காதல் படுகொலைகள்!




Image result for hate story



காதல் கொலைகள்!

ஐஸ்லாந்திலுள்ள Illugastaoir பண்ணையிலிருந்து ஓடிவந்த ஆக்னஸ் என்ற பெண், பண்ணை வீடு தீ பற்றிக்கொண்டது என அலற, மக்கள் பலரும் ஓடிப்பார்க்க, அங்கு பண்ணை ஓனர் நாதன் கெட்டில்சன், அவரின் நண்பரான பீட்டர் ஜான்சன் இருவரும் தீயில் உருளைக்கிழங்காய் வெந்திருந்தார்கள். ஆனால் இருவரும் கத்தியால் குத்தியும், சுத்தியலால் தாக்கப்பட்ட காயங்களை போலீசார் கண்டுபிடித்தனர். அனைத்துக்கும் காரணம், நாதனின் காதல் லீலைகள்தான்.

இயற்கை மருத்துவரான நாதன், உள்ளூர் கவிஞரான ரோசா, டீனேஜ் பெண் சிக்ரியர் என்ற இருவரையும் தெலுங்கு ஹீரோவாக லவ் செய்தார். பொறாமையில் வெந்த ஆக்னஸ்,சிகர்ஸன் மற்றும் தோழி ஒருத்தியை சேர்த்து செய்த மர்டர்தான் இது என தெரியவந்தது. மூவரில் ஆக்னஸின் தோழிக்கு மட்டும் ஆயுள் தண்டனை. சிகர்ஸனுக்கும் ஆக்னசுக்கும் 1830 ஜனவரி 12 அன்று மரணதண்டனை. கோடாரியால் வெட்டப்பட்ட இருவரின் தலைகளும் அங்கேயே ஈட்டியில் குத்தி வைக்கப்பட்டன. சிலமணி நேரத்திலேயே இருவரின் தலைகளும் மிஸ்ஸிங். பின் 1930 ஆம் ஆண்டில் Illugastaoir பண்ணையருகே ஜோர்ன் என்ற இடத்தில் தலையோடு இரு எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. காதல் படுகொலைகளும், ஆக்னஸின் வாழ்வும் படுமர்மமாக பேசப்பட்டு வருகின்றன

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்