இடுகைகள்

நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் தத்துவம்

படம்
அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பது எங்கள் கொள்கை! இந்திய அரசு பொதுத்துறைகளில் முதலீடு செய்வதைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை முதலில் அமல்படுத்த உள்ளது பெட்ரோலியத்துறையில்தான். இத்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதானை சந்தித்து இதுபற்றி பேசினோம். பெட்ரோலியத்துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பின் எதற்கு அதனை விற்க நினைக்கிறீர்கள்? இந்திய அரசு எந்த வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட விரும்பவில்லை. எங்கள் பிரதமர் இதனை சுலோகனாக சொல்லவில்லை. வழிகாட்டுதல் நெறிமுறையாக வைத்திருக்கிறார். இதுவே பாஜக கட்சியின் தத்துவமும் கூட.  நாங்கள் இதை நம்புகிறோம். இந்நாட்டிலுள்ள எளிம மனிதனுக்கும் நலத்திட்டங்கள் சென்று சேரவேண்டுமே? நிறுவனத்தை அரசு நடத்தினால் என்ன, தனியார் நடத்தினால் என்ன? மக்களுக்கு நன்மை கிடைப்பதுதானே முக்கியம். நாங்கள் இந்த விற்பனையை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் நடத்த உள்ளோம். அரசுக்கு அதிக வருவாய் தரும் துறை எண்ணெய் துறை. அதிலிருந்து அரசு தன் பங்கை விலக்கிக் கொள்வது ஏன்? அரசு மக்களுக்கு வேலைவாய்ப்புகள

தெலுங்குமொழியை தலித்துகள் காப்பாற்ற வேண்டியதில்லை!

படம்
தலித் மாணவர்கள்தான் தெலுங்கு மொழியை காப்பாற்ற வேண்டுமா என்ன? அண்மையில் ஆந்திர அரசு, தம் பள்ளிகளில் பயிற்று மொழியாக தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவதாக அறிவித்தது. உடனே அதுதொடர்பான சர்ச்சைகளும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. இதற்காக கல்வி அமைச்சர் ஆதிமுலப்பு சுரேஷ் அவர்களை சந்தித்தோம். அனைத்து பள்ளிகளிலம் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக கொண்டுவந்தால் தெலுங்கு மொழி பாதிப்புக்கு உள்ளாகாதா? ஆந்திரத்தில் 98.5 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியையைப் படிக்கின்றனர். பதினொரு லட்சம் மாணவர்கள் சக்சஸ் பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளிகளில்  ஆங்கில வழிக் கல்வியை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர கிராம பகுதிகளில் உள்ள பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆங்கில வழி கல்வியால் பயன்பெறுவார்கள்.  நாளை இவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு கல்வி உதவ வேண்டுமே? தாய்மொழியான தெலுங்கு மொழி அழிக்கப்படுகிறது என்று விமர்சிப்பவர்களை நாங்கள் கண்டுகொள்ளப்போவதில்லை. அதனைக் காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளை நாங்கள் வேறுவழிகளில் செய்வோம். இதற்கு பயந்து தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலத்தை ப

நான் மோடியை நம்புகிறேன்! - சுப்ரான்சு சௌத்ரி

படம்
சுப்ரான்சு சௌத்ரி முன்னாள் பிபிசி ஊடக செய்தியாளர். மத்திய இந்தியாவில் மாவோயிச தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு பாடுபட்டு, கூகுள் டிஜிட்டல் ஆக்டிவிசம் என்ற விருதைப் பெற்றுள்ளார். அண்மையில் வாட்ஸ்அப் கண்காணிப்புக்கு உட்பட்ட நபர்களில் இவரும் உள்ளதாக செய்திகள் அடிபட்டன. இந்திய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை அழித்துவிடுவார் என நம்புகிறீர்களா? ஆமாம். ஏன் மோடியால் முடியாது? சத்தீஸ்கர் மாநில முதல்வர் கூட எங்கள் ஆப்பின் செயல்பாட்டை கவனிக்கவில்லை. ஆனால் இவர் கவனித்தார். ஊடகங்களில் புல்டூ பற்றிக் கேள்விப்பட்டு பிற மாநிலங்களின் கிராம ப் புறங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். விவசாயிகளின் செயல்முறைகளுக்கு இதனை பயன்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி எனக்கு பெரும் ஊக்கம் தந்தவர் என்பதை நான் மறுக்கப்போவதில்லை. மாவோயிச தீவிரவாதிகள் நிறைந்த பகுதிகளில் எப்படி செயல்படுகிறீர்கள்? நான் சத்தீஸ்கரில் பிறந்து  வளர்ந்தவன். அங்குள்ள நிலம், காடு மீதான உரிமைகளை சுயமாக பெற்றிருப்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்கள் அதனை இழந்துவிட்டதாக மாயை ஏற்படுத்தி  வன்முறை வழி

அரசின் இயந்திரத்தில் தேசியவாத இஞ்சின் மட்டுமே இயங்குகிறது!

படம்
நேர்காணல் வளர்ச்சி இல்லாத தேசியவாதம் கேலிக்கூத்தானது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மாநிலங்கள்அவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும்  தன் மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக முன் வைக்க கூடியவர். அவரிடம் பேசினோம். தற்போதைய பொருளாதார மந்தநிலையைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? பாஜக அரசு, தன் பட்ஜெட்டின்போதே மக்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. இப்போது கார்ப்பரேட் நிறுவன வரிவிதிப்பைக் குறைத்தபின்னும் மக்களின் எதிர்ப்பு குறையவில்லை. இந்த வரி குறைப்பு ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்தால்தான் பலன் கொடுக்கும். இதுவும் கூட யூகம்தான். மக்களின் தேவை என்பது இன்று குறைந்துவிட்டது. முதலீடு, ஏற்றுமதி ஆகியவை ஏறத்தாழ தேக்கமடைந்துவிட்டன. அரசின் வாகனத்திலுள்ள ஒரே இயக்கம் கொண்ட இஞ்சின் தேசியவாதம் மட்டுமே. அதுவும் கூட பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. காங்கிரஸ் இதற்கு மாற்றான தீர்வாக என்ன வைத்திருக்கிறது? காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்கு ஆதரவான பொருளாதார முடிவுகளை எடுத்து வந்தது. அரசிடம் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள்

பெண்களை குரான் புறக்கணிக்கவில்லை! - எழுத்தாளர் ஜியா அஸ் சலாம்

படம்
நேர்காணல் குரான் பெண்களை ஒதுக்கவில்லை! பெண்களை மசூதிக்குள் பொதுவாக அனுமதிப்பதில்லை. அவர்களுக்கும் ஆண்களுக்கும் தனி இடங்கள் அங்கு உண்டு. இதுபற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாய் அஸ் சலாம் வுமன் இன் மஸ்ஜித்: எ க்வெஸ்ட் ஃபார் ஜஸ்டிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். அவரிடம் பேசினோம். நீதிமன்றம், பெண்களை சபரிமலை போன்ற இடங்களில் அனுமதித்து உள்ளது. அதை நீங்கள் ஏற்கிறீர்களா? இது சரி, சரி அல்ல என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. மதம் பெண்களை அனுமதிக்கும்போது, அதனை ஆண்கள் ஏன் தடுக்கிறார்கள் என்பதே எனது கேள்வி. நீதிமன்றம் குரான் மற்றும் அரசியல் அமைப்பு சட்டப்படி பெண்களை அனுமதிப்பு ஏற்புடையதே. இந்தியாவில் வரலாற்று ரீதியாக பெண்களின் உரிமைகளை எப்படி வரையறுக்கிறீர்கள்.  சுல்தான்கள் காலத்தில் இங்குள்ள பெண்கள் சிறப்பான கல்வித்தகுதியை அடைந்தனர். காரணம், அங்கு ஏராளமான மதரசாக்கள் செயல்பட்டு வந்தன. மேலும், அடிமையாக வேலை செய்து வந்த பெண்கள் கூட குரானைப் படிக்கும் அளவு கல்வி அறிவு பெற்றிருந்தனர். மொகலாயர்கள் காலத்தில் பெண்கள் மதரசாக்களையும், மசூதிகளையும் கட்டியது வரலாறு மூலம் தெரிய வர

காமராஜரின் வழியில் ரஜினி பயணிக்கிறார் - தமிழருவி மணியன்!

படம்
காமராஜரைப் போலத்தான் ரஜினியும்! ரசிகர்களைவிட ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விரும்புவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியாகத்தானே இருக்கமுடியும். எத்தனை மீம்ஸ்கள் கிண்டல் என தாளித்தாலும் ரஜினி மீது தீராத காதல் கொண்டு அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிஆர்ஓவாக வேலை பார்ப்பவர், மணியன். திரைப்படம் வரும் சமயம் ரஜினியின் அரசியல் விஷயங்கள் பேசப்படும். இப்படியே இருபது ஆண்டுகள் போய்விட்டன. இதுபற்றி அவரிடம் பேசினோம். ரஜினியோடு உங்களுடைய உறவு எப்படிப்பட்டது? நண்பர், ஆலோசகர், உதவியாளர் என எப்படி வகைப்படுத்துவீர்கள்? நான் கடந்த 32 மாதங்களாக அவரோடு தொடர்பில் இருக்கிறேன். அவருடைய ஆலோசகர் என்று கூறமுடியாது. நான் அவருடைய நண்பர் என்று கூறவே விரும்புகிறேன். அவருக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை. நீங்களே சொல்லுங்கள். ரஜினி எப்போதுதான் அரசியலுக்கு வருவார்? அடுத்த ஆண்டு ஏப்ரல் – செப்டம்பருக்குள் ரஜினி தன் கட்சியை முறைப்படி அறிவிப்பார். உடனே திமுக, அதிமுக போல பூத் கமிட்டிக்கான ஆலோசனைகளைத் தொடங்குவார். 234 தொகுதிகளுக்கான உறுப்பினர்களை விரைவில் அறிவிப்பார். தற்போது 80 சதவீத வேலைகள் முடிந்

உண்மையைப் பேசினால் உங்களை ஓரம் கட்டிவிடுவார்கள் -ஜூவாலா கட்டா

படம்
ஜூவாலா கட்டா, பாட்மின்டன் விளையாட்டு வீரர். காமன்வெல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் இவர். தெலங்கானாவில் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, நான்கு பேரால் கற்பழித்து எரித்து கொல்லப்பட்டார் என்று போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அவர்களின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க மக்கள், ஊடகங்கள் அழுத்தம் கொடுத்தனர். இதன்விளைவாக அவர்கள் தப்பித்துச் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை போலீசார் அடுத்த நாள் ஊடகங்களிடம் கொடுத்தனர். போலீசாரின் நடவடிக்கையை மக்கள் ஆதரித்தாலும், மனித உரிமைக்கு எதிரானது. நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இந்த என்கவுன்டர் அழித்துவிட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கருத்து தெரிவித்திருந்தனர். இதுபற்றி ஜூவாலா கட்டாவும் கருத்து தெரிவித்திருந்தார். இதுபோன்ற விவகாரங்களில் விளையாட்டு வீரர் பெரும்பாலும் கருத்து தெரிவிப்பதில்லை. என்ன காரணம்? இந்தியாவில் கருத்துகளை வெளிப்படையாக சொன்னால் அவர்கள் குறிவைக்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள். என்னைப் பாருங்கள். எனக்கு தவறு என்று தோன்றும் விஷயங்களில் நான் தைரியமாக பேசுவேன்.

சுகாதாரத்தில் சாதனை செய்த முடிச்சூர் ஊராட்சி!

படம்
தாம்பரம் அருகேயுள்ள புறநகர்ப்பகுதி என்பதால், ஆண்டுதோறும் முடிச்சூர் நவீனமான பகுதியாக வளர்ந்துவருகிறது. இரண்டு நடுநிலைப் பள்ளிகள், மூன்று அங்கன்வாடிகள் கொண்ட 12  சதுர கி.மீ. பரப்பளவுள்ள ஊர் இது. இந்த ஊரின் முக்கியமான சிறப்பு, கழிவுகளை மேலாண்மை செய்யும் திறன்தான். இதற்கான சிந்தனைகளை மக்களுடன் கலந்துபேசி சாதித்தவர், முன்னாள் ஊராட்சித் தலைவரான தாமோதரன். அவரிடம் பேசினோம். ”2006இல் நான் பஞ்சாயத்துத் தலைவரானபோது, திடக்கழிவு மேலாண்மை பற்றி மாவட்ட அளவில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். இதில் நான் ஆர்வம்காட்ட, மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் உதவினர். அப்போது, நாங்கள் மாட்டு வண்டியைப் பயன்படுத்தி வந்தோம்.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குப்பைகளை உரமாக்குவது பற்றி எங்களுக்குத் தெரியாது. குப்பைகளை வண்டிகளில் எடுத்து வந்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டி வந்தோம். மாவட்ட ஆட்சியர் எங்களது செயலால் ஏற்படும் மாசுபாடு பற்றி விளக்கினார். இதுபற்றிய கழிவு மேலாண்மைப் பயிற்சியையும் அளித்தனர். இப்பயிற்சிக்குப் பிறகு, குப்பைகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை எங்கள் ஊரில் செயற்ப

நேர்மையான அதிகாரிகளை பறையர்களைப் போல நடத்துகிறது இந்திய அரசு!

படம்
நேர்காணல் தினேஷ் தாக்கூர் அமெரிக்காவில் ரான்பாக்சி மீது குற்றச்சாட்டு எழுப்பி அதனை அபராதம் கட்ட வைத்திருக்கிறீர்கள். இந்தியாவில் இது சாத்தியம் என நினைக்கிறீர்களா? அமெரிக்காவில் உள்ளது போன்ற சட்டங்கள் இந்தியாவில் இருந்தால் சாத்தியமாகலாம். இடுப்பெலும்பு மாற்று சாதனங்களை தரம் குறைந்து ரான்பாக்சி தயாரித்து விற்றது. இது காசு கொடுத்து வாங்கும் மக்களை ஏமாற்றுவதல்லவா? அதற்காகத்தான் நான் அந்த நிறுவனத்தை குற்றம் சாட்டினேன். அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு சட்டங்கள் பற்றி பேசுவது ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசுவது போல. ரான்பாக்சியின் ஊழியர் என்ற லேபிளில் இருந்துகொண்டு எப்படி குற்றச்சாட்டுகளை சுமத்தினீர்கள். அரசின் சட்டப்பாதுகாப்பு எனக்கு கிடைத்தது. குற்றச்சாட்டை எழுப்பியவர் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. அதனால்தான் என்னால் சுதந்திரமாக சில விஷயங்களை பேச முடிந்தது. இந்தியாவில் புகார் கொடுப்பவர்களை காப்பாற்றுவார்கள் என நினைக்கிறீர்களா? அசோக் கெம்கா என்ற ஐஏஎஸ் அதிகாரி (ஹரியானா), உத்தர்காண்டைச் சேர்ந்த சஞ்சய் சதுர்வேதி என்ற அதிகாரிகளை இந்திய அரசு, பறையர்

பலுசிஸ்தானும் காஷ்மீரும் ஒன்று கிடையாது! - பஹூம்தாக் புக்தி

படம்
நேர்காணல் நவாப் பஹூம்தாக் புக்தி ஸ்வீடனில் உள்ள பலுசிஸ்தான் ரிபப்ளிக் கட்சித் தலைவர். இவர், 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பலுசிஸ்தான் ஆளுநர் நவாப் அக்பர் புக்தியின் பேரன் ஆவார்.  பலுசிஸ்தானில் நிலைமை எப்படியிருக்கிறது? நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. பாக். ராணுவம் அங்கு அரசியல் தலைவர்களை கைது செய்வதும், சித்திரவதை செய்வதும் இயல்பான விஷயங்களாகி உள்ளது. அவர்களையும் மக்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து மனித உரிமை மீறல்களை செய்வது அங்கு புதிய சட்டமாக மாறியிருக்கிறது. அங்கு கொல்லப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்.  தினசரி காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மேற்குலகைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள எவையும் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் கூறும் தகவல்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களுடைய அமைப்பின் ஆராய்ச்சிப்படி 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். அதில் எட்டாயிரம் பேர்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். இது

இந்தியா பிராந்திய ஒப்பந்தத்தில் இணைவது நல்லது - அரவிந்த் பனகரியா

படம்
நேர்காணல் அரவிந்த் பனகரியா இந்தியா, பிராந்தி பொருளாதார ஒப்பந்த த்திலிருந்து விலகியுள்ளது. அது பற்றி உங்களது கருத்து? பிரதமர் மோடிதான் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தாரே. நாம் நினைத்த து போல பல்வேறு விதிமுறைகளை மாற்ற வேண்டும். மேலும் இந்தியா இதில் இடம்பெறவில்லை என்பது தற்காலிக முடிவுதான். இந்த ஒப்பந்த த்திலுள்ள பல்வேறு முடிவுகள் மாற்றப்படுவது காலத்தின் கட்டாயமும் கூட. இந்தியா இந்த வர்த்தகத்தில் இடம்பெறும் என திடமாக நம்புகிறீர்கள் போல? இந்த ஒப்பந்த த்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளுக்குள் இலவசமாக அல்லது குறைந்த வரிகளுடன் வணிகம் செய்கின்றன. ஆனால் இந்த முறை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகிறது. அதேசமயம் 300 கோடி மக்களைக் கொண்ட நாடுகளின் ஒப்பந்தம் இது. உலக உற்பத்தியில் 20 சதவீதம் இந்த நாடுகள்தான் கொண்டுள்ளன. இதிலிருந்து வெகுநாட்கள் இந்தியா விலகியும் நிற்கமுடியாது. பிரதமரை அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள்? ஆம். பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் தனது துணிச்சலை நிரூபித்துள்ளார். ஆசிய நாடுகளின் ஒப்பந்தத்தில் இந்தியா நிச்சயம்

இணையம் என்பது ஜனநாயக பூர்வமாக மக்களுக்கானதே! - வின்ட் செர்ஃப்

படம்
நேர்காணல்  வின்ட் செர்ஃப் இணையம்  அமெரிக்காவின் ராணுவத்தின் மூலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. இணைய இணைப்பின் மூலம்தான் வெப் உருவாக்கப்பட்டது. எனவே இதில் குழம்பி நிற்கவேண்டாம். இப்போது இணையத்தின் மூலம்தான் நாம் அனைத்து விஷயங்களையும் பெறுகிறோம். வாழ்கிறோம். செய்திகளை பகிர்கிறோம். அலுவலகப் பணிகளையும் பலர் இனி க்ளவுட்டில்தான் செய்யமுடியும். மென்பொருள் நிறுவனங்கள் அதற்கான சேவைகளையும் தொடங்கிவிட்டனர். எனவே கணினி என்பது டைப் செய்வதற்கான கீபோர்டு, சுட்டுவதற்கான மௌஸ் மட்டும் கொண்டிருந்தால் போதுமானது. வன்தகடு என்பது மிக குறைவாக இருந்தாலே போதும். அனைத்தையும் நாம் இணையத்தில் சேமித்துக் கொள்ள முடியும். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வின்ட் செர்ஃப், படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 26. தகவல் பாக்கெட்டுகள் பற்றிய இவரும், ராபர்ட் கானும் சேர்ந்து உருவாக்கினர். டிசிபி , ஐபி எனும் புரோட்டோகால்களை உருவாக்கி ஆட்கள் இவர்கள். இன்றும் கூகுளுக்கான ஆலோசகர்களாக உள்ளனர். உங்களை இணையத்தின் தந்தை என்கிறார்களே? உண்மையில் இப்படி அழைக்கப்படுவது தற்செயலாக நடந்த நிகழ்

இந்தியப் படங்களுக்கு ரஷ்யாவில் மவுசு ஜாஸ்தி! - ஆலெக் அவ்தீவ்

படம்
நேர்காணல் ஆலெக் என் அவ்தீவ், ரஷ்ய ஃபெடரேஷன் தலைவர் சென்னையிலுள்ள ரஷ்யத் தூதரகம் தன் செயற்பாடுகளாக என்னென்ன விஷயங்களைச் செய்துவருகிறது? இந்தியாவும் ரஷ்யாவும் பல்லாண்டுகளாக நெருக்கமான தொடர்புகளிலுள்ள நாடுகள். அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகிய விஷயங்களிலும் நாங்கள் இந்தியாவுடன் ஒத்திசைவாக உள்ளோம். கலாசாரத்தின் பக்கம் வருவோம். நாங்கள் 1980களில் படித்த பல்வேறு நூல்கள் ரஷ்ய அரசால் மாஸ்கோவில் அச்சிடப்பட்டது. எப்படி இதனைச் செய்தீர்கள்? முன்னேற்றப் பதிப்பகம் மற்றும் ராதுகா பதிப்பக நூல்களைக் குறிப்பிடுகிறீர்கள். உண்மைதான் அப்பதிப்பகங்கள் இன்று இல்லை என்றாலும் அன்று நிறைய நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து கொண்டு வந்தனர். இன்றும் மொழிபெயர்ப்பதற்கான ஏராளமான இலக்கியச் செல்வம் ரஷ்யாவில் உள்ளது. உள்நாட்டிலும் அவை விலை குறைவாக கிடைக்க காரணம், இன்றும் அரசு அவற்றுக்கு நிதியுதவி அளித்து வருவதுதான். நாங்கள் உயர்கல்வியில் படித்த லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செகாவ், மிகாய்ல் சொலோவ்கோவ் ஆகியோரின் நாவல்களில் காட்டிய கலாசாரம் இன்று ரஷ்யாவில் இல்லை அப்படித்தானே? கருத்தியல் என்பது காலம

பகோடா விற்பது பொருளாதாரத்தை முன்னேற்றாது - அபிஜித் பானர்ஜி

படம்
newzz நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ சீனா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு விஷயங்களில். இதனை எப்படி பார்க்கிறீர்கள். சீனா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உற்பத்தி துறை சார்ந்து பணிபுரியத் தொடங்கிவிட்டது. இந்தியா நிலம், சேவைத்துறை சார்ந்த விற்பனையை சாதனையாக பார்க்கிறது. இந்தியாவின் போக்கு, இயல்பாகவே வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. ஆனால் சீனர்கள் தீவிரமாக உற்பத்தி துறை சார்ந்து உழைத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் உலக மக்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு தரமுடிகிறது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். அதில் உங்கள் கருத்தென்ன? இந்தியாவில் மிக குறைந்த பகுதி மக்களே வறுமையில் உள்ளனர். அனைவரும் அல்ல. மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை அரசு ரீதியான கொள்கைத் திட்டங்களாக உள்ளன. இவையும் பயன் அளிக்கின்றன. ஆனால் எந்த நோக்குமின்றி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. என்ன பிரயோஜனம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இதனை மதிப்பிட்டு குற

இந்தியர்களுக்கு வர்க்க மனப்பான்மை அதிகம்! - அபிஜித் - எஸ்தர் டஃப்லோ

படம்
நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ நோபல் பரிசு பெற்றிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் உங்களது ஆராய்ச்சி இதனால் சிறப்பு பெறுமா? எங்களது திட்டமே ஆர்சிடி முறையை அனைவரும் செய்யவேண்டும் என்பதுதான். நாங்கள் இந்த விருது பெற்றுள்ளதின் மூலம் எங்கள் குழுவில் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பெரும் ஊக்கம் பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் இது சிறந்த விஷயங்களைச் செய்யும் என நம்புகிறோம். இந்திய அரசு உங்களை அழைத்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? நாங்கள் கட்சி சார்ந்து எங்கள் ஆய்வுகளை செய்வதில்லை. நாங்கள் குஜராத் மாநில அரசு, மேற்கு வங்க அரசு ஆகியோருடனும் ஆய்வுகளைச்செய்து வருகிறோம். மத்திய அரசின் ஆதரவு என்று நாங்கள் தனியாக எதையும் கேட்கவில்லை. மாநிலங்களில் ஆய்வு செய்வதற்கான விஷயம் ஏதேனும் ஈர்த்தால் நாங்கள் ஆய்வுகளைச் செய்கிறோம். இதில் அரசுகளிடம் நாங்கள் வேண்டுவது ஆர்வத்தையும் நிறைய பொறுமையை மட்டுமே. எஸ்தர் - எங்களுடைய வறுமை ஒழிப்பு செயல்பாட்டு மையத்தின் ஊழியர்கள் பிரமாதமாக வேலை பார்த்து வருகிறார்கள். எங்களுக்கு கிடைத்த பரிசு அவர்களுக்கும் ஊக்கம் தருவதோடு அவர்களின் ப

ஸ்வச் பாரத் என்பது மாயக்கனவு! - பெசவாடா வில்சன்

படம்
பெசவாடா வில்சன் ஸ்வச் பாரத் கூட கழிவறைகளை கட்டுவதாகவே இருக்கிறது. ஆனால் அதனை இன்றுவரை சுத்தம் செய்பவர்களைப் பற்றி ஏதும் பேசுவதில்லையே? சாதியும் சுத்தமும் இந்தியாவில் பின்னிப்பிணைந்துள்ளது. எனவேதான் கழிவறைகளை கட்டுபவர்கள், அதனை சுத்தம் செய்பவர்களை பற்றி மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி பேசக்கூட அவர்கள் தயாராக இல்லை. அரசு இதனைக் கவனத்தில் கொள்வது தலித்துகளின் மரணங்களைக் குறைக்கும். அரசு, மனிதக்கழிவு அள்ளுபவர்கள் என்று 54,130 பேர்களை அடையாளம் கண்டிருக்கிறதே? அரசு கூறும் கணக்கு உலர் கழிவறைகளைச் சுத்தம் செய்பவர்களை மட்டுமே. பாதாளச்சாக்கடை மற்றும் கழிவுநீர் டேங்குகளில் இறங்கி சுத்தப்படுத்துபவர்களை அரசு இன்றுவரையும் கண்டுகொள்வதில்லை. உச்சநீதிமன்றம் கூறும் கருத்துகளை அரசு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வெறும் கருத்தாக சொல்வதை விட்டு குறிப்பிட்ட காலக்கெடு விதித்தால் நன்றாக இருக்கும். சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிர்களும் பலியாகாமல் இருக்கும். உண்மையில் எங்களுக்குத் தேவை நீதிமன்றங்களின் அனுதாபம் அல்ல. உறுதியான உயிர்களின் பலிகளைத் தடுக்கும் நடவடிக்கை மட்

மலம் கழிப்பவர்களைக் கொன்றால் மாற்றம் வந்துவிடாது! - பெசவாடா வில்சன்!

படம்
நேர்காணல் பெசவாடா வில்சன் பிரதமர் சுத்தம் தொடர்பான கோல்கீப்பர் ஆப் குளோபல் கோல்ஸ் விருது வென்றிருக்கிறார். அதைப்பற்றிச் சொல்லுங்கள்.  விருது பற்றி சொல்ல ஏதுமில்லை. திறந்தவெளியில் மலம் கழிப்பது மிகப்பெரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. அது தவறு என்பதில் எனக்கும் உடன்பாடுதான்.  2011 சென்சஸ் படி  1.8 மில்லியன் பேர் வீடற்று தெருக்களில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அரசு வாழ்வதற்கான என்ன வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது. திறந்தவெளி கழிவறை என்று நாட்டு மக்களை அடித்துக்கொல்லலாம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? தண்ணீர் மற்றும் சுகாதாரத்துறைக்கான செயலர் பரமேஸ்வரன் ஐயர், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கழிவறை மூலம் நூறு சதவீத சுத்தம் என்கிறாரே? அவர் கூறும் கழிவறைகளை அத்திட்டத்தின்படி அமைப்பதில்லை. மேலும் அவர் டெல்லியிலுள்ள பாதாள சாக்கடையில் இறங்கிப் பார்க்கட்டும். அந்த இடம் எப்படி இருக்கிறது என்று அப்போதுதான் தெரியும். வெளிப்புறத்தில் மலம் கழிப்பவர்களை எச்சரித்தார்கள், விசிலடித்து பயம் கொள்ளச் செய்தார்கள் என்ற வேகத்தில் இன்று கொலையும் செய்கிறார்கள். இத்திட்டத்தின்

ஓஷோ சொன்னால் என் தலையைக் கூட வெட்டக்கொடுத்திருப்பேன்! -மா.ஆ.ஷீலா

படம்
ஓஷோ சொன்னால் தலையைக்கூட வெட்டக் கொடுத்திருப்பேன்! மா ஆனந்த் ஷீலா 1981 இல் ஓஷோ ஆசிரமம் பூனாவிலிருந்து எப்படி மாற்றப்பட்டது? அப்போது இந்தியாவில் அவசரகாலநிலை அமலில் இருந்தது. நாங்கள் பக்தர்களுக்காக நிலம் வாங்கும் முனைப்பில் இருந்தோம் அதற்கு அரசு தடைவிதித்து விட்டது. ஆசிரமத்தில் இருந்த வெளிநாட்டுக்காரர்கள், இந்தியர்கள் என அனைவரும் பகவானோடு தங்கியிருக்க விரும்பினார்கள். அவர்களைத் தங்க வைக்க ஆசிரமம் வேண்டுமே? தோட்டத்தின் பாதையில் கூட பல நாட்கள் நான் படுத்து தூங்கியுள்ளேன். காரணம் பகவானின் மீது கொண்ட அன்புதான். பின்னர் ஒரு நாள் பகவானிடம், இந்த நெருக்கடி நிலையைப் பொறுக்க முடியவில்லை. நாம் அமெரிக்காவுச்செல்வோம். அங்கு உங்களுக்கான இடத்தை தேடுவோம் என்றேன். அவரும் அந்த யோசனையை உடனே ஏற்றார். பாஸ்போர்ட் வாங்குவதற்கு ஏற்பாடு செய் என்றார். ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு ஓஷோ உங்களை வேசி என்று அழைத்தார் என்கிறார்கள். அப்போது உங்களுக்கு எப்படி இருந்தது? அப்போது எனக்கு ஏற்பட்ட சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் விலகியதால் ஏற்பட்ட விரக்தியால் அவர் அப்படி கூறியிருக்கலாம

சூழலைக் காப்பாற்றுவது பாஜக அரசுதான்!

படம்
மினி நேர்காணல் பிரகாஷ் ஜாவேட்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் பஞ்ச பூதங்களை காப்போம் என்று கூறினீர்கள். எப்படி? நீரைக் காக்க ஜெய்சக்தி எனும் துறையைத் தொடங்கியுள்ளோம். உலக மக்கள் தொகையில் இந்தியர்கள் 17 சதவீதமும், விலங்குகள் உயிரினங்கள் அளவில் 20 சதவீதமும் உள்ளது. மழையில் இந்தியா 4 சதவீதம் மட்டுமே பெறுகிறது. டெல்லியில் ஏற்படும் காற்று மாசு பிரச்னையைக் குறைக்க முயற்சித்து வருகிறோம். நிலங்களைப் பாதுகாக்க 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க உள்ளோம். பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காற்றின் தரத்தை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளாரே? அவர் செய்யாத விஷயத்திற்கு புகழைத் தேடுகிறார். நாங்கள் இதுபற்றி சரியான புள்ளிவிவரங்களுடன் அறிக்கையை வெளியிடுவோம். அப்போது அவர் கூறிய பொய் வெட்டவெளிச்சமாகும். வெப்பமயமாதல் இந்தியாவை பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லையா? ஆயிரம் ஆண்டுகளாக பூமி இதுபோல சூழலைச் சந்தித்து வருகிறது. நாம் உயிர்வாழவில்லையா?  இந்தியாவின் நடைமுறைக்கு ஏற்ப ச

உணவு வழியாக மறுகாலனியாதிக்கம் -உஷார்!

படம்
நேர்காணல் கரன் ஹாப்மன் குளிர்பானங்கள், உணவு ஆகியவை நம் மனநிலை மாற்றங்களில் தாக்கம் ஏற்படுத்துகிறதா? உணவு, குளிர்பானங்கள் துறை என்பது வெகு வேகமாக வளர்ந்து வரும் துறை. இவர்களின் ஆவேசமான விளம்பர முறை சத்துகள் இல்லாத குப்பை உணவை சிறந்தது என மக்களை நம்ப வைக்கிறது. இப்படித்தான் உலகமெங்கும் ஒரே வகை உணவு, குளிர்பானங்களை விற்கிறார்கள். இவர்களின் ஒரே குறி, குழந்தைகள்தான். இதனால்தான் கவர்ச்சிகரமான விளம்பரங்களை போட்டு அவர்களை பொருட்களை வாங்க வைக்கிறார்கள். அவர்களை குப்பை உணவுகளை வாங்க வைத்து உடல்பருமன் பிரச்னையில் சிக்க வைக்கிறார்கள். நாம் சாப்பிடும் உணவுகளில் என்னதான் பிரச்னை? இதில் நடவடிக்கை எடுக்க நாடுகள் ஏன் தயங்குகின்றன.  துரித உணவுகள், தெருவில் விற்கப்படும் உணவுகள், கார்பன் சேர்க்கப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள், இனிப்புகள் ஆகியவை பிரச்னைக்குரிய உணவு ரகங்கள். அதிக கலோரி உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துகள் இல்லாத இந்த உணவுகள் உலகளவில் உடல்பருமன் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை உடலில் அதிகளவு சர்க்கரை சேர்வதால்