இயல்வாகை பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்து வருகிறேன். பால் ஒரு உயிர்க்கொல்லி எனும் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். நான் என்பதை விட நாம் என்றுதான் சொல்ல வேண்டும். சங்கர், வினோத் பாலுச்சாமி, பாஸ்கர், கார்த்திக் , பீட்டர் ,சிவராஜ ஆகியோர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. தற்போது பள்ளிக்கு வெளியே வானம் எனும் தலைப்பில் ராகுல் ஆல்வாரிஸின் அனுபவப் பகிர்வு ஒன்றினை தமிழில் இருமாதங்கள் பெரும் பாடுபட்டு மொழிபெயர்த்தேன். எப்படி அமைகிறதோ தெரியவில்லை. தட்டச்சுப் பணிகளை முடித்து சிவராஜ் அண்ணாவிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி என்னாகிறதோ , ஏதாகிறதோ!!

கருத்துகள்