இடுகைகள்

எழுத்தாளர்களின் கதையில் வரும் குழந்தைகளின் பாத்திரங்கள் - கதைகளில் பேசும் குழந்தைகள்

படம்
கதைகளில் பேசும் குழந்தைகள்  செந்தில் ஜெகன்நாதன் அகரம் ஃபவுண்டேஷன் விலை ரூ.150 ப.136 மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்ட எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் எழுதியுள்ள கட்டுரை நூல். இந்த நூல், யாதும் என்ற இதழில் வெளிவந்து பிறகு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. தொடராக வருவது, பிறகு அதை நூலாக தொகுப்பது என இரண்டுமே முக்கியமான பணிகள். தொடராக வரும்போது கூறிய தீபாவளி வாழ்த்துகள் கூட நூலில் நீக்கப்படாமல் இருக்கிறது. நூலின் அட்டைப்படமோ, நூலின் உள்பக்க கட்டமைப்போ, புகைப்படங்களோ பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. மிகவும் சுமாராக அலட்சியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரத்தை எடுத்து நூலை உருவாக்கியிருந்தால், நூல் நன்றாக வந்திருக்கும். பெரிய ஆறுதல், எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனின் எழுத்துகள் மட்டுமே. நூலுக்கு கொடுக்கும் காசை எழுத்துக்கு மட்டுமே நம்பி கொடுக்கலாம். அந்தளவு முக்கியமான எழுத்தாளர்கள் சிறுகதைகளில், குறுநாவல்களில் வரும் குழந்தை பாத்திரங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.  மொத்தம் 31 எழுத்தாளர்கள். இதில் நான்கு மேற்கத்திய எழுத்தாளர்கள் உண்டு. மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகள் அனைத்துமே சிற...

சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை!

படம்
 சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை! சாணக்கியர் என்றதும் அவர் கூறிய அரசியல் நெறிமுறைகள், குரூரமான செயல்பாடுகள் கண்முன்னே வந்துபோகும். ஆனால், அதை எழுதியது யாரோ, அதை ஏன் சாணக்கியர் பெயரில் பிரசாரம் செய்தார்களோ தெரியாது. உண்மையில் சாணக்கியர் என்ற மனிதர் வாழவே இல்லை என்று செய்திகள் தெளிவாக உள்ளன. இன்றுமே கூட இந்தியாவில் மௌரிய வம்சத்துக்கு வழிகாட்டியவர் என்று சாணக்கியரைக் கைகாட்டுவார்கள். சாணக்கிய தந்திரம் பற்றியும் நூல்களை ஆயிரக்கணக்கில் எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் வெற்று பிரசாரமே ஒழிய வேறில்லை. ஏனெனில் சாணக்கியர் ஒற்றைக் குடுமியோடு பார்ப்பனராக இருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பார்ப்பனர்கள் அதிகார வெறிக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள். எப்படிப்பட்ட புரட்டையும் பேசுவார்கள், எழுதவார்கள், பரப்புவார்கள். அதை இன்று இந்தியாவே பார்த்து வருகிறது.  பொதுவாக பார்ப்பனர்கள் அழிக்கப்பட்டவர்களில் மௌரிய அரசரான அசோகரும் உண்டு.ஆனால் ஆரிய பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், தாங்கள்தான் அரசை வழிகாட்டி நடத்தினோம் என்று கூறுகிறார்கள். கி.மு 300இல் மௌரிய அரசுக்...

பெண்களின் காதல் வழியாக மூவேந்தர்களின் வீரம் வெளிப்படும் படைப்பு -- முத்தொள்ளாயிரம்

 முத்தொள்ளாயிரம் - மூலமும் உரையும் நாராயண வேலுப்பிள்ளை 100க்கும் அதிகமான பாடல்கள் நன்றி - இரா மோகனவசந்தன் முத்தொள்ளாயிரம் நூலில் மூவேந்தர்கள் பற்றிய பாடல்கள் உள்ளன. அவையும் அக்காலத்திற்கேற்ப காதல், போர், ஆட்சி, படைத்திறன், அறம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. இந்த பாடல்களை ஒருவர் வாசிக்கும்போது தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்களுக்கு வழங்கி வந்த  பெயர்கள் பற்றியும் அறியலாம். அதோடு, மன்னரை காதலித்த பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த எதையெல்லாம் உவமையாக கொள்கிறார்கள் என்பதும் கூட ஆச்சரியப்படுத்தும்.  பழந்தமிழ் வார்த்தைகள் வாசிக்கும்போதே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் ஒரு பாடலில் சேரனைப் புகழ்ந்து வருகிறது. அதில் பெண், தனிக்கதவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மன்னர் மீதுள்ள மகளின் காதலை அறிந்த தாய், ஊரார் தூற்றுவார்களே என்று அஞ்சி வீட்டின் வாயில் கதவை அடைத்துவிடுகிறார். அந்த கதவுதான் தனிக்கதவம் என பாடலில் சுட்டப்படுகிறது. இப்படி கதவை மூடிவிட்டால், வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்களா என்று தோழியிடம் கேட்கிறார்....

ஜெய்பீம் - காலத்தின் சாட்சி - த செ ஞானவேல்

படம்
  ஜெய்பீம் - காலத்தின் சாட்சி த செ ஞானவேல் அருஞ்சொல் - தரு மீடியா ரூ.120 ஜெய்பீம் என்ற படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னணி, இயக்குநர் ஞானவேல் அவர்களின் கருத்து, அதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், நடிகர்கள் பற்றிய கருத்துகள் கொண்ட நூல். திரைப்படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை இறுதிப்பகுதியில் ஸ்க்ரீன்ஷாட்கள் போல எடுத்து சேர்த்திருக்கிறார்கள். ஜெய்பீம் படத்தின் திரைக்கதை அருஞ்சொல் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இந்த நூலோடு அதையும் கூட வாங்கிப் படிக்கலாம். அப்போது உங்களுக்கு முழுமையான உணர்வு கிடைக்கலாம்.  நூலில் இரண்டு நபர்களின் பேட்டி முக்கியமானது. ஒன்று, இயக்குநர் ஞானவேல் அவர்களுடையது. அடுத்து முன்னாள் நீதிபதி கே சந்துரு அவர்களுடையது. இந்த இருவரும்தான் ஜெய்பீம் படத்திற்கான மூலாதாரம். நீதிபதி சந்துரு, பழங்குடி பெண்ணுக்காக இலவசமாக பத்தாண்டுகளுக்கும் மேலாக வாதாடியிருக்கிறார். சந்துருவுக்கு படம் பற்றியெல்லாம் பெரிய கவலையில்லை. ஏனெனில் அவருடைய நோக்கம். தான் எடுத்துக்கொண்ட வழக்கில் பெற்றுக்கொடுத்த நீதிதான். அதில் எதிர்கொண்ட சவால்களைப் பற்றியெல்லாம...

வினோத் பாலுசாமி பற்றிய குங்குமம் கட்டுரை

படம்

அடைய முடியாத லட்சியங்களால் மனமகிழ்ச்சி குறைகிறது! உளவியலாளர் ரீ குன் ஹூ

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் எழுத்தாளர் ரி குன் ஹூ 2024ஆம் ஆண்டு ரி குன் ஹூ எழுதிய இஃப் யூ லிவ் டு 100, யூ மைட் ஏஸ் வெல் பி ஹேப்பி என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூல் பெங்குவின் பதிப்பகத்தில் கிடைக்கும். ரி குன் ஹூவுக்கு வயது 90. தன் வாழ்க்கையில் இரண்டாம் உலகப்போர், கொரிய போர், வறுமை, டைபாய்டு, வங்கி திவால் ஆவது, சிறைவாசம் என நிறைய அனுபவங்களை சந்தித்து கடந்து வந்தவர். ரி, தனது இருபதுகளில் முதல் தென் கொரிய அதிபரான சிங்மன் ரீக்கு எதிராக ஜனநாயக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பத்து மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். உளவியலாளராக தொழில் செய்யும் ரீ, நாடு முழுக்க பல்வேறு மருத்துவமனைகள், மனநல மையங்களில் வேலை செய்திருக்கிறார். உளவியல் ரீதியான செயல்பாடுகளை சீர்திருத்தி மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார். ரீக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தனர். இன்று அவருக்கு பேரப்பிள்ளைகளமும் உண்டு.  நீங்கள் உங்களுடைய எழுபதாவது வயதில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். நூல்கள் வெளியாகி சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படுகிறீர்கள். வாழ்வில் பிந்தைய காலத்தில் எழுதுவது எப்படி இருக்கிறது? எழுதுவதில் என...

ரயில் விபத்து ஏற்படுத்தி நினைவுகளை இழக்கச்செய்தவர்களை பழி வாங்கும் மேஜிக் விண்ட்!

படம்
  ஆத்மாக்கள் அடங்குவதில்லை லயன் முத்துகாமிக்ஸ் மூலம் - செர்ஜியோ போனெல்லி பதிப்பகம் தமிழில் எஸ் விஜயன் # 49வது சென்னை புத்தக காட்சி 2026 இதுதான் மேஜிக் விண்ட் என்ற நாயகனுக்கு முதல் அறிமுக கதை. முத்து காமிக்ஸ் ஸ்டாலில் இரண்டு காமிக்ஸ்கள் இருந்தன. அதில், வேறொன்றை எடுத்தேன். அப்புறம் பார்த்தால் இதுதான் தொடக்க கதை. நாயகன் யாரென்ற புரிந்துகொண்டால்தான் அடுத்த கதைக்கு நகர முடியும். எஸ் விஜயன் அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்வார். அதை எப்போதும் போல கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்.  இந்த நூலை கருப்பு வெள்ளையிலேயே உருவாக்கியிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். காலக்கட்டாயத்திற்காக கலர் போல. அடர்த்தியான நிறங்களைக் கொண்ட பூச்சு. சியோக்ஸ் இனத்தைச்சேர்ந்த செவ்விந்தியர்களின் மாந்திரீகர் எதையோ தேடி வருகிறார். பார்த்தால், அவர் அங்கு குற்றுயிராக கிடக்கும் நாயகன் எழுவதைப் பார்த்து தூக்கி வந்து சிகிச்சையளிக்கிறார். அவருக்கு தான் யார் என்றும் தெரியவில்லை. நினைவுகள் அழிந்துவிட்டிருக்கின்றன. மாந்திரீகருக்கு அவருடைய காலம் முடிவடையும் தருவாயில் உள்ளார். ஆனால், அவருக்கு அடுத்து அவரது நிலையில் இருக்கக்கூட...