நடிப்பிற்கு நியாயம் சேர்ப்பது முக்கியம் - சுஷாந்த் சிங் ராஜ்புத்




Related image





ஒரு நடிகராக உங்களை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் கட்டாயம் இருக்கிறதா?

ஒரு நடிகராக அந்த சவாலை நான் ரசிக்கிறேன். நீங்கள் உங்களை எப்போது கம்ஃபோர்ட் ஜோனில் வைத்துக்கொள்ள முடியாது. நடிகர் என்பவர் மற்றவர்களை விட வேறுபட்டவர் அல்ல.

நடிகராக கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி புரிந்துகொள்வது, உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்துவது முக்கியம். நீங்கள் சில கேரக்டர்களை செய்வது மட்டுமல்ல, அதற்கு நியாயமாக இருக்கவேண்டும். இது எப்போதும் சவால்தான்.

படம் தோற்றுப்போவதை எப்படி உணர்கிறீர்கள்?

நாம் நடிகராக சில விஷயங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறோம். மக்கள் அவர்களுக்கு பிடித்திருந்தால் அதனை நேர்மையாக பதிவு செய்வார்கள். வரவேற்று கொண்டாடுவார்கள்.  ஆனால் நடிகராக எப்படி நடிக்கவேண்டும், எந்த கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்களது சாய்ஸ்.

நடுத்தர வர்க்க குடும்ப ஆள் நீங்கள். சினிமாவில் நடிக்கும்போது நடிப்புக்கு சவால் என்பதை முக்கியமாக கருதுவீர்களா, அல்லது கிடைக்கும் சம்பளத்தையா?

என்னிடம் இருக்கும் பணம் பற்றி நான் கவலைப்படுவதில்லை. இதன் அர்த்தம், என்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதல்ல. என் தேவைக்கான பணம் இருக்கிறது. என் அம்மா, நல்ல கல்வி எச்சூழலிலும் என்னைக் காப்பாற்றும் என்று கூறிக்கொண்டே இருப்பார். பாந்த்ராவில் ஒரு பிளான் வாங்குவது என் பேராசைக் கனவு. இன்று அக்கனவு நிறைவேறிவிட்டது. இதற்காக நான் பெருமைப்பட்டு நிற்கவில்லை. பணம் என்பது எனக்கு முக்கியம்தான். ஆனால் நான் பேராசைக்காரன் கிடையாது.

நன்றி: டெக்கன் கிரானிக்கல், உமா ராம சுப்ரமணியன்.