ஐசியூவில் பொதுத்துறை வங்கிகள்!




Related image


வங்கிகள் பிழைக்குமா?

கடந்தாண்டு அக். 25 அன்று அரசு பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கவும், வாராக்கடன் சுமைகளிலிருந் மீட்கவும் 2.11 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தது. உடனே பங்குச்சந்தையில் 5 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் உயர்ந்தன. ஆனால் ஆறுமாதத்திற்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. "அரசு அறிவித்த இரண்டு லட்சம் கோடி என்பது பட்ஜெட்டில் பத்து சதவிகிதம். இவ்வளவு தொகையை பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்வது அரசுக்கு பெரும் சுமை" என்கிறார் ஈடல்வைஸ் குழுமத்தின் தலைவரான ரஷீஸ் ஷா.

வங்கிகளின் இழப்பு - 19 ஆயிரம் கோடி(2017 இல் 2,718 வழக்குகளில்)

இழப்பு - 17(21வங்கிகளில்) - அக்.டிச.2018

மொத்த வாராக்கடன் - 8.5 லட்சம் கோடி.

தள்ளாடும் வங்கிகள் - சென்ட்ரல் வங்கி(18.08%), மகாராஷ்டிரா வங்கி(19.5%), யூகோ வங்கி(20.64%), ஐடிபிஐ வங்கி(24.72%), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(21.95%)