இடுகைகள்

மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி டைனோசர்களின் வாழ்நாள் பற்றி கூறுங்களேன். டைனோசர்கள் குறைந்தது எழுபத்தைந்து தொடங்கி முந்நூறு ஆண்டுகள் வரை வாழும். நீண்ட ஆயுள் காலம் என்பதால் அதன் முதிர்ச்சி பெறும் நிலையும் மிக மெதுவாக நடைபெறும். மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, வட, தென் அமெரிக்காவில் வாழ்ந்த விலங்கு. மூன்று மீட்டர் நீள உயரத்தில் கம்பளி போன்ற அடர்த்தியான முடிகளைக் கொண்டது. முப்பத்து எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை உயிர் பிழைத்திருந்தது. இதற்கு நேராக வளர்ந்த தந்தங்களும் உண்டு. டைனோசர்கள் அழிந்துபோனதற்கு காரணம் என்ன? அவை அழிந்து அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. காலநிலை மாற்றம், பிற உயிரினங்களோடு போட்டியிட முடியாத நிலை, முட்டைகளை பிற உயிரினங்கள் அழித்தது, இயற்கை பேரிடர் என நிறைய காரணங்கள் உள்ளன. இவை எல்லாமே ஊகங்கள்தான். எவையும் உறுதியானவை அல்ல. அழிவின் விளிம்பில் , அச்சுறுத்தல் நிலையில் என்று கூறப்படுவதற்கு என்ன பொருள்? அழிவின் விளிம்பில் உள்ளதை கவனிக்கவேண்டும். அந்த பட்டியலில் உள்ளதை ...

வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு!

படம்
    வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு! மதவாத நாடான இந்தியாவில் எப்போது  வேண்டுமானாலும் கலவரங்கள், கும்பல் வல்லுறவு, இந்து குண்டர்கள் கொள்ளை என எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இதுபோல பருவ காலங்களில் நடைபெறும் இயற்கை பேரிடர்களும் அதிகரித்து வருகிறது. அப்படியான சூழலில் ஒருவர் தன்னை எப்படி காத்துக்கொள்வது என்று பார்ப்போம். உணவு, மருத்துவ சிகிச்சைக்கான பொருட்கள், போகும் இடம், வழிப்பாதை ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியம். கோவிட் வந்தபிறகு நிறையப்பேர் தனியாக இஎம்ஐ கட்டியேனும் வண்டி வாங்கிவிட்டார்கள். நமது மக்கள், நாம் செத்தாலும் கூடவே நான்கு பேரை இழுத்துச்செல்லவேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டவர்கள். தும்மும்போதும் இருமும்போதும் கூட கைக்குட்டை பயன்படுத்த மறுப்பவர்கள். எனவே, உயிர்பிழைக்கவேண்டிய நேரத்தில் நீங்கள் பிறரது வாகனங்களை எதிர்பார்க்க கூடாது. எந்தளவு வேகமாக செல்கிறீர்களோ, அந்தளவு நல்லது. தாமதம் செய்தால், சாலையில் கூட்டம் சேர்ந்துவிடும். அப்போது நீங்கள் என்ன முயன்றாலும் வேகமாக செல்லமுடியாது. அவரவருக்கு அவரவர் உயிர், சொந்தம், பிள்ளை குட்டி கருப்பட்டிதானே ஐயா... வயதானவர்கள், குழந்தைகள் ...

டைனோசர் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியது யார்?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி காற்று மாசுபாடு என்றால் என்ன? விவசாயிகள், கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதுதான் காற்று மாசுபாடு என ஒன்றிய அரசு கூறுகிறது. அதெல்லாம் கிடையாது. கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டையாக்சைடு ஆகிய வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதே காற்று மாசுபாடு என்ற வரையறைக்கு பொருந்தும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், குப்பைகள், கழிவுகளை எரித்தல், படிம எரிபொருட்களை பயன்படுத்துதல், இரும்பு உருக்கு ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள் மூலமாகவும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. வேளாண்மையை விட தொழிற்சாலை மூலமே அதிக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நோய்கள் என்னென்ன? ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், தலைவலி, உளவியல் பிரச்னைகள், நெஞ்சுவலி ஆகியவை ஏற்படும். பொல்யூடன்ட் ஸ்டேண்டர்ட் இண்டெக்ஸ் என்றால் என்ன? மாசுபாட்டு தொகுப்பு பட்டியல். இந்த பட்டியலில் பூச்சியம் முதல் ஐநூறு வரை பிரிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பொறுத்து பாதிப்பை அடையாளம் காணலாம். இந்த அளவீட்டு முறையை அமெரிக்கர்கள் கண்டுபிடித்தனர். தேசியளவில் 1978ஆம் ஆண்டு விரிவுபடுத்...

பூச்சிமருந்து கண்டுபிடிக்கும் பேராசிரியர் நகரத்தில் சக்திவாய்ந்தவர்களை நண்பனுக்காக பலியெடுக்கும் கதை!

படம்
 ஆயுதம் தெலுங்கு ராஜசேகர், குர்லின் சோப்ரா, சங்கீதா பேராசிரியர் சித்தார்த்தன், தனது ஆருயிர் நண்பனைக் கொன்ற மூன்று அதிகார பலம் பெற்றவர்களை நேரம் குறித்து சவால்விட்டு கொல்கிறான். கொல்வதில் எப்போதும் போல பெரிய சுவாரசியம் ஏதுமில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக சித்தார்த்தனின் நண்பன் இறந்தான் என்பதே ஒரே சுவாரசியம். டாக்டர் ராஜசேகரின் படம். படம் முழுக்க அவரின் ஆதிக்கம்தான். குர்லின் சோப்ராவுக்கு பக்கத்து ஊர் தலைவரின் மகள் வேடம். நடிப்பிற்கு வாய்ப்பில்லை. காட்சிகளில் கவர்ச்சி காட்டி பாடல்களை பார்க்கும்படி செய்கிறார். சொந்த மாமன் மகள் சங்கீதாவுக்கும் இதே வேலைதான். அடிக்கடி திகைப்புக்கு உள்ளாக்கும்படி கவர்ச்சிப் பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வந்தே மாதரம் ஶ்ரீனிவாஸி்ன் இசை கேட்கும்படி இருக்கிறது. படத்தில் சித்தார்த்தன் பாத்திரம், விவசாய மருந்துப்பொருள் கண்டுபிடிப்பாளர். படத்தின் தொடக்க காட்சியில், தொழிலதிபரின் வீட்டில் அவரது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அவர்கள் கொடூரமானவர்கள் என்பதைக் காட்ட வேலைக்கார சிறுமியை வல்லுறவு செய்கிறார்கள். அதுவும் மூன்றுபேர். எதற்கு இதுமாதிரியான ...

இறந்துபோனவராக கருதப்பட்ட ராணுவ வீரர் திரும்ப கிராமத்திற்கு வருகிறார்!

படம்
  மெயின் ஹூம் மூசா மலையாளம் சுரேஷ்கோபி கேரள கிராமம். அந்த கிராமத்தில் மூசா என்ற ராணுவ வீரர் பிரபலம். கார்கில் போரில் பலியானதால், அவருக்கு சிலை வைத்து கல்லறையைக் கூட ஊரின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இறந்துபோனதாக கருதப்படும் மூசா பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறார். அங்குள்ள அவரின் நண்பர்கள், உறவு, குடும்பம் எல்லாம் என்னாகிறது என்பதே கதை. ஒரு ராணுவ வீரன், அவனுடைய குடும்பம், அவனை மறந்துவிட்டது. அவனை பயன்படுத்தி உள்ளூரில் வாக்குகளைப் பெறுகிறார்கள். அவனது மனைவி, மூசாவின் தம்பியை மணந்துகொள்கிறாள். மூசா ராணுவத்தில் வேலை செய்து செத்து்ப்போனதால் ஓய்வூதியம் கிடைக்கிறது. அதை முழுக்க அனுபவிக்கிறார்கள். ஆனால், மூசா உயிரோடு திரும்ப வரும்போது, அவனைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் அனைவருமே அவன் செத்துப்போயிருந்தால் நல்லது என நினைக்கிறார்கள். ஒரே ஒரு விதிவிலக்கு. அவன் பால்ய நண்பன் மட்டுமே. அவன் சாராயக்கடை ஒன்றை நடத்துகிறான். மூசாவை தனது வீட்டில் தங்க வைத்து பார்த்துக்கொள்கிறான். மூசா இறந்துவிட்டதாக அனைவரும் நம்புகிறார்கள். அவன், ராணுவ அலுவலகத்திற்கு சென்று தனக்கு நேர்ந்...

சிந்தனையாளர் மாக்கியவெல்லி படைப்புகள்!

படம்
  சிந்தனையாளர் மாக்கியவெல்லி நாரா நாச்சியப்பன் இந்த நூலில், மாக்கியவெல்லி எழுதிய அரச நீதிகள், அவரின் நூல் ஆராய்ச்சி, நாடகம் கடிதங்கள், மணிமொழிகள் ஆகியன ஒன்று இடம்பெற்றுள்ளது. ஓரளவுக்கு இந்த நூல் மாக்கியவெல்லியின் பல்வேறு வித எழுத்துகளை ஒன்றாக தொகுத்து நமக்கு அளிக்கிறது. ஏற்கெனவே நாம் பிரின்ஸ் என்ற நூலை ராஜதந்திரம் என்ற மொழிபெயர்ப்பு நூல் வழியாக வாசித்துவிட்டோம். எனவே, அவற்றை தவிர்த்துவிட்டாலும் கூட வாசிக்க சுவாரசியமான பகுதிகள் உள்ளன. அதை மறுக்க முடியாது. குறிப்பாக, கடிதங்கள். அதில், அவர் தனக்கு பதவியில் நேரும் நெருக்கடிகளை, வறுமை நிலையை வெளிப்படையாக எழுதியுள்ளார். பொதுவாக கவிஞராக அறியப்பட விரும்பியவர். ஆனால், அவரை உலகம் சிந்தனையாளராகவே பார்த்தது. அரசியல் நூல்களையே முக்கியமானதாக பார்த்தது சற்று வினோதமானதுதான். தமிழ் மொழிபெயர்ப்பு நூல் முழுக்க இடர்ப்பாடு இல்லாமல் உள்ளது. ராஜதந்திரம் நூலை விட இந்த நூல் இன்னுமே தெளிவாக தனது அரச நீதிகளை முன்வைக்கிறது என கூறலாம். மாக்கியவெல்லியின் படைப்புகள் சிலவற்றை மொழிபெயர்ப்பதன் வழியாக, அவரது சிந்தனை, வாழ்க்கை நிலை, முடியாட்சியின் அவரது நிலை, குடும்ப...

விழித்தெழும் தேசம் மின்னூல் வெளியீடு....

படம்
  கோபோ, ஸ்மாஷ்வேர்ட் தளங்களில் நூலை தரவிறக்கி வாசிக்கலாம்...    https://books2read.com/u/m2DoRr

வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? ஐரோப்பாவில் ரோஜர் பாகோன் என்பவர் வெடிமருந்துக்காக சூத்திரத்தை எழுதினார். ஜெர்மனைச் சேர்ந்த துறவி பெர்த்தோல்ட் ஸ்வார்ட்ஸ் என்பவர், வெடிமருந்தை உருவாக்கினார். போரில்லாத காலங்களில் வெடிமருந்தை சுரங்கம் கட்டுமான பொறியியலுக்கும் பயன்படுத்தினர். பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், கரி ஆகியவை வெடிமருந்தை தயாரிக்க உதவுகின்றன. இந்த சூத்திரத்தில் வெடிமருந்தை சீனர்கள் தயாரித்தனர். வெடிமருந்தை மூங்கிலில் நிரப்பி, மூங்கில் தோட்டா என்ற பெயரில் போரில் பயன்படுத்தி புத்திசாலிகள் சீனர்கள். டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்? ஆய்வாளர் ஆல்பிரட் நோபல். இவரது பெயரில்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நைட்ரோ கிளிசரினை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் அஸ்கனியோ சோபிரிரோ கண்டுபிடித்தார். ஆனால், இதை பராமரிப்பது கடினமாக இருந்தது. நைட்ரோகிளிசரினை போரசுடன் சேர்த்தால், அதை கட்டுப்படுத்தலாம் என ஆல்பிரட் நோபல் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் கட்டுப்படுத்தும் இயல்பு கொண்ட டைனமைட்டை தயாரித்தார். டைனமைட் காரணமாக ஏராளமான மக்கள் இறந்த...

மௌன வசந்தம் நூலின் பங்களிப்பு!

படம்
       பல்லுயிர்தன்மை என்றால் என்ன? குறிப்பிட்ட இனத்தில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட உயிரினங்கள் இருக்கும். அதாவது அவற்றின் மரபணுக்கள் வேறுபட்டவையாக இருக்கும். உலகம் முழுக்க 15 அல்லது 100 மில்லியன் உயிரினங்கள் இருக்கும் என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏக்கர் சதுப்புநிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் பல்லுயிர்த்தன்மை அழிந்து வருகிறது. அமெரிக்கா காடுகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமா? இல்லை அரசுக்கு சொந்தமான காடுகள் இருபது சதவீதம் மட்டுமே. பெருநிறுவனங்களுக்கு பதினைந்து சதவீதங்கள் சொந்தமாக உள்ளன. ஐம்பத்தேழு சதவீத காடுகள் தனியார் சொத்துக்களாகவே உள்ளன. பருவ மழைக்காடுகளின் முக்கியத்துவம் என்ன? பருவமழைக்காடுகளில் இருந்துதான் புற்றுநோய்க்கான மருந்துகளின் மூலம் பெறப்படுகிறது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தேவையான மருந்துகளின் அடிப்படை மூலிகைகள் பருவ மழைக்காடுகளில் உள்ளன. அவற்றைப் பெறாமல் மருத்துவதுறை உயிரோடு இருக்க முடியாது. ஏகபோகமாக லாபம் ஈட்டவும் முடியாது. காடுகள் அழிவதற்கு என்ன காரணம்? வேளாண்மை, நகரங்களைக் கட்ட காடுகளை அழித்தல், காட்டுத்தீ, மழை வெள்ள...

இந்துத்துவாவிற்கு ஆதரவை திரட்டுகிற நூல்- நிலைத்த புகழ் இந்தியா - அமிஷ் திரிபாதி

படம்
  நிலைத்த புகழ் இந்தியா அமிஷ் திரிபாதி கட்டுரை நூல் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் தமிழில் மிஸ்டிக் ரைட் இருநூற்று பதினெட்டு பக்கங்களைக் கொண்ட நூலில் அமிஷ், வேதகால இந்தியாவை நவீன காலத்தில் நிதானமாக உருவாக்கவேண்டும் என நயந்து வேண்டியிருக்கிறார். வேதங்களை படிக்கவேண்டும், அதைப்பற்றி தற்பெருமை கொள்ள வேண்டும். மனு ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ற விதிகளை சட்டங்களை சொல்கின்றன. அதனால் அனைத்து ஸ்மிருதிகளும் தவறில்லை. தலித் மாணவர் ரோஹித் தற்கொலை செய்துகொள்ளப்பட தூண்டிய விவகாரம் பற்றிய கட்டுரையில், தலித்துகள் மட்டுமல்ல பெண்கள் கூட வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என அப்படியே தாவி வேறு மையப்பொருளுக்கு சென்று விடுகிறார். பின்னே யார் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று சொன்னால் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனைக்கு வருமே? அமிஷ், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொன்மை உலகை தனது புனைவெழுத்தில் உருவாக்கினார். அவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு அதில் லாபம் சம்பாதித்தார். அதோடு நிற்காமல், புனைவாக எழுதியதை பலரையும் நம்ப வைக்க முயன்று வருகிறார். வெறும் எழுத்து மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்தையும் பெற இந்துத்துவ ஆதரவ...