இடுகைகள்

எளிமையும் வசீகரமுமான வாழ்க்கையை ஒளிரச் செய்யும் பாடல்களின் அணிவகுப்பு - காலமெல்லாம் கண்ணதாசன்

படம்
         காலமெல்லாம் கண்ணதாசன் ஆர் சி மதிராஜ் இந்து தமிழ்திசை பதிப்பகம் இந்த நூலின் மதிராஜ், மொத்தம் முப்பது கண்ணதாசன் பாடல்களை எடுத்துக்கொண்டு அப்பாடல்கள் ஏற்படுத்தும் மன உணர்வுகளை திரைப்படத்திற்குள்ளே, அதைத்தாண்டி ஏற்படுத்தும் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். முப்பது பாடல்களைப் பற்றி நீங்கள் படித்ததும். அதைக் கேட்க முயல்வீர்கள். திரும்ப அப்பாடல்களை கேட்பதன் வழியாக கண்ணதாசனின் மேதமையை உணர முயல்வோம். உண்மையில் நூலாசிரியர் அதைத்தான் விரும்புகிறார் என உறுதியாக கூறலாம். நாளிதழில் தொடராக வந்த காரணத்தாலோ என்னவோ, நடப்புகால சம்பவங்களை சில பாடல்களுக்குள் கூறுகிறார் மதிராஜ். ஆனால் அதெல்லாம் பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு பாடல் இயக்குநர் சூழல் சொல்ல, பாடலின் மெட்டு கேட்டு உருவாக்கப்படுகிறது. அதை பின்னாளில் கேட்பவர், தான் உணர்ந்த விஷயங்களுக்கு ஏற்பட அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் மாறும் காலத்திற்கு ஏற்ப யோசித்துப் பொருத்துவது எந்தளவு பொருந்தும் என்று புரியவில்லை. கண்ணே கலைமானே, செந்தாழம் பூவில், உள்ளத்தில் நல்ல உள்ளம், நெஞ்சம் மறப்பதில்லை, நான் நிரந்தரமானவன் ஆகிய அத்தியாயங்கள் சிறப்ப

டைம் 100 - அகதிகளுக்கு உணவகத்தில் வேலை கொடுத்து ஆதரிக்கும் மனிதநேய உணவக உரிமையாளர்

படம்
            அஸ்மா கான் உணவக உரிமையாளர், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் asma khan அஸ்மா கான், லண்டனில் டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். அதில் ஏராளமான இந்திய உணவு வகைகள் சுவையாக கிடைக்கின்றன. அது விஷயமல்ல. அதை அவர் தனக்கு கிடைத்த பயிற்சி மூலம் கூட செய்யலாம். அந்த உணவுகளை தயாரிப்பவர்கள் அனைவரும் பெண்கள். அத்தனை பேருமே தெற்காசியாவில் இருந்து மேற்கு நாடுகளுக்கு பிழைக்க வந்த அகதிகள். அவர்களுக்கு முறையான உணவு தயாரிப்பு பயிற்சி கூட இல்லை. ஆனால், அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தனது டார்ஜிலிங் உணவகத்தை தனித்தன்மை கொண்டதாக மாற்றி வருகிறார். டாப் செஃப் என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு சுவையான தனித்தன்மை  கொண்ட உணவு வகைகளை தயாரித்து வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது. பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார் அஸ்மா கான். தற்போது, டிஃபன் ஸ்டோரிஸ் என்ற ஆவணப்பட தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். இதில், அஸ்மா இந்திய உணவு வகைகளைப் பற்றி விளக்கி பேசுகிறார். அஸ்மா சிறந்த தொகுப்பாளர் மட்டுமல்ல, அற்புதமான உணவுசேவையை வழங்கி

டைம் 100 - சிக்கில் செல் நோயைத் தீர்க்கும் சிகிச்சையைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்!

படம்
            ஸ்டூவர்ட் ஆர்கின் stuart orkin மரபணு தொடர்பான நோய்களை தீர்ப்பது, குணப்படுத்துவது, குறைந்தபட்சமான வலி, வேதனையை குறைப்பது கடினமான ஒன்று. உலகமெங்கும் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்கள் விடாமுயற்சியோடு செயல்பட்டு, சிகிச்சையை மேம்படுத்த, தீர்வுகளைக் கண்டறிய முயன்று வருகிறார்கள். அவர்களில் முக்கியமான ஆராய்ச்சியாளர், ஸ்டூவர்ட் ஆர்கின். இவர் சிக்கில் எனும் நோயைக் குணப்படுத்தும் ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஹீமோகுளோபின் மரபணுவில் உள்ள டிஎன்ஏவில் ஏற்படும் மாறுதலால் சிக்கில் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரத்த செல்களின் வடிவம் மாறி, உடலில் ரத்தவோட்டத்தில் தடை ஏற்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தான நிலை. ஆர்கின், கிரிஸ்பிஆர் நுட்பத்தை சிக்கில் நோயைத் தீர்க்கும் சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார். கிரிஸ்பிஆர் சிகிச்சையாளர்கள், வெர்டெக்ஸ் பார்மசூட்டிகல் நிறுவனம் ஆகியோர் இணைந்து ஆர்கினின் கண்டுபிடிப்பை சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுவிட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெற்ற அனுமதி மூலம், சிக்கில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் கிரிஸ்பிஆர் நுட்பம் மூலம் ஆரோக்கியமான ஹீம

டைம் 100 - நீரிழிவு, உடல் பருமன் தொடர்பாக ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள்

படம்
              ஸ்வெட்லானா மோஜ்சோவ், ஜோயல் ஹேபனர், டான் டிரக்கர் ஆராய்ச்சியாளர்கள் svetlana mojsov joel habener dan drucker நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியமான விஷயம் என்றால், அந்நோய் காரணமாக அதிகரிக்கும் உடல் எடை இன்னொரு பெரிய பிரச்னை. எனவே, உடல் எடையைக் கட்டுப்படுத்துவது பற்றி அமெரிக்கா, ஐரோப்பா என உலகமெல்லாம் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நீரிழிவு நோய்க்கும் அதோடு தொடர்புடைய இன்சுலின், இன்கிரிடின்ஸ் ஆகியவற்றைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன் வழியாக குளுகாகோன்ஸ் என்ற ஹார்மோனுக்கும் உடல் எடைக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் குடல் அறுவை சிகிச்சையொன்று நடைபெற்றது. அதில், குளுகாகோன், இன்சுலின் அளவை அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர் ஜென்ஸ் ஜூல் ஹோஸ்ட் அடையாளம் கண்டார். இந்த நேரத்தில் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த டான் டிரக்கர், ஜோயல் ஹேபனர் ஆகியோர் ஜிஎல்பி -1 எனும் குளுகாகோன் வடிவத்தைக் கண்டறிந்தனர். டிரக்கர், ஜிஎல்பி-1 வடிவத்தை துல்லியமாக கண்டறிந்து இன்சுலினை அதிகரிப்பதை அடையாளம் கண்டுள்ளார். இதை மையமாக

Time 100 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆராய்ச்சியாளர்!

படம்
           யோசுவா பென்ஜியோ செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் yoshua bengio யோசுவா, 2018ஆம் ஆண்டு டூரிங் விருதை தனது செயற்கை நுண்ணறிவு விருதுக்காக பெற்றார். இவருடன் ஹின்டன், யான் லெகன் ஆகியோரும் இந்த விருதை இணைந்து பெற்றனர். யோசுவா, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை பல்லாண்டுகளாக செய்து வருகிறார். இவரது ஆராய்ச்சியின் விளைவாக, ஆழ்கற்றல் நுட்பம் புகழ்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு வெகுஜனத்தன்மை கொண்டதாக மாறுவதில் யோசுவா முக்கிய பங்காற்றியுள்ளார். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை செய்துவிட்டு புகழ்பெற்றுவிட்டு விருதுகளைப் பெற்றுவிட்டு சென்றுவிடவில்லை. அதன் இன்னொரு பக்கம், பாதகமான விஷயங்களைப் பற்றியும் எச்சரிக்கை செய்து வருகிறார். இந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அமைக்கப்பட்ட மாநாடுகளுக்குக் கூட பல்வேறு ஆலோசனைகளை அளித்து வருகிறார். வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என உலகின் பல்வேறு நாட்டு அரசுகளுக்கும் தனது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருகிறார். டைம் 100 ஜியோஃப்ரீ ஹின்டன்

மழைக்காலத்தின் ஒரு சிறு வெயிற்பொழுது, வெயில்தோரணம் - சிறு நூல்கள் வெளியீடு

படம்
            மழைக் காலத்தின் ஒரு சிறு வெயில் பொழுது, வெயில் தோரணம் என்ற இரு நூல்களையும் மோகனசுந்தரம் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலின் மூலம் கூட மயிலாப்பூரில் முதலியார் சத்திரம் அருகே அமைந்திருந்த பழைய புத்தக கடையில் கிடைத்தது. அதை சிறிய மாற்றங்களுக்கு உட்படுத்தி மின்னூலாக மாற்றினோம். இரண்டுமே சிறுநூல்கள்தான். கல்லூரி கால வாழ்க்கையில் ஒருவன் சந்திக்கும் ஆண், பெண், நட்பு, காதல், பிரிவு, கொண்டாட்டம், துயரம் ஆகியவற்றை இந்த சிறு நூல்கள் இரண்டும் பேசுகின்றன. இந்த நூல்கள் கோமாளிமேடையில் முன்னமே வெளிவந்தவைதான்.            நூலை வாசிக்க கிளிக் செய்யுங்கள். https://archive.org/details/mosvp https://archive.org/details/vtbk_20240611   இதுவரை பதிவிட்டுள்ள பிற நூல்களை வாசிக்க... https://archive.org/details/@arasukarthick

pachai sivappu pachai: பசுமை அரசியல் தத்துவ நூல் (Tamil Edition) Kindle Edition

படம்
                      பச்சை சிவப்பு பச்சை நூல், பசுமை அரசியல் கட்சிகளின் தோற்றம், தத்துவம், வளர்ச்சி, தேர்தல் வெற்றி ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. இன்று உலகம் முழுக்க பசுமைக்கட்சிகள் உருவாகி தேர்தலில் பங்கேற்று வருகின்றன. இதன் தொடக்கப்புள்ளி சூழல் அமைப்புகள்தான். அந்த அமைப்புகளில் இருந்த சிந்தனைவாதிகள், அறிவுஜீவிகளால்தான் பசுமைக்கட்சிகள் உருவாகின. உண்மையில் இந்த கட்சிகளில் அடிப்படை என்ன, எந்த கொள்கை, தத்துவத்தில் இயங்கி வருகின்றன என்பதை ஆராய்ச்சி நோக்கில் வாசகர்களுக்கு காட்டுகிற நூல் இது. சூழலை அரசியலில் இருந்து எப்போதும் பிரிக்க முடியாது. ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறும்போது இன்னொருபுறம் அந்நாட்டு மக்கள் சூழல் கேடுகளால் தீராத நோய்களுக்கு உள்ளாவதை அனைவரும் கண்டு வருகிறோம். சூழல் பற்றிய கவனத்தை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நூல் முக்கியத்துவம் கொண்டதாகிறது.     click https://www.amazon.in/dp/B0D6MZRSSQ

இந்திய அரசின் ஓய்வூதிய நிதிச்சுமையைக் குறைக்கும் அக்னிபாத் திட்டம்!

படம்
  இ்ந்திய அரசின் அக்னிபாத் திட்டம் - எதிர்ப்பு ஏன்? 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அக்னிபாத் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அறிவிக்கப்பட்ட காலம் தொடங்கி, அத்திட்டம் எதிர்க்கட்சிகள்,  முன்னாள் ராணுவ வீரர்கள் என கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி அக்னிபாத் திட்டத்தை எதி்ர்த்து பிரசாரம் செய்தது. இங்கெல்லாம் பாஜக நிறைய இடங்களை இழந்ததற்கு அத்திட்டம் கூட காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத சிறுபான்மை பாஜக அரசுக்கு, ஐக்கிய ஐனதாதளத்தின் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் அக்னிபாத் திட்டத்தை மறுசீராய்வு செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். கடந்த இருமுறை பெரும்பான்மை பெற்ற பாஜக அரசு இம்முறை நினைத்த வெற்றியை பெறமுடியாமல் பின்தங்கியுள்ளது. இந்த நிலைமையில் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று இணக்கமாக செல்லுமா என்ற சில மாதங்களில் தெரிந்துவிடும். அக்னிபாத் திட்டத்தைப் பற்றி பார்ப்போம். பதினேழ

தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாகிரக நெருப்புப் பொறி! - 131 ஆண்டுகள்

படம்
          131 ஆண்டுகள் - சத்தியாகிரக நெருப்பு பொறி! தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம், இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், வரலாற்று நிஜம் அப்படித்தான் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையம். அங்குள்ள ரயிலின் முதல் வகுப்பு வெள்ளையர்களுக்கானது. முறையாக முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அமர்ந்த இளம் வழக்குரைஞர், வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டார். அவர் பெயரை தனியாக நான் கூறவேண்டியதில்லை. அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆம் தேசத்தந்தையான மகாத்மா காந்திதான். அந்த சம்பவமே காந்தியை சட்டமறுப்பு அதாவது சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுக்க வைத்தது. அப்போராட்டம் தொடங்கி இந்த ஆண்டோடு 131 ஆண்டுகள் ஆகிறது. 1893ஆம் ஆண்டு, ஜூன் ஏழாம் தேதி மகாத்மா காந்தி ரயிலில் டர்பனிலிருந்து பிரிடோரியா சென்றுகொண்டிருந்தார். அப்போதுதான், ரயில் நிலைய அதிகாரி அவரிடம் தகராறு செய்தார். காந்தி, முதல் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்புக்கு செல்லவேண்டும் என மிரட்டினார். காந்தி மறுக்கவே காவலர் ஒருவரின் துணையுடன் அவரை வெ

விரைவில்...அமேசான் வலைத்தளத்தில் ---- பச்சை சிவப்பு பச்சை - தீரன் சகாயமுத்து

படம்