இடுகைகள்

பிளாஸ்டிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அழியும் நிலையிலுள்ள மொழியை காப்பாற்ற வேண்டிய தேவை! - பதில் சொல்லுங்க ப்ரோ

படம்
            வீடியோ சாட்டிங் செய்யும்போது மூளையில் என்ன நடக்கிறது ? பொதுவாக ஒருவருடன் நடைபெறும் உரையாடலில் 80 சதவீதம் முகத்திலுள்ள உணர்ச்சிகள் மூலமாகத்தான் நடக்கிறது . ஒருவருடன் பேசும்போது புன்னகை , இமைகளை உயர்த்துவது , உதடுகளில் ஏற்படும் மாற்றம் , கண்கள் பெரிதாவது ஆகிய விஷயங்கள் நடக்கும் . 2013 இல் நடைபெற்ற ஆய்வில் , வீடியோ சாட்டிங்கில் ஒருவர் அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது தெரியவந்துள்ளது . இதனை சைபர்சைக்காலஜி பத்திரிகை வெளியிட்டுள்ளது . பொதுவாக பேசுவது , குறுஞ்செய்திகளை அனுப்புவது ஆகியவற்றை விட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இதில் அதிகம் நடக்கிறது . நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் எங்கே போகின்றன ? பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் 8 சதவீதம் மட்டுமே மறுசுழற்சியாகின்றன . மற்றவை எல்லாம் கழிவாகவே தேங்குகின்றன . அமெரிக்காவில் இருந்து சீன நிறுவனங்கள் 7 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்து வருகின்றன . இதனால் அமெரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதில்லை . சீன நிறுவனங்கள் இதனை இருபது ஆண்டுகளாக செய்து வருகின்றன . 20

பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது!

படம்
        பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் எந்தளவு அதிகரித்துள்ளது என்பதை டேட்டா மூலம் பார்ப்போம். ஆண்டுதோறும் மாநகராட்சி மூலம் உருவாகும் திடக்கழிவு அளவு 55-65 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு 3.3 மில்லியன் டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 43% தனிநபர் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 11கி.கி. தினசரி இந்தியாவில் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 609 டன்கள் கோவிட் -19 பாதிப்பில் உருவாகும் கூடுதல் மருத்துவக் கழிவு 101 டன்கள்(தினசரி) நாடுதோறும் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 840 டன் (தினசரி)   உலகம் முழுவதும் 1950-2015 வரையில் உருவான பிளாஸ்டிக் உற்பத்தியின் அளவு 8.3 பில்லியன் டன் 1950-2015 காலகட்டத்தில் உருவான பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 6.3 பில்லியன் டன். பிளாஸ்டிக் கழிவுகளில் 9 சதவீதம் மட்டும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.  79 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தில் கழிவாக கொட்டப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா  

பிஸ்லரியின் வடிவமைப்பு விற்பனை முறைகளை மாற்றி சந்தையில் வென்ற பெண்மணி - அஞ்சனா கோஷ்

படம்
        அஞ்சனா கோஷ்     அஞ்சனா கோஷ் விற்பனைப் பிரிவுத் தலைவர், பிஸ்லரி இன்டர்நேஷ்னல் கோஷ் உருவாக்கிய ஹர் பானி கி பாட்டில் பிஸ்லரி நஹி என்ற விளம்பரம் நாடெங்கும் பிஸ்லரிக்கான மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. இவரின் நிறுவனம் இத்துறையில் 14 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது. இதோடு நிற்காமல் குளிர்பானங்களை மூன்றை தனித்துவமாக உருவாக்கி விற்று வருகின்றனர். சமூக பொறுப்புணர்வு திட்டமாக கோஷ் உருவாக்கிய பாட்டில்ஸ் ஃபார் சேஞ்ச் என்ற திட்டம் மூலம் மும்பையில் மட்டும் 4800 கோடி டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டன.   இரும்பு தொழிலில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர், 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிஸ்லரி நிறுவனத்தில் இணைந்தார். அவரது முயற்சியால்தான் நீலநிறமாக இருந்த பிஸ்லரி இன்று பச்சை நிறமாக ஒட்டகம் கூட தேடிப்பிடித்து குடிக்கும் குடிநீராக உள்ளது. சந்தையில் உள்ள பிற நிறுவனங்களை தூக்கி ஓரம் வீசிவிட்டு பிஸ்லரி முக்கியத்துவம் பெற விற்பனையில் அஞ்சனா கோஷ் செய்த பல மாற்றங்கள் முக்கியக் காரணங்களாக அமைந்தன.

15ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு!

படம்
சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் பிரின்டிங் இயந்திரம் - ஜோகன்னஸ் குடன்பர்க் இவரே பிரின்டிங் மெஷினைக் கண்டுபிடித்தவர். ஜெர்மனியைச் சேர்ந்த இந்த கண்டுபிடிப்பாளர் 1439ஆம் ஆண்டு நகர்ந்து இயங்கும்படியான அச்சு மெஷினை கண்டுபிடித்து சாதித்தார். இவரை அச்சுத்துறையின் பிதாமகன் என்று அழைக்கின்றனர். காகிதங்களை உள்ளே வைத்து கையால் மெஷினை இயக்கி அதில் அச்சிடும் முறையை இவர் உருவாக்கினார். 15ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக குடன்பர்க் பிரின்டிங் இயந்திரமே கருதப்பட்டது. பின்னாளில் இதனை பல கண்டுபிடிப்பாளர்கள் மேம்படுத்தினர். டெலஸ்கோப் - 1609 இக்கருவி இல்லையென்றால் நாம் விண்வெளியில் உள்ள பல்வேறு கோள்களைக் கண்டுபிடித்திருக்க முடியாது. இதனை 1611ஆம் ஆண்டு கிரேக்க கணிதவியலாளர் ஜியோவன்னி டெமிசியானி என்பவர் கண்டுபிடித்தார். இதனை கலிலீயோ கலிலீ முழுமை செய்தார். நவீன விண்வெளி தொலைநோக்கிகளை உருவாக்கியதில் முக்கிய பங்களிப்பு செய்தவர் ஐசக் நியூட்டன். நீராவி இஞ்சின் - 1712 இன்றும் கூட உலகில் மின்சாரம் தயாரிக்க எண்பது சதவீத நீராவி இயந்திரங்கள் பயன்படுகின்றன.  பல்வேறு பொருட்களை உற்பத்தி செ

இயற்கையில் சிதையும் பிளாஸ்டிக்கு மதிப்பு கிடையாதா?

படம்
giphy உலக நாடுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் கடுமையான சிக்கலில் சிக்கி வருகின்றனர். காரணம் என்ன? வாங்க பார்ப்போம். பிளாஸ்டிக் என்பது என்ன? ஏராளமான கார்பன் மூலக்கூறுகள் இணைந்ததுதான். அதில் பாலிதீன், எத்திலீன் ஆகிய மூலக்கூறுகளின் இணைப்புதான் பிளாஸ்டிக் பொருட்களை உறுதியானதாகவும், வலுவாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறது. ஆனால் இந்த இணைப்பை பாக்டீரியா உண்ணும்படியான தன்மையில் மாற்றினால் என்னாகும்? அரிசியும் அதில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுக்கொன்று தொடர்பானது. அவற்றை நீங்கள் பிரிக்கலாம். ஆனால் அதன் தன்மை மாறும் அல்லவா? அதைத்தான் இங்கு கூறவருகிறோம். பாலிமர் எனும் பிளாஸ்டிக்குக்கான மூலப்பொருட்கள் பெட்ரோல், டீசல் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான். பிளாஸ்டிக் பொருட்களின் வெற்றி அவை வெப்பம், ஈரப்பதம், வறட்சியான சூழ்நிலை ஆகியவற்றிலும் பொருட்களை கெடாமல் வைத்திருப்பதுதான். அதுவும் பிளாஸ்டிக் பிற பொருட்களை விட சல்லீசு ரேட்டில் கிடைக்கும். ஆனால் இப்போது பாக்டீரியா உண்ணும்படியான பொருட்களைக் கொண்டு  பிள

சூழல் போராளிகள் அறிமுகம்! பசுமை முதல் கழிவுகள் வரை

படம்
கல்பனா மணிவண்ணன் சூழலின் மீது நமக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம் இந்த நாயகர்கள்தான் நம் வாழ்க்கை மீது  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். அதற்காக இவர்கள் ஏமாற்றங்களையும் ஏளனங்களையும் எதிர்கொள்ளாதவர்களல்ல. அதிலிருந்து மீண்டு தன் லட்சியத்தை இமயமாக்கி அதையும் சாதித்து இருப்பவர்கள். இப்போது சூழல் போராளிகளில் சிலரைச் சந்திக்கலாம் வாங்க. கல்பனா மணிவண்ணன் 44 கல்பனா சென்னையைச் சேர்ந்தவர். பரபரப்பான சாலையில் வசிப்பவர். இவர் உயிரியல் வகுப்பு எடுக்கும் ஆசிரியையும் கூடத்தான். வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை சாப்பிட்டு வெறுத்துப்போனவர், அவற்றைத் தவிர்க்க இன்று கல்பவிரிக்ஷா என்ற பண்ணையில் தன் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை விளைவித்து வருகிறார். நாம் பயன்படுத்தும் தரை துடைப்பான்கள், கழிப்பறை துடைப்பான்கள் ஆகியவற்றில் கடுமையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை நம் குடலிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இதனால் நம் உடல் நலம் கெடுகிறது என்று பேசுகிறார் கல்பனா. இவர் காய்கறிகளோடு ஆர்கானிக் முறையில் வீட்டின் தரை துடைப்பான்களையும் தயாரித்து வருகிறார். சமீரா சதீஜா 46 சமீர

தாய்லாந்தில் பிளாஸ்டிக் தடை! - 2021இல் நாடு முழுக்க அமலாகிறது

படம்
giphy தாய்லாந்தில் இந்த புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் தடை அமலாகிறது. மேலும் இந்த தடை தற்போது சிறப்பங்காடிகளுக்கும், அடுத்த ஆண்டு பிற சிறு கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. தாய்லாந்திலுள்ள ஆமைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரிகள் பிளாஸ்டிக்கை தவறுதலாக உண்டு செரிக்க முடியாமல் இறந்து போயின. மேலும் கடலில் கூடும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அந்நாட்டு அரசு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் எறிவதில் உலகளவில் எங்கள் நாடு முன்னர் மூன்றாவது இடத்தில் இருந்தது. இன்று மக்களின் ஆதரவினால் ஐந்து மாதங்களில் நாங்கள் பத்தாவது இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பெருமையாக பேசுகிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் சில்பா ஆர்ச்சா. பிளாஸ்டிக் தடை என்றால் என்ன நடக்கும்? அதேதான். நீங்கள் துணிப்பை கொண்டுபோய் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது கடைக்கார ர்கள் கொடுக்கும் பையை காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் தற்போது தாய்லாந்து நிலைமை. கடந்த ஆண்டில் 5,765 டன்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பயன்பாடு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இன்னும் கிராம பகுதிகளில

புத்தாண்டில் மாறுவது என்னென்ன விஷயங்கள்?

படம்
giphy புத்தாண்டுகளுக்கு வாழ்த்துகள் சொல்லி காஜூ கத்திலி கொடுத்தால் போதுமா? இந்த ஆண்டில் நிறைய விஷயங்கள் மாறுகின்றன. ரயில் கட்டண உயர்வு புத்தாண்டு பரிசாக மத்திய அரசு நமக்கு அளித்துள்ளது. வேறு என்னென்ன விஷயங்கள் மாறுகின்றன என்று பார்ப்போம். சேமிப்புக்கணக்குக்கு காசு கிடையாது. சேமிப்பு கணக்கிலிருந்து நெப்ட் முறையில் யாருக்கு பணம் அனுப்பினாலும் சேவைக்கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனை இணையம் அல்லது மொபைல் மூலம் செய்து சோதித்துப் பாருங்கள். பாதுகாப்பு முக்கியம் தொழிலதிபர்களுக்கு லட்சக்கணக்கில் வாரிக்கொடுத்துவிட்டு வாராக்கடன் கணக்கு எழுதியதில் பெரிய வங்கி எஸ்பிஐ. தற்போது வாடிக்கையாளர்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்தால் கூட ஓடிபி கேட்கிறார்கள் இது இரவு 8மணியிலிருந்து காலை 8 மணி வரை அமலாகுமாம். உடையும் விண்டோஸ் விண்டோஸ் போன்களை உலகில் அரிதான மனிதர்களே தில்லாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் இதில் வாட்ஸ் அப் இயங்காது. பார்த்துக்கொள்ளுங்கள். உருப்படியான ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் வாங்குவது உங்களது சாமர்த்தியம். வலுக்கட்டாயமாக டிஜிட்டல்

நைஜீரியாவில் பெருகும் திடக்கழிவுகள்! - பெட் பாட்டில் அபாயம்!

படம்
giphy பிளாஸ்டிக் பயங்கரம்! உலகளவில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின், லாகோஸில் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நகரங்களில் ஒன்றான லாகோஸில், திடக்கழிவுகள் அதிகரித்து வருகின்றன. இதனை உலகளவில் ஒப்பிடும்போது, குறைவு (2016படி) என்றாலும் ஆப்பிரிக்க நகரங்களில் மோசமான கட்டமைப்பு காரணமாக கழிவுத் தேக்கத்தில் முன்னிலை பெறுகிறது. இரண்டு கோடிப் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்டது லாகோஸ் நகரம். நைஜீரியாவில் பயன்படுத்தப்படும் 1,50,000 மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் பொருட்களில் பாதியளவு லாகோஸ் நகரில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஐந்தில் நான்கு சதவீதப் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதனால் சிறியளவிலான மழைவெள்ளத்திற்கே, நகரம் முழுக்க தத்தளிக்க தொடங்கிவிடுகிறது. பயன்படுத்திவிட்டு வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கடைகளை அடைத்துக்கொள்வதே இதற்கு முக்கியக் காரணம். அங்குள்ள முன்னணி உணவுத்தயாரிப்பு, குளிர்பான நிறுவனங்களும் பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இத்தனைக்கும் கடந்த ஆண்டு நைஜீரியா பயன்படுத்திய ப

சீனாவில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்! - சீனாவின் நடவடிக்கை என்ன?

படம்
giphy.com நவ.11 ஆம் தேதி உலக அளவில் சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. தினம் என்று வந்தால் யாருக்கு கொண்டாட்டம்? ஆம். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்குத்தானே? 2009ஆம் ஆண்டிலிருந்து அலிபாபா நிறுவனம், இதனை மிகப்பெரிய விற்பனைக்கான நாளாக பார்க்கிறது. அப்படித்தான் தனது வலைத்தளத்தில் விளம்பரம் செய்கிறது. 2015 ஆம் ஆண்டு 140 மில்லியன் பார்சல்களாக இருந்த விற்பனை, 2017ஆம் ஆண்டு 331  மில்லியன் பார்சல்களாக உயர்ந்துள்ளது. நான்கில் ஒருவர் என ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு கூறியது சீனாவில் மட்டும் என நினைவில் கொள்ளுங்கள். இதனை எப்படி கற்பனை செய்யலாம் தெரியுமா? அமெரிக்க நாட்டிலுள்ள ஒட்டுமொத்த குடிமகன்களும் ஆளுக்கொரு பார்சல் வாங்கியுள்ளதாக கருதலாம். விற்பனை, சாதனை என மார்தட்டிக்கொள்வது சரிதான். ஆனால், இதனால் ஆண்டுதோறும் 9.4 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன என்று க்ரீன்பீஸ் அமைப்பு மற்றும் ஃப்ரீ டு பிளாஸ்டிக் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு சிங்கிள்ஸ் தினத்தில் அலிபாபா நிறுவனம் 22 பில்லியன் டாலர்களுக்கு வணிகம் ச

இந்தியாவில் பிளாஸ்டிக் தடை! - என்ன ஆகும் மருத்துவத்துறை?

படம்
பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வருமா? ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மத்திய அரசின் தடை உத்தரவு, இந்திய மருத்துவத்துறையில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.  அக்டோபர் 2 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சிரிஞ்சுகள், ரத்தப்பைகள், மருந்து பாட்டில்கள் என மருத்துவத்துறையில் பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களே நிறைந்து உள்ளன.  இத்துறை சார்ந்த தயாரிப்பாளர்கள் இவற்றை உடனடியாக எப்படி மாற்றுவது என திகைப்பில் உள்ளனர். ”நாங்கள் இப்போது மருந்து வாங்கும் மக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வழங்குவதில்லை. ஆனால் தற்போதுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக கண்ணாடி பாட்டில்கள் தயாரிப்பு சரிவர நடைபெறவில்லை” என்கிறார் ஹைதராபாத்தைச்சேர்ந்த மருந்துகள் மற்றும் வேதிப்பொருட்கள் சங்க தலைவரான ரமேஷ் குப்தா.  பருவகால நோய்கள் தொடங்கும் என்பதால் மருந்து தயாரிப்பாளர்கள் ஆறுமாதங்களுக்கு முன்னதாகவே மருந்துகளைத் தயாரிக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனால் அரசின் பிளாஸ்டிக் தடைக்கு முன்பாகவே சிரிஞ்சுகள், மருந்து பா

டீக்கப்பில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்!

படம்
மெக்கில் பல்கலைக்கழகம் நாம் பயன்படுத்தும் டீ பேக்குகளில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் வெளியாகியுள்ளன. டீ பேக்குகளில் பதினாறு மைக்ரோகிராம் இருப்பதுதான் இன்று சர்ச்சையாகி உள்ளது. இதில் மட்டும்தான் என்றில்லை. முன்பே மீன், தேன், பீர் போன்றவற்றில் பிளாஸ்டிக் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருந்தனர். தற்போது தேயிலையின் முறை. டீபேக்குகளில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்குகள் உங்களைக் கொன்றுவிடும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால் அவை உயிரினங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படும்தும் என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நதாலி டுஃபென்ஜி. டீ பேக்குகளில் சிலிகான் பேக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சிலிகான் செய்யப்பயன்படுத்தும் வேதிப்பொருட்கள்தான் உடலை குலைக்கின்றன. பாலி எத்திலின் டெரப்திலின் எனும் பொருள் இது. 2017 ஆம் ஆண்டு இந்தியா பயன்படுத்தும் டீ பேக்குகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உள்ளது. இதற்கடுத்து சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையில் டீ குடிக்கின்றனர். இந்தியாவில் இதுதொடர்பான தகவல்கள் இன்னும் முறையாக சேகரிக்கப்படவில்லை. நன்றி: டவுன் டு எர்த்

சூழலைக் காப்பாற்றுவது பாஜக அரசுதான்!

படம்
மினி நேர்காணல் பிரகாஷ் ஜாவேட்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் பஞ்ச பூதங்களை காப்போம் என்று கூறினீர்கள். எப்படி? நீரைக் காக்க ஜெய்சக்தி எனும் துறையைத் தொடங்கியுள்ளோம். உலக மக்கள் தொகையில் இந்தியர்கள் 17 சதவீதமும், விலங்குகள் உயிரினங்கள் அளவில் 20 சதவீதமும் உள்ளது. மழையில் இந்தியா 4 சதவீதம் மட்டுமே பெறுகிறது. டெல்லியில் ஏற்படும் காற்று மாசு பிரச்னையைக் குறைக்க முயற்சித்து வருகிறோம். நிலங்களைப் பாதுகாக்க 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க உள்ளோம். பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காற்றின் தரத்தை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளாரே? அவர் செய்யாத விஷயத்திற்கு புகழைத் தேடுகிறார். நாங்கள் இதுபற்றி சரியான புள்ளிவிவரங்களுடன் அறிக்கையை வெளியிடுவோம். அப்போது அவர் கூறிய பொய் வெட்டவெளிச்சமாகும். வெப்பமயமாதல் இந்தியாவை பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லையா? ஆயிரம் ஆண்டுகளாக பூமி இதுபோல சூழலைச் சந்தித்து வருகிறது. நாம் உயிர்வாழவில்லையா?  இந்தியாவின் நடைமுறைக்கு ஏற்ப ச

பிளாஸ்டிக்கில் உணவுப்பொருட்கள்! - ஆபத்தா?

படம்
பிளாஸ்டிக்கின் சேர்மானத்தில் நீக்கமற கலந்துள்ள பொருள் பிஸ்பெனால் - பிபிஏ. தற்போது உணவுப்பொருட்கள் மற்றும் நீர் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்கும் பிளாஸ்டிக்குகளில் பிஸ்பெனால் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதிலும் ஆபத்து இல்லாமல் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில்,  பிஸ்பெனால் எஸ் மற்றும் பிஸ்பெனால் எஃப் எனும் இரு பொருட்கள் உள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும் என ஜர்னல் ஆஃப் தி எண்டோகிரைன் சொசைட்டி இதழ் கூறியுள்ளது. பிபிஏக்கும் மேற்சொன்ன இருபொருட்களுக்குமான அமைப்பு பெரிதும் வேறுபடவில்லை. இவை பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் மற்றும் பிற பொருட்களில் காணப்படுகின்றன. எண்டோகிரைன் சொசைட்டி பத்திரிகை 2012 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பிபிஏ வேதிப்பொருள் குழந்தைகளுக்கு உடல் பருமனை ஏற்படுத்துவதாக கண்டுபிடித்து கூறியிருந்தது. பிபிஎஸ், பிபிஎஃப் ஆகிய பொருட்கள் உடல் பருமனை நேரடியாக அதிகரிப்பதில்லை. இவை உடல் பருமனால் அவதிப்படுபவர்களை பாதிக்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. இதனால் பிபிஏக்கு மாற்று இல்லையா என வேதனைப்பட அவசியமில்லை. அம

குப்பையில் காசு! - இந்தோனேஷியா அவலம்!

படம்
இந்தோனேஷியாவைச் சேர்ந்த பான்குன் என்ற கிராமம், அங்கு கொட்டப்படும் குப்பைகளின் மூலமே விவசாயத்தில் வரும் வருமானத்தை விட அதிகம் சம்பாதித்து வருகிறது. வீட்டின் கதவைத் திறந்தால் டன் கணக்கிலான குப்பைதான் வரவேற்கும். எப்படி லாபம் பார்த்தாலும், குப்பை குப்பைதானே எப்படி சமாளிக்கிறார்கள்? சுப்ரியாடி என்பவர் குப்பைகளைக் கொட்டுவதற்காகவே விவசாயம் செய்யும் தன் நிலத்தை பயன்படுத்தி வருகிறார். நான் முன்பு இங்கு விவசாயம்தான் செய்து வந்தேன். ஆனால் அதைவிட வாராவாரம் இங்கு பிளாஸ்டிக் குப்பைகளில் வருமானம் கிடைக்கிறது என்று புன்னகைக்கிறார். சொல்லும்போதே குப்பை லாரி அவரது நிலத்தில் பிளாஸ்டிக்குகளைக் கொட்ட வருகிறது. அதனை ஒழுங்கு செய்யும் பணியில் சுப்ரியாடி ஈடுபடுகிறார். தற்போது இந்த கிராமத்தில் நான்கு காகித ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை வெளிநாட்டிலிருந்து காகிதங்களை இறக்குமதி செய்து, தொழிற்சாலைகளுக்கான அட்டைப்ப்பெட்டிகளை உற்பத்தி செய்து அளிக்கின்றன. இந்தோனேஷியாவிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் இருக்கும் சுரபாயா நகரில் தொழிற்சாலைகள் அமையத்தொடங்கியவுடன் இங்கு விவசாய நிலங்கள் மெல்ல குறையத் தொடங்கி

தினசரி பிளாஸ்டிக் சாப்பிடுகிறோமா?

படம்
நாம் சாப்பிடும் உணவில் பிளாஸ்டிக் உள்ளது. அதன் அளவு வாரத்திற்கு கிரடிட் கார்டு அளவு என்று இது குறித்து வெளியான ஆய்வு குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. உலகளவில் 2 ஆயிரம் சிறு துகள்கள் அளவுக்கு சாப்பிடுகின்றனர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் துகள்களின் எடை வாரத்திற்கு 5 கிராம் என ஆண்டிற்கு 250 கிராம் பிளாடிஸ்க்கை நாம் சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பொதுக்குடிநீர் பைப்புகளில்தான் பெரும்பான்மையான பிளாஸ்டிக் கலப்படம் நிகழ்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதன் அளவு அதிகமாக உள்ளது. உப்பு, மீன், பீர் ஆகியவற்றில் இந்த பிளாஸ்டிக் கலப்பு அபரிமிதமாக உள்ளது. இந்த ஆய்வு நாம் கவனிக்க வேண்டிய விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. எனவே நாடுகள் உடனடியாக மக்கள் பிளாஸ்டிக் கலப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவ வேண்டும் என்று கூறுகிறார் உலக வைல்ட் ஃபன் உலக இயக்குநர் மார்கோ லாம்பெர்டினி. இந்த ஆராய்ச்சியை தவ பழனிச்சாமி செய்துள்ளார். இந்த அறிக்க

உருகும் ஆர்க்டிக் வெளியாகும் நச்சு!

படம்
ஆர்க்டிக் பகுதி, வெப்பமயமாதலால் உருகிவருவதை டிவியிலும் நாளிதழ்களிலும் பார்த்திருப்பீர்கள். இதன் விளைவாக, அணுக்கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிலிருந்து நச்சுகள் வெளியாகி நீர்ப்பரப்பில் கலக்கத் தொடங்கியுள்ளன. 2100 ஆம் ஆண்டுக்குள் கரிம எரிபொருட்கள் விளைவாக ஆர்க்டிக் பகுதி பனிக்கட்டிகள் முழுவதும் கரையும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, அனைத்து இயற்கை நிகழ்ச்சிகளும் மாறி நிகழும் வாய்ப்புள்ளது. மேலும் பசுமை இல்ல வாயுக்களின் அளவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில்தான் உள்ளது. உலகளாவிய ஆராய்ச்சிக்குழுக்கள் பனி உருகி வரும் வேகத்தை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் வெளியாகும் கார்பன் அளவை கணித்து அதனைக் குறைக்க முடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர் வுட்ஸ் ஹோல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் சூ நடாலி கூறியுள்ளார். நன்றி: ஃப்யூச்சரிசம்

பிளாஸ்டிக்கை என்ன செய்யலாம்?

படம்
கடலில் பெருகியுள்ள பிளாஸ்டிக்குகளை சேகரித்தாலும் அதனை என்னசெய்வது என்ற குழப்பம் அனைவருக்குள்ளும் உள்ளது. தற்போது பிளாஸ்டிக்கை திரும்ப கடலுக்குள்ளே பயன்படுத்தலாம் என மாற்றி யோசித்துள்ளது தேசிய கடல்சார் ஆராய்ச்சியகம்(NCCR).  பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை உருக்கி செயற்கையான பாறை போன்ற பொருட்களாக்க வேண்டும். பின்னர், அதனை நீர்ப்பாசி போன்றவற்றின் வாழிடமாக்கி பயன்படுத்தலாம். இதனால், அழியும் நிலைகளிலுள்ள பவளப்பாறைகளைக் காக்கலாம் என்கிறது ஆராய்ச்சியாளர் கூட்டம். பிளாஸ்டிக்குகளை முழுமையாக மாற்ற முடியாது. ஆனால் ஆராய்ச்சி வழியாக கண்டுபிடித்த சில விஷயங்களை சோதித்து களப்பணியில் இதனைச் செய்யலாம் என்கிறார் மேற்சொன்ன அமைப்பின் இயக்குநர் எம்வி ரமணமூர்த்தி. கடல் ஆராய்ச்சியில் பயன்படும் வலை, கயிறு, ரப்பர் டயர்கள் ஆகியவை நீர்ப்பாசிகளுக்கான வாழிடமாக இருக்க உதவும். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆறு லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கடலில் ஒதுங்குகிறது. 2016 -17 காலகட்டத்தில் மட்டும் பிளாஸ்டிக்குகளால் பவளப்பாறைகள் 16 சதவீதம் அழிந்துள்ளன. பல்வேறு கழிவுப்பொருட்களால் 23 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மறுசுழற்சிக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?

படம்
மறுசுழற்சி என்றவுடன் சூழலியலாளர்கள் மகிழ்ந்துபோவார்கள். ஆனால் அம்முயற்சி எளிதில் கைகூடாது என்பதுதான் சோகம். அதற்கு தடையாக நிற்பது சிறப்பங்காடி ஆட்கள்தான். பிளாஸ்டிக் பை தராவிட்டால் சூழல் பிரச்னைகள் குறைந்துவிடுமா இல்லை என்பதே நிஜம். லேஸ், குர்குரே உள்ளிட்ட பாலீதின் பைகள் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரக பைகள் இவைகள் எப்படி மண்ணில் செரிமானம் ஆகும் என்கிறார் மறுசுழற்சி சங்கத் தலைவர் கிரெய்க் கர்டிஸ். இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இப்போது தலைவலி தொடங்கிவிட்டது. மறுசுழற்சி செய்யும்  பிளாஸ்டிக்குகளுக்கு பிரச்னை இல்லை. ஆனால் அதில் 30 சதவீதம்தான் மறுசுழற்சி செய்யமுடியும் என்ற கண்டுபிடித்தால் அதற்கு ஏராளமாக வரி போட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை பிலிப் ஹாலந்து வெளியிட்டுள்ளார். ஐஸ்லாந்து,  இந்தப் பிரச்னையை சீரியசாக எடுத்துக்கொண்டு 2023 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் இல்லாத தேசத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. டெஸ்கோ, லிடில் ஆகிய சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களும் இதில் மறுசுழற்சிக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளன. ஆண்டுதோறும் இங்கிலாந்தில் 7.3 டன் பி

ரீசைக்கிள் பிளாஸ்டிக் ரெடி! - அன்லிமிடெட் மறுசுழற்சி செய்யலாம்

படம்
ரீசைக்கிள் செய்துகொண்டே இருக்க உதவும் பிளாஸ்டிக்! பிளாஸ்டிக்கை ரீசைக்கிள் செய்யலாம் என்ற ஒரே காரணத்திற்காக அதனைப் பயன்படுத்த முடியாது. பிளாஸ்டிக்கில் பல்வேறு வகைகள் உண்டு. சிலவற்றை மறுசுழற்சி செய்யும் முயற்சி அதனைத் தயாரிக்கும் செலவையே மிஞ்சும். அப்போது என்ன செய்வீர்கள். அமெரிக்க அரசின் ஆற்றல் துறையைச் சேர்ந்த லாரன்ஸ் பெர்க்கிலி தேசிய ஆய்வகம் இதற்காகவே பலமுறை மறுசுழற்சி செய்ய முடியும் தன்மையிலான பிளாஸ்டிக்கை உருவாக்கி உள்ளனர். அனைத்து பிளாஸ்டிக்குகளையும் ரீசைக்கிள் செய்ய முடியாது. அதற்காவே நாங்கள் புதியமுறையில் பிளாஸ்டிக்கின் மூலக்கூறுகளை மாற்றியுள்ளோம் என்கிறார் வேதியியலாளர் பீட்டர் கிறிஸ்டென்சன். பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெயிலிருந்து எடுக்கப்படுவை. இதில் பல்வேறு வேதிப்பொருட்களை சேர்த்து பொருட்களாக த்தயாரிக்கிறார்கள். அப்படித்தான் கேரிக்பேக், உடைகள், ஸ்ட்ராக்கள், நாற்காலிகள் தயாராகின்றன. 750 மிலி பெப்சி ரூ.35 ரூபாய்க்கு என ஆபரில் அசங்காமல் வாங்கும் பெப்சி பெட்களை ரீசைக்கிள் செய்வது மிக கஷ்டம். புதிய பிளாஸ்டிக்கை டிகடோனாமைன் என்று அழைக்கின்றனர்  - டி