செக்ஸ், குழந்தை எதுவும் வேண்டாம் - தென்கொரியாவில் மாறும் நிலைமை





Image result for south korea 4b movement


தென்கொரியாவில் 4 பி என்ற அமைப்பு புதிதாக உருவாகியுள்ளது. பெண்களுக்கான உரிமை கோரல்களுக்காக என்று நினைப்பீர்கள். அதற்காகவெல்லாம் கிடையாது. காதல், கல்யாணம், குழந்தை, குடும்பம் இதெல்லாம் வேண்டாம் என பிரசாரம் செய்யும் அமைப்பு அது.

தொழில்நுட்பம் அங்கு சிறப்பாக இருந்தாலும் கலாசார மதிப்பில் அவர்களும் இந்தியர்களைப் போலத்தான். குடும்பம், திருமணம், குழந்தைகளைப் பராமரிப்பது, மாமியார் - மாமனார் இத்தியாதி என நீண்டுகொண்டே செல்லும் லிஸ்டுகளை மருமகள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது தென் கொரியர்கள் அதிலும் பெண்கள் இத்தனை பொறுப்புகளை நாங்கள் ஏற்கணுமா என கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.  “திருமண மார்க்கெட்டில் பெண்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. நன்றாக படித்த பெண்களுக்கு மைனஸ் மார்க்குகளை ஆண்கள் போடுகிறார்கள். அவர்களுக்கு தங்களையும், குழந்தைகளையும், அவர்களின் வயதான பெற்றோர்களையும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர். இதனால்தான் பெண்கள் தற்போது திருமணத்தை தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்” என்கிறார் போனி லீ என்ற பெண்மணி. 4 பி எனும் இந்த இயக்கத்தை தற்போது 4 ஆயிரம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

தொண்ணூறுகள் தொடங்கி திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள், பெண்களின் எண்ணிக்கை சரிவடையத் தொடங்கிவிட்டது. 1996 இல் 4 லட்சத்திலிருந்து திருமணத்தை விரும்புவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சமாக தற்போது குறைந்துள்ளது.  தற்போது அங்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அங்குள்ள மனநிலையைக் காட்டுகிறது. “Kim Ji-young, Born 1982” எனும் படத்திற்கு அங்குள்ள மக்கள் 9.5 என ரேட்டிங் கொடுத்துள்ளனர். இதில் விவாகரத்து செய்த பெண் தன் குழந்தையோடு மிக குறைந்த ஆதரவுடன் போராடுவதே கதையின் மையம். 

போனி லீ தன் நாயோடு திருமணம், காதல், செக்ஸ், குடும்பம் என அனைத்தையும் மறுத்தபடி வாழ்ந்து வருகிறார். 4பி என்பது நான்கு விஷயத்திற்கு நோ சொல்லுங்க என்பதுதான் இந்த அமைப்பின் பிரசாரம். இதில் உறுப்பினராக உள்ள யூன் ஜி ஹை,போனி லீ இயக்கத்தில் இருக்கிறார். ஆனால் நான் காதல், செக்ஸ் போன்றவற்றை கைவிட விரும்பவில்லை. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன என்று கூறினார். அதை நாம் புலனாய்வு செய்தால் கட்டுரைக்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்துவிடுவார்கள். ஆனால் தென்கொரியாவில் குழந்தை பிறப்பு சதவீதம் கடந்த ஆண்டில் 0.98 சதவீதமாக உள்ளது. அரசு கண்விழிக்காவிட்டால் நாட்டில் உள்ள குழந்தைகளின் பிறப்பு மிகவும் குறைந்து பேரழிவை சந்திக்குமாறு இருக்கும். 

நன்றி - சவுத் சீனா மார்னிங் போஸ்ட், டைம்ஸ்