இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல பழக்கவழக்கங்களுக்கு சூழ்நிலை முக்கியமா?

படம்
 கெட்ட பழக்கங்களை கைவிடமுடியாததன் காரணம் என்ன? கெட்ட பழக்கம் என்று இங்கு குறிப்பிடுவது ஒருவரின் உடல்நலனைக் கெடுப்பது மட்டுமே. ஒருவரின் மனநிலை, சமூகத்தை, நாட்டை கெடுக்கும் பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் தனி. கெட்ட பழக்கம் என்று சொல்வதை பான்பராக் போடுவது, புகையிலை பயன்படுத்துவது, மதுபானம் அருந்துவது ஆகியவற்றை வைத்து புரிந்துகொள்ளலாம். இதன்படி, ஒருவரின் மூளையில் கெட்ட விஷயங்களை செய்யும்போது குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் உருவாகிறது. அவையே திரும்ப திரும்ப புகையிலை பயன்படுத்துவது, பான்பராக் போடுவது ஆகிய செயல்களை ஊக்குவிக்கிறது. நல்ல பழக்கங்களை உருவாக்கிக்கொள்ள இதுபோல மூளையில் பதியும் அளவுக்கு ஏதேனும் பரிசுகளை தருவதாக செய்துகொள்ளவேண்டும். உங்களுக்கு நீங்களே பரிசு அளித்துக்கொள்ளலாம். மன அழுத்தம் காரணமாக மது அருந்தினால், மதுவை நிறுத்திவிட்டு தியானம், உடற்பயிற்சி என கவனம் செலுத்தலாம். நல்ல பழக்கங்களை பழகி பயிற்சி செய்ய காலம் எடுக்கும்.  நல்ல பழக்கங்களை தொடர்வது எப்படி? இரு நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது தியானத்தை செய்யவேண்டும். அதை அப்படியே மெல்ல அதிகரித்து கொள்ளலாம். ஒரேயடியாக அதிகளவு ச...

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள்

படம்
 சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள் ராமச்சந்திர குகா கிழக்கு பதிப்பகம் சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினர், ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலை கொண்ட உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் மூலம் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டனர் என்பதை நூல் சுருக்கமாக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலையோடு, முஸ்லீம்களின் தேச விசுவாசத்தை சந்தேகப்பட்டது, அரசியல் பிரசாரங்களில் பேசியது, அதிகாரப்பூர்வமாக முஸ்லீம்களை அரசு பதவியில் இருந்து களையெடுத்தது எல்லாமே ராமச்சந்திர குகாவின் எழுத்தில் பதிவாகியுள்ளது.  இதைப் படித்தால், மதவாத சக்திகள் வல்லபாய் படேலுக்கு எதற்கு சிலை வைத்தார்கள் என்று புரிந்துகொள்ள முடியும். இந்த நூலுக்கான விமர்சனத்தை எழுதும்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கிறித்தவ கன்னியாஸ்தீரிகள் மதமாற்றம் செய்ததாக இந்து குண்டர் அமைப்பு கொடுத்து புகாரின் பெயரில் கைதாகியுள்ளனர். ஏற்கெனவே, இ்ந்திய ஐக்கிய நாடு என்பது நொறுங்கிக்கொண்டிருக்கும் குடியரசுதான். இனி இந்த நாடு, எத்தனை துண்டுகளாக உடையப்போகிறது என்பதுதான் எதிர்பார்க்க வேண்டிய ஒரே விஷயம்.  நூலில் நேரு கொண்டிருந்த க...

ஒருவரை கடத்தி வைத்து மூளைச்சலவை செய்து மாற்ற முடியுமா?

படம்
 science questions and answers mr.roni ஒருவரை கடத்தி வைத்து மூளைச்சலவை செய்து மாற்ற முடியுமா? உளவியலாளர் ஜூடித் ஹெர்மன், 1992ஆம் ஆண்டு ட்ராமா அண்ட் ரெக்கவரி என்ற நூலை எழுதினார். இந்த நூலில் மூளைச்சலவை செய்வது பற்றி விளக்கி எழுதியுள்ளார். முரட்டு சங்கிகள், முட்டாள் சங்கிகள் தெலுங்கில் இந்துத்துவ படங்கள் எடுப்பதை பார்த்து வருகிறோம். எதையும் ஆராயாமல் முரட்டு முட்டாள்தனத்ததை எப்படி செய்வது என நூலில் கூறப்பட்டுள்ளது. இது வெறும் கோட்பாடு மட்டுமல்ல. பல்வேறு மத வழிபாடுகளைக் கொண்ட கல்ட்டுகள், சிறைச்சாலை கைதிகளுக்கு இப்படியான மூளைச்சலவை வேலைகளை செய்வார்கள். அடிப்படையில் ஒருவரின் முழு வாழ்க்கையையும் கட்டுப்படுத்தி தன்மதிப்பை இழக்கச் செய்தல்தான் முக்கியப் பணி. இடையறாது ஒருவரை உடல், மனம் என இரண்டிலும் வதைத்து சித்திரவதை செய்தல் அவசியம். அப்போது ஒருவரின் தன்மதிப்பு குன்றி, அதுவரை தான் கடைபிடித்த கொள்கைகளுக்கு மாறாக இயங்கத் தொடங்குவார். அதுதான் வெற்றி. மத அடிப்படைவாதிகள் இப்படித்தான் வெல்கிறார்கள். ஒருவர் உண்மை, ஆராய்ச்சி என்று பேசினால் மதவாதிகள் வன்முறையை கையில் எடுத்து எதிரிகளின் முதுகெலும்பை உ...

சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா?

படம்
 சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா? அண்மையில் சிங்கவலிமையை மனிதர்களுக்கு கடத்தும் பேரீச்சை பழ பிராண்டு ஒன்றை வாங்கினேன். கால்கிலோ பாக்கெட் 105 ரூபாய். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரீதியில் கடையில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொண்டு இருந்தது. விவகாரம் என்னவென்றால், உண்மையில் அந்த பேரீச்சம்பழம் தரமானதா இல்லையா என்பதுதான். பாக்கெட் பளபளவென அழகாக உருவாக்கி இருந்தனர். விஷயம் வீக்காக இருந்தால் பப்ளிசிட்டி பீக்காக இருக்கும் என்ற தத்துவப்படியே பழ பிராண்டு இருந்தது.  தேயிலை, காபித்தூளுக்கு கொடுப்பது போல ஜிப்லாக் பாக்கெட்டை தயாரித்து இருந்தார்கள். ஆனால், ஈராக்கில் இருந்து பெறப்படும் பேரீச்சம்பழம் பக்குவப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்டுகிறது. அது எந்தளவுக்கு சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியை தரும்? பழம்தான் புதிதாக இருக்குமா என்ன? அதற்கு எதற்காக ஜிப்லாக் பாக்கெட். வெட்டி விளம்பரம்தான். முக்கியமாக பழத்தை கழுவி சாப்பிடுங்கள் என பான் இ்ந்தியா லெவலில் பன்மொழி முன்னறிப்பு வேறு. ஆனால், தண்ணீரில் கழுவினால் பேரீச்சையில் கொட்டை மட்டுமே மிஞ்சியது. அந...

இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? - உடற்பயிற்சி கலாசாரமே இல்லாத மதவாத நாட்டின் வெட்டிப்பெருமை!

படம்
  இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? இந்தியாவில் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்கி பல்வேறு வகுப்புகளை நடத்துவார்களே ஒழிய அடிப்படையிலான விளையாட்டை, உடற்பயிற்சியை ஒருவருக்கு வழங்க அனுமதிப்பதில்லை. இந்த லட்சணத்தில் இந்தியா போட்டியிடும் போட்டிகளில் வெற்றிவாகை சூடவேண்டுமென ஊடகங்கள் ஊளையிடுகின்றன. பாலியல் சுரண்டல், தாக்குதல், வன்முறை இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வீரர், வீராங்கனைகள் போட்டிக்கு செல்வதே பெரியது. அவர்கள் பதக்கம் வெல்வது அடுத்த சோதனை. அதில் சரிவு ஏற்பட்டால், உடனே அரசியல்வாதிகள் அரிசி, உப்பு, புளி கணக்கையெல்லாம் எடுத்து நிதானமாக படிக்கத் தொடங்குவார்கள்.  எந்த நாட்டிலும் வீரர்களுக்கு இப்படியான அவமானம், இழிவு நடந்ததில்லை. இந்தியாவில் இதெல்லாம் சாதாரணம், ஏனெனில் இங்கு சாதிக்கு ஒரு நீதி என்ற தர்ம அமைப்பு உள்ளது. அடிப்படையில் இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் கிடையாது. அதை யாரும் ஊக்கப்படுத்துவதுமில்லை. மாத சம்பளத்திற்கு மாணவர்களை தயாரிக்க பள்ளிகள் உதவுகி்ன்றன. படிக்கவேண்டும். வேலைக்கு போகவேண்டும். திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் டெம்பிளேட்டான வழிமுறை.  மற்றப...

வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம்

படம்
  வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம் இங்கிலாந்தில் வரும் 2029ஆம் ஆண்டு பொது தேர்தலில் பதினாறு வயதானவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள். வாக்களிக்க பதினாறு வயது என்பது ஏற்கெனவே பல நாடுகளில் உள்ள நடைமுறைதான். சில நாடுகள் அதை ஏற்கவில்லை. குறிப்பாக உலகிலுள்ள 85 சதவீத நாடுகளில் வாக்களிக்கும் வயது 18 ஆக உள்ளது. இங்கிலாந்தில் இதற்கு முன்னர் 1969ஆம் ஆண்டு, வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18 ஆக மாற்றினா். அதற்குப் பிறகு இப்போது தொழிலாளர் கட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதன் சுலோகன் பிரகாரம் மாற்றம் வந்திருக்கிறது.  பிரேசில், அர்ஜென்டினா, நிகரகுவா, மால்டா, ஜெர்சி, ஆஸ்திரியா, கியூபா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் பதினாறு வயதி்ல வாக்களிக்கும் உரிமை உள்ளது. வாக்களிக்கும் வயதை குறைப்பது அரசியல் கட்சிகளுக்கு உதவும் என்பது சரி. ஆனால், வாக்களிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது ஆய்வுக்குரியது. பதினாறு வயது என்றால் இயக்குநர் சபாபதி எடுத்த திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதைக் கடந்து பார்த்தால், இங்கிலாந்தின் துணை பிரதமர் வாதத்தை வலுப்படுத்த தான் அம்மாவானது பதினாறில்,வரி ...

வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆசிரியர் வழிகாட்டினால் போதுமானது!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி டன்னிங் குருகர் விளைவு என்றால் என்ன? ஒருவர் தன்னுடைய திறமை , அதன் எல்லை இதுதான் என தெரியாமல் இருப்பது. இசைக்கலைஞர் கூட்டத்தில் ஒரு வராக இருப்பார். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கான்செர்ட் நடத்திவிட முடியும் என நம்புவார். உண்மையில் அதற்கு தேவையான திறமை அவருக்கு இருக்காது. அதாவது, திறமையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தன்னால் சிறந்த இசைக்கலைஞராக முடியும் என நம்புவார்.  பழைய பொருட்களின் மீது இழப்பு என தெரிந்தும் முதலீடு செய்வது ஏன்? தீராத சண்டை என்றால் விவாகரத்து பெற்றுவிடலாம் என தலைவன் தலைவி படம் வலுவாக கூச்சல் போட்டு சொல்லியிருக்கிறது. கசப்பான உறவை சகித்துக்கொண்டு வாழ்வது, பழுதான பொருளை மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குவது ஆகியவை வாழ்க்கையில் இயல்பாக நடப்பவை. ஆனால், அப்படி செய்வது எதிர்காலத்தில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என செய்பவர் உணர்ந்திருக்கலாம்.ஆனால், அறிந்த உண்மையை நடைமுறையில் கொண்டு வர மாட்டார். அதற்கு காரணம் மனிதர் அல்லது பொருட்கள் மீது உள்ள பற்று, பாசம். இதனால்தான் புதுகார் வாங்கும் காசைக் கூட ஒருவர்...

பகல் கனவு, தவறான நினைவுகள், தண்டனை வழங்கப்பட்டால் குற்றம் குறையுமா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பகல் கனவு காண்பதால் நன்மையா, தீமையா? பகலில் கனவு காண்பது என்பது பொதுவாக நிறைவேறாத ஒன்றாக அனைத்து மக்களும் கருதுகிறார்கள். ஆனால், அதை ஒருவர் தீர்மானிக்க முடியாது. ஏதோ ஒரு நேரத்தில் சடாரென நினைவுகள் சூழ, ஒருவர் கனவுக்குள் செல்கிறார். ஒருநிமிடம் அவர் முழுமையாக அந்த கனவுக்குள் போய்விடுகிறார். இது மூளையின் செயல்பாடுதான். இதை ஒருவர் தானாக உருவாக்குவதில்லை. இப்படி நடக்கும் செயல்பாடு புதுமைத்திறனை ஊக்குவிக்கிறது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, பிரச்னைகளை தீர்க்கும் நிலையில் இருப்பதாக கணிக்கிறார்கள். சுதந்திரமாக யோசிக்கிறது என புரிந்துகொள்ளலாம். உணர்வு ரீதியான செயல்பாடு, எதிர்காலத்தை திட்டமிடுவது ஆகியவற்றுக்கும் பகல் கனவு காண்பது உதவுகிறது.  தவறான நினைவுகள் என்றால் என்ன? மூளையில் உள்ள நினைவுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போதுதான் அவை மேலே வருகின்றன. சிறு கற்களாக வீடுகள் கட்டப்படுவது போல நினைவுகள் அடுக்கப்படுகின்றன. வீடியோ கேமராவில் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்தால் அது எப்போதுமே மாறாது. அப்படியேதான் இருக்கும். ஆனால், மூளையி...

பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தையின் அறிகுறிகள்

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பாலியல் ரீதியான வன்முறை என்றால் என்ன? சிறுவன், சிறுமியை ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவதை பாலியல் வன்முறை, சுரண்டல் என்று கூறலாம். முறையாக திருமணம் செய்யும் அல்லது வாக்களிக்கும் வயதை எட்டாதவர்கள். இவர்களை இளையோர் என்று கூறலாம். பாலியல் ரீதியான வன்முறையை சிறுவன், சிறுமிக்கு அறிமுகமானவர்கள் தொடங்கி அறிமுகமில்லாத வழிப்போக்கர்கள் வரை வாய்ப்பு கிடைத்தால் செய்கிறார்கள். பொதுவாக பலவீனமானவர்களைக்  கண்டால் அவர்களை மேலாதிக்கம் செய்து சுரண்டுவது மனிதர்களுக்கு பிடித்தமானது. உடல் ரீதியாக, உள்ள ரீதியாகவும் ஒருவரை பாலியல் வன்முறை பாதிக்கிறது.  பாலியல் சுரண்டல் என்பது வன்முறையை அடிப்படையாக கொண்டதா? அப்படி இருக்க வேண்டியதில்லை. இன்றைக்கு ஆபாச வலைத்தளங்களில் பெண்ணை உறவு கொள்வதாக காட்டும்போது கூட அவளின் கழுத்தை நெரித்தபடியே உறவு கொள்கிறார்கள். அது படப்பிடிப்பு, நடிகர்களை வைத்து ஆபாச படம் எடுக்கப்படுகிறது ஆனால் உண்மையில் ஒருவர் இதை முயன்றால் என்னாகும்? சம்பவ இடத்திலேயே ஒருவர் மூச்சு திணறி இறந்துவிடுவார். பாலியல் ரீதியான சுரண்டல் பல்வேறு திசை ...

இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா?

படம்
  இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா? தூக்கத்திற்கு நேரம் முக்கியம் சூரியன் காலையில் எழுந்து மாலை மறைகிறது அல்லவா, அதே முறையில் தூக்கம் அமையவேண்டும். அதுபோல உங்கள் வேலை நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.  காலையில் எழுந்து சூரிய ஒளி மேலே படும்படி உலாவ வேண்டும். உணவு உண்டபிறகு சிறிது நேரம் நடக்கலாம். நாய் இருக்கிறதா, அதை அழைத்துக்கொண்டு வெளியே உலாவச் செல்லலாம்.  ஒருநாளுக்கு இருபது நிமிடங்களேனும் பசுமையான நிலப்பரப்பை பார்க்கவேண்டும். மரத்தில் அடியில் உட்கார்ந்து உணவை உண்ண முயலலாம்.  முட்கள் இல்லாத புற்கள் உள்ள இடத்தில் செருப்பை அணியாமல் வெற்று கால்களோடு சிறிது நடக்கலாம். அசுத்தமான இடங்களில் காலணி இன்றி நடப்பது நோய்களைக் கொண்டு வரும் என்பதை மறக்காதீர்கள்.  வெளியே மனதை நெகிழ்வாக வைத்துக்கொள்ளும் சமயங்களில் போன், வாட்ச் ஆகியவற்றை வீட்டிலேயே வைத்துவிடவேண்டும். அப்போதுதான் மேகத்தை, பறவைகளைப் பார்க்க முடியும். வீசும் குளிர்ந்த தென்றலின் இனிமையை உடலும் மனதும் உணரும்.  தோட்டத்தை பராமரிக்க முயலலாம். உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால், அதில் பூக்கள், காய்கறிகளை...

யார் இந்திய குடியுரிமை கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்!

படம்
  யார் இந்திய குடியுரிமை  கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்! பீகாரில் தேர்தல் ஆணையம் சீர்திருத்தப் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. எஸ்ஐஆர் எனும் பெயரில் யார் வாக்காளர்கள் என்பதை அகழாய்வு செய்து வருகிறது. இவர்களின் பணியில் பல லட்சம் ஏழை, பட்டியலின, புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பாசிச இயக்கத்தின் பின்புலத்தோடு இயங்கும் வலதுசாரி மதவாத கட்சிக்கு எதிர்ப்புகள் புதிதல்ல. முன்னரே குடியுரிமைச் சட்டம் என்பதைக் கொண்டு வந்து மக்களை இனம் பிரித்து கெட்டோ எனும் தனி இடத்தில் அடைக்க திட்டமிட்டனர். அவை சில மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.  தேர்தல் ஆணையம் சுயாட்சி தன்மையில் இயங்கக்கூடியது. ஆனால் இப்போது பாசிச இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி ஆபத்து ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை செய்யத்தொடங்கியுள்ளது. 1991-96 காலகட்டம் தேர்தல் ஆணையத்தின் சிறந்த பணிக்காலம் என்று கூறலாம். அப்போது அதன் தலைமை தேர்தல் அதிகாரியாக டிஎன் சேஷன் என்பவர் இருந்தார். சுயாட்சி, நேர்மை, பாகுபாடற்ற தன்மை வெளிப்படையாக தெரிந்தது. சேஷனுக்குப் பிறகு எம்எஸ்...

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை!

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி உளவியல் ரீதியான ட்ராமா என்றால் என்ன? ஒருவரின் இளம் வயதில் உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்திருக்கலாம். இப்போது மூன்றாம் உலகப்போருக்கு உலகம் தயாராகி வருகிறது அல்லவா? அதுபோல...தீவிரவாதத்தால் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு,மோசமான கோர விபத்துகள், உதவிக்கு ஆட்கள் இன்மை, ஆகியவை ஒருவரை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. ஒருவருக்கு நேரடியாக நடக்கும் சம்பவங்கள் அல்லது மோசமான சம்பவங்களை காண்பதும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக போர். போரால் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஈடுபடும் ராணுவ வீரர்களும் வாழ்நாள் முழுக்க மனநல குறைபாடுகளில் சிக்கி சிதைகிறார்கள். இதில் இயற்கை பேரிடர்களும் சேர்த்திதான். சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல் ஆகியவற்றையும் உளவியல் பாதிப்பு ஏற்படுத்துவனவற்றில் இணைக்கலாம்.  மோசமான சம்பவங்கள் பற்றி ஆராய்வது அவசியமா? தனிநபராக தேவையா என்றால் இல்லைதான். ஆனால், உளவியல் ஆய்வுக்காக அத்துறையில் ஆர்வம் காட்டுபவர்கள் வரலாற்றை தேடி உளவியல் ரீதியான பிரச்னை கொண்டவர்களை அடையாளம் காண்கிறார்கள். ...

ஆங்கிலேயர்களோடு கூட்டு சேர்ந்த பார்ப்பனர்கள், மராட்டிய கலாசாரத்தை நாடகம் வழியாக உருவாக்கிய வரலாறு!

படம்
  பார்ப்பனர்களோடு கூட்டு சேர்ந்த பிரிட்டிஷார்  மராட்டியத்தில் நடைபெற்ற தமாஷாக்களில் மகர் இன பெண்கள் நடனமாடுவது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இதை பிரிட்டிஷார், மேல்தட்டு வர்க்க இந்தியர்கள் பாலியல் தன்மையை சற்று குறைத்து இசை நடனமாக மாற்றி பல்வேறு இடங்களில் நடத்துமாறு மாற்றினர். இப்படி கூறுவதால், பிரிட்டிஷார் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி வழங்கினர் என்றோ, அநீதியை தண்டித்தனர் என்றோ புரிந்துகொள்ளக்கூடாது. அவர்கள் வணிகர்கள். வணிகத்திற்கு பிரச்னை வராதபடி சாதி மேலாதிக்கத்தை பார்ப்பனர்களோடு சேர்ந்த கடைபிடித்து தமாஷாக்களை நடத்தினர். இதன் வழியாக சாதி மேலாதிக்கம், அதன் அடிப்படையிலான பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டது. 1898ஆம் ஆண்டில் இரு மகர் இன பெண்கள், தமாஷாக்களில் போட்டி நடனமிடுவது பற்றியெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது அரிதானதுதான் என்றாலும் அப்படி செய்கிறார்கள் என்றால், அவர்கள் புகழ்பெற்ற இசை, நடனக் கலைஞர்களாக உள்ளனர் என்று புரிந்துகொள்ளலாம்.  பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் விக்டோரியா கால ஒழுக்கம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷார், கலைகளை ஐரோப்...

இணையத்தை மையமாக கொண்டு தொடங்கும் வணிகத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்!

படம்
  40 ரூல்ஸ் ஃபார் இன்டர்நெட் பிசினஸ் மேத்யூ பால்சன்  கட்டுரை நூல்  ஆங்கிலம் இன்று பெரும்பாலான வணிகம், ஸ்டார்ட்அப்பாக இணையத்தில் தொடங்கப்படுகிறது. முதலீடு பெற்று வளர்ந்தால் அதை பாரம்பரிய வணிகம் போல இடம் பிடித்து அலுவலகம் திறந்து பெரிதாக்குகிறார்கள். ஆனால், இணைய நிறுவனங்கள் வளர்வது முழுக்க வேறுவிதமாக உள்ளது. அலிபாபாவை எடுத்துக்கொள்ளுங்கள். அமேசானின் வணிகத்தைப் போன்று இயங்கும் நிறுவனம். சீனாவில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் உருவாக்கிய மாற்றங்களும் அசாதாரணமானவை. தனது வணிகத்திற்கான அடிப்படை நிதி கட்டமைப்பையே ஒரு நிறுவனம் உருவாக்கி சந்தையைப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல.  இன்று இணையத்தில் மட்டுமே  ஸ்மார்ட்போன்கள் முதலில் விற்கப்பட்டு பிறகு கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் மக்கள் ஆன்லைனில்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு 9 டு 5 வேலை பிடிக்காமல் போய் ஆன்லைன் வணிகம் தொடங்கினால் அதை எப்படி நடத்துவது, வெற்றி பெறுவது, புகார் கொடுப்பவர்களை சமாளிப்பது, நல்ல வாடிக்கையாளர்களை காப்பாற்றிக்கொள்வது ஆகியவற்றை எப்படி செய்வது என நூலாசிரியர் விரிவாக விளக...

டெஸ்லா பைல்ஸ் - ஆட்டோபைலட் முறையில் நடக்கும் எண்ணற்ற விபத்துகள், மரணங்கள்

படம்
 டெஸ்லா பைல்ஸ் - அதிகரிக்கும் கார் விபத்துகள் பாசிச இந்து மதவாதிகள் முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றி, அல்லது இயக்கங்கள் பற்றி காசு கொடுத்து எடுத்த வட இந்திய திரைப்படத்தின் பெயரல்ல இது. டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கு கார்கள் பற்றிய 23 ஆயிரம் ரகசிய ஆவணங்களை தன்னார்வலர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டார்.அதுதொடர்பாக கார்டியன் நாளிதழ் விசாரணையைத் தொடங்கி செய்திகளை வெளியிட்டு வருகிறது. இப்போது நாம் எழுதுவது அதன் தமிழாக்கம்தான்.  டெஸ்லா தொடங்கப்பட்டது தானியங்கு முறையில் காரை ஓட்டுவதை சாதிப்போம் என்று சொல்லித்தான். காரின் மாடல்கள் பாரம்பரியா போர்டு, ஜெனரல் மோட்டார்களை விட சிறப்பாக இருந்தன. டெஸ்லாவின் சிறப்பு, மின் வாகனம், அதற்கான பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் நிலையங்களையும் அவர் வலைப்பின்னலாக உருவாக்கி வைத்திருந்தார். இதனால்தான் டெஸ்லா வெற்றி பெற்றது. எலன் மஸ்க், குடியரசு கட்சிக்கு நிதியளித்து வெற்றிபெறச்செய்தார். அமைச்சர் பதவியைப் பிடித்தார். நாஜி வணக்கம் வைத்தார். பிறகு இப்போது அமைச்சர் பதவியை விட்டுவிட்டு அமெரிக்கன் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.  2018ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்...

சீனமொழியின் அடிப்படை வாக்கியங்களை கற்றுத்தரும் நூல்!

படம்
 சீனமொழியில் உள்ள 21 எளிய வாக்கியங்கள் பயணிதரன் பயணி.காம் பக்கம் 70 இலவச நூல் இந்த நூலை பயணி.காமில் மின்னஞ்சல் முகவரி பதிந்து தரவிறக்கி படித்தது. எழுத்தாளர் பயணி சீனமொழி கற்று அங்குள்ள இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சீனமொழி கற்கவென தனி நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் இந்த நூல் சீனமொழிக்கான அறிமுக நூலென்று கூறலாம்.  சீனமொழி கற்பதற்கான அடிப்படை இலக்கண, இலக்கியங்களை பயணி கற்றுத்தரவில்லை. அவர் பொதுவாக உரையாடலுக்கான எளிய நூலை எழுதியிருக்கிறார். மும்பை நாயகிகள் தமிழை இந்தியில் எழுதி வைத்து பேசுகிறார்களே அதுபோல, கொச்சையாக இருந்தாலும் தமிழ் வருகிறதே போதுமல்லவா? அதுபோலத்தான் நீ ஹாவ் என்பது உச்சரிப்பு எப்படி இருந்தாலும் அதை சொன்னாலே சீனர்கள் புரிந்துகொண்டு வேற்று நாட்டவர் என்ற வேற்றுமையை விரோத உணர்வை சற்று தளர்த்திக் கொள்வார்கள்.  பயணி எழுதியுள்ள நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக நடைமுறை ரீதியாக கிடைக்கும் நன்மை, அடிப்படையான விஷயங்களை எப்படி கேட்பது, பதில் பெறுவது, அதற்கு நன்றி சொல்வது, பிறகு விடைபெற்றுச்செல்வது ஆகியவற்றை தெரிந்துகொள்வதுதான். எனவே, இலவச நூல்...

ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!

படம்
  ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்  ப மருத நாயகம் 237 பக்கம் இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார்.  இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன.  நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன.  அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கரு...

அதிக நேரம் வேலை செய்யக்கூடாது என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கி கூறுகிற நூல்!

படம்
  டு நத்திங் - ஹவ் டு பிரேக் அவே ஓவர் வொர்க்கிங் செலஸ்டி ஹெட்லி கட்டுரை நூல் 167 பக்கங்கள் பொதுவாக இந்தியர்கள் விடுமுறை எடுக்காமல் கடுமையாக உழைத்து மேற்கத்திய ஆட்களுக்கு நிறைய சம்பாதித்து கொடுப்பார்கள். ஆகவே அவர்கள் சிறந்த மேனேஜர்களாக இருப்பார்களே ஒழிய கண்டுபிடிப்பாளர்களாக மாறவில்லை. அப்படி அதிக நேரம் உழைப்பதால் என்ன பாதிப்பு தனிமனிதர்களுக்கு, சமூகத்திற்கு, ஏற்படுகிறது என்பதை எழுத்தாளர் செலஸ்டி ஹெட்லி நிதானமாக விவரித்து உள்ளார்.  அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்வது ஆசிய நாடுகளில் பெரிதும் போற்றப்படுகிற பழக்கம். ஆனால், மேலைநாடுகளில் அதை திறமையின்மையாக பார்க்கிறார்கள். அங்கும் ஆசியர்கள் சென்று அதே பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். உண்மையில் அதிக நேரம் வேலை செய்வதன் அர்த்தம் என்ன என்பதை நூலாசிரியர் ஆராய்ந்து, நிறைய நூல்களைப் படித்து விளக்கியிருக்கிறார். அவர் ஆய்வுப்பூர்வமாக சொல்லும் தகவல்கள் எவையும் மிகைப்படுத்தப்பட்டதாக இல்லை.  அடிப்படையில் அலுவலகம் முடிந்தால் வீட்டுக்கு செல்வது, குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது ஆகியவற்றை தேசப்பற்று, நாட்டை காப்பாற்றுவது, பொருளாதார வலிமை, பணவீ...

சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!

 சீனா டிஸ்ட்ரப்டர்ஸ்  சீன டெக் நிறுவனங்களின் கதை கட்டுரை நூல் இந்த ஆங்கில நூல், மேற்குலகு கொண்டிருக்கும் சீனா மீதான மூடநம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறது. சீன பொருள் என்றால் மட்டமானது. நிறுவனம் என்றால் மோசடி செய்யக்கூடியது என வலுவான பிரசாரத்தை செய்துவருகிறார்கள். அதை உடைத்து வரும் முக்கியமான நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட், ஹூவெய், ஷாவ்மி, ஹெங்கன், லெனோவோ, ஹெயர் ஆகிய நிறுவனங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது.  வணிக நிறுவனங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், சீனாவில் உள்ள அரசியல், அதற்கு டெக் நிறுவனங்கள் செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றியும் பேசியுள்ள நூல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. வணிக ரீதியான விஷயங்களோடு அரசியலும் பின்னிப்பிணைந்துள்ளது. அப்படியல்லாமல் சீனாவில் எந்த வணிக நிறுவனமும் வளர முடியாது. அந்த வகையில் அலிபாபா, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை பெறுகின்றன. அலிபாபா உள்நாட்டில் சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஹூவெய் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. அதைபற்றி விவரிக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. இன்று அந்த சீன நிறுவனத்திற்கு ஒரே...