அதிக நீரை குடித்தால் இறக்கும் வாய்ப்புள்ளதா?

 

 

 

 

more water

 

 

 

பதில் சொல்லுங்க ப்ரோ


அதிக நீரை குடித்தால் இறக்கும் வாய்ப்புள்ளதா?


அதிகளவு நீரை குடிக்கும்போது உடலிலுள்ள எலக்ட்ரோலைட்ஸ்களின் அளவு அதன் எல்லைகளைக் கடந்து பாதிப்படையும். நீரிலுள்ள சோடியம் உடலின் ரத்த த்தில் அதிகரிப்பது ஆபத்தானது. இதற்கு ஹைப்போநாட்ரிமியா என்று பெயர். நீர் அதிகம் உட்கொள்ளப்பட்டால் வயிற்றுப்போக்கு, இதயம் செயலிழப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும். மேலும் உடலிலுள்ள இயல்பான திரவச்சுரப்புகள் பாதிப்படையும். நீர் பொதுவாக சிறுநீர், வியர்வை வழியாக வெளியேற்றப்படுகிறது.


அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று ஜெனிபர் ஸ்ட்ரேஞ் என்ற இருபத்தெட்டு வயது பெண்மணி இறந்து கிடந்தார். மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவான இவர், ரேடியோவில் அறிவிக்கப்பட்ட போட்டியில் பங்கேற்று, அதிகளவு நீரைக் குடித்துவிட்டு சிறுநீர் கழிக்காமல் இருந்தார். பொதுவாக நீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் இறப்புகள் குறைவு. அப்படியே ஏற்பட்டாலும் அது பல்வேறு டிவி ரேடியோ போட்டிகள், பெற்றோர் குழந்தைகளை தண்டிப்பது, மாரத்தான் போட்டிகள் என்பதால் ஏற்படுகின்றன.


நீரை அதிகளவு குடிப்பது சிறுநீரகத்திற்கு பெரும் சுமை. ரத்த த்தை சுத்திகரிக்கும் பணியை செய்யும் ஜயோமெரிலஸ் என்ற உறுப்பு பழுதடைகிறது. இது சிறுநீரக பழுது என்ற பிரச்னைக்கு ஒருவரை அழைத்துச்செல்கிறது.


பொதுவாக நீங்கள் நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள் உணவைச் சாப்பிட்டாலே நீர்குடிக்கும் உணர்வு வெகுநேரத்திற்கு ஏற்படாது. எனவே நீரைக் குறைவாக குடித்தாலே போதும். எனவே தாகம் எடுத்தால் நீரைக் குடித்தாலே உடலுக்கு போதுமானது.


தும்மும்போது இதயம் நின்றுவிடுகிறதா?


இதெல்லாம் பொய்யான வாதங்கள். உண்மையில் இதயம் துடிப்பது மெதுவாக நடைபெறலாம். ஆனால் இதயம் எப்போது நிற்காது. மூக்கில் ஏதாவது அந்நியப்பொருட்கள் இருந்தால் அதனை வெளியேற்றச்சொல்லி மூளையலிருந்து உத்தரவு வரும். இதனை உடல் நிறைவேற்ற உருவாவதுதான் தும்மல். பொதுவாக தும்மல் மணிக்கு நூறு கி.மீ வேகம் கொண்டது. ஐந்து அடி தூரம் இதன் மூலம் எச்சில் தெறிக்கும். கைக்குட்டை வைத்தால் எச்சில் பரப்பை கட்டுப்படுத்தலாம்.



இதயத்தில் துடிப்பு எங்கே உருவாகிறது தெரியுமா? அந்த இதயத்தசைகளின் பெயர் சினோட்ரல் நோட். தும்மல் உருவாகும்போது இதயத்துடிப்பின் ரித த்தில் மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் இதயம் நிற்பதில்லை.




உடலை வேகமாக அசைத்து சுற்றும்போது கிறுகிறுப்பு ஏற்படுவது ஏன்?


ரோலர் கோஸ்டர், பஸ்சில் மலைப்பாதை பயணம், வேகமாக வாகனங்களில் செல்லுதல் ஆகியவை காரணமாக சிலருக்கு குமட்டல் ஏற்பட்டு வாந்தி வரலாம். கண்கள் இருண்டு தலை சுற்றலாம். இதற்கு காரணம், ஒருவரின் காதிலுள்ள திரவம்தான். இந்த திரவம்தான் ஒரு் மனிதரின் நிலை எப்படியுள்ளது என்பதைக் கணிக்கிறது. இதனால் வேகமாக கைகளை விரித்து சு்ற்றியவர், சுற்றுவதை நிறுத்தியபின்னும் கிறுகிறுப்பு சில நொடிகளுக்கு நீடிக்கிறது. அமெரிக்கா மக்களில் 30 சதவீதத்தினருக்கு கிறுகிறுப்பு, குமட்டல் பிரச்னை உள்ளது.


1971ஆம் ஆண்டு நிலவுக்கு சென்ற வானியலாளர்களில் ஆலன் பி ஷெப்பர்ட், மெனியர்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இது காதிலுள்ள திரவத்தில் ஏற்படும் பாதிப்பினால் ஏற்படுகிறது. இதன் காரணமாக செவித்திறன் பாதிப்படைவதோடு, தலை கிறுகிறுப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அந்த நோயையும் சமாளித்து தனது பணிகளைச் செய்தார். வயதானவர்களுக்கு உடலில் ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்பால், கிறுகிறுப்பு ஏற்பட்டு கிறுகிறுப்பு உருவாகலாம். பார்க்கி்ன்சன், வெர்டிகோ பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் கிறுகிறுப்பு, சூழலைப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.


இதில் இன்னர் இயர் அட்டாக் என்ற வகை ஒன்றுண்டு. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, வைரஸ் பாக்டீரியா என்று புரிந்துகொண்டு தன்னுடைய செல்களையே தாக்கி அழிப்பது. இதனை எம்ஆர்ஐ டெஸ்ட் மூலம்தான் கண்டுபிடிக்கமுடியும்.




கருத்துகள்