முத்தாரத்தில் புதிய தொடர்: சென்னை சீக்ரெட்ஸ்





லோகோ: திலீப் பிரசாந்த்




குங்குமம் வார இதழில் அறிந்த இடம் அறியாத விஷயம் தொடரிலிருந்து தற்போது தல புராணம் வரை எழுதி வரும் பேராச்சி கண்ணனின் எழுத்தில் வெளிவரும் தொடர்தான் சென்னை சீக்ரெட்ஸ். இதில் சென்னை பற்றிய பல்வேறு வரலாற்றுத் தகவல்கள், கதைகள் வெளிவரும். சென்னையைப் பற்றிய வரலாற்று உண்மைகளை தமிழில் எழுதியவர்கள் மிகச்சிலரே. பெரும்பாலான தகவல்கள் நிறைந்துள்ள ஆங்கிலத்திலிருந்து வாராவாரம் தொடருக்கான பக்கங்களை தேற்றும் பேராச்சி கண்ணனின் அசகாய பொறுமையும் நிதானமும் என்னை இன்றுமே ஆச்சரியப்படுத்துபவை. அதனால்தான் அதிலிருந்து சில விஷயங்களை சொல்ல முடியாத சுவாரசியங்களை முத்தாரத்தில் எழுத கோரினேன். சந்தோஷமாக இசைந்தார் கண்ணன். 27.4.2018 முத்தாரம் இதழிலிருந்து சென்னை சீக்ரெட்ஸ் வெளியாகும். வாசியுங்கள்.