இடுகைகள்

ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலை உணவு உடலுக்கு அவசியமா?

படம்
giphy.com காலை உணவு சாப்பிடுவதை முக்கியம் என பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். உணவு என்பது ஒருவரின் உடலிலுள்ள கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் எடையைப் பொறுத்த தே. இதன் பொருள் காலை உணவை நாம் அலட்சியப்படுத்தவேண்டும் என்பதல்ல. கவனமாக அதனை வடிவமைத்து சாப்பிட வேண்டும் என்பதே. இம்முறையில் காலையில் வேக வைத்த பீன்ஸ், காளான்கள், தக்காளி ஆகியவற்றுடன் முட்டை சேர்த்து சாப்பிடலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிட உதவும் செரிலாக் போன்ற உணவுகளை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் நூறு கிராமுக்கு 5 கிராம் எனுமளவு சர்க்கரை உள்ள பொருட்களைத்தான் வாங்கவேண்டும். நாம் சாப்பிடும் மூன்று பங்கில் ஒரு பங்கு சர்க்கரையாக இருப்பதை தவிர்க்கவேண்டும். உணவுப்பொருட்களை உடல் சர்க்கரையாக மாற்றுவதே நல்லது. நேரடியான சர்க்கரை என்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. நீங்கள் ஓட்ஸ், பார்லி போன்றவற்றை சாப்பிடலாம். காரணம் இவை குறைவான சர்க்கரையைக் கொண்டவை. பொதுவாக காலையில் அதிகமாகவும் பின்னர் வரும் உணவு வேளைகளில் குறைவாகவும் உணவு உண்பது உடல் எ

இறைச்சி சுவையில் சைவ பலகாரங்கள் எப்படி உருவாயின?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி இறைச்சி சுவையில் முறுக்குகள் எப்படி உருவாகின்றன? இறைச்சி சுவையில் உருவாகும் பல்வேறு பிஸ்கெட்டுகள், முறுக்குகள் சைவ வகையைச் சேர்ந்தவைதான். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கு நாடுகளில் 2013 ஆம் ஆண்டு தொடங்கின. இன்று பல்வேறு இறைச்சி சுவையில் தின்பண்டங்களைத் தயாரித்து வருகின்றனர். இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள்தான் அதன் மணத்திற்கு காரணம், இவற்றை சூடுபடுத்தும்போது இறைச்சிக்கான தன்மை உணவில் உண்டாகிறது. இதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சைவ உணவுகள் ரெடியாகின்றன. அப்படியே அல்ல. தாவரங்களிலுள்ள அமினோ அமிலங்களான எல் - சிஸ்டெய்ன் எனும் அமினோ அமிலத்தை இதற்காக பயன்படுத்துகின்றனர். இதன்விளைவாக சைவத்திலும் நிறைய தின்பண்டங்கள் புதிய மணம் சுவையில் சாப்பிடக் கிடைக்கின்றன. நன்றி - பிபிசி

வளைவான கண்ணாடியை எப்படி உருவாக்குகிறார்கள்?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கண்ணாடியை எப்படி வளைத்து அழகாக மாற்றுகிறார்கள்? அனைத்துக்கும் சிலிகா மூலக்கூறுகள்தான் காரணம். அதனை 700 டிகிரி செல்சியஸிற்கு வளைத்து கண்ணாடியை வளைவாக தயாரிக்கிறார்கள். மிகவும் கவனமாக வேலை செய்துதான் இந்த வகை கண்ணாடியை உருவாக்குகிறார்கள். கால்சியம் கார்பனேட், சோப்பு ஆகியவற்றைப் போட்டு இதனை துடைத்து மெருகேற்றுகிறார்கள். நன்றி - பிபிசி

எந்த மொழியைக் கற்பது ஈசி?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி எளிதாக ஓர் மொழியைக் கற்க நினைக்கிறேன். எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்? கணினி மொழியை கற்க விரும்பினால் ரூபி கற்கலாம். இம்மொழியை கற்பதும் எளிது, நிறைய சம்பாதிக்கவும் முடியும். அதேசமயம் மொழி கற்பது என்றால், தமிழ் என்று மொழிவெறியோடு சொல்ல மாட்டேன். ஆங்கிலத்தோடு இணைந்த அதன் சாயல்களைக் கொண்ட ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளை கற்கலாம். இது எளிது. நன்றி - பிபிசி

கொட்டாவி விட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கொட்டாவி விட்டால் நாம் அதிகம் சோர்ந்துவிட்டோம் அல்லது செய்யும் விஷயத்தில் சலிப்புற்று விட்டோம் என்று பொருளா? என்னைக்கூட ஆபீசில் குறிப்பிட்ட ஆளின் கட்டுரையை திருத்துகிறீர்களா என்று கிண்டல் செய்வார்கள். என்ன செய்வது? உண்மையைச் சொன்னால் பகையாகிவிடும். அப்படியே அடுத்த கொட்டாவியை அவர்களுக்கு பதிலாக விட்டு சமாளிப்பேன். பொதுவாக கொட்டாவி விடுவதை உடலுக்கு குறிப்பாக மூளைக்கு ஆக்சிஜன் தேவை என்று கூறுவார்கள். ஆனால் இதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது. பொதுவாக சூடான சூழ்நிலையில் மூளையின் வெப்பநிலை 0.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே கொட்டாவி வரும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே உடலுக்கு பொருத்தமில்லாத சூழ்நிலையில் வெப்பத்தில் இருக்கும்போது கொட்டாவி நிறைய வரும். நன்றி - பிபிசி
படம்
மிஸ்டர் ரோனி நாய்கள் எப்படி மனிதர்களை விட அதிகளவிலான ஒலியை கேட்கும் விதமாக உருவாகிறது? நாய்கள் அப்படி திறன்களைப் பெற்றிருப்பதால்தான் நாம் அதனை காவல் வைத்துவிட்டது நிம்மதியாக தூங்க முடிகிறது. பயன் இல்லாத எந்த விஷயத்தையும் மனிதர்கள் வைத்திருப்பது இல்லை. அப்போது பூனை என்கிறீர்களா? பூனை எஜமானன் போல. தனிமையை யார் வைத்து நிரப்பினால் என்ன? பெண்களுக்கு பூனை பிடிக்கும். அதனால் வளர்க்கிறார்கள். மனிதர்களால் 20 கிலோஹெர்ட்ஸ் ஒலியைக் கேட்க முடியும் என்றால், நாய்களால் 45 கிலோ ஹெர்ட்ஸ் அளவிலான ஒலியைக் கேட்க முடியும். பொதுவாக விலங்குகளால் மனிதர்களை விட அதிக திறன் கொண்ட செறிவான ஒலியைக் கேட்க முடியும். என்ன காரணம்? உலகில் பிழைத்திருக்க வேண்டுமே? அதற்காகத்தான். இயல்பாகவே நாய்களுக்கு அமைந்துள்ள தலை அமைப்பு மனிதர்களை விட சிறியது. மேலும் இதன் காது அமைப்புகளும் நம்மிலிருந்து மாறுபட்டவை. இதனால் இவற்றின் ஒலி கேட்கும் சக்தியும் அதற்கேற்ப அமைந்துள்ளது. நன்றி - பிபிசி

இன்சோம்னியா ஸ்டேஜ் 1 - தூக்கம் வராமல் தவிப்பதுதான்!

படம்
மிஸ்டர் ரோனி காலையில் நான்கு மணிக்கு எழுகிறேன். பின்னர் தூங்க முயன்றாலும் தூக்கம் வரமாட்டேன்கிறது. என்ன காரணம்? தூக்கம் வரவில்லையென்றால் அடையாளம் பதிப்பகத்தின் நூல்களை எடுத்து படியுங்கள். நூற்றாண்டுக்கான தூக்கம் உங்களை வந்தடையும். அப்படியும் தூக்கம் ஏமாற்றினால் பா.வெங்கடேசனின் நாவல்களை வாசியுங்கள்.இதற்கும் மிஞ்சி தூக்கம் வரவில்லை என்றால் உங்களுக்கு வந்திருப்பது இன்சோம்னியா ஸ்டேஜ் 1. சரியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக தூக்கம் வரவில்லையென்றால், அரசு உத்தரவுப்படி திறந்துள்ள நள்ளிரவுக் கடைகளில் ஷாப்பிங் செய்யுங்கள். இல்லையெனில் அறைக்குள் நடக்கலாம். மொட்டைமாடியில் நடந்தால், மனைவியுடன் தூங்குபவர்கள் மிரள்வார்கள். எனவே அறைக்குள் தூக்கப் பஞ்சாயத்தை முடித்துக்கொள்ளுங்கள். இதற்கும் மிஞ்சி தூக்கம் பற்றாக்குறையானால் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. நன்றி - பிபிசி

நீரில் நனைந்தால் உடையின் நிறம் அடர்த்தியாக தெரிவது ஏன்?

படம்
மிஸ்டர். ரோனி துணி துவைக்கும்போது அல்லது மழை பொழியும்போது உடை எப்படி மிகவும் அடர்த்தியான நிறமாக மாறுகிறது? மழையை ரசித்து நனைந்துகொண்டு சாலையில் சென்று இருப்பீர்கள் போல. மழைநீரில் நனையாமல் நின்றிருந்தால் இதுபோல கேள்விகள் பிறந்திருக்காது அல்லவா? நீர், உடை இழைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறது. அதில் ஒளி பட்டு எதிரொளிப்பதால், உடையின் நிறம் அடர்த்தியானதாக தெரிகிறது. இதுபற்றி வெலிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் லெக்னர், மைக்கேல் டோர்ஃப் ஆகியோர் ஆராய்ச்சி செய்து இந்த அரிய உண்மையை கண்டுபிடித்துள்ளனர். நன்றி - பிபிசி

ஓவியர்கள் எப்படி மிகச்சிறப்பாக வரைகிறார்கள்- உளவியல் ஆய்வு

படம்
மிஸ்டர் ரோனி  சிலர் எப்படி பிறரை விட இயல்பாக நன்றாக வரைகிறார்கள்? காரணம் சூழலை அவர்கள் வேறுமாதிரி பார்ப்பதுதான். அவர்களின் பார்வையில் ஒருவரின் உருவத்தை அவர்கள் வரைவதற்கான விஷயங்களாக பார்க்கிறார்கள். டாவின்சியை விடுங்கள். எங்கள் அலுவலகத்தில் உள்ள ஓவியர் பி, தனக்கு லீவு வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பில் எனது உருவத்தை வரைந்து லீவு சொல்லி பீதியைக் கிளப்பினார்.  ஜாலியான பென்சில் ஸ்கெட்ச்தான். பிரமாதமாக உருவத்தை மனதில் பதித்து வரைந்திருந்தார். ஆனால் நான் அதே உருவத்தை வரைந்தால் என்னாகும்? பலமணிநேரம் பிடித்தாலும் அதே உருவத்தை என்னால் கொண்டுவரமுடியாது. பல உருவங்களுக்கும் போலியா கை, கால்களைத்தான் என்னால் வரைய முடியும். இதுபற்றி எப்போதும் போல வெளிநாட்டுக்காரர்கள் ஆராய்ச்சி செய்திருப்பார்களே? அதைத்தான் தேடப்போகிறோம்.  ஓவியர்கள்  முதலில் பொருட்களின் அளவை தீர்மானிக்கிறார்கள். கேன்வாசின் சைஸூம் இதில் முக்கியம். பின்னர் தாங்கள் பார்த்த விஷயங்களை எப்படி நினைவு கொள்கிறார்கள் என்பதும் இதில் முக்கியம்.  எதை அவர்கள் தேர்ந்தெடுத்து வரைகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டுதா

குளித்தால் கலோரிகள் குறையுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி குளித்தால் கலோரிகள் குறையுமா? குளித்தால் இறந்த தோல் செல்கள் நம் உடலை விட்டு நீங்கும் என்பதுதான் ஆராய்ச்சி உண்மை. ஆனால் நீங்கள் கேட்டது போன்ற சமாச்சாரத்தையும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு, லாப்போரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குளியல் பற்றி ஆராய்ந்து ஓரு உண்மையைக் கண்டுபிடித்தனர். அதன்படி, குளித்தால் உடலின் வளர்சிதை மாற்ற வேகம் மாறுபடுகிறது என்று கண்டறிந்தனர். எப்படி பார்த்தாலும் குளித்து கலோரிகளை குறைக்க முடியாது. அப்படி குறைக்க வேண்டும் என்றால்,  இதமான வெந்நீரில் ஒருமணிநேரம் குளிக்கவேண்டும். அப்படி குளித்தாலும் பிரிட்டானியா டைகர் பிஸ்கட் சாப்பிட்டால் உடலில் சேரும் கலோரிகளை மட்டுமே குறைக்க முடியும். தோராயமாக 61 கலோரிகள். எனவே இப்படி கேள்வி  கேட்பதை விட்டுவிட்டு பதினைந்து நிமிடங்கள் நடந்தால் போதும். எளிமையாக உடலின் கலோரிகள் குறையும்.

சில பானங்களை கூலிங்காக குடிக்கவேண்டிய அவசியம் என்ன?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி சில பானங்களை கூலிங்காக குடித்தால் நன்றாக இருக்கிறதே ஏன்? பொதுவாகவே மூளை கொடுக்கும் சிக்னல்களில்தான் நம் உடல் இயங்குகிறது. ஆச்சி மோர் குடிக்கலாமா, டெய்லி கம்பெனியின் பன்னீர்சோடா, அல்லது மாங்கனிச்சாறு குடிக்கலாமா என்பதெல்லாம் உங்கள் தாகம் பொறுத்ததல்ல. குறிப்பிட்ட பானங்களில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க வைக்கின்றன. எனவே குறிப்பிட்ட பானங்களை கேட்டு வாங்கிக் குடிக்கிறோம். பெப்சி போன்றவற்றை குளிர்ந்த நிலையில் இல்லாமல் குடித்தால் இரும்புச்சத்து டானிக் போலவே இருக்கும். எனவே அதனை கூலிங்காக குடியுங்கள் என அக்கம்பெனியே விளம்பரம் செய்கிறது. இந்த பானங்கள் நம் நாக்கிலுள்ள சுவை உணர்வை மட்டுப்படுத்துகின்றன. எனவே நமக்கு கோலா குடித்தால் நன்றாக இனிப்பாக உள்ளது போலத் தெரிகிறது. இதை எப்படி பார்க்கலாம் என்றால் டீ குடிப்பதை விட கூலிங் கோலா ஓகே என்றளவு மனிதர்கள் இதற்கு அடிமையாகிறார்கள். 

உட்கார்ந்து வேலை செய்தால் வயதாகுமா? ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி giphy.com நாற்காலியில் உட்கார்ந்தே இருந்தால் நோய் வருமா? இன்று பல்வேறு வேலைகளை உட்கார்ந்தே செய்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. பஸ் ட்ரைவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் உட்கார்ந்து வண்டி ஓட்டாவிட்டால் நாம் எங்கேயும் போகமுடியாது. கால்சென்டர். ஐடி வேலைகள் என பல்வேறு இடங்களிலும் கூட உட்கார்ந்து வேலை செய்வது முக்கியம். இங்கிலாந்தில் செய்த ஆய்வுப்படி உட்கார்ந்து வண்டி ஓட்டும் ஓட்டுநர்களுக்கு பெருமளவில் மாரடைப்பு ஏற்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.இது நின்றுகொண்டே இருக்கும் நடத்துநர்களை விட அதிகம். அவர்கள் மட்டுமல்ல மேற்சொன்ன பல்வேறு பணிகளில் உட்கார்ந்துகொண்டு ஏழுமணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு நிச்சயம் இதய நோய்கள், டிமென்ஷியா, நீரிழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரச்னை எங்கிருந்து தொடங்கும் தெரியுமா? தோள்பட்டை, முதுகெலும்பு என தசைகள் வலுவிழக்கத் தொடங்கும். பின்னர் மெல்ல அந்த இடங்களில் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதன்விளைவாக எலும்புகள் வலுவிழந்து நம் உடல் மெல்ல நோய்களை நோக்கிச் செல்லும். விரைவில் வயதாவதும் இப்படித்தான் நடக்கும். நன்றி - பிபிசி

கரு உருவாவது தாய்க்கு தெரியாமல் இருக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி கர்ப்பிணியாக இருப்பது ஒருவருக்கு தெரியாமல் போக வாய்ப்புண்டா? கிரிப்டிக் என்று குறிப்பிடப்படும் இந்த நிலைமை மிகவும் அரிது. ஐநூறில் ஒன்று என்ற அளவுக்கு  கரு உருவாவது பெண்களுக்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது. எப்படி உடலில் கரு உண்டாவது பெண்களுக்கு தெரியாமல் போகும்? கரு உண்டாகும் தொடக்கத்தில் பிறப்புறுப்பில் சிறிது ரத்தம் வடியும். அதனை மாதவிடாய் என பெண்கள் நினைத்து கம்மென்று இருந்துவிடுவதுதான் காரணம். ஹெச்சிஜி எனும் ஹியூமன் கோரினோக் கொனாட்ரோபின் ஹார்மோனில் ஏற்படும் பாதிப்புகளாலும் பெண்களுக்கு உடல் மாறுபாடுகள் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. கரு உருவானாலும் உடனடியாக அவர்களால் கண்டுபிடிக்காமல் அதன் மீது சந்தேகப்படாமல் இருக்க முடிகிறது. நன்றி - பிபிசி

சோகப்பாடல்களை கேட்கப் பிடிக்கிறதா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி சோகமாக இருக்கும்போது சோக பாடல்களை ஏன் கேட்கிறோம்? சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு சிறகு முளைத்தது பாடலை கேட்டுவிட்டு இந்த பதிலை எழுதுகிறேன். இயல்பாகவே யேசுதாஸின் குரலில் டன் கணக்கில் சோகம் இருக்கும். பாடல் வரிகளும் அதில் சோகத்தை பிழிய, பாடல் ப ப்பரப்பா ஹிட். பொதுவாக நாம் தனியாக இருக்கிறோம், சதியால் வீழ்த்தப்பட்டோம் என்றெல்லாம் மனதில் புலம்பல் நம் காதுக்குள் கேட்க இரவு தேவை. அதில்தான் பகலின் போலித்தனங்கள் எல்லாம் உடையும். எனவே சோகப்பாட்டுகள் அலையலையாக கிளம்புவது இரவில்தான். அந்த நேரத்தில் நாம் பொன்மகள் வந்தாள் ரீமிக்ஸ் கேட்ட முடியாது. நம் மனமே குழம்பிவிடும். நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா, அல்லது சோகமாகவா என திகைப்பாகும். லிம்மெரிக் பல்கலைக்கழகம், புளோரிடா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியில் இப்படி சோகத்திற்கு சோகப்பாட்டு போட்டு அதிலிருந்து வெளியே வந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சர்வே ஒன்றை எடுத்து வெளியிட்டார்கள். எனவே அந்தந்த நேரத்தில் அந்தந்த உணர்ச்சியோடு இருப்பது ஒன்றும் கொலை குற்றம் அல்ல. நன்றி - பிபிசி

சளி பிடித்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்யலாமா?

மிஸ்டர் ரோனி சளி பிடித்திருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா? சளி பிடித்திருக்கும்போது அதனை விரட்டும் பணியில் உடல் இருக்கும். அப்போது பார்த்து நீங்கள் டம்பெல், பென்ச் பிரஸ் என செய்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும், உடல்நிலை இன்னும் மோசமாகும். எளிதான உடற்பயிற்சிகளைச்செய்யலாம் தவறில்லை. பாத் பல்கலைக்கழக அறிக்கைப்படி, சளி பிடித்து உடல்வெப்பநிலை காய்ச்சல் வரும் நிலையில் இருக்கும்போது, ஓய்வு எடுப்பதே நல்லது. இல்லையெனில் உடலை ஐசியுவில் வைத்து பராமரிக்கும்படி ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

வெப்பத்தை மூளை எப்படி உடனே உணர்ந்துகொள்கிறது?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி வேறு எந்த உணர்ச்சிகளை விடவும் உடலில் சூடு பட்டவுடன் எப்படி வேகமாக உணர்கிறோம்? சூடு பற்றிய தகவல் மூளைக்கு 27 மில்லி செகண்டுகளில் சென்று சேர்ந்துவிடும். நம் கைகளில் நொடிக்கு 50--60 மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும். ஸ்டவ்வில் நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள் என்றால், நாம் முடிவெடுத்து கையை எடுப்பதற்குள் கை வெந்துவிடும். இதற்காகவே, உடலின் இயல்பான பாதுகாப்பு அமைப்பு சூடு, குளிர்ச்சி என்பதை உடனே உணர்ந்து தன்னை அதிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும். இதனை மோட்டார் இயக்கம் எனலாம். சட்டை பட்டன் போடுவது, ஆணிகளை திருகிப் பொறுத்துவது போன்றவை இதில் அடங்கும்.  இவை முதுகெலும்போடு இணைந்துள்ளன. அனைத்து விவகாரங்களிலும் மூளை முடிவெடுத்தால் நாம் உயிர் வாழ முடியாது. எனவே சில விஷயங்களில் உடல் தன்னிச்சையாக முடிவெடுக்கும். எதற்காக, தன்னைக் காத்துக்கொள்ளத்தான். 

மனிதர்களுக்கும் விலங்களுக்கும் எலும்பு அமைப்புகள் மாறுபடுமா?

படம்
மிஸ்டர் ரோனி மனிதர்களின் எலும்பும், விலங்குகளின் எலும்பும் ஒன்றுதானா? பொதுவாக உயிரினங்கள் அனைத்தும் பொது மூதாதையரிலிருந்து கிளைபிரிந்து வந்தவைதான். இதில் பாலூட்டியான மனிதர்கள் விதிவிலக்கானவர்கள் கிடையாது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆன எலும்பு அமைப்பு, ஒன்றுபோலத்தான். செயல்பாடு, உருவாக்கம் என அனைத்தும் ஒரேமாதிரிதான். ஆனால் அதன் அடர்த்தி, அதிலுள்ள சத்துகள் என பார்க்கும்போது நிறைய வித்தியாசங்கள் உண்டு. மருத்துவர் அல்லாதவர்கள் கரடியின் கைகளைப் பார்த்தால் அப்படியே மனிதனுடையதைப் போலவே இருக்கிறது என குழம்புவார்கள். இது பலமுறை நடந்திருக்கிறது. விலங்கு, மனிதர்கள் என இரு உயிரினங்களுக்கான வேறுபாடுகள் மிக குறைவானவை. நன்றி - பிபிசி

வெயில், மழையால் மனநிலை மாற்றங்கள் நடக்குமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி வெயில் அதிகரிக்கும்போது நமக்கு ஏன் கோபம் அதிகரிக்கிறது? வரிசையில் ரேஷன் வாங்க நிற்கிறீர்கள். அப்போது டீன் ஒருவன் கேசுவலாக உள்ளே வந்து அண்ணே அரிசியைப் போடுங்க என்று கார்டை நீட்டினால், டேய் வரிசையில் வந்து நில்லு என்று சொல்லுவீர்கள்தானே?  அனைவரும் கடையில் நின்று பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது குறுக்கே ஒரு சிறுவன் புகுந்து இந்த லிஸ்டுல இருக்குற பொருட்களைக் கொடுங்க அங்கிள் என என்று சொன்னாலும் இதே போலத்தான் நமக்கு கோபம் பொங்கும். ஆனால் இந்த கோபத்திற்கும் அன்று உதித்த சூரியனுக்கும் தொடர்பு இருக்கிறது. 1990 களில் இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், வெயில் அதிகமாக இருந்தபோது குற்றச்சம்பவங்கள் 2.7 சதவீதம் அதிகரித்ததாக கண்டுபிடித்தனர். இது இந்த நாடு மட்டுமல்ல, வெயில் அதிகமாக உள்ள நாடுகளில் அனைத்திலும் கோபக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களும் நிறைந்து உள்ளன. 2016 ஆம் ஆண்டு டெக்ஸாசிலுள்ள டெக் பல்கலைக்கழகத்தில் இரண்டு விளையாட்டு வீர ர்களிடையே இச்சோதனையை செய்தபோது, வெயில் அதிகமாக இருந்தபோது நிறைய பந்துகளை பௌல் செய்து அலம்பல் செய்த

வாக்கிங் செல்லும்போது வாயில் எச்சில் சுரப்பது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி ஓடும்போது அதிக எச்சில் சுரப்பது ஏன்? குளிர்ந்த சூழலில் ரீபோக் ஷூ மாட்டிக்கொண்டு ஓடினால் உங்களுக்கு வாயில் எச்சில் அதிகம் சுரக்கும். ஆனால் அதுவே வெயில் நேரத்தில் மாராத்தான் ஓடினால் எச்சில் சுரக்காது. மூக்கு வழியாக மூச்சு விடாமல் வாய் வழியாக மூச்சு விட்டால் எச்சில் சுரப்பு அதிகரிக்கும். உடல் தன் தேவைக்கான நீரை பெற தாமதம் ஆனால் எச்சில் சுரப்புக்கு நீரை செலவழிப்பதை நிறுத்திவிடும், ஏனெனில் உடலின் பிற உறுப்புகளுக்கு நீர் வேண்டுமே? உடற்பயிற்சிகள் தீவிரமாகச்செய்யும்போது எம்யுசி5பி (MUC5B ) புரதம் சுரக்கிறது. இது இயல்பாகவே உடலின் எச்சில் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் எச்சிலின் அடர்த்தியை அதிகரிக்கப்பதும் இதுதான். நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்

சிமெண்டிற்கும் கான்க்ரீட்டிற்கும் இதுதாங்க வித்தியாசம்!

படம்
மிஸ்டர் ரோனி சிமெண்டிற்கும் கான்க்ரீட்டிற்கும் என்ன வேறுபாடு? கட்டிடத்தில் பயன்படும் கலவையை நாம் கான்க்ரீட் என்றும் வீடு கட்ட கலப்பதை சிமெண்ட் என பாதிப்பேர் நினைக்கிறார்கள். அப்படி அல்ல. கான்க்ரீட்டில் பகுதிப்பொருளாக கலக்கப்படுவதுதான் சிமெண்ட். சிமெண்ட் என்பது தனி. அதில் தேவைக்கேற்ப லைம்ஸ்டோன், களிமண், கிளிஞ்சல்கள் ஆகியவற்றை கலந்து தயாரிப்பதுதான் கான்க்ரீட். கலக்கப்பட்ட பொருட்களை 2642 டிகிரி வெப்பத்திற்கு சூடு செய்து அதனை குளிர்வித்து பாக்கெட்டுகளில் நிரப்பினால், கான்க்ரீட் ரெடி. உடனே இதனை எடுத்து கட்டிடங்களில் பூசி காய்ந்தால் உடனே குடி போய்விடலாமா என்று கேட்காதீர்கள். இதில் சிமெண்ட், மணல் கலவையை சரியாக கலக்கினால்தான் ரெடி டூ பேஸ்ட் பத த்திற்கு வந்து சேரும். வெறும் சிமெண்டை பூசினால் கட்டிடம் நிற்காது. அதற்கு சரிநிகராக அதில் மணல் இருப்பது அவசியம். நன்றி- மென்டல் ஃபிளாஸ்