இடுகைகள்

வாழ்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வின் அவலத்தை, துயரத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கதைகள் - பஷீர் - 40 கதைகள் - சுகுமாரன் - காலச்சுவடு

            பஷீர் - தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது சிறுகதைகள் தொகுப்பு - சுகுமாரன் காலச்சுவடு பதிப்பகம் மின்னூல் கேரளத்தின் புகழ்பெற்ற இலக்கியவாதியான பஷீர் எழுதிய கதைகளில் நாற்பது கதைகள் இந்த நூல் தொகுப்பில் உள்ளன. பஷீர் எழுதிய முக்கியமான படைப்புகளை நான்கு வெவ்வேறு படைப்புகளாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீரின் தரமான நூல்களை வாங்க நினைத்தால் வாசகர்கள் காலச்சுவட்டை அணுகலாம். பஷீரின் கதைகள் அனைத்துமே வாழ்க்கையின் பல்வேறு காலகட்ட அனுபவங்களைக் கொண்டவைதான். மகிழ்ச்சி, துயரம், லட்சியவாதம் துன்பங்கள், காதல், எழுத்தாளனின் எழுத்து அனுபவங்கள், அரசு பயங்கரவாதம், இந்து, முஸ்லீம் மத வேறுபாடுகள் என பலவற்றையும் நாற்பது கதைகளில் வாசகர்கள் படித்து உணர முடியும். திரு. இரா. முருகானந்தம் ஒருமுறை பேசும்போது சொன்னார். வாழ்க்கையில் எந்தளவு மோசமான நிலை வந்தாலும் கூட அதை எதிர்கொள்ளும் தைரியத்தை பஷீரின் எழுத்துகள் தருகின்றன என்றார். அதை வாசிக்கும்போது வாசகர்கள் எளிதாக உணரலாம். முதல் இரண்டு கதைகள் சற்று துன்பியல் நிகழ்வுகளைக் கொண்டவை. அதாவது ஜென்ம தினம், டைகர். தொகுப்பில் உள்ள இந்த இரு கதைகளில் டைகர் சற்

லக் கீ உங்களுக்கும் கிடைக்கலாம்!

படம்
             லக் கீ தென்கொரியா    தென்கொரிய டிவி சீரியல்களில் துக்கடா வேடங்களில் நடித்து வரும் சீ ஜூங், நினைத்த வேகத்தில் முன்னேற முடியவில்லை.அவனது ஒரே ஆதரவான அப்பா சலூன் வைத்து நடத்துகிறார். அவர் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூட தனது மகனின் நடிப்பு ஆர்வத்தைப் பற்றி புல்லரிப்பாக பேசுவதோடு நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ தான் தங்கியுள்ள அறைக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறக்க நினைக்கிறான். அப்போது அவனுக்கு விதி வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது. விபத்தாகி நினைவிழந்த ஒருவரின் வீட்டு சாவி அவனுக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவன் தனது வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொண்டான் என்பதே கதை. உண்மையில் தமிழில் வெளிவந்த அறை எண் 305 இல் கடவுள் போலத்தான் கதையின் மையம் இருக்கிறது. கதாநாயகன் சீ ஜூங்கிற்கு ஒரு நூடுல்ஸ் வாங்கித்தரக்கூட ஆளில்லை. அவன் காதலித்த பெண்ணுக்கு இரண்டு மாதங்களில் திருமணமாகப் போகிறது. அவனது துக்கடா வேஷங்கள் பெரிய முன்னேற்றம் அடையவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அறை வாடகை கொடுக்க கூட கையில் நயா பைசா கிடையாது. இந்த லட்சணத்தில் அவன் வாழ்க்கையை நினைத்து அழ

காலக்கோடு வடிவில் திரௌபதி முர்மு வாழ்க்கை! - ஆசிரியர் பணி முதல் குடியரசுத்தலைவர் பணி வரை....

படம்
  பழங்குடி இன தலைவர் முதல் குடியரசுத்தலைவர் பயணம்! 1958 திரௌபதி முர்மு, ஒடிஷாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உபர்பேடா எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை, நாராயண் பிராஞ்சி டுடூ, விவசாயி. 1979 ஒடிஷாவின் புவனேஷ்வரில் ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகத்தின் பி.ஏ. நிறைவு செய்தார். படிப்பை முடித்தவுடனே கௌரவ உதவி பேராசிரியராக ஸ்ரீஅரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகத்தில் பணியாற்றினார். 1980 ஒடிஷாவின் பகத்பூரைச் சேர்ந்த வங்கிப்பணியாளரான ஷியாம் சரண் முர்முவை மணந்தார்.  1983  நீர்பாசனம் மற்றும் மின்வாரியத்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். 1997 ராய்ரங்பூர் நகர கவுன்சிலராக தேர்வு பெற்றார்.  2000 ஒடிஷா மாநில அரசில் வணிக போக்குவரத்துத் துறை அமைச்சராக (2000 மார்ச் 6 - 2000 ஆகஸ்ட் 6) நியமிக்கப்பட்டார்  2002 -2004 மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரானார் (2002 ஆகஸ்ட் 6 - 2004 மே 16)  2007 சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நீல்கந்தா விருது (Nilkantha award) பெற்றார்.  2009 முதல் மகன் லஷ்மண் உடல்நலக்குறைவால் காலமானார்.  2013 இரண்டாவது மகன் சிபுன், விபத்து காரணமாக காலமானார்.  2014 ஏற்கெனவே உடல் நலிவுற்றிருந

வண்ணத்துப்பூச்சியை எப்படி பார்ப்பது? - இந்திய வண்ணத்துப்பூச்சியியலாளர்கள் நூலிலிருந்து....

படம்
  வண்ணத்துப்பூச்சி நடை!  வீட்டுத்தோட்டம், பூங்காக்கள், சாலையோரங்கள், குளக்கரை ஆகிய இடங்களில் வண்ணத்துப்பூச்சிகளைப் பார்ப்பது, வண்ணத்துப்பூச்சி நடை (Butterfly walk) ஆகும்.  காலையில் சூரியனின் ஒளிக்கதிர் பரவுவதற்கு முன்னர், வண்ணத்துப்பூச்சிகளை தாவர இலைகள், பூக்களில் பார்க்கலாம்.  வெயில் அதிகரிக்கும் நேரத்தில், வண்ணத்துப்பூச்சி உயரமான இடங்களில் உள்ள இலைகள், பூக்களில் இளைப்பாறும். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க ஆண்டின் இறுதி மாதங்களான அக்டோபர், நவம்பர் மாதங்கள் சரியானவை. இக்காலங்களில் இரைத்தாவரங்களில் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுகின்றன. பிறகு, முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையை உண்டபடியும், வளர்ந்த புழுக்கள் கூட்டுப்புழுவாகவும் மாறியிருப்பதையும் காணலாம்.  ஆண்டின் இறுதிக்குப் பிறகு இரண்டாவது பருவ காலமாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் உள்ளது. இக்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகளை அதிகம் காணலாம்.  பூக்கள், அழுகிய பழங்கள், பறவைகளின் எச்சம், கால்நடைகளின் சிறுநீர், சாணம், தாவரங்களின் சாறு, இறந்த  நண்டுகள் போன்றவையும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவர்கின்றன. மேற்சொன்ன பொருட்களின் வாசனை மற

வௌவால்களை ஆராய்வது எளிதல்ல - குளோரியானா சாவேரி

படம்
  உயிரியலாளர் குளோரியானா சாவேரி, கோஸ்டாரிகா பல்கலைக்கழகம். மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, கோஸ்டாரிகா. இங்குள்ள கோஸ்டாரிகா பல்கலையில்  உயிரியலாளராகப் பணியாற்றி வருபவர், குளோரியானா சாவேரி (Gloriana Chaverri). இவர் ஒற்றை இழை வலை (fine-corded monofilament net) மூலம் 20 இனத்தைச் சேர்ந்த 125 வௌவால்களை எளிதாகப் பிடித்து ஆராய்ந்துள்ளார்.  வௌவால்களை எப்படி பிடிக்கிறீர்கள்? கோஸ்டாரிகா பகுதியில் உள்ள காட்டில், வௌவால்களை இரவு நேரத்தில் தான் பிடித்தோம். இரவு 6முதல் 8 மணிக்குள் நிலத்திற்கு அருகில் வலைகளைக் கட்டி வைக்கிறோம். இரவு நேரத்தில் உணவு தேடுவதில் வௌவால்கள் வேகம் காட்டும். சூரியன் மறைந்தபிறகு, வலையை விரித்து நள்ளிரவு வரை காத்திருப்போம். எங்களது வலையில் மாட்டிக்கொண்ட வௌவால்கள் அதிலிருந்து விடுபட, இழைகளைத் தீவிரமாக கடிக்கும். அவை,எளிதில் துண்டிக்க முடியாதவை. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை வலையைச் சோதிப்போம்.  வௌவால்களைப் பிடிக்க பல்வேறு வலைகளை சோதித்திருப்பீர்கள். என்ன வேறுபாடுகளைப் பார்க்கிறீர்கள்?  கோஸ்டாரிகாவில் 2013ஆம் ஆண்டுதான் ஒற்றை இழை வலையை நான் பார்த்தேன். அதில் வௌவாலைப் பிடிக்க முடிந்தது.

நாட்டை துண்டாடிய காந்தி, ஜின்னாவின் முரண்பட்ட கருத்துகள்! - புத்தகம் புதுசு

படம்
  புத்தகம் புதுசு  ரைட்டர் - ரெபல், சோல்ஜர், லவ்வர் - தி மெனி லிவ்ஸ் ஆஃப் அக்யேயா  அக்ஷயா முகுல்  வின்டேஜ் புக்ஸ் 2017ஆம் ஆண்டு அக்ஷய முகுல் இந்து பிரஸ் அண்ட் மேக்கிங் ஆஃப் இந்து இந்தியா என்ற நூலை எழுதினார். இதில் மதம், அரசியல், தேசியம் என நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். இந்த நூலை ஜாலியாக படிக்கலாம் என்றும் சொல்ல முடியாது. கல்விக்கானது என்றும் கூறமுடியாது.  இப்போது எழுதியுள்ள இந்த நூல் சச்சிதானந்த ஹிரானந்தா வாத்சியாயன் வாழ்க்கையைப் பேசுகிறது. இவரது வாழ்க்கை இரண்டு உலகப்போர்களை மையமாக கொண்டது. அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவுடன் கொண்டுள்ள உறவு, தனிப்பட்ட காதல் உறவு என பல்வேறு விஷயங்களை முகுல் நூலில் விவரிக்கிறார். இந்தி இலக்கியத்தில் முக்கியமான புனிதர் ஆனது பற்றி எழுதியிருப்பது வாசிக்க சுவாரசியமாக உள்ளது.  கிரிம்சன் ஸ்பிரிங் நவ்தேஜ் சர்னா ஆலெப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒன்பது நபர்கள் பார்க்கிறார்கள். இவர்களில் சிலர் ஆங்கிலேயர்கள், இந்தியர்கள், படித்தவர்கள் என உள்ளனர். இவர்களின் மனப்போக்கில் அந்த சம்பவம் எப்படி பதிந்துள்ளது என்பதை நாவலாக எழுதியுள்ளார் ஆசிரியர்.  எ கன்ட்ரி கால்டு சைல்

புல்டோசர் சென்றபிறகு வாழ்க்கை என்னவானது?

படம்
  பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மதம் மாறி திருமணம் செய்தால் போதும். உடனடியாக மாநில அரசு அதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்ஸ்டன்டாக வழங்கி விடுகிறது. இன்றுதான் இன்ஸ்டன்ட் உப்புமா, பொங்கல் என வந்துவிட்டதே நீதி மட்டும் ஏன் தாமதமாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. வீடு இடிக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் வழக்கை விசாரித்து இடிக்கப்பட்டது சரியா அல்லது தவறா, ஊடக கருத்துக்கணிப்பு, மக்கள் கருத்து என என்ன செய்யலாம் முடிவு செய்யப்படுகிறது. பாஜக அரசின் இந்த முன்மாதிரி செயல்பாட்டால் நீதிமன்றத்தின் சுமை பெரும்பாலும் குறைந்து வருகிறது.  ஜஹாங்கீர்புரி இங்கு நூர் ஆலம் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வாழ்கிறார். நூர் ஆலம், கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரித்து அருகிலுள்ள பால்ஸ்வா பால் பண்ணைக்கு தருவதுதான் முக்கியமான வேலை. இவரது கடை இருக்கும் கட்டிடத்தை நகர நிர்வாகம் ஆக்கிரமிப்பு என சொல்லி இடித்து தரைமட்டமாக்கிவிட்டது. இதனால் நூர் ஆலம் தனது வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கியிருக்கிறார். இதற்கு ம

அமினின் கதையில் மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு! - ஃப்ளீ (2021) - அனிமேஷன் டாக்குமெண்டரி

படம்
  ஜோனாஸ் போகெர் ராஸ்முசென் டென்மார்க் இயக்குநர் இவர், ஃப்ளீ(2021) எனும் அனிமேஷன் டாக்குமெண்டரி படத்தை எடுத்துள்ளார். இப்படம், அமின் நவாபி என்ற ஒருவர் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து தப்பித்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு வந்து அங்கிருந்து டென்மார்க் நாட்டுக்கு செல்லும் பயணத்தை விவரிக்கிறது. படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட பெருமையுடையது. இயக்குநரிடம் பேசினோம்.  உங்களுக்கு நவாபி இளம் வயதிலேயே தெரியும். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்கலாம் என்று எப்படி எப்போது தோன்றியது? டென்மார்க் நாட்டின் கிராம பகுதியில் வளர்ந்தவன். அப்போதுதான் ஆப்கானிஸ்தானில் இருந்து சிறுவன் பதினைந்து வயதில் அங்கு வாழ்வதை அறிந்தேன். அவனது கதையை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டேன். ஆனால் முதலில் அவன் தன் கதையைக் கூற விரும்பவில்லை. நாங்கள் நண்பர்களாக இருந்தாலும் அவனது இறந்தகாலம் மர்மமாகவே இருந்தது. பதினைந்து ஆண்டுகள் கழிந்தபிறகு அவனது கதையை தெரிந்துகொள்ள மீண்டும் கேட்டேன். ஆனால் அவன் கூற முடியாது என மறுத்துவிட்டான். ஆனால் அப்போதே அவன் நான் அதைக்கூற தயாரானதும் உன்னிடம் கூறுகிறேன் என்று சொன்னான். பிறகு நான் அனிமேஷன் டாக்

மயிலாப்பூர் டைம்ஸ்! - குடியால் கெட்ட வேலு சித்தப்பாவின் வாழ்க்கை!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் எதிர்பாராத மரணம் இதோ  இன்று காலையில்தான் அம்மாவிடம் பேசினேன். அவள் எப்போதும், தனக்கு நேர்ந்த அனுபவங்களை துல்லியமாக காட்சிப்பூர்வமாக விவரிப்பாள். தூங்கி எழுந்தபோது எப்படியிருந்தது, முகத்தின் இடது கண் எப்படி கண்ணாடியில் தெரிந்தது, இடதுகாலை எடுத்து வைக்கும்போது வீட்டின் தரை குளிர்ந்திருந்தது வரையில் சொல்லுவாள். ஆனால் இறப்பு என்பது யாரையும் மருட்டுவதுதான். இறப்புச்செய்தியை சொல்லும்போது, குரலில் ஆழ்ந்த அமைதி எப்படி பூக்கிறது என்று ஆய்வுதான் செய்யவேண்டும்.  அவள் சொன்னது வேலுச்சித்தப்பாவின் இறப்புச்செய்தியை. வேலு சித்தப்பாவைப் பொறுத்தவரை, அவருக்கு வாழ்க்கையில் மது பாட்டில்தான் எல்லாமே என்று ஆகி வெகுகாலமாகிவிட்டது. திருமணமாகி மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே, அடித்து துரத்திவிட்டார். அவர் மனைவியும் தாய் வீட்டுக்கு சீராட்டு போய்விட்டார். இன்று அவரது மகனுக்கு 11 வயது. வேலை செய்வதே குடிப்பதற்குத்தான் என்று சொல்லுமளவு குடிநோயாளியாகிவிட்டார். இவருக்கு நேர்ந்த இறப்பை இங்கு பதிவிடும்போது, படிக்கும் ஒருவருக்கு என்ன தோன்றும்?  சிரோசிஸ். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இறந்துபோய்விட்டார்

சிறப்பு ஆயுதப்படைச் சட்டம் நீக்கம்- வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகம் - விலக்கப்பட்ட தகவல்கள்

படம்
  1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதப்படை சட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில் சில மாவட்டங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டது. அசாம், நாகலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள், இதன் பயனைப் பெறுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகலாந்தில் சிறப்பு ஆயுதப்படையினரால் 13 மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்பற்றி எழுதிய தமிழ் ஊடகங்கள் தொட்டு தடவிக்கொடுத்தது போல தலைப்பிட்டு அரசுக்கு கோபம் வராதது போல செய்தியை தலைப்பை உருவாக்கின. அந்த சம்பவம்தான் ஆயுதப்படை விலக்கத்திற்கு முக்கியமான காரணம். அங்கு ராணுவ ரீதியான பிரச்னைகள் 74 சதவீதம் குறைந்துள்ளன என ஆதாரத்தையும் மத்திய அரசு தனது முடிவுக்கு காரணமாக சுட்டியுள்ளது.  சிறப்பு ஆயுதப்படை சட்டம் ஜம்மு காஷ்மீரில் இன்னும் அமலில்தான் உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 3 அன்று, மூன்று அப்பாவி மக்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது.  அசாம் இங்குள்ள 23 மாவட்டங்களில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் விலக்கப்படுகிறது. பக்சா, பெர்பெட்டா, பிஸ்வநாத், போன்கைகாவோன், சிராங், தர்ராங் என நீண்டுகொண்டே செல்க

அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்கும் முரட்டு முட்டாள் பாண்டி சகோதரர்களின் கதை! கடசீல பிரியாணி

படம்
  கடசீல பிரியாணி கடசீல பிரியாணி படத்தின் மையக்கதை அப்பாவைக் கொன்றவர்களை தேடிப்பிடித்து கொல்வதுதான். அதனை படத்தின் இயக்குநர் அவல நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார். அதுதான் படத்தை தனித்துவமாக காட்டுகிறது.  ஆனால் தலைப்பு எதற்கு கடசீல பிரியாணி என வைத்திருக்கிறார்கள் என சிலர் கேட்கலாம். அதற்கான பதிலையும் இயக்குநர் இறுதியில் பதிலாக வைத்திருக்கிறார்.  பாண்டி குடும்பத்தார் மொத்தம் இருவகை. மனைவி, மாமனார், அத்தை என குடும்பமே வன்முறை கொண்டவர்களாக இருக்க கணவன், தனது கடைசிப்பிள்ளையை மட்டும் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். மூன்றாவது பிள்ளையோடு தனியாக வாழ்கிறார். இவரது மூத்த இருபிள்ளைகளும் வன்முறையான ஆட்கள் என்பதால், அவர்களை அப்பா சந்திக்கவிரும்புவதில்லை. அவர்கள் தாயோடு வெட்டும் குத்தும் கறிச்சோறுமாக வாழ்கிறார்கள்.  இந்த நேரத்தில் அப்பா, தொழில் சார்ந்து சிலரால் படுகொலை செய்யப்படுகிறார். அதனால் மூத்த இருபிள்ளைகளுக்கும் அம்மா, கொன்றவர்களை பழிவாங்கவேண்டும் என்று சொல்லி பாடம் போட்டு அனுப்புகிறார். எனவே, அவர்கள் ஒரு எமோஷனல் சப்போர்ட்டுக்காக கடைசி பிள்ளையான தம்பியையும்  கூட்டிக்கொண்டு வருகிறார்கள். தம்பிக்க

கனவுகளின் மீது கவனம் குவிக்கும் மேற்கு நாடுகள்! - கற்றதும் பெற்றதும் என்ன?

படம்
  கனவுகளின் ஆராய்ச்சி! கனவுகளை தானே கட்டமைக்கும் லூசிட் முறையில் கற்றலையும் புதுமைத்திறனையும் அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.  விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவது, சூரியனுக்கு விண்கலங்களை அனுப்புவது வரையில் முடியாத விஷயங்களே விஞ்ஞானிகளுக்கு கிடையாது. ஆனால் அவர்களையும் குழப்ப வைக்கும் விஷயம், கனவுகள்தான். நம் அனைவருக்கும் தூங்கும்போது வரும் கனவுகளைத் தான் இங்கு சொல்லுகிறோம். இந்த கனவுகள் அன்றாட நிகழ்ச்சிகள் அல்லது நிறைவேறாத ஆசைகளை அடிப்படையாக கொண்டிருக்கலாம். இவற்றை ஆய்வு செய்து உண்மையான துல்லியத்துடன் கனவுகளை பார்க்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.  பொதுவாக ஒருவர் கனவுகண்டு காலையில் எழுந்தால் 90 சதவீதம் மறந்துவிடவே வாய்ப்பு அதிகம். அப்படியும் அதனை கூறினால் அதில் நிறைய தவறுகள் இருக்கும். துல்லியமான தன்மை இருக்காது. கனவுகளை நாமே திட்டமிட்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? கனவு காணும்போதுகூட நாம் கனவில்தான் இருக்கிறோம் என்ற விழிப்புணர்வையும், அதில்  வரும் சம்பவங்களையும் கூட நம்மால் உருவாக்க முடிந்தால் அதை லூசிட் கனவுகள் என்று கூறலாம். அமெரிக்காவின்

சிறந்த திரைப்படங்கள் -2021

  சிறந்த திரைப்படங்கள் என்பவை எல்லாம் டிசம்பர் மாதத்தில்தான் வருமா என்று தெரியவில்லை. இப்போது அப்படித்தான் படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்த லிஸ்டில் உள்ள படங்கள் அனைத்தும் மேற்குலகு படங்கள். டிரெய்லர் பார்த்துவிட்டு படத்தை தரவிறக்கி பாருங்கள். படம் தரும் அனுபவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.  தி பவர் ஆப் தி டாக் ஜேன் காம்பியன் எடுத்த படம். காட்டில் ரேஞ்சராக உள்ள அண்ணனுக்கும் அவரது தம்பிக்கும் உள்ள உறவு, அவர் கல்யாணம் செய்து கூட்டிவரும மனைவி, மகன் ஆகியோருக்குமான உறவு சிக்கல்கள்தான் கதை. பெனடிக்கின் வெறுப்பு உமிழும் நடிப்பு ஏற்கெனவே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதை விட முக்கியமானது. விமர்சனங்களை ஓரம்கட்டிவிட்டு படத்தைப் பார்ப்பதுதான்.  பேரல்லல் மதர்ஸ் பெட்ரோ அல்மோடோவர் எடுத்துள்ள மெலோடிராமா. பெனலோப் க்ரூஸ் மத்திய கால வயது பெண்ணாக நடித்துள்ளார். ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அவரது கொள்ளுத்தாத்த கொல்லப்பட்டு உடல் தூக்கியெறியப்படுகிறது. அதற்கான நீதியை எப்படி பெறுகிறார் என்பதுதான் கதை. வலி நிறைந்த நாட்டின் வரலாற்றை இயக்குநர் உணர்ச்சிகரமாக சிறப்பாக எடுத்திருக்கிறார்.  தி வொர்ஸ் பர்சன் இன் தி

செவ்வாயில் புத்தம் புதிய நகரம்!

படம்
  செவ்வாயில் புத்தம் புதிய நகரம்! செவ்வாயில் மக்களை குடியமர்த்துவதற்கான நகரத்தை அமைக்க சீனா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன.  அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹோம் விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2117ஆம் ஆண்டில் அங்கு நகரம் அமைப்பதற்கான திட்டத்தை அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்குப்பிறகு சீனாவின் தியான்வென் 1 என்ற விண்கலம் செவ்வாய்க்கு அங்குள்ள சூழல்களை ஆராய அனுப்பி வைக்கப்பட்டது. மூன்றாவதாக, அமெரிக்க நாசாவின் பெர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாயிலுள்ள வேதியியல் பொருட்களைப் பற்றி ஆராய அனுப்பி வைக்கப்பட்டது.  உலக நாடுகளிடையே செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் சங்கம் என்ற அமைப்பு, செவ்வாயில் நகரத்தை அமைப்பதற்கான திட்டங்களை அனுப்பி வைக்க கோரியது. இதற்காக, உலக நாடுகளிலிருந்து 175 குழுக்கள் நகர வடிவமைப்பு திட்டங்களை அனுப்பி வைத்துள்ளன. இதில் பங்கேற்ற சோனெட் எனும் குழுவின் திட்டத்தைப் பார்ப்போம். .நுவா நகரம் எனும் இத்திட்டப்படி செவ்வாயில் நிலத்திற்கு கீழே வீடுகள

குற்றங்களை ஃபேன்டசி கலந்து சொன்னால் எப்படியிருக்கும்?

படம்
  குற்றங்களின் விவரிப்பு கொலைகளை செய்தவர்களை கூட்டிச்சென்று எப்படி செய்தார்கள் சென்று செய்துகாட்ட வைப்பது காவல்துறையின் முக்கியமான பணி. குழப்பமான கொலை வழக்குகளில் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த முறையை அனைத்து கொலைகாரர்களிடம் செயல்படுத்த முடியாது. சீரியல் கொலைகாரர்கள், கொலைகளை பற்றி சொல்லுவார்கள். உண்மைதான். ஆனால் தங்களது மனதிலுள்ள ஃபேன்டசி விஷயங்களையும் சேர்த்து சொல்லுவார்கள். இதனால் அது உண்மையா, கனவா என்று கூட குழப்பமாகும் அபாயம் உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது. கொலைகளை பலமுறை தங்கள் மனதிலேயே அவர்கள் செய்து பார்த்து ரெடியாகிறார்கள். இதனால் நேரடியாக அதனை செய்யும்போதுகூட இல்லாத தகவல்களை விசாரணையில் கூறுவார்கள்.  ஸ்டான்லி குப்ரிக்கின் கிளாக்வொர்க் ஆரஞ்ச் படத்தில் வரும் அலெக்ஸ் எனும் சைக்கோபாத் பாத்திரம் முக்கியமானது. அதனை சரிவர பலரும் புரிந்துகொள்ளாமல் இதேபோல வன்முறை அதிகமாக இருக்கிறது. இயல்பாக பாத்திரம் அமையவில்லை என்றார்கள். சரிதான். நாம் பார்ப்பது அந்த பாத்திரம் சொல்லும் தனது கோணத்திலான கதையை என்பதை மறந்துவிடக்கூடாது.  விசாரணையில் சீரியல் கொலைகார ர்கள் பேசுவதுதான் அவர்களது

பெருந்தொற்றுகாலத்தை எதிர்கொள்ள முடியாத இளைஞர்கள் வீடியோகேமில் மூழ்கிவிடுகின்றனர்!

படம்
                  ஜெனிபர் கொலரி குழந்தை வளர்ப்பு வல்லுநர் பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் பலரும் மன அழுத்தம் , பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரே ? குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது . இதில் பல்வேறு விதமான நம்பிக்கைகள் , பிளவுகள் உள்ளன . 1960 ஆம் ஆண்டில் உங்கள் குழந்தையை அழ விடுங்கள் என்று கோட்பாடு ஆட்சி செலுத்தியது . குடும்பத்தில் குழந்தை மீது அதிகாரம் செலுத்துவது , சுதந்திரமாக விடுவது என்பது பல்வேறு கட்டங்களில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது . இப்போது குழந்தைகளுக்கு காலகட்ட நெருக்கடி காரணமாக பதற்றம் , மன அழுத்தம் , ஏடிஹெச்டி தொடர்பான அறிகுறிகள் உள்ளன . சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களைப் பேசும் இளைஞர்கள் எளிதில் பதற்றம் , மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர் . இவர்கள் தங்கள் நண்பர்களிடமும் , பிறரிடமும் கூட இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு , அதற்கு சாப்பிடும் மருந்துகளைப் பற்றி பேசுகிறார்கள் . ஆனால் விரைவில் நம்பிக்கையற்று போய்விடுகிறார்கள் . இந்த வகையில் யாரும் நம்பிக்கை பெ

நோ சொன்னால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

படம்
                    நோ சொல்லிப்பழகுவது கடினமாக இருக்கிறதா ? எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது எப்போதும் சாத்தியமில்லை . ஆனால் அப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு . இதனால் பிறருக்காக நிறைய விஷயங்களை ஓகே சொல்லி மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் அனேகம் . நோ என்று சொல்லுவது குழந்தையாக , சிறுவனாக இருக்கும்வரை ஓகேதான் . பிடிவாதக்காரன் என்று விட்டுவிடுவார்கள் . ஆனால் வேலையில் இதனை சொல்லும்போது அதனை எளிதானதாக பார்க்க மாட்டார்கள் . ஆம் , இல்லை என்று சொல்லப்படும்போது அது எப்படி மக்களிடம் விளைவுகளை உருவாக்குகிறது என்பதை அனைவருமே உணர்ந்திருப்பார்கள் . இதுபற்றி உளவியலாளர் டாக்டர் ஹாரியட் பிரைக்கர் தி டிசீஸ் டு ப்ளீஸ் க்யூரிங் தி பீப்பிள் ப்ளீசிங் சிண்ட்ரோம் என்ற நூலில் விளக்கியுள்ளார் . பொதுவாக அனைவருக்குமான நன்மையாக அனுசரித்து செல்வதாக ஒருவர் அனைத்து விஷயங்களுக்கும் சரி , ஆம் என்று சொல்வது முதலில் சரியாக செல்வது போலவே தோன்றும் . ஆனால் பிறருக்காக இப்படி செயல்படும் தன்மை , ஒருவருக்கு உடல்நலம் , மனநலத்தை அழித்து பல்வேறு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் .

பொதுமுடக்கத்தில் மனதிற்கு நம்பிக்கையூட்டும் சில நூல்கள்... உங்களுக்காக....

படம்
                  பொதுமுடக்கத்தில் படிப்பதற்கான சில நூல்கள் தி ஹேப்பியஸ்ட் மேன் ஆப் தி எர்த் எடி ஜாகு எப்படி யூத இனத்தில் பிறந்து வதை முகாம்களிடையே தப்பித்து ஏழு ஆண்டு கள் வாழ்ந்தார் , இந்த நரகமான காலத்தில் வாழும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கச் செய்தது எது , எப்படி தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார் என்பதை புன்னகையுடன் நீங்கள் படித்து ஆறுதல் பெறலாம் . டீம் கைண்ட்னெஸ் - எ ரிவல்யூஷனரில் கைட் பார் தி வே பார் வீ திங்க் , டாக் அண்ட் ஆக்ட் இன் கைண்ட்னெஸ் உலகம் பல்வேறு சுயநலனுக்காக அரசியலுக்காக பிளவுபட்டு வருகிறது . இந்த இடைவெளியை எப்படி கருணை கொண்டு நிரப்புவது என ஆராய்கிறது இந்த நூல் . கருணையை தினசரி நாம் செய்யும் செயல்கள் மூலம் எப்படி நடைமுறைப்படுத்துவது , அன்பை பிறருக்கு வழங்குவது எப்படி என நூல் வழிகாட்டுகிறது . தி பாய் தி மோல் , தி பாக்ஸ் அண்ட் தி பாக்ஸ் நான்கு நண்பர்களின் வாழ்க்கை வழியாக நம்பிக்கையையும் , நட்பையும் பரப்பும் நூல் இது . 2019 இல் வெளியான நூல் இதுவரை பத்து லட்சம் பிரதிகள் விற்றுள்ளது . நூல் எளிமையாக படிக்கும்படியும் , இதிலுள்ள வசனங்

புதிய பழக்கங்களை எப்படி கற்றுக்கொள்வது? - மூளையில் பழக்கவழக்கங்களை எப்படி பதிய வைக்கலாம்

படம்
            இலக்கு நோக்கிய பயணம் வாழ்வதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வியை தனது வாழ்நாளில் ஒருவர் சந்திக்கவேண்டும் . அப்படி சந்திக்காதபோது பிறரின் மீதான அக்கறை ஒருவருக்கு குறைந்துபோய்விடும் என டாக்டர் ரொமான்டிக் தொடரில் டீச்சர் கிம் கூறுவார் . குறிப்பிட்ட நோக்கம் இல்லாத வாழ்க்கை என்பது சலிப்பான மோசமான விஷயங்களுக்குத்தான் அழைத்துச்செல்லும் . முயல் தனது கேரட்டை எடுக்க வழிகாட்டிய புதிர் பலருக்கும் நினைவிருக்கும் . இதுபோல நோக்கங்களை மையமாக வைத்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் . நோக்கங்களை தேடுவதை பயிற்சியாக கொண்டால் அதனை அடையும் வழி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை . பாதை நினைவிருக்கும் என்பதால் முயல் போலவே நமது மூளையும் எளிதாக அதனை அடைந்துவிட முடியும் . தூண்டுதல் பற்பசை விளம்பரத்தை பார்த்துவிட்டு தூண்டுதலில்தான் ஹைப்பர் மார்க்கெட்டை வேட்டையாட கிளம்புகிறோம் . சுத்தமான பற்கள் , நம்பிக்கை அளிக்கும் என ஸ்லோகனை பயன்படுத்துகிறார்கள் . இதுபோல தூண்டுதல்தான் பழக்கத்தை தொடங்க உதவும் . உடற்பயிற்சி , நல்லுணவு , தூயஆடை , ஆளுமை மாற்றங்கள் ஆகியவையும் பிறரைப் பார்த்து காப்பி