இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும்

  பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும் மதவாத கட்சிக்கு வாக்களித்துவிட்டு சிறுபான்மையினரின் வீடு கோவில்களை புல்டோசர் இடிப்பதை சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பது போன்றதல்ல. ஒருவர், குறிப்பிட்ட பொருளை கடையில் வாங்கிவிட்டு அதன் மதிப்பை அதிகமாக கருதிக்கொள்வதுண்டு. சிலர் ஒருவர் வைத்துள்ள பொருளுக்கு ஆசைப்பட்டு அதிக விலை கொடுப்பதாக சொன்னாலும் சம்பந்தப்பட்டவர் அதெப்படி இதை நீ வெலைக்கு கேட்கலாம். எனக்கு பிடிச்ச பொருள். விற்கமாட்டேன் என்று கூறுவதுண்டு. சூதாட்டம் விளையாடுவதைக் கூட மனிதர்களின் முடிவு தொடர்புடையதாக சொல்லலாம். இன்று ஆன்லைன் ரம்மியை ஒன்றிய, மாநில அரசுகளே ஊக்குவிக்கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி குலுக்கல் நடைமுறையில் உள்ளது. இதில் எல்லாம் வெல்வது அரிதிலும் அரிதாக நடைபெறுவது. இதன் அர்த்தம் பெரும்பாலும் நடக்காது என்பதுதான். வானிலை ஆய்வு மையம், பகல் வெயில் பளிச்சென அடிக்கும் என்று அறிக்கை வெளியிடும் அன்றைக்கு அடைமழை பெய்வது போல்தான். எதையும் கணிக்க முடியாது. சந்தையில் பங்குகள் ஓகோவென உயரத்திற்கு செல்லும் என்று வணிக டிவி சேனல்கள் ஒப்பாரி வைக்கும். அந்த சமயம் பார்த்து ரூபாயின் ம...

ஹீரோவும் நான்தான் வில்லனும் நான்தான் - எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த துயரச்சம்பவம்

படம்
  ஆன்சியன்ட் டிடெக்ட்டிவ் சீன தொடர் யூட்யூப் ஒருவர், தான் செய்யும் செயல் காரணமாக இன்னொரு தரப்பிற்கு மாபெரும் வில்லனாக மாறியிருப்பார். ஆனால், அப்படி செய்த செயலை குறிப்பிட்ட பாத்திரம் மறந்திருக்கும். அல்லது அதைப்பற்றி பெரிதாக கவனம்கொண்டிருக்காது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக விஷயம் தெரியவரும்போது, தன்னுடைய தவறை உணர்ந்து அதை சரிசெய்துகொள்ள முயலும். ரவி மரியா இயக்கிய மிளகா படத்தின் கதை இதையொட்டியது. ஆன்சியன்ட டிடெக்ட்டிவ் தொடரின் மையமும் கூட இத்தகையதே. முதல் காட்சியில், உணவகம் காட்டப்படுகிறது. அங்கு நால்வர் இருக்கிறார்கள். அதில் ஒருவரின் கைகளை கட்டி கைதி போல வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே அவரை தங்க புத்தர் சிலை எங்கே என விசாரிக்கிறார்கள். இவர்களது மேசை அருகே வெள்ளுடை அணிந்த இன்னொருவர் அமைதியாக நடப்பதை கவனித்தவாறே நூடுல்ஸ் உண்டுகொண்டிருக்கிறார். இந்த உணவகத்திற்கு ஆறடி உள்ள இன்னொரு வீரர் கத்தியோடு வருகிறார். விசாரணையில் கைகள் கட்டப்பட்டவர், நான் சிலையை திருடவில்லை என்று சாதிக்கிறார். அப்போது வெள்ளுடை அணிந்தவர், கைகளை கட்டப்பட்டவருக்கு ஆதரவாக பேசுகிறார். குற்றவாளி அவர்களில் ஒருவர் ...

2025ஆம் ஆண்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

படம்
  புதிய எதிர்பார்ப்புகள் 2024ஆம் ஆண்டு பற்றிய விஷயங்களை பூந்தி, டெய்லிகரன் ஆகியோர் இணைப்பிதழை இலவசமாக கொடுத்து புரிய வைத்துவிடுவார்கள். இனி அதை தனியாக எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம். எதிர்வரும் ஆண்டுக்கான விஷயங்களைப் பார்ப்போம். விமானநிலையம் மக்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் செல்லவா என்று தெரியவில்லை. பிரமாண்ட விமானநிலையங்கள் நொய்டா, நவி மும்பையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இவற்றை ஆட்சித்தலைவரின் அபிமான நண்பர் இயக்குவாரா இல்லையா என விரைவில் செய்திகள் சொல்லும். கூட்டுறவு இந்தியா குவாட் அமைப்பில் உள்ளது. அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் பதவியேற்கவிருக்கிறார். சீனாவின் டிக்டாக்கை தடைவிதிக்க வேண்டாம் என கூறியுள்ளார். வணிகத்தைப் பொறுத்தவரை அதிகவரி ஏற்றுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா என்ன வித நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா அதற்கு மகிழ்ச்சியுறும்.பின்னே நாம் முன்னேறமுடியவில்லை அடுத்தவர்கள் முன்னேறினால் மட்டும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா என்ன? இந்த வகையில் இந்தியா ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு இணைந்துகொண்டு இயங்கும். மின...

மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி

படம்
        மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகனின் விருப்பமான கார் மாருதி 800. பிஎம்டபிள்யூவைத் தாண்டி மாருதி காரையே முன்னாள் பிரதமர் நம்பினார். மக்களின் காரான மாருதி 800 ஐ உருவாக்கி சாலைகளில் ஓடவைத்த ஒசாமு டிசம்பர் 25 ஆம் தேதி மறைந்தார். 1930ஆம் ஆண்டு பிறந்தவருக்கு ஒசாமு மட்சுடா என்பதான் வைக்கப்பட்ட பெயர். பின்னாளில் சுசுகி மோட்டார் கார்ப் நிறுவன குடும்பத்தில் பெண் எடுத்த காரணமாக ஒசாமு மட்சுடா மாறி ஒசாமு சுசுகி என்றானது. இந்தியாவில் தொழில் தொடங்க முடிவெடுத்ததே ஒசாமுவின் துணிச்சலான குணத்திற்கு சான்று. அப்போது கார்களின் சந்தையே நாற்பதாயிரம் கார்கள் என்றுதான் நிலை இருந்தது. பதினான்காயிரம் பேர்களில் ஒருவர் காரை வாங்கிப் பயன்படுத்தி வந்தார். அன்றைய காங்கிரஸ் அரசு, மாருதி என்ற நிறுவனத்தை தொடங்கி சுசுகியுடன் கைகோர்த்து கார் ஒன்றை உருவாக்க முனைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் ஆர்சி பார்க்கவா, வி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். அன்றைய சூழலில் ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு வாகனமாக சுசுகி தடுமாறிக்கொண்டிருந்தது.  ...

பாயும் பொருளாதாரம் - செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும்

படம்
      பாயும் பொருளாதாரம் செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும் பெற்ற தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் சமாளிப்பதை இந்தியாவில் அனைவருமே செய்பவர்கள்தான். இந்திய அணி கோப்பையைத் தவறவிட்டால், மற்ற நாட்டு ஊடகங்கள் போல உதவாக்கரை பயல்கள் என எழுத முடியாது. எனவே, இதயங்களை இந்திய அணி வென்றது என எழுதி ஆறுதல் தேடுவது வழக்கம். அணியில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் அப்படியே குறைகள் குறையாமல் ஆடுவார்கள். ஒரு ரன்னுக்கு ஓடி வரும்போது கூட ஈகோ பார்த்து இளம் வீரனை அவுட் ஆக்கி கௌரவம் பார்ப்பது இப்படித்தான் உருவாகிறது. அதாவது குணநலன். ஆட்டோவில் ஒரு நகைப்பை கிடைக்கிறது. அதை ஓட்டுநர் வைத்துக்கொள்ள நினைக்கிறார் இதனால் அவருக்கு, வாங்கிய கடனைத் தீர்க்க முடியும், ஆனால், பொருளை தொலைத்தவர் வழக்கு பதிந்தால் காவல்துறையில் மாட்டிக்கொள்ள நேரும், அதேநேரம் பிறர் பொருளை திருடியதால் குற்றவுணர்ச்சி இருக்கும். அடுத்து, அதை உரியவர்களிடம் ஒப்படைப்பது. இந்த வகையில் ஒருவருக்கு நல்ல செயலை செய்தோம் என்ற ஆறுதல் கிடைக்கும். அதற்காக அவர் செய்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். பொருளை இழந்தவருக்கு அப்பொருள...

அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர்

படம்
  அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர் மாத்ருபூமி வார இதழின் முன்னாள் ஆசிரியர், எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் மறைந்திருக்கிறார். இவரது முழுப்பெயர் மாதத் தேக்கப்பட் வாசுதேவன் நாயர். சுருக்கமாக எம்டி வாசுதேவன் நாயர். மலபார் மாவட்டத்திலுள்ள பொன்னானி தாலுக்காவின் கூடலூர் கிராமத்தில் 1933ஆம் ஆண்டு ஜூலை பதிமூன்றாம் தேதி பிறந்தார். தந்தை நாராயணன் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்தார். எம்டி, மலபார் மாவட்ட கல்வி வாரியம் நடத்திய பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். பாலக்காட்டிலுள்ள எம்பி டுட்டோரியலிலும் கூட வேலை செய்திருக்கிறார். 1956ஆம் ஆண்டு கோழிக்கோட்டிலுள்ள மாத்ருபூமி வார இதழில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இங்கு ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். எம்டி மூலமாக அடையாளம் காணப்பட்ட எழுத்தாளர்களில் புன்னத்தில் குஞ்சப்துல்லா, என்எஸ் மாதவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எம்டி வாசுதேவன் நாயர், தீவிரமான இலக்கிய எழுத்துக்கு சொந்தக்காரர். வளர்த்துமிருகங்கள் என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அடுத்து வெளியானதுதான் நாலுகெட்டு என்ற நாவல். இந்த நாவலில் நாயர் குடும்பம் ...

எழுநா - இலங்கையின் சிறந்த ஆய்விதழ்களில் ஒன்று

படம்
        எழுநா இதழில், இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் உள்ள மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது அவசியம் என விளக்கி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். https://substack.com/profile/5467650-ar/note/c-83204192

கார்டியன் - ஊக்கம் தரும் மனிதர்கள் 2024 - புகைப்படங்கள்

படம்
 

திராவிட இயக்கம், கட்சி ஆகியவற்றின் போராட்டம் நிறைந்த நெடிய சமூகநீதிப் பயணம்!

படம்
      தெற்கிலிருந்து ஒரு சூரியன் இந்து தமிழ்திசை ஆசிரியர் குழு - அசோகன், கே.கே மகேஷ், சமஸ், ரங்காச்சாரி, ஏஎஸ் பன்னீர்செல்வம் இந்து தமிழ்திசை, சென்னை திராவிட இயக்கத்தின் செயல்பாடு, திமுக அரசியல் அதிகாரம் பெற்று செய்த சாதனைகள், அதன் பிரச்னைகள், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி என மூன்று தலைவர்களின் ஆளுமை, தமிழ்நாட்டின் தனித்துவம், திராவிட ஆட்சியில் நடைபெற்ற சமூகநீதி திட்டங்கள் என ஏராளமான தகவல்களைக் கொண்டதாக நூல் உருவாகியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படியான நூலை உருவாக்கியிருப்பது சமூகநீதிக்கு எதிராக இருந்த பார்ப்பன பத்திரிகைக் குழுமம் என்பதுதான். திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக நின்ற பத்திரிகைகளோ, பத்திரிகையாளர்களோ கூட இப்படியான நூலை தொகுக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. எதிர்க்குழுவோ, ஆதரவான குழுவோ திராவிட இயக்கம் சார்ந்து கருணாநிதி அவர்களை புத்தக அட்டையாக போட்டு நூல் ஒன்று தயாராகிவிட்டது. நூல் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். நூல் தொடக்கத்தில் நீதிக்கட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என பல்வேறு கட்டுரைகள் வழியாக தம...

கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024

படம்
      கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024 மகளின் நோயை விளக்க புத்தகம் எழுதிய தாய்! டோன்யே ஃபாலுகி எகேசி நைஜீரியாவைச் சேர்ந்தவர் லோலா சோன்யின். இவர் உய்டா புக்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். கவிஞரான இவர் குழந்தைகளுக்காக ஏழு நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு ஊக்கம் தந்த எழுத்தாளராக டோன்யே என்ற எழுத்தாளரை அடையாளம் காட்டினார். டோன்யே, தனது ஒன்பது வயது மகள் சிமோனுக்காக நூல்களை எழுதி வெளியிட்டவர். அவரது மகளுக்கு டவுன் சிண்ட்ரோம் நோய் உள்ளது. இதுபற்றிய நூல்கள் இல்லாத நிலையில், தாயே மகளுக்காக, மகளின் நோயைப் பற்றிய நூலை எழுதியிருக்கிறார். இவரின் நூல்களை உய்டாபுக்ஸ் வெளியிட்டு வருகிறது. டோன்யேவின் வீட்டிக்கு வந்த டவுன் சிண்ட்ரோம் சிகிச்சையாளருக்கு, நோயை எப்படி விளக்குவதென தெரியவில்லை. ஏதேனும் நூல்கள் கிடைக்குமா தேடி சோர்ந்து போயிருக்கிறார். உகோ அண்ட் சிம் சிம் - வாட் இஸ் டவுன் சிண்ட்ரோம் என்ற தலைப்பில் இரு பிரதிகளை அச்சிட்டிருக்கிறார். பிறகு, ஐந்தாயிரம் பிரதிகளை அச்சடித்து விற்றிருக்கிறார். பிறகுதான் உய்டோ பதிப்பக உதவி கிடைத்திருக்கிறது. என்னுடைய குழந்தையின் நிலையை அறி...

விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

படம்
        3 பாயும் பொருளாதாரம் விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி! பனிரெண்டு லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவற்றை வசூலிக்க முடியவில்லை. அணுக்க முதலாளித்துவ ஒன்றிய அரசு, எப்போதும்போல கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்றால் அத்துறை சார்ந்த முன்னேற்றம் என்று பொருள் கொள்ளலாம். கொரோனா காலத்தில் கூட லாபம் சம்பாதித்த தொழிலதிபர்களுக்கு எதற்கு கடன் தள்ளுபடி? இப்படி அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்று வரி கட்டாமல் சம்பாதித்தாலும் கூட லஞ்சம் வழங்குவது, பங்கு விலையை அதீதமாக காட்டுவது என இந்திய தொழிலதிபர்கள் சர்க்கஸ் காட்டி வருகிறார்கள். சரி சந்தைக்கு செல்வோம். சந்தையில் மக்கள் பொருட்களை வேண்டும் என கோரவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வணிகர்கள் வாங்கி வைத்து விற்பார்கள். சந்தை அதன் இயல்பில் இயங்கி வரும் என பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. சந்தை இயங்குவது கண்ணுக்குத் தெரியாத கரம் மூலம் என...

வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்!

படம்
          வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்! ஜீப்ரா சத்யதேவ், பிபிஎஸ், சத்யா, தாலி தனஞ்செயா தெலுங்கு இதுவும் ஒரு வங்கியை ஏமாற்றும் அதிகாரியைப் பற்றிய கதை. அதாவது வங்கிக்குள்ளே இருந்துகொண்டே ஊழலை எளிதாக கண்டுபிடிக்காத வகையில் செய்கிறார். அப்படி செய்யும்போது, மாஃபியா டான் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு ஐந்து கோடியை நான்கு நாட்களில் திரட்டுமாறு மிரட்டப்படுகிறார். அதை நாயகன் எப்படி சமாளித்தார் என்பதே கதை. இயக்குநர் ஈஸ்வர கார்த்திக் நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார். வணிக ரீதியான குத்துப்பாட்டு உண்டு. நாயகி பவானியுடன் அடல்ஸ் ஒன்லி வசனங்களை வைத்தே காதலை சொல்லிவிட்டு அடுத்த விஷயத்திற்கு செல்கிறார்கள். பிரியா அக்கட தேசத்தில் காட்டும் தாராளம் பொறாமையாக உள்ளது. விஷாலுக்கு அம்மாவாக நடித்தே சாதனை செய்துவிட்டவரை என்ன சொல்வது?   நாயகன் சூர்யா, அபார்ட்மென்ட் ஒன்றை காசுக்கு வாங்கி நீரிழிவு நோய் வந்த அம்மாவை குடிவைக்க ஆசைப்படுகிறார். அதேநேரம், இன்னொரு வங்கியில் வேலை செய்யும் காதலியைம் மணக்க நினைக்கிறார். அதற்கு காசு வேண்டுமே... அதற்கு வங்கியில் உள்ள சட்ட ...

பொருட்களின் விலையே அதன் விற்பனையை தீர்மானிக்கும் காரணி - பாயும் பொருளாதாரம்

படம்
  பாயும் பொருளாதாரம் ஆதிகாலத்தில் மனிதர்களுக்குத் தேவையாக இருந்தது உணவு, உடை, இருப்பிடம். இன்றும் கூட அதே தேவைக்காகவே பெரும்பாலான மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உழைக்கிறார்கள்தான். ஆனால், அதன் பயன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. முதலாளித்துவ தத்துவத்தில், அரசு பெரும் சக்தியாக இருந்து மக்களிடமிருந்து பணத்தை வரியாக பிடு்ங்கி பெரு நிறுவனங்களுக்கு கடனாக வழங்கிவிடுகிறது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி என ஏதேதோ பிதற்றல்கள்... மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் இன்றுவரை அப்படியே உள்ளன. கூடுதலாக, அவை பின்வரும் தலைமுறையினருக்காகவும் சேர்த்துவைக்கத் தொடங்கியுள்ளனர். நீர், காடு, வன விலங்குகள், பாறைகள்,மரம் செடி கொடிகள், மணல், எண்ணெய், தாது, எரிவாயு என அனைத்துமே தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். அவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரை மழை பெய்யும்போது குட்டைகள், ஏரிகளை தூர்வாரி வைத்து சேமித்தால் நிலத்தடி நீர் உயரும். இதன்விளைவாக குடிநீர் பற்றாக்குறை தீரும். அப்படி இல்லையெனில், பற்றாக்குறை உருவாகும். பட்டினி, பஞ்சம் எல்லாமே இப்படி உருவானவைதான். நடப்பு காலத்தில் வணிகர்கள் செயற்கையாக பொருட்கள் தட்டுப்பாட்டை உருவா...

நடுத்தர குடும்பத்திற்கு வரும் அடுத்தடுத்த பணப்பிரச்னையால் தவறான வழிக்கு இறங்குகிறார்கள். விளைவு?

படம்
    நாராயணா அண்ட் கோ தெலுங்கு பட்ஜெட் படம். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் பணத்தின் பற்றாக்குறை தெரிகிறது. வங்கியில் காசாளராக உள்ளவர் நாராயணா. கிடைக்கும் வருமானத்தில் மனைவி, இரு பையன்கள் என குடு்ம்பத்தை சமாளித்து வருகிறார். மனைவி பட்டுப்புடவை பைத்தியம். மகன் கிரிக்கெட் சூதாட்ட வெறியன். இளையமகன் செக்ஸ் வெறியன். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில் பிரச்னை வராமல் எப்படி இருக்கும்? நாயகனை நல்லவர் என்று கூறிவிட முடியாது. எப்போதும் குறுக்குவழியில் சம்பாதிக்க நினைக்கத் துடித்துக்கொண்டிருப்பவர். அந்த வகையில் கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டு பத்துலட்சம் கடன்படுகிறார். இத்தனைக்கும் படிப்பு வராமல் வாடகை டாக்சி ஓட்டி வருகிறார். அப்படி வேலை செய்யும் நிலையில் ஓசி பார்ட்டிக்கு சென்று வருகையில் ஒரு பெண்ணோடு கசமுசா செய்துவிடுகிறார். அந்த சமாச்சாரமே அப்பெண் சொல்லித்தான் நாயகனுக்கு தெரிகிறது. அதுவும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். இதனால் அவரை மணம் செய்துகொள்ள வேண்டி வருகிறது. அந்த காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேல் படம் பெரிதாக முன்னேறவில்லை. நகைச்சுவையும் கை...

mazhaipechu podcast full episodes....

படம்
    மழைப்பேச்சு பாட்காஸ்டுகளை முழுமையாக ஒரே இடத்தில் கேட்க... anbarasushanmugam.substack.com

பிச்சைக்காரன், பேராசையும் கொலைவெறியும் கொண்ட பணக்காரர்கள் வாழும் அரண்மனைக்குள் நுழைந்தால்....

படம்
      பிளடி பெக்கர் தமிழ் இயக்கம் சிவபாலன் பிச்சைக்காரர் ஒருவருக்கு மாளிகை ஒன்றில் சாப்பாடு இலவசமாக போடுவதைச் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைபவர், சொத்துப்பிரச்னையில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைக்கப் போராடுகிறார். உண்மையில் அவர் எதற்கு அங்கு சென்றார், உயிர்பிழைத்து வெளியே வந்தாரா என்பதே கதை. படத்தின் தலைப்பு பற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. படத்தில் அனைத்தும் உள்ள பணக்காரர், எதுவுமே இல்லாத பிச்சைக்காரன் என இரண்டு அதீத நிலைகள் காட்டப்படுகின்றன. இந்தப்படம் ஆங்கிலப்படத்தின் தாக்கம் பெற்றது என ஒருசாரார் கூறினர். இருக்கலாம். மறுக்க முடியாது. படத்தை தயாரித்த இயக்குநர் நெல்சனே அமெரிக்க டிவி தொடர்களால் உந்துதல் பெற்று காட்சிகளை அமைப்பவர்தான். அப்போது அவரின் மாணவரான இப்பட இயக்குநர் எப்படி மாறுபட்டு இருப்பார்? கடினமாக உழைத்தால் பணக்காரராகிவிடலாம் என்று நினைப்பதையே படம் பகடி செய்கிறது. ஒருவர் உழைப்பது சரி. ஆனால், தான் செய்வது சரி. தனக்கு கீழே சிலர் இருக்கிறார்கள் என மனநிம்மதி பெறுகிறார். சிலசமயங்களில் அதை சொல்லிக்காட்டவும் வன்ம...

ரோனி சிந்தனைகள் - நன்மையின் இன்னொரு பரிமாணம்!

படம்
      ரோனி சிந்தனைகள் நம் கையை விட்டு அனைத்தும் விலகிப்போய்விட்ட நிலையில் விரக்தியில் சொல்லும் வார்தைகள்தான் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்பது. ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்றால் அவர் நல்லவராக இருக்கவேண்டுமென்பதில்லை. முன்னர் உங்களுக்கு செய்த கெடுதலுக்கு பரிகாரமாக நன்மையைச் செய்யக்கூடும். பணத்திற்கு வாய் உண்டு. காதுகள் கிடையாது. அதனால்தான் காசு இருக்கிறவர்கள், தன்னால் யாராவது எளியோர் செத்தால்கூட கவலையேபடாமல் கேக் வெட்டி சாப்பிடவும், மது அருந்திக் கொண்டாடவும் முடிகிறது. கைது செய்ய காக்கிப்படை வந்தாலும் டீ குடித்தபடி மாட்லாடலாம். கையில் காசுள்ளவரையில் இங்கு எதுவும் தவறே கிடையாது. சோளப்பொரிக்கு வரி என அலறவேண்டியதில்லை. குறைந்த வரி கொண்ட சோளப்பொரியை வாங்கிச் சாப்பிடுங்கள் என நிதி அமைச்சர் விரைவில் கூறி மக்களுக்கு வழிகாட்டக்கூடும். சாப்பிட சோறு இல்லையா, கோதுமையில் ரொட்டி சுட்டு சாப்பிடுங்கள் என அரசு கூறக்கூடிய நாள் அருகில் உள்ளது. மேல், நடு, கீழ் என பல்வேறு வர்க்கங்கள் உள்ளனவே என சிலர் வருத்தப்படுகிறார்கள். பின்னே அவர்களை வைத்துத்தானே அரசுகளும் திட்டங்களைத் தீட்டி ...