இடுகைகள்

இயற்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து!

படம்
  கோவாவின் மாநில பட்டாம்பூச்சி! உடலில் கருப்பு வரிகளைக் கொண்ட பேப்பர்கைட் (paperkite) எனும் பட்டாம்பூச்சியை கோவா  அரசு, மாநில பட்டாம்பூச்சியாக தேர்ந்தெடுத்துள்ளது. இதனை மலபார் ட்ரீ நிம்ப் (malabar tree nymph ) என குறிப்பிடுகிறார்கள் . இதன் செல்லப்பெயர்,  பேப்பர்கைட். கோவாவில் ஐந்தாவது ஆண்டாக பறவைத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை கோவாவின் வனத்துறை நடத்தியது. அதில் பங்கேற்ற மாநில முதல்வர்  பிரமோத் சாவந்த், பேப்பர்கைட் பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்தார்.  பேப்பர்கைட் பட்டாம்பூச்சி, 120 முதல் 154 மி.மி. நீளம் கொண்ட இறகைக் கொண்டது. அழியும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரி என உலக இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN),தனது பட்டியலில் இதனை அறிவித்துள்ளது. பேப்பர்கைட் பட்டாம்பூச்சி நிம்பாலிடே (Nymphalidae)எனும் குடும்பத்தைச் சேர்ந்தது.   அழியும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக கோவா அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் இப்பட்டாம்பூச்சியின் வாழிடம் பாதுகாக்கப்படும் முயற்சிகள் தொடங்கும் வாய்ப்புள்ளது. வனத்துறை உருவாக்கிய குழுவில் சூழல் வல்லுநர்கள் பலர் இடம்பெற்

அழிந்துபோன வணிக கண்டம்! - பால்கனாடோலியா

படம்
  ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நடுவில் உள்ள கண்டம்! அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.  மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது.  3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன.  ”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியமாக இல்லை” என்றார் ஆ

இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்!

படம்
  இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்! தி சீக்ரெட் லைஃப் ஆஃப் தி அட்டர் நிகோலஸ் மில்டன் பென் அண்ட் ஸ்வோர்ட் புக்ஸ் அட்டர் என்ற விஷப்பாம்பு உலகம் முழுக்கவே அழிந்துவரும் நிலையில் உள்ளது. அதனைப் பற்றி நாம் தவறாக அறிந்துள்ள விஷயங்கள் எவை என நூல் ஆசிரியர் விளக்கியுள்ளார். இங்கிலாந்தில் அதிகளவு இப்பாம்பு இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நூல் ஏற்படுத்தும் ஊக்கத்தால் அட்டர் காப்பாற்றப்பட்டால் நல்லது.  ஃபிளெட்ஜிலி ங் ஹன்னா போர்ன் டெய்லர் ஆரம் பிரஸ்  கானா நாட்டின் கிராமப்புற  பகுதியில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களை ஹன்னா நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். அவர் வளர்த்த உழவாரன் குருவி, மன்னிக்கின் என்ற சிறு பறவை ஆகியவற்றையும் வளர்த்து வந்ததைப் பற்றி படிக்க சுவாரசியமாக உள்ளது.  தி பேரட் இன் தி மிரர் ஆண்டன் மார்ட்டின்ஹோ டிரஸ்வெல் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூலில் ஆசிரியர், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒத்த குணங்கள், பழக்கங்கள் பற்றி விவரிக்கிறார்.  தி கார்ன்கிரேக் ஃபிராங்க்ரென்னி வொயிட்லெஸ் பப்ளிசிங் வடக்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்பட்ட பறவைதான் கார்ன்கிரேக். ஆனால் இ

பல்லுயிர்த்தன்மையைக் காப்பாற்றுவது முக்கியம்! - கஸாலா ஷகாபுதீன்

படம்
  கஸாலா ஷகாபுதீன் இயற்கை சூழலியலாளர் கஸாலா ஷகாபுதீன் நிலத்தின் பயன்பாடு மாறும்போது அங்கு பல்லுயிர்த்தன்மை மாறுபாடு அடைகிறது. காடுகளை நாம் எப்படி மேலாண்மை செய்யவேண்டும் என்பதைப் பற்றி பேசிவருகிறார் கஸாலா. இவர் சூழலியலில் முனைவர் பட்டம் வென்ற இயற்கை செயல்பாட்டாளர்.  வெனிசுலாவில் உள்ள லாகோகுரியில் பழந்தின்னும் பட்டாம்பூச்சிகளைப் பற்றி ஆய்வுகளை செய்தவர் கஸாலா. இந்தியாவில் அசோகா பல்கலைக்கழகத்தின் சூழலியல் துறையில், வருகைதரு பேராசிரியராக உள்ளார். இமாலயத்தின் குமாயோன் எனுமிடத்தில் பறவைகளைப் பற்றிய ஆய்வை தனது குழுவினருடன் செய்துவருகிறார்.  ஆய்வு செய்யும் பகுதியில், ஓக் மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. இப்போது வணிகரீதியாக அங்கு பைன் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். இதனால் ஓக் மரங்களை நம்பியுள்ள மரங்கொத்தி, பூச்சி இனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இம்மரத்தை வாழிடமாக கொண்டிருந்த பறவைகளின் வாழ்க்கைமுறையும் மாறிவருகிறது. “இமாலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காடுகளில் உள்ள இயற்கை வாழ்க்கைமுறையை பலரும் அறிந்ததில்லை. இப்போது இச்சூழலுக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன” என்றார்

இயற்கைச்சூழலில் மீன்பிடிபூனையின் பங்கு! - திசா ஆத்யா

படம்
  இயற்கை செயல்பாட்டாளர் திசா ஆத்யா மீன்பிடி பூனையை காப்பாற்ற முயலும் தன்னார்வலர்!  கோல்கட்டாவைப் பூர்வீகமாக கொண்டவர், தியாசா ஆத்யா.  கல்லூரியில் உயிரியலாளராக  பயிற்சி பெற்றார். தனது 22 வயதில் இயற்கைப் பாதுகாப்பு பணிகளைச் செய்யத் தொடங்கினார். முதல்பணியாக, சுந்தரவனக்காடுகளில் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாக்கும் பணியை செய்தார்.  மீன்பிடி பூனை காட்டுயிர் பாதுகாப்பு சங்கத்தின் இயக்குநரான வித்யா ஆத்ரேயாவை, தனது வழிகாட்டியாக தியாசாக கருதுகிறார். அமெரிக்க சிறுபூனை பாதுகாப்பாளரான ஜிம் சாண்டர்சன் (Jim sanderson), மூலம் பூனை இனங்களைப் பற்றிய ஆராய்ச்சியை தியாசா தொடங்கினார். மீன்பிடி பூனைக்கு மீன்தான் முக்கியமான உணவு. இதன் உரோமங்கள், நீர் உடலை நனைக்காதவாறு பாதுகாக்கிறது. இப்பூனையின் கால்கள், வலை போன்ற அமைப்பிலானவை. கால்களிலுள்ள நகங்கள், மீன்களைப் பற்றிப் பிடிக்க உதவுகிறது.  மேற்குவங்கத்தில் சதுப்புநிலங்களைக் காக்க க்ரௌட் ஃபண்டிங் முறையில் நிதி சேகரிக்கப்படுவதில் தியாசா முக்கியமான பங்காற்றியுள்ளார். பப்ளிக், ஹீல் ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 2010ஆம் ஆண்டு தி ஃபிஷ்ஷிங் கேட்

உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டால் குஞ்சையே கொல்லும் நாமக்கோழி!

படம்
  நாமக்கோழி தனது குஞ்சுடன் நாமக்கோழி (Euracian coot) அறிவியல் பெயர்  ஃபுலிக்கா அட்ரா (Fulica atra)  இனம்  F. atra குடும்பம் ராலிடே(Rallidae) சிறப்பு அம்சங்கள்  கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் உடல் இருக்கும். கரையில் உள்ள மரங்களில் கூடுகட்டி வாழும். நீரில் நீந்திக்கொண்டே புழு, பூச்சிகளை உண்ணும். நெற்றி தொடங்கி மூக்குவரையில் உள்ள வெண்மை நிறம்தான் நாமக்கோழி என பெயர் வரக் காரணம். உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் தனது குஞ்சுகளை தானே கொன்று விடும் இயல்பு கொண்டது. கால் அமைப்பு, வலை போன்ற அமைப்பில் வேறுபட்டு அமைந்துள்ளது.  எங்கு பார்க்கலாம் புல்வெளி, சதுப்புநிலங்கள், கடல்பகுதிகள் பரவலாக வாழும் நாடுகள் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, சீனா, பின்லாந்து ஐயுசிஎன் பட்டியல் அழியும் நிலையில் இல்லாதவை (LC 3.1) ஆயுள்  7 ஆண்டுகள் மொத்த எண்ணிக்கை 53,00,000-65,00,000 எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  முட்டைகளின் எண்ணிக்கை  10 எழுப்பும் ஒலி குக்... குக் .. கிக் .. கிக் .. கீ  https://www.dinamalar.com/news_detail.asp?id=365376 https://www.iucnredlist.org/species/22692913/154269531

கண்ணாடிக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மர இழை நுட்பம்!

படம்
  கண்ணாடிக்கு மாற்றாக பசுமைத் தீர்வு! அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கண்ணாடியைப் போன்ற  ஒளி ஊடுருவும்  தன்மையில்  இருக்கும் மர இழைகளை  உருவாக்கியுள்ளனர்.  தற்போது, நவீனமாக கட்டும் கட்டடங்களுக்கு மெருகூட்டுவதாக கண்ணாடியே பயன்படுகிறது. இதனை ஜன்னல்களுக்கு மட்டுமல்லாமல் கட்டடம் முழுக்கவே பயன்படுத்தி புதுமையாக கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். அழகாக இருந்தாலும் ஆற்றல் அதிகமாக செலவழித்து உருவாக்கப்படுவதும், எளிதாக மறுசுழற்சி செய்யமுடியாத தன்மையும் இதன் முக்கியமான பாதக அம்சங்கள்.  அமெரிக்காவிலுள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை மரத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர். கண்ணாடியைப் போன்றே  ஒளி ஊடுருவும் மர இழைகளை  சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனை மூலம் இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு வராதபடி மர இழைகளை பக்குவப்படுத்தி கண்ணாடி போலாக்கி வீடுகளில் பொருத்த முடியும். கண்ணாடியில் ஒளி ஊடுருவும். ஆனால் மரத்தில் ஒளி ஊடுருவமுடியாதே அதனை எப்படி கண்ணாடியாக பயன்படுத்துவது என பலரும் நினைப்பார்கள். இதற்கு முக்கியமான காரணம், மரத்திலுள்ள லிக்னின், செல்லுலோஸ்

பாண்டிச்சேரியின் பசுமை பரப்பை அதிகரிக்கும் கல்லூரி முதல்வர்!

படம்
  வங்கத்தைச் சேர்ந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை அறிந்திருப்பீர்கள். அவரது தந்தைதான் டெபேந்திர நாத் தாகூர். இவர்தான் மரங்களடர்ந்த இடத்தைப் பார்த்து அங்கு கல்வி நிலையம் அமைக்க நினைத்தார். அதன் பெயர்தான், சாந்தி நிகேதன். பாண்டிச்சேரியில் இதேபோல முயற்சி நடைபெற்றுள்ளது. இதனை தாகூர் கல்லூரி முதல்வர் சக்திகாந்த தாஸ் செய்துள்ளார். கல்லூரி வளாகத்தில் உள்ள பயன்படாத நிலம் 15 ஏக்கரில் ஏராளமான மரங்களை நட்டு அதனை வளப்படுத்தியுள்ளார். இப்போது கல்லூரி வகுப்புகளை கூட அங்கு நடத்தி வருகிறார்கள்.  தொடக்கத்தில் அங்கு மரக்கன்றுகளை நட தனது சொந்த பணத்தை செலவு செய்திருக்கிறார் சக்தி. இவர், ஒடிஷா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். இன்று இவரின் முயற்சியை பலரும் செயல்படுத்த, 4 ஆயிரம் மரங்கள் வளர்ந்து சிறு காடாகவே நிற்கிறது.  தொடக்கத்தில் காடுகளை வளர்க்கிறோம் என்று சக்தி இருந்துவிட, உள்ளே புகுந்த மாடுகள் தாவரங்களை மேய்ந்துவிட்டு சென்றன. எனவே இப்போது இதனை பாதுகாக்கவென தனி பாதுகாவலரை ஏற்பாடு செய்துவிட்டனர். புதுச்சேரியில் தற்போது காடுகளின் அளவு 10 சதவீதம்தான். அதனை 20 சதவீதம் ஆக்கவேண்டுமென சக்தி விரும்புகிறார். அதனை தன்

காந்திய அணுகுமுறையில் சமூகத்தை மாற்றியமைத்த மூன்று அமைப்புகள்! - தன்னார்வ செயல்பாடும், காந்திய அணுகுமுறைகளும்! டி.கே. ஓசா

படம்
தன்னார்வச் செயல்பாடும் காந்திய அணுகுமுறைகளும்! டி.கே. ஓசா நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா புது டில்லி ரூ.22 பக்கம் 89 இன்று காந்திய அணுகுமுறை என்பது குறைந்துவிட்டது. காந்தி என்றாலே கோழைத்தனமானவர், தந்திரமானவர் என்று எண்ணும்படி செய்திகளை மதவாத கூட்டம் வெளியிடுகிறது. எளிமையாகவும், உண்மையாகவும் இருப்பது தவறு என எண்ணும் சமூக கலாசாரம் வளர்ந்த பிறகு சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என பலரும் நினைக்கலாம்.  அண்மையில் நடந்த விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் காந்திய வழிமுறையைப் பின்பற்றி நடந்து வெற்றிபெற்றது. ஆங்கில ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் என பாகுபாடின்றி விவசாயிகளை வசைபாடினர். இதற்கு அவர்கள் தங்கள் மனசாட்சியை விற்று பெற்ற பணம்தான் காரணம். யார் கொடுத்தார்கள் என்று கேட்காதீர்கள். ஊபா சட்டம் உடனே பாயும். தேச வளர்ச்சிக்காக என்று சொல்லி சுயநலத்திற்காக இந்தியாவை விற்க  பாடுபடுபவர்கள்தான் இதற்கு காரணம்.  இந்த காலகட்டத்தில்தான் டி.கே. ஓசா எழுதிய   இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. தொண்ணூறுகளில் வெளியான நூல் இது. அப்போதே மறுசுழற்சிக்கான காகிதத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். நூலில் பேசப்படும் விஷயமும் அந்தள

அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை!

  அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை ! இணையம் வழியாக பல்வேறு டிஜிட்டல் பொருட்களை வாங்குகிறோம் . ஸ்மார்ட்போன் , கணினி போன்றவற்றை வாங்கிய உடனே இணைய இணைப்பில் இணைத்து மென்பொருட்களை மேம்படுத்துவது முக்கியம் . அதற்குப் பிறகுதான் அதனை சீராக பயன்படுத்த முடியும் . ஒருமுறை மேம்படுத்திவிட்டால் , டிஜிட்டல் சாதனங்களை பிரச்னையின்றி நீண்டகாலம் பயன்படுத்த முடியும் என நினைத்திருப்போம் . ஆனால் அதுவும் கூட குறைந்த காலத்திற்குத்தான் . கூகுள் , ஆப்பிள் ஆகிய டெக் நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களில் , சில ஆண்டுகளிலேயே புது இயக்கமுறைமை , பாதுகாப்பு வசதி ஆகிய மேம்பாட்டு சலுகைகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன . இதனால் ஒருவர் பயன்படுத்தி வரும் சாதனங்களை வேறுவழியின்றி கைவிட்டு புதிய சாதனங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் உருவாகிறது . உதாரணமாக 2017 இல் வெளியிடப்பட்ட கூகுளின் பிக்ஸல் 2 போனுக்கான பாதுகாப்பு வசதிகள் நடப்பு ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டுவிடும் என கூறப்படுகிறது . அக்டோபர் 2020 ஆம் ஆண்டு , விற்கப்பட்ட கூகுள் பிக்சல் 5 போனை , 2023 ல் பயன்படுத்தமுடியாது . இதற்கு நிறுவனங்கள் தரப்பில்

எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை பாதுகாக்க நினைக்கிறேன் - ரிதிமா பாண்டே , இயற்கை செயல்பாட்டாளர்

படம்
  ரிதிமா பாண்டே ரிதிமா பாண்டே இயற்கை செயல்பாட்டாளர் இவரை இந்தியாவின் கிரேட்டா துன்பெர்க் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இவருக்கென ரிதிமா பாண்டே என்ற பெயர் இருப்பதால், அதனையே சொல்லி அழைப்போம். 2007ஆம் ஆண்டு பிறந்தவர் ரிதிமா பாண்டே. உத்தரகாண்டில் பிறந்தவரின் தந்தையும் கூட சூழல் சார்ந்த செயல்பாட்டாளர்தான். வெள்ளம், நிலச்சரிவு சார்ந்த பிரச்னைகள் பத்தாண்டுகளாக நடப்பதை கவனித்து வந்து பிறகே சூழல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.  2016ஆம் ஆண்டு தனது ஒன்பது வயதில் அரசுக்கு எதிராக மாசுபாடு தொடர்பாக புகார் ஒன்றை எழுதி அனுப்பினார். அதற்கு முன்னரே தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு இதுபோல புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மனுவை தீர்ப்பாணையம் தள்ளுபடி செய்துவிட்டது. பிறகு 2016ஆம் ஆண்டு ரிதிமா, தன்னோடு பதினாறு குழந்தைகளை சேர்த்துக்கொண்டு ஐ.நாவில் மாசுபாட்டு பற்றி புகார் மனுவை வழங்கினார். இதில் துருக்கி, அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் மாசுபாடு பற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கையை குறிப்பிட்டிருந்தார்.  2020ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடிய

சர்ச்சைகளின் நாயகி அருந்ததி ராய்!

படம்
  எழுத்தாளர் அருந்ததி ராய் சூசன்னா அருந்ததி ராய் நவம்பர் 24ஆம் தேதி, 1961ஆம் ஆண்டு பிறந்தவர். பெண்ணியவாதியான மேரி ராய், கொல்கத்தாவின் தேயிலை தோட்ட மேலாளர் ரஜிப் ராய் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சகோதரர் ஒருவர் உண்டு. அவரது பெயர் லலித்குமார் கிறிஸ்டோபர் ராய்.  ஷில்லாங்கில் பிறந்தவர், கேரளா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் வளர்ந்தார். இவரது இரண்டாவது வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். கட்டுமானம் வடிவமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார் அருந்ததி ராய். 1988ஆம் ஆண்டு அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி தேசிய விருதை வென்றார். 1992ஆம் ஆண்டு எலக்ட்ரிக் மூன் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். இதே ஆண்டில்தான் சிறிய விஷயங்களின் கடவுள் என்ற நூலை எழுத தொடங்கினார். 1996ஆம் ஆண்டில் நூல் பணியை முடித்தார். இந்த நாவலுக்கான பரிசாக மேன்புக்கரை 1997இல் வென்றார். இந்த நாவல்தான் உலகம் முழுக்க இவரை அறிய வைத்தது.  சிறிய விஷயங்களின் கடவுள் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல் ஆகும். ரகேல், எஸ்தா என இரட்டையர்களின் வாழ்க்கையை அரசியல், ஜாதி பின்புலத்தில் வைத்து பேசுகிற கதை இத

ஆக்சிஜன் தொழிற்சாலை- அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை வளர்க்கும் மருத்துவர்

படம்
  விருதுநகரில் சுந்தரபாண்டியம் கிராமம் உள்ளது. இங்கு மருத்துவர் சுப்புராஜ், ஐம்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். இதன் மூலம் கார்பனை எளிதாக ஈர்க்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் சுப்புராஜ். இவர் புராஜெக்ட் ஆக்சிஜன் ஃபேக்டரி என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். பொதுமுடக்க காலத்தில் இந்த பணியைத் தொடங்கியிருக்கிறார்.இதனால் அவருக்கு நிதானமாக யோசிக்கவும் நேரம் கிடைத்திருக்கிறது. இந்த ஐடியாவை தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் நிதியுதவி செய்ய தயாராகிவிட்டனர்.  சிறுவயதிலிருந்து விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் சுப்புராஜ். இந்தியாவின் சுதந்திர தினம் 1997ஆம் ஆண்டு கொண்டாடியபோது, நாங்கள் பள்ளியில் நூறு தேக்கு மரங்களை ஊன்றி வைக்க நினைத்தோம். அப்படி தொடங்கிய முயற்சிதான்  இப்போது ஆக்சிஜன் ஃபேக்டரி செயல்பாடாக மாறியுள்ளது.  நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் கிடைந்த அரை ஏக்கர் நிலத்தை மரக்கன்றுகளை நட்டு வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறார் சுப்பு. முழுக்க கருவேலம் மரங்கள் சூழ்ந்து கிடந்த நி

புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாமா? - பதில் சொல்லும் ஆவணப்படம்

படம்
  பொதுவாக வன விலங்குகளை யாரும் சங்கிலி போட்டு கட்டி செல்லப் பிராணிகளாக்க முடியாது. ஓநாய் குலச்சின்னம் நாவலில் ஒரு மாணவர் அப்படி செய்து இறுதியில் தோற்றுப்போவார்.  கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் விரியும் படம் எட்டு நிமிடங்கள் ஓடும். அதன் மையக்கதையே, புலிகள் அழிவும். அதனை சிலர் குட்டியாக இருக்கும்போதே எடுத்து செல்லப்பிராணியாக வளர்ப்பதும் தவறு என்பதைப் பற்றியதுதான்.  அமெரிக்காவில் மட்டுமல்லாது  உலகம் முழுக்கவுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது தோராயமாக 3900 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளன. மீதியுள்ள புலிகள் எங்கே போயின என்பதை நாம் நமது மனத்திடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். பெரும்பாலான புலிகள் வீரிய மாத்திரைகள், சூப் ஆகியவற்றுக்காக பலியாகிவிட்டன.  மீதி நினைவில் மட்டுமே காடுள்ள மிருகமான புலிக்குட்டிகளும் பல பிரபலங்களின் வீட்டில் சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் காட்டப்படும் செல்லபிராணி காட்சிகள் மனதை ரணப்படுத்தக்கூடியது.  ஆவணப்படத்தில் ஏராளமான இயற்கை அமைப்பு சார்ந்த நிபுணர்கள் புலிக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது ஏன் தவறு என்று பேசுகிறார்

பசுமை விருதுகளைப் பெற்ற இயற்கை செயல்பாட்டாளர்கள்!

படம்
  சுந்தர்லால் பகுகுணா சுந்தர்லால் பகுகுணா சிப்கோ இயக்கத்தை தொடங்கிய தலைவர். இமாலயத்திலுள்ள மரங்களை காக்கும் இயக்கம், காந்திய அணுகுமுறை போராட்டத்திற்காக புகழ்பெற்றது. 1980-2004 வரையிலான ஆன்டி டெரி டாம் எனும் இயக்கத்தை நடத்தி தலைமை தாங்கினார். சிப்போ இயக்கம் இவரது மனைவியினுடையது.  உத்தரகாண்டில் மரங்களை ஒப்பந்ததாரர் வெட்ட வந்தனர்.அப்போது போராட்டக்காரர்கள் மரத்தை வெட்டுவதை தடுக்க மரத்தைக் கட்டிப்பிடித்து தடுத்தனர். 1981-83 வரையிலான காலத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மரங்களை வெட்டக்கூடாது என பிரசாரம் செய்தார்.  இந்திராகாந்தியை சந்தித்து மரங்களை வெட்டுவதற்கான தடையைப் பெற்றார். இதனால் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒருவர் மரங்களை வெட்ட முடியும்.    சாலுமாரதா திம்மக்கா சாலுமாரதா திம்மக்கா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 385 ஆலமரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். ஹூலிகல் குதூர் நெடுஞ்சாலையோரம் இப்பணியை செய்துள்ளார்.  குவாரியில் வேலை செய்த திம்மக்காவுக்கு முறையான கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்சொன்ன மரங்கள் இல்லாமல் எட்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வ

டேவிட் அட்டன்பரோ ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எனக்கு ஊக்கமூட்டின! - புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ்

படம்
புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக் கலைஞர் புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக்கலை மீது எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை அருகில் ராணுவப்பள்ளியில் படித்தபோது ஆர்வம் பிறந்தது. நாங்கள் அங்கு தினமும் நீர் குடிக்க வரும் யானைகளைப் பார்ப்போம். அந்த நீர்நிலையில் ஏராளமான முதலைகள் உண்டு. பக்கத்திலேயே முதலைப் பண்ணையும் இருந்தது. சிறுத்தையை அடிக்கடி பார்ப்போம்.  ஒருநாள் மாலைநேரம் நாங்கள் விளையாடிவிட்டு நீர் குடிக்க வரும் இடத்தில் இரண்டு மலைப்பாம்புகளை பார்த்தோம். குடிநீர் குழாய் காவல்நிலையத்தின் அருகில் இருந்தது. மலைப்பாம்புகள், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகிய உயிரினங்களை நாங்கள் அடிக்கடி பார்ப்பது பழக்கமாகிவிட்டிருந்தது. கேரளாவில் உள்ள சின்னார், மூணார் ஆகிய இடங்களுக்கு நாங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வோம். அங்கு நாங்கள் புலி, சிறுத்தைகளை பார்ப்போம். கூடுதலாக ஏராளமான சந்தன மரங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.  பிஹெச்டி படிக்கும்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மயில்களைப
படம்
  திரைப்படக் கலைஞர் அஷ்விகா கபூர் அஷ்விதா கபூர் க்ரீன் ஆஸ்கர் வென்ற கானுயிர் திரைப்பட கலைஞர் நான் கானுயிர் திரைப்படக்கலைஞர் மற்றும் அறிவியல் செய்திகளை பகிர்பவர், இயற்கை செயல்பாட்டாளர்.  சிறுவயதிலேயே நான் விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவளாக இருந்தேன். எங்கள் குடும்பம் கொல்கத்தாவில் இருந்தபோது தங்கியிருந்த 12 வது மாடி முழுக்க ஆதரவற்று கிடந்த விலங்குகளை கொண்டு வந்து வைத்திருந்தோம்.  கோழிகள், புறா,  முயல், முயல் ஆகியவற்றை நாங்கள் வளர்த்து வந்தோம். ஏறத்தாழ பண்ணை போலவே இருந்தது. பயணம் செய்யும் சூழலிலும் இந்த உறவு தொடர்ந்தது. இப்போது தங்கியுள்ள வீடுகளில் கூட அருகிலுள்ள இரண்டு பூனைக்குட்டிகளோடு நட்பு உள்ளது. நான் விசில் அடித்தால் அவை இரண்டும் பால்கனிக்கு அருகில் வரும். ஒடாகோ பல்கலைக்கழகத்தில் இயற்கை வரலாறு பற்றி படிக்க விரும்பினேன். படிப்பை முடித்தபிறகு, 2014ஆம் ஆண்டு தொடங்கி இயற்கை சார்ந்த திரைப்படங்களை எடுக்கத் தொடங்கினேன். இயற்கை செயல்பாட்டாளர் அஷ்விகா கபூர் என்னுடைய படங்களில் புகழ்பெற்றது நியூசிலாந்தில் எடுத்த காகாபோ கிளி பற்றியது. உலகத்தில் உள்ள மிக முக்கியப் பறவை இது. நான் படம் எடுக்கும்போத

இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டால் மக்களுக்கு உணவு வழங்கலாம்! பமீலா

படம்
  பமீலா டி மெக் எல்வீ பேராசிரியர், ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகம் மனிதவள சூழலியல் பற்றி பாடம் எடுத்து வருகிறீர்கள். அதன் அடிப்படை என்ன? பல்வேறு வித இயற்கை சூழல்கள் நமது வாழ்க்கையை பாதிக்கின்றன. மாற்றுகின்றன. நான் இந்தக் கோணத்தில் மனிதவள சூழலியலைப் பார்க்கிறேன். மனிதர்கள் இயற்கை சூழலுக்கு எதிராக அல்லது ஆதரவாக இருக்கவேண்டும். இந்த இரு நிலைகள்தான் நமக்கு எதிரே உள்ளன. இயற்கை சூழல்களின் மாற்றம் எப்படி மனிதர்களை ஆபத்துக்குள்ளாக்கிறது என்பது பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.  பருவச்சூழல் மாற்றம் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுக்கிறதா? நிச்சயமாக. ஐபிசிசி கூட்டத்தில் பங்கெடுத்து இதுபற்றி நான் பேசியுள்ளேன். எந்த பயிர் எந்த இடத்தில் வளரவேண்டும் என்பதை தீர்மானிப்பது இயற்கைச் சூழல்தான். வெப்பம் அதிகமாகும்போது குறிப்பிட நிலத்தில் பயிர் வளரும் வாய்ப்பு குறைவு. வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் திறன் கொண்ட பயிர் மட்டுமே அங்குவாழும். மேலும் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து வந்தால் பயிர்கள் பெறும் ஊட்டச்சத்துகள் குறையும். இப்போதே கோதுமை போன்ற பயிர்களின் உற்பத்தி மெல்ல குறைந்து

மியாவாகி காடுகளை நகரங்களை பசுமையாக்குமா?

படம்
  மியாவாகி காடுகளை பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செய்து பார்த்து வருகிறார்கள். சாதாரண மரங்களை விட 30 மடங்கு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 30 ஆயிரம் விதைகளை ஊன்றி மியாவாக முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடியும்.  சிறிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக நிலப்பரப்பு சார்ந்த தாவரங்களை வளர்ப்பதுதான் மியாவாகி காடுகள் வளர்ப்பு முறை.  இந்த முறையில் இந்தியாவில் 24.3 சதவீதமும், சீனாவில் 23.4 சதவீதமும் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவர், இந்த காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார்.  குறிப்பிட்ட ஏரியாவை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கு விதைகளை ஊன்ற வேண்டுமோ அந்த மண்ணின் தரம், கார்பன் அளவு, மண்ணிலுள்ள பிஹெச் அளவு ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  மனிதர்களின் இடையூறின்றி தாவரங்கள் வளருமா என்று பார்த்துத்தான் மியாவாகி காடுகளை வளர்க்க முடியும்.  பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மியாவாகி காடு வளர்ப்பு முறையை உடனே எடுத்துக்கொண்டு செயல்படுத்தியுள்ளனர்.  சத்தீஸ்கர், குஜராத், கேரளா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களில் இந்த முறையை முயன்றுள்ளனர்

அலாஸ்காவில் தனியே வாழ்ந்த மனிதர்!

படம்
  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, டிக் புரோனெக்கே அலாஸ்காவுக்கு வந்தார். அங்கு தனது கையால் தானே கேபின் போன்ற அளவில் வீட்டைக் கட்டினார். அதோடு இல்லாமல் அங்கேயே முப்பது ஆண்டுகளாக தங்கிவிட்டார். 50 வயதில் பார்த்துக்கொண்டிருந்த மெக்கானிக் வேலையைக் கைவிட்டார்.  அலாஸ்காவின் இயற்கை அழகைப் பார்த்துவிட்டு இங்கேயே வந்து தங்கிவிட்டார். 1916ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஐயோவாவில் பிறந்தவரின் தந்தை தச்சுவேலைகளை செய்பவர், அம்மா தோட்ட வேலைகளில் நிபுணர். இந்த இரண்டு அம்சங்களுமே அலாஸ்காவில் வீட்டைக் கட்டுவதற்கு டிம்முக்கு உதவியது. டிம்மின் பெற்றோருக்கு பிறந்த நான்கு பிள்ளைகளில் இவர் இரண்டாவது பிள்ளை.  பள்ளிக்கு பெற்றோர் ஆசையாக அனுப்பினாலும் இரண்டே ஆண்டுகளில் பள்ளி வேண்டாம் என்று திரும்பி வந்தவர், தங்களது பண்ணையில் வேலை செய்யத் தொடங்கினார். வேலை நேரம் போக ஹார்ட்லி டேவிட்சன் பைக்கை எடுத்துக்கொண்டு நகரத்திற்கு சென்று சுற்றிக்கொண்டிருப்பார். பியர்ல் துறைமுகம் தாக்குதலால் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து ஜப்பானுக்கு எதிராக போரிட்டார்.  பிறகு சான் பிரான்சிஸ்கோ வந்தவருக்கு உடல்நலம் கெட்டது. மருத்துவமனை சிகிச்சை முடித்