இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதக்கலவர, பேரிடர் சூழலில் உங்களை தற்காத்துக்கொள்வதே முக்கியம்!

படம்
  உலகளவில் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக பெண்களே உள்ளனர். எழுபத்து மூன்று சதவீதம். தற்காப்புக்கலையில் பெல்ட்டுகள் வாங்கித்தள்ளாவிட்டாலும் அடிப்படையாக சில முறைகளைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். மதவாத நாடான இந்தியாவில் தலித்துகள் திருமணத்தின்போது கூட தாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் கீழ் ஏராளமான சகோதர குண்டர்கள் அமைப்பு உண்டு. இவர்கள் வேலையே தாழ்த்தப்பட்டவர்களை, சிறுபான்மையினரை தாக்கி சொத்தை கொள்ளையடிப்பதுதான். எனவே, தற்காப்புக்கலை கற்பது ஏழை நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த நாட்டிலும் நல்ல விஷயம்தான். உயிர்பிழைக்க சண்டைபோடும்போது ஆயுதம் என தனியாக பிரித்துச் சொல்ல ஏதுமில்லை, அனைத்துமே ஆயுதங்கள்தான். கல், மண், குச்சி, செங்கல், ஆணி, சுத்தி, என அனைத்தையும் பயன்படுத்தலாம். உடலையும் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.   கைகளை வைத்து ஒருவரை முதுகில் முன்புறமாக மார்பில் வைத்து பின்புறமாக எப்படி வேண்டுமானாலும் தள்ளலாம். உங்கள் ஆற்றலைப் பொறுத்து எதிரிக்கு மார்பு எலும்புகள் கூட உடையும். கையிலுள்ள மூட்டு காயமடையாமல் இருந்தால...

மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா?

  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி விலங்குகளால் நிறங்களை இனம்பிரித்து அறிய முடியுமா? ஊர்வன, பறவைகளுக்கு நிறங்களை இனப்பிரித்து அறியும் திறன் உண்டு. ஆனால் பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறங்களை அறியும் திறன் இல்லை. மனிதகுரங்கு, குரங்கு ஆகியவை நிறங்களை அறியக்கூடியவை. நாய்கள், நீலம், பழுப்பு ஆகியவற்றின் அடர்த்தியை அறிந்துகொள்ளும். பூனை, பச்சை மற்றும் நீல நிறத்தை அறிகின்றன. அனைத்து விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருக்குமா? முதுகெலும்பு கொண்ட விலங்குகளுக்கு பெரும்பாலும் ரத்தம் சிவப்பாக இருக்கும். பிராண வாயுவில் ஆக்சிஜனை அடிப்படையாக கொண்டு ரத்த நிறம் அமைகிறது. ஹீமோகுளோபின் அணுவில் இரும்பு உள்ளது. இதுவே சிவப்பு நிறத்திற்கு காரணம். ஹெமோசயானின் இருந்தால் ரத்தம் நீலமாகவும், குளோரோகுரோனின், ஹெமெரித்ரின் இருந்தால் பச்சை நிறமாகவும் இருக்கும். மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? நாய், பூனை, பசு, காளை, ஆடு, யானை, ஒட்டகம், சிங்கம், சிறுத்தை, புலி, கொரில்லா, சிம்பன்சி, குதிரை, வரிக்குதிரை என பல்வேறு விலங்களுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. ஜெல்லி மீன்களில் மனிதர்களைக் கொல்லு...

சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி!

படம்
  சிறுவயது குடும்ப வன்முறையால் உளவியல் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் உளவுத்துறை அதிகாரி! மராஸ்லி துருக்கி தொடர் இருபத்தாறு எபிசோடுகள் யூட்யூப் பழைய புத்தக கடையை முன்னாள் ராணுவ வீரர் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் பெரிதாக யாரிடமும் பேசுவதில்லை. டீ கொண்டு வருபவரிடம் கூட அவர் அதிகமாக பேசுவதால், காசைக் கொடுத்துவிட்டு தன்னுடைய உலகில் மூழ்கிவிடுகிறார். அவர் கையில் நாளிதழில் வெளியான துப்பாக்கிச்சூடு செய்தி இருக்கிறது. அதை படித்துக்கொண்டிருக்கும்போது, இளம்பெண் ஒருவர் வந்து நூல் ஒன்றைக் கேட்கிறார். அதற்கு, ராணுவ வீரர் அதுமாதிரியான நூல் என்னுடைய கடையில் கிடையாது என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். அந்தப்பெண் எரிச்சல் அடைந்தாலும் சமாளித்து பேசி புகைப்படம் எடுக்க செல்லவேண்டிய இடத்தை அறிந்துகொள்கிறார். அவர் அங்கு செல்லும்போது, அங்கு யாரோ ஒருவரை கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார்கள். அதை பார்த்து புகைப்பட கலைஞரான இளம்பெண் பதறி ஓடுகிறார். அதேநேரம், அவரைக்கொல்ல கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். நாயகன், தனது செல்ல நாயை தேடி அங்கு வரும்போது நாயகி மாஹூரைக் காப்பாற்றுகிறான். கொலைகார கூட்டம், முன்னாள் ராணு...

விலங்கியலின் தந்தை யார்?

 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹைட்ரோபோனிக்ஸ் என்றால் என்ன? மண்ணில் செடிகள் நடப்படுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் செடிகள், மண் இல்லாமல் வளர்க்கப்படுகின்றன. பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம். நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை திரவ வடிவில் செடிக்கு வழங்குகிறார்கள். நவீன ஹைட்ரோபோனிக் முறையை உருவாக்கியவர், ஜூலியஸ் வான் சாக்ச்ஸ். இவர் தாவரங்களின் ஊட்டச்சத்து பற்றி ஆய்வுகள் செய்து வந்தவர். விதைகளை எத்தனை ஆண்டுகள் கெடாமல் காக்க முடியும்? காற்று படாத பெட்டியில் விதைகளை பாதுகாப்பாக வைத்திருந்தால் அவற்றைக் காக்கலாம். பெரும்பாலும் காய்கறி விதைகளை ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பத்திரப்படுத்தலாம். இகிபெனா என்றால் என்ன? பாறைகளில் கற்களில் பூக்களை செதுக்கும் கலை, இதை தொடக்கத்தில் வீரர்கள், புகழ்பெற்ற குடும்பத்தினர் பழகினர். ஆனால், இன்று காலப்போக்கில் ஆண்கள் மட்டுமே செய்து வந்த கலையை பெண்களும் செய்து வருகிறார்கள். பூக்களை அலங்காரம் செய்வது என்பதுதான் இகிபெனாவின் மூலம். ஒத்திசைவு, அழகு, சமநிலை என்பதை அடிப்படை சூத்திரமாக கொண்டது. 1400 ஆண்டுகளாக இக்கலை ஜப்பானில் புகழ்பெற்ற...

தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி அமெரிக்காவின் தேசிய மலர் எது? 1986ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ரோஜா, அமெரிக்காவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது? ஜோசப் காட்லெப் கோல்ராய்டர் என்ற ஆராய்ச்சியாளர், தேனீ மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கையை 1761ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவர்தான், செடிகள் பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை செய்வதை ஆதாரத்துடன் கண்டுபிடித்தவர். லில்லி விக்டோரியா அமேசானிகா என்ற தாவரத்தின் சிறப்பு அம்சம் என்ன? பிரமாண்டமானது. அமேசான் ஆற்றில் வளரக்கூடியது. இதன் இலைகள் ஆறு அடி நீளம் கொண்டவை. இலைகளில் சிறிய குழந்தையைக் கூட வைத்துக்கொள்ளலாம். வளர்ச்சி அடைந்த இலைகள் நாற்பத்தைந்து கிலோ எடையைத் தாங்கும். பூக்கள், முப்பது செ.மீ. அளவு கொண்டவை. இரண்டு இரவுகள் மட்டும்தான் மலர்ந்து பூக்கள் இருக்கும். முதலில் வெள்ளையாக இருந்து இரண்டாவது இரவில் ரோஸ் நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காட்சியளிக்கும். ஒரு தாவரத்தில் ஒரே நேரத்தில் ஒரு பூ மட்டுமே பூக்கும். இரண்டு இரவுகளுக்கு பிறகு பூக்கள், நீரில் மூழ்கிவிடும். ஆரஞ்சு மரத்தின் ...

ஆழி - சமூக உளவியல் கோட்பாடுகள் - மின்னூல் வெளியீடு

படம்
  https://kdp.amazon.com/amazon-dp-action/us/dualbookshelf.marketplacelink/B0F62KK95M

அசைவம் உண்ணுபவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டுமா?

படம்
 சைவர்களின் பெருமையும், ஆணவமும்! சைவம், அசைவம் இரண்டில் எது உயர்ந்தது? இன்றைய இந்தியாவில் இது முக்கியமான விவாதப்பொருள். இதுபோன்ற விவாதங்களை சைவ உணவுபழக்கத்தினர்தான் உருவாக்கி வாதிட்டு வருகிறார்கள். சைவ உணவுமுறைதான் மனிதர்களுக்கானது என்று அவர்களே வாதிட்டு வென்று வருகிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பே தேவையில்லை என்று கூறலாம். அசைவ உணவுப்பழக்கத்திற்கு சைவ உணவுப்பழக்கத்திற்கு உள்ளது போன்ற விவாதம் செய்யும் நபர்கள் இல்லை. ஆனாலும் கூட அசைவம் உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைவர்கள், அதிகரித்து வரும் அசைவர்கள் பற்றி அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நாளிதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணைய வலைதளங்கள் மதம், ஆன்மிகம் பற்றிய நிகழ்ச்சிகளை எழுதி ஒளி(லி)பரப்பிவழங்கி வருகின்றன. இவற்றிலும் சைவ உணவு கோஷம் தீவிரமாக உள்ளது. அதை பாராட்டியும் பேசி வருகிறார்கள். சைவ உணவுப்பழக்கம் அந்தளவு புகழ்மிக்கது, பயன்மிக்கது என்றால் எந்த விளம்பரம், பிரசாரம் இன்றியே அசைவ உணவுப்பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவது எப்படி? பல்வேறு சாதி, ம...

சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கூறும் நூல்!

படம்
 ஆன் டைரனி டிமோத்தி ஸ்னைடர் இந்த நூல், சர்வாதிகாரம் எப்படி தொடங்குகிறது, அதற்கு ஆதரவு கிடைப்பது எங்கிருந்து, மக்கள் அதை ஏன் ஏற்கிறார்கள் என்பதை இரு உலகப்போர்கள் பின்னணியில் இருந்து ஆராய்கிறது. சர்வாதிகாரம் பற்றிய அடிப்படைக் கருத்து ஒன்றைக் கூறிவிட்டு வரலாற்று சம்பவங்களுக்கு நூல் செல்கிறது. இது படிக்க சற்று ஆறுதலைக் கொடுக்கிறது. எழுத்தாளர் டிமோத்தி, வரலாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு கட்டுரை எழுதினால், அது நூலை பலநூறு பக்கங்கள் கொண்டதாக எளிதாக மாற்றியிருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. சர்வாதிகாரம் வளர்ந்து வரும் நாடாக இந்தியாவையும் எழுத்தாளர் டிமோத்தி குறிப்பிட்டிருப்பது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. அவர் வரலாற்று ரீதியாக ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு நிறைய சம்பவங்களை விளக்குகிறார். அவற்றைப் படிக்கும்போதே நமக்கு திகைப்பாக உள்ளது. ஒரு போர் நடைபெறுகிறது. அதற்கு ஆதரவாக, எதிராக அணி திரள்வோருக்கு பல திட்டங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதைப்பற்றிய விவரிப்பு யூதர்களின் இனப்படுகொலையை எப்படி வல்லரசு நாடுகள் கண்டும் காணாமலும் இருந்தன என்பதை விளக்கிக் ...

தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது? கானியம் மெக்குலாடம் என்ற தாவரமே நஞ்சு என்ற வகையில் ஆபத்தானது. தென் அமெரிக்காவில் உள்ள லானா மரம், நஞ்சில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பழங்குடிகள் இதன் நஞ்சை, தங்களின் அம்புகளில் பயன்படுத்துகிறார்கள். தாவரங்கள், மரம், செடிகள் எதனால் முக்கியத்துவம் பெறுகின்றன? காகிதம், ஜவுளி, கட்டுமானம், உணவு ஆகியவற்றுக்கு மூலப்பொருட்களை மரங்களே தருகின்றன. சாக்லெட்டுகளை உருவாக்க கோக்கோ விதைகள் தேவை. குறிப்பாக தியாபுரோமா காகோவ் என்ற மர இனம் தேவைப்படுகிறது. ஃபாக்ஸ் குளோவ் என்ற தாவரத்தில் இருந்து இதய செயலிழப்புக்கான மருந்து பெறப்படுகிறது. காமெலியா சினென்சிஸ் என்பதை அறிவீர்களா, அதுதான் தினந்தோறும் பருகும் தேநீரில் பயன்படுத்தும் தேயிலை. மரக்கன்று இனப்பெருக்கத்தில் மாற்றத்தை உருவாக்கியவர் யார்? லூதர் பர்பேங்க் என்பவர், மரக்கன்றுகளை வீரியம் மிக்கதாக கலப்பு முறையில் உருவாக்கினார். பல்வேறு காய்கறி செடிகளை பார்த்து அடையாளம் கண்டு அதை கலப்பு முறைக்கு ஏற்றதாக மாற்றினார். இந்த வகையில் உருளைக்கிழங்கு, பிளம் ஆகிய செடிகள் உள்ளடங்கும்....

கிளர்ந்தெழு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
 ராக்குட்டன் கோபோ, ஸ்மாஷ் வேர்ட்ஸ், விவலியோ, பாரோபாக்ஸ், டோலினோ, பேக்கர் அண்ட் டெய்லர், க்ளவுட் லைப்ரரி, ஓவர் ட்ரைவ், பேலஸ் மார்க்கெட் பிளேஸ் ஆகிய வலைத்தளங்களில் கிடைக்கும்  கிளர்ந்தெழு (kilarnthelu)       https://books2read.com/u/m2D611

சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

படம்
  சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது? அனைத்து விதிகளையும் சட்டங்களையும் சர்வாதிகார அரசு உடைத்தெறியும் என சட்ட கோட்பாட்டாளர் கார்ல் ஸமிட்ச்ட் கூறினார். நாட்டை நிரந்தரமான அவசர நிலைமையில் வைத்திருக்க முயல்கின்றனர். அப்போதுதான் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக, அடிப்படை சுதந்திரத்தை விலைபேச முன்வருவார்கள். தீவிரவாதம் பற்றி இன்றைக்கு நிறைய ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மக்கள் அதை நம்பி விடக்கூடாது. அதில் எந்த உ்ணமையும் இல்லை. அடிப்படை உரிமைகளை இழந்தால் அரசு கொடுப்பதாக கூறும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதும் நடைபெறுவதுண்டு. அதிகாரத்திற்கு கீழ்ப்படிவது சற்று இணக்கமான பாதுகாப்பான தன்மையை ஏற்படுத்துகிறது. சுதந்திரம், பாதுகாப்பு என இரண்டையும் இழந்துவிடுகிறோம். பாசிஸ்ட் ஒருவருக்கு வாக்களித்தால், மோசமான நிலையே கிடைக்கும். சர்வாதிகாரிகள், பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி பேசும்போதெல்லாம் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள், தங்களுடைய கருத்துகளை எதிர்ப்பவர்களை, விமர்சனம் செய்பவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்...

உலகின் முதல் வெற்றிகரமான குளோனிங் விலங்கு எது?

படம்
    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பி53 என்ற மரபணுவின் பயன் என்ன? இந்த மரபணு, டிஎன்ஏ சேதமாகும்போது செல்கள் புதிதாக உருவாவதை தடுத்து புற்றுநோய் அபாயத்தை முற்றாக தடுக்கிறது. அதேசமயம் இந்த பி53 மரபணு ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகும்போது, புற்றுநோய் ஆபத்து ஏற்படும். இந்த மரபணு பற்றி அறிந்த ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க இதை பயன்படுத்திகொள்ள முடியுமா என யோசித்து வருகிறார்கள். பி53 மரபணு, 1979ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மரபணுவியலின் தந்தை என கிரிகோர் மென்டல் கருதப்பட காரணம் என்ன? அவர் பதினொரு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தாவரங்களை ஆராய்ந்து அதன் இனப்பெருக்கம் பற்றிய குறிப்புகளை சேகரித்து வைத்தார். மெண்டல் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் துறவி. தனது தோட்டத்தில் உள்ள பட்டாணியை ஆராய்ந்து மரபணு பற்றிய உண்மைகளை உலகிற்கு சொன்னார். வில்லியம் பேட்சன் என்ற ஆராய்ச்சியாளர், மெண்டலின் ஆய்வை அறிவியல் உலகிற்கு கொண்டு வந்தார். மரபணுவியல் என்ற பதத்தையும் வில்லியம் அறிமுகப்படுத்தி வைத்தார். டார்வின், மெண்டல் என இரு புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களும் ஒருவரையொருவர் அறிவார...

பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை

படம்
  பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை பேரிடர் காலங்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை திருட பலரும் முயல்வார்கள். மனிதர்கள் இயல்பாகவே மோசமானவர்கள்தான். சட்டங்கள் இருப்பதால், அவர்கள் வேறு வழியின்றி தண்டனைக்கு பயந்து நல்லவர்களாக நடிக்கிறார்கள். நான் இப்போது சொல்வது குரூரமாக இருந்தாலும் ஆபத்தான காலங்களில் மனிதர்களின் மனம் மோசமானது என்பதை நிரூபிக்க நிறைய உதாரணங்கள் உண்டு பேரிடர் அல்லது மதக்கலவரம் உருவாக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களின் வீடுகளை கொள்ளையிடுவது, பெண்களை வல்லுறவு செய்வது இயல்பானது. இதை தடுக்க வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை செய்து கொடுப்பு பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. கதவுகளை பூட்டுவது, பாதுகாப்பு கேமரா, அலாரம் எழுப்புவது, கதவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக பூட்டுவது என நிறைய வசதிகள் வந்துவிட்டன. தற்காப்புக்காக ஒருவரை தாக்குவது என்றாலும் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்றவகையில் சட்டங்கள் மாறுபட்டிருக்கும். அதை புரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆயுதங்களை கையாளும் சூழலில்,  முறையாக பயிற்சி எடுப்பது நல்லது. இந்தியாவில் இந்துத்துவ மதவா...

எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி!

படம்
  எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி! மகான்காளி ராஜசேகர், மாதுரிமா இயக்கம் கார்த்திகேயன் இசை சின்னா என்கவுன்டர் சிறப்பு அதிகாரியான மகான்காளி, நாயக், இரு மாஃபியா தலைவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தனது குடும்பத்தை இழக்கிறார். பிறகு தனது குழுவை பலி கொடுக்கிறார். இறுதியாக தன்னையே தியாகம் செய்து எதிரிகளை அழித்தொழிக்கிறார். மேற்சொன்ன அம்சங்கள்தான் படத்தில் காட்டப்படுபவை. ராஜசேகரின் படங்கள் பெரும்பாலும் காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துபவை. நீதிமன்றத்திற்கு நியாயம் பெறும் சமயத்தில் சூது நிகழ்ந்துவிடும். பிறகு என்ன மீண்டும் துப்பாக்கியை தூக்கி நியாயத்தை நிலைநாட்டுவார். இவரது மகான்காளி என்ற இந்தப்படம் பார்த்து முடித்தபிறகு, மனதில் ஒரு அமைதியின்மை, விரக்தி பரவுகிறது. ஒருவகையில் காட்சி ரீதியாக சொல்ல நினைத்த விஷயங்களை கூறிவிட்டார் எனலாம். படத்தின் திரைக்கதையில் நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதாவும் பங்களித்திருக்கிறார். படத்தில் மாதுரிமாவின் பங்கு பாடல்களுக்கு மட்டும்தான். அவரை எப்படி பயன்படுத்துவது தெரியாமல், மானபங்கம் செய்யும் காட்சிகளில் ...

முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கும் அமைச்சர், காவல்துறை உயரதிகாரி, தீவிரவாதி ஆகியோரைக் கொன்றால் வாய்மை வென்றுவிடும்!

படம்
 சத்யமேவ ஜெயதே தெலுங்கு ராஜசேகர், சிவாஜி, சஞ்சனா, ஷெரில் பின்டோ இசை சின்னா இயக்கம் ஜீவிதா அரசு மருத்துவர் இக்பால் அன்சாரி என்பவர், தீவிரவாதி என குற்றம்சாட்டப்படுகிறார். அவரை குறிப்பிட்ட இடத்திலுள்ள நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதற்கு நாயகன் உட்பட சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து குழுவை தயாரிக்கிறார்கள். அக்குழு, இக்பாலை நீதிமன்றத்தில் சமர்பித்ததா இல்லையா என்பதே கதை. மீண்டும் என்கவுண்டர் அதிகாரியாக ராஜசேகர் நடித்திருக்கிறார். இம்முறை படத்தில் சிவாஜிக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் ஷெரில் பின்டோவுக்கும் பாடல் காட்சிகள், கிளு கிளு காட்சிகள், காமெடி ஆகியவை உண்டு. குழுவிலுள்ளவர்களின் குடு்ம்பங்களை காட்டும்போதே, இவர்களை கொத்துக்கறியாக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. அதேதான் அதேதான். படத்தில் பாஸ்டர்ட் என்ற கெட்ட வார்த்தையை மட்டும் நாயகன் எத்தனை முறை சொல்லியிருப்பார்  என்று எண்ண முடியாது. அத்தனை முறை விரக்தி அடைகிறார். கையாலாகாத்தனம், இயலாமையில் அலறிக்கொண்டே இருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கென இருக்கும் ஒரே ஆன்மா சிவாஜி மட்டுமே. காதல் என்ற பெயரில் மகாலட்சுமி...

காளான் வழியாக கல்லீரலை பாதிக்கும் நச்சு!

படம்
    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி உணவு நச்சில் பாக்டீரியாவின் பங்குண்டா? ஏன் இல்லாமல்... குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஒரு கிராம் நச்சு மூலம் பதினான்கு மில்லியன் வயது வந்தோரை கொல்ல முடியும். நீரை நூற்று இருபது டிகிரி செல்சியசில் கொதிக்க வைத்தால் மட்டுமே பாக்டீரியாவை அழிக்க முடியும். உடல் செயலிழப்பு, வாந்தி பிறகு இறப்பு வந்து சேரும். எனவே கேன் உணவுகளை கவனமாக பார்த்து மேற்கு நாடுகளின் தர கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதா என பாருங்கள். உருளைக்கிழங்கை தாக்கும் முக்கியமான கிருமி எது? பைடோதோரா இன்ஃபெஸ்டான்ஸ்  என்ற கிருமி, உருளைக்கிழங்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ஐரிஸ் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு இடம்பெற, இக்கிருமி முக்கிய காரணம். 1845-49 ஆகிய காலகட்டத்தில் மட்டும் கிருமி ஏற்படுத்திய பஞ்சத்தால் நான்கு லட்சம் மக்கள் பட்டினியால் இறந்துபோனார்கள். ஏராளமானோர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டனர். பூஞ்சைகளை விளக்கமாக வரைந்த குழந்தை நூல் எழுத்தாளர் யார்? பீட்ரிக்ஸ் பாட்டர், பூஞ்சைகளைப் பற்ற...

அரசியல்வாதிகள், காவல்துறை கைகோப்பதால் ஐபிஎஸ் பதவியை கைவிட்டு மாஃபியா தலைவனாகும் நாயகன்!

படம்
    காவல்நிலையம் சுரேஷ்கோபி, ஜோதிர்மயி மலையாளம் தயாசங்கர் என்ற எஸ்பி, கேரளத்திற்கு பணிபுரிய வருகிறார். அவருக்கு மனைவி, தம்பி ஆகியோர் உண்டு. காவல்துறை கமிஷனர், அரசியல்வாதிகள், மாஃபியா தலைவன் ஜிவி ஆகியோர் செய்யும் சூழ்ச்சியால் தம்பி கொல்லப்பட்டு தலை வேறு முண்டம் வேறாக ஆக்கப்படுகிறான். மனைவிக்கு முதுகு எலும்பில் அடிபட்டு சக்கர நாற்காலியில் வாழ்க்கை அமைகிறது. தயாசங்கர் ஜிவியை எப்படி பழிவாங்கினார் என்பதே கதை. படத்தின் தொடக்கத்தில் பாட்டாளி தோழன் என்ற ஒருவரை வில்லனாக காட்ட அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். அவருக்கு செல்வாக்கு பல பக்கம் இருப்பது போல தெரிகிறது. பல்வேறு சமூக சேவைகளை செய்கிறார். மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம், பெண்கள் காப்பகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். அவரை எதிர்த்து அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சியால், போலீஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லும் உணவுகளை கீழே கொட்டி சோதிக்கிறார்கள். ஆனால் எதுவும் காவல்துறை நினைத்தது போல நடப்பதில்லை. ஆயுதங்கள், போதைப்பொருள் என எதுவும் கிடைப்பதில்லை. காவல்துறை அதிகாரி குழம்பிப்போகிறார். அவரது காதலி, பாட்டாளி தோழன் நல்ல மனிதர் கெட்டவர் ...

சர்வாதிகாரம் - அமைப்புகளை காப்பாற்றுதல்

படம்
    சர்வாதிகாரம் அமைப்புகளை காப்பாற்றுதல் அரசு அமைப்புகள் நாகரிகத்தை ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுகின்றன. அவற்றுக்கு மக்களின் உதவியும் தேவைப்படுகிறது. அமைப்புகளுக்காக அதனால் பயன்பெறும் மக்கள் ஆதரவாக நின்று பேச வேண்டும் போராடவேண்டும். அமைப்புகளுக்கு சுயமாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறன் கிடையாது. அவை பாதுகாக்கப்படாதபோது ஒன்றன்பின் ஒன்றாக வீழ்வதைப் பார்ப்போம். இதற்கு எடுத்துக்காட்டாக நீதிமன்றம், நாளிதழ், சட்டங்கள், தொழிலாளர் சங்கங்களைக் கூறலாம். பெரும்பாலான சர்வாதிகார ஆட்சி என்பது மக்களால் வழங்கப்படுவதுதான். இத்தகைய நெருக்கடியான சூழலில் முன்னமே தங்களை அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதாக ஒப்புக்கொடுக்க கூடாது. 1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் அரசை அமைத்துவிட்டார். அப்போது பிப்ரவரி மாதம் வெளியான யூதர்களின் நாளிதழில், ஹிட்லர் தனது பிரசாரத்தில் கூறிய யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என நம்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், சர்வாதிகாரி சொன்னதை செய்து முடித்தார். அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக அனைத்து அரசு அமைப்புகளும் நாஜி கட்சியினரால், அதன் ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டது. நாட்டில் ...

தொடர்ச்சியாக கொல்லப்படும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் !

படம்
  பூட் சவுண்ட் சுரேஷ் கோபி, பாலா, ஹனி ரோஸ் மலையாளம் பிரிவு உபசார விழா நடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி, வீட்டுக்கு போகும் வழியில் கழுத்து அறுத்து கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க நாயகன் வருகிறார். கூடுதலாக, ஓய்வு பெற்ற இன்னொரு போலீஸ்காரரின் மகள் காணாமல் போகிறாள். இந்த வழக்கையும் நாயகனே விசாரிக்கிறார். அதில் அவருக்கு நிறைய உண்மைகள் தெரிய வருகிறது. கேரளத்தில் அவசரநிலை காலகட்டத்தில் காவல்துறை செய்த வல்லுறவு, கொலைகளை பின்னணியாக கொண்ட கதை. அவசர நிலையை சாதகமாக பயன்படுத்தி, காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் குடும்பத்தை அழிக்கிறார்கள். பத்திரிக்கை நடத்துபவரின் மனைவியை வல்லுறவு செய்கிறார்கள். அவரது மகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்நிலையத்தில் கொல்லப்படுகிறாள். பத்திரிகையாளர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பல்வேறு போலி வழக்குகள் வழியாக இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. கல்லூரி படிக்கும் மகள் காணாமல் போன செய்தியை ஒய்வுபெற்ற அதிகாரி, நாயகனுக்கு கூறுகிறார். நாயகனும் அதை ஏற்று மகளை தேடித்தருவதாக குறிப்பாக உயிரோடு... என்று கூறுகிறார். மகளைப் பற்றிய தகவல்களை விசாரித்தால், எந்த துப...