இடுகைகள்

ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது

படம்
    ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது ஒருவரின் அப்பா, நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியவர். வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்டு செய்யும் கடமையில் கவனம் செலுத்தவேண்டும் என நினைத்தவர். ஆனால், அவரது மகன்களோ செய்யும் அனைத்து விஷயங்களிலும் லாபத்தையே எதிர்பார்க்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? அப்படியான சூழலில், அப்பா தனது மகன்களை ஆமை முட்டைகள். அவர்களை எனது மகன்களாகவே நினைக்க முடியவில்லை என்றார். இப்படி கூறியவர் கமாண்டர் வாங் ஸென். சீனாவின் தொடக்க கால கட்ட தலைவர்கள் உடுத்தியுள்ள ஆடை எளிமையானது. ஃசபாரி சட்டை பேண்ட் அல்லது ராணவ சீருடையை உடுத்தியிருப்பார்கள். பெரும்பாலும் அழகான சட்டை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. ஆனால், அவர்களது மகன்களது வாழ்க்கை மிகவும் சொகுசானது. எளிமையான மனிதர்களிடமிருந்து வேறுபட்டது. திகைப்பூட்டும் அளவுக்கு பகட்டானது. தொண்ணூறு இரண்டாயிரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வாரிசுகள் வளம் பெற்றுவிட்டார்கள். தொடக்க கால கல்வியை பெய்ஜிங்கில் பெற்றவர்கள், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லத் தொடங்கினர். அதிபர் ஷியின் அப்பா, ஷ...

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் உண்மைகள் - காப்புரிமை இல்லாத இலவச மின்னூல் வெளியீடு!

படம்
        https://archive.org/details/20250218_20250218_0503  CC0 1.0 Universal இந்த நூல், சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பும் நோக்கத்தில் காப்புரிமை உரிமைகளை விலக்கிக்கொண்டு வெளியிடப்படுகிறது. நூலை வாசிக்க விரும்புபவர்கள் இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் இருந்து நூலை தரவிறக்கி வாசிக்கலாம்.  

வன்முறைதான் எங்கள் மொழி!

படம்
  வன்முறை ஒரு தொடர்சங்கிலியைப் போல சமூகத்தை இணைத்துள்ளது. வன்முறைக்கு ஆதாரமே, அரசுதான். சட்டப்பூர்வமாக வன்முறையை அனைவரும் ஏற்கும்படியாக மாற்றுகிறது. அமைதியாக போராடுபவர்களின் மீது துப்பாக்கியால் சுடுவது, லத்தியால் அடித்து துன்புறுத்துவது என அரசு இயங்குகிறது. மக்கள் அதிகாரம் என்பது பலாத்காரம், வலுக்கட்டாயம் இல்லாத அரசில்லாத சமூகம். அங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். மக்கள் சுதந்திரமாக, விடுதலையாக இருக்கலாம். ஒருநாள் நீங்கள் காலையில் எழும்போது உங்கள் நாட்டில் அரசு அமைப்பு இல்லையென்று தெரிகிறது. உடனே என்ன தோன்றும்? அதுநாள் வரை கொல்லலாம் என்று நினைத்த சித்தப்பா மகனை உடனே கொன்று போடலாம் என்றா? இல்லை அது மனச்சிதைவுக்கு உள்ளானவர்களின் செய்கை. இயல்பான மனிதர்கள் அப்படி இயங்க மாட்டார்கள். அரசு இல்லையென்றால், நிறைய கொள்ளை, கொலை நடக்குமோ என்று கூறுவார்கள். கொள்ளை, கொலை செய்பவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவுக்கு உட்பட்டவர்கள். அதைச் செய்யும்போது ஒருவகை மகிழ்ச்சியை உணர்கிறார்கள். எனவே, அத்தகைய செயல்களை செய்கிறார்கள். அரசு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் கொலை, கொள்ளை என்பது நடந்துகொண்...

வன்முறையைப் பயன்படுத்தி மக்களை பணிய வைக்கும் சாமர்த்தியம்!

படம்
    மேலாதிக்க சாதியினர், கையில் பத்திரிகைகளை கொண்டிருக்கிறார்கள். டிவி சேனல்களை நடத்துகிறார்கள். அரசிடம் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்கள் அதிகாரத்தை வலியுறுத்துபவர்களை வெடிகுண்டு வீசுபவர்கள், ஒழுங்கின்மை கொண்டவர்கள், பேரிடரை விளைவிப்பவர்கள் என வசைபாடி தவறான கருத்துகளை முன்முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள். முதலாளித்துவத்தைக் கொண்டுள்ள அரசு, தன்னைக் காத்துக்கொள்ள பேரிடரை ஏற்படுத்துகிறது. வன்முறையை கைக்கொள்கிறது. மக்கள் அதிகாரம், இதற்கு எதிரான இயல்பைக் கொண்டுள்ளது. அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி என இரண்டையும் உருவாக்க முனைகிறது. ஜனநாயகவாதி, முடியரசு விசுவாசி, சோசலிசவாதி, போல்ஸ்விக், மக்கள் அதிகாரர்கள் என எவரும் கூட வெடிகுண்டுகளை வீசலாம். வன்முறையைக் கையில் எடுக்கலாம். இன்றைய சூழலில் வன்முறை ஒருவரின் கையில் திணிக்கப்படுகிறது. அதை மக்கள் எவரும் வேண்டுமென தேர்ந்தெடுக்கவில்லை. ப்ரூடஸ் தனது நண்பனான அரசன் சீசரைக் கொன்றான். அவனுக்கு தனது நண்பன் குடியரசுக்கு துரோகம் செய்துவிடுவானோ என்ற பயம் இருந்தது. ப்ரூடஸ் நண்பனை விட ரோமை அதிகம் நேசித்தான் என்று கூறமுடியாது. வி...

அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி - மக்கள் அதிகாரம்

படம்
            மக்கள் அதிகாரம் 1 தமிழ் திரைப்படங்களில் காவல்துறையினரின் கொடூரங்களை உண்மையைக் காக்க அப்படி செய்கிறார்கள் என காட்டியிருப்பார்கள். ஆய்வாளர், தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி யாரொருவரையும் கள்ளத்துப்பாக்கியால் சுடுவார். அல்லது அரசு வழங்கிய துப்பாக்கியால் சுட்டுவிட்டு எப்படி கணக்கு காட்டவேண்டுமென தனக்கு தெரியும், உரிமம் பெற்ற ரவுடி, எவுடாய்த்தே நாக்கேண்டி, சம்பேஸ்தா, கண்ட கோசேஸ்தா என பொறிபறக்க வசனம் பேசுவார். இதெல்லாம் திரையில் சரி. நிஜத்தில் பாதிக்கப்படும் மக்கள் எவரும் கல்லறையில் இருந்து மீண்டெழுந்து தனக்கு நடந்த அநீதியைக் கூறுவதில்லை. அதுதான் வன்முறையின் பலம். செத்தால் புதைத்துவிடலாம். உயிரோடு இருந்தாலும் கை, கால்களை உடைத்து விட்டால் அவன் சோறு தின்ன, மலம் கழிக்க உடல் ஒத்துழைக்கவே பல மாதங்கள் ஆகும். அதுவுமில்லாமல் வன்முறை ஏற்படுத்திய பயம் காரணமாக அரசுக்கு எதிராக அவன் சாட்சியமும் கூறமாட்டான். அரசுக்கு ஆதரவாக உள்ள தொழிலதிபர்களுக்காக, நேரடியாக அரசுக்காக என ஏதோ ஒருவகையில் மக்கள் மீது காவல்துறையின் தாக்குதல் அல்லது கொலை நடைபெறுகிறது. இப்படியாக வன்முற...

நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு கருத்துகளை கூறுகிற கட்டுரை நூல்!

படம்
          உறைப்புளி செல்வேந்திரன் கட்டுரை நூல் இந்த நூல் கிண்டிலில் வெளியானது. மொத்தம் எழுபத்தாறு பக்கங்கள். மொத்தம் பத்து கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே வாசகர்களுக்கு வாசிப்பு பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி நிறைய விஷயங்களைக்கூறுகிறது. நூலின் இறுதியாக இடம்பெற்றுள்ள கட்டுரை, நவீன கால இளைஞர்கள் தினசரி வாழ்க்கையைக் கூட அணுக முடியாமல் இருக்கிறார்கள். அதேசமயம் அவர்கள், சமூகத்தின் அனைத்தையும் மொக்கை என்ற ஒற்றைச் சொல் மூலம் எப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விமர்சனமும் கண்டனமுமாக பேசியுள்ளது. அக்கட்டுரை இறுதியாக இடப்பெற்றது சிறப்பானதுதான். வாசிப்பு ஏன் முக்கியம் என்பதை மறக்கமுடியாதபடி காட்டமாக கூறுகிறது. கல்லூரியொன்றில் ஆற்றிய உரை, எழுத்தாக்கமாக மாற்றப்பட்டு இந்து தமிழ் திசையில் வெளியாகியுள்ளது. நடப்பு விஷயங்களோடு நூலின் தொடர்பு பற்றி தேடினால், இயக்குநர் மிஷ்கின் அகப்பட்டுவிடுகிறார். நூலில் அறம் புத்தகம் வெளியிடப்பட்டபோது அந்த விழாவுக்கு அவர் வருகை தந்தபோது நடந்த விஷயங்களைப் பற்றி விவரிக்கிற கட்டுரை ஒன்றுள்ளது. அந்தக்கட்டுரை, மிஷ்கினின் எளிய மனிதர்கள...

அபினியால் அழிந்த தேசம் மீண்டெழுந்த வரலாறு! - சீனாவின் வரலாறு - வெ.சாமிநாதன்

படம்
      சீனாவின் வரலாறு வெ சாமிநாதன் பிரபஞ்ச ஜோதி பதிப்பகம் பதிப்பு 1962 தமிழ் இணைய கல்விக்கழகம் நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பு சீனாவைப் பற்றி அன்றைய காலத்தில் 81 ஆங்கில நூல்களை படித்து அதிலுள்ள விஷயங்களை எடுத்து சேர்த்து 564 பக்கத்திற்கு நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலில் அடிக்குறிப்புகளே நிறைய உள்ளன. அதுமட்டுமல்லாமல் அனுபந்தம், நூலின் முக்கிய பகுதிகள், குறிப்புகள், நூலை எழுத உதவிய மேற்கோள் நூல்கள் என அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு கூட இப்படியான தெளிவான நூலை ஒருவர் எளிதாக எழுதிவிட முடியாது. அந்தளவு நூல் சிறப்பாக தெளிவாக உள்ளது. இன்றைக்கு சீனா, தரைவழியாக, நீர் வழியாக தன்னை விரிவுபடுத்திக்கொள்ள முயன்று வருகிறது. எதற்கு இந்த கோபம், ஆக்ரோஷம் என பலரும் நினைப்பார்கள். அதற்கான விடை அதன் வரலாற்றில் உள்ளது. குறிப்பாக ஜென்ம எதிரியான ஜப்பான், சீனாவை அழித்து மக்களை வேட்டையாடிய வரலாற்றை இன்றும் சீன டிவி தொடர்களில் நீங்கள் பார்க்க முடியும். பெரும்பாலான வரலாற்றுத் தொடர்களில், திரைப்படங்களில் ஜப்பானியர்கள்தான் தீயவர்கள், வில்லன்கள். அதற்கான காரணங்களை நீங்கள் வெ ச...