இடுகைகள்

காவல்துறை ஆட்களை ஆட்டுவிக்கும் கிளர்க்கின் உளவியல் விளையாட்டு!

படம்
      ஹன்ட் மலையாளம் மஞ்சு வாரியர், இந்திரஜித், குஞ்சாகோ கோபன் சினிமா நடிகை ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அதுபற்றி விசாரிக்கும்போது, நீதிமன்ற கிளர்க் ஒருவர் பிடிபடுகிறார். விசாரித்தால், அவர் தனது மனைவியைக் கூட கொன்றவர் என தெரியவருகிறது. கடத்திய நடிகை, அவரது கூட இருந்தவர் என இருவரையும் கொன்றுவிட்டேன். ஆனால் புதைத்த இடத்தை மறந்துவிட்டதாக கூறுகிறார். இந்த விசாரணை சிறிபாலா என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பெரும் சோதனையாக மாறுகிறது. எனவே, நண்பரான சைலக்ஸ் இப்ராகிம் என்பவரின் உதவியை நாடுகிறார். கிளர்க் விசாரணையின்போது சொல்லும் தகவல்களால் குழந்தையில்லாத சைலக்ஸின் வாழ்க்கையில் நிறைய குழப்பங்கள் வருகின்றன. குறிப்பாக, மனைவி மீது தவறான உறவு உள்ளதோ என சந்தேகப்படத் தொடங்குகிறார். சிறிபாலாவுக்கு கொரியரில் சில தகவல்கள் வருகின்றன. அதன்படி தேடியதில் அவரது அப்பா, பணியின்போது விபத்துக்குள்ளானதில் நண்பர் சைலக்சின் பங்கு இருப்பது தெரிகிறது. நட்பில் உள்ள துரோகம் வலி அதிகமா, காதலித்த மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதால் கொன்றுவிட்டேன் என்று கூறும் கிளர்க்கின் வாழ்க்கையில் வலி அதிகமா என சிறிபாலா புரிந்...

பாயும் பொருளாதாரம் - பொருளாதாரத்தை அறிந்தால், பொருளாதார வல்லுநர்கள் நம்மை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்!

படம்
              பாயும் பொருளாதாரம் பொருளாதாரம் இந்தியாவில் ரூபாய் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. வேலையிழப்பு பரவலாகி வருகிறது. விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்ணாவிரதம் கூட இருக்கிறார்கள். எதேச்சதிகார ஆட்சியில் அகிம்சை எப்படி எடுபடும் என்று தெரியவில்லை. சுயதொழில் செய்பவர்கள் நிலைமை எப்படியோ, ஆனால், மாதச்சம்பளக்காரர்களிடம் பறிக்கும் வரிக்கொள்கை புதிதாக அமலாகிவிட்டது. மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு சேவை வரி பதினெட்டு சதவீதம் என்றால், பணக்காரர்களுக்கு அத்தியாவசியமான வைரத்திற்கு ஐந்து சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவு வரி தீவிரவாதம் அதிகரித்தாலும் கல்வி, மருத்துவம், தங்குமிடம், உணவு என பலவற்றுக்கும் அரசு எந்த பொறுப்பும் ஏற்காது. இதையெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். பொருளாதாரம் பற்றி அறிந்துகொண்டால் அதைப்பற்றிய விழிப்புணர்வைப் பெற்று நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிய அறிமுகத் தொடர் இது. பொருளாதாரம் என்றால் வங்கிகள், பங்குச்சந்தை, அப்புறம் வினோதமான வரைபடங்கள் என ட...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்!

படம்
    தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்! இன்று இந்தி மொழி திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிவது என்ன? ஆபாச வக்கிரமான காட்சிகள், பெண்களை இழிவாக நடத்துவது, அளவற்ற வன்முறை, மதவாத அரசியலை ஊக்குவிக்கும் அரசுக்கு ஆதரவான படங்கள் என்றுதான் நிலைமை உள்ளது. கதைக்கு தேவையோ இல்லையோ படத்தினுள் கற்பனைக் கதையான அரசியலுக்கு உதவும் ராமாயணம் வந்துவிடும். எதற்கு என பார்வையாளர்களுக்கே புரியாது. இப்படிப்பட்ட குப்பைகளை எடுப்பதற்கு பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. சிலவேளைகளில் இதுபோன்ற மதவாத படங்களை நாட்டின் ஆட்சித்தலைவரே. தனது அமைச்சரவையில் உள்ள குற்றவாளி அமைச்சர்களுடன் அமர்ந்து கண்டு காண்பார். அதைப்பற்றிய பெருமைமிகு விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பகிர்வார். இந்த லட்சணத்தில் வீடு இடிக்கப்படும், தொழில்களை மிரட்டி பறிக்கும் அவலமான நெருக்கடி நிலையை சிறுபான்மையினர் எப்படி பிறருக்கு கூறுவது? அதற்காக அவர்களும் கேமராக்களை, செல்போன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அரை உண்மையை மட்டுமே எடுத்து வைத்து எதிர்க்கட்சிகளை அல்லது மக்களை இழிவுபடுத்தும் கால்நக்கி ஊடகங்கள்...

ரோனி சிந்தனைகள் - மண்ணிலே சொர்க்கம் கிடைக்கும்!

படம்
        ரோனி சிந்தனைகள் குடியுரிமை அமைப்புகள், பழங்குடி மக்களுக்கான அமைப்புகளை தடை செய்துவிட்டு, நிதியுதவியை நிறுத்திவிடுவது சர்வாதிகாரத்திற்கு உதவும். பின்னே, இவர்கள் போராட தொடங்கினால் தீவிரவாத இயக்கங்களுக்கான தடையை நீக்கி செயல்படுவது எப்படியாம்? மக்களுக்கு சொர்க்கத்தை காட்டுவது ஆட்சியாளர்களுக்கு மகத்தான லட்சியக்கனவாக இருக்கக்கூடும். ஆனால், சொர்க்கத்தைப் பார்த்தால் உயிரை விட வேண்டியிருக்குமே என மக்கள் புரிந்துகொண்டால் சரிதான்... குற்றங்களை செய்தீர்களே என யாராவது புகார் சொல்கிறார்களா,  பதற வேண்டாம். அப்படி சொல்பவர்களையும் குற்றத்தில் பங்குகொள்ள வைத்துவிட்டால். குற்றச்சாட்டுகளே எழாது. எப்போதும் போல ஊழலை செவ்வனே கர்மயோகியாக தொடரலாம். உண்மைக்குத்தான் நிரூபணம் தேவை. பொய்க்கு கிடையாது. பொய்யால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்தினாலே வெற்றிதான் என்பதை பொய் கூறுபவர்கள் தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள். நல்லவனை கெட்டவனாக காட்டுவதற்கு இழிவுபடுத்துவதற்கு விசுவாச ஊடகங்கள் ஏராளம் உண்டு. அரசு, அவர்களுக்கு சொல்லாமல் விட்ட இன்னொரு வேலை, நல்லவனாக வேடமிட்டு மோசமானவர்கள் செய்யு...

உலகிற்கு சிந்தனையால் வழிகாட்டும் சீன செவ்வியல் சிந்தனையாளர்களின் கருத்துகள்!

படம்
  ஷி ச்சின்பிங் - ஹவ் டு ரீட் கன்பூசியஸ் அண்ட் அதர் கிளாசிக் திங்கர்ஸ் ஸான் பாங்சி சிஎன் டைம்ஸ் புக்ஸ் 2013 - 2014 என இரண்டு ஆண்டுகளில் சீன அதிபர் உள்நாடு, வெளிநாடுகளில் பல நூறு பேச்சுகளை பேசியுள்ளார். அப்படி பேசியுள்ளதில் சீன இலக்கிய எடுத்துக்காட்டுகள் அதிகம் இருந்தன. இருநூறுக்கும் மேற்பட்ட சீன பழமொழிகள் நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஷி எங்கே, எப்படி, என்ன பொருளில் சொன்னார் என நூலாசிரியர் விவரித்துக் கூறியிருக்கிறார். நூலில் உள்ள மேற்கோள்கள் கல்வி, அரசு, அரசியல் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு இருபத்தைந்து முதல் முப்பத்தைந்து வரை மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்கோள்களை கூறிவிட்டு அதை அதிபர் ஷி எப்படி பயன்படுத்தினார், என்ன பொருளில் என விளக்கிவிட்டு விரிவான விளக்கத்திற்கு செல்கிறார்கள். இப்பாதையில் நாம் பழமொழியை, கருத்தை சொன்னவர் பெயர், அவரது தகவல்களை சுருக்கமாக அறிய முயல்கிறது. அறிவுக்கூர்மை எளிதாக மரணத்தை கையோடு கூட்டி வரும் என்பதுபோல, பெரும்பாலான சீன சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் தாம் சொன்ன கருத்துக்காக செயல்பாட்டிற்காக சிறைவாசம் அனுபவித்து பிறகு, தூக்...

வணிக சந்திப்பிற்கு உணவகங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

படம்
        இன்று வணிக ரீதியாக கூட்டாளிகளை, ஒப்பந்தக்காரர்களை விடுதியில் சந்திப்பது இயல்பாகிவிட்டது. சிலர் எழுத்தாளர்களுக்கென தனி கபே நடத்துகிறார்கள். காபி கடைகளில் இணைய வசதியைக்கூட வழங்குகிறார்கள். வெளிநாடுகளில் நேர்காணல்களை நடத்துகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓரிடத்தில் முக்கியமான நபரை சந்திக்கச் செல்கிறீர்கள். அப்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். ஹோட்டல்களில் முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. உரிமையாக குறிப்பிட்ட மேசையைக் கேட்கலாம். அங்கே உட்கார்ந்து பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்துவிட்டு வரலாம். பதிவு  செய்யவில்லை என்றால் சந்திப்பை உகந்ததாக அமைய வாய்ப்பு குறைவு. ஹோட்டல்கள், உணவு, பணியாளர்களது நடத்தை பற்றிய மதிப்பீடுகளை இணையத்தில் பார்த்துவிட்டு வரலாம். சமீபத்திய விமர்சனங்களைக் கவனியுங்கள். ஓராண்டுக்கு முந்தையது வேண்டாம். குறைகள், புகார்களுக்கு எப்படி பதில் அளித்துள்ளார்கள் என பாருங்கள். நிறைய புகழ்பெற்ற உணவகங்கள் என பீற்றிக்கொள்பவர்கள் கூட குறைகளை, புகார்களை வாடிக்கையாளர் முன்வைத்தால் மௌனமாக அதை கடந்துசெல்வதை இணையத்தில் கமெண்டுகளைப் ப...

குறைந்த வேலை நேரத்தில் உழைத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?

படம்
      குறைந்த நேரம் உழைப்பு, அதிக நேரம் வாழ்க்கை அணுக்க முதலாளித்துவத்தை கொண்டுள்ள இந்தியா, தொழிலாளர் சட்டங்களை ஏற்கெனவே திருத்தி, உரிமைகளை பறித்து வருகிறது. அப்படியும் கூட மனநிறைவு பெறாத மனச்சிதைவு கொண்ட பேராசைக்கார கிழவாடிகள், இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டும் என ஊளையிட்டு வருகிறார்கள். அதாவது, உழைத்தால் அவர்களுக்கு நல்லது. சொத்து மதிப்பு ஏறும். தொழிலாளர்களுக்கு உடைந்த மண்சட்டி ஓடு கூட கிடைக்காது. மாதசம்பளக்காரர்களிடம் வருமான வரித்துறை ஜேப்படி திருடன் போல நடந்துகொள்கிறது. இந்திய அரசு வரியை வெளிநாடுகள் அளவுக்கு வாங்கிவிட்டு மருத்துவம், கல்வி, என கேள்வி கேட்டால் தனியாரிடம் துரத்திவிடுவார்கள். கார்த்திக் நேத்தாவின் வரிகளில் சொன்னால் ஒரு கண்ணில் அகங்காரம், மறுகண்ணில் ஓம்காரம் என்பது அரசைப்பற்றி புரிய வைக்க சரியாக இருக்கும். 1926ஆம் ஆண்டு ஹென்றி போர்டு, தனது கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஐந்து நாட்கள் வேலை. எட்டு மணி நேரம் உழைப்பு என்ற விதிகளைக் கொண்டு வந்தார். இதை ஒன்பது மணி தொடங்கி ஐந்து மணி வரையிலான வேலை என்று கூட குறிப்பிடும் வழக்கம் இருந்தது. அதிக நேரம் உழைக்கும் நாடு...