மயிலாப்பூர் டைம்ஸ்- 1

மயிலாப்பூருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, செந்தில்நாதன் மெஸ் அறிமுகமானது. அன்றிலிருந்து இன்றுவரை அங்கு சாப்பிடுவது 2 சப்பாத்திகள்தான். இரண்டு சப்பாத்தி என்று கூறுவேன். ஓனரம்மா அதனைத் திருத்தி ஒரு செட் சப்பாத்தி என ஆர்டர் கொடுப்பார். இன்று ஓனரம்மா கண்களில் கண்ணாடி ஏறிவிட்டது. அவரது மகள்,மகனின் கைகளில் ஓட்டல் வந்துவிட்டது. இப்போது ஒரு செட் சப்பாத்தி சொன்னால் சர்வர் இரண்டு சப்பாத்தியா? என்கிறார். காசு தருகையில் ஓனரம்மாவின் மகளும் இரண்டு சப்பாத்தி முப்பது ரூபாய் என்று சொல்லி பணம் வாங்குகிறார். மாற்றம் முன்னேற்றம் மயிலாப்பூர்!