ஈரானை இயக்கும் புலனாய்வுத் தலைவர்!





Iran's Cleric Spymaster Is Caught in the Middle





ஈரானிலுள்ள அரசுக்கு விரோதமான அயல்நாட்டு உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்காவின் இதயத்துடிப்பை எகிற வைத்துள்ளார். கூறியது உளவுத்துறை தலைவரான சையத் முகமது ஆலவி. சுருக்கமாக ஆலவி.


அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது முதல் பொருளாதார தடைகளை எதிர்த்து தில்லாக அயதுல்லா காமனேனி நிற்பதற்கு, ஆலவியின் பக்கத்துணையே காரணம்.  மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் செல்வாக்கு பெற்ற புரட்சி காவல்படையை வலுவாக்குவதில், அதனைப் பற்றிய பயத்தை பிறநாடுகளுக்குப் பரப்புவதிலும் கவனமாக இருப்பவர் அதிபர், ரூஹானிக்கும் நெருக்கமானவர்.

ஆலவி மட்டுமல்ல பிற அமைச்சர்களும் காம னேனியின் ஆணைகளைக் கேட்டு அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுகின்றனர் என்கிறார் அரசியல் வல்லுநர் ஒருவர். ஆலவி, டெலிகிராம் ஆப்பை பயன்படுத்தி புரட்சியாளரை கைது செய்தது, நாட்டின் நீதிபதி மகளை உளவுத்துறை மூலம் வெளிநாட்டு தொடர்புள்ளதாக என கண்காணித்தது ஆகியவை இவரைப் பற்றி ஈரான் முழுக்க பேச காரணமானது.


கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது, இணையத்தில் இளைஞர்களை கண்காணிப்பது என அனைத்தையும் கவனமான செய்பவர், இப்பணிக்கு முன்னர் இஸ்லாமிய மதத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தார். ஈரானிலும் எழும் பிரச்னைகளை மதம் சார்ந்தே அணுகும் ஆள் இவர்.


நன்றி: ஓஸி சஞ்சய் கபூர்