புதிய கட்டுரை நூல்கள் - மனிதநேயத்தின் இருட்டுப் பக்கம்
புத்தக அறிமுகம்

1.தி புக் ஆஃப் டிலைட் , என்பது சுய முன்னேற்ற நூல் அல்ல. இந்தப் புத்தகம் . பூமியில் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க என்ன செய்யலாம் என சிறிய பேரகிராப்களாக கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் ரோக்சேன் கே.

2. அன்புக்கும் வெறுப்புக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இதனை நன்கு உணர்ந்தால்தான் புரிந்துகொள்ளமுடியும். இந்த நூலின் ஆசிரியரும் பல்வேறு ஆய்வுகள், செய்திகள் ஆகியவற்றை வைத்து மனிதநேயம், கருணைக்கு பின்னுள்ள கருப்பு பக்கங்கள் புட்டு புட்டு வைக்கிறார். இதில் உங்களுக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். அனைத்தும் தெளிவான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் என்பதோடு இதில் உளவியல் பக்கங்களும் வாசிக்க சுவாரசியம் கூட்டுகின்றன.

3. ஃபிகரிங் நூல் அன்பு மற்றும் உண்மை ஆகியவற்றைப் பற்றி வரலாற்று ஆளுமைகள் சொன்ன கருத்துகள், அவற்றின் மீதான பிறரின் பதில்கள், அதன் செல்வாக்கு குறித்து விளக்கியுள்ளார். வானியலாளர் ஜோகன்னஸ் கெப்ளர் தொடங்கி உயிரியல் ஆய்வாளர் ரேச்சல் கார்சன் ஆய்வுகளில் முடிகிறது.