இடுகைகள்

கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான், எனது என்ற சொற்களே வாழ்பனுவத்தை அழிப்பன - ஜே கிருஷ்ணமூர்த்தி

  சரியான கல்வி ஜே கிருஷ்ணமூர்த்தி நான், எனது என்ற சொற்களை ஒருவர் பயன்படுத்தும்போது அவர் சுயத்துடன் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்கிறார். இந்த நிலையில் ஒருவரின் மனம் சுதந்திரமாக இயங்குதில்லை. அவர் பெறும் அனுபவங்களும் கூட வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள உதவுவதில்லை. தான், எனது எனும் தீவிர தன்முனைப்பு   முரண்பாடுகள், வேதனை, குழப்பங்களை ஏற்படுத்துகிறது.   இவர்களுக்கு அனுபவங்களும் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பியவையாக இருக்காது. குழந்தைகள் தங்கள் சுயத்திடமிருந்து தன்முனைப்பிடமிருந்து தப்பி விலகி இருக்க கற்றுக்கொடுப்பது சற்று வேதனை நிரம்பியதாகவே இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளின் உறவுமுறைகள், நடவடிக்கை என பலவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். பெற்றோர், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது தெளிவான கருத்துகளின் வழியே குழந்தைகளுக்கு உதவினால் அவர்களுக்குள் அன்பும் நல்ல விஷயங்களும் உருவாகும். கல்வி என்பது எப்போதும் நிகழ்காலத்திற்கானது. கற்றல் என்பது சூழல் தாக்கங்கள், வேறுவிதமான தன்மைகளைக் கொண்டிருக்காது. ஒருவரின் முரண்பாடுகள், துன்பங்களை நீக்கி அவரை கல்வியே முழுமையா

தத்துவங்களின் படி கல்வி அமைந்தால் என்னவாகும்? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  கல்வி தத்துவத்தின் படி அமையக்கூடாது! நெறிமுறைகள் குறிக்கோள்கள் ஆகியவற்றின் இயல்புகளை விட அவற்றை எவை என அடையாளம் காண்பது முக்கியம். கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் அவற்றை கற்பிக்கும் முறை என்பது அவர் கற்று அறிந்த விஷயங்களை விட முக்கியம். ஏனெனில் கல்வி கற்கும் முறையில்தான் ஒருவர் இன்னொருவரின் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும். ஊக்குவித்து வளர்க்க முடியும்.ம குறிப்பிட்ட விதிமுறைகள், நெறிகள், நுட்பங்கள் வழி கற்பிப்பது ஆசிரியருக்கு எளிதானதாக மாறுகிறது. இதன் வழியாக மாணவர்களுக்கு அவர் எளிதாக கற்பிக்கலாம். ஆனால் அமைப்பு முறை, கருத்துகளை வறட்சியுடன் கூறுவது ஆகியவை தவிர்க்கப்படுவது அவசியம். கல்வி என்பது குறிக்கோள்கள், லட்சியவாதிகளைக் கொண்டது அல்ல. கல்வி என்பதைக் கற்கும் பிள்ளைகளின் வழி பெற்றோர் அவர்களைப் புரிந்துகொள்வது நடக்கவேண்டும். விதிகளை, நெறிகளை, குறிக்கோள்களை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கின்றனர். இதனால் பிள்ளைகள் சிறு வயதிலேயே மூடிய இயல்பு கொண்டவர்களாக இறுக்கமான மனம் கொண்டவர்களாக வளர்கிறார்கள். உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னர், தங்கள் மனதில் எழும் முரண்பாடுகளை சமாளித்து வென

எந்திரம் போன்ற மனிதர்களை உருவாக்கும் அரசும், மத நிறுவனங்களும்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  2 சரியான கல்வி ஜே.கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் உள்ள கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் மனதில் ஏராளமான குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்களின் மனதிலுள்ள முன்மாதிரிகளை  குறிக்கோள்களை மாணவர்களுக்கு வலியுறுத்திக் கூறுவது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுமா? நிச்சயமாக இல்லை. இது அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல்பாடாகும். நீங்கள் நேசிக்கும் குழந்தைகளை அன்பும் அக்கறையும் இல்லாத மனிதர்களிடம் ஒப்படைக்கிறீர்கள். அப்படி குழந்தைகள் ஒப்படைக்கப்படும் இடம்தான், பள்ளி. இதனால் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு மனதில் பயம், பதற்றம், குழப்பம் உண்டாகிறது. அவர்களுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கூட தேவையான அன்பு கிடைப்பதில்லை. இந்த முறையில்தான் மாணவர்கள் மந்தமாக, உணர்ச்சிகள் இல்லாத வணிகம் செய்பவர்களாக உருவாக்குகிறார்கள். இன்றைய பெற்றோர் லட்சியத்தில் உறுதியாக இருந்து தங்களது தேவைக்கு ஏற்ப குழந்தைகளைப் படிக்க வைத்து பட்டம் பெற வைக்கிறார்கள். குறிக்கோள்கள், முன்மாதிரிகள் என வடிவமைத்துக்கொள்ளாமல் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது முக்கியம். அப்படி குறிப்பிட்ட முறைகள் நுட்பத்திற்குள் சிக்கினால்

தனது மகனைப்போன்ற சிறுவனுக்காக தனது ஆன்மாவை வாளாக மாற்றும் கரடி! தி பாய் அண்ட் தி பீஸ்ட் - அனிமேஷன்

படம்
  தி பாய் அண்ட் தி பீஸ்ட்  இயக்கம் - மமோரு ஹோசோடா அப்பா, அம்மாவை விட்டு பிரிந்துவிட குடும்பம் சிதைகிறது. அம்மா இறந்துவிடுகிறார். கடனுக்காக உறவினர்கள் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்கிறார்கள். இதனால் க்யூட்டா என்ற சிறுவன் ஆதரவற்று தெருவில் திரியும் நிலை. இந்த நேரத்தில் அவனுக்கு சில விலங்குகள் கண்ணில் படுகின்றன. அவற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். அது ஒரு விலங்குகள் உலகம். அங்குள்ள கரடி ஒன்று அவனுக்கு ஆதரவளிக்கிறது. அதற்கு வலிமை இருக்குமளவு தற்காப்புக் கலையில் நுட்பம் இருப்பதில்லை. அந்த நுட்பத்தை சிறுவன் எப்படி கற்றுக்கொடுக்கிறான், தற்காப்பு போட்டியில் வெல்ல உதவுகிறான் என்பதே கதை.  இரண்டு உலகம் சார்ந்த கதை. ஜப்பானில் உள்ள தெருக்களில் உணவுக்கு பிறரிடமிருந்து திருடி சாப்பிடும் நிலையில் வாழும் சிறுவன், க்யூட்டா. அவனுக்கு அந்த நேரத்தில் எலி ஒன்று நட்பாகிறது. அவனது துன்பம், துயரம் என அனைத்திலும் உணர்ச்சி ரீதியான ஆதரவாக இருக்கிறது. பிறகுதான் விலங்குகள் உலகத்தில் கரடியை சந்திக்கிறான். அங்குதான், தனது உடலை வலிமையாக்கிக்கொண்டு கரடிக்கும் தற்காப்புக் கலையின் நுட்பங்களை கற்றுத் தருக

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவாத கல்வி ஏற்படுத்தும் பாதிப்பு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  பல்வேறு இடங்களில் ஏற்படும் பேரழிவுக்கு காரணம், கல்வியாகவே இருக்கிறது. நாம் கல்வி என்பதை எப்படி புரிந்துகொள்கிறோம். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவது எதற்கு? அவர்களை கற்றவர்களாக மாற்றுவதற்காகவா? பள்ளியில் குறிப்பிட்ட தொழில் திறன்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.  அது அவர்களுக்கு லாபம் தரும் வேலையைப் பெற்றுத் தருகிறது. இப்படி கல்வி கற்று கிளர்க்காக திறன் பெற்றவர்கள் நிர்வாக ஏணிப்படிகளில் ஏறி திறன் பெற்றுவிட முடியுமா? ஏழாவது பாகம், தி கலெக்டட் வொர்க்ஸ் தொகுப்பு. தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் சில பகுதியினருக்கு பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. ஆனால் அதேசமயம் ஆழமான பிரச்னைகளையும் உருவாக்குகிறது. வளர்ந்துவரும் பல்வேறு சவால்களை சந்திக்கும் வகையில் ஒருவரின் வாழ்க்கை இருக்கவேண்டும். தனிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல் இதுதான்.  தொழில்நுட்ப ரீதியாக நாம் பெறும் அறிவு, நமது மனதிற்குள் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை, தர்க்க ரீதியான அழுத்தங்களை தீர்க்க உதவாது. வாழ்க்கையின் செயல்பாட்டை புரிந்துகொள்ளாமல் நாம் பெறும் தொழில்நுட்ப அறிவு மெல்ல நம்மையே அழிக்கத்தொடங்குகிறது. அணுவை எளிதாக பிளக்

அறிவியல் தகவல்களை வெளிப்படுத்தும் வழிகள் - பை சார்ட், அட்டவணை, டயகிராம்

படம்
  தகவல்களை எப்படி வெளியே கூறி விளக்குவது? அறிவியல் சம்பந்தமான தகவல்களை எழுத்துக்களாக பத்தி பத்தியாக எழுதி ரிசர்ச்கேட் வலைத்தள கட்டுரை போல விளக்கினால் படிக்கும்போதே பலருக்கும் தூக்கம் வந்துவிடும். இதை தடுக்கவே பல்வேறு படங்கள், அட்டவணைகள் உதவுகின்றன. பொதுவாக அறிவியல் சோதனைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள், அளவுகள் ஆகியவற்றை டேட்டா என்கிறார்கள். தமிழில் தகவல்.  பொதுவாக பங்குச்சந்தை, பணவீக்கம் ஆகியவற்றின்  ஏற்ற இறக்கங்களை கிராப் வடிவில் சொல்லுவார்கள். இந்த வடிவில் ஏற்ற இறக்கங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும். அனைத்து தகவல்களையும் இதே வடிவில் சொல்ல முடியாது.  பை சார்ட் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது ஒரு ரூபாயில் வரவு செலவுகளை இந்த வகையில் சொல்லுவார்கள். இதனை பார்த்தாலே எளிதாக ஆண்டின் நிதி அறிக்கை எந்த லட்சணத்தில் இருக்கிறது என அடையாளம் கண்டுகொள்ளலாம். பொதுவாக எந்த அளவு, சந்தையில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு, வருமான அளவு ஆகியவற்றை பை சார்ட் மூலம் புரிந்துகொள்ளலாம். நோய்த்தாக்குதல் அளவு, வறுமையில் உள்ள மக்களின் அளவு ஆகியவற்றை சதவீத அடிப்படையில் எளிதாக புரிந்துகொள்ளலாம்.  நூறுகிராம்

சரியான கல்வியை பள்ளிகள் வழங்குகின்றனவா? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  சரியான கல்வி எது? - ஜே கே 1 கல்வி கற்காத மனிதன் யார்? பள்ளி செல்லாதவன், தன்னை முழுக்க அறியாதவன்தான். பள்ளி சென்றாலும் நூல்களை மட்டும் படித்தவன் முட்டாளாக இருக்க வாய்ப்புண்டு. அவன் அரசு, அதிகார வர்க்கம் தரும் தகவல்களை மட்டுமே அறிந்திருப்பான். புரிந்துகொண்டிருப்பான்.  ஒன்றைப் புரிந்துகொள்ளுதல் என்பது சுயமாக கற்றல் என்பதன் வழியாக சாத்தியமாகிறது. இது ஒருவரின் மனதில் நடைபெறும் உளவியல் கற்றல் செயல்முறையைப் பொறுத்தது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்குள் தன்னை உணர்ந்துகொண்டு கற்பதுதான் கல்வி என்று கூறவேண்டும்.  புத்தகங்களைப் படித்து அதிலிருந்து நாம் பெறும் செய்திகள், தகவல்கள் ஆகியவற்றின் தொகுப்பைத்தான் கல்வி என்று சொல்லுகிறோம். இதை யார் வேண்டுமானாலும் பெறமுடியும். புத்தகங்களை வாசிக்கத் தெரிந்தால் போதுமானது. இப்படி பெறும் அறிவு மனிதர்களிடையே கொள்ளும் மோசமான உறவு, சிக்கல்கள், எடுக்கும் முடிவு ஆகியவற்றுக்கும் முக்கியமான காரணமாகிறது. ஏறத்தாழ ஒருவரை குழப்பத்திற்குள் ஆழ்த்தி அவரை மெல்ல அழிக்கிறது.  கல்வி கற்க ஒருவருக்கு உள்ள வாய்ப்பு பள்ளி மட்டுமேதானா? நமது சமூகம் ஒருங்கிணைக்கப்பட்டது. நாம் பிள்ளைகளை

மாணவர்கள் கல்வி கற்க உதவும் தி பைசைக்கிள் புராஜெக்ட்!

படம்
  தி பைசைக்கிள் புராஜெக்ட் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர், ஹேமந்த் சாப்ரா. இவர் 2009ஆம் ஆண்டு தி பைசைக்கிள் புராஜெக்டைத் தொடங்கினார். இதன்படி நகரங்களில் உள்ள சிறுவர்கள் பயன்படுத்திய சைக்கிள்களைப் பெறுகின்றனர். அதை பெயிண்ட் அடித்து பழுது நீக்குகின்றனர். பிறகு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதில் நீண்ட தொலைவிலிருந்து வரும் மாணவர்களை பட்டியலிடுகின்றனர்.  அவர்களுக்குத்தான் சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த பைசைக்கிள் புராஜெக்ட் திட்டத்தை ஹேமந்த் சாப்ரா, அவரது மனைவி சங்கீதா, பத்திரிகையாளர் சைமோனா டெரோன் ஆகிய மூவரும் தான். இதில் சைமோனா டெரோன் மூலம் தான் சமூகத்தில் உள்ள நிறைய மனிதர்களின் தொடர்பு கிடைத்தது.. இப்படித்தான் பழைய சைக்கிள்களைப் பெற்று அதை ஹேமந்த் சாப்ரா தனது வீட்டின் அருகில் உள்ள நஸீம் என்பவரிடம் கொடுத்தார். அவர், மாணவர்களுக்கென குறைந்த விலையில் பழைய சைக்கிள்களை நகாசு பார்த்து கொடுத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், நஸீமின் தம்பியும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்தான்.  ஹேமந்த் சாப்ராவின் அப்பா, சிறுவயதில் ஒருமுறை சொன்ன சம்பவமே பைசைக்கிள் புராஜெக்ட் தொடங்கப்பட முக்கியமான காரணம். பள

வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள்.  அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம்.  வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூல

பழங்குடிகளுக்கு இலவச கல்வி அளிக்கும் அச்சுதா சமந்தா!

படம்
  பழங்குடிகளுக்கு கல்வி தரும் அச்சுதா சமந்தா!  ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர், அச்சுதா சமந்தா. இவர்,  30 ஆயிரம் பழங்குடி மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார். தொடக்க கல்வி மட்டுமல்ல, அவர்கள் முதுகலைப் பட்டம் பெறுவது வரையிலான கல்விச்செலவுகளை ஏற்கிறது அச்சுதாவின், கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் அமைப்பு.  கலிங்கா இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் , அச்சுதா சமந்தா. இவர், ஒடிஷாவின் கலாபரபன்கா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது, நான்காவது வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். அதற்குப் பிறகு குடும்ப பொறுப்பை ஏற்றார். வீட்டுக்கு அருகிலுள்ள  மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து சம்பாதித்தார்.  கிடைத்த வருமானம் மூலம் குடும்ப செலவுகளைச் சமாளித்தார்.  முதுகலைப் பட்டத்தை படித்து முடித்தவர், பழங்குடி மாணவர்களின் கல்விக்கு உதவ தீர்மானித்தார். 1993ஆம் ஆண்டு பழங்குடி மாணவர்களின் கல்விக்காக கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (KISS) என்ற அமைப்பை உருவாக்கினார்.  இந்த அமைப்பு, பழங்குடி மாணவர்களுக்கு  தங்குமிடம், உணவு,கல்வி ஆகியற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பள்ளி, கல்லூரி, பல்

கனிமவியல் பற்றி படிக்க மாணவர்களை ஊக்குவித்தவர்! விளாதிமிர் வெர்னால்ஸ்கை

படம்
  விளாதிமிர் வெர்னால்ஸ்கை (Vladimir vernadsky 1863 -1945) கனிமவியலாளர் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தேன். பல்கலைக்கழகத்தில் புவி அறிவியல் துறையின் தந்தை என புகழப்பட்ட வாசிலி வாசிலியேவிச் டோகுசாவ்  தான் எனது ஆசிரியர் மற்றும் வழிகாட்டி. புவிவேதியியல் துறையை உருவாக்கியவர்களில் எனக்கும் முக்கியப் பங்குண்டு. விளாதிமிர் கனிமவியல், புவியியல், வேதியியல் ஆகிய பாடங்களைப் படித்து முதுகலைப் பட்டம் பெற்ற ஆண்டு 1887. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றவர் கிரிஸ்டல்லோகிராபி படிப்பைப் படித்தார். 1890-1911 காலகட்டத்தில் மாஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கனிமவியல், கிரிஸ்டல்லோகிராபி பற்றிய பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.  ரஷ்யாவில் முதன்முறையாக கனிமவியல் பற்றி படிக்க  மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்,விளாதிமிர் தான்.  ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டபிறகு, கதிர்வீச்சு, அதன் ஆற்றல், பூமியில் உயிரினங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 1928ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்,  உயிரிவேதியியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கி, அதனை நடத்தினார்.  முக்கிய படைப்பு, 

எதிரியை மாறுகை மாறுகால் வாங்கிவிட்டு அமைதியை போதிக்கும் படம்! சமரசிம்ஹா ரெட்டி - பாலைய்யா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி

படம்
  சமரசிம்ஹா ரெட்டி பாலகிருஷ்ணா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி இயக்கம் - ஜி கோபால் கதை வி விஜயேந்திர பிரசாத் வசனம் பாருச்சி பிரதர்ஸ்  இசை மணிசர்மா  ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மோட்டல் ஒன்றுக்கு அப்புலு வருகிறான். அவன் கையில் பணம் இல்லை என்பதால் சுயநலமான சுமித்ராவின் ஹோட்டலில் வேலைக்கு சேருகிறான். இந்த ஹோட்டலுக்கு போட்டியாக சிட்டம்மா என்ற பெண்மணி ஹோட்டல் வைத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் தொழில்போட்டி உள்ளது.   அப்புலுவைப் பார்த்ததிலிருந்தே சிட்டம்மாவுக்கு இவன்தான் தனக்கு ஏற்றவன் என மனம் சொல்லுகிறது. ஹோட்டலில் மூன்று பெண்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை சுமித்ரா கடுமையாக திட்டி வேலை செய்யச் சொல்லுகிறார். இந்த பெண்களுக்கு அத்தைதான் ஹோட்டலை நடத்தும் பெண்மணி என அப்புலு தெரிந்துகொள்கிறான்.  மூன்று பெண் பிள்ளைகளில் முதல் பெண் திருமணத்திற்கு தயாராகி நிற்கிறாள். அடுத்தவள் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டு வேலைநேரம் போக படித்துக்கொண்டு இருக்கிறாள். கடைக்குட்டியான சிறுமி, அத்தையால் அடித்து உதைக்கப்பட்டு கால் முடமாகி கிடக்கிறாள். இவர்களுக்கு அப்புலு ஏன் உதவி செய்ய நினைக்கிறான் என்பதுதான் படத்தின் கிளைக்

ஆதவற்றோரை கலைப்பாதையில் திருப்பும் கனடா நாட்டு பெண்மணி! - பைலிஸ் நோவக்

படம்
  பைலிஸ் நோவக் ஆதரவற்ற இளைஞர்களுக்கு கலைக்கல்வி இலவசம்!  1984ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பைலிஸ் நோவக், வாலஸ்பர்க்கிலிருந்து டொரன்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அவருக்கு திரைப்பட நடிகராகும் ஆசை இருந்தது. ஆனால் நாடக மேடை அனுபவம் இல்லாததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வீடற்ற சிறுவர்கள் தங்கியிருக்கும் மையத்தில் தன்னார்வலராக பணிபுரியத் தொடங்கினார். அங்குள்ள சிறுவர்களுக்கு,  கலைத்திறன் பயிற்சிகளை வழங்கத் தொடங்கினார். இதுவே இன்று அவரது முக்கிய அடையாளமாகும்.  1996ஆம் ஆண்டு நோவக்கும், நாடக கலைஞரான சூ கோஹென் ஆகிய இருவரும் இணைந்து ஸ்கெட்ச் வொர்க்கிங் ஆர்ட்ஸ் (Sketch working arts) என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பு வீடற்ற சிறுவர்களுக்கு (16-29 வயது) கலைத்திறன் பயிற்சியை இலவசமாக வழங்குகிறது.  ”கிரியேட்டிவிட்டியான பயிற்சிகள், வீடற்ற சிறுவர்களுக்கு உலகில் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. கருத்தை சுதந்திரமாக கூற உதவும் கலைகள் தான் என்னை இயக்குகின்றன” என்றார் பைலிஸ் நோவக். இவர், பெருந்தொற்று காலத்திலும் ஆன்லைனில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கலைப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.  Picture this -Phyll

கிராம மக்களுக்கு சுகாதாரமான நீர் தேவை - நீதா படேல்

படம்
  சுகாதாரமான நீருக்காக போராடும் பெண் செயல்பாட்டாளர்! இந்தியாவில் நீரைப் பாதுகாக்கும் பல்வேறு தொன்மையான முறைகள்  உண்டு. தற்போது குடிநீர் பற்றாக்குறை தீவிரமாக எழத் தொடங்க, தொன்மையான நீர் சேகரிப்பு முறைகள் நடைமுறைக்கு வரத்தொடங்கியுள்ளன. இவற்றை பிரசாரம் செய்பவர்களில் ஒருவர்தான், குஜராத்தைச் சேர்ந்த நீதா படேல்.  குஜராத்தில் பழங்குடிகள் வாழும் மாவட்டங்களாக டங் (Dang), நர்மதா (Narmada), பாருச்  (Bharuch)ஆகியவை கடுமையான நீர்பஞ்ச பாதிப்பு கொண்டவை. இந்த மாவட்டங்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவை. இங்கு, நீர்  மேம்பாட்டு பணிகளுக்காக  நீதா படேல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். இதன் விளைவாக, பழங்குடி மாவட்டங்களிலுள்ள 51 கிராமங்களில் வாழும் 30 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது.  பழங்குடி கிராமங்களில், மக்களின் ஆதரவுடன் குடிநீருக்கான கைபம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  தினசரி 90 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, பல்வேறு கிராமங்களுக்கு நீதா சென்றுவருகிறார். அங்குள்ள பெண்களுக்கு நீர் சேமிப்பு பற்றி பிரசாரம் செய்கிறார். இதுபற்றி பஞ்சாயத்துகளில்,  பேசும்படி கோரி வருகிறார். இதன்மூலம்

தொழிலில் ஜெயிக்க உங்களை நீங்கள் நம்ப வேண்டும் - குஷ்னம் அவாரி, நிறுவனர், பனாசே அகாடமி

படம்
  குஷ்னம் அவாரி நிறுவனர், பனாசே அகாடமி விமானப் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. எப்படி விண்ணப்பிப்பது, வேலைக்கான பயிற்சி, தகுதிகள் என்ன என்பதை இன்னுமே அறியாமல் தடுமாறுகிறார்கள். இதைத்தான் குஷ்னம் அவாரி தனது பனாசே அகாடமி மூலம் தீர்த்து வருகிறார். பயிற்சி கொடுப்பதோடு வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறார்.  அவாரியின் செயல்பாடுகள் காரணமாக நான்கு ஆண்டுகளாக 2016 தொடங்கி 2019 வரையில் சிறந்த கல்வி நிறுவனம் என்ற விருதைப் பெற்றுள்ளது. மேற்கு இந்தியாவில் விமான பணிப்பெண்களை உருவாக்கும் கல்வி நிறுவனமாக மாணவர்களின் ஸ்டூண்ட் சாய்ஸ் விருதையும் பெற்றுள்ளது.  இந்த துறையில் சாதிக்க உங்களுக்கு ஊக்கம் கொடுத்த நபர் யார்? எனது அம்மா ஜரின் பாஸ்லா தான் எனக்கு ஊக்கமளிக்கும் நபர். அவர், மானேக்ஜி கூப்பர் மேல்நிலைப்பள்ளியில் தலைவராக இருக்கிறார். கல்வியாளரும் கூட. இளைஞர்களுக்கு ஊக்கமளித்து முன்னேற்றம் அளிப்பதில் அவர்தான் எனக்கு ரோல்மாடல். எனது கணவர் பெர்சி அவாரி எப்போதும் நான் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னுடன் நின்றிருக்கிறார். எனக்கு இன்று வரை ஆதரவும் ஊக்கமும் கொடு

கல்வியால் பெண்களை முன்னேற்றுவதே லட்சியம் - சுதா வர்க்கீஸ்

படம்
  தீண்டப்படாத சாதி பெண்களை முன்னேற்றும் கல்வி! கேரளத்தில்  வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் சுதா. பள்ளிமாணவியாக இருந்த போது சுதா,  நாளிதழ் ஒன்றில் வெளியான புகைப்படத்தைப் பார்த்தார்.  பீகாரின் சாலையோரத்தில் உள்ள குடிசையின் புகைப்படம் அது.  ஏழை மக்களின் குடியிருப்பு என பார்க்கும் யாரும் புரிந்துகொள்ளலாம். அந்த நொடியில் பள்ளி மாணவியான சுதா தீர்மானித்தார். நான் ஏழை மக்களின் நிலையை மாற்றுவேன் என உறுதியெடுத்துக்கொண்டார். பெற்றோர் ஏற்காதபோதும், சமூகசேவையைச் செய்ய கன்னியாஸ்த்ரீ வாழ்க்கையை ஏற்றார். பிறகு, இப்பணியில் திருப்தி இல்லாமல், தனது பணியை விட்டுவிலகினார். நேராக பீகாருக்குச் சென்றார்.  சிறுவயதில், அவர் புகைப்படத்தில் பார்த்த குடிசை, முசாகர் (Musahar)எனும் மக்களுக்குச் சொந்தமானது.  தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட, முசாகர் மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவும் கிடைக்கவில்லை. இச்சமுதாய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவே, 2005ஆம் ஆண்டு ‘பிரேர்னா ’(Prerna)என்ற பெயரில் தானே பள்ளியைத் தொடங்கினார்.   சுதாவின் கல்வி உதவிகளால், 5 ஆயிரம் பெண் குழந்தைகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். பீகாரில் முசாகர் இனப

அரசுபள்ளி மாணவர்களை வாசிக்க ஊக்கப்படுத்தும் நடமாடும் நூலகம்!

படம்
  வாசிப்பை வளர்க்கும் நூலகம்!  திருவண்ணாமலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆடையூர் பஞ்சாயத்து பள்ளி. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரம் ஆனதும் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.  பைக்கில் வரும் நூலகருக்காகத்தான் மாணவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். நூலகர்,நடமாடும் நூலகம் என எழுதப்பட்ட பெட்டியிலிருந்து நூல்களை எடுத்து மாணவர்களுக்குக் கொடுக்கிறார். 15 நாட்களுக்குள்  நூல்களை படித்துவிட்டு திரும்ப கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.  மாணவர்களுக்கு, இதற்கென தனி அடையாள அட்டை உண்டு.  குறிப்பிட்ட கால அளவில் பத்து நூல்களை படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக ஒரு நூலை வழங்குகிறார் நூலகர்.  இந்த நடமாடும் நூலக திட்டத்தை அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருவது, ரெஜன்பூக் இந்தியா பௌண்டேஷன் (Regenboog India Foundation). இதனை நிறுவி நடத்தி வருபவர், மதன் மோகன்.  2006ஆம் ஆண்டு மதன் மோகன், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பணியில், மனநிறைவு கிடைக்காததால் , வேலையை விட்டுவிலகி சமூகப் பணிகளைச் செய்ய நினைத்தார்.   அப்போது திருவண்ணாமலையில் இடைநிற்கும் கிராம மாணவர்களின் எண்ணிக்

ஊடகங்களைப் பயன்படுத்தி நீதியின் முதுகெலும்பை முறிக்கும் அதிகார அரசியல்- ஜனகனமண -2022

படம்
  ஜனகனமண பிரிதிவிராஜ் சுகுமாரன் (நடிப்பும், தயாரிப்பும்) மம்தா மோகன் தாஸ்  இசை - ஜேக்ஸ் பிஜாய்    கல்லூரி பேராசிரியர் சபா, வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்படுகிறார். அவர் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணியாற்றி வருகிறார். அவரின் இரங்கல் கூட்டத்தை கூட  அதன் தலைவர் விட்டேத்தியாக நடத்துவதோடு அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் பல்கலைக்கழகம் முழுக்க போர்க்களமாகிறது. காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாக்க ரணகளமாகிறது சூழ்நிலை. இதை விசாரிக்க ஏசிபி சாஜன் குமார் நியமிக்கப்படுகிறார். சபா என்ற பெண்ணைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.  படத்தின் நாயகன் சாஜன் குமாராக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடுதான். தொடக்க காட்சியில் பிரிதிவிராஜை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அதற்குப் பிறகு தொடரும் காட்சிகளில் சபாவின் வழக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, பிரிதிவிராஜ் திரையில் வருகிறார். முதல்முறை வந்தது போல இளமையாக அல்ல. மத்திய வயது ஆளாக, ஒரு கால் செயலிழந்தவராக , வழக்குரைஞராக இருக்கிறார். படத்திற்கு இரண்டாவது பாகத்திற்கான முன்னோட்டத்தையும் கொடுத்து விட

இந்தி சினிமாக்களில் விலைமாதுக்களின் நிலை!

படம்
  பாலியல் தொழிலாளிகளையும் மதிக்கவேண்டும். அவர்கள் செய்வதும் தொழில்தான். விலைமாதுக்களையும் கௌரவமாக நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கௌரவம் நிஜமாக கிடைக்குமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் திரைப்படங்களில் விலைமாதுக்களை காட்டிய சினிமாக்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். இது இந்தி சினிமாக்கள் மட்டுமே.  பேகம் ஜான்  பீரியட் படம்தான். முகேஷ் பட் தயாரிக்க 2017இல் வெளியான படம். சுதந்திரத்திற்கு பிறகான விலைமாதுக்களின் நிலையைப் பேசிய படம் இது. வித்யாபாலன் தான் விலைமாதுக்களின் தலைவி. வங்காளப் படமான ராஜ்கஹினி என்ற படத்தின் இந்தி ரீமேக் இது.  மண்டி  1983ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் உருவாக்கிய படம்தான் மண்டி. படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா படேல், நஸ்ரூதின் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதன் மூலம் உருது சிறுகதை. ஆனந்தி என்ற சிறுகதையை எழுதியவர் குலாம் அப்பாஸ். விபச்சாரத்தை நடத்துபவராக தலைவியா ஷபனா ஆஸ்மி நடித்திருந்தார். இவரது கட்டுப்பாட்டில் உள்ளவருக்கு உருவாகும்  இன்னொரு உறவால் ஏற்படும் பாதிப்புகள்தான் கதை. காமம், உடல்ரீதியான மகிழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிய பேசிய வகையில் முக்கியமான படம். 1984ஆம் ஆண்டு மண்டி ப

பாடநூல்களில் ஜனநாயகத்தன்மை குறைகிறது! - கர்நாடக அரசு பாடநூல்களில் ஏற்படும் புதிய மாற்றம்

படம்
  எழுத்தாளர் தேவனூர் மகாதேவா கர்நாடகத்தில் உள்ள 10ஆம் வகுப்பு பாட நூல்களில் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு புதிய எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும்போல இதை எப்படி நீக்கலாம், அவருடையதை எப்படி சேர்க்கலாம் என விவாதங்கள் கிளம்பியுள்ளன. இப்போது கன்னடம் மற்றும் சமூக அறிவியல் நூல்களில் இடம்பெற்ற எழுத்தாளர்களைப் பார்ப்போம்.  எழுத்தாளர்களின் படைப்புகளுக்கான மதிப்பீட்டு கமிட்டி தலைவர் எழுத்தாளர் ரோகித் சக்ரதீர்த்தா.  பானன்ஜே கோவிந்தாச்சார்யா (சுகான்சனா உபதேஷா) சமஸ்கிருத கல்வியாளர். இவர் 2020ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். 13ஆம் நூற்றாண்டு த த்துவ அறிஞர் ஸ்ரீ மாதவாச்சாரியாவின் பல்வேறு படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருத இலக்கிய படைப்புகளை மொழியாக்கம்செய்து கன்னட இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். இந்த வகையில் 150 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கன்னடர்கள், துளுவர்கள் ஆகிய இனக்குழுக்களுக்கு இடையில் பிரபலமானவை. புராணங்களை பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் கைதேர்ந்த எழுத்தாளுமை.  சதாவதானி கணேஷ் (ஷ்ரேஷ்ட பாரதிய சின்டனேகலு) இவர் சமஸ்கிருத கவிஞர், கல்வியாளர்