பனைமரத்தில் கூடு கட்டித் தங்கும் கூழைக்கடா!

 





கூழைக்கடா





வீடு  மாறிய கூழைக்கடா

திருநெல்வேலியில் கூந்தன்குளம் பறவை சரணாலயம் அமைந்துள்ளது. ஆனால் இங்கு ஆண்டுதோறும் வந்துகொண்டிருந்த கூழைக்கடா பறவைகள் இப்போது ஏரியில் தங்கி இனப்பெருக்கம் செய்யாமல் பனைமரங்களில் தங்கி வருகின்றன.

1994ஆம் ஆண்டு கூந்தன்குளம் பறவை சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. இங்கு பறவை ஆய்வாளரான பால் பாண்டி, 55 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவருகிறார். அவருக்கும் கூழைக்கடா, ஏரி அல்லது ஏரிக்கு அருகில் உள்ள இடங்களில் தங்காமல் பனையில் தங்குவது ஆச்சரியமாகவே உள்ளது.

இதற்கு காரணம் இருக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழை சதுப்புநிலத்தை நிறைக்க போதுமானதாக இருக்கவில்லை. அப்போது அங்கு வந்த கூழைக்கடா பறவைகள் நீரின் இருப்பு குறைவாக இருப்பதைப் பார்த்து, அருகிலுள்ள அருமனேரிக்கு சென்றுவிட்டன. அங்குள்ள சதுப்புநிலத்தில்  பனைமரங்கள் அதிகம்.  

‘’சதுப்பு நிலத்தில் நீர் வரத்து குறைவு என்பதால் கூழைக்கடாவோடு பிற பறவைகளையும் காப்பாற்ற, இங்கு வரச்செய்து தக்கவைக்க மணிமுத்தாறு அணையைத் திறந்து நீர் விடுமாறு மாவட்ட ஆட்சியரைக் கேட்டுள்ளோம். இதற்கு கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோரின் ஆதரவும் கிடைத்தது.’’ என்றார் பால்பாண்டி. அதன்படி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. பறவைகளும் சதுப்புநிலத்திற்கு வந்துள்ளன. ஆனால் கூழைக்கடாவின் பழக்கம் மாறவில்லை.

பதினேழு பனைமரங்களில் ஒரு பனைமரத்திற்கு பதினைந்து கூழைக்கடாக்கள் என கூடமைத்து இனப்பெருக்கம் செய்துவருகின்றன. குழுவாக தங்குவது கூழைக்கடாவின் பழக்கமாகும். ஒரு மரத்தில் மூன்று அல்லது நான்கு கூடுகளை இப்பறவை அமைத்துள்ளது.

பாம்பே இயற்கை வரலாற்று சங்கத்தின் ஆய்வாளர் எஸ்.பாலச்சந்திரன் கூட கூழைக்கடாவின் இந்த புதிய போக்கை வியப்பாக கவனித்திருக்கிறார். ‘’கூழைக்கடா தான் வாழும் இடத்திற்கேற்ப, தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்புடையது என அறிந்திருக்கிறேன். ஆனால் பனைமரத்தில் கூடமைத்து தங்கியுள்ளதை தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக அறிகிறேன்’’ என கூறினார்.

 

 

நன்றி

இந்து ஆங்கிலம் 16.2.2023

மூலம் – அகிலா கண்ணதாசன்


கருத்துகள்