இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவிலுள்ள பள்ளி வகைகள்

படம்
  எலைட் பள்ளி இதில் தொடக்க, மேல்நிலைப்பள்ளிகள் உண்டு. சீனாவில் தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை எலைட் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆங்கில வழிக் கல்வி, கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கல்வி, மாணவர்களுக்கான வசதி, சூழல் ஆகியவை சொகுசு ஓட்டல் போல உயர்தரமாக இருக்கும். நகர மேல்நிலைப்பள்ளிகள் அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்கான பள்ளிகள். இப்பள்ளியில் மாணவர்கள் சேர்வது, பல்கலைக்கழக அனுமதி தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே. தேர்வு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேலை செய்வதற்கான திறன்களை பெற முடியும். சுயாட்சி முறை என்பதால் சுதந்திரம் உண்டு. அரசின் பாடங்களை கற்றுக்கொடுத்தபிறகு வேறு விருப்ப பாடங்களை மாணவர்கள் கற்கலாம். அரசுப்பள்ளிகளை விட வசதிகள் நன்றாக இருக்கும். குறைபாடு, நிதியுதவி. வயதான ஆசிரியர்கள். தொழில்பயிற்சிபள்ளிகள் கல்விக்கடன் வாங்கிப் படிக்க எல்லோராலும் முடியாது. எனவே, படித்து முடித்த உடனேயே வேலைக்கு செல்ல உதவும் பள்ளிகள் இவை. வாகனம் ஓட்டுதல், சமையல், உலக வணிகம், சுற்றுலா, சேவை நிர்வாகம், அல...

அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன?

படம்
    அட்டாச்மென்ட் கோட்பாடு என்றால் என்ன? ஒரு குழந்தையை தாதி ஒருவர் வளர்க்கிறார் என்றால், அக்குழந்தைக்கு பெற்ற தாயை விட தாதி மீது மாறாத ஈர்ப்பு, பிணைப்பு உருவாகும். இதை உளவியல் பள்ளிகளில் ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள். தொடக்க காலத்தில் இக்கொள்கையை ஏற்கவில்லை. தொடர்பு கொள்கை, ஒருவரின் ஆளுமையை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கொள்கையை உளவியலாளர் ஜான் பௌல்பை உருவாக்கினார். இதுதொடர்பாக அட்டாச்மென்ட் அண்ட் லாஸ் என்ற நூலை எழுதினார். இதை விரிவாக்கியவர் மேரி அன்ஸ்வொர்த். ஜான் பௌல்பையின் தொடர்பு கொள்கையை விளக்கி கூற முடியுமா? ஒரு குழந்தைக்கு தாயின் பாதுகாப்பு தொடக்க ஆண்டுகளில் தேவை. குழந்தை பயப்படும்போது, தாயிடமிருந்து பிரிக்கப்படும்போது பாதுகாப்பு உணர்வை இழக்கிறது. உடனே அழுது தாயின் அணைப்பை கதகதப்பை உணர துடிக்கிறது. இந்த சூழலில் தாய் இல்லை என்றால் குழந்தையின் மனநிலை சோகத்திற்குள்ளாகிறது. மன அழுத்தம் உருவாகிறது. மூன்று மாதம் தொடங்கி, ஓராண்டு வரை பாதுகாப்பு தொடர்பான உணர்வு தீவிரமாக இயங்குகிறது. எட்வர்ட் ஓ வில்சன் யார்? சோசியோபயாலஜி துறையை உருவாக்கிய தந்த...

மீண்டும் அணுஉலைகள்!

படம்
  மீண்டும் அணுஉலைகள்! இந்தியா 100 ஜிகாவாட் அளவிலான அணுஉலைகளை 2047ஆம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது. உலக நாடுகள் அணுஉலைகள் ஆபத்தானவை என உணர்ந்து பின்வாங்கும் நிலையில், இந்தியா அணுஉலைகளை அதிகமாக அமைப்போம் என களமிறங்கி நாட்டை ஒளிரச்செய்ய முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இடிந்தகரை, திருநெல்வேலியிலுள்ள கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுஉலைகளுக்கு எதிரான அமைதிப்போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதே ஆண்டில் ஜப்பானின் புகுசிமா அணுஉலை விபத்தில் கதிரியக்க பாதிப்பு தீவிரமாக உணரப்பட்டது. கசிவு ஏற்பட்டு கடல் நீரில் கலந்தது. இதை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டு போராட்டக்காரர்கள், அணு உலை ஆபத்து என வாதிட்டனர். அறிவு, புத்திசாலித்தனம் என இரண்டுமே வடக்கு நாட்டு ஆட்களுக்கு கிடையாது என்பதால் எப்போதும் போல போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்தனர். 2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி போல ஒரு சம்பவம் நடந்தால், அதில் கூடங்குளம் அணுஉலை மாட்டினால் என மக்கள் பீதியுற்றனர். மக்கள் மீது அரசு ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இப்போதும் கூட முக்கியமான போராட்டக்காரர...

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு சென்ற ஆசிரியர், விடுதலையாகி தனது மகன், மகளைத் தேடி அலையும் கதை!

படம்
   சீக்ரெட் ஆப் பியர்ல்ஸ் துருக்கி டிவி தொடர் யூட்யூப் 36 அத்தியாயங்களை தாண்டிப்போனாலும் நாயகனது பிளாஷ்பேக் கதையை சொல்லாமல் இழு இழுவென இழுத்துவிட்டார்கள். அதெல்லாம் கடந்து தொடர் கொஞ்சமேனும் பார்க்கும்படி இருக்கிறதென்றால் அதற்கு துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வரும் நாயகனின் நடிப்பையே அடையாளமாக சுட்டிக்காட்ட வேண்டும். வயதானவரை நாயகனாக வைத்து டிவி தொடர் எடுத்து அதை எப்படி வெற்றிகரமாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அசீம் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் உடல்மொழி, முக உணர்வு, வசனம் என அத்தனையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அசீம், அவரது மனைவி ஹண்டேவைக் கொன்றதாக குற்றம்சாட்டி சிறையில் பல்லாண்டுகள் தள்ளப்படுகிறார். தண்டனை முடிந்து வரும்போது அவரின் ஆண், பெண் என இருபிள்ளைகளும் அரசு விதிகள்படி காப்பகத்தில் இருந்து தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அசீம் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. மேற்சொன்ன கதை மட்டுமே வைத்துக்கொண்டாலே கதையை உணர்ச்சிகரமாக கொண்டு செல்லமுடியும். ஆனால் இயக்குநர், அதோடு சேர்ந்து அசீம் தங்கும் மலிவான குறைந்த விலை விடுதியில் நடனக்...

சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - உயர்கல்வியை வளர்த்தெடுத்த தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்!

படம்
    சீனாவில், 1998 -2007 காலகட்டத்தில் மட்டும் 1022லிருந்து, 1912 கல்வி நிறுவனங்கள் என உயர்கல்விக்காக தொடங்கப்பட்டுள்ளன. வளர்ச்சி 2சதவீதம். பெய்ஜிங், தியான்ஜிங், கிழக்கு கடற்புற பகுதியான ஜியாங்சு ஆகியவற்றில் உயர்கல்வி பாராட்டும்விதமாக வளர்ந்துள்ளது. சீன அரசின் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. சீன நகரங்களில் கல்வியில் ஒட்டுமொத்தமாக முன்னிலை பெறும் நகரமாக பெய்ஜிங் உள்ளது. குறைந்த வளர்ச்சி கொண்ட மாகாணங்களைப் பார்ப்போம். ஷெஜியாங், குவாங்டாங் ஃப்யூஜியன், சான்டாங், ஹெனான், நிங்ஷியா ஆகியவை கல்வி வளர்ச்சியில் கீழே உள்ளன. பெய்ஜிங், சாங்காய், ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் ஒருவர் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், அதுவே ஹெனான், ஷெஜியாங், சான்டாங், குவாங்டாங் ஆகிய மாகாண மாணவர்களில் ஒருவர் கல்வி கற்க நினைத்தாலும் வாய்ப்பை பெறுவதற்கு ஏராளமான பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். வாய்ப்பே கிடையாது என்றல்ல. கடினம் என்று கூறவேண்டும். சீனாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டதே தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கவேண்டும் என சீன அரசு முடிவெடுத்ததால்தான். ஐம்பது எழுபதுகளில் தைவானில் உள்ள கு...

தொழிலாளர்களின் வேலை நீக்கத்தை எதிர்த்து போராடும் அப்பாவி மனிதவளத்துறை அதிகாரி!

படம்
  ஜானி கீப் வாக்கிங் சீன திரைப்படம் யூட்யூப் ஜானி, நட், போல்ட், ஸ்க்ரூ என தயாரிக்கும் பெரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். நிறுவனத்தில் சிறப்பாக வேலை செய்தாலும் அவனுக்கு செல்வாக்கான ஆட்கள் பின்புலம் இல்லாத காரணத்தால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில்லை. கிராமத்தில் உள்ள தொழிலாளர்களிடையே அவனுக்கு நல்ல பெயருண்டு. ஜானி சீனியர் பிட்டர். எந்த வேலையாக இருந்தாலும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான். அவன் மனைவி, கணவனுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவில்லையென சண்டை போட்டு விவாகரத்து செய்துவிட்டு போய்விடுகிறாள். அதற்குப் பிறகு அவனுக்கு நண்பர்கள்தான் உலகம். அப்படி இருப்பவனுக்கு திடீரென நிறுவனத்தின் தலைமையகத்தில் வேலை செய்ய பணி இடமாற்ற ஆணை வருகிறது. ஜானிக்கு மகிழ்ச்சிதான். நண்பர்களுக்கு விருந்து கொடுத்துவிட்டு நகருக்கு கிளம்புகிறான். உண்மையில் அந்த பணி ஆணை, இன்னொருவருக்கு வழங்கவேண்டியது. தவறுதலாக அவனுக்கு வந்துவிடுகிறது. ஜானி, தலைமையகத்திற்கு செல்கிறான். அங்கு அவனுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையில் வேலை அளிக்கிறார்கள். அவனுக்கு ஒன்றும் புரிவதில்லை. அவன் சீனியர் பிட்டர். அவனை எதற்கு...

யூட்யூபில் கலக்கும் சீன ஷார்ட் டிராமாக்கள்! சூப் விற்று குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவரும் நாயகி!

படம்
  சீன ஷார்ட் டிராமாக்கள் முதல் கதை, இளம்பெண் படுக்கையில் விபத்துக்குள்ளாகி படுத்திருக்கிறாள். எழும்போதுதான் தெரிகிறது. அவளுடைய உடலில் நவீனகால இளம்பெண்ணின் ஆன்மா இடம்பெயர்ந்திருக்கிறது. காலப்பயண ஷார்ட் டிராமா இந்த டிராமாக்கள் தரத்தில் சன்டிவி சீரியல்களைப் போன்றவை. மிகையான நடிப்பு, பொல்லாத வில்லத்தனம் ஆகியவை உள்ளவை. இளம்பெண்ணுக்கு இரண்டு அண்ணன்கள் உண்டு. இருவருமே சம்பாதிக்க தெரியாதவர்கள். மணமானவர்கள் என்றாலும் தங்கையின் பேச்சை கேட்டு நடப்பவர்கள். அந்த இளம்பெண்ணோ, தான் காதலிப்பவனுக்காக அண்ணன் மனைவி வளர்க்கும் கோழி, ஆடுகளை கூட திருடிக்கொண்டு விற்று செலவழிக்கும் முட்டாள். இதை இளம்பெண் புரிந்துகொண்டு தனது குடும்பத்தை எப்படி செல்வம் கொண்டதாக வளர்த்து எடுக்கிறாள் என்பதே கதை. இளம்பெண்ணுக்கு தான் வாழும் காலத்தை தாண்டிய எதிர்கால அறிவு உண்டு. எனவே, அதை வைத்து பணம் சம்பாதிக்க முயல்கிறாள். முதலில், பதினான்கு பேர் கொண்ட பெரிய குடும்பத்திற்கு சாப்பிடும் அளவுக்கு அரிசியோ, பருப்போ எதுவுமே இருப்பில் இல்லை. இல்லை என்றால் சம்பாதிக்கவில்லை என்றல்ல. அவர்கள் செய்த தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில...

மகாத்மாவின் ஹரிஜனுக்கு இந்தியாவில் உள்ள நடைமுறை அர்த்தம் - வேசி மகன்!

படம்
  மகாத்மாவின் ஹரிஜனுக்கு இந்தியாவில் உள்ள நடைமுறை அர்த்தம் - வேசி மகன்! உலகளவில் உள்ள ஊடகங்கள், இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதவர்களின் பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை. அவற்றில் கவனம் செலுத்தி செய்தியும் வெளியிடுவதில்லை. இந்தியாவிற்கு வெளியே உள்ள ஊடகங்கள் அன்பு நிறைந்த இந்திய நாட்டில் தீண்டத்தகாதவர்களின் நிலையைப் பற்றி பெரிதாக அறியாமலயே இருக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் எதற்காக இதைப்பற்றி பேச வேண்டும், உள்ளே இருப்பவர்கள் கூட தீண்டத்தகாத மக்களைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல்தான் இருக்கிறார்கள் நகரத்தில் உள்ளவர்கள், தீண்டாமை எங்கே இருக்கிறது. அதெல்லாம் ஒழிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். வெளிநாட்டினர், ஆங்கிலம் பேசும் இந்தியர்களைப் பார்த்து தீண்டாமை பற்றிய கேள்வியை எழுப்பினால், அவர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் பதில் மேற்சொன்னதுதான். அரசியலமைப்பு சட்டம் தீண்டாமையை ஒழித்துவிட்டது. அதெல்லாம் கடந்து வந்துவிட்டோம் என்பார்கள். ஜப்பானைச் சேர்ந்த பத்திரிகையாளர், சென்னைக்கு வந்து பத்து நாட்களாக தங்கியிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட தீண்டத்தகாதவர் ...

இந்து என்பதன் அர்த்தம் அனைத்தையும் தனித்தனியாக பிரிப்பது!

படம்
    இந்து மத அதிசய கொள்கை - ஒற்றுமை அல்ல பிரிவினையை ஊக்குவிக்கிறது! வெளிநாட்டிலுள்ள தோழர்களுக்கு, இந்தியா ஏன் இப்படி இருக்கிறது என்று மனதில் கேள்வி எழலாம். எதனால் இப்படி வினோதமாக நடந்துகொள்கிறார்கள், எதனால் இந்த நாடு அழிந்துகொண்டே வருகிறது என பல்வேறு கேள்விகள் எழலாம். அதற்கு எல்லாம் இந்து மதத்தில் பதில் இருக்கிறது இந்து மனம் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்துமதம் ஒற்றுமையை விட பிரிவினையை உருவாக்குகிறது. இந்து என்பதன் அர்த்தம், ஒன்றாக கலப்பது அல்ல, அனைத்தையும் தனியாக பிரிப்பது. அதன் முக்கியமான கொள்கையே பிரிப்பதுதான். பிரிவினைக்கு உதவுவதுதான் சாதி, தீண்டாமை ஆகியவை. பிரிவினையை தீவிரப்படுத்த தீண்டாமை உதவுகிறது. இந்த வகையில் பல்வேறு இனக்குழு மக்களையும் உள்ளுக்குள்ளேயே நாம் பிரித்து வைத்துவிட முடியும். இந்து இந்தியா என்பது ஒரே நாடு கிடையாது. அப்படி இருந்ததும் இல்லை. இனிமேலும் ஒரே நாடாக இருக்கவும் முடியாது. சாதி அல்லது அதன் துணைப்பிரிவு என்பது தனிப்பட்ட நாடாக மாறுகிறது. தேசியவாதிகளின் சிறை என்று கூட கூறலாம். மொழி மக்களை பிரிக்கிறது. இந்துக்கள், தீண்டத்தகாதவர்கள் கம்பி வேலியால் ...

அப்பாவின் மீது மகனுக்கு உருவாகும் கொலைவெறி!

படம்
    உளவியல் மிஸ்டர் ரோனி ஓடிபல் காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன? அம்மா மீது ஏற்படும் ஈர்ப்பு எனலாம். சிக்மண்ட் பிராய்ட் இந்த கோட்பாட்டை உருவாக்கினார். இதற்கு சொந்த வாழ்க்கையிலேயே உதாரணம் இருந்தது. அவரின் பெற்றோர் இருபது ஆண்டுகள் தனியாக பிரிந்து வாழ்ந்தனர். அம்மாவிற்கு சிக்மண்ட் முதல் பிள்ளை. அந்த பாசம், ஈர்ப்பு அம்மா, மகன் இருவருக்கும் இடையே தீவிரமாக இருந்தது. அம்மா, 95 வயதில் காலமானார். மகன் சிக்மண்ட் அதற்குப் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து இறந்தார். ஓடிபல் காலகட்டம் என்பதையும் அவர் வரையறுத்து கூறினார். நான்கு முதல் ஏழுவயது வரையிலான காலகட்டத்தில் மகனுக்கு தாய்மீது அதிக ஈர்ப்பு உருவாகிறது. இந்த எந்தளவுக்கு செல்கிறது என்றால், அப்பாவை எதிரியாக கருதி கொல்லவேண்டும் என்ற அளவுக்கு... அந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டால் அவர்களது இளமைக்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். மகனின் கோபத்தை அப்பாவின் பலம் கட்டுப்படுத்துகிறது. பிறகு மகன் அக்காலகட்டத்தை கடந்தால் வளர்ந்து அவனுக்கென்று மனைவியைத் தேடி குடும்பத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவன் மனதில் இருந்த கோபம், அவனது மகனது மனதிற்கு குடியேறுகிறது. கார்ல் ...

பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் பெண்மணி! - டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள்

படம்
    டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் ஸ்கை பெர்ரிமன் skye perryman அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தவர் அமெரிக்காவில் ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்துவிட்டார். அரசு, பல்வேறு நிதி நல்கைகளை நிறுத்திவருகிறது. ஸ்கை, மாணவர்களுக்கு அரசு வழங்கும் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு கோரி சட்டப்போராட்டம் நடத்திவருகிறார். இதற்காக டெமோகிரசி ஃபார்வர்ட் என்ற தொண்டூழிய அமைப்பை நடத்தி வருகிறார். நிச்சயம் அவர் செய்கிற பணி சவாலானது. ஒரு நாட்டின் அதிபரே ஜனநாயத்திற்கு, தாராள தன்மைக்கு எதிராக இருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், அந்த நாட்டு மக்களே அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது நகைமுரண். மக்கள் அழுத்தம் கொடுத்து தங்களுக்கு தேவையான சேவைகளை பெற முடியும் என நிரூபிக்க ஸ்கை பெர்ரிமன் போராடுகிறார். நாம் ஆபத்தான நிலையில்லாத உலகில் வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. அதனால், எப்போதையும் விட மக்களுக்காக போராடும் போராளிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள். நேரடியான தெளிவான செயல்பாடுகளுக்கு ஸ்கை பெர்ரிமன் போன்ற ஒருவர் தேவைப்படுகிறார். கெல்லி ராபின்சன் சாண்ட்ரா டயஸ் sandra diaz இயற்கை பன்மைத்துவ போராளி ஒர...

அல்சீமர் நோயின் அறிகுறிகள்!

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி அல்சீமர் நோயின் அறிகுறிகள் என்னென்ன? ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பது, ஒரே கதையை திரும்ப கூறுவது, கூறிக்கொண்டே இருப்பது, சமைப்பது, பழுதுபார்ப்பது போன்ற வேலைகளை மறந்துபோவது, திசை, முகவரி தெரியாமல் தடுமாறுவது, கட்டணம் செலுத்துவதை மறப்பது, குளிப்பதை மறப்பது, ஒரே உடையை அப்படியே அணிந்திருப்பது, இன்னொருவரின் முடிவுக்காக காத்திருப்பது, இன்னொருவரை சார்ந்திருப்பது. புற்றுநோயின் வகைகள் என்னென்ன? கார்சினோமா, சர்கோமா, லுக்குமியா, லிம்போமா பாய்சன் ஐவி செடியை தொட்டவுடன் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமா? 85 சதவீதம் பேருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தோலில், உடையில் பாய்சன் ஐவி இலைகள் பட்டால், அந்த இடத்தை மென்மையான சோப்பு போட்டு கழுவவேண்டும். ஒவ்வாமை காரணமாக தலைவலி, காய்ச்சல், உடல் பலவீனம் ஏற்படலாம். இந்த பாதிப்பு ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும். நன்றி சயின்ஸ் ஹேண்டி புக்

சீன கல்வி சீர்திருத்தங்கள் - கல்வி கற்பதற்கான சிறந்த நாடு!

படம்
சீனா, உலக நாடுகளில் பட்டுச்சாலை திட்டத்தை(பெல்ட் அண்ட் ரோட்) உருவாக்கிவிட பல கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாகிவரும் வலதுசாரி மதவாத அரசியல் சூழ்நிலைகளே சீனாவை மகத்தான வல்லரசு நாடாக மாற்றிவிடும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவை தனிமைப்படுத்தி பிற நாடுகளை தனது கைக்குள் வைத்து வழிகாட்டவேண்டும் என்பது சீனாவின் பேரரசு கனவு. தனது தற்சார்பு கொண்ட தொன்மைக்கால பெருமையை, கலாசாரத்தை சீனா இன்றும் கைவிடவில்லை. இன்றைக்கும் அதன் அறிகுறிகளை வெளியுறவு கொள்கைகளில் காணலாம். சீனா, தொடக்கத்தில் வெளிநாடுகளின் கொள்கைகளைப் பின்பற்றினாலும் இப்போது, தனது நாட்டுக்கே உரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. வல்லரசு நாடுகளை விட பின்தள்ளி முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளை செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தையும் கடந்துவிட்டது. இதில் 80,000 பேர் தொடக்க, உயர்நிலைக்கல்வியும், 5,00,000 லட்சம் பேர் கல்லூரி, பல்கலைக்கழக கல்வியையும் பயின்றனர். 1949ஆம் ஆண்டு, சீனாவில் இருந...

அரிய ரத்தவகை எது?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஒருவரின் தலைமுடியை வைத்து என்னென்ன விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும்? ஒருவரின் பாலினம், வயது. என்ன மருந்துகளை சாப்பிட்டார் என்பதை கண்டுபிடிக்கலாம். பிள்ளைகளை அறிய டிஎன்ஏ பரிசோதனையும் செய்யலாம். இதயத்தின் வேலை என்ன? ஒரு நிமிடத்திற்கு எழுபத்தைந்து முறை துடிக்கிறது. ஒரு துடிப்பிற்கு 71 கிராம் ரத்தத்தை பல்வேறு உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இந்த வகையில் நாளுக்கு 9,450 லிட்டர் ரத்தத்தை உடலெங்கும் அனுப்புகிறது. இதயம் சிறியதாக இருந்தால், அதன் துடிப்பு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு நிமிடத்திற்கு ஆறு முதல் எட்டு துடிப்புகளாக உள்ளது. இது ஆண்களின் இதயத்துடிப்பை விட அதிகம். பிறந்த குழந்தைக்கு ஒரு நிமிடத்திற்கு 130 முறை இதயம் துடிக்கிறது. தூங்கும்போது இதயம் நின்றுவிடுகிறதா? இதயம் துடிக்கும் வேகம் மட்டுப்படுகிறது. அதனால் இதயம் வேலை செய்யவில்லையா என வதந்திகளை சிலர் பரப்புகிறார்கள். அது உ்ணமையல்ல. இதயம் எப்போதும் துடிப்பதை நிறுத்துவதில்லை. ஒருவரின் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பது உண்மையா? ஒரு லிட்டரில் 19-50 மில்லிமீட்டர் அளவு கார்பன் டை ஆக்சைடு ...

ஜோசப் ஸ்டாலின், லெனின் கனவான சோவியத் யூனியனை எதிரிகளை களையெடுத்து கட்டமைத்த கதை!

படம்
  சர்வம் ஸ்டாலின் மயம் மருதன் கிழக்கு பதிப்பகம் ஜோசப் ஸ்டாலின், சோவியத் ரஷ்யாவை எப்படி வளர்த்தார், எதிரிகளை உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து ஒழித்தது எப்படி, உண்மையில் அவர் சர்வாதிகாரிதானா என்பதை நூல் விளக்கிச்சொல்கிறது. 139 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல்தான். நூலின் தொடக்கத்தில் ட்ராட்ஸ்கி என்பவரை உளவுத்துறை அதிகாரி, ஐஸ்கத்தியால் குத்திக் கொல்கிறார். ஏன் அப்படி கொன்றார் என்ற கேள்வியோடு தொடங்குகிறது கட்டுரைநூல், ஒரு புனைவு நூலைப்போல கட்டுரை நூலை கட்டமைத்திருக்கிறார்கள். ஆனால், நூல் இறுதிவரை அப்படி செல்லவில்லை. நூலில் ஸ்டாலின் செய்த போராட்டங்கள் ஓரளவுக்கு கூறப்பட்டுள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிக முக்கியத்துவம் தரவில்லை. அதை தனியாக பிரித்து விவரித்திருக்கலாம். அவர் எழுதிய நூல்களோ, பேசிய உரைகளோ, அல்லவது அவரைப்பற்றி உள்நாட்டில், வெளிநாட்டில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியோ கூட எந்த குறிப்புகளும் இல்லை. ஸ்டாலின் மரணம் கூட சட்டென நடந்தது போன்று இருக்கிறது. எதற்கு இந்த அவசரம் என நூலாசிரியர் மருதன்தான் விளக்கி கூறவேண்டும். லெனின், துப்பாக்கியால் சுடப்பட்டு 1924ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். அதற...

உபசாந்தம் - மின்னூல் வெளியீடு - தரவிறக்கி வாசியுங்கள்.

      உபசாந்தம் (Upashantham)  இராம பாரதி https://books2read.com/u/mBdpnN

உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பூனையின் கண்கள் இரவில் மின்னுவது எப்படி? பூனையின் ரெட்டினாவுக்கு பின்புறம் டாபெடும் லுசிடும் என்ற பொருள் உள்ளது. பதினைந்து அடுக்குகள் கொண்ட  இதுவே ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் பிரதிபலிக்கிறது. கண்ணாடி போல இயங்குகிறது. எனவே, பூனையின் கண்கள் இருட்டில் மின்னுகிறது. பொதுவாக கண்களின் நிறம் பச்சை, பொன் நிறமாக தெரியும். சியாமிஸ் பூனைக்கு மட்டும் சிவப்பு நிறத்தில் தெரியும். பர்ரென்ற  ஒலி எங்கிருந்து வருகிறது? இதுவரை இதற்கு முடிவான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. பூனையின் குரல்வளையில் இருந்து வருகிறது என ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு தரப்பு, நெஞ்சுக்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் செல்லும்போது ஏற்படும் ஒலி என்கிறார்கள். பூனை வலியில், வேதனையில் இருக்கும்போது குட்டிகளைப் போடும்போது, இறக்கும்போது பர் என்ற ஒலியை வெளிப்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். இவை எவையும் நிரூபணம் செய்யப்படவில்லை. மனித உடம்பு செல்களின் ஆயுள் எவ்வளவு? 200 பில்லியன் செல்கள் ஒரு மணிநேரத்திற்குள் இறந்துபோகின்றன். அவை மீண்டும் உற்பத்தியும் ஆகின்றன. தோல் செல்கள் 19-34 நாட்கள், கல்லீ...

இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்!

படம்
  இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்! தீண்டத்தகாதவர்களை ஆளும் வர்க்கம், அரசு, இடதுசாரிகள் தொடர்ச்சியாக கீழே இழுத்து தள்ளி வருகிறார்கள். இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால், சாதிமுறை அப்படியேதான் உள்ளது. சாதிமுறை தொடரும்போது அதைப் பின்பற்றி தீண்டாமையும் அப்படியே அழியாமல் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆளும் வர்க்கம், இதை அறிந்தும் அதை அழிக்காமல் அப்படியே வளரவிட்டுவருகிறது. சாதிமுறை அழிவது என்றால் இந்துமதம் அழிவது என்றே அர்த்தமாகிறது. ஒரு இந்து, இந்தியாவைக் காக்க இந்துமதத்தை அழிக்க முன்வருவாரா? தீண்டாமையை அப்படியே வளரவிடுவதால், ஆளும் வர்க்கத்திற்கு நிறைய சமூக பொருளாதார பயன்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமாக தீண்டத்தகாத மக்களின் வாக்குகளைப் பெற முடிகிறது. வட்டியில்லாத கடன்களை வழங்குவதைப் போல வாக்கு வங்கியாக மக்கள் இருக்கிறார்கள். தீண்டத்தகாதவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் வறுமையில், பலவீனமானவர்களாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக, ஒருங்கிணைக்கப்படாதவர்களாக உள்ளனர். சாதி, துணைசாதி பிரிவுகள் என பலவும் அவர்களை ...