இடுகைகள்

கணவரில்லாத கைம்பெண்ணான ஷெல்லி, அவளது மகனை வேட்டையாட முயலும் மர்ம பூதங்கள்!

படம்
டைலன் டாக் வேட்டையாடும் - சட்டைப்பையில் சாவு லயன் முத்துகாமிக்ஸ் - வி காமிக்ஸ் விலை ரூ.90 டைலன் டாக் என்பவர் டிஒய்டி 666 எனும் ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வரும் அமானுஷ்ய டிடெக்டிவ். இவரது முக்கிய வேலை. ஆவிகளை வேட்டையாடுவது. அல்லது ஆவி என்று வேடமிட்டு மனிதர்களை கொல்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்வது...டைலன் டாக் - டிடெக்டிவ், க்ரௌச்சோ அவரது உதவியாளர். இவர்கள்தான் பெரும்பாலும் கதையில் இருப்பார்கள். மீதி வரும் பாத்திரங்கள் எல்லாமே வரும் போகும். டைலன் டாக்கின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எப்போதும் வருவார்.  ஷெல்லி, தனது ஒரே மகனுடன் வீட்டில் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய கணவர், ஜாக். சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்து போயிருக்கிறார். அவர் ஏன் இறந்துபோனார், எப்படி இறந்துபோனார் என்பதே மர்மம்தான். இந்த காமிக்ஸ் தொடங்குவது, ஷெல்லி வீட்டில் தனது ஃபிரிட்ஜில் தற்கொலை செய்துகொண்ட கணவர் ஜாக்கின் தலையைக் காண்கிறார். பயந்து நடுங்குகிறார். ஷெல்லியின் மகன் டேன்னி, இவன் வீட்டுக்குள் மணலைக் கூட்டி விளையாடுகிறான். அதில் இருந்தும் ஏதோ மணல் பூதம் போல எழுகிறது. ஷெல்லிக்கு ஒன்றும் புரிவதில்லை. இதனால...

''பாலியல் வல்லுறவு பற்றி உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமான முத்திரை என்னைத் தடுத்தது''

படம்
  ' ''பாலியல் வல்லுறவு பற்றி உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமான முத்திரை என்னைத் தடுத்தது'' -எழுத்தாளர் நீஜ் சின்னோ ---------------------------------------------------------------------------------- எழுத்தாளர் சின்னோ, 'சேட் டைகர்'(SAD TIGER-NEIGE SINNO) எனும் சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இந்த நூல் பிரெஞ்சில் எழுதப்பட்டது. பின்னர், அதை ஆங்கிலத்தில் நடாஷா லெஹ்ரர் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலின் மையம், சின்னோவின் வளர்ப்பு தந்தை அவரை எப்படி பாலியல் ரீதியாக சுரண்டினார் என்பதே. சின்னோவின் ஏழு வயதிலிருந்து இத்தகைய பாலியல் சுரண்டல் இளையோராக மாறும்வரை நீண்டிருக்கிறது. ஒரு குழந்தை பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவரின் நிலைமை, அந்த சம்பவத்தை, அவரை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை பதிவு செய்திருப்பதே நூலின் முக்கிய அம்சம். 2023ஆம் ஆண்டு பிரெஞ்சில் வெளியான நூல், அந்த நாட்டில் பெரும் இலக்கிய விருதுகளை வென்றது.  ___________________________________________________________________________________ உங்களுடைய வாழ்பனுபவத்தை இந்த முறையில் எழுதுவது இ...

பெரியார், அண்ணா, கலைஞர் பற்றிய சுவையான சம்பவங்களைக் கொண்ட நூல்!

படம்
  பேச வைத்த பெரியார் செந்தலை ந.கவுதமன் பெரியார் திராவிடர் தமிழர் பேரவை கட்டுரை நூல் ரூ.250 இந்த நூல் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதிதாசன் ஆகியோரது வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நூலை எழுதியவரான கவுதமன், திராவிடர் கழகத்தைச்சேர்ந்தவர். அவருக்கு கவுதமன் என்று பெயர் வைத்ததே பெரியார்தான். பின்னாளில் தமிழில் புலவர் படிப்பு படித்தாலும் கூட அவர், திராவிடக் கொள்கைக்காக உழைத்திருக்ககிறார். உழைத்தும் வருகிறார். நூலின் இறுதியில் சைக்கிள் மட்டுமே அவருடன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லாதவர் என்று கூறுகிறார்கள். மகிழ்ச்சி.  நூலில் இருந்து நாம் பெறுவது என்ன என்றால், பெரியார் பற்றிய பல்வேறு கருத்துகள் நூல் முழுக்க உள்ளன. இதில் ஈர்ப்பது பார்ப்பனரான பாரதியின் தாசன் என்று கூறிக்கொண்ட கனக சுப்புரத்தினம் எப்படி பாரதிதாசனாக மாறி, அவரது குரு பேசவிரும்பாத, தயங்கிய கைம்பெண் மறுமணம், சாதி, இந்தி திணிப்பு பற்றியெல்லாம் பேசினார் என்பதுதான். பாரதிதாசன் வாழ்க்கையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள். கொண்ட கொள்கைக்காக அவர் பட்ட பாடுக...

கோட்டை மாரியம்மன் கண்நோய் தீர்ப்பாளா? - மாயாதீதம் - என். ஶ்ரீராம்

படம்
மாயாதீதம் என். ஶ்ரீராம் தமிழ்வெளி ப.104 இது ஒரு குறுநாவல். இதில் வரும் பாத்திரங்கள் வடகிழக்கு பகுதியில் இருந்து தாராபுரம் வருகிறார்கள். பிறகு அங்கே நடக்கும் என் ஶ்ரீராமின் உலக வழக்கங்கள்தான் கதை. இந்த எழுத்தாளரின் பலமே, அசாம், குவகாத்தி என செல்வதல்ல. தாராபுரம், நல்லிமடம், ஒற்றம் புற்கள், ஊசிப்புற்கள், கிளுவை மர வேலி என மண்ணோடு இணைந்து எழுதுவதுதான். இதுவும் கூட அவருக்கு சிறுவயதில் தெரிந்த வாழ்க்கையாக இருக்கக்கூடும். கதைக்குச் செல்வோம். அசாமைச்சேர்ந்தவர், தன்னுடைய மகனின் கண்நோயைக் குணப்படுத்த முயல்கிறார். நவீன மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை. இதனால், அவர் அசாமிலிருந்து புறப்பட்டு தாராபுரத்திற்கு வருகிறார். அங்கு அவரின் தம்பி வாழ்கிறார். அவரிடம் பிள்ளையை ஒப்படைக்கிறார். சித்தப்பா, தனது அண்ணன் மகனை கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க வைத்து கண் சிகிச்சையை அளிக்கிறார். ஆனால், அம்மன் மனமிரங்கவில்லை. பல மாதங்கள் இப்படியே கழிகின்றன. அந்த சிறுவனுக்கு கண்ணில் வலி அதிகரிக்கிறது. அந்த சூழலில் தேசாந்திரக்காரன் என்ற பாத்திரம் வந்து வழிகாட்ட, சித்த வைத்தியரின் முகவரி கிடைக்...

புகைப்படக்காரர் வினோத் அவர்களுக்கு வாழ்த்துகள்!

படம்

சமூகநீதி பேசும் கலகக்காரி - வோக் - டைட்டானியா மெக்ரத்

படம்
  வோக் டைட்டானியா மெக்ரத் கட்டுரை நூல் ப.103 இந்த நூல் சமூக நீதியை எந்த சமரசமும் இல்லாமல் பாசாங்கு இல்லாமல் பேசுகிறது. எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் நூல் முழுக்க தனது வசை கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை அவரது கருத்துகளை முழுமையாக சுருக்கமாக புரிந்துகொள்ள உதவக்கூடும். ஃபயர் பிராண்டு என்பார்களே, அதேதான். கட்டுரையோ, கவிதையோ, பிற எழுத்தாளர்களின் மேற்கோள்களோ அனைத்திலும் நெருப்பு பொறிகள் பறக்கிறது. இது ஒரு கட்டுரை நூல்தான். தொடக்கத்தில் இந்த நூலை படிக்கும்போது வோக் - சமூக நீதியைப் பேசுபவர்கள். இன்றைக்கு இந்த சொல்லை அமெரிக்காவில் ஒலிகார்ச் எனும் பணக்கார குழுவினர் கெட்ட வார்த்தை போல உச்சரிக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு சொல்லை வைத்து என்னென்ன விஷயங்களை செய்யலாம், தான் செய்தேன் என்பதை எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் கூறியுள்ளார்.  காலம் மாறும்போது சிந்தனைகளும் மேம்பாடு அடையவேண்டும். பாலை கற்களின் மேல் ஊற்றிவிட்டு மூத்திரத்தைப் பிடித்து குடிக்க கூடாது. அந்த வகையில், பழைமைவாத சிந்தனைகளை முதலில் கூறிவிட்டு அதற்கு எதிர்ப்பாக தனது சிந்தனைகளை டைட்டானியா முன் வைக்கிறார். இதில், வசைக்கவிதைகளை அவர...

பற்கள், செரிமானம், தூக்கம் - அறிவியல் அறிவோம்.

 முத்துப்பல் வரிசை இந்தியாவில் உள்ள ஊடகத்தினர் பலருக்கும் பற்கள் பறிபோய்விட்டது. முதுகெலும்பும் இற்றுவிட்டது. அதனால்தான் ஊடகத்தினர் தாங்கள் சமூகத்தில் காவல் நாய்கள் என்பதை மறந்துவிட்டு அதிகாரத்திற்கும் பணத்திற்கும் வாலை குலைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பெல்ட்டில் சிகிச்சை தேவைப்படுகிறது. சரி இருக்கட்டும். நாம் அறிவியல் பக்கம் நிற்போம். பற்களைப் பற்றி பேசுவோம்.  குழந்தையாக இருக்கும்போது ஒருவருக்கு இருபது பற்கள் இருக்கும். பிறகு, இவற்றுக்கு கீழேயே பெரிய பற்கள் முளைக்கும் தருவாயில் குழந்தை பற்கள் விழுந்துவிடும். ஈறுகளுக்கு குழந்தை பற்கள் பொருத்தமாக இருக்காது. எனவே, பெரிய பற்களே உணவை அரைக்க உதவும்.  ஒருவரின் ஆறு முதல் பனிரெண்டு வயது வரையிலான காலத்தில் குழந்தை பற்கள் விழுந்துவிடுகின்றன.  தினசரி பட்டாணி அளவு பற்பசையை பல்துலக்க பயன்படுத்தலாம். அதை இருமுறை பயன்படுத்த வேண்டுமா என்பதை, நீங்கள் சாப்பிடும் உணவில் இறைச்சி உண்டா, மாவுப்பொருட்கள் உண்டா என்பதை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கலாம். அமெரிக்க தயாரிப்பான கோல்கேட், இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான பெப்சோடென்ட் ஆ...