இனி என்ன?

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் தொடர் எப்படியோ எனக்குப் பிடித்த நவம்பர் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது மகிழ்ச்சி. இந்த எழுத்துக்கள் புத்தகமாக காகிதமாக மாறுமா என்று எனக்கு தெரியவில்லை. எந்த வாக்குறுதிகளை இப்போது நான் நம்புவதில்லை. நான் முடிந்தவரை மூலத்துக்கு நேர்மையாக இருந்திருக்கிறேன். என்னுடைய நோக்கமெல்லாம் இதில் பவுலோஸ் வெளிப்படவேண்டும் என்பதுதான். ஆனால் லாய்ட்டர் லூன் வெளித்தெரிந்தால் நிச்சயம் இது மலினமான மொழிபெயர்ப்புதான். ஐயமில்லை.
   
      இனி இதுபோல நெடுந்தொடர்கள் சில காலம் எழுதப்போவதில்லை. தனிமனிதர்கள் குறித்த கட்டுரைகளின் மேல் கவனம் குவிக்க ஆசை. மேலும் வேறு வேலைக்கு வேறு நான் முயற்சி செய்யவேண்டும் என்கிற அலுவலக நெருக்கடி வேறு. தொடர்ந்து வலைப்பூ எழுதுவது கடினமாகி உள்ளது. என்னிடம் சொந்த கணினி கிடையாது. இந்நிலையில் அலுவலகத்திற்கு நேரமே சென்று தட்டச்சு செய்து பதிவிட்டதுதான் இந்த முழு நூலுமே. படித்த கருத்துக்களை கூறிய மெய்ஞானிகளுக்கு நன்றி.