இடுகைகள்

வணிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோக்கத்தை தொலைத்தால் அவ்ளோதான்!

படம்
  ஐரோப்பிய பாணி ஹூவெய் அலுவலகம், டாங்குவான் நகரம், சீனா 2019 படி படம் - LA Times தொழிலைத் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தொழில் முதலீடு என்பது பல்வேறு வாய்ப்புகளைக் காட்டும். இதில் சரியாக மனதை கட்டுப்படுத்தி செயல்படாதபோது சூதாட்டத்தில் இந்த முறை இந்தமுறை என அனைத்து பணத்தையும் சூதாடி தொலைப்பது போன்ற சூழல்தான் உருவாகும்.   இதைப்பற்றி ரென், நான் லாஸ் வேகாஸ் நகருக்கு செல்வேன். சூதாட்ட கிளப்புகளுக்கு சென்றால் கூட அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவே செல்வேன். நான் சூதாடியது கிடையாது. அப்படி மனம் விரும்பினாலும் அதை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று சொன்னார்.   சீனாவில் யூடிஸ்டார்காம் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் இருந்தது. அப்போது ஜப்பானில் நடைமுறையில் இருந்த பிஹெச்எஸ் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை வழங்கியது.சீனாவில் பிஹெச்எஸ் தொழில்நுட்பம் புதிது, போட்டி  நிறுவனங்கள் இல்லை ஆகிய காரணங்களால் நன்றாக இயங்கியது. ஆனால் ஆராய்ச்சி, புதுமை இல்லாத காரணத்தால் கிடைத்த லாபம் காலப்போக்கில் குறைந்து பத்தாண்டுகளுக்குள் நிறுவனம் நஷ்டத்தில் வீழ்ந்து மூடப்பட

மயிலாப்பூர் டைம்ஸ் - பொறுப்பு ஏத்துக்கோங்க!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  பொறுப்பு ஏத்துக்கோங்க! எங்கள் அலுவலகத்தில் சக உதவியாசிரியர்களை அடக்கி ஒடுக்க புதிய அதிகாரி ஒருவர் வந்தார். இவரது தீர்மானப்படி அலுவலகமே, மிலிடரில அகாடமிபோல செயல்பட வேண்டும். அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுக்கவேண்டும். அலுவலகத்தில் தூங்கும் நேரம், வாட்ஸ் அப்பில் பிறர் மீது புகார்களை அனுப்பும் நேரம் தவிர மீதி நேரம் இருக்குமே? என்ன செய்வது? உதவி ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பற்றி செமினார் போல பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் கட்டுரை திருத்துவதில் செய்த தவறு பிறருக்கு தெரிய வந்து கேட்டால், அமைதியாகிவிடுவார். அப்போது அவரது முகத்தை பார்க்கவேண்டுமே?  கல்லே கூட முகத்தைப் பார்த்தால் கரைந்துவிடும். இவரது குண வழக்கங்களைப் பார்த்த மூத்த உதவி ஆசிரியர் சிம்பிளாக ஒரு வாக்கியத்தை சொன்னார். மேல இருக்கிறவன நக்கணும். கீழ இருக்கிறவனை எத்தணும். அதுதான் அவன் குணம் என்று சொல்லிவிட்டார்.  ராயப்பேட்டையில் பெரும்பாலும் பிரியாணி சாப்பிட வாங்க என்று அழைக்கும் உணவகங்கள் தான் அதிகம். அதையும் மீறி ஏதாவது உணவகம் இருக்கிறது என்றால் அது, கேரள சேட்டனின் மெஸ், அடுத்து கணேஷ் டிபன் சென்டர். கேரள சேட

ட்விட்டரை கழற்றி மாட்டப்போகும் எலன் மஸ்க்! -அல்டிமேட் திட்டங்கள் என்ன?

படம்
  ட்விட்டரை கைப்பற்றும் எலன் மஸ்க்! கனடாவை பூர்வீகமாக கொண்ட எலன் மஸ்க், அமெரிக்காவில் நம்பிக்கை தரும் தொழிலதிபராக வளர்ந்து வருகிறார். தான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு பெருந்தொற்று காலத்தில் கூட தொழிற்சாலைகளை திறந்துவிட்டார். தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வேண்டுமா வேண்டாமென்று அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நான் இதில் தலையிட முடியாது. என டைம் வார இதழில் துணிச்சல் பேட்டி கொடுத்தார்.  ட்விட்டர் பதிவுகள் மூலமே பங்குச்சந்தையை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவர், எலன் மஸ்க். அதேநேரம் ட்விட்டரில் இவர் பதிவிடும் பல்வேறு பதிவுகள் கடுமையாக சர்ச்சையாவது உண்டு. அதற்காகவே பதிவுகளை இடுகிறாரோ என்றும் கூட பத்திரிகையாளர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். பெரும்பாலான தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும் எரிச்சலூட்டுவதில் எக்ஸ்பர்ட். பத்தாண்டுகளுக்கு அப்பால் பார்த்து அதற்கேற்ப தொழில் நிறுவனங்களை உருவாக்குவது எலனின் ஸ்பெஷல்.  நிறைய புகழ் பாடிவிட்டோம். இப்போது ட்விட்டரில் அடுத்து நடைபெறும் மாற்றங்களை பேசுவோம்.  தொடக்கத்தில் ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவில் தான் இடம்பெறுவதாக கூறப்பட்ட எலன் மஸ

பெண்களை தொழில்முனைவோராக்கும் அங்கிதி போஸ்!

படம்
  அங்கிதி போஸ் அங்கிதி போஸ் தொழில்முனைவோர், ஸில்லிங்கோ 2015ஆம் ஆண்டு. அங்கிதிக்கு வயது 23. அப்போதுதான் தனது வேலையை விட்டு விலகி தனக்கென தனி வணிக நிறுவனத்தைத் தொடங்கினார்.ஸில்லிங்கோ என்பதுதான் அதன் பெயர்.  வணிக நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனம் இது.  சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் வணிக ரீதியான பிரச்னை ஏற்பட்டு வந்த சமயம். பாங்காக் சென்றிருந்தார் அங்கிதி. அங்கு சிறு, குறு வணிகர்கள் தங்களுக்கென இணையநிறுவனங்களே இல்லாமல் வேலை செய்து வந்தனர். அவர்களின் பொருட்களை இணையத்தில் வாங்க முடிந்தால் இன்னும் எளிதாக வருமானத்தை அவர்கள் பெறலாம் என அங்கிதி நினைத்தார்.  இதற்காக துருவ் கபூருடன் சேர்ந்து ஸில்லிங்கோ நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க வணிகர்கள் சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதை கைவிட்டு வேறு நிறுவனங்களை தேடி வந்தனர். இந்த நேரத்தில் தெற்காசியாவில் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வந்தன. ஆன்லைனில் இந்த  நிறுவனங்கள் இருந்தால் எளிதாக வணிக வாய்ப்பை பெற்றிருக்க முடியும். இதற்கான பல்வேறு கட்டமைப்புகளை, வசதிகளை அங்கிதி, வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க தொடங்கினார்.  இந்தோனேஷி

மயிலாப்பூர் டைம்ஸ் - வந்தே ஏமாத்துறோம் - 2

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்   வந்தே ஏமாத்துறோம் அல்டிமேட் லெஜண்ட்ஸ் 2 அலர்ஜி பிரச்னையால் கிழங்குகள், மைதா பொருட்கள் சாப்பிடக்கூடாது என சித்த மருத்துவர் ரெஜூ தீவிரமாக உத்தரவிட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்ற தெரியவில்லை. காரணம், என்னவென்றால் கடைகளுக்கு சென்றாலே அங்கு இருக்கும் பத்து ரூபாய் பிஸ்கெட் தொடங்கி உயரக ப்ரீமியம் தின்பண்டங்கள் வரை மைதாவும், பாமாயிலும்தான் நீக்கமற இருக்கும்.  இந்த நேரத்தில் தான் சரி, ஓட்ஸை சாப்பிட்டு பார்க்கலாமே என்று தோன்றியது. இதற்காக முதன்முறையாக குவாக்கரில் சீசன் மிக்ஸ் உள்ள பாக்கெட்டை 50 ரூபாய்க்கு வாங்கினேன். இருநூறு கிராம் என்று நினைவு.  இதில் மிக்ஸூம், ஓட்ஸூம் அந்தளவு சரியாக ஒன்றாக சேரவில்லை. பரவாயில்லை என்று சமாளித்து சாப்பிட்டேன். அப்புறம் இதற்கு வேறு மாற்றாக பிராண்டைத் தேடும்போது தீயூழாக கிடைத்ததுதான் சஃபோலா ஓட்ஸ். மாரிகோ பெருநிறுவனம்தான் இதன் தாய் நிறுவனம். இவர்கள் பெப்சிகோவை விட திட்டமிட்டு தீர்மானமாக சந்தையில் களமிறங்கியிருந்தனர். பதினைந்து ரூபாய் பாக்கெட்டைத் தான் மார்க்கெட்டில் விற்றனர். அதுபோல பிளெயின் ஓட்ஸூம் உண்டு. கூடவே கெலாக்ஸ் நிறுவனமும் இருந்

கனடாவில் பன்மைத்தன்மையைக் காக்க போராடிவரும் விவசாயிகளின் அமைப்பு!

படம்
  பாரம்பரிய விதைகளைக் காக்கும் விவசாயிகளின் குழு!  நூற்றாண்டுகளுக்கு முன்னர், தனித்துவமான பழங்கள், காய்கறிகளை எளிதாக பெறமுடியும்.  அன்று காய்கறி, பயிர் விதைகளை எளிதாக விவசாயிகளிடமிருந்து பெற்றுவிட முடியும். ஆனால் இன்று தொழில்துறை வேகமாக முன்னேறியுள்ளது. பணப்பயிர்களை அதிகம் விளைவிக்கும்  நிலையில், பாரம்பரிய விதைகளை காண்பது குறைந்துவிட்டது. உலகெங்கிலும் சிலர் பாரம்பரிய விதைகளைக் காக்க தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர்.  வட அமெரிக்காவில் உள்ள 90 சதவீத பழங்கள், காய்கறிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. உலகம் முழுக்க  75 சதவீத பயிர்களில் பன்மைத்தன்மை அழிந்துவிட்டது அறிவியல் உண்மை. விதைகளை காக்கும் பணியில்  இயற்கை பேரிடர்கள், பூச்சிகளின் தாக்குதல் என சில சவால்கள் உள்ளன. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் ஆகிய நகரங்களில் 1980களில் விவசாயிகள் ஒன்றுபட்டனர். பாரம்பரிய விதைகளை காக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.  இச்செயல்பாட்டில், தொடக்கத்தில் நூறு விவசாயிகள் பங்கேற்றனர்.  அக்காலகட்டத்தில் பெரு விவசாய நிறுவனங்கள், உள்நாட்டு விதை நிறுவனங்களை கையகப்படுத்தி வந்தன. அதன்மூலம், உள்நாட்டில் அதிக வில

வணிகத்தில் உளவியலைக் கசடறக் கற்றுத்தரும் நூல்! - சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் ’பிஸினஸ் சைக்காலஜி ’

படம்
  பிஸினஸ் சைக்காலஜி சதீஷ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு பதிப்பகம் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய வணிகத்தொடர்.  இந்த தொடரில் பிராண்ட் என்பது எந்தளவு முக்கியம். அதனை எப்படி வடிவமைப்பது, அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதை விளக்குகிறார்.  வணிகம் என்பதை எப்படி நடத்துவது, வாடிக்கையாளர்களை கவருவது, பொருட்களை விற்றுவிட்டால் போதுமா, அவர்களின் நம்பிக்கையை எப்படி பெறுவது என்பதைப் பற்றியும் சதீஷ் விளக்கமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் காட்டி புரிய வைக்கிறார்.  சதீஷின் எளிமையான சுவாரசியமான எழுத்து, வணிகம் செய்வோரை அல்லாமல் பிறரையும் எளிதாக நூலுக்குள் கொண்டு வருகிறது.  நூல் முழுக்க உளவியல் சார்ந்த அணுகுமுறை கொண்டுள்ளது. இதில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை எப்படி பெறுவது என்பதையே மையமாக கொண்டிருக்கின்றனர். வியாபாரம் என்றாலே ஆறு பொய், நான்கு உண்மை என்பது தான் உண்மை. ஆனால் இதற்கு முன்னால் உள்ள விஷயம், வாடிக்கையாளரை எப்படி நம்ப வைத்து நம்மை கவனிக்க வைப்பது என்பதைத்தான். இதைத்தான் சதீஷ் விளக்கியுள்ளார்.  வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குபவர்களைப் பார்த்தால் புதிதாக அவர்களிடம்

அழிந்துபோன வணிக கண்டம்! - பால்கனாடோலியா

படம்
  ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நடுவில் உள்ள கண்டம்! அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.  மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது.  3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன.  ”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியமாக இல்லை” என்றார் ஆ

கிரிப்டோகரன்சியை எப்படி வாங்குவது?

படம்
  கிரிப்டோகரன்சியை இரண்டு வழிகளில் வாங்கலாம். ஒன்று, அதனை விற்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கலாம். அல்லது புதிய கரன்சிகளை நாமே உருவாக்குவது.  இதில் எளிதானது பரிவர்த்தனை மூலம் வாங்குவதுதான். இந்த முறையில் இந்தியாவில் வாசிர்எக்ஸ், காயின்டிசிஎக்ஸ், காயின்ஸ்விட்ச் கியூபர், ஸெப்பிளே, பிட்பிஎன்எஸ், ஜியோட்டஸ் ஆகிய நிறுவனங்களைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம்.  இதில் வணிகம் செய்ய அல்லது முதலீடு செய்ய ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உங்களைப் பற்றி நோ யுவர் கஸ்டமர் தகவல்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ரூபாயைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம். முதன்முதலில் கரன்சிகளை வாங்குபவர் ஐஎன்ஆர் ரூபாய்களை வாலட்டில் நிரப்பி வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் கிரிப்டோகரன்சியை எளிதாக வாங்க முடியும்.  கிரிப்டோகரன்சி வாலட்டில் ஒருவருக்கு தனித்துவமான எண்கள் வழங்கப்படும். இ வாலட், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை முறையில் ஒருவர் வாலட்டில் பணத்தை  நிரப்பலாம்.  இந்திய அரசு கிரிப்டோவை மறைமுகமாக அங்கீகரித்து வரி போட்டாலும் கூட நேரடியான அனுமதியை வழங்கவில்லை. எனவே வங்கி மூலம் நீங்கள் பணத்தை இ வாலட்டில் நிரப்ப முடியாது. இப்போதைக்கு மொப

கிரிப்டோகரன்சி பற்றிய அறிமுகம்!

படம்
  கிரிப்டோகரன்சிக்கு வங்கிகள் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் அதில் தொழில் செய்பவர்கள் சம்பாதிக்கும் லாபத்தில் வரி 30 சதவீதம் என ஒன்றிய அரசு லேட்டரல் திங்கிங் முறையில் யோசித்துள்ளது. முதலில் கிரிப்டோகரன்சி என்றால் என்பதைப் பார்ப்போம்.  ரூபாயை எப்படி டாலருடன் ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்துகிறோமோ அதே முறையில்தான் கிரிப்டோகரன்சியும் செயல்படுகிறது. ரூபாய், டாலர் என்பதை நாம் கண்ணால் பார்த்து கையில் தொட முடியும், ஆனால் கிரிப்டோகரன்சியை டிஜிட்டல் முறையில்தான் பார்க்க முடியும். இதனை வியாபார பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். என்கோடிங் முறையில் பரிவர்த்தனை பாதுகாப்பாக நடைபெறும். இவை மின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு குறைவான அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  உலகளவில் 11 ஆயிரம் கிரிப்டோகரன்சிகள் உண்டு. ஆனால் அதில் பிரபலமாக புழங்கத்தக்க வகையில் இருப்பது மிகச்சிலவே. அதில் பிட்காயினும், எத்ரியமும் உண்டு.   கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நடப்பது தனியார் நிறுவனத்தின் சர்வர்களுக்குள்தான். சாதாரண வியாபாரத்தில் வங்கி இடைமுகமாக இருக்கும். இங்கு தனியார் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு

155 ஆண்டுகளைக் கடக்கும் சூயஸ் கால்வாய்!

படம்
சூயஸ் கால்வாய்  சூயஸ் கால்வாய் உலகில் நீளமான ஆறு, எகிப்தில் உள்ள நைல் ஆறு. ஆனால் நீளமான கால்வாய் எதுவென தெரியுமா? தலைப்பில் சொல்லிவிட்டோமே, இதில் என்ன ரகசியம் இருக்கப் போகிறது. அதைப்பற்றிய கட்டுரைதான் இது.  ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு செல்வது பல மாதங்கள் நீண்ட பயணமாக இருந்தது. காரணம், அனைத்து கப்பல்களும் ஆப்பிரிக்காவை சுற்றி சென்று சுற்றி வந்தன. சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைத்தது.  மத்திய தரைக்கடலிலிருந்து எளிதாக இந்திய பெருங்கடலை அடைய சூயஸ் கால்வாயே உதவியது. இதன்மூலம் கப்பலின் பயண தூரம் 7 ஆயிரம் கி.மீ. குறைந்ததோடு, பயண நாட்களும் 23 நாட்களாக சுருங்கியது. 1859 - 1869  என பத்தாண்டுகள் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது. இதன் மொத்த நீளம் 193.30 கி.மீ. ஆகும். இதனை தொடக்கத்தில் ஆங்கர் லைன் என்ற ஸ்காட்டிஷ் கம்பெனி ஒன்று தனக்கு சொந்தமாக்கி வைத்திருந்தது. 1867 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று முதல் கப்பல் இதில் பயணித்தது. 2022ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் கட்டப்பட்டு 155 ஆண்டுகள் ஆகிறது.  இந்த கால்வாயில் 1,50,000 டன்கள் கொண்ட கப்பல்கள் பயணிக்கலாம். இதனைக் கடக்க ஆகும் தோராய நேரம் 15 மணி

பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி!

  பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி ! உலகம் முழுவதும் மக்களுக்கான சுதந்திரத்தன்மையை , இணையம் வழங்கியுள்ளது . இதில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் அதன் கட்டற்ற தன்மையை தடுத்து வருகின்றன . டெக் உலகில் கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் , ஆப்பிள் , ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை . இந்த பெரு நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் இத்துறையில் போட்டியிடுவதை தடுத்து வருகி்ன்றன என்ற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது . அமெரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் ஆகிய நாடுகள் , டெக் நிறுவனங்களுக்கு எதிரான சட்டப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர் . கூகுளின் சர்ச் எஞ்சின் வழியாக தேடும் தகவல்களில் பெரும்பாலானவை , கூகுளின் நிறுவனங்களிலிருந்து வழங்கும் சேவையாகவே உள்ளது என புகார்கள் கூறப்படுகிறது . மக்கள் , பிற வலைத்தளங்களை விட கூகுளின் தளங்களை விட்டு வேறு தளங்களுக்கு செல்லாதபடி இந்த நிறுவனம் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது . இதுபற்றி , தி மார்க்அப் என்ற நிறுவனம் இணையவழியில் ஆய்வை மேற்கொண்டது . இதன்படி கிடைத்த 15 ஆயிரம் முடிவுகளை சோதித்ததில்

ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்ப சாதனையாளர் மெரிசா மேயர்!

படம்
  மெரிசா மேயர் மெரிசா மேயர்  சூழல் பொறியாளரான மைக்கேல் மேயர், கலை ஆசிரியரான மார்க்கரேட் மேயர் ஆகியோருக்கும் மகளாக 1975ஆம் ஆண்டு மே 30 இல் பிறந்தவர் மெரிசா.  அமெரிக்காவைச் சேர்ந்தவரான மேரியா மென்பொருள் பொறியாளர், முதலீட்டாளர், பெண் தொழில்முனைவோர் என பல முகங்களைக் கொண்டவர். கூகுளின் தொடக்க காலகட்டத்தில் அதில் பணிபுரிந்தவர்.  ஸ்டான்போர்ட் பல்கலையில் சிம்பாலிக் சிஸ்டம், கணினி அறிவியல் பாடங்களைக் கற்றார். செயற்கை நுண்ணறிவு பற்றியும் படித்தவர் 1997இல் எம்எஸ்சி பட்டம் பெற்றார். 1999இல் கூகுளில் முதல் பெண் பொறியாளராக உள்ளே நுழைந்தார் மெரிசா. இவரது பணியாளர் எண் 20.  கூகுளின் தொடக்க பக்கத்தை இன்று அழகாக இருக்கிறது என பாராட்டினால் அதற்கான பெருமை மெரிசாவிற்குத்தான் சென்று சேரவேண்டும். இவர் வடிவமைத்த முகப்பு பக்கத்திற்கு பிறகுதான் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. ஜிமெயில், குரோம், மேப் எர்த் ஆகியவற்றிலும் நிறைய பங்களிப்புகளை செய்தார் மெரிசா.  பிறகு யாஹூ நிறுவனத்திற்கு இயக்குநராக சென்று விட்டார் மெரிசா. 2012இல் அந்த நிறுவனத்திற்கு சென்றவர், 2017இல் தனது பதவியை விட்டு நீங்கினார். யாஹூவின் வ

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் புலிகளின் இறப்பு அதிகரிப்பது ஏன்? - சுற்றுலா கொடூரம்

படம்
  மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் 39 புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டில் புலிகளின் இறப்பு 32 ஆக இருந்தது. இப்போது இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில் புலிகளின் இறப்பு கூடியுள்ளது. இப்படியே புலிகள் இறந்துகொண்டிருந்தால் மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் இருப்பே இனி இருக்காது என சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர்.  2019ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 526 ஆக இருந்தது. கர்நாடகாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை விட இதில் இரண்டுதான் கூடுதலாக உள்ளது.  நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் பதினைந்து புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. மொத்த இந்தியாவில் 113 புலிகள் இறந்துள்ளன. அதில் மத்திய பிரதேசத்தின் பங்கு 39 ஆகும். அதாவது, 34.5 சதவீத பங்கு.  கடந்த நவ. 22 அன்று காட்டுயிர் செயல்பாட்டாளர் அஜய் துபே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை பதிவு செய்தார். இதில் புலிகளின் இறப்பு பற்றி அரசிடமும், புலிகளின் பாதுகாப்பு ஆணையத்திடமும் கேள்விகளைக் கேட்டிருந்தார்.  நவம்பர் 17 அன்றுதான் அனைத்திந்திய புலிகள் எண்ணிக்கை ஆய்வு தொடங்கியது. 2023ஆம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.  புலிகள் பெரும்பாலும் பாதுகாக

பிட்காயின் மீது கிளம்புது புது மோகம்! -

படம்
  பிட்காயின் கிரிப்டோகரன்சிகளை பலரும் வாங்கி விற்க முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் இதனை முறைப்படுத்த அரசு ஏதும் செய்யவில்லை. இதனை ரிசர்வ் வங்கி இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெறலாம்.  முறைப்படுத்தல் இந்தியர்கள் பெரும்பான்மையோர் தங்களது சேமிப்புகளை  பிட்காயினில் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். வங்கியில் போட்டு வைத்தால் கிடைக்கும் வட்டியும் இப்போது குறைந்துவிட்டது. அதில் போட்டு வைத்து கடனை இன்னொரு  வட இந்திய வியாபாரிக்கு வட்டிக்கு கொடுத்துவிட்டால் சொந்தப்பணமும் காணாமல் போய்விடுமே? எனவே, வரி பிரச்னை இல்லாமல் பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் பிட்காயின் ரூபாய்க்கு எதிரிதான். பணமோசடிக்கும் பயன்படுத்தப்படலாம். அதனைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். முதலீடு செய்யும் பணத்தை ஒருவர் மோசடியில் பறிகொடுக்கவும் கூடுதல் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.  அனுமதி ஆர்பிஐ இதற்கு எழுத்துப்பூர்வ அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை. கிரிப்டோ கரன்சியை தடுப்பதற்கான சட்டத்தை ஆர்பிஐ உருவாக்கினாலும் அதனை மத்திய அரசு இன்னும் நாடாளுமன்றத்தில

ரொக்கப் பரிவர்த்தனைதான் அல்டிமேட்! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
ரொக்கமாக பணத்தை கையாள்வது இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நூறு சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு எடுத்த ஆய்வில் அதன் அளவு 89 சதவீதமாக குறைந்துள்ளது. முழுமையாக க்யூஆர் கோடை பதிவு செய்து பொருட்களை வாங்குவது கடினமான ஒன்றுதான். நகரத்தில் பலரும் இதனை இப்போதுதான் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் இதனை தேர்ந்தெடுப்பதாக தெரியவில்லை.  பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ் என்ற நிறுவனம், பணம் அச்சிடப்படுவது பெரிதாக குறையவில்லை என்று தகவல் கொடுத்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை பரிமாறுவது குறைகிறது என பலரும் கூறும் சூழ்நிலையில் கூட ரொக்கப்பணத்திற்கான மதிப்பு குறையவே  இல்லை. இதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.   அமெரிக்க டாலர்கள் ரொக்கமாக பரிமாறுவது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.  2020ஆம் ஆண்டு 26 சதவீதத்திலிருந்து ரொக்கப் பரிவர்த்தனை 19 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அமெரிக்க வங்கி எடுத்த ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.  ஸ்வீடனில் உண்மையில் ஒரு சதவீத ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்துள்ளது. உலக நாடுகளிலேயே இதுதான் மிகவும் குறைவான ரொக்கப்பரிவர்த்தனை.  ஜப்பானில் 21 சதவீத ரொக்கப

ட்ரோன்களுக்கு அனுமதி! - மத்திய அரசின் புதிய முடிவு!

படம்
  மத்திய அரசு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான சான்றிதழை எளிமையாக அளிக்கும்படி விதிமுறைகளை மாற்றியுள்ளது. இந்தியா 2030ஆம் ஆண்டு உலகளவிலான ட்ரோன் மையமாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்துறைகளிலும் பொருளாதாரம் வளரும் என நம்புவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விரைவில் நாம் வானில் பறந்து வரும் ட்ரோன் டாக்சிகளை பார்க்க முடியும் என ஜோதிராவ் சிந்தியா கூறியுள்ளார். இவர்தான் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்.  500 கி.கி அதிகமுள்ள ட்ரோன்களை பயன்படுத்தலாம் என அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 300 கி.கி எடையுள்ள ட்ரோன்கள்தான் அனுமதிக்கப்பட்டது.  சரக்குகளை கொண்டு செல்வதற்கு இனி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட  வாய்ப்பு அதிகம்.  இதில் ஏற்படும் தவறுகளுக்கு அபராதம் ஒரு லட்சம் என்று விதிக்கப்பட்டுள்ளது. பிற விதிகள் மீறும்போது அபராதம் கூடுதலாக இருக்கலாம்.  ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான விதிகள் மஞ்சள், பச்சை, சிவப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் பகுதியில் 12 முதல் 45 கி.மீ வரையில் பயன்படுத்தக்கூடாது என்றும், பச்சை பகுதியில் 8 முதல் 12 கி.மீ தொலைவு வரை பயன்படுத்தக்கூடாத

கிரிப்டோகரன்சியில் சம்பளம் வாங்கும் மெஸ்ஸி!

படம்
  பார்சிலோனா கிளப்பிலிருந்து கண்ணீர் மல்க வெளியேறினாலும் தற்போது கிரிப்டோகரன்சியில் சம்பளம் வாங்கி ஆசுவாசமாகியிருக்கிறார்  கால்பந்து வீரர் மெஸ்ஸி. பிரெஞ்சு கிளப் ஒன்றுக்கு இரண்டு ஆண்டுகள் சம்பளத்தில் ஒப்பந்தமாகியவர், தனது சம்பளத்தில் ஒருபகுதியை ஃபேன் டோக்கனாக வாங்கியுள்ளார்.  பேன் டோக்கன் என்பதை நான் ஃபங்கியபிள் டோக்கன் என அழைக்கின்றனர். புரியும்படி சொன்னால் இணையத்தில் பதிவேடுகளில் உள்ள மாற்ற முடியாத மதிப்பு கொண்ட சொத்து என்று வைத்துக்கொள்ளலாம். பிட்காயினை எப்படி கிரிப்டோகரன்சி என்று சொல்கிறார்களோ அதேபோலத்தான் இதுவும். இதனை அவர் பின்னாளில் பணமாக மாற்றிக்கொள்ளலாம். அல்லது அந்த டோக்கன்களை பயன்படுத்தி வேறு பொருட்களைக் கூட வாங்கலாம்.  கிரிப்டோ டோக்கன்களை யாராவது வாங்குகிறார்களா என்றால் அதற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.இவர்கள் பணம் கொடுத்து இந்த டோக்கன்களை வாங்குகிறார்கள். இதைப் பயன்படுத்தி ஆக்மென்ட் விளையாட்டுகளை இணையத்தில் விளையாடலாம். கிளப்புகளில் எடுக்கும் சில முடிவுகளுக்கு வாக்களிக்க கூட இந்த டோக்கன்களை பயன்படுத்தும் வசதி உள்ளது. ஃபேன் டோக்கன்களை சோசியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்கு

மெக்டொனால்டை உலகம் முழுக்க கொண்டு சென்ற ரே கிராக்! - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
              சூப்பர் பிஸினஸ்மேன் ரே கிராக்   இன்று உலகம் முழுக்க துரித உணவுகளுக்கு அடையாளமாக இருப்பது மெக்டொனால்ட் கடைகள்தான் . சாண்ட்விட்ச் , பர்கர் , பிரெஞ்ச் பிரைஸ் என விதவிதமாக விற்று வரும் இந்த கடைகளை உருவாக்கியவர் ரே கிராக் . இவர் அமெரிக்காவில் 1902 ஆம் ஆண்டு பிறந்தவர் . தனது கடைகளுக்கான சிந்தனையை இவர் பெற்றபோது வயது 50 ஆகியிருந்தது . பலரும் வேலை செய்து களைத்து ஓய்வெடுக்கலாமா என்று யோசிக்கும் வயது . அப்போதுதான் மெக்டொனால்ட் உணவக ஐடியாவை பிடித்திருக்கிறார் ரே கிராக் . 1917 ஆம் ஆண்டு தனது வயதை மறைத்து உலகப்போரில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலைபார்த்தார் . பிறகு , காகித பொருட்களில் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை விற்கும் நிறுவனத்தில் வேலை செய்தார் . எர்ல் பிரின்ஸ் என்பவர் , மில்க்‌ஷேக்குகளை ஒன்றாக கலக்கும் மெஷினை உருவாக்கினார் . இதனை வணிகத்திற்கான வாய்ப்பாக ரே கிராக் பார்த்தார் . நாடெங்கும் சென்று பல்வேறு உணவகங்கள் , பார்மசிகளில் மெஷின்களை விற்றார் . ஆனாலும் கூடன 1950 இல் இந்த மெஷின்களின் விற்பனை சரிந்துபோனது . ரே கிராக்கினுடையது , ஐந்து மில்க்‌ஷேக்குகளை ஒரே நேரத