இடுகைகள்

மக்களை விலைக்கு விற்கும் பச்சோந்தி அரசியல்வாதிகள்

படம்
பசுமைக்கட்சி, அணு ஆயுதங்களை, ராணுவ நடவடிக்கைகளை, போரை எதிர்க்கிறது. ஆனால் கூட்டாட்சி முறையில் பல்வேறு சமரசங்களை செய்ய வேண்டியிருக்கிறது. பாசிச ஆட்சிக்கு எதிராக சமரசமே செய்யமுடியாது. முழுக்க போராடி வெல்லவேண்டும் என்று கூறுவது முன்னோர் வாக்கு. ஆனால் ஆட்சி அமைத்து நிர்வாகத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சியினர், பல்வேறு நாடுகளில் சூழல் மீதான கவனத்தைக் கொண்டு வந்தாலும் பெரும்பான்மை பலமில்லாத நிலையில் அடிப்படை கருத்துகளை முழுக்க செயல்பாட்டிற்கு கொண்டுவரமுடியவில்லை. பசுமைக்கட்சியினருக்கு மாற்றம் என்பது எளிதாக நடைபெறக்கூடியது அல்ல, எளிதாகவும் நிறைவேறாது என்று தெரிந்திருக்கிறது. மாறுதலுக்கு காலமும் குறைந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் செயல்ளை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ளாவிட்டால் எதையும் மாற்றிக்கொள்ளமுடியாது என்ற நிலை கூட வரலாம். வன்முறையைப் பயன்படுத்தி, லஞ்சம் கொடுத்து எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருவது அசாத்தியம். அதை நிலைக்கும் என்று கூட கூறமுடியாது. கட்சி தொடங்கி, கொள்கைகளை பிரசாரம் செய்து மக்களை ஈர்த்து அரசியல் அதிகாரத்தைப் பெற்று தேர்தலில் வென்று மக்களின் பிரதிநிதிகளாகி கொள்கை

பழங்குடிகளின் வாழ்வாதாரங்களை சட்டம் மூலமாக பறிக்கும் தரகு கும்பல்கள்!

படம்
உலக நாணய நிதியம், உலக வர்த்தக கழகம் ஆகிய அமைப்புகள் உலக நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டும் பெருநிறுவனங்களுக்கு தரகர்கள் போலவே செயல்படுகின்றன. இயற்கையை சுரண்டுவதோடு, பழங்குடிகளை வாழ்வாதார நிலத்திலிருந்து வெளியேற்றும் வகையில் சட்டங்களை திருத்த அரசுகளை வற்புறுத்துகின்றன. அப்படி சொல்லித்தான் நிதியுதவிகளை தாராளமாக தருகின்றன. நவ தாராளவாத நிறுவனங்களான இத்தகைய அமைப்புகளே இயற்கை அழிக்கும் ஆபத்தான சக்திகள். நவ தாராளவாத நிறுவனங்களோடு அமைப்புகளோடு போராடுவது எளிதல்ல. சமூக வலைத்தள ஆப்களை விலைக்கு வாங்கும் அரசுகள், அதன் வழியாக போராட்டம் பற்றி, போராட்டக்காரர்கள் பற்றிய மோசமான அவதூறுகளை பரப்புகின்றன. மக்களை சாதி, மதம், இனம் வாரியாக பிரிக்கின்றனர். பிறகு எளிதாக இயற்கை வளங்களை வேட்டையாடுகின்றனர். அரச பயங்கரவாதம் சட்டப்பூர்வமாக இயங்கத் தொடங்கிவிட்டது. சோசலிசவாதிகள், சூழலியலாளர்கள், சூழல் சோசலிசவாதிகள் பழங்குடிகளுக்கு ஆதரவாக நிற்பது அவசியம். அப்போதுதான், காடுகளை பறிக்க முயலும் கொள்ளையர்களை தடுத்து மக்களுக்கு உதவ முடியும். சுரங்கம், கச்சா எண்ணெய், உயிரி எரிபொருள் ஆகியவை இயற்கை வளங்களை சுரண்டி மாசுபடுத

குடும்ப வறுமையைத் தீர்க்க கள்ளநோட்டு அடிக்கும் புற்றுநோய்க்குள்ளான ஏழை அச்சகத் தொழிலாளி!

படம்
  நோ வே ஃபார் ஸ்டூமர் சீன டிராமா 24 எபிசோடுகள் ஐக்யூயி ஆப் இந்த தொடருக்கு எட்டு பாய்ண்டுகள்தான் ரேட்டிங்காக கிடைத்திருந்தது. ஆனால் தொடரின் போஸ்டர் ஈர்ப்பாக தெரிந்தது. மோசமில்லை. மெதுவாக நகரும் சாகச வகை தொடர். பாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான படம்தான். ஆனால் கதையின் போக்கில் நாடு, தேசியவாதம், நன்மை, தீமை என்பதெல்லாம் அடிபட்டு போய்விடுகிறது. இறுதியாக தொடர் முடியும்போது நமக்கு எஞ்சுவது, கும்பலாக ஆயுதங்களை வைத்து ஒரு கூட்டம் செய்வது நியாயம், அவர்கள் கூறுவது நீதி. ஆயுதம் இல்லாமல், பிறரை கொல்ல மனமில்லாதவன் பலவீனமாக உள்ளான். அவன் தன்னை மிரட்டும் கொள்ளைக்கார, பேராசைக்கார கூட்டத்திற்கு பயப்படுகிறான். வலி பொறுக்கமுடியாமல் எதிர்த்து அடிக்கும்போது அவனை அதிகார வர்க்கம் கண்டிக்கிறது. ஆனால் முன்னர் அநீதியாக அவன் தண்டிக்கப்படும்போது அமைதியாக இருக்கிறது. ஏன்? அந்த கேள்விதான் தொடரைப் பார்த்து முடிக்கும்போது ஒருவருக்கு தோன்றுகிறது.  எந்த பதிலும் இல்லை.  லிஷான் என்ற நகரம் உள்ளது. அங்கு கள்ளநோட்டு புழக்கத்தில் உள்ளது. அதை யார் அச்சிடுகிறார்கள். புழக்கத்தில் விடுகி

வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியதிருக்கிறது!

படம்
  jenson huang nvidia ceo வயது 61 என அவரே சொன்னால்தான் தெரிகிறது. கறுப்பு ஜெர்கினும், ஷூக்களுமாக உற்சாகமாக பேசுகிறார். அவரோடு பேசும்போது அவரை நாம் நேர்காணல் செய்கிறோமா அல்லது அவர் நம்மைப் பற்றி விசாரிக்கிறாரா என்று கூட தெரியவில்லை. அந்தளவு பேச்சில் பல்வேறு விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ஏஐ சிப்களை உருவாக்கி வரும் என்விடியா முக்கியமான டெக் நிறுவனங்களில் ஒன்று. கூகுள், அமேசான், மெட்டா, ஏஎம்டி ஆகிய நிறுவனங்களுக்கு கடும்போட்டியை சந்தையில் அளித்து வருகிறது. வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்யும் இயக்குநர், எந்த மேடையிலும் சோர்ந்து அமர்ந்திருந்தது இல்லை. அவரிடம் பேசினோம்.  நீங்கள் பத்திரிகையாளர் ஆக விரும்பினீர்களா? ஒருகாலத்தில் அப்படி நினைத்தேன்.  என்ன காரணத்திற்காக? அடோப்பின் நிறுவனர் சாந்தனு நாராயண், நான் மதிக்கும் முக்கியமான வணிக தலைவர்களில் ஒருவர். அவர் பத்திரிகையாளராள ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். ஏனெனில், அந்த வேலை வழியாக கதைகளை சொல்ல விரும்பினார்.  வணிக்கத்திற்கு கதை சொல்வது முக்கியம் என்று கூறவருகிறீர்களா? ஆமாம், நிறுவனத்தின் நிலைப்பாடு, கலாசார உருவாக்கம் ஆகியவை கதை சொல்லல்தா

உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி எது?

படம்
  உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி எது? பைலேட்ஸ்  இவ்வகை உடற்பயிற்சிகள் முழுக்க வயிற்றுத் தசைகளுக்கானது. வயிற்றை பழனி படிக்கட்டு போல அமைக்கவேண்டும் என்பவர்கள் இந்த வகை பயிற்சிகளை செய்யலாம். தொடக்கத்தில் யாராவது வழிகாட்டி இருந்தால் அவர்களை பின்பற்றலாம். பிறகு வழி தெரிந்தபிறகு பயணத்தை நீங்களே செய்துகொள்ளலாம். இணையத்தில் ஏராளமான சின்ன உடுக்கை இடை நங்கைகளே அவர்களாக விளம்பர ஆப்புடன் வந்து பயிற்சிகளை சொல்லித் தருகிறார்கள். எனவே, பைலேட்ஸ் பயிற்சி செய்யும்போது கடினமாக இருந்தாலும், அதை பெண்கள் செய்யும்போது பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.  பைலேட்ஸ் பயிற்சியை கழுதைபோல உழைத்து செய்யவேண்டியதில்லை. இதில் முக்கியமானது சுவாசமும், வயிற்று தசைகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் கவனமும்..... அதில் கவனம் தவறினாலும் தசைகள் பயிற்சி காரணமாக வலிமையாகும். ஆனால் கால தாமதமாகும். எனவே, பயிற்சி செய்யும்போது கவனமாக செய்தால் எந்த பிரச்னையும் இல்லை. வயிற்றுதசைகள் வலிமையாவதோடு, இடுப்பு அளவும் குறையும். எனவே, பேண்டுகள் புதிதாக வாங்க வேண்டிய செலவைக் குறைத்துக்கொள்ளலாம். யூட்யூபிலேயே ஏராளமான பைலேட்ஸ் பயிற்சி வீடியோக்கள் கிடைக்கின்

மக்களின் ஆசைகளை நிறைவேற்றி வைத்து அவர்களை குற்றப்பங்காளிகளாக்கும் சூப்பர் ஆப்!

படம்
  விஷ்ஷர்  சீன தொடர்  12 எபிசோடுகள் போனில் தானாகவே வந்து அமரும் விஷ்ஷர் ஆப்பில், உங்கள் ஆசைகளைக் கூறினால் அது நிறைவேற்றப்படும். பதிலுக்கு அந்த ஆப் சொல்லும் ஒரு வேலையை நீங்கள் செய்யவேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆசையை நிறைவேற்ற கோரிக்கை அனுப்பமுடியும். இப்படி மக்களின் பேராசையைத் தூண்டும் ஆப்பின் பின்னணி, அதிலுள்ள மனிதர்களின் நோக்கம் பற்றி பத்திரிகையாளர் ஆராய்ந்து கண்டுபிடித்து தடுக்கிறார்.  பனிரெண்டு எபிசோடுகளே நீளம் என்று சொல்லுமளவு பாத்திரங்களின் நடிப்பு எரிச்சல் ஊட்டுகிறது. அதிலும் நா டு என்ற பாத்திரத்தில் வரும் பத்திரிகையாளர் தோற்றம், நடிப்பு என அனைத்துமே மிகையாக இருக்கிறது. வயதானவர் போல காட்ட முகத்தில் தாடியை நடவு செய்து இருக்கிறார்கள். அது அவருக்கு ஒட்டவே இல்லை. அவரின் பாத்திரம் கடைசிவரை குழப்பமானதாகவே இருக்கிறது. நேர்மையானவரா, சந்தர்ப்பவாதியா, புத்திசாலியா என ஏதும் புரிவதில்லை.  கற்பனையான ஒரு நகரை காண்பிக்கிறார்கள். அந்த நகரை முப்பது நாட்களில் அழிப்பதுதான் திட்டம். அதற்காக விஷ்ஷர் ஆப் வருகிறது. இந்த ஆப், மக்களின் ஆசையை நிறைவேற்றி வைத்து பதிலுக்கு அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபட

ஏஐ வரவால் மாறும் ஊடக செய்தியறை!

படம்
  நவீன ஏஐகளால் செயல்வேகம் கூடும் ஊடகங்களின் செய்தியறைகள் தமிழகத்தின் இதயத்துடிப்பு, நம்பர் 1 வார இதழ் என தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் வார இதழ்கள் எல்லாமே வலதுசாரி கட்சிகளால் வாங்கப்பட்டு, அஜண்டாவிற்கு ஏற்ப போலிச்செய்திகளை, மக்களை மடைமாற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. காசு கொடுக்கிறவனே கண்கண்ட தெய்வம் என மாறிவிட்டன. அதேசமயம் காலத்திற்கேற்ப எழுதும் செய்திகளை மேம்படுத்தி பல்வேறு வழிகளில் மக்களை அடைய முயற்சிக்கும் புதிய பாதைகளுக்கும் பஞ்சமில்லை.  அமெரிக்காவிலுள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற நாளிதழ், டிக் டாக் அல்காரிதம் பற்றி ஆராய்ச்சி செய்தது. அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் அனைவருமே பெரும்பாலும் டிக்டாக்கில் பயனர்களாக இருக்கிறார்கள். சிலர் அதில் வியாபாரம் செய்கிறார்கள். நடிக்கிறார்கள். ஏதோ ஒருவகையில் அந்த ஆப்பில் இணைந்திருக்கிறார்கள். அதைவிட்டு விலகாமல் இருக்கிறார்கள். அப்படியென்ன சிறப்பம்சம் மனதை கட்டிப்போடும்படி இருக்கிறது என நாளிதழ் ஆசிரியர் குழு யோசித்தது. 2021ஆம் ஆண்டு, பதிமூன்று வயதான பயனர் ஒருவர் டிக்டாக்கில் கணக்கு தொடங்கினார். ஒன்லி பேன்ஸ் என்ற டிக்டாக்கின் கணக்கில் இணைந்தார்.

ஏஐ காரணமாக பிங்க் சிலிப் வாங்கப்போகும் தொழிலாளர்கள்! - முக்கிய தொழில்துறைகள்

படம்
  ஏஐ மூலம் பாதிக்கப்படும் தொழில்துறைகள்  கூகுள், ஏஐ ஆராய்ச்சியில் அதிக காலம் இருந்தாலும் கூட அதை வருமானத்திற்குரிய பொருளாக மாற்றத் தவறிவிட்டது. அந்த தவறை ஓப்பன் ஏஐ செய்யவில்லை. அதனால்தான் எழுத்து, புகைப்படம், வீடியோ என பல்வேறு பொருட்களை சந்தைப்படுத்தி முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது.  ஏஐ மூலம் நிறைய விஷயங்களை செய்துகொள்ளலாம் சிட்டி வங்கி, ஜே பி மோர்கன் ஆகிய நிறுவனங்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றுடன் ஒப்பந்தமிட்டு வேலைகளிலும் பயன்படுத்தி வருகின்றன. ஒரேவிதமான வேலையை செய்பவர்களுக்குத்தான் வேலை போகுமே தவிர கிரியேட்டிவிட்டியாக வேலைபார்ப்பவர்களுக்கு ஏஐயால் பாதிப்பு நேராது என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். முதுகலைப் பட்டம் பெற்றவர்களின், முனைவர் பட்டம் பெற்றவர்களின் வேலைகள் 57 சதவீதம் ஏஐயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஒற்றை டிகிரி வாங்கி கல்யாணப்பத்திரிகையில் போட்டு சந்தோஷப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு அறுபது சதவீதம் பாதிக்கப்படலாம். இதையெல்லாம் இந்திய அரசின் புள்ளிவிவரத்துறை கூறினால் சந்தேகப்படலாம். ஆனால், மெக்கின்சி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. போலிச்செய்தியல்ல உண்மைதான்.  பொறியா

பசுமைக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள்

படம்
ஐரோப்பாவில் தோன்றிய பசுமைக்கட்சிகள் தொடக்கம் முதலே இடதுசாரி பாதையைப் பின்பற்றத் தொடங்கின. அங்கு, இடதுசாரிகள் போல தோற்றமளித்த மார்க்சிய அமைப்புகள், சமூக ஜனநாயக கட்சிகள், மைய இடதுசாரி கட்சிகளைப் பின்தொடரவில்லை. ஜெர்மனியின் புகழ்பெற்ற சூழல் சோசலிசவாதி இருந்தார். அவர் பெயர், ரூடோல்ஃப் பாஹ்ரோ. 1981ஆம் ஆண்டு, ஆல்டர்நேட்டிவ் இன் ஈஸ்டர்ன் யூரோப் என்ற நூலை எழுதினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஜெர்மனி நாட்டை சூழல் சோசலிச பாதையில் கொண்டு செல்ல ஆர்வம் இருந்தது என இ பி தாம்சன் குறிப்பிடுகிறார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோர்ஸ், இகோலஜி ஏஸ் பாலிடிக்ஸ் (1980) என்ற நூலை எழுதினார். பொருளாதார வளர்ச்சியால் சூழல் மாசுபாடு ஏற்படுவதைப் பற்றிய கவலையை நூலில் வெளிப்படுத்தியிருந்தார். 1960ஆம் ஆண்டு, டேனி கோஹ்ன் பென்டிட், அப்சொல்யூட் கம்யூனிசம்- தி லெப்ஃட் விங் ஆல்டர்நேட்டிவ் என்ற நூலை எழுதினார். 1995ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரான ஆலைன் லிபிட்ஸ் க்ரீன் ஹோப்ஸ் என்ற நூலை எழுதினார். நூலில், மரபான இடதுசாரி சிந்தனையை மறுத்து தன் கருத்துகளை எழுதியிருந்தார். சூழலியலுக்கு செல்ல இடத

இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்!

படம்
  இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்!  அனைவரும் ஒற்றுமையாக இருங்கள், கூட்டாக சேர்ந்து பெரிய விஷயங்களை சாதிக்கலாம் என்று கூறுபவர்களை விட இந்தியாவில் பிரிவினைவாதிகள் கிராக்கி அதிகம். ரிசர்வ் வங்கி, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், காவல்துறை, உளவு அமைப்புகள் என அனைத்திலும் பாகுபாடு பார்க்கும் ஆட்களே அதிகமாக உள்ளனர்.  அதிலும் ஆர்எஸ்எஸ் தொண்டரான மோடியே பிரிவினைவாதிகளுக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரது ஆட்சியின் நிர்வாக செயலின்மை பற்றி பேசினால் உடனே ரூ.500 கோடி ராமர்கோவில், காசியில் செய்த வழிபாடு, உண்ணாநோன்பு இருந்து செய்த கோவில் தரிசனம், முந்தைய பிரதமர்கள் செய்த தவறு என பேசுவாரே ஒழிய பத்து ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து என்ன செய்தார். அவரது அமைச்சரவைக் குழு செய்த மக்களுக்கான நன்மை என எதையும் பேசமாட்டார். செய்த அனைத்துமே கலவரங்கள், படுகொலைகள், சிறுபான்மையினரின் சொத்துகளை அழித்ததுதான். பிறகு என்ன சொல்வது? முஸ்லீம்களை ஜென்ம எதிரியாக கருதும் பயங்கரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ். வெளியில் தன்னை கலாசார அமைப்பாக காட்டிக்கொண்டு கலவரம், பிரிவினை, மசூதிகளை இடிப்பது, சிறுபான்மையினரை

விலங்கு மனிதர்களின் உலகில் நாயகன் தனது வலி நிரம்பிய இறந்த காலத்தை தேடும் பயணம்!

படம்
  பிரியூ ஆப் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்  சீன தொடர்  24 எபிசோடுகள் ஐக்யூயி ஆப்  இத்தொடரில் காட்டப்படும் உலகில் மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள். விலங்குகளாக உள்ளவர்களின் உடலில் மனித மரபணுக்கள் சேர, அவர்களுக்கு மனித உருவம் கிடைக்கிறது. விலங்கு, மனிதர்கள் என இருவருக்குமிடையே உள்ள முரண்பாடு, தகராறுகள் சில இடங்களில் நடக்கிறது. அதைத் தடுத்து இணக்கமான மனித, விலங்கு உறவைப் பேண பாட் என்ற அமைப்பு உள்ளது. அதுதான் சீனதொடரின் தலைப்பு. அமைப்பிற்குள், காவலராக எதிர்பாராத திருப்பமாக அப்பாவி கால்நடைமருத்துவர் ஒருவர் வந்து சேருகிறார். அவரைத் தவிர பிறர் அனைவருமே விலங்குகள். நாயகன் ஹாவோ யுன் மட்டுமே மனித இனம். பிறர் அனைவருமே விலங்குகளாக இருந்து மனிதர்களாக மாறியவர்கள்.  நாயகன் ஹாவோ யுன், அவனுக்கு உயரதிகாரியாக வூ ஆய்ஆய் இருக்கிறார். இவர்தான் நாயகி. ஈல் மீன் இனம். இருக்கும் பாட் அதிகாரிகளிலேயே பேசுவதற்கு முன்னாடியே கைநீட்டிவிடும் கோபக்காரி வூ. இவளுக்கு கீழே ஹாவோ யுன் வேலை பார்க்கிறான். பாட் அமைப்பினர், அவனது நினைவுகளை அழிக்க முயல்கிறார்கள். ஆனால் அவனது நினைவு மட்டும் அழிய மாட்டேன்கிறது. பாட் அமை

சூழலுக்கு உகந்த விவசாயத்தை கையில் எடுத்து சாதித்த கியூபா!

படம்
பசுமை சூழலை உருவாக்க அதுதொடர்பான ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தேவை. அவை வளரும்போதுதான், அதைச் சார்ந்த வணிகமும் உருவாகும். மக்களும் அதன் பயனை உணர்வார்கள். இப்படியான மாற்றம் பலவந்தமாக இல்லாமல் இயல்பாக மடைமாறுவது நடக்கும். அரசு கட்டமைப்பு அளவில் பொதுப்போக்குவரத்தில் முதலீடு செய்து அதை பரவலாக்க வேண்டும். அலுவலகத்திற்கு காரில் அல்லது பைக்கில் செல்கிறீர்கள். என்ன காரணம், நேரத்திற்கு பேருந்தோ, ரயிலோ கிடைக்காததுதான். அலுவலகத்திற்கு அருகிலேயே செல்லும்படியாக ரயில் வசதி இருந்தால், கார், பைக்கில் முதலீடு செய்யவேண்டியதில்லைதானே? காய்கறிகளை நாமாகவே உற்பத்திசெய்துகொள்வதோடு பள்ளி, கல்லூரிகளையும் உருவாக்கிக்கொண்டால் ஆற்றல் அதிகம் தேவைப்படாது. தூய ஆற்றல் ஆதாரங்களே போதுமானது. அடிப்படையில் ஆற்றலை செலவழிப்பதில் சிக்கனம் தேவை. 1990ஆம் ஆண்டில் கியூபாவிற்கு சோவியத் யூனியன் அளித்து வந்த எரிபொருட்கள் குறைந்துவிட்டன. எனவே, அதைத் தவிர்த்து பொருளாதாரத்தை இயக்க முயன்றனர். பொதுப்போக்குவரத்தில் அரசு முதலீடு செய்தது. மண்புழு உரத்தை தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஊக்கம் கொடுத்தது. தூய ஆற்றல் ஆதாரங்க