இடுகைகள்

உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமிய நாடாக மாற்றப்பட சிரியா நாடு சிதைக்கப்படுகிறது! - சமர் யாஸ்பெக்கின் நூல்

படம்
                பயணம் சிரியாவின்  சிதைந்த இதயத்தை நோக்கி சமர் யாஸ்பெக் தமிழில் ஶ்ரீதர் ரங்கராஜ் சிரியா நாட்டிற்குள் மூன்றுமுறை சென்று வந்த பத்திரிகையாளரும் சிரிய நாட்டவருமான சமர் யாஸ்பெக் என்ற பெண்மணியின் களப்பணி அனுபவங்கள்தான் நூலாகியிருக்கிறது . சிரியாவில் எப்படி ஜனநாயக ஆட்சி மலராமல் இஸ்லாமிய குழுக்கள் பார்த்துக்கொள்கின்றன , உலக நாடுகள் போரை எப்படி ஊக்குவிக்கின்றன , இதனால் அங்கு அழியும் சுன்னி - ஷியா மக்களின் வாழ்க்கை , அரசுப்படைகளின் தீவிரமான வன்முறை என பல்வேறு விஷயங்களை நெஞ்சை உருக்கும் எழுத்துக்களின் வழியாக பேசுகிறார் எழுத்தாளர் . ஐஎஸ்ஐஎஸ் குழுக்கள் , நூஸ்ரா முன்னணி , அல்ஹார் என பல்வேறு மதவாத குழுக்கள் கூட்டணி அமைத்து வெளிநாட்டு வீரர்களை உள்ளே கொண்டு வந்து சுதந்திர குடியரசு படைகளைக் கொன்று அரசு படைகளோடு உள்நோக்கத்தோடு போராடுவதும் , வென்ற பகுதிகளில் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள் , அலாவித்துகளை அடித்து விரட்டுவதுமான காட்சிகள் திகிலை ஏற்படுத்துவன . மதவாத அமைப்புகள் எப்படி அறக்கட்டளை வழியாக மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களை கட்டாய இஸ்

சீனாவுக்கு பயன் கொடுக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம்!- இந்தியாவுக்கு இடமில்லை

படம்
              டீலா ? நோ டீலா ? உலகின் பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் பதினைந்து ஆசிய நாடுகள் கையெழுத்து போட்டுவிட்டன . இதில் சீனா முக்கியப்பங்கு வகிக்கவிருக்கிறது . இதில் இந்தியா இன்றுவரை இணையவில்லை . போட்டுக்கு அஞ்சுகிறதா , அரசியல் முடிவா என்பது இன்னும் தெளிவாக புரியவில்லை . இந்த ஒப்பந்தம் மூலம் 210 கோடி மக்கள் வியாபார வளையத்திற்குள் வருவார்கள் . உலகில் 30 சதவீத உற்பத்தியை பதினைந்து நாடுகள் ஈடுகட்டுகின்றன என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது . 2012 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கூறப்பட்டு இப்போதுதான் நடந்தேறியுள்ளது . பத்து ஆசியன் அமைப்பு நாடுகள் இதில் உள்ளன கூடுதலாக சீனா , ஆஸ்திரேலியா , ஜப்பான் , தென்கொரியா , நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இதில் இணைகின்றன . இந்த ஒப்பந்தப்படி இதில் உள்ள நாடுகளில் எந்த நாட்டிலும் வரி மிகவும் குறைவாக இருக்கும் . அல்லது வரியே இருக்காது . இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பிற நாடுகளில் அதிக அனுமதிகளைப் பெறாமல் தொழில் தொடங்க முடியும் . ஏற்றுமதி செய்யலாம் இறக்குமதியும் கூட செய்யலாம் . கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்

மரபணுமாற்று செடிகளுக்கான ஆய்வு விரைவில் தொடங்கவிருக்கின்றன! ஏன்? எப்படி?எதற்கு ?

படம்
            வேகமெடுக்கும் மரபணுமாற்று ஆய்வுகள் ! விரைவில் மரபணுமாற்று காய்கறிகளுக்கான கள ஆய்வுகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன . மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பீஜ் ஷீட்டல் ஆராய்ச்சி நிறுவனம் ஜனக் , பிஎஸ்எஸ் 793 என்ற இரு மரபணுமாற்ற கத்தரி விதைகளை சோதித்துப் பார்க்க அனுமதி கோரியிருந்தது . இக்கோரிக்கையை ஆராய்ந்த மரபணுமாற்ற கமிட்டி (GEAC), அனுமதி வழங்கிவிட்டது . விரைவில் தமிழ்நாடு , பீகார் , ஒடிஷா , மேற்குவங்கம் , கர்நாடகம் , மத்தியப்பிரதேசம் , ஜார்க்கண்ட் , சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மரபணுமாற்ற ஆராய்ச்சி நிறுவனம் சோதனைகளைத் தொடங்கவுள்ளது . இந்திய விதைகள் ஃபெடரேஷன் அமைப்பின் தலைவர் ராம் கௌன்டின்யா , அரசின் முடிவை வரவேற்றுள்ளார் . ’' இந்திய விவசாய அமைப்பு , மரபணுமாற்ற தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது . இந்திய நிறுவனமான பீஜ் ஷீட்டல் நிறுவனம் சோதனைகளை நடத்துவதற்கான முயற்சிகளில் உள்ளது . சுயசார்பு இந்தியாவுக்கு பொருத்தமான முடிவு '’ என உற்சாகமாக பேசினார் ராம் கௌன்டின்யா . மத்திய அரசு முடிவு செய்தாலும் மாநில அரசுகள் மரபணுமாற்ற பயிர் சோதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவ

பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது!

படம்
        பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் எந்தளவு அதிகரித்துள்ளது என்பதை டேட்டா மூலம் பார்ப்போம். ஆண்டுதோறும் மாநகராட்சி மூலம் உருவாகும் திடக்கழிவு அளவு 55-65 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு 3.3 மில்லியன் டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 43% தனிநபர் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 11கி.கி. தினசரி இந்தியாவில் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 609 டன்கள் கோவிட் -19 பாதிப்பில் உருவாகும் கூடுதல் மருத்துவக் கழிவு 101 டன்கள்(தினசரி) நாடுதோறும் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 840 டன் (தினசரி)   உலகம் முழுவதும் 1950-2015 வரையில் உருவான பிளாஸ்டிக் உற்பத்தியின் அளவு 8.3 பில்லியன் டன் 1950-2015 காலகட்டத்தில் உருவான பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 6.3 பில்லியன் டன். பிளாஸ்டிக் கழிவுகளில் 9 சதவீதம் மட்டும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.  79 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தில் கழிவாக கொட்டப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா  

ஹிட்லருக்கு உதவிய ஐந்துபேர் கொண்ட குழு - ஜெர்மனியின் தலைவிதியை மாற்றியவர்கள்

படம்
பிக்ஸாபே ஹிட்லரின் மூளைக்கார படை! எந்த மனிதரும் பெரிய ஆளாக உயர சூழல்கள், தனிப்பட்ட ஆளுமை முக்கிய காரணம்தான். மறுக்கவில்லை. ஆனால் அதையும் தாண்டி அவருக்கு உதவ ஆபத்துதவி படை என்று ஒன்று உண்டு. அவர்கள் அவரை நெருக்கடியான தருணங்களில் காப்பாற்றுவார்கள். என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். அப்படி ஐந்து பேர்தான் ஹிட்லரை மாபெரும் தலைவராக்கி பிற நாடுகளை அலற வைத்தார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம். கத்தோலிக்க சக்தி! ஃபிரான்ஸ் வான் பாபன் 1879- 1969 கத்தோலிக்க குடும்ப வாரிசு. 1921ஆம் ஆண்டு கத்தோலிக்க அரசியல் கட்சியின் உறுப்பினரானார். இவர்தான் 1932ஆம் ஆண்டு வெய்மர் இறக்கும்போது ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றார். ஹிட்லர் தலைமை பொறுப்புக்கு வர முக்கியமான ஆதரவு சக்தியாக இருந்தார். தன் காலம் முடியும்வரை அரசின் முக்கியமான பதவிகளை வகித்தார். துருக்கியின் தூதராக தொடர்ந்தார். பின்னாளில் நாஜிக்களை கொன்றதற்கான குற்றவிசாரணையைச் சந்திக்க நேரிட்டது. கம்யூனிஸ்ட்களின் எதிரி ஆல்ஃபிரட் ஹியூகென்பர்க் 1856 – 1951 வெய்மர் காலத்தில் ஊடகங்களுக்கான மனிதராக இருந்தார் ஆல்ஃபிரட். 1928 ஆம் ஆண்டு வர

முக்கியமான எழுத்தாளர்கள்!

படம்
giphy உலகில் உள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களின் அணிவரிசை இது.  21ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாவல்கள், கட்டுரைகளை எழுதியவர்கள் இவர்கள். இசபெல் அலாண்டே  1982ஆம் ஆண்டு இசபெல் அலாண்டே எழுதிய ஹவுஸ் ஆஃப் ஸ்பிரிட்ஸ் என்ற நாவல் இவரின் பெயரை உலகிற்குச் சொன்னது. மேஜிக்கல் ரியலிசம் என்ற வகையில் தாத்தாவுக்கு பேத்தி எழுதும் கடிதமாக நாவல் விரியும். இந்த வடிவத்தில் சிலியின் வரலாற்றை இந்த நூல் பேசியது.  இதற்கடுத்து 2002இல் வெளியான சிட்டி ஆஃப் பீஸ்ட் என்ற நாவல் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்ற நூலாகும். மார்க்கரேட் அட்வுட்  கனடிய எழுத்தாளர் மார்க்கரேட் கவிதை, நாவல், கட்டுரை ஆகியவற்றுக்கு புகழ்பெற்றவர். இவரது புகழ்பெற்ற நூல்கள்  " Oryx and Crake " (2003), "The Handmaid's Tale" (1986), and "The Blind Assassin" (2000).  ஜொனாதன் ஃபிரான்சன் குடும்ப உறவுகள், சமூக விமர்சனம் என்றே இவரது நாவல்கள், கட்டுரைகள், நியூயார்க்கரில் எழுதும் பத்தி எழுத்துகள் அமைந்துள்ளது. தி கரக்ஷன்ஸ் என்ற நாவல் 2001ஆம் ஆண்டு தேசிய புத்தக விருது வென்றது. இயான் மெக்ஈவன் இவர் எழுத

இரண்டு செய்திகள்! - மலமள்ளும் அவலம் - புற்றுநோயில் மூன்றாவது இடம்!

படம்
giphy மலமள்ளும் அவலத்தை ஒழிக்க முயற்சி அண்மையில் மத்திய அரசு மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்காக 1.25 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம்  கழிவுகளை அகற்றுவதற்கான கருவிகளையும், சாதனங்களையும் வாங்க உள்ளது. கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 500 நகரங்களுக்கு இந்த கருவிகள் பயன்படவிருக்கின்றன. மலமள்ளும் மற்றும் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் மரணங்கள் பற்றி உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை மத்திய அரசுக்கு தெரிவித்தது. இதன் விளைவாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய செயல்திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தை வீட்டுவசதித்துறை, நகரமயமாக்கல் துறை, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று அமைச்சகம் ஆகியோரின் உதவியுடன்தான் சாத்தியப்படுத்த முடியும். அம்ருத் என்ற திட்டத்தின் இதனை இணைத்து செயல்படுத்தவிருக்கின்றனர். பாதுகாப்பான கருவிகளை அணிந்துகொண்டு மலக்குழிக்குள் இறங்குவது , பாதாளச்சாக்கடைக்குள் இறங்குவது தவறான வழிகாட்டுதல் ஆகும். அவற்றை மனிதர்கள் இன்றி இயந்திரங்களே செய்வது நல்லது. அந்த இடத்திற்கு அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பவர்களும் வருவது சிறப்பான ஒன்று. நன்றி - எகனாமிக் டைம்ஸ் - நிதி

உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை இயற்கைதான்!

படம்
pixabay உலகளவில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் இயற்கையான சூழலை அழித்து அதில் பெரும் கட்டுமானங்களை நிறுவுவதாகவே இருக்கின்றன. இத்தொழிற்சாலைகளும் கூட இயற்கையான கனிமங்களை நம்பியே உருவாகின்றன. அல்லது அவற்றிலிருந்து புதிய பொருட்களை உருவாக்குவதாக உள்ளன. உலக பொருளாதார அமைப்பு இதுபற்றிய அறிக்கையில் இயற்கையைச் சார்ந்தே உலக நாடுகளின் பொருளாதார வலைப்பின்னல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இயற்கை ஆதாரங்களை சார்ந்துள்ள நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 44 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி. உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 86 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். உலகளவில் இயற்கையைச் சார்ந்துள்ள மூன்று துறைகள் கட்டுமானத்துறை 4 ட்ரில்லியன் டாலர்கள் விவசாயத்துறை 2.5 ட்ரில்லியன் டாலர்கள் உணவு மற்றும் குளிர்பானங்கள் துறை - 1.5 ட்ரில்லியன் டாலர்கள் இயற்கையோடு சம்பந்தப்படாத சில துறைகளும் உண்டு. அவை விமானத்துறை, வேதிப்பொருட்கள், சுற்றுலாத்துறை. ரியல் எஸ்டேட், சுரங்கம், உலோகம், நுகர்பொருட்கள் ஆகியவை மறைமுகமாக இயற்கையைச் சார்ந்துள்ளவ

பெருகும் பெண்கள் மீதான வெறுப்பும், பாகுபாடும்!

பெண்களுக்கு எத்துறையானாலும் அத்துறையில் உள்ளவர்களே ஆணோ, பெண்ணோ முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள். அப்படி இருப்பதில் அவர்களது மனதில் கெட்டிதட்டிப்போன பழமைவாதக் கருத்துகள் முக்கியக் காரணம். அப்படிப்பட்ட கருத்துகள் இப்போது மாறியிருக்குமா என்ற எண்ணத்தில் ஐ.நா சபை  எடுத்த ஆய்வு முடிகள் இதோ உலகில் பத்தில் ஒன்பது பேர் பெண்கள் பற்றிய பழமைவாத முன்முடிவுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதில் பெண் தலைவர்களும் அடங்குவர். பெண்கள் சிறப்பாக செயற்பட்டாலும் ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கல்வி முதல் வேலைவாய்ப்புகள் வரை திறமை இருக்கிறதோ இல்லையோ ஆண்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது. பார்ட்டியில் அறையும் கணவரை விவாகரத்து செய்யும் விவகாரத்தைப் பற்றி தப்பட் என்ற இந்திப்படம் பேசுகிறது. பெண்களை கணவர்கள் அடிப்பதும், உதைப்பதும் தவறு இல்லை என 28 சதவீதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  பாகிஸ்தான், நைஜீரியா, கத்தார் ஆகிய நாடுகளில் பெண்கள் மீதான பாகுபாடும் கட்டுப்பாடும் 90 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் இந்த சதவீதம் 50-60 சதவீதமாக உள்ளது. 

தாய்மொழியை மறக்கும் திபெத் மாணவர்கள்!

படம்
சீன அரசு திபெத் பகுதியை தன்னுடைய பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. திபெத் மாணவர்களுக்கு இருமொழி முறையில் கல்வி கற்பித்து வருகிறது. இதில் பெரும்பாலும் தாய்மொழியை விட மாண்டரின் மொழியைக் கற்றுத்தர ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு திபெத்திய தாய்மொழியை விட மாண்டரின் மொழியைக் கற்றுத்தர சீன அரசு முயன்று வருவதை மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஜிங் பிங் தலைமையில் சீனாவில் நடந்து வரும் ஆட்சி, தேசியவாதத்தை  தீவிரமாக வலியுறுத்துகிறது. இதன் விளைவாக, திபெத் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகள் சட்டம் திரும்ப ப்பெறப்பட்டது. இருமொழி கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டது. அங்கு மூன்று வயதிலிருந்து குழந்தைகளுக்கு பள்ளிகளில் சீனமொழியை பயிற்றுவிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் நாட்டை ஒரே நாடாக ஒருங்கிணைக்க முடியும் என அரசு நினைக்கிறது. 2010-12 காலகட்டத்தில் திபெத்தின் கிங்கெய் பகுதியில் சீனமொழி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.  ஆனாலும் அரசை எதிர்த்து நிற்கமுடியவில்லை. பின்னர், பள்ளிகளில் அனைத்து பிரிவுகளிலும் சீனமொழியை கொண்ட

விண்வெளியிலுள்ள வேலைகள்! - பட்டதாரிகள் இதற்கும் விண்ணப்பிக்கலாம்

படம்
pixabay எக்ஸ்ட்ராடெரஸ்டரியல் சர்வேயர் விண்வெளியில் உள்ள கோள்களை ஆராயும் பணி. விண்வெளியில் சுற்றும் கற்களை, கோள்களைக் கண்டுபிடித்து அதிலுள்ள கனிமங்களை ஆராய முடியுமா என ஆராய்வார்கள். இப்பணியை இந்த பணியிடத்திற்கு வருபவர் செய்ய வேண்டும். ஆஸ்டிராய்டு மைனர் கோள்களை துளையிட்டு கனிமங்களை அகழ்ந்து எடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆபத்தான பணிதான். ஆனாலும் நம் எதிர்காலத்தை உறுதி செய்வது இவரின் அர்ப்பணிப்பான பணிதான். அட்மாஸ்பியர் ஓவர்சீயர் பூமியை ஒத்த வேறு கோள்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதில் உள்ள வாயுக்களின் தன்மையை ஆராய வேண்டும். இவரின் ஆய்வுதான் கோளின் தன்மையை பிறருக்குச் சொல்லும். கம்யூனிகேஷன் மற்றும் நேவிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்!  இந்தியோ, தமிழோ, தெலுங்கோ எந்த மொழியாக இருந்தாலும் சரி. விண்வெளியில் பேசியே ஆகவேண்டும். அப்போதுதான், அவர் சரியான பாதையில் நகர்ந்து செல்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய  முடியும். இல்லையென்றால் அவர் விண்கலத்துக்கு சரியாக வரமுடியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. புரோபல்சன் இஞ்சினியர்! இஞ்சின் சூடாகி விட்டதா, கதிரியக்க பாதிப்பு உண்டா,

ஆங்கிலம் பேசினால் இங்கிலாந்து செல்லலாம்!

படம்
அமைச்சர் ப்ரீத்தி படேல் இங்கிலாந்தில் குடியேற்றத்துறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் விசா நடைமுறைகளை மாற்றவிருக்கிறது. இதன்விளைவாக, ஆங்கிலம் பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவிருக்கிறது. “சிறப்பாக ஆங்கிலம் பேசும் இந்தியர்கள் இதன் மூலம் பயன் பெறமுடியும். திறன் வாய்ந்த மனிதர்களை இம்முறையில் நாங்கள் அடையாளம் கண்டுகொண்டு இங்கிலாந்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார் குடியேற்றத்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல். அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து முற்றாக விலகி விடும். இதனால் அரசு தன் குடியேற்றம், பாதுகாப்பு, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் மாறுதல்களை ஏற்படுத்த முயன்றுவருகிறது. பிரெக்ஸிட் பற்றியே பேச்சுகளும், வாக்கெடுப்பும் நடந்தபோது தெரசாமே இந்தியாவுக்கு வருகை தந்தார். தொழில்சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்போது உறுதியாயின. அதே முறையில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை அங்கு கல்வி கற்கவும், ஆராய்ச்சி செய்யவும் இங்கிலாந்து அரசு வரவேற்று விசா காலத்தை கூட இரண்டு ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது ஆங்கிலத்தை சரளமாகப் பேசி, இ

உலகை மாற்றிய இங்கிலாந்து பெண் கண்டுபிடிப்பாளர்கள்

படம்
ஷில்லி ங் இங்கிலாந்து பெண் கண்டுபிடிப்பாளர்கள் Rosalind Franklin 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங் ஹில்லில் பிறந்தவர். 1942ஆம் ஆண்டு நிலக்கரி பயன்பாடு பற்றிய இவரது ஆராய்ச்சி, அந்நாடு உலகப்போரில் நிலக்கரியை சிறப்பாக பயன்படுத்த உதவியது. இதுதொடர்பாகவே தன் முனைவர் படிப்பையும் செய்தார்.  1950ஆம் ஆண்டு ரோசாலின்ட் இருவகை டிஎன்ஏக்களை கண்டுபிடித்தார். இதன் காரணமாக கிங் கல்லூரியில் உதவித்தொகை பெற்றார். டிஎன்ஏ அதிகளவு ஈரப்பதமான சூழலில் இருந்தால் அதன் வடிவம் மாறிவிடும் என்பதை ஆராய்ச்சி செய்து கண்டறிந்தார். 1958ஆம்ஆண்டு ரோசாலின்ட் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டு 37 வயதில் மரணமடைந்தார்.  Janet Taylor 1804ஆம் ஆண்டு ஜேனட் டெய்லர் பிறந்தார். இவர் அவரது பெற்றோருக்கு ஆறாவது குழந்தை. இவர் தன் ஏழாவது வயதில் தாயாரை இழந்தார். கடல் சம்பந்தமான பல்வேறு சாதனங்களை தயாரித்து விற்று புகழ்பெற்றார். இவரது கருவிகள் பற்றி புகார்கள், சர்ச்சை இருந்தாலும் இதற்கான அகாடமி ஒன்றையும் துணிச்சலாக உருவாக்கி வென்றவர் இவர். 1617-1852 ஆம் ஆண்டில் பதிவான காப்புரிமைகள் எழுபதிற்கும் மேல். இதில் ஒ

ரத்தசோகையைப் போக்கும் பிஸ்கெட்!

படம்
பெரு நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் 30 நாட்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை போக்கும் ஊட்டச்சத்து பிஸ்கெட்டை உருவாக்கி உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹிஸ்டரி டிவி சேனலில் ஜனவரி மாதம் 29ஆம் தேதி, உலகை மாற்றிய ஐடியா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நியூட்ரி ஹெச் என்ற பிஸ்கெட்டை தயாரித்த விவசாய பொறியியலாளருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அது ரத்தசோகையை போக்கும் என்பதுதான் பிஸ்கெட்டின் விசேஷம். இதைக் கண்டுபிடித்தவர் ஜூலியோ கேரி பாரியோஸ். ”’மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் இந்த பிஸ்கெட்டை சாப்பிடலாம். முப்பது நாட்களில் இதிலுள்ள புரத சத்தும மூலம் அவர்களின் ரத்தசோகை பிரச்னை தீர்ந்துவிடும் ’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரு நாட்டில் பாரியோஸின் நியூட்ரி ஹெச் பிஸ்கெட் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள 50 சதவீத குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. ரத்தசோகையை போக்கும் இந்த பிஸ்கெட்டில் அப்படி என்ன விஷயம் உள்ளது. கீன்வா எனும் தானியம், கோகோ, பொவைன் ஹீமோகுளோபின் ஆகிய மூன்று சேர்மானங்களே இந்த பிஸ்கெட்டை உ

ஜப்பானை உருக்குலைக்கும் ஹிக்கிகோமேரி!

படம்
பிபிசி  ஜப்பானில் தொண்ணூறுகளில் புழங்கி வந்த பழக்கம் ஹிக்கிகோமேரி. இந்தப்பழக்கம் தற்போது அனைத்து நகரங்களிலும் பரவி வருகிறது. ஹிக்கிகோமேரிக்கு அர்த்தம் - உள்ளுக்குள் இழுத்துக்கொள்வது. அதாவது, இந்த பழக்கத்திற்கு உள்ளான இளைஞர்கள் தங்கள் வீடுகளை விட்டு எங்கும் செல்லமாட்டார்கள். காரணம் சமூகத்திற்கு தன் தேவை என்ன என்பது போன்ற எண்ணங்கள் இவர்களுக்கு ஏற்படுவதுதான். இவர்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு இருப்பதால், இக்காலங்களில் வேலைக்கு போகாவிட்டாலும் சமாளித்து விடுகிறார்கள். இந்நிலை சிலருக்கு ஆறுமாதங்களுக்கு நீடிக்கும். அல்லது ஆண்டுகளுக்கு நீளும் வாய்ப்பும் உள்ளது. இது ஜப்பானில் இருந்து உருவானது என்று கூறப்பட்டாலும், வீடுகளை விட்டு வெளியேறாமல் சமூகத்திலிருந்து விலகி இருக்கும் பழக்கம் பிரான்ஸ்,துருக்கி போன்ற நாடுகளிலும் உருவாகி வருகிறது. இதுபற்றி ஆலன் டியோ என்ற ஆராய்ச்சியாளர் பத்தாண்டுகளாக ஆராய்ந்து வருகிறார். இதில் ஆராய்ச்சி செய்யத் தடையாக இருப்பது இளைஞர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதுதான். அவர்கள்தான் சமூகத்திலிருந்து முழுக்க விலகி இருக்கிறார்களே? இப்பாதிப்பிற்கு காரணம் என்ன?

இந்தியாவில் உருவாகிறது பெருஞ்சுவர்!

படம்
ஜனநாயக நாடுகளிலேயே அதிக நாட்கள் இணையம் தடைசெய்யப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ ஐந்து மாதங்கள் முற்றாக இணையம் துண்டிக்கப்பட்டு காஷ்மீரிலுள்ள தொழில்கள் அனைத்தும் துடைத்து அழிக்கப்பட்டன. இப்போதும் நீதிமன்ற உத்தரவுப்படி சில பகுதிகளில் மட்டும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களை மட்டுமே இணையத்தில் காஷ்மீர் பயனர்கள் பார்க்க முடியும். மேலும் இம்முறையில் 301 வலைத்தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 4, 2019 அன்று இணைய இணைப்பு காஷ்மீரில் தடைசெய்யப்பட்டது. பின்னர், கார்கில் பகுதிகளில் டிசம்பர் 27, 2019 அன்று இணைய இணைப்பு வழங்கப்பட்டது. பிரச்னை ஏற்படுத்தாத பயனர்களுக்கு மட்டும் ஜன.25, 2020 அன்று 2ஜி இணைய இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அரசு அனுமதிக்கும் இணையதளங்களை மட்டுமே காண முடியும். மேலும் தகவல் அனுப்புவதற்கு என்கிரிப்ஷன் வசதியுள்ள வாட்ஸ் அப் போன்ற செயலிகளை தடை செய்துள்ளது மத்திய அரசு. அதற்கு பதிலாக அரசுக்கு ஆதரவான ஜியோ சாட் செயலியைப் பயன்படுத்தலாம். இதில் தகவல்களை அரசு இடைமறித்துப் படிக்க முடியும். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், தனியார் நிறு

உலகில் நடக்கும் போர்களுக்கு காரணம்! - நாகரிகங்களின் மோதல்!

படம்
உலகின் பல்வேறு விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் நாடு அமெரிக்கா. அதற்கு காரணம் என்ன? அவர்களின் பொருளாதார வளர்ச்சி. இதை உருவாக்கியவர்கள் அங்கு பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள் அல்ல. அகதிகளாக பிழைக்க அங்கு சென்றவர்கள் மூலமாக அந்நாடு இன்று வல்லரசாக மாறியுள்ளது. இந்நிலையிலும் அங்குள்ள கிறித்தவம், முஸ்லீம், இந்துகள்  சார்ந்து நாகரிக மோதல் ஏற்பட்டு வருகிறது.  இதனால் குறிப்பிட்ட மத த்தினரின் வழிபாட்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. இது நாடுகளுக்கு இடையிலான போராக இதுவரை மாறவில்லை. ஆனால் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறது இந்நூல்.  எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்பது செயலாக உருவாகி சண்டை வருகிறது. ஆனால் பொதுவாகவே வேறு கலாசாரம் பண்பாடு கொண்டவர்களை பிறர் ஏற்பதில்லை. இந்த வேறுபாடு பிற மதங்களை விட கிறித்தவம், இஸ்லாமில் அதிகம் உள்ளது. இவை இரண்டும் இன்று வரையும் ஒன்றையொன்று அதிகம் எதிர்த்து வருகின்றன. இன்றைய ஈரான் - சவுதி அரேபியா, ரஷ்யா, போஸ்னியா, சீனா - ரஷ்யா, சீனா - ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெறும் பிளவுக்கோட்டுப் போர்களையும் ஆசிரியர் விளக்கியுள்ளார். எப்படி சாதாரண போர்களை வி

உணவு வேட்டையர்கள்! - நாடுகளைச் சூறையாடும் வெட்டுக்கிளிகள்

படம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை வெட்டுக்கிளிகளின் கூட்டம் சூறையாடி வருகிறது. கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளை தற்போது வெட்டுக்கிளிகள் தாக்கி அங்குள்ள உணவுப்பொருட்களை அழித்து வருகின்றன.ஏற்கெனவே கடுமையான பஞ்சத்திலும், பொருளாதார தடுமாற்றத்திலும் உள்ள இந்த நாடுகள் மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளன. வறட்சி நிரம்பிய பருவகாலம் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என ஐ.நா சபை எச்சரித்தது உண்மையாகிவிட்டது. ஒருநாளில் வெட்டுக்கிளிகள் பிரான்ஸ் நாட்டு மக்கள்தொகையின் அளவுக்கான உணவை தின்று தீர்க்கின்றன. வெட்டுக்கிளியின் ஆயுள் ஐந்து மாதங்கள் என்றாலும், அதற்குள் ஓவர்டைம் வேலை பார்த்து தன் இனத்தை பெருக்குவது இவற்றின் பலம். வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த கென்ய அரசிடம் காசு கிடையாது. இதற்காக ஐ.நா சபையிடம் நிதியுதவியாக 20 லட்ச ரூபாய் கேட்டது. தற்போது இத்தொகை அறுபது லட்சரூபாயாக உயர்ந்துள்ளது. காலம் அதிகமாகும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்கான தொகையும் அதிகரிக்கும். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது சாதாரண காரியமல்ல. மேலும் இவற்றை கண்காணிப்பதும் கடினம். தினசரி 150 கி.மீ தூரம் பயண

உலகம் போற்றும் வள்ளல்கள்!

படம்
பில்கேட்ஸ், வாரன் பஃபட் மட்டுமல்ல தன்னளவில் உலகில் பல்வேறு விஷயங்களுக்கு தாங்கள் சம்பாதித்த பணத்தைக் கொடுக்கும் பணக்கார ர்கள், தொழிலதிபர்கள் உலகம் முழுக்க உண்டு. அவர்களைப் பற்றி ஃபோர்ப்ஸ் இதழ் அட்டவணைப்படுத்தியுள்ளது. அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம். அசீம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத் தலைவர் 7.6 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனத்தின் தலைவர். அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன் மூலம் கல்வி தொடர்பான பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பல்வேறு சமூகத்திற்கு அவசியமான பணிகளைச் செய்து வருகிறது. கடந்த ஜூலையில் விப்ரோ நிறுவன தலைவர் பணியிலிருந்து விலகினார். காந்தி மூலம் ஊக்கம் பெற்ற இவர், தன் வாழ்நாளில் 21 பில்லியன் டாலர்களை சமூகத்திற்காக அளித்துள்ளார். தியோடர் ராச்மட் - திரிபுத்ரா குழுமம் இந்தோனேசியா விவசாயம் சார்ந்த, சுரங்கம் போன்ற தொழில்களை ஏ அண்ட் ஏ ராச்மட் என்ற நிறுவனம் மூலம் செய்து வருகிறார். கல்வி, ஆதரவற்றோருக்கான உதவிகளை சர்வீஸ் பவுண்டேஷன் மூலம் செய்து வருகிறார். இந்த வகையில் 5 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளார்.  1999ஆம் ஆண்டு மாணவர்களுக்கு

இரண்டு அடி முன்னே ஒரு அடி பின்னாக - பியி பண்டேலா

படம்
நேர்காணல் பியி பண்டேலா திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் நைஜீரியாவில் எப்படி இத்தனை எழுத்தாளர்கள், இயக்குநர்கள் உருவாகி வருகிறார்கள்? நாற்பது ஆண்டுகளாக நாங்கள் இங்கு கலையை பாதுகாக்க போராடி வருகிறோம். நோலிவுட் 1980ஆம் ஆண்டில்தான் உருவானது. மாநில அரசின் டிவி கூட தடைசெய்யப்பட்டுவிட்ட சூழ்நிலை. இதனால் கலையை நாங்கள் உலகிற்கு சொல்லும் அவசிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இசைக்கலைஞர்கள் ஆப்பிரிக்க இசை மற்றும் ரகே, ஹிப்ஹாப் ஆகியவற்றுடன் வெளியே முகம் காட்டினார்கள். எழுத்தாளர்கள் தங்களின் சிறந்த படைப்புடன் வெளியே வந்தனர். அப்படி இலக்கியம் எழுதினால் கூட வறுமை ஆபாச படம் போல எழுதி பரிசு வாங்குகிறீர்கள் என்று குற்றச்சாட்டு உள்ளதே? மேற்சொன்ன விஷயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் எழுதுவதை நாங்களே வெளியிடுவதில்லை. எடிட்டர் அதனை திருத்தி செப்பனிட்டு தனக்கு தேவையானவற்றை கண்டுபிடித்து அதை மாற்றி வெளியிடுகிறார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்வதால்தான் இலக்கியப் பரிசுகளை எங்கள் நாட்டினர் பெறுகின்றனர். சிமண்டா அடிச்சி என்ற சிறுகதை எழுத்தாளர் இருந்தார். அவர் ஆப்பிரிக்க வாழ்வை எழுதவில்லை. விபச்சார