பாத்ரூம் பிரார்த்தனை!


Image result for toilet prayer



போலீசின் பாத்ரூம் பிரார்த்தனை!

இங்கிலாந்தின் பிரிக்ஸ்டனில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் லாமர் சாம்பர்ஸ் கைது செய்யப்பட்டார். போதைப்பொருளை விழுங்கிவிட்டார் என கேஸ் பதிவு செய்தாலும் கோர்ட்டில் காட்ட ஆதாரம் வேண்டுமே? லாமர் பாத்ரூம் போனால் அதிலிருந்து எவிடென்சை எடுக்க நினைத்தால் லாமர் கல்லுளிமங்கனாக பாத்ரூம் பக்கம் ஒதுங்கவேயில்லை. ஜனவரியின் நடுவில் அரஸ்ட்டானவர், இன்றுவரை ஏறத்தாழ 47 நாட்கள் மலம் கழிக்கவேயில்லை.

மிரண்டுபோன இங்கிலாந்து போலீஸ் லாமர் மேல் போட்ட கேஸை விலக்கிக்கொண்டு விடுதலை செய்யும் அவலம். சும்மா விடுவார்களா? நெட்டிசன்கள்! லாமர் பாத்ரூம் போக பிரேயர் செய்த போலீசை இணையத்தில் கலாய்த்து சிராய்த்து விட்டனர். தற்போது லாமருக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.


2

சூப்பர் காதலன்!

தாலிகட்டிய மனைவியை அவள் விரும்பிய காதலனுடன் சேர்த்துவைக்கும் அமேசிங் ஷாஜகான்களை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் ஒடிஷாவில் அசலான ஆத்மாவாக வாழ்கிறார் என்றால் நம்புவீர்களா?

ஒடிஷாவின் சுந்தர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த பாசுதேப் தாப்போ, அண்மையில் ஜார்சுகுடா டெப்திகி கிராமத்தைச்சேர்ந்த பெண்ணை ஊர் உறவு வாழ்த்த மணம் செய்தார். பெண் வீட்டார் சார்பாக வந்த மூன்று பேரில் ஒருவர் அப்பெண்ணுடன் நெருக்கமாக சுற்றித்திரிய பாசுதேப்பின் உறவுகள் டென்ஷனாகி அவரை அடித்து நொறுக்கினர். அப்போது சூப்பர் டிவிஸ்டாக "அவர் என் லவ்வர்" என திருவாய் மலர மொத்த ஊரும் இருவருக்கும் எதிராக திரண்டது. பின் பாசுதேப், பெண்ணின் தன் ஊர், உறவுகள் மற்றும் பெண்ணின் மூன்று சகோதரர்களையும் பேசி சமாதானம் செய்து பெண் விரும்பிய காதலரை கல்யாணம் செய்து வைத்திருக்கிறார். "என்னுடன் அந்தபெண் வாழ்ந்திருந்தால் மூன்று பேரின் வாழ்க்கையும் நாசமாகியிருக்கும். இப்போது எனக்கு மகிழ்ச்சி" என்கிறார் பாசுதேப்.

3

என் மகனை ஜெயிலில் போடுங்க!

திடீரென வீட்டிலுள்ள குழந்தைகள் காணாமல் போனால் பெற்றோர் எப்படி பதறுவார்கள்? ஆனால் மகாராஷ்டிராவின் கார்கர் பகுதியைச் சேர்ந்த தந்தை மகனை போலீஸ் கண்டுபிடித்ததும், அவர்களிடம் என்ன சொன்னார் தெரியுமா?

கார்கர் பகுதியைச் சேர்ந்த ஜகானிகானின் பனிரெண்டு வயது மகன் திடீரென வீட்டில் மிஸ்ஸிங். கம்ப்ளைன்ட் கொடுத்து பையனையும் போலீஸ் கண்டுபிடித்துவிட்டது. ஆனால் தந்தை ஜகானி கான், "இவனை வீட்டுக்கு அழைத்துப்போக எனக்கு விருப்பமில்லை. சீர்த்திருத்தப்பள்ளியில் பதினெட்டு வயசுவரைக்கும் கெஸ்ட் போல தங்கவைத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி போலீசுக்கு ஷாக் கொடுத்துள்ளார். என்கொயரில் தன் மகன் அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவதும் பின் தந்தை போலீஸ் மூலம் பிடிப்பதும் வழக்கம் என தெரிய வந்தது. முன்பு பீகார் மாநிலத்திற்கும் ஓடிவிட்ட மகனை பிடித்து வந்த அனுபவத்தினால் ஏற்பட்ட விரக்திதான் இதற்கு காரணம்தற்போது மன்கர்ட் பகுதியிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சிறுவன் தங்கியுள்ளான்.
4

தாடியால தடைபட்ட கல்யாணம்!

விராட்கோலி போல ஸ்டைலீஷாக தாடி வைத்து கிராண்ட் லுக்கில் கல்யாணம் செய்ய மாப்பிள்ளைக்கு ஆசை. ஆனால் பழம்பஞ்சாங்க மாமனாருக்கும் அது பிடிக்கணுமே!

மத்தியப்பிரதேசத்தின் கண்ட்வா மாவட்டத்திலுள்ள அன்ஜாதி கிராமத்தில் குஷி பிளஸ் குதூகலமாக கல்யாணம் நிகழ்வு நடந்துகொண்டிருந்தது. ஆனால் அத்தனையும் கெட்டது தாடியால் என்றால் நம்புவீர்களா? மாப்பிள்ளை மங்கள் சௌகான் மிடுக்குடன் ஸ்டைலீசா கோட்சூட்டில் பெண்வீட்டில் போய் இறங்கினார். ஆனால் மாமனார் ராதேஸ்யாம் யாதவ், மாப்பிள்ளையின் ஸ்டைலீஷ் தாடியைப் பார்த்து கண்சிவந்து 'ஹோல்ட் ஆன்' என கத்தி கல்யாண நிகழ்வுகளையே நிறுத்தினார். க்ளீன் ஷேவ் பண்ணினா கல்யாணம்' என இன்ஸ்டன்ட் பிடிவாதம் பிடித்தார். ஏன்? யாதவின் நண்பர்களின் பழமைவாத பேச்சுக்கள்தான் காரணம். இருவீட்டாருக்கும் மூண்ட சண்டை மெல்ல போலீசார் மூலம் சமாதானமாகி மீசையை மட்டும் வைத்துக்கொண்டு ஸ்டைலீஷ் தாடியை தியாகம் செய்து கல்யாணம் செய்துகொண்டார் சௌகான். வாழ்க்கையே காம்ப்ரமைஸ்தானே மாப்பிள்ளை சார்!