியம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பெண்மணி. அண்மையில் அண்டர் தி ஸ்கின் - தி ஹைடன் டோல் ஆஃப் ரேசிசம் ஆன் அமெரிக்கன் லைவ்ஸ் அண்ட் ஆன் தி ஹெல்த் ஆஃப் அவர் நேஷன் என்ற நூலை எழுதியுள்ளார்.  இனவெறி என்பது கருப்பின மக்கள் கடந்த எப்படி நாட்டின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உருவாகியுள்ளது என நினைக்கிறீர்கள்? அமெரிக்காவின் நிலையை நீங்கள் பிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பதோடு, மக்களின் ஆயுளும் குறைந்து வருகிறது. கர்ப்பிணிகளின் இறப்பும் கூடி வருகிறது. இதனை பிற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுத்தான் கூறுகிறேன். இப்படி நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே கருப்பின மக்கள் மட்டும் சார்ந்தது கிடையாது. நாடு முழுக்க இந்த பிரச்னை உள்ளது.  அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு உடல் மனரீதியான பிரச்னைகள் உள்ளன. அவர்கள் குழந்தை பெறுவதே சிக்கலானது என கூறுவது ஏன்? பெருந்தொற்று காலத்தில் பிறரை விட அதாவது வெள்ளையரை விட பத்து வயது இளமையானவர்கள் கூட இறந்துபோனார்கள். கோவிட் காலத்தில் ஏராளமான கருப்ப

டாப் 1 அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் ஃபிரான்டியர்!

படம்
  உலகின் வேகமான சூப்பர் கம்ப்யூட்டர்!  டாப் 500 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில், அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டர் புதிதாக இடம்பிடித்துள்ளது. இதன்  பெயர், ஃப்ரான்டியர்  எக்ஸாஸ்கலே கணினி  என அழைக்கின்றனர்.  எக்ஸாஸ்கலே கணினி ஒரு நொடிக்கு, குயின்டில்லியன் கணக்குகளை போடும் திறன் கொண்டது. நான்கு ஆண்டுகளுக்கு பூமியிலுள்ள அனைத்து மனிதர்களும் 24 மணிநேரமும் கணக்கு போடுவதை இக்கணினி ஒரு நொடியில் போட்டுவிடும்.  ஜப்பானில் உள்ள ஃபுகாகு என்ற சூப்பர் கணினியை ஃபிரான்டியர் கணினி பின்னுக்கு தள்ளியுள்ளது. கணினியின் வேகத்தை பெட்டாஃபிளாப்ஸ் என்று அழைக்கின்றனர்.  இந்த வகையில் ஃபுகாகுவின் வேகம் 442 பெடாஃபிளாப்ஸ்களாக உள்ளது.  ஃபிரான்டியர் , 1 எக்ஸாஸ்கேல் என்பது 1000 பெடாபிளாப்ஸ்க்கு ஒப்பானது. இந்த வகையில் எக்ஸாஸ்கேல், பட்டியலில் முதன்மையாக உள்ள நான்கு கணினிகளையும் தாண்டிய திறனைக் கொண்டுள்ளது.  ஃபிரான்டியர் சூப்பர் கணினி 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. இதனை அமெரிக்க ஆற்றல் துறையில் தேசிய ஆய்வகத்தில் சோதித்து வருகிறார்கள்.  இப்போதைக்கு டாப் சூப்பர் கணினிகளைப் பார்ப்போமா 1 . ஃபிரான்டியர் 2. ஃபுகாகு, ஜப்பான் 3. லூமி, ப

அமெரிக்க, ஐரிஷ் மக்களுக்கு இடையிலான அதிகாரப்போர்! - கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் - மார்ட்டின் ஸ்கார்சி

படம்
  கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் மார்ட்டின் ஸ்கார்ஸி 2002 அமெரிக்கத் திரைப்படம். கருப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் நடைபெறுகிறது. அங்கு, வாழும் அமெரிக்கர்களுக்கும் புதிதாக குடியேறும் ஐரிஷ் மக்களுக்குமான யார் நிலம் இது என்ற சண்டைதான் படம்.  நியூயார்க் நகரில் ஃபைவ் பாய்ண்ட்ஸ் குடிசைப்பகுதியில் வாழும் பில் என்பவர்தான் ஐரிஷ் மக்களை எதிர்க்கும் குழுவுக்கான தலைவர். இவருக்கு தொழிலே பன்றிக்கறி வெட்டுவதுதான். அப்படியே பன்றியை குத்தி இறுதியில் மனிதர்களை குத்திப்போடும் ரவுடி ஆகிறார். இவருக்கென தனி குழுவே உருவாகிறது.  நகரில் நடக்கும் அனைத்து தண்டால், வழிப்பறி, கொள்ளை என அனைத்துக்குமே கமிஷன், பர்சென்டேஜ் வந்தே ஆகவேண்டும். அப்படி வராதபோது கோடாரி சம்பந்தப்பட்ட ஆளின் முதுகில் பதிந்திருக்கும் அல்லது குறுவாள் வயிற்றில் குத்தியிருக்கும். இந்த நிலையில் சில பல ஆண்டுகளுக்கு முன்னர், ஐரிஷ் மக்களுக்காக ஒரு தலைவர் - பிரிஸ்ட் வாலன் போராடி சாகிறார். அவரை பில் தான் கொல்கிறான். அதற்குப் பிறகே அந்த பகுதியில் முழுக்க பில்லுக்கு அடிபணிகிறார்கள். ஐரிஷ் ஆட்கள் வேறுவழியின்றி பில்லை ஏற்க

அமெரிக்காவிற்கு சாகச பயணமாக இடம்பெயர்ந்த வங்கதேச மனிதரின் கதை!

படம்
  விவேக் பால்ட் ஆவணத் திரைப்பட இயக்குநர் இன் சர்ச் ஆஃப் பெங்காலி ஹர்லேம் என்ற படத்தை அண்மையில் உருவாக்கியுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எப்படி அமெரிக்காவிற்கு வந்து பிழைக்கிறார் என்பதை சொல்லும் படம். படத்தின் உதவி இயக்குநரான அலாவுதீன் உல்லா என்பவரின் தந்தை பற்றிய கதை இது.  அகதி ஒருவரைப் பற்றிய கதையை எப்படி எடுத்தீர்கள்? 1999ஆம் ஆண்டு அலாவுதீனின் தனிக்குரல் நிகழ்ச்சியைப் பார்த்தேன். நிகழ்ச்சிக்குப் பிறகு என்னை சந்தித்த அலாவுதீன், தனது தந்தை பற்றிய கதையை சொல்லி அதை படமாக்க கேட்டார். அந்த கதை இதுவரை நான் அறிந்த விஷயங்களை மாற்றிப்போட்டது. 1965ஆம் ஆண்டு வரையில் கூட அமெரிக்காவில் வெளிநாட்டினர் வந்து குடியேற முடியாத நிலையை சட்டம் உருவாக்கியிருந்தது. ஆன்டி ஆசியன் இமிகிரேஷன் என்பதுதான் அதன் பெயர். ஆனால் 1920ஆம் ஆண்டில் அலாவுதீனின் தந்தை அமெரிக்காவிற்கு வந்து புவர்டோ ரிகோ பகுதியைச் சேர்ந்த பெண்ணை மணந்து வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமான கதைதான். இப்படி இடம்பெயர்ந்த மனிதர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் இதுவரையில் இல்லை.  இவர் இப்படி அமெரிக்கா சென்றது விதிவிலக்கான செயல் என நினைக்கிறீர்களா? கல்கத்

டென்னிசியிலுள்ள ஆற்றைப் பாதுகாக்கும் சிறுவன்! - கேஷ் டேனியல்ஸ்

படம்
  ஆற்றைப் பாதுகாக்கும் சிறுவனின் தன்னார்வம்!  அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் அமைந்துள்ளது சட்டனூகா என்ற நகரம். இங்குதான், கேஷ் டேனியல்ஸ் என்ற சிறுவன், தன் பெற்றோரோடு வாழ்கிறான். இவன், வாரம்தோறும் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றுக்குச் சென்று, அங்கு மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்வது வழக்கம். தூய்மைப் பணிகளைச் செய்யும்போது, கிடைக்கும் வினோதமான பொருட்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறான்.  ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் தனது வயதையொத்த நண்பர்களையும் இணைத்துக் கொண்டுள்ளான். இதுவரை, 1000 கிலோவுக்கு அதிகமான கழிவுகளை அகற்றியுள்ளான் டேனியல்ஸ். ஆற்றில் குப்பையாக வருபவற்றில் அதிகம் குளிர்பான கேன்களே அதிகம். இந்த வகையில் வாரத்திற்கு ஆயிரம் கேன்களை அகற்றுகிறார்கள்.  கடந்த ஜனவரி மாதம், டேனியல்ஸ் தனது தோழி எல்லா கிரேஸூடன் சேர்ந்து கிளீன்அப் கிட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளான்.  இதில் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இவர்கள், தங்களது பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பெருமளவு அகற்ற வேண்டும் என்பதே அமைப்பின் லட்சியம்.  ஆழ்கடலில் நீச்சலடிப்பதற்கான சான்றிதழ் பெற்றுள

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் - கீதாஞ்சலி ராவ்

படம்
  பிறரது வாழ்க்கையை மாற்ற விரும்புகிறேன்!  கீதாஞ்சலி ராவ், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க மாணவி.  அமெரிக்காவின் கொலராடோவில் ஹைலேண்ட் ரான்ஞ்சில் பள்ளிப்படிப்பு படிக்கிறார் கீதாஞ்சலி. கூடவே, கொலராடோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். தான் கேள்விப்படும் செய்தியிலிருந்து பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவது கீதாஞ்சலியின் வழக்கம். ஜிகா வைரஸ் நோய் பரவியபோது,  ஜீன் எடிட்டிங் செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியுமா என்று யோசித்தார்.2014ஆம் ஆண்டு மலேசிய விமானம் காணாமல் போனபோது, கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்தார்.  அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஃபிளின்ட் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, குடிநீரில் உள்ள காரீயம் என்ற நச்சுப் பொருளைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்.  அண்மையில், கைண்ட்லி (Kindly) எனும் ஆப் ஒன்றை கோடிங் எழுதி உருவாக்கியுள்ளார். இதனை ப்ரௌசரில் இணைத்து கொள்வதன் மூலம், இளம் வயதினர் சைபர் தாக்குதல்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும்.  இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணற

நிலநடுக்க பொது எச்சரிக்கை அமைப்பின் முன்னேற்றம்!

படம்
  நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்! ஒரு நாட்டின் பரப்பில் நடைபெறும் தட்பவெப்பநிலை மாற்றங்களை அரசு அமைப்புகள் துல்லியமாக கண்காணிக்கின்றன. அமெரிக்காவின்  நாசா அமைப்பு, பல்வேறு செயற்கைக்கோள்கள் மூலம்  மாகாணங்களில் ஏற்படும் நிலப்பரப்பு ரீதியான மாற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்கிறது. இதனோடு தேசிய கடல் மற்றும் சூழல் அமைப்பும், அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பும்(USGS) இணைந்து பணியாற்றுகின்றன. தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றன.  கூடுதலாக, அமெரிக்க அரசு அமைப்புகள்,  தனியார் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. இதனால், அடிப்படை அறிவியல் கேள்விகளுக்கும், கடினமான சவால்களை பற்றிய ஆய்வுகளை செய்யமுடிகிறது.  தற்போது நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் நுட்பங்கள் (Earthquake Early Warning EEW)வேகமாக முன்னேறி வருகின்றன.  இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்க அரசும், தனியாரும் இணைந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுதான். இதன்மூலம் நிலநடுக்கத்தால் பலியாகும் ஏராளமான மக்களைக் காப்பாற்ற முடியும்.  நிலநடுக்கம் ஏற்படும் நிலநடுக்கவெளி மையத்தில் (Epicenter) நிலநடுக்க சென்சார்களை பொருத்துகின்றன

நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கி 126 ஆண்டுகள் ஆகிறது!

படம்
  நவீன ஒலிம்பிக் போட்டிகள்  தொன்மையான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது கி மு 7766 ஆம் ஆண்டு தொடங்கியது பிறகு கி பி 393 வரை அப்படியே தொடர்ந்தது.  கிரீஸின் ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடைபெற்றன.  நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896ஆம் ஆண்டு தொடங்கின. இந்த போட்டிகள் நடைபெற 1503 ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான ஐடியாவின் சூத்திரதாரி பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பாரோன் பியர் டி கூபெர்டின். இவர்தான் நவீன ஒலிம்பிக் போட்டிக்கான ஐடியாவை எடுத்து வந்தார். அந்த ஆண்டு, 1894. 1896ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 6 முதல் 15 வரை கிரீசின் ஏதேன்ஸில் நடைபெற்றது.  14 நாடுகளைச் சேர்ந்த வீர ர்கள் இதில் பங்கேற்றனர். பெரும்பாலான வீர ர்கள் கிரீஸ், ஜெர்மனி, பிரான்ஸ்,  பிரிட்டிஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் கலந்துகொண்டனர்.  43 போட்டிகளில் பெரும்பாலான வீர ர்களாக கலந்துகொண்டது ஆண்கள்தான். நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், எடை தூக்குவது, மல்யுத்தம், டென்னிஸ், துப்பாக்கிச்சூடு ஆகிய போட்டிகள் இதில் உள்ளடங்கும். வெளிநாட்டு வீரர்களை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஏறத்தாழ 60 ஆயிரம் பேர். கிரீஸைச் சேர்ந்த அரச குட

கிரிப்டோகரன்சி பற்றிய அறிமுகம்!

படம்
  கிரிப்டோகரன்சிக்கு வங்கிகள் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் அதில் தொழில் செய்பவர்கள் சம்பாதிக்கும் லாபத்தில் வரி 30 சதவீதம் என ஒன்றிய அரசு லேட்டரல் திங்கிங் முறையில் யோசித்துள்ளது. முதலில் கிரிப்டோகரன்சி என்றால் என்பதைப் பார்ப்போம்.  ரூபாயை எப்படி டாலருடன் ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்துகிறோமோ அதே முறையில்தான் கிரிப்டோகரன்சியும் செயல்படுகிறது. ரூபாய், டாலர் என்பதை நாம் கண்ணால் பார்த்து கையில் தொட முடியும், ஆனால் கிரிப்டோகரன்சியை டிஜிட்டல் முறையில்தான் பார்க்க முடியும். இதனை வியாபார பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். என்கோடிங் முறையில் பரிவர்த்தனை பாதுகாப்பாக நடைபெறும். இவை மின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு குறைவான அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  உலகளவில் 11 ஆயிரம் கிரிப்டோகரன்சிகள் உண்டு. ஆனால் அதில் பிரபலமாக புழங்கத்தக்க வகையில் இருப்பது மிகச்சிலவே. அதில் பிட்காயினும், எத்ரியமும் உண்டு.   கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நடப்பது தனியார் நிறுவனத்தின் சர்வர்களுக்குள்தான். சாதாரண வியாபாரத்தில் வங்கி இடைமுகமாக இருக்கும். இங்கு தனியார் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு

குழந்தைகளுக்கான எளிமையான கவிதைகளை இயற்றிய அமெரிக்க கவி!

படம்
  ஹென்றி வேட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ எளிமையான உணர்ச்சிகளை படைப்பாக்கியவர்! இவர் காலத்தில் பலரும் முக்கியமான இலக்கியப் படைப்புகளை உருவாக்க மெனக்கெட்டனர். ஆனால் வேட்ஸ்வொர்த் நேர்மையான மனிதர்களைக் கொண்ட சிறு உணர்ச்சிகளைப் பேசும் கவிதைகளை எழுதினார்.  இதன் காரணமாக இவரின் படைப்புகளை பலரும் குழந்தைத்தனமாக இருக்கிறது என விமர்சித்தனர். ஆனால் அன்றைய காலத்தில் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு படித்துக் காட்ட எளிதான கவிதை என்று இருந்தது ஹென்றியினுடையது மட்டும்தான்.  1807ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பிறந்தவர் ஹென்றி. அமெரிக்காவின் போர்லேண்டில் பிறந்தவர், தனது இளமைக் காலத்திலேயே இலக்கியத்திற்காக உழைப்பது என முடிவு செய்துவிட்டார்.  ஹென்றியின் பெற்றோர் அவரை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அனுப்பினார்கள். பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, போர்ச்சுக்கீஷ், ஜெர்மன் ஆகிய மொழிகளை கற்றுக்கொள்வான் என நம்பினார்கள். மைக்கேல் ஏஞ்சலோவின் கவிதையை சிறப்பாக மொழிபெயர்த்தார். பிறகு, டண்டே அலிகியரின் டிவைன் காமெடியை மொழிபெயர்ப்பு  செய்ததை இலக்கிய வட்டாரம் முக்கியமானது என குறிப்பிடுகிறது.  ஹென்றிக்கு இருமுறை திருமணம் ஆனது. முதல் மனை

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா!

படம்
  இந்தியாவில் தற்போது 106 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பு 40 ஆயிரம் சதுர கி.மீ. உலகின் முதல் தேசியப்பூங்கா எங்கு தொடங்கப்பட்டது தெரியுமா?  அமெரிக்காவில்தான் தொடங்கப்பட்டது. இதன் பெயர், யெல்லோஸ்டோன் என தலைப்பில் குறிப்பிட்டதுதான். இதன் பரப்பு, 8,104 சதுர கி.மீ.  இந்த தேசியப் பூங்கா வியோமிங் தொடங்கி மான்டனா, இடாகோ ஆகிய மாகாணங்கள் வரை நீண்டுள்ளது. இங்கு 67 வகை பாலூட்டிகள் வாழ்கின்றன. 322 இன பறவைகள். 16 வகை மீன்கள், 1,100 இயற்கை தாவரங்கள் உள்ளன. 400 வகையான வெப்பத்தை விரும்பும் நுண்ணுயிரி வகைகள் அறியப்பட்டுள்ளன.  இங்கு கால்டெரா எனும் எரிமலை உள்ளது. வெப்ப நீரூற்றுகளும் உண்டு. ஓல்ட் ஃபைத்ஃபுல் என்ற வெப்ப நீரூற்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. 60 அல்லது 90 நிமிடங்களுக்கு நீரை வேகமாக பீய்ச்சி அடித்து வருகிறது. 1870ஆம் ஆண்டு இதனை கண்டுபிடித்தனர். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் முன்னர் எரிமலை இயக்கம் இருந்திருப்பதாக ஆய்வாளர்கள் தகவல் கூறுகின்றனர். புவித்தட்டுகளில் மோதல் இங்கு எரிமலை உருவாக காரணமாக இருந்திருக்கிறது. இதை ஏன் இப்போது நாம் வாசிக்கிறோம்? மார்ச் 1, 1872ஆம்

ஆக்டோபஸை எதிர்க்கும் சூசைட் ஸ்குவாட்! - ரத்தம் தெறிக்கும் அவல நகைச்சுவைப் படம்!

படம்
சூசைட் ஸ்குவாட் 2021 இயக்குநர் ஜேம்ஸ் குன் முதல் படத்தில் வில் ஸ்மித் நடித்திருப்பார். இந்த படத்தில் இட்ரிஸ் எல்பா அந்த கேரக்டரை எடுத்துக்கொண்டு அட்டகாசப்படுத்தியிருக்கிறார். படத்தில் நினைத்து நெகிழ எந்த காட்சிகளும் கிடையாது. அனைத்து காட்சிகளுமே கொண்டாடியபடி பார்க்கவேண்டியதுதான். சூசைட் ஸ்குவாட்டிற்கு இம்முறை ஒரு நாட்டுக்கு சென்று அங்கு நடைபெறும் ஸ்டார்ஃபிஷ் என்ற திட்டத்தை அழிக்க வேண்டிய திட்டம் வழங்கப்படுகிறது. எப்போதும் போல தேசியவாத தலைவர், கைதிகளை மிரட்டி இந்த திட்டத்தில் இணையச்செய்கிறார். பிளட்ஸ்போர்ட், பீஸ்மேக்கர், டாட் மனிதன், கிங் ஷார்க், ராட் கேட்சர் 2 என்ற பெண் என வினோதமான பழக்கம், திறன்களைக் கொண்டவர்கள் இணைகிறார்கள். இவர்கள் எல்லோரும் கார்ட் மால்டிஷ் என்ற தீவுக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு முன்னர் சென்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இதற்கு ஸ்குவாட்டில் உள்ள துரோகியே முக்கியமான காரணம். அதில் பிழைக்கும் கேப்டன் பிளேக் என்பவரும் பிளட் ஸ்போர்டும் இணைந்து மால்ட்டிஷ் தீவுக்கு போய் திங்கர் என்ற ஆய்வாளரை மிரட்டி எப்படி ஸ்டார்ஃபிஷ் திட்டத்தை அழிக்கிறார்கள்

எலன் மஸ்க் - இந்த ஆண்டின் சிறந்த மனிதர் (2021)

படம்
  எலன் மஸ்க் எலன் மஸ்க், எல்லோருக்கும் பிடிக்கிற தொழிலதிபர் கிடையாது. சிலர் கோமாளி என்பார்கள், சிலர் ஜீனியஸ் என்பார்கள். எதுவாக இருந்தாலும் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உயரத்துக்கு கொண்டு செல்பவர்களில் எலன் மஸ்கை தவிர்க்கவே முடியாது.  எலன் மஸ்க், ட்விட்டரில் போடும் பல்வேறு பதிவுகளை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைவார்கள். கேலியாக, கிண்டலாக, மூர்க்கமாக என பலவிதங்களில் எழுதுவது உண்டு. கிரிப்டோகரன்சியை டெஸ்லா ஏற்கும் என்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகள் சும்மா என்று சொல்லி தனது தொழிற்சாலைகளை இயக்கப்போகிறோம் என்று அறிவித்தது, என பல்வேறு விஷயங்களில் எலன் வேற லெவல்தான். இந்தளவு நம்மூரில் யார் இருக்கிறார் என்று யோசித்தால் கொஞ்சம் அருகில் வருபவர் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மட்டுமே. இந்த கட்டுரை எலனின் நிறுவனங்களைப் பற்றி பேசும் பொறுப்பைக் கொண்டது. தொடங்கலாமா? பேபால்  ஆன்லைனில் பணம் கட்டும் சேவை 1.5 பில்லியன் டாலர்களுக்கு நிறுவனத்தை விற்றார் எலன். எலன் தொடங்கிய இரண்டாவது ஸ்டார்ட் அப் நிறுவனம் எக்ஸ்.காம். இது ஒரு ஆன்லைன் வங்கி. 1999ஆம் ஆண்டு இதனைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தொடங்கியதுதான் பேபா

2021ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூல்கள்! - டைம் வார இதழின் பரிந்துரை

படம்
 2021இல் சிறந்த கட்டுரை நூல்கள் எ லிட்டில் டெவில் இன் அமெரிக்கா நேஷனல் புக் அவார்ட் பட்டியலில் இடம்பெற்ற நூல் இது. ஹனிப் அப்துராகிப் கருப்பர்கள் பற்றியும் கலாசார வேறுபாடுகளையும் எழுதியுள்ளார். கவிதையும் கட்டுரையும் சேர்ந்த வடிவமாக கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. நூலில் அமெரிக்காவின் வரலாறும் பேசப்பட்டது.  கிரையிங் என் ஹெச் மார்ட் மிச்செல் ஸானர், ஜப்பானிஸ் பிரேக்ஃபாஸ்ட் எனும் இசைக்குழுவை நடத்தி வந்தவர். தனது 25 வயதில் அவரது அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதற்குப்பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நூலாக எழுதியிருக்கிறார். கொரிய கலாசாரத்துடனான தொடர்பு, அடையாளம் ஆகியவற்றைப் பற்றி தேடி அவர் அடையும் விஷயங்களை நூலாக மாற்றியிருக்கிறார்.  இன்விசிபிள் சைல்ட் ஆண்ட்ரியா எலியட் என்ற நிருபர், தசானி என்ற சிறுமியைப் பார்க்கிறார். நியூயார்க் நகர காப்பகத்தில் அந்த சிறுமி வாழ்கிறார். அமெரிக்காவில் நிலவும் பாகுபாடு, வீடு இல்லாத நிலை, இனவெறி ஆகியவற்றை தசானி என்ற சிறுமியின் வாழ்க்கை வழியே ஆண்ட்ரியா பிரமாதமாக எழுதியுள்ளார்.  ஆப்டர்ஷாக்ஸ் நாடியா ஆவுசு எழுதிய சுயசரிதை இது. தான்சானியா

ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்ப சாதனையாளர் மெரிசா மேயர்!

படம்
  மெரிசா மேயர் மெரிசா மேயர்  சூழல் பொறியாளரான மைக்கேல் மேயர், கலை ஆசிரியரான மார்க்கரேட் மேயர் ஆகியோருக்கும் மகளாக 1975ஆம் ஆண்டு மே 30 இல் பிறந்தவர் மெரிசா.  அமெரிக்காவைச் சேர்ந்தவரான மேரியா மென்பொருள் பொறியாளர், முதலீட்டாளர், பெண் தொழில்முனைவோர் என பல முகங்களைக் கொண்டவர். கூகுளின் தொடக்க காலகட்டத்தில் அதில் பணிபுரிந்தவர்.  ஸ்டான்போர்ட் பல்கலையில் சிம்பாலிக் சிஸ்டம், கணினி அறிவியல் பாடங்களைக் கற்றார். செயற்கை நுண்ணறிவு பற்றியும் படித்தவர் 1997இல் எம்எஸ்சி பட்டம் பெற்றார். 1999இல் கூகுளில் முதல் பெண் பொறியாளராக உள்ளே நுழைந்தார் மெரிசா. இவரது பணியாளர் எண் 20.  கூகுளின் தொடக்க பக்கத்தை இன்று அழகாக இருக்கிறது என பாராட்டினால் அதற்கான பெருமை மெரிசாவிற்குத்தான் சென்று சேரவேண்டும். இவர் வடிவமைத்த முகப்பு பக்கத்திற்கு பிறகுதான் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. ஜிமெயில், குரோம், மேப் எர்த் ஆகியவற்றிலும் நிறைய பங்களிப்புகளை செய்தார் மெரிசா.  பிறகு யாஹூ நிறுவனத்திற்கு இயக்குநராக சென்று விட்டார் மெரிசா. 2012இல் அந்த நிறுவனத்திற்கு சென்றவர், 2017இல் தனது பதவியை விட்டு நீங்கினார். யாஹூவின் வ

இந்தியர்கள் சற்று திறந்த மனதுடன் இருக்கவேண்டும்! - வீர் தாஸ், நகைச்சுவை கலைஞர்

படம்
  வீர்சிங் இந்தி நடிகர், தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னரே உங்கள் பெயர் எம்மி விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டது. இதற்கான அர்த்தம் என்ன? என்னுடைய தனிக்குரல் நிகழ்ச்சிகளுக்கான அங்கீகாரம் என்று கூறிவிடமுடியாது. வீர்தாஸ் ஃபார் இந்தியா என்று கடிதம் அனுப்பியிருப்பது இந்திய ரசிகர்களின் அன்பையே எனக்கு காட்டுகிறது. வெளிநாடு சார்ந்த தன்மை இல்லாமல் இந்திய தன்மையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் இருப்பது சிறப்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.  மேனியாக் மேன் என்ற நிகழ்ச்சியை எழுதி உருவாக்கியிருக்கிறீர்கள். அதுபற்றி சொல்லுங்களேன்.  ஒன்றும் இல்லாத விஷயத்திலிருந்து வாழ்க்கையை தொடங்குவதுதான் இதன் கான்செப்ட். பலகையில் எழுதியிருந்ததை அழித்துவிட்டு நமக்கு என்ன தேவையோ அதனை எழுதுவதுதான் விஷயம். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நாம் வீட்டினுள்ளே உட்கார்ந்து விட்டோம். இனிமேல்தான் நமது வாழ்க்கையை,உறவை, அரசை என அனைத்துமே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி பேசும்.  நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனையாவது பற்றி உங்கள் கருத்து என்ன? எனக்கு முதலில் பயமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது ல

காந்தியின் பொருளாதார அறிவு உலகைக் காப்பாற்றுமா? - நூல் அறிமுகம்

படம்
  ஸ்கேரி ஸ்மார்ட் மோ காவாதத் பான் மெக்மில்லன் 699 மனிதர்கள் எழுதும் அல்காரிதப்படிதான் எந்திரங்கள் இயங்குகின்றன. இதன் செயல்பாடு பற்றி இன்னும் நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதனைப் பற்றி ஆசிரியர் விளக்கி எழுதியுள்ளார்.  ஷட் டவுன் ஆடம் டூஸ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 899 பொதுமுடக்கம் வந்தபிறகு நாடுகளின் பொருளாதாரம் 1929ஆம் ஆண்டுக்கு முன்னர் சென்றுவிட்டது. பணம், தங்கம் என பலவற்றையும் செலவு செய்யும் நிலைக்கு நாடுகள் வந்துவிட்டன. பெருந்தொற்று காரணமாக மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டு நாடுகளின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. இப்படி உலகம் முழுக்க நடந்த விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார் ஆசிரியர்.  பெரில் பாப் வுட்வர்ட் ராபர்ட் காஸ்டா சைமன் ஸ்ஹஸ்டர் அமெரிக்காவில் டிரம்ப் தேர்தலில் தோற்றபிறகு பைடன் ஆட்சிக்கு வருகிறார். அவருடைய காலம் வரலாற்றில் மிக மோசமானதாக அமைந்துவிட்டது. இருநூறு பேர்களுக்கு மேல் நேர்காணல் கண்டு அரசியல் சிக்கல்களை பேசியுள்ளனர். எகனாமிஸ்ட் காந்தி ஜெய்திர்த் ராவ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  499 இன்றும் பொருளாதார நூல்களில் காந்தியப் பொருளாதாரத்தை பற்றி மாணவர்கள் படிக்கிறார்கள். காந்தி வறுமைய

அமெரிக்க மக்களை பயமுறுத்தும் குப்பைக்கடிதங்கள்! - டேட்டா கார்னர்

படம்
  குப்பைக் கடிதங்கள்  மின்னஞ்சல் சேவைகள் உருவாகத் தொடங்கியதிலிருந்தே குப்பைக் கடிதங்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் வரத் தொடங்கிவிட்டது. பல்வேறு இணையத்தளங்களில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து செய்தி மடல்களும் வருகின்றன. கூடுதலாக திடீரென வங்கி, தங்கநகைக்கடன், இ வணிக தளங்களிலிருந்து மின்னஞ்சல்கள் வரும். இவை எல்லாம் வணிகம் இணையம் சார்ந்து மாறிவிட்டதையே உணர்த்துகிறது. மேற்கு நாடுகளில்  அஞ்சலகங்கள் மூலமாகவே விளம்பரக் கடிதங்கள்  நிறைய அனுப்பப்படுகின்றன. இதில் விளம்பர கடிதங்களை யார் கொண்டு வந்து கொடுக்கிறாரோ அவருக்கு காசு கிடைக்கும்.  நாளிதழில் நேரடியாக விளம்பரம் கொடுத்தால் நாளிதழ் நிறுவனத்திற்கு விளம்பரக் காசு கிடைக்கும். ஆனால் அதை விட எளிமையாக குறைந்த காசில் பேப்பர் ஏஜெண்டிற்கு காசு கொடுத்து விடலாம்.  அவர் தான் பேப்பர் போடும் வீடுகளுக்கு விளம்பரங்களை நாளிதழின் இடையில் இணைத்துவிடுவார். இப்படிக் கொண்டு செல்லும்படி செய்தால் யாருக்கு லாபம்?  பேப்பர் ஏஜெண்டிற்கு காசு கிடைக்கும். விளம்பர நோட்டீசை கொடுக்கும் நிறுவனத்திற்கு காசு மிச்சம். மேற்குநாடுகளில் கூட அதேபோல்தான் நடைபெறுகிறது.